search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகாசி அருகே இளம்பெண் மாயம்
    X

    சிவகாசி அருகே இளம்பெண் மாயம்

    • சிவகாசி அருகே இளம்பெண் மாயமானார்.
    • கள்ளக்காதல் விவகாரமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    பெரம்பூர் மாவட்டம் ஆலந்தூரை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது34). அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி லட்சுமி (33) திருச்சி துறையூரைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    ஒழுங்கு நடவடிக்கை காரணமாக முகேஷ்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்து வருகிறார். லட்சுமி அங்கு உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு ராஜா என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டுள் ளது.

    நாளடைவில் அவர்கள் அடிக்கடி மணி கணக்கில் செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனை முகேஷ் குமார் கண்டித்து வந்தார். ஆனால் மனைவியின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை. இது குறித்து அவர் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். அவர்களின் ஆலோசனைப்படி கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிவகாசி விஸ்வநத்தம் பகுதிக்கு மனைவியை முகேஷ்குமார் அழைத்து வந்தார். அதன் பின்னர் இங்கு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வரு கின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் முகேஷ்குமார் வெளியே சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி வீட்டில் இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும், பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கு சென்றார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மனைவியை கண்டுபிடித்து தரும்படி சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் முகேஷ்கு மார் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏற்கனவே பழகிவந்த ராஜாவை தேடி லட்சுமி சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் விவகாரமா? என விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×