search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மெக்கானிக் தற்கொலை
    X

    பைக் மெக்கானிக் தற்கொலை

    • பைக் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை,

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் தலையைாம்பாளையத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி மகன் நடராஜன் (வயது 40). இவர் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லமால் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விஷ மாத்திரை சாப்பிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நடராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×