என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் பாரதி சாலையில் அண்ணா பாலம் அருகே உள்ள டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் பாரதி சாலையில் அண்ணா பாலம் அருகே ஒரு டீக்கடை உள்ளது. இந்த டீக்கடையில் வழக்கம்போல் மாலை வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் அந்த கடையில் இருந்த சிலிண்டர் டியூப்பில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்த டீக்கடைக்கு, டீ குடிக்க வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதையடுத்து, அந்த கடையில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
    கடலூரில் அரசு மருத்துவ கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடுக்கப்பட்ட நிலையில் விடுதிகளை காலி செய்ய மறுத்து மாணவ-மாணவிகள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடைமை ஆக்கப்பட்ட பிறகு அதன் கீழ் செயல்படும் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை தற்போது கடலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையாக இயங்கி வருகிறது.

    இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் பிற அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தையே தங்களுக்கும் வசூலிக்கவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் புதிதாக சேரும் மாணவர்களுக்கு மட்டுமே அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் வாங்கப்படுகிறது.

    ஏற்கனவே படித்துவரும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிக்கு நிகரான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. தங்களுக்கும் திருத்தப்பட்ட புதிய அரசு கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று இந்த கல்லூரியில் பயிலும் 2, 3, 4-ம் ஆண்டு மாணவர்கள் கடந்த 10-ந் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

    தொடர்ந்து கடந்த 11-ந் தேதி முதல் 20-ந் தேதிவரை அண்ணாமலைநகரில் உள்ள மருத்துவகல்லூரி வளாகம் மற்றும் மருத்துவகல்லூரி புலமுதல்வர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 21-ந் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

    இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கடலூர் அரசு மருத்துவகல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளார். முதலாண்டு மற்றும் 5-ம் ஆண்டு பயிலும் பயிற்சி மருத்துவர்களை தவிர மற்ற அனைவருக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 8 மணிக்கு மாணவர்கள் அணைவரும் விடுதிகளை காலிசெய்ய வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் விடுதிகளை காலி செய்ய மறுத்து இன்று காலையும் மாணவ- மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இதனால் அவர்களுக்கு விடுதியில் இருந்து வழங்கப்படும் காலை உணவு நிறுத்தப்பட்டது. ஆனாலும் வெளியிலிருந்து உணவு வரவழைத்து சாப்பிட்ட மாணவ- மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோருடன் இந்த போராட்டம் தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    அதன்பிறகு எடுக்கப்படும் நடவடிக்கை மாணவ- மாணவிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமா என்பது தெரியும்.
    காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் முருக வேல் தலைமை தாங்கினார். மாவட்ட குழு விவசாய தொழிலாளர் சங்கம் சிதம் பரம்இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில நிர்வாகக் குழு மணிவாசகம் மற்றும் மாவட்ட நிர்வாகக் குழு நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், ஜெயராமன் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பணி யாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் மற்றும் ரூ.281 சம்பளம் வழங்க வேண்டும் என கோரி பேசினார்கள்.

    திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கூட் டத்திற்கு விவசாய தொழிற் சங்க நிர்வாகி குப்புசாமி தலைமை தாங்கினார். பெரு மாள்,முருகன், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு சுப்பி ரமணியன், வட்ட செய லாளர் முருகன், மாவட்ட குழு உலகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரை யாற்றினார். இதில் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கடலூர் அரசு மருத்துவகல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளார். முதலாண்டு மற்றும் 5-ம் ஆண்டு பயிலும் பயிற்சி மருத்துவர்களை தவிர மற்ற அனைவருக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடைமை ஆக்கப்பட்ட பிறகு அதன் கீழ் செயல்படும் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனை தற்போது கடலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையாக இயங்கி வருகிறது.

    இந்த கல்லூரியில் படித்துவரும் மாணவ-மாணவிகள் பிற அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தையே தங்களுக்கும் வசூலிக்கவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் புதிதாக சேரும் மாணவர்களுக்கு மட்டுமே அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் வாங்கப்படுகிறது.

