என் மலர்tooltip icon

    கடலூர்

    • 27-ந் தேதி வீட்டிலிருந்த அனிதா உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி–விட்டுச் சென்றவர்.
    • அனிதாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்க–ளில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அருகே புதுப்பா–ளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலாட்சி இவரது அக்கா குப்பம்மாள். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குப்ப–ம்மாளின் மகளான அனிதா (வயது 29) என்பவர் தனது சித்தி அஞ்சலாச்சியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி வீட்டிலிருந்த அனிதா உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி–விட்டுச் சென்றவர். இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த அஞ்சலாட்சி அனிதாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்க–ளில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அஞ்சலாட்சி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடு–த்தார். புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன அனிதா என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற–னர்.

    • பண்ருட்டி அருகே மின்கசிவால் கூலித்தொழிலாளி வீடு எரிந்து நாசமாயின.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்கிரையான வீட்டை பார்வையிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே திருவாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி கூலித்தொழிலாளி. இன்று காலை வழக்கமாக வீட்டில் இருந்து அனைவரும் கூலி வேலைக்காக சென்று விட்டனர். அப்போது வீட்டில் எதிர்பாராதமாக மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து ஏரிய தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த தீ மலமல வென பரவி வீடு முழுவதும் எரிந்தது. இதைப் பார்த்த அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிருஷ்ணமூர்த்திக்கும், பண்ருட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள், ஜமுனா ராணி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மற்ற வீடுகளுக்கும் பரவாமல் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் கிருஷ்ணமூர்த்தியின் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்கிரையான வீட்டை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருதூர் கிராமத்தில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5- ந் தேதி அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்தார்,
    • வடலூர் தருமச்சாலையில் காலை 7 மணிக்கும், மருதூரில் 8 மணிக்கும் சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5- ந் தேதி அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்தார், இவர் சென்னை, வடலூர், பார்வதிபுரம், கருங்குழி ஆகிய இடங்களில் வாழ்ந்து மேட்டுக்குப்பத்தில் 1874 ம் ஆண்டு, ஜனவரி 30- ந்தேதிசித்திப் பெற்றார். இறைவன் ஒளி (ஜோதி)வடிவானவர் என உலகிற்கு உணர்ந்த, வடலூர் பார்வதிபுரத்தில் ஞானசபையை நிறுவி, மாதம்தோறும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகள் நீக்கிய ஜோதி தரிசனமும், ஆண்டு தோறும் தை மாத பூச நட்சரத்தன்றும் 7 திரைகள் நீக்கிய ஜோதி தரிசனம் காண்பித்தார். அன்று முதல் தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது, மக்கள் பசி பிணி இல்லாமல், இதே வடலூரில் சத்திய தருமச்சாலையை உருவாக்கி அதன்மூலம் 3 வேளையும், அன்னதானம், (உணவு) தடையின்றிவழங்கப்பட்டு வருகிறது.

    இவர் ஜாதி, மதங்களை கடந்து, ஒற்றுமையுடன், வாழவேண்டும் கண்மூடிபழக்கமெல்லாம் மண்மூடி போக எனவும், கருணையில்லா, ஆட்சி கடுகி ஒழியட்டும் அறிவுறுத்தினார். இத்தகைய சிறப்புக்குரிய அருட்பிரகாச வள்ளலாரின் 200- வது பிறந்த தினம் இன்று (5 -ந்தேதி) கோலாகலமாக நடந்தது. இதையொட்டி வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லம், வள்ளலார் சித்திப் பெற்ற மேட்டுக்குப்பம், வடலூர் ஞானசபை, தருமச்சாலை ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது. இதில் வடலூர் தருமச்சாலையில் காலை 7 மணிக்கும், மருதூரில் 8 மணிக்கும் சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது, முன்னதாக மேற்கண்ட இடங்களில் ஒருவார காலம், அருட்பா முற்றோதல் நடைபெற்றது,தொடர்ந்து தருமச்சாலை மேடையில், சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

    • புரட்டாசி மாதம் மூன்றாவது வாரம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பொதுமக்கள் சாலையில் அமர்ந்தும் சாமி கும்பிடுவதற்கு காத்துக் கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் புரட்டாசி மாதம் மூன்றாவது வாரம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வதும், சனிக்கிழமை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி செல்வதும் வழக்கமாகும். இந்த நிலையில் தற்போது தேவநாத சாமி கோவிலில் தேசிகர் பிரம்ம உற்சவம் நடைபெறுவதால் இன்று ரத்னாங்கி சேவை வெகு விமர்சையாக நடைபெறும்.

