என் மலர்
கோயம்புத்தூர்
- காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
- 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கோவை,
கோவை மாநகரில் போதைப்பொருள், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைக்கு அடிமையான இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி போதை ஏற்றி வருகின்றனர். மேலும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்க கூடாது எனவும் போலீசார் அறுவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று கோவை கடைவீதி அருகே காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒரு கும்பல் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக கடைவீதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடைவீதி போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 4 பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது அந்த கும்பல் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனை கும்பலை சேர்ந்த வேலாண்டி பாளையத்தை சேர்ந்த கணேஷ் பாபு (வயது24), பீளமேடு ஆவாரம் பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சரவணன் (31), இடையர்பாளையத்தை சேர்ந்த கணேஷ்குமார் (21), திருச்சி ரோடு ஹைவே காலனியை சேர்ந்த ஜான் ஜோசப் (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 85 போதை மாத்திரைகள், 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல், பீளமேடு ஆவாரம்பாளையம் சோபா நகர் மாநகராட்சி பூங்கா அருகே போதை மாத்திரை விற்பனை செய்த ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சுஜித் (25), ஜெகநாதபுரத்தை சேர்ந்த சிவசூரியன் (23) மற்றும் புலியகுளம் மருதாச்சலம் தெருவை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.
- கோவை சாய்பாபா காலனி ராஜஅண்ணாமலை ரோட்டில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- நிறுவன இயக்குனர் பணத்தை திருப்பிக் கொடுக்க 3 மாத காலம் கால அவகாசம் கேட்டார்.
கோவை,
கோவையில் வீடு கட்டி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நிறுவன இயக்குனர் மீது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சத்தியவதி. இவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கோவை சாய்பாபா காலனி ராஜஅண்ணாமலை ரோட்டில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன இயக்குனர் வீடு கட்டி தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் கொடுத்தார். இதனை நம்பி ஏராளமானோர் அவரிடம் பணம் கொடுத்தோம். ஆனால் பணம் பெற்றுக் கொண்ட பின்பு அவர் நிலம் கிரயம் செய்து கொடுக்காமலும், வீடு கட்டி கொடுக்காமலும் இருந்து வருகிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டால் உரிய பதில் அளிக்காமல் ஆட்களை வைத்து மிரட்டி வருகிறார். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபின் போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் பணத்தை திருப்பிக் கொடுக்க 3 மாத காலம் கால அவகாசம் கேட்டார்.
ஆனால் 3 மாதங்கள் கடந்த பின்னரும் அவர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே வீடு கட்டி தருவதாக பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நிறுவன இயக்குனர் விஜயகுமார் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- மது குடிக்க பணம் கொடுக்காததால் கும்பல் ஆத்திரம் அடைந்தனர்.
- இதுகுறித்து கதிரேஷ் கிணத்துக்கடவு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.
பொள்ளாச்சி,
கோவை அருகே உள்ள கிணத்துக்கடவைச் சேர்ந்தவர் கதிரேஷ் (வயது 24). பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் ஆர்.எஸ். ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு மதுகுடிக்கச் சென்றார்.
அங்கு அவர் வசிக்கும் பக்கத்து தெருவைச் சேர்ந்த ராசுக்குட்டி (21) என்பவரும், அவரது நண்பர்களான நவீன், இளங்கோ ஆகியோரும் வந்தனர். அவர்கள் கதிரேசிடம் மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் கதிரேஷ் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்து பணம் கொடுக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராசுக்குட்டி, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் கதிரேசை தாக்கினார். அவருடன் சேர்ந்து அவரது நண்பர்களும் சேர்ந்து கதிரேசை தாக்கி விட்டு அவர் வைத்திருந்த ரூ.2700 பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட கதிரேஷ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து கதிரேஷ் கிணத்துக்கடவு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசுக்குட்டி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
- உருளைக்கிழங்கு மண்டிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
- ஊட்டியிலிருந்து 10 டன் எடையுள்ள 4 முதல் 6 லோடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் மைதானம் பகுதியில் ஏராளமான உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.இங்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்தும், உத்தரபிரதேசம்,குஜராத், கர்நாடகா மாநிலம் கோலார்,மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் உருளைக்கிழங்குகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதனை வியாபாரிகள் ஏலம் முறையில் எடுத்துச் சென்று விற்பனை செய்வது வழக்கம்.
