என் மலர்
செங்கல்பட்டு
- மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அலுவலர் ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்றனர்.
திடீரென தீ பிடித்தால் பதட்டம் இன்றி எப்படி அணைப்பது, மேலும் பரவாமல் தடுப்பது, தீ காயம் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை முறைகள் என்ன? தகவல்களை எப்படி பரிமாற வேண்டும், என்பவை குறித்த பயிற்சியை மாமல்லபுரம் தீயணைப்பு அலுவலர்கள் ரமேஷ்பாபு, வெங்கட கிருஷ்ணன் ஆகியோர் ஒத்திகையாக மாணவர்களுக்கு செய்து காண்பித்தனர்.
- மதனபுரம் அருகில் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
- தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி உயிரிழந்தார்.
தாம்பரம்:
தாம்பத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 50). இவர் படப்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக தனது மகள் தீபிகா (வயது 21) உடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
மதனபுரம் அருகில் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பகுதியை கடக்க முயற்சி செய்த போது வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி மீது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் பின் டயர் ஏறி இறங்கிதில் படுகாயம் அடை ந்தார். தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி உயிரிழந்தார்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து பயன்பாட்டுக்கு வரவில்லை.
- பெரியபாளையம் பஸ் நிலையத்தில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 4 ஆண்டுகளாக பயனபாடு இன்றி உள்ளது.
பெரியபாளையம் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தினந்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும்மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து ஊத்துக்கோட்டை, பொன்னேரி, திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பஸ் இங்கு வந்து செல்கின்றன. மேலும் புகழ்பெற்ற பவானி அம்மன் கோவிலும் உள்ளது. இதன்காரணமாக பெரியபாளையம் பஸ்நிலையத்துக்கு பயணிகள் வருகை எப்போதும் இருக்கும்.
இந்த நிலையில் பயணிகளின் குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில் கடந்த 2018-2019-ம் ஆண்டு எம்.எல்.ஏ. தொகுதி மேம்மபாட்டு திட்டத்தில் பெரியபாளையம் பஸ் நிலையத்தில் ரூ.6.5 லட்சம் செலவில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பயணிகளுக்க குறைந்த வலையில் தரமான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது.
ஆனால் இதுவரை இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து பயன்பாட்டுக்கு வரவில்லை. காட்சி பொருளாக இங்கு உள்ளது. இதன் மேல் தற்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட இடமே தெரியாத அளவுக்கு காட்சி அளிக்கிறது.
மேலும் தற்போது ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 14 வார ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
எனவே இந்த நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர். 4 ஆண்டுகளாக காட்சி பொருளாக இருக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறைந்த விலையில் தரமான குடிநீர் தாகத்தை போக்க கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்க்ள கூறும்போது, பெரியபாளையம் பஸ் நிலையத்தில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 4 ஆண்டுகளாக பயனபாடு இன்றி உள்ளது. ஆடித்திருவிழா தொடங்கி உள்ள நிலையில் இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்ட வரவேண்டும் என்றனர்.
- பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை 2022-ல் அரசாணை வெளியிட்டது.
- ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரும்பான்மை பகுதிகள், குடியிருப்பு பகுதிகளாக விரிவடைந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இத்தகைய வளர்ச்சியை முறைப்படுத்தி ஒழுங்கமைக்க, டி.டி.சி.பி. எனும் உள்ளூர் திட்டக் குழும நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 ஊராட்சிகளை, சி.எம்.டி.ஏ. எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமழிசை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் நகர்ப்புற மையங்களை உருவாக்கி அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை துணை நகரங்களாக மேம்படுத்த சி.எம்.டி.ஏ. முடிவு செய்தது.
இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை 2022-ல் அரசாணை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு புதிய நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும், திருக்கழுக் குன்றம் ஊராட்சி ஒன்றி யத்தில் 8 ஊராட்சிகளும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளும் என 30 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
- வண்டலூர் பூங்காவை சுற்றிப்பார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
- விலங்குகள் பரிமாற்றத்தின் கீழ் சிங்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை:
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பூங்காவை சுற்றி பார்த்து அங்குள்ள அரிய வகை மிருகங்கள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
சராசரியாக தினமும் 2500 முதல் 3000 பேர் வரை செல்கிறார்கள். வார இறுதி நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேர் செல்கிறார்கள்.
602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 2 ஆயிரத்து 400 மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 42 வகை மிருகங்கள் மாமிச உண்ணிகள் ஆகும்.
இந்தியாவில் இருக்கும் உயிரியல் பூங்காக்களில் சிறந்த பூங்கா என்ற விருதையும் வண்டலூர் உயிரியல் பூங்கா பெற்றுள்ளது.