    இதன் காரணமாக தேவநாதசுவாமி கோவிலில் இருந்து தேசிகர் மற்றும் யோக நரசிம்மர் மலை மேல் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடைபெற்ற மீண்டும் கீழே வந்து ஒவ்வொரு சன்னதியில் உள்ள சாமிகளை தேசிகர் தரிசித்து செல்வதால் இன்று காலை தேவநாத சாமி கோவில் வளாகத்தில் பூஜைகள் நடைபெற்றதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இது மட்டும் இன்றி இன்று விஜயதசமி என்பதால் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து பள்ளிகளில் சேர்ப்பதும், பயபக்தியுடன் வழிபட்டு செல்வதும் காண முடிந்தது.

    இன்று காலை வழக்கம் போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்தனர். ஆனால் சிறப்பு பூஜை தொடர்ந்து நடைபெற்று வந்ததால் தேவநாத சாமி கோவிலுக்குள் காலை 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்காத காரணத்தினால் நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பொதுமக்கள் சாலையில் அமர்ந்தும் சாமி கும்பிடுவதற்கு காத்துக் கொண்டிருந்தனர். அப்போது நூற்றுக்கணக்கான கார், வேன், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கோவில் வளாகம் வரை போலீசார் பணிகளில் இல்லாததால் திரண்டு சாலையில் நிறுத்திவிட்டு சென்றனர். இதன் காரணமாக திருவந்திபுரம் கோவில் முழுவதும் பக்தர்கள் செல்ல முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் ஸ்தம்பித்தது. மேலும் பக்தர்களுக்குள் கடும் வாக்குவாதமும் நிலவி வந்தது.

    மேலும் வாகனங்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சென்றதால் கோவிலை சுற்றியும் மற்றும் தெருக்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் வீடுகள் முன்பு நின்றதால் அடுத்த கட்டமாக கோவிலுக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் பக்தர்கள் விழிப்பிதுங்கி நின்றனர். இதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் பக்தர்களுக்குள் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதாக போலீசருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸ் டி.எஸ்.பி. கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் திரண்டு வந்தனர். பின்னர் அவசர அவசரமாக பொதுமக்களை அணிவகுத்து வரிசையில் நிற்க வலியுறுத்தியும், வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்காமல் கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழக்கம்போல் சாமி கும்பிடுவதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக திருவந்திபுரம் முழுவதும் ஸ்தம்பித்ததோடு பொதுமக்கள் கடும் அவதி அடைந்ததை காண முடிந்தது.

    • விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் பெற்றோர்கள் சேர்ப்பது வழக்கம்.
    • தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர்.

    கடலூர்:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா தமிழகத்தில் கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் பெற்றோர்கள் சேர்ப்பது வழக்கம். இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளியில் குறைந்த அளவு மாணவர்கள் சேர்க்கை இருப்பதால், பெரும்பாலான பகுதிகளில் தொடக்கப் பள்ளிகள் மூடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக தமிழக அரசு விஜயதசமி அன்று தனியார் பள்ளிகள் திறப்பது போல் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமாவது பணிக்கு வரவழைத்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் சுமார் 1300-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டன. பின்னர் பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களை ஆர்வமுடன் பள்ளி அறைக்கு கொண்டு சென்று ஆசிரியர்கள் விளையாட்டு மற்றும் ஆடிப்பாடி பாடல்கள் கூறி கல்வி கற்பித்தனர்.

    கடலூர் பகுதியில் ஒரு சில அரசு தொடக்கப்பள்ளி இன்று திறக்காமல் வழக்கம் போல் மூடி இருந்தது. இதன் காரணமாக அந்தந்த பகுதி மாணவர்கள் அரசு பள்ளி மூடி இருந்த காரணத்தினால் தனியார் பள்ளியில் சேர்க்கக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் தமிழக அரசு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதோடு, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் புதிய திட்டங்கள் அறிவித்து அதனை கண்காணிக்க அதிகாரிகள் நியமித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில் ஆசிரியர்களின் அலட்சியப் போக்கு காரணமாக பள்ளிகள் திறக்காததால் மாணவர்கள் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஆகையால் கடலூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் இதுபோன்ற காலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கடலூர் மாவட்டத்தில் எந்தெந்த பள்ளிகள் திறக்கப்படவில்லை யார் யார் பணிக்கு வரவில்லை என கண்டறிந்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தனது மகளுடன் ரெட்டியார் பகுதியில் வசித்து வருகிறார்.
    • பீரோ உடைக்கப்பட்டு பதில் இருந்த 5 பவுன் நகை வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் காரை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தன.