இந்த உருளைக்கிழங்கு மண்டிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் போதிய சீசன் இல்லாத காரணத்தால் தற்போது ஒரு நாளைக்கு தலா 10 டன் எடையுள்ள 4 முதல் 6 லோடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
மேலும்,உத்தரப்பிரதேசம்,குஜராத்,மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தலா 15 முதல் 20 டன் எடையுள்ள சுமார் 25 லோடு உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து தலா 15 முதல் 20 டன் எடையுள்ள சுமார் 20 லோடு உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.
தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் 45 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1500 க்கும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் உருளைக்கிழங்குகள் 45 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.750 முதல் 850 வரை விற்பனையாகிறது. இதனால் ஊட்டி உருளைக் கிழங்குகளின் விலை அதிகமாகவும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகளின் விலை குறைவாகவும் விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் விளைச்சல் குறைவாக இருந்தாலும் போதுமான விலை கிடைப்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- கிருஷ்ணராஜ் இரவு வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- அப்பாஸை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(37). இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வருகிறார்.
கிருஷ்ணராஜ் கடந்த 11-ந் தேதி தனக்கு சொந்தமான ேமாட்டார்சைக்கிளை மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் கோவை பஸ்கள் நிற்கும் இடத்தில் நிறுத்தி விட்டு நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார்.
இரவு வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளார். தொடர்ந்து இரவு வெகு நேரமானதால் வீட்டிற்கு சென்று விட்டார்.
மறுநாள் காலையில் வேலைக்கு சென்று விட்டு வந்த கிருஷ்ணராஜ் தனது நண்பர் குணசேகரன் என்பவருடன் அண்ணாஜி ராவ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணராஜின் வாகனத்தை மற்றொரு நபர் ஓட்டி சென்றது கண்டு அவரை கையும், களவுமாக பிடித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையை சேர்ந்த அப்பாஸ்(47) என்பதும், இருசக்கர வாகனத்தை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
- மனைவி கண்டித்ததால் சபரிகிரி மன வேதனையுடன் இருந்து வந்தார்.
- நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டியை சேர்ந்தவர் சபரிகிரி (வயது27). தனியார் கம்பெணியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் சபரிகிரிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவி கண்டித்ததால் சபரிகிரி மன வேதனையுடன் இருந்து வந்தார். இதையடுத்து கயல்விழி குளியல் அறைக்கு சென்று விட்டு திரும்ப வந்து வீட்டின் கதவை திறந்த போது கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. பின்னர் நீண்ட நேரம் கதவை தட்டியும் சபரிகிரி திறக்காதால் கயல்விழி அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சபரிகிரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதறி அழுதார். இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார்.
- அந்த பகுதியில் திரியும் ரவுடிகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவை,
கோவை காந்திபுரம் சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் அருகே பயன்பாடு இல்லாத காலி இடத்தில் ஓலை குடிசை ஒன்று இருந்தது. அங்கிருந்து கடந்த 8-ந் தேதி திடீரென துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் காணப்பட்டது. மேலும் அருகில் மதுபாட்டில்களும் கிடந்தன. அந்த நபரின் உடலை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பெண் யார், அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இறந்து கிடந்த ெபண் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது.
அந்த பெண்ணை யாராவது அழைத்துச் சென்று கொலை செய்து அதனை மறைப்பதற்காக தீ வைத்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அந்த இடத்தை மது குடிப்பதற்கும், பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருப்பதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். இவ்வாறு யாராவது அழைத்து வந்து உல்லாசமாக இருந்து விட்டு அந்த பெண்ணை கொலை செய்தார்களா என்றும் தெரியவில்லை.
இதனால் அந்த பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக பிணமாக கிடந்த பெண்ணின் அடையாளங்களை அனைத்து போலீஸ்நிலையங்களுக்கும் அனுப்பி பெண் மாயம் தொடர்பாக வழக்கு எதுவும் உள்ளதா என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.
