என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்பாக்கத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
- குழந்தை இல்லாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பெரியார் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது32) பெயின்டர. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.
குழந்தை இல்லாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த சதீஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






