search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young girl mayam"

    • சிவகாசி அருகே இளம்பெண் மாயமானார்.
    • கள்ளக்காதல் விவகாரமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    பெரம்பூர் மாவட்டம் ஆலந்தூரை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது34). அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி லட்சுமி (33) திருச்சி துறையூரைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    ஒழுங்கு நடவடிக்கை காரணமாக முகேஷ்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்து வருகிறார். லட்சுமி அங்கு உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு ராஜா என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டுள் ளது.

    நாளடைவில் அவர்கள் அடிக்கடி மணி கணக்கில் செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனை முகேஷ் குமார் கண்டித்து வந்தார். ஆனால் மனைவியின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை. இது குறித்து அவர் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். அவர்களின் ஆலோசனைப்படி கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிவகாசி விஸ்வநத்தம் பகுதிக்கு மனைவியை முகேஷ்குமார் அழைத்து வந்தார். அதன் பின்னர் இங்கு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வரு கின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் முகேஷ்குமார் வெளியே சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி வீட்டில் இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும், பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கு சென்றார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மனைவியை கண்டுபிடித்து தரும்படி சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் முகேஷ்கு மார் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏற்கனவே பழகிவந்த ராஜாவை தேடி லட்சுமி சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் விவகாரமா? என விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • 27-ந் தேதி வீட்டிலிருந்த அனிதா உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி–விட்டுச் சென்றவர்.
    • அனிதாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்க–ளில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அருகே புதுப்பா–ளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலாட்சி இவரது அக்கா குப்பம்மாள். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குப்ப–ம்மாளின் மகளான அனிதா (வயது 29) என்பவர் தனது சித்தி அஞ்சலாச்சியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி வீட்டிலிருந்த அனிதா உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி–விட்டுச் சென்றவர். இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த அஞ்சலாட்சி அனிதாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்க–ளில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அஞ்சலாட்சி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடு–த்தார். புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன அனிதா என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற–னர்.

    • இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த (24) வயது இளைஞர் ஒருவருக்கும் கடந்த 10ம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
    • போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி காமுட்டி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராசு மகள் மஞ்சு (வயது21) படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த (24) வயது இளைஞர் ஒருவருக்கும் கடந்த 10ம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று ரேஷன் கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மஞ்சு வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மஞ்சுவின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் நடவடிக்கையில் தாமதம் படுத்துவதாக கூறி பெண்ணின் உறவினர்கள் நேற்று இரவு ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே திட்டக்குடி - விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆவினங்குடி போலீசார் போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காணாமல் போன பெண்ணை விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியலினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×