எரிந்த நிலையில் கிடந்த அந்த பெண் சிவப்பு மற்றும் தங்க நிற ஜரிகை போட்ட ஜாக்கெட்டும், ஊதா நிறத்தில் வெள்ளை கோடு போட்ட துணியும் அணிந்துள்ளார். உடல் தீயில் கருகியதால் வேறு எந்த அடையாளங்களையும் போலீசாரால் தெரிவிக்க முடியவில்லை.
இதுதவிர அந்த பகுதியில் திரியும் ரவுடிகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு சம்பவத்தன்று அந்த பகுதிக்கு சென்றது யார் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள். அந்த பெண் யார் என்ற விவரம் தெரிந்தால் தான் அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியும் என ரத்தினபுரி போலீசார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
- கோவையில் மட்டும் 9 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- கோவையில் 300 இயற்கை எரிவாயு விநியோக நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
கோவை,
தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கப்படுமென இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநர் (குழாய் பதிப்பு பிரிவு) டி.எஸ் நானாவரே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதில், கோவையும் ஒன்று. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு எரிவாயு குழாய்கள் அமைக்கப்படும். உட்பகுதிகளை தவிர்க்க, எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியே எரிவாயு குழாய்கள் பதித்து வருகிறோம்.
கோவையில் மட்டும் 9 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்பணி 2027-ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். மற்ற மாற்று எரிபொருள்களைவிட இயற்கை எரிவாயுவானது (சிஎன்ஜி) 30 சதவீதம் விலை குறைவானது. இதை பயன்படுத்துவது பாதுகாப்பானது. எனவே, கோவையில் 300 இயற்கை எரிவாயு விநியோக நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
மேலும், குழாய் மூலம் வீடுகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், விடுதிகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும். தற்போது நாட்டில் இயற்கை எரிவாயு பயன்பாடு 6.50 சதவீதமாக உள்ளது.
இதை 2030-ம் ஆண்டில் 15 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில், அங்குள்ள மலைப்பகுதிகளில் எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதிப்பது சிரமம். திரவ பெட்ரோலிய வாயுவானது (எல்பிஜி) பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் நமது நாட்டுக்கு தேவையான இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) இங்கேயே போதிய அளவில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாயிகளின் விலை பொருள்களை விற்பனை செய்ய சுங்கம் வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.
- அடுத்த வெள்ளிக்கிழமை முதல் விவசாயிகளுக்கு தனி இடம்.
சூலூர்,
சூலூர் வாரச்சந்தையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் சண்முகம் தலைமையில் ஒன்று கூடினர்.
அப்போது வாரச்சந்தையில் விவசாயிகள் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். விவசாயிகளின் விலை பொருள்களை விற்பனை செய்ய சுங்கம் வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.
வாரச்சந்தை சுங்க கட்டண வசூலிப்பாளர், விவசாயிகளுக்கு வார சந்தையில் தனி இடம் ஒதுக்கி தர வேண்டிய அதிகாரம் பேரூராட்சிககு உட்பட்டது.
சந்தையில் விற்பனை செய்யும் பொருள்களுக்கு சுங்கம் வசூலிக்கவே தான் இந்த சந்தையில் ஏலம் எடுத்துள்ளதாகவும் விவசாயிகளுக்கு குறைவான கட்டணத்தை வசூலிப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது விவசாயிகள் தங்களது விளைபொருளுக்கு மூட்டைக்கு 50 ரூபாய் சுங்க கட்டணமாக வசூலிப்பது கூடாது என தெரிவித்தனர்.
மேலும் வாரச்சந்தையில் விவசாயிகளிடம் வாங்கி விற்கும் விற்பனையாளர்களுக்கு இதனால் எவ்வித இட யூறும் ஏற்படாது என்றார்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாரச்சந்தையில் கூடியதால் அப்பகுதிக்கு சூலூர் தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் மன்னவன், சூலூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் மதிமுக கோவை மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து அடுத்த வெள்ளிக்கிழமை முதல் விவசாயிகளுக்கு என சூலூர் வாரச்சந்தையில் தனியிடம் ஒதுக்கி தரப்படும் என தெரிவித்தர். இதனை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்
- போலீசார் காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தி பெற்றோரை காவல் நிலையம் வரவைத்தனர்
கோவை,
பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் யதுகிருஷ்ணன் (வயது 25). இவர் தனியார் லாட்ஜியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கன்னித்தமிழ் (26). கல்லூரி படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாளடைவில் அவர்கள் காதலிக்கத் தொடங்கினர். அவர்கள் கடந்த 2 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன் படி கன்னித்தமிழ் கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் யதுகிருஷ்ணனுடன் சேர்ந்து ஜோதி நகர் விநாயகர் கோவில் வைத்து இருவரும் திருமணம் செய்தனர்.
