என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
கடலூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று
கடலூர் மாவட்டத்தில் நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 322 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 288 பேர் பலியான நிலையில், 24 ஆயிரத்து 965 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இவர்களில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 9 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 973 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 124 பேருடைய கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
Next Story