பூங்காவை சுற்றிபார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இனி இந்த கட்டணம் ரூ.200 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வர உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர பூங்காவுக்குள் குடும்பத்துடன் பேட்டரி காரில் சுற்றிவர கட்டணம் ரூ.1550. இந்த கட்டண உயர்வின் மூலம் பூங்காவை மேலும் சிறப்பாக பராமரிக்க முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.
இந்த பூங்காவில் ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கு மேல் விலங்குகளின் உணவுக்காக செலவிடப்படுகிறது. பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.7 கோடி வரை செலவாகிறது.
விலங்குகள் பரிமாற்றத்தின் கீழ் சிங்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் காட்டு கழுதைகள், ஒட்டகசிவிங்கி, வரிக்கு திரைகள் ஆகியவையும் அதிகமாக இடம் பெறும்.
புதுடெல்லி உயிரியல் பூங்காவில் கட்டணம் ரூ.110 ஆகவும், மைசூரு உயிரியல் பூங்காவில் கட்டணம் ரூ.60 ஆகவும் உள்ளது.
வண்டலூரில் கட்டணம் ரூ.200ஆக உயர்த்தி இருப்பது மிகவும் அதிகம் என்கிறார்கள். இந்த கட்டண உயர்வால் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் பூங்காவுக்கு பொழுதுபோக்க சென்றால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் வரை செலவாகும் என்கிறார்கள்.
- போலீஸ், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மின்கம்பியில் தொங்கிக் கொண்டு இருந்த டேனியலை மீட்டனர்.
- வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:
சென்னை மேற்கு தாம்பரம் மாந்தோப்பு என்ற பகுதியை சேர்ந்தவர் டேனியல் (23). இவர் வீட்டில் குடும்பப் பிரச்சினை காரணமாக, சண்டை போட்டு விட்டு, பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள, அவரது நண்பர் மணிகண்டன் என்பவர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில், மணிகண்டன் வீட்டில் முதல் மாடியில் இருந்து, நண்பர்கள் டேனியலும் மணிகண்டனும், மது அருந்தி உள்ளனர். அப்போது மணிகண்டன் நண்பர் டேனியலுக்கு அறிவுரை கூறி, நீ வீட்டிற்கு செல்வது நல்லது என்று கூறியுள்ளார். ஆனால் டேனியல், "நான் வீட்டிற்கு செல்ல மாட்டேன், செத்தாலும் சாவேன்" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11:30 மணி அளவில் டேனியல், நண்பரின் வீட்டு முதல் மாடியில் இருந்து, அருகே தெருவில் உள்ள மின் கம்பிகள் மீது திடீரென குதித்தார். அதில் மின்கம்பியில் சிக்கி, மின்சாரம் தாக்கி துடிதுடித்துக் கொண்டு கிடந்தார். அதை அந்தத் தெரு மக்கள் பதற்றத்துடன் பார்த்து,பெண்கள் கதறி அழுது கூக்குரல் இட்டனர். இதை அடுத்து நள்ளிரவில் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பானது. உடனடியாக பீர்க்கன்கரணை போலீஸ், தாம்பரம் தீயணைப்புத்துறை, முடிச்சூர் மின்வாரிய அலுவலகம், ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து உடனடியாக அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போலீஸ், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மின்கம்பியில் தொங்கிக் கொண்டு இருந்த டேனியலை மீட்டனர்.
அதோடு மருத்துவக் குழுவினர், அதே தீயணைப்பு வாகனத்தின் மேல் பகுதியில் வைத்து, சி.பி.ஆர். சிகிச்சை கொடுத்து, டேனியல் உயிரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி டேனியல் உயிரிழந்தார்.
இதை அடுத்து பீர்க்கன்கரணை போலீசார், டேனியல் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்துகின்றனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள், டேனியல் குதித்ததால் பழுதடைந்த மின் கம்பிகளை சீரமைத்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் பழைய பெருங்களத்தூர் பகுதிக்கு மின் இணைப்பை கொடுத்தனர்.
மாடியிலிருந்து மின்சார கம்பிகளில் குதித்து விழுந்து, நூதனமான முறையில், வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாலாற்று தரைப்பாலத்தில் சென்ற போது நிலை தடுமாறி பைக் கவிழ்ந்து விழுந்தது.
- நெரும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ஆகாஷ் உயிரிழந்தார்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகன் ஆகாஷ், (வயது.13) நெரும்பூர் மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நண்பர் விஜய் (வயது.15) என்பவருடன், பைக்கில் அப்பகுதி பாலாற்று தரைப்பாலத்தில் சென்ற போது நிலை தடுமாறி பைக் கவிழ்ந்து விழுந்தது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு நெரும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ஆகாஷ் உயிரிழந்தார். திருக்கழுக்குன்றம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகாபாரத நாடக பெருவிழா கடந்த 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வந்தது.
- சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை தெற்குபட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில், பாரம்பரியம் மிக்க மகாபாரத நாடக பெருவிழா கடந்த 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக "துரியோதனன் படுகளம்" நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது.
