என் மலர்
ஈரோடு
- பைக் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் தலையைாம்பாளையத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி மகன் நடராஜன் (வயது 40). இவர் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லமால் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விஷ மாத்திரை சாப்பிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நடராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- லாட்டரி சீட்டு விற்ற மூதாட்டி கைது செய்யபட்டனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பெருந்துறை அண்ணாநகரைச் சேர்ந்த முருகேஷ் மனைவி சரஸ்வதி (வயது 63) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புளியம்பட்டியில் வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
- இ்துகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.
பு.புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடு த்து உயிலம்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் முருகே சன் மகன் தீபக்குமார் (வயது 24). இவர் சம்ப வத்தன்று நம்பியூர் ரோடு காந்திநகர் பகுதியில் இவரது அப்பா வைத்திருக்கும் பிளாஸ்டிக் கம்பெ னியில் இருந்து தன்னு டைய இருச க்கர வாகனத்தில் புளியம்ப ட்டி நோக்கி வந்து கொண்டி ருந்தார்.அப்போது அவர் காந்தி நகர் மாகாளியம்மன் கோவில் அருகே வரும்போது நம்பியூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேரு ந்து திடீரென எதிர்பாராத விதமாக தீபக் குமார் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் அவர் தூக்கி வீச ப்பட்டார். அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடி யாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு தீபக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர். மேலும் இ்துகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.
- எழுமாத்தூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.36 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
- விவசாயிகள் 9 ஆயிரத்து 671 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்
மொடக்குறிச்சி.
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9 ஆயிரத்து 671 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.45-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.09-க்கும், சராசரி விலையாக ரூ.24.17 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 340-க்கு விற்பனையாகின.
- போதைப்பொருள் விற்ற 5 பேர் கைது செய்யபட்டனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, கருங்கல்பாளையம், ஈரோடு தெற்கு, கொடுமுடி, நம்பியூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹான்ஸ், கஞ்சா, கூலிப், பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஈரோடு பவானியை சேர்ந்த குப்புசாமி மகன் செல்வன் (வயது 63), கருங்கல்பாளையம் திருநகர் காலனியைச் சேர்ந்த செங்கோடன் மகன் வடிவேல் (46), சூரம்பட்டி காமராஜர் தெரு சண்முகவேல் மகன் பாலமுருகன் (43), கொடுமுடி காங்கேயம் ரோடு பகுதியைச் சேர்ந்த தேவராஜன் மகன் ஆசீர்வாதம் (47), முலப்பாளையத்தை சேர்ந்த துரைப்பாண்டி மகன் பால்துரை (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.19 ஆயிரத்து 330 மதிப்பிலான போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செக்யூரிட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு,
ஈரோடு அடுத்த கங்காபுரம் மேற்கு தயிர்பாளையம் கானாகாடு காலனியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 37). இவர் நசியனூரில் உள்ள மஞ்சள் குடோன் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். துரைசாமி சம்பவத்தன்று மதியம் திடீரென மயங்கி விழுந்தார். இதை ப்பார்த்த அக்கம்பக்க த்தினர் அவரை மீட்டு பெரு ந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மரு த்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்து வர்கள் பரிசோதித்து விட்டு துரைசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து துரைசாமியின் மனைவி சசிகலா சித்தோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- மார்க்கெட்டிற்கு 900 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
- தக்காளி இன்று 8 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தாளவாடி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் பல அசைவ பிரியர்கள் தற்போது சைவத்துக்கு மாறி விட்டனர். இதனால் காய்கறி களின் தேவை அதிகரித்துள்ளது.
இதேபோல் தொடர் விசேஷங்கள், முகூர்த்த நாட்கள் வருகிறது. புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் காய்கறிகளின் தேவை அதிக ரித்துள்ளது. இந்த எதிரொ லியாக காய்கறிகள் விலை அதிகரித்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இன்று ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதியிலிருந்து 900 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
கடந்த வாரத்தை விட சில காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து இருந்தாலும் மக்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் காய்கறிகளை அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.
ஈரோடு வ.உ.சி. மார்க்கெ ட்டில் இன்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோ வருமாறு:- கத்திரி க்காய்-40-60, வெண்டைக்காய்-20, பிர்க்கங்காய்-70, பாவ க்காய்-40,
முள்ளங்கி-50, முருங்கைக்காய்-50, பச்சை மிளகாய்-40, சின்ன வெங்காயம்-60, பெரிய வெங்காயம்-45, கொத்த வரங்காய்-40, பட்ட வரை-40, கருப்பு அவரை-100, முட்டைகோஸ்-20, காலி பிளவர்-40, காளான்-60, கேரட்-60, பீட்ரூட்-70, பீன்ஸ்-90, உருளைக்கிழ ங்கு-40, பழைய இஞ்சி-290, புதிய இஞ்சி-120, தக்காளி-10-15.
தக்காளி இன்று 8 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. கடந்த வாரத்தை விட ஒரு சில காய்கறிகளின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்த்துள்ளது.
- தர்மலிங்கம் செக் மோசடி வழக்கு தொடுத்துள்ளார்.
- கணேசனுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
பவானி:
அந்தியூர் கொல்லபாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (52). அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் பேக்கரி நடத்தி வருகிறார்.
இவர் அந்தியூர் அண்ணா சாலையை சேர்ந்த தர்மலிங்கம் (62) என்ப வரிடம் கடந்த 2018-ம் ஆண்டு 15 லட்சம் ரூபாய் கடனாக பெற்று 2 ரூபாய் வட்டி விகிதத்தில் ஓரா ண்டில் திருப்பி தருவதாக கூறியுள்ளார்.
இதற்காக 11.1.2019 தேதியிட்டு அந்தியூர் கனரா வங்கி செக் கொடுத்துள்ளார். 2019 ஜனவரி 14-ல் செக்கை அந்தியூர் இண்டியன் ஓவர்சீஸ் வங்கியில் கலெக்ஷன் போட்டபோது வங்கி கணக்கில் பணம் இல்லை.
இதை தொடர்ந்து கடந்த 5.3.2019-ல் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் தர்மலிங்கம் செக் மோசடி வழக்கு தொடுத்துள்ளார்.
வழக்கின் மனு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்டது. இதில் செக் மோசடியில் ஈடுபட்ட கணேசனுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
மேலும் இது சம்பந்தமாக 2 மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளவும் அவகாசம் அளித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு தெற்கு கோட்ட அலுவலகத்தில் நடைபெறும்.
- மின்பயனீட்டாளர்கள் தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.
ஈரோடு:
ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 4-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு செயற்பொறியாளர், வினியோகம் ஈரோடு தெற்கு கோட்ட அலுவலகத்தில் நடைபெறும்.
எனவே அக்கூட்டத்தில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு ஆகிய பகுதிகளிள் உள்ள மின்பயனீட்டாளர்கள் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
- கழிவுநீர் வெளியேறாமல் குடியிருப்பு வீட்டுக்குள் புகுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
- நோய் தொற்றில் இருந்து தப்பிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் யூனியன் கரட்டுப் பாளையம் ஊராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட ஆயிபாளையம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி யில் சாக்கடை வசதி இருந்தும் சரியான வடிகால் இல்லாத காரணத்தினால் கழிவுநீர் வெளியேறாமல் மழைக் காலங்களில் குடியிருப்பு வீட்டுக்குள் புகுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து ஆயி பாளையம் பொது மக்கள் கூறியதாவது:
எங்கள் ஊரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.
எங்கள் பகுதியில் சாக்கடை வசதி இருந்தும் சாக்கடை நீரானது எங்கள் பகுதியை விட்டு வெளியேறாமல் சரியான வடிகால் இல்லாததால் எங்கள் பகுதியிலேயே தேங்கி விடுகிறது.
மழைக்கா லங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீட்டுக்குள் புகுவதால் கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லை மற்றும் நோய் தொற்றுக்கு ஏற்படுகிறது.
இது குறித்து புகார் தெரிவித்ததன் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் வடிகால் அமைக்க அளவீடு செய்து தோராயமாக ரூ.30 லட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது.
அதற்கு பஞ்சாயத்து நிர்வாகத்திடம் போதிய நிதி இல்லை என கூறியதால் எங்கள் பகுதி மக்கள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 3-ல் ஒரு பங்கு நிதியை தாங்கள் தருவதாக தெரிவித்தும் இதுவரை பஞ்சாயத்து நிர்வாகம் எந்த வித நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது.
எனவே எங்கள் பகுதி மக்கள் நோய் தொற்றில் இருந்து தப்பிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மன உளைச்சலில் இருந்த பசுபதி வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பி ரமணி மகன் பசுபதி (வயது 28). இவரது மனைவி துர்கா நந்தினி (24). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.
ஆனால் இதுவரை குழ ந்தை இல்லை. இதனால் மன வேதனை அடைந்த பசுபதி அடிக்கடி மது அருந்துவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சலில் இருந்த பசுபதி வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மரு த்துவர்கள் பசுபதி வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
பின்னர் துர்கா நந்தினி இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளி திருப்பூர் வார ச்சந்தை, கோபி பஸ் ஸ்டாப் சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக வெள்ளி த்திருப்பூர், கோபி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட வெள்ளி திருப்பூர் பகுதி யைச் சேர்ந்த ராசு மகன் கண்ணன் (வயது 32), கோபி முடச்சூர் பகுதியை சேர்ந்த சிவனு மகன் பாலசுப்பி ரமணியம் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் வைத்தி ருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதை போல் பவானி கிருஷ்ணம்பாளையம் சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பவானியை சேர்ந்த மாணி க்கம் மகன் சவுந்தர்ராஜன்,
கருங்கல்பாளையம் கந்தசாமி மகன் குணசேகரன் (49), கருங்கல்பா ளையம் காவிரி ரோடு மாணிக்கம் மகன் தேவராஜ் (42) ஆகியோர் மீது கருங்க ல்பா ளையம், பவானி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.
மேலும் அவர்களிடமி ருந்து லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






