search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எழுமாத்தூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.36 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
    X

    எழுமாத்தூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.36 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

    • எழுமாத்தூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.36 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
    • விவசாயிகள் 9 ஆயிரத்து 671 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்

    மொடக்குறிச்சி.

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9 ஆயிரத்து 671 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.45-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.09-க்கும், சராசரி விலையாக ரூ.24.17 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 340-க்கு விற்பனையாகின.

    Next Story
    ×