என் மலர்
நீங்கள் தேடியது "Vedanthangal Lake"
- தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளன.
- வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மேலும் ஏராளமான பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கலில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இயற்கையான குளிர்ச்சியான சூழ்நிலை, உணவு மற்றும் இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இங்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர்களை தாண்டி ஆண்டுதோறும் ஏராளமான பறவைகள் வருவது வழக்கம்.
வடகிழக்கு பருவமழையால் வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் வரத்தாலும், பருவமழைக்கு பின்னர் காணப்படும் இயற்கையான குளிர்ச்சியான சூழ்நிலைக்காக அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் பறவைகளின் வருகை இருக்கும்.
தொடர்ந்து 6 மாதம் பறவைகள் தங்கி இருக்கும் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் குஞ்சு பொரித்து மே அல்லது ஜூன் மாதம் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லும்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பறவைகள் மட்டும் இன்றி மட்டுமின்றி பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, சைபிரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பறவை மற்றும் வாத்து வகை இனங்கள் உள்ளிட்ட 23 அரிய வகை பறவையினங்கள் வரும்.
இந்த நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக வேடந்தாங்கல் ஏரிக்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வரத்தொடங்கி உள்ளன.
இதில் கூழைக்கடா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, நத்தக்குத்தி நாரை, கரண்டிவாயன், தட்டவாயன், நீர்காகம், வக்கா, உள்ளிட்ட 8 வகையான பறவைகள் அடங்கும்.
வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மேலும் ஏராளமான பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது வந்துள்ள பறவையினங்கள் மரத்தில் கூடுகட்டி உள்ளன. மரங்களில் பறவைகள் கூட்டமாக அமர்ந்து இருப்பதை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தற்போதுவரை வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து வேடந்தாங்கல் வனச்சரக அலுவலர் லெஸ்லி கூறியதாவது:-
வேடந்தாங்கல் ஏரிக்கு வளையப்புத்தூரில் இருந்து வரக்கூடிய நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அருகில் உள்ள மதுராந்தகம் ஏரி பறவைகளுக்கு அதிக அளவிலான மீன் மற்றும் பூச்சி இனங்கள் கிடைக்கும் பகுதியாக இருந்து வந்தது.
தற்போது கடந்த இரண்டு வருடங்களாக மதுராந்தகம் ஏரியில் தூர்வாரும் பணி நடைபெறுவதால் அங்கு தண்ணீர் இல்லை.
எனவே பறவைகளின் உணவு தேவைக்காக 3 மாதத்துக்கு ஒரு முறை 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. வரும் நாட்களில் கூடுதலாக வெளிநாடுகளில் இருந்து கூடுதலாக பறவையினங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 12 வகையான அரிய பறவை இனங்கள் வந்து குவிந்து உள்ளன.
- சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சிறப்பு பெற்றது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து பலவகை பறவைகள் வருகை தந்து கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுகள் பொறிக்கும்.
பின்னர் குடும்பத்துடன் பறவைகள் தங்களது தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்லும். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர்களை தாண்டி பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.
வழக்கமாக வடகிழக்கு மழைக்குப் பின்னர் நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் பறவைகளின் வருகை தொடங்கி 6 மாதங்கள் வரை இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி தொடர்ந்து அவ்வப்போது பெய்து வருகிறது.
இதனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள வேடந்தாங்கல் ஏரி முழுவதும் நிரம்பி உள்ளது. பறவைகளுக்கு ஏற்ற சூழல் நிலவுவதால் வெளிநாட்டு பறவைகள் சரணாலயத்திற்கு வரத்தொடங்கி உள்ளன.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கை பாகிஸ்தான், சைபீரியா, பங்களாதேஷ், பர்மா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மிளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தைகுத்தி நாரை, கூழைக்கிடா, பாம்புதாரா, கரண்டி வாயன், தட்டைவாயன், நீர்காகம், முக்குளிப்பான், வக்கா மற்றும் வாத்து இனங்கள் உள்ளிட்ட 12 வகையான அரிய பறவை இனங்கள் வந்து குவிந்து உள்ளன. அவை சரணாலயத்தில் உள்ள மரங்களின் மீது கூட்டம் கூட்டமாக இருப்பது பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இதுவரை 15 ஆயிரம் பறவைகள் வந்திருப்பதாகவும், அவை ஏரியில் உள்ள மரங்களில் முட்டையிட்டு கூடுகள் கட்டி வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சரணாலயத்தில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5, கேமராவுக்கு ரூ.50, செல்போன் கேமராக்களுக்கு ரூ50, மற்றும் வீடியோ கேமராவுக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
சீசன் தொடங்கி உள்ளதால் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அவர்கள் பறவைகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.