    கடலூர்:

    நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சியில் ராமமூர்த்தி ரெட்டியார் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 68) இவர் சப்-இன்ஸ்பெக்டர் ஆக வேலை பார்த்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தனது மகளுடன் ரெட்டியார் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று கடலூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் திருமண விழா முடிந்து வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்த ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பதில் இருந்த 5 பவுன் நகை வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் காரை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தன. இது குறித்து ராதாகிருஷ்ணன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் தெரிவித்தார். புகார் என்பதில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, காரை திருடி சென்ற மர்மகும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். 

    • வடலூரில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சந்தேகப்படும் படி நின்றுக் கொண்டிருந்த, கலைவாணணை வளைத்துபிடித்தனர்.

    கடலூர்:

    நெய்வேலி பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 41)சேராக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (26). வடலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (60). இவர்களது மோட்டார் சைக்கிள்கள் வெவ்வேறு இடங்களில் திருட்டு போனது. இதுகுறித்து புகாரி ன்பேரில் வடலூர் போலிசார் வழக்குபதிவு செய்து தீவிர புலன்விசாரணை மேற்கொண்டுவந்தனர். வடலூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் தீவிர ரோந்துபணியில் வடலூர் அய்யன்ஏரி அருகே ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படி நின்றுக் கொண்டிருந்த, கலைவாணணை வளைத்துபிடித்தனர்,

    கலைவாணன் கொடுத்த தகவலின்பே ரில்மற்றவர்களை பிடித்துவிசாரித்தபோது பெரியாக்குறிச்சி புதுநகர் கலைவாணன் (21)சிதம்பரம் மணலூர் விகேஆர் நகர் சிரஞ்சீவி(20),கிளியனூர்பிரகாஷ்ஆகியோர் என தெரிய வந்தது. இவர்கள் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் ஆவர். இவர்களில் கலைவாணன், சிரஞ்சீவி ஆகிய 2 பேர் கைதுசெய்து வழக்குபதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய கிளியனூர் பிரகாசை போலீசார்தேடி வருகின்றனர். 

    • பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் பலியானார்.
    • டிராக்டரை ஆயுத பூஜைக்காக ஏரிக்கு கொண்டு சென்று கழுவி, ஏரிக்கரையில் இருந்து மேல் ஏற்றி விட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டுக்கூடலுார் பழைய காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், (வயது21) . டிரைவர். இவர், காட்டுக்கூடலுாரில் கார்த்திக் என்பவரது டிராக்டரை ஆயுத பூஜைக்காக ஏரிக்கு கொண்டு சென்று கழுவி, ஏரிக்கரையில் இருந்து மேல் ஏற்றி விட்டார். பின்னர் ஏரியில் கிருஷ்ண குமார் குளித்தபோது ஆழமான பகுதியில் சென்று சிக்கிய கிருஷ்ணகுமார் உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் கிருஷ்ணகுமார்உடலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • குழந்தை திருமணம் நடந்ததாக கடலூர் சமூக நலத்துறைக்கு புகார் வந்தது.
    • அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், குழந்தை திருமணம் நடந்தது உறுதியானது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் ராம் என்கிற தில்லை நாகரத்தின தீட்சிதர். அவரது மகன் பத்ரிசன், (வயது 19).

    இவருக்கும், திருமண வயது பூர்த்தியடையாத சிறுமிக்கும் சிதம்பரத்தில் திருமணம் நடந்தது. சிறுமி தற்போது, 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இதுகுறித்து குழந்தை திருமணம் நடந்ததாக கடலூர் சமூக நலத்துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், குழந்தை திருமணம் நடந்தது உறுதியானது.

    இது குறித்து சமூக நலத்துறை மகளிர் ஊர் நல அலுவலர் சித்ரா, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில், பத்ரிசன், இவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் என 6 பேர் தில்லைநாகரத்தினம் தீட்சிதர், பத்ரிசன் சகோதரர் சூர்யா தீட்சிதர், சிறுமியின் தந்தை ராஜகணேசன் தீட்சிதர், சிறுமியின் தாய் தங்கம்மாள் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து உள்ளனர்.

