என் மலர்
செங்கல்பட்டு
- 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
- நீர்வளத்துறை கட்டுப் பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல் பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப் பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
நேற்று ஒரே நாளில் 52 ஏரிகள் நிரம்பி உள்ளன. 241 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும் , 284 ஏரிகள் 50 சதவீதமும், 200 ஏரிகள் 25 சதவீதமும, 70 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழும் நிறைந்து உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
உத்திரமேரூர் - 20.5 செ.மீ
காஞ்சிபுரம் - 15.3 செ.மீ
செம்பரம்பாக்கம் - 13.2 செ.மீ
வாலாஜாபாத் - 12.7செ.மீ
ஸ்ரீபெரும்புதூர்- 13.1 செ.மீ
குன்றத்தூர் - 10.7செ.மீ
மஞ்சள் நீர் கால்வாய்
பலத்த மழை காரணமாக திருகாலிமேடு அருந்ததி பாளையம் பகுதியில் உள்ள மஞ்சள் நீர் கால்வாயில் இருந்து வெளியேறிய தண் ணீர் அருகில் உள்ள குடி யிருப்புகளுக்குள் புகுந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
மாநகராட்சி நிர்வாகம் சரியான திட்ட மிடாமல் மஞ்சள் கால்வாயில் மேற்கொண்டு வரும் பணியினால் கால்வாயில் போதிய மழை நீர் செல்ல முடியாமல் தண்ணீர் வெளியேறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- புயல் எச்சரிக்கை காரணமாக இ.சி.இர், ஓ.எம்.ஆர் சாலைகளில் வாகனங்கள் இயக்கப்படவில்லை.
- மாமல்லபுரம் கடற்கரை அருகில் 51 இருளர் குடும்பங்கள் குடில் அமைத்து தங்கியிருந்தனர்.
மாமல்லபுரம்:
ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் நிலையில், இன்று அதிகாலை கோவளம், நெம்மேலி, தேவநேரி, மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், கூவத்தூர் உள்ளிட்ட கடலோரங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புயல் எச்சரிக்கை காரணமாக இ.சி.இர், ஓ.எம்.ஆர் சாலைகளில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. அதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மாமல்லபுரம் கடற்கரை அருகில் 51 இருளர் குடும்பங்கள் குடில் அமைத்து தங்கியிருந்தனர். அவர்களை வருவாய் துறையினர் மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைத்தனர். மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மாமல்லபுரத்தில் தீயணைப்பு வாகனம், பைபர்படகு, ஆம்புலன்ஸ், பெக்லைன் இயந்திரம், மரம் அறுக்கும் இயந்திரம், டீசல் ஜெனரேட்டர், பாம்பு பிடிக்கும் கருவி ஆகியவைகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்வதால் கூடுதல் மீட்பு பணிகளுக்காக சென்னை ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் 50 பேர் மாமல்லபுரம் வந்துள்ளனர். கூடுதலாக ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் முன் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதலே மாமல்லபுரத்தில் மின் விபத்துக்களை தடுக்கும் வகையில் மின்சார சேவை நிறுத்தப்பட்டது. மக்கள் வெளியே வராமல் பாதுகாப்புடன் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தியதால், அனைவரும் வீடுகளில் முடங்கினர். சுற்றுலா பயணிகள் இன்றி அனைத்து புராதன சின்னங்கள் பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி, பெருமாளேரி, மணமை, நெய்குப்பி, குழிப்பாந்தண்டலம், எச்சூர் பகுதி விவசாயிகளின் வாழை மரங்கள், காய்கறி பந்தல்கள் சில இடங்களில் காற்றில் முறிந்து விழுந்தது.
மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என ஒலிபெருக்கி மூலம் மீனவ குப்பங்களில் எச்சரிக்கை விடுத்ததால் மீனவர்கள் தங்கள் படகு, வலைகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
- ஃபெங்கல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது.
- திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி நிறுத்தம்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
ஃபெங்கல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கையாக அப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 3 துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
- கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட 54 ஏரிகள் நிரம்பி இருக்கிறது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் உள்ளன. தொடர்ந்து பெய்த வரும் மழையினால் 61 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமன் தண்டலம், இளநகர் சித்தேரி ஆகிய 7 ஏரிகளும். செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரி, திம்மாவரம் ஏரி, ஆத்தூர் ஏரி, வில்லியம்பாக்கம், அச்சரப்பாக்கம் ஏரி, பாக்கம் ஏரி, பிள்ளை பட்டி ஏரி, மாத்தூர் ஏரி, ஓரத்தூர் ஏரி, கடமலைபதூர் ஏரி , விளங்காடு பெரிய ஏரி, உண்ணாமலை பல்லேரித்தாங்கல், பருக்கள் தாங்கள், களவேரி, பள்ளிப்பேட்டை ஏரி, அட்டுப்பட்டி கோட்டை ஏரி, புஞ்சை ஏரி, கோட்டை கரை மாம்பட்டு ஏரி, கயப்பாக்கம் கோட்டை ஏரி, சின்ன கயப்பாக்கம் ஏரி, கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட 54 ஏரிகள் நிரம்பி இருக்கிறது.
- 2,100 க்கும் மேற்பட்ட சிறு, தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன.
- 500 பேர் மட்டும் தான் தொழில் உரிமத்தை புதுப்பித்து உள்ளனர்.
வண்டலூர்:
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் ராணி கூறியிருப்பதாவது:-
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள், வணிகர்கள், சில்லறை வியாபாரிகள் முறையாக கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்காதவர்கள் மற்றும் புதிய தொழில் உரிமங்களை பெறாதவர்கள் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் நாகராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோரிடம் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை வழங்கி, அதற்குரிய கட்டணம் செலுத்தி உரிமங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு இரண்டு முறை நினைவூட்டல் கடிதம் நேரில் வழங்கப்படும் அதிலும் அவர்கள் தொழில் உரிமங்களை பெறாமல் அல்லது புதுப்பிக்காமல் வணிகம் செய்து வந்தால், கடையை பூட்டி சீல் வைத்து, நீதிமன்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2,100 க்கும் மேற்பட்ட சிறு, தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன. அதில் தற்போது வரை 500 பேர் மட்டும் தான் தொழில் உரிமத்தை புதுப்பித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது.
- கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை (சனிக்கிழமை) மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
- இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும்.
- நாங்கள் ஒரே ஒரு முறை தான் சந்தித்தோம்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்று மாவீரர் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
நானும் ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் சந்தித்து பேசியது எங்க இரண்டு பேருக்கு தான் தெரியும். இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். புத்தக வெளியிடணுமா... பாட்டு வெளியிடணுமா... எல்லாத்துக்கும் அவரை கூப்பிட்டு கூடவெச்சிக்கணும். ஆனால் நாங்கள் ஒரே ஒரு முறை தான் சந்தித்தோம். அதற்குள் அய்யோ... அய்யோ.. என கூச்சல்.
ஏன் தெரியுமா? அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார்... நாம அரசியல் சூப்பர் ஸ்டார்... இரண்டு ஸ்டாரும் சந்தித்ததில் பயம் வந்துடுச்சு என்றார்.
முன்னதாக கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தை சீமான் சந்தித்து பேசியது தொடர்பாக பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை வெளிவந்த நிலையில், அதற்கு சீமான் பதில் அளித்துள்ளார்.
- ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
- கார் ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் சாலை ஓரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், உடல் நசுங்கி உயிரிழந்த 5 பேரும் பண்டிதமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த இளைஞரை பிடித்த உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் சரமாறியாக அடித்தனர்.
கார் ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரை பிடித்த போலீசார் விபத்து தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வர வேண்டும் என வலியுறுத்தி உடல்களை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் கிராம மக்களுடன் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
- கடந்த 4 நாட்களுக்கு முன்பு போலீசார் இந்த இரும்பு தடுப்புகளை அப்புறப்படுத்தும் படி அறிவுறுத்தினர்.
- கல்குவாரி இருப்பதால் இச்சாலையில் லாரிகள், ஜே.சி.பி. உள்பட கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றன.