பின்னர் பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களின் பெற்றோரை போலீசார் பேச்சு வார்த்தைக்காக அழைத்துள்ளனர்.
இதேபோல ஆனைமலை அருகே சித்தூரை சேர்ந்த வர் தினேஷ் குமார் (26). இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (20). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் 2 பேரும் கடந்த 2 ½ வருடங்களாக காதலித்து வந்தனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, காங்கயம் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களது பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
ஒரேநாளில் பொள்ளாச்சி, ஆனைமலை போலீஸ்நிலையங்களில் 2 காதல் ஜோடியினர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
- பதுங்கி இருந்த சுஜிமோகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
- போதை கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் ஸ்ரீதரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை மாநகரில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைபொருட்களை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரத்தினபுரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கும்பல் தலைவன் சுஜிமோகன் உள்பட 7 பேரை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் தலைமறைவாக இருந்தனர். விசாரணையில் போதை கும்பல் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உதவி கமிஷனர் கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் பெங்களூருக்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த சுஜிமோகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 50 கிராம் மெத்தபெட்டமின் எனப்படும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் கோவைக்கு அழைத்து வந்து சுஜிமோகன் உள்பட 7 பேரையும் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
7 பேரின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த போது அதில் வாட்ஸ்அப் அழைப்பு மூலமாக ஒருவர் பல முறை பேசியது கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த நபர் பேசிய 30-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இருந்தது. அந்த ஆடியோவில் போதைப்பொருளை போலீசிடம் சிக்காமல் எப்படி விற்பனை செய்வது, அவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தது. போலீசார் யார் யாரை, எங்கெல்லாம் தேடுகிறார்கள் என்ற தகவல்களும் இருந்தது.
இவ்வாறு போதை கும்பலுக்கு தகவல்கள் தெரிவித்து அவர்களுக்கு வழிகாட்டிபோல் இருந்தது ஒரு போலீஸ்காரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த அப்புசாமி என்பவரது மகன் ஸ்ரீதர் (வயது 24) என்பதும், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. போதை கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் ஸ்ரீதரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கும்பலுக்கு போதைப்பொருள் விற்பனையில் கிடைக்கும் பணத்தை பங்கு போட்டு பிரித்து கொடுத்து வந்த போத்தனூர் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த வக்கீல் ஆசிக் (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலி நகைகள் கொடுத்து இதற்கு முன்னரும் மோசடி செய்துள்ளனர்.
- காட்டூர் போலீசில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை,
கோவைப்புதூரை சேர்ந்த கார் டிரைவர்கள் பாலதண்டபாணி (65), அவரது மகன் விவேக்(35). இவர்கள் கடந்த 5-ந் தேதி காந்திபுரம் ராம் நகரில் உள்ள நிதி நிறுவனத்துக்கு சென்று 24 கிராம் நகைகளை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 800 பணம் பெற்றனர். அப்போது நகை மதிப்பீட்டாளர் நகையை ஆய்வு செய்த போது அந்த நகைகள் போலி எனவும், தங்க முலாம் பூசியது என்பது தெரியவந்தது. இது குறித்து நிதி நிறுவனத்தினர் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த விசு (22) என்ற பைனான்சியரிடம் தந்தை, மகன் இருவரும் தங்க முலாம் பூசிய செம்பை கொடுத்து பணம் மோசடி செய்திருப்பதும், அந்த வழக்கில் ஆர்.எஸ்.புரம் போலீசார் அவர்களை கைது ஜெயிலில் அடைத்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாலதண்டபாணி மற்றும் அவரது மகன் விவேக் மீது காட்டூர் போலீசில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல், அவர்கள் வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