இவ்விழாவைகான கோவளம், நெம்மேலி, கேளம்பாக்கம், திருப்போரூர் மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்திருந்த சென்னைவாசி பக்தர்கள் பாரம்பரிய மகாபாரத கூத்து கலைஞர்களை வியப்பாக பார்த்து அவர்களுடன் நின்று செல்பி, போட்டோ எடுத்துச் சென்றனர்.
- சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் சரக்கு வாகனத்தின் பின்புறம் வேகமாக மோதியது.
- படுகாயம் அடைந்த கமல்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மாமல்லபுரம்:
சென்னை அபிராமபுரம் பகுதியை சேர்ந்தவர் கமல்ராஜ் (வயது 24). கற்பூர வியாபாரி. இவருக்கு கல்பாக்கம் அருகே உள்ள விட்டிலாபுரத்தில் ஒரு வீடு உள்ளது. வார நாட்களில் நண்பர்கள், உறவினர்களுடன் சென்று அங்கு ஓய்வு எடுப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று கமல்ராஜ் தனது நண்பர்கள் 6 பேருடன் விட்டிலாபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுப்பதற்காக சரக்கு வாகனத்தில் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். மாமல்லபுரம் அடுத்த மணமை என்ற இடத்தில் சரக்கு வாகனம் செல்லும்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் சரக்கு வாகனத்தின் பின்புறம் வேகமாக மோதியது.
இதில் சரக்கு வாகனம் சாலையில் தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த கமல்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் உயிரிழந்த கமல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
அவருடன் வந்து காயமடைந்த 6 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கொலை வழக்கில் மொத்தம் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
- 4 பேர் மீதும் ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வண்டலூர்:
மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ்(35). பா.ம.க.வை சேர்ந்த இவர் செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்க மாவட்ட தலைவராக இருந்தார்.
கடந்த மாதம் 12-ந் தேதி மதியம் காளிதாஸ், மறைமலைநகரில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டு இருந்தபோது மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 4 பேர் எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். மேலும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்தார். 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் மொத்தம் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில், முக்கிய குற்றவாளிகளான மறைமலைநகர் பகுதியை சேர்ந்த சபரி என்ற சபரிநாதன், வெங்கடேஷ், பார்த்திபன், சிங்க பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பாலாஜி ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியம் புழல் சிறையில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கினார்.
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சபரி உள்ளிட்ட 4 பேர் மீதும் ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- வரும் நாட்களில் மற்ற இடங்களும் மின்னொளியில் ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- இரவு 9மணிவரை ஏராளமான சுற்றுலா பயணிகள் மின்னொளியில் கடற்கரை கோவிலை பார்த்து ரசித்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
புராதன சின்னங்களை மின்னொளியில் இரவிலும் பார்வையிட ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முதல்(15-ந்தேதி) புராதன சின்னங்களை இரவில் மின்னொளியில் ரசிக்கலாம் என்று மத்திய தொல்லியல் துறையினர் அறிவித்து இருந்தனர். இரவு 9மணி வரை அலங்கார மின்னொளியுடன், புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதிகளை மின்னொளியில் ரசிக்கலாம் என எதிர் பார்த்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்தனர். ஆனால் கடற்கரை கோவிலை மட்டும் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் ரசிக்க அனுமதி வழங்கப்பட்டது. மற்ற இடங்களில் மின்னொளி ஏற்பாடுகள் செய்யப்பட வில்லை. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மத்திய தொல்லியல்துறை கடற்கரை கோவிலை மட்டும் முதல் கட்டமாக மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளித்து உள்ளதாக தெரிகிறது.
வரும் நாட்களில் மற்ற இடங்களும் மின்னொளியில் ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். புராதன சின்னங்களில் இரவு மின்னொளி காட்சியை அறிந்து விடுதிகளில் தங்கியிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாலையில் கடற்கரை கோவில் வளாகத்தில் திரண்டு இருந்தனர். உள்நாட்டவர்களுக்கு ரூ.40, வெளிநாட்டவர்களுக்கு- ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இரவு 9மணிவரை ஏராளமான சுற்றுலா பயணிகள் மின்னொளியில் கடற்கரை கோவிலை பார்த்து ரசித்தனர். செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கடற்கரைகோவில் போல் ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதிகளும் மின்னொளியில் காட்சியளித்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றனர்.
- சுற்று சுவர் மற்றும் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைத்து இருந்தனர்.
- சொத்தின் மதிப்பு ரூ.1½ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு, பத்மாவதி நகரில் பூங்காவுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதில் சுற்று சுவர் மற்றும் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைத்து இருந்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நகராட்சி கமிஷனர் இளம்பரிதி தலைமையில் ஊழியர்கள் அதிரடியாக பூங்கா ஆக்கிரமிப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டனர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.1½ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