மீனம்பாக்கம் சுரங்கப்பாதையில் இருந்து மூவரசம்பேட்டை வரை செல்ல பி.வி. நகர் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை ஜி.எஸ்.டி சாலையில் இருந்து மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி, நங்கநல்லூர், பழவந்தாங்கல், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, திரிசூலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியாகவும், ஒரு மாற்றுப்பாதையாக உள்ளது.
பழவந்தாங்கலில் பி.வி.நகர் காமராஜர் சாலை - என்.ஜி.ஓ காலனி சந்திப்பில் டி.ஜி.கியூ.ஏ. கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளது. இதன் எதிரே உள்ள பாதாள சாக்கடை மூடி சில வாரங்களுக்கு முன்பு பழுதடைந்தது. அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு அதை குடிநீர் வாரிய ஊழியர்கள் புது மூடி அமைத்து சரி செய்தனர். மேலும் அதில் வாகனங்கள் எதுவும் சென்று விடாமல் இருப்பதற்காக அதன் பக்கவாட்டில் இருபுறமும் இரும்பு பலகை தடுப்பு அமைத்தனர்.
இந்த பணிகள் முடிந்து சுமார் 15 நாட்களுக்கு மேலாகியும் சாலை நடுவே இருந்து இரும்பு தடுப்பு அகற்றப்படாமல் இருப்பதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் மூவரசம்பேட்டை - திரிசூலம் பகுதியில் கல்குவாரி இருப்பதால் இச்சாலையில் லாரிகள், ஜே.சி.பி. உள்பட கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றன.
இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு போலீசார் இந்த இரும்பு தடுப்புகளை அப்புறப்படுத்தும் படி அறிவுறுத்தினர். ஆனால் இதுவரை யாரும் இதை எடுக்கவில்லை. உடனடியாக கட்டிடக்கழிவுகள், இரும்பு தடுப்புகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 இலட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
- ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதிகட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுதந்திர தினவிழா உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும். பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவித்தார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm/D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோர் 30.11.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு (10sqm) குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்துவரி ரசீது (அல்லது) குடிநீர் வரி ரசீது (அல்லது) மின் இணைப்பு ரசீது. வாடகை இடம் எனில் இடத்திற்கான உரிமையாளரிடம் இடம் ஒப்பந்தப்பத்திரம் (Rental Agreement Documents) பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 இலட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும். TABCEDCO, THADCO மற்றும் TAMCO பயனாளிகளும் இதில் விண்ணப்பிக்கலாம். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். முதல்வர் மருந்தகம் அமைக்க தேர்வு செய்யப்படும் தொழில் முனைவோர் முதல்வர் மருந்தகத்திற்கு உட்பட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதிகட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும். விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாற அதில் கூறியுள்ளார்.
- நாம் தமிழர் கட்சியினர் யாரும் விலகவில்லை, நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம்.
- மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் எங்கள் கட்சியினரை அனுப்பி வைக்கிறோம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நாதக கட்சியில் இருந்து விலகுவோர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக சீமான் கூறியதாவது:
* நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுபவர்கள் எங்களின் ஸ்லீப்பர் செல்.
* நாம் தமிழர் கட்சியினர் யாரும் விலகவில்லை, நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம்.
* மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் எங்கள் கட்சியினரை அனுப்பி வைக்கிறோம்.
கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து விலகுவது தொடர்பான கேள்விக்கு சிரித்துக்கொண்டே அவர் பதில் அளித்தார்.
- இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
- இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இன்று (21ம் தேதி) தொடங்கி வரும் 24ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.
4 நாட்கள் நடக்கும் இத்தொடரில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்
இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ஏக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "சர்வதேச புரோ பீச் வாலிபால் தொடர் போட்டிகளை மாமல்லபுரத்தில் துவங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மதிப்புமிக்க போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும் இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் இந்தியா சார்பில் பங்கேற்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.
இதில், SDAT மூலம் பயிற்சி பெற்ற 2 பெண் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். இந்த உற்சாகமான நிகழ்வில் தங்கள் முத்திரையை பதித்து, அனைத்து வீரர்களும் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிறந்த வெற்றியை பெறுவார்கள் என்றும் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.