    ஏற்கனவே படித்துவரும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிக்கு நிகரான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. தங்களுக்கும் திருத்தப்பட்ட புதிய அரசு கல்விகட்டணத்தை வசூலிக்கவேண்டும் என்று இந்த கல்லூரியில் பயிலும் 2, 3, 4-ம் ஆண்டு மாணவர்கள் கடந்த 10-ந் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

    தொடர்ந்து கடந்த 11-ந் தேதி முதல் 20-ந் தேதிவரை அண்ணாமலைநகரில் உள்ள மருத்துவகல்லூரி வளாகம் மற்றும் மருத்துவகல்லூரி புலமுதல்வர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 21-ந் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

    இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கடலூர் அரசு மருத்துவகல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளார். முதலாண்டு மற்றும் 5-ம் ஆண்டு பயிலும் பயிற்சி மருத்துவர்களை தவிர மற்ற அனைவருக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 8 மணிக்கு மாணவர்கள் அணைவரும் விடுதிகளை காலிசெய்ய வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் விடுதிகளை காலி செய்ய மறுத்து இன்று காலையும் மாணவ-மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இதனால் அவர்களுக்கு விடுதியில் இருந்து வழங்கப்படும் காலை உணவு நிறுத்தப்பட்டது. ஆனாலும் வெளியிலிருந்து உணவு வரவழைத்து சாப்பிட்ட மாணவ-மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோருடன் இந்த போராட்டம் தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    அதன்பிறகு எடுக்கப்படும் நடவடிக்கை மாணவ- மாணவிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமா என்பது தெரியும்.

    கடலூர் அருகே விபத்தில் பக்தர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம், புதுவை அருகே உள்ள மணமேடு, கே.என்.பட்டி, மருதூர், வானமாதேவி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் ஒரு வேனில் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்த வேன் கடலூர் அருகே சோனாஞ்சாவடி என்ற இடத்தில் இன்று அதிகாலை வந்தபோது, வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறி கெட்டு ஓடிய வேன் 7 அடி ஆழ தரைப்பாலத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதில் வேனில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கதறி கூச்சலிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் விரைந்து வந்து வேனில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அவர்களில் ஒருவர் சுயநினைவு இழந்த நிலையில் இருந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப் புத்துறையினர் அனைவரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

    ஆனால் விழுப்புரம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி ஆனந்த் (வயது 50) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் வானமாதேவியை சேர்ந்த சந்தோஷ் (22), ஜான்சிராணி (20), நாராயணன் (22), வளர்மதி (39), பெருமாள் (47), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அரவிந்த் (30), கீதாலட்சுமி (31), சாலினி (24), மருதூரை சேர்ந்த செல்வி (41), மணமேட்டை சேர்ந்த காஞ்சனா (47), அருண் (20) மற்றும் குழந்தைகள் ரேஷ்மா (6), புவனேஷ் வரண் (5), சிவனேஷ் (1½) உள்பட 19 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து கடலூர் சோனாஞ்சாவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அ.தி.மு.க. செயலாளராக மீண்டும் காசிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அமைச்சரான எம்.சி சம்பத்தை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
    கடலூர்:

    கடலூர் வடக்கு மாவட்டம் கடலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக காசிநாதன் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பரிந்துரையின் பேரில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவின் பேரில் மீண்டும் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக காசிநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    ஒன்றிய அவைத்தலைவராக ஆதிநாராயணன், ஒன்றிய இணைச்செயலாளராக லட்சுமிகுமார், ஒன்றிய துணைச்செயலாளர்களாக கல்யாண ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளராக வேல்முருகன், ஒன்றிய பொருளாளராக முருகன், மாவட்ட பிரதிநிதிகளாக கிரிஜா செந்தில்குமார், நாகமுத்து, தேவநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனை தொடர்ந்து இவர்கள் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி சம்பத்தை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
    மோட்டார் சைக்கிள் சாகசம் செய்பவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக ஓட்டுகின்றனர்.

