என் மலர்
அரியலூர்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 25 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் நேற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அந்த பெண்ணின் மகள், தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 14 பேரை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் பாதிக்கப்பட்ட பெண், தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், 14 பேரையும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.
அவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட பிறகு கடந்த 25-ந்தேதி அரியலூர் வந்துள்ளார். அன்றைய தினம் அரியலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், வீட்டில் இருந்த போது அவர் யாருடன் தொடர்பில் இருந்துள்ளார். வெளியிடங்களுக்கு சென்று வந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அந்த பெண் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது அவரது செல்போனில் டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளார். அப்போது இம்மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவரின் செல்போனை வாங்கி பயன்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த டிக்டாக் வீடியோ மற்றும் அவரது செல்போனை வாங்கிய மருத்துவ தூய்மை பணியாளர்கள் 2 பெண்கள் ஒரு ஆண் என 3 பேர் பயன்படுத்தியதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3 பேரையும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்துள்ளனர். மேலும் அந்த 3 பேரையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் இவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் 14 நாட்கள் இவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கெரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 25 வயது பெண்ணுக்குகெரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த பெண்ணின் மகள், தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 14 பேரை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து வரு கின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அரியலூர் அரசு மருத்து வமனையில் உள்ள கொரோனா வார்டில் பாதிக்கப்பட்ட பெண், தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், 14 பேரையும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் சென்னை வேளச் சேரியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.
அவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட பிறகு கடந்த 25-ந்தேதி அரியலூர் வந்துள்ளார். அன்றைய தினம் அரியலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் அறி குறிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், வீட்டில் இருந்த போது அவர் யாருடன் தொடர்