திருப்பூரில் சாக்கடை கால்வாயில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் சாக்கடை கால்வாயில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு அருள்ஜோதி நகர் பகுதியில் சாலை போடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளதால் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

அதேபோல் அப்பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகள் மாத கணக்கில் அள்ளப்படாததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் கவுன்சிலரிடம் முறையிட்டபோது அவர் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கவுன்சிலரை கண்டிக்கும் விதமாகவும், உடனடியாக சாக்கடை கழிவுகளை அகற்றக்கோரியும் கார்மேகம் என்பவர் அப்பகுதியில் தேங்கி இருந்த சாக்கடை கால்வாயில் இறங்கி சாக்கடை கழிவுகளை கைகளால் வாரி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com