    குறிப்பாக சென்னை முழுவதும் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர்கள் அதிகளவு உள்ளனர். இவர்களால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கலாச்சாரம் தற்போது கடலூர் மாவட்டத்தில் பரவி வருகிறது.

    குறிப்பாக கடலூர் மாவட்ட இளைஞர்கள் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களை வாங்கி வேகமாக உலா வருகிறார்கள். இவர்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.

    தற்போது 18 வயது நிரம்பாத பள்ளி மாணவர்களும் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டி வருகின்றனர். மோட்டார் வாகன விதிமுறைப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வாகனங்கள் ஓட்ட லைசென்ஸ் வழங்கப்படுகிறது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் சைக்கிள் ஓட்டுவது படிப்படியாக குறைந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுவது அதிகரித்துள்ளது.

    இந்த பள்ளி மாணவர்கள் வீட்டில் அடம்பிடித்து அதிவேக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்கி நண்பர்களை ஏற்றிக் கொண்டு அசுர வேகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.

    பள்ளி மாணவர்களின் அதிவேக பயணத்தால் விபத்துக்குள்ளாவது மட்டுமின்றி எதிரில் வரும் வாகனங்களின் மீது மோதி விபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றனர். இதனால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இவர்கள் ஏற்படுத்தும் விபத்தால் சாலையோரத்தில் ஏதும் அறியாது நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் இதில் சிக்கி தனது உயிரை இழக்கின்றனர். இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களை அதிக சத்தத்துடன் வேகமாக ஓட்டிச் செல்வதால் பொதுமக்கள் இதில் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    எனவே மோட்டார் சைக்கிள்களை மிக வேகமாக ஓட்டிச் செல்லக்கூடிய நபர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பிடித்து அவர்களிடம் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்.

    மேலும் இதுபோன்று சென்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்க வேண்டும். இது தவிர அதிவேக மோட்டார் சைக்கிள் சாகசம் செய்பவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
    உலக நன்மை வேண்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் சித்திரை மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு மகாருத்ர ஜப பாராயணம் மற்றும் யாகம் கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது.
    சிதம்பரம்:

    பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் சித்சபையில் உள்ள மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    சித்திரை மாத திருவோண நட்சத்திர மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நடைபெற்றது. சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர் பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மகாபிஷேகத்தை கண்டுகளித்து தரிசித்தனர்.

    உலக நன்மை வேண்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் சித்திரை மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு மகாருத்ர ஜப பாராயணம் மற்றும் யாகம் கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு நடராஜர் கோவிலில் வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சித்சபையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு 8 மணிக்குள் உச்சிகால பூஜை நடைபெற்றது. பின்னர் 10 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் கனகசபையில் எழுந்தருளினார்.

    ஆயிரங்கால் மண்டபம் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலை பந்தலில் யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 1 மணி முதல் 4 மணி வரை லட்சார்ச்சனையும், 300 பேர் பங்கேற்ற மகாருத்ர யாகம் நடைபெற்றது.

    பின்னர் யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கனகசபைக்கு சென்ற பின்னர் மகாபிஷேகம் நடைபெற்றது.

    மகாபிஷேக ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.

    நேர பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு காரணமாக நடுரோட்டில் தனியார் பஸ்களை நிறுத்தி கண்டக்டர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் நெல்லிக்குப்பம் சாலை வழியாக இன்று காலை தலைமை தபால் நிலையம் அருகே தனியார் டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சை முந்திக் கொண்டு மற்றொரு தனியார் பஸ் சென்றது. அப்போது தனியார் பஸ்சை டிரைவர் நடுரோட்டில் திடீரென்று நிறுத்தினார். பின்னர் அந்த பஸ்சில் இருந்து கண்டக்டர் கீழே இறங்கி , மற்றொரு பஸ்சில் இருந்த கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் எங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் எப்படி நீங்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லலாம் எனக்கூறி, முதலில் வந்த பஸ் செல்லாத வகையில் மற்றொரு பஸ்சை வழி மறித்து நிறுத்தினார்.

    இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உங்கள் நேர பிரச்சினையை நீங்கள் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். பஸ்சை இப்படி நிறுத்தினால் நாங்கள் எப்படி பயணிப்பது என கூறி, கண்டக்டரிடம் கேட்டனர். அப்போது கண்டக்டர்- பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து பஸ்சை இயக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் கூறியதால் அங்கிருந்து அவசரஅவசரமாக தங்கள் பஸ்களை எடுத்துக் சென்றனர்.

    மேலும் அங்கு அதிக அளவில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் பஸ்கள் இயக்குவதற்கு நேரம் இருக்கும் நிலையில் அவர்களுக்குள் பல்வேறு தகராறு இருந்து வரும் நிலையில் பஸ்களில் பயணிகள் இருக்கும் நிலையில் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி இது போன்ற தகராறில் ஈடுபட்டால், பயணிகளுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்.

    இந்த தகராறு அடிதடியாக மாறினால் பொதுமக்களின் நிலை என்ன? என்பதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு 51 வகையான திரவிய பொடி, பழம், பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் மகா அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.
    பண்ருட்டி:

    ஆடல் வல்லான் நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி ஆகிய 6 நாட்கள் ஆறு அபிஷேகம் மட்டுமே நடைபெறும்.

    சித்திரை திருவோணம் நாளான நேற்று திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு இந்த ஆண்டின் முதல் மகாஅபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதனை முன்னிட்டு நடராஜருக்கு 51 வகையான திரவிய பொடி, பழம், பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் மகா அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.

    தொடர்ந்து சிறப்புமலர் அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. தீபாராதனையின்போது அப்பர் பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் நடராஜர் மண்டபத்தில் எழுந்தருளி தரிசன காட்சி நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன், டாக்டர் ராம்பிரசாத் கவுன்சிலர்கள் ராமலிங்கம், ரமேஷ், அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சீனிவாசன், சித்திரை திருவோண உபயதாரர் ஜெயஸ்ரீதர் மற்றும் சிவனடியார்கள், சிவத்தொண்டர்கள் ஆலய அர்ச்சகர்கள் சிறப்பாக செய்தனர்.

    கடலூரில் மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள், 4 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் 124 என மொத்தம் 134 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா போலீஸ் நிலையங்கள் மற்றும் மது விலக்கு அமல்பிரிவில் இருந்து மதுவிலக்கு சம்பந்தமாக பதிவு செய்யபட்ட வழக்கில், மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள், 4 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் 124 என மொத்தம் 134 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது.

    மேற்படி 134 வாகனங்களையும் அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவின் படி இன்று (25- ந் தேதி) காலை கடலூர் மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் ஏலம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமை தாங்கினார். மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலை வகித்தார். அப்போது வாகனங்களின் தரம் கண்டறிந்து அதன் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டது.

    இதில் ஏராளமான வாகன விற்பனையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் வழக்கத்தைவிட அதிகளவில் கூட்டமாக காணப்பட்டது.
    பெருந்துறை விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை-பவானி ரோடு, சோளிபாளையம் பகுதியில் சாகர் இண்டர்நே‌ஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி, காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த உக்கரவேல் என்பவரது மகன் கலையமுதன் (வயது 16) 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் இப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதியம் முதல் மாணவர் கலையமுதனை காணவில்லை.

    இதையடுத்து விடுதி வார்டன் மற்றும் மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தும் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுதொடர்பாக பள்ளியின் தாளாளர் சுந்தர்ராஜன் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவரை தேடி வருகிறார். பள்ளியில் தங்கி படித்த மாணவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×