என் மலர்
நீங்கள் தேடியது "சாக்கடை கழிவு நீர்"
- துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
- சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் மாசுக்கட்டுப்பாடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சிப்பட்டி கிராமம். இங்கு உள்ள தருமபுரி சேலம் நெடுஞ்சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் தெரு, மசூதி தெரு, போயர் காலனி போன்ற பகுதிகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளின் வீடுகளில் உள்ள சாக்கடை கால்வாய் நீர் தாழ்வான பகுதியில் உள்ள துரிஞ்சிப்பட்டி பேருந்து நிறுத்தம் , அரசு துவக்கப் பள்ளி அருகே நெடுஞ்சாலையில் குளம் போல தேங்கி நிற்கிறது.
இதனால் துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில்:-
கடந்த ஒரு ஆண்டுகளாக இந்த சாக்கடை மழை பெய்யும் பொழுதும், சாதாரண நேரத்திலும் சாலையில் தேங்கி நிற்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கும், நெடுஞ்சாலை துறையினர், ஊராட்சி மன்றம் போன்ற இடங்களில் பலமுறை முறையிட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பள்ளி குழந்தைகள் துர்நாற்றத்தோடு மூக்கை அடைத்தபடி பள்ளிக்குச் செல்லும் நிலை நீடிக்கிறது. ஏற்கனவே தொற்றுநோய் ஊர் முழுவதும் அதிக அளவில் பரவி வரும் நிலையில் இந்த சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் மாசுக்கட்டுப்பாடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டத் துவங்கி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலையில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை உடனடியாக வடிகால், தரைப்பாலம் அமைத்து கொடுத்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கழிவுநீர் வெளியேறாமல் குடியிருப்பு வீட்டுக்குள் புகுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
- நோய் தொற்றில் இருந்து தப்பிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் யூனியன் கரட்டுப் பாளையம் ஊராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட ஆயிபாளையம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி யில் சாக்கடை வசதி இருந்தும் சரியான வடிகால் இல்லாத காரணத்தினால் கழிவுநீர் வெளியேறாமல் மழைக் காலங்களில் குடியிருப்பு வீட்டுக்குள் புகுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து ஆயி பாளையம் பொது மக்கள் கூறியதாவது:
எங்கள் ஊரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.
எங்கள் பகுதியில் சாக்கடை வசதி இருந்தும் சாக்கடை நீரானது எங்கள் பகுதியை விட்டு வெளியேறாமல் சரியான வடிகால் இல்லாததால் எங்கள் பகுதியிலேயே தேங்கி விடுகிறது.
மழைக்கா லங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீட்டுக்குள் புகுவதால் கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லை மற்றும் நோய் தொற்றுக்கு ஏற்படுகிறது.
இது குறித்து புகார் தெரிவித்ததன் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் வடிகால் அமைக்க அளவீடு செய்து தோராயமாக ரூ.30 லட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது.
அதற்கு பஞ்சாயத்து நிர்வாகத்திடம் போதிய நிதி இல்லை என கூறியதால் எங்கள் பகுதி மக்கள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 3-ல் ஒரு பங்கு நிதியை தாங்கள் தருவதாக தெரிவித்தும் இதுவரை பஞ்சாயத்து நிர்வாகம் எந்த வித நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது.
எனவே எங்கள் பகுதி மக்கள் நோய் தொற்றில் இருந்து தப்பிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
- பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு அருள்ஜோதி நகர் பகுதியில் சாலை போடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளதால் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
அதேபோல் அப்பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகள் மாத கணக்கில் அள்ளப்படாததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் கவுன்சிலரிடம் முறையிட்டபோது அவர் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கவுன்சிலரை கண்டிக்கும் விதமாகவும், உடனடியாக சாக்கடை கழிவுகளை அகற்றக்கோரியும் கார்மேகம் என்பவர் அப்பகுதியில் தேங்கி இருந்த சாக்கடை கால்வாயில் இறங்கி சாக்கடை கழிவுகளை கைகளால் வாரி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- சாக்கடை கழிவு நீருடன் கான்கிரீட் கலவை போடப்பட்டது
- மேயர் கவிதா நேரில் ஆய்வு
கரூர்:
கரூரில் சாக்கடை கழிவுநீருடன் கான்கிரீட் கலவை போடப்பட்ட தொடர்பாக பொதுமக்களிடம் பேட்டி எடுத்த செய்தியாளர்களை திமுக நிர்வாகி மிரட்டிய சம்பவம் செய்தியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வது வார்டு கே.ஏ. நகரில் சாக்கடை வடிகால் கட்டும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. சாக்கடை கால்வாயின் இரு பக்கவாட்டு சுவர்கள் கட்டப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் கான்கிரீட் அடித்தளம் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சாக்கடை கால்வாயின் அடிப்பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கழிவுநீர் ஓட்டத்தை தடுத்துவிட்டு அடிப்பகுதியில் கான்கிரீட் அமைக்காமல் சாக்கடை கழிவுநீருடனே கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்றது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்கில் பரவியதை அடுத்து கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மண்டல குழுத்தலைவர் சக்திவேல், அதிகாரிகள் சாக்கடை கால்வாய் கட்டுமானம் குறித்து நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.