    இவர்களில் சூர்யா தீட்சிதரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர்.
    • 50 ஆண்டுகளுக்கு மேலாக 22 குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர். இதில் அண்ணாகிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட சன்னியாசிபேட்டை ஊராட்சி சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது - 

    எங்கள் பகுதியில் அய்யனார் கோவில் அருகே குளக்கரை நீர்நிலை புறம்போக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 22 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். மேலும் ஊராட்சி சார்பாக குடிநீர், வீட்டு வரி போன்றவற்றை பல ஆண்டுகளாக கட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, மின்சார இணைப்பு பெற்று வசித்து வருகின்றோம். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி குளக்கரைக்கு அருகில் வசிக்கும் எங்களை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அளிக்க உள்ளனர். ஆகையால் எங்களுக்கு மாற்றுஇடம் வேண்டும். மேலும் இந்த இடத்தை விட்டால் வாழ்வாதாரத்திற்கு வீடு இடம் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட இந்த கிராம பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்கி அதன் பிறகு காலி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என போலீசார் தடைவிதித்துள்ளனர்.
    • நீரோட்டம் மாற்ற நிலை காரணமாக கடலில் மீன் வரத்து சரிவர இருக்காது.

    கடலூர்:

    தமிழக அரசு சமீபகாலமாக சுருக்கு மடிவலை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளது. மீறி பயன்ப டுத்தினால் பயன்படுத்துவோரை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மீனவர் கிராமங்களில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என போலீசார் தடைவிதித்துள்ளனர். மேலும் பயன்படுத்துவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர். இதனை அடுத்து இந்த சுருக்குமடிவலை பிரச்சினையால் ஒரு சில மீனவர்களுக்கு மானியம் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சுருக்குமடிவலை பயன்படுத்தாமல் இருக்க கடலூர் மீனவ கிராமங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    தற்போது கடலில் ஏற்பட்ட பருவக்காற்று அதிகரித்தல் மற்றும் நீரோட்டம் மாற்ற நிலை காரணமாக கடலில் மீன் வரத்து சரிவர இருக்காது. இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்திலிருந்து சுருக்குமடி வலையை கொண்டு வந்து பயன்படுத்த மீனவர்கள் கடந்த 30-ம் தேதி கோரிக்கையாக தேவனாம்பட்டினம் தாழங்குடா நல்லவாடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு துணை போலீஸ் சூப்பிரண்டு கரிக்கால் பாரிசங்கர் ஆகியோர் தலைமையில் மீனவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதற்கு அதிகாரிகள் போலீ சார்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் சுருக்கு மடி வலை சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பை சேர்ந்த மீனவர்களையும் அழைத்து போலீசார் சுருக்கு முடி வலையை பயன்படுத்தக்கூடாது என எச்சரித்து அனுப்பினார். இந்நிலையில் புதுவையில் இருந்து கடலூர் துறைமுகம் வழியாக தேவனாம்பட்டினத்திற்கு மூன்று சிறிய படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையை மீனவர்கள் கொண்டு வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மீன்வளத்துறை அலுவலர் சதுர்கான் தலைமையிலான ஊழியர்கள் மற்றும் போலீசார் கடலூர் துறைமுகம் தேவனாம்பட்டினம் முகதுவாரம் போன்ற பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுவையில் இருந்து சுருக்குமடி வலையை கொண்டு வரும் மீனவ கும்பலைப் பிடிக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் புதுவையில் இருந்து 3 சிறிய படகுகளில் மீனவ கும்பல் ஒன்று சுருக்குமடி வலையுடன் முகத்துவாரம் வழியாக வந்த போது திடீரென முகதுவாரத்தில் தண்ணீர் குறைய தொடங்கியது. இதனால் நடுக்கடலில் மூன்று படகுகள் தரை தட்டி நின்றது. உடனே மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களை பிடிக்க முற்பட்டனர். அப்போது 3 படகுகளில் சுருக்குமடி வலையை ஏற்றி வந்தவர்கள் அதிகாரிகள் மற்றும் போலீசாரை பார்த்தவுடன் உடனே கடல் வழியாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தவேல், கணேசன் கோவிந்தன் மற்றும் சில மீனவர்களையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இன்று காலை முதலே மீன்வனதுறை அதிகாரிகள் தேவனாம்பட்டினம் தாழங்குடா உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதனால் போலீசார் குவிக்ப்பட்டு டுஉள்ளனர்.

    • போலீசார் தீவிர கஞ்சாவேட்டையில் ஈடுபட்டனர்.
    • கிரிதரன் (வயது 26) என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர கஞ்சாவேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி தாலுகா நத்தம் அண்ணா வீதி சேர்ந்தவர் கிரிதரன் (வயது 26) என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    ×