search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Retired Policeman"

    • தனது மகளுடன் ரெட்டியார் பகுதியில் வசித்து வருகிறார்.
    • பீரோ உடைக்கப்பட்டு பதில் இருந்த 5 பவுன் நகை வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் காரை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தன.

    கடலூர்:

    நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சியில் ராமமூர்த்தி ரெட்டியார் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 68) இவர் சப்-இன்ஸ்பெக்டர் ஆக வேலை பார்த்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தனது மகளுடன் ரெட்டியார் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று கடலூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் திருமண விழா முடிந்து வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்த ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பதில் இருந்த 5 பவுன் நகை வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் காரை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தன. இது குறித்து ராதாகிருஷ்ணன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் தெரிவித்தார். புகார் என்பதில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, காரை திருடி சென்ற மர்மகும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். 

    ×