என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியில் இருந்து சென்னை மாநகருக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. அதோடு பாசன வசதிக்கும் இந்த ஏரி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜுன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, கீழணைக்கு தண்ணீர் வந்ததால் அந்த அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் ஏரியின் உச்ச நீர்மட்டமான 47.50 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாகவும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், பொதுப்பணித்துறையினர் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் மதகு வழியாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை கடலுக்கு அனுப்பினர். முழுவதையும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றினர்.
மேலும் வீராணம் ஏரிக்கரைச் சாலையில் காட்டு மன்னார்கோவில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை தடுப்பு கட்டைகளின் உயரத்தை அதிகரிக்கும் வகையிலும், ஏரியின் உள்பகுதியில் சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்கும் நோக்கிலும் கடந்த 2 மாதங்களாக ஏரிக்கு தண்ணீர் வரத்தை பொதுப்பணித் துறையினர் முற்றிலும் நிறுத்தினர். இதனால் ஏரியில் மழைக் காலத்தில் தேக்கப்பட்ட தண்ணீர் சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு மட்டும் அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது கடும் வெயில் வறுத்து எடுப்பதால் ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. சென்னைக்கு விநாடிக்கு 70 கன அடி நீர் அனுப்பப்பட்டு வந்த நிலையில், இந்த அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 5 கன அடி நீர் மட்டுமே சென்னைக்கு அனுப்பப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் 39.53 அடியாக உள்ளது.
ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் தற்போது 54 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் ஏரியில் தற்போதுள்ள நீரைப் பயன்படுத்தி 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும் என்று தெரிவித்தனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் நகர நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 வட்டங்களில் அதிகாரிகள், என்ஜினீயர்கள், பணியாளர்கள் உள்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களின் நலன் கருதி என்.எல்.சி. நிர்வாகம் வட்டம்-3, 13, 28 ஆகிய இடங்களில் சந்தைகள் அமைத்துள்ளது. இந்த சந்தைகள் வியாழக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இயங்கும்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இதனால் வாரசந்தைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து என்.எல்.சி. நகர நிர்வாகம் வார சந்தைகளை மூடியது. தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வாரசந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவந்தன.
தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் என்.எல்.சி. நிறுவன நகர நிர்வாகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வாரசந்தைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்த பகுதி மக்களின் வசதிக்காக 6 இடங்களில் சமூக இடைவெளி, கட்டுபாடுகளுடன் தற்காலிக கடைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடலூரில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் சம்பத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-
தமிழக மக்கள் தற்போது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிம்மதியை தி.மு.க. கெடுக்க பார்க்கிறது. இந்த தேர்தல் என்பது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல்.
கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மீனவர்களுக்கு தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ. 7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
மு.க.ஸ்டாலின் இந்த அரசை குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த அரசு செயல்படவில்லை என்று கூறுகிறார். மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை அவர் எதையும் சிந்தித்து பேசுவதில்லை.
இனி தமிழக மக்கள் அரசிடம் எந்த புகார் மனுவும் கொடுக்க வேண்டியதில்லை. 1100 போன் எண்ணில் தொடர்பு கொண்டு கூறினாலே அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
கடலூர் நகரம் இனி வெள்ளத்தால் பாதிக்கப்படாது. தாழ்வான பகுதிகளை மேம்படுத்த ரூ.230 கோடியில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இனி மின் தடையும் இங்கு ஏற்படாது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதாலும் நீர் வரத்து குறைந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து வெயில் வறுத்தெடுப்பதால் வீராணம் ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் அனைத்தும் நின்றுவிட்டது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
தற்போது 39.50 அடி தண்ணீர்தான் உள்ளது. எனவே சென்னைக்கு 9 கன அடி நீர் மட்டுமே வீராணம் ஏரியில் இருந்து அனுப்பப்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக வடலூர் அருகே உள்ள பரவனாற்றில் இருந்து 19 கனஅடி நீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் வாலாஜா ஏரியில் தேக்கிவைக்கப்படுகிறது. வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5. அடி ஆகும். தற்போது ஏரியில் 5 அடி தண்ணீர் உள்ளது. எனவே இந்த தண்ணீர் பரவனாற்றில் திறந்து விடப்பட்டு அந்த நீரை வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் செல்லும் குழாயில் இணைத்து மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்பட்டு 19 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது.
இந்த அளவு படிபடியாக தேவைக்கு ஏற்ப கூட்டப்படும் என்றும் வடலூரில் இருந்து பண்ருட்டிவரை போடப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட போர்வெல்லில் இருந்தும் தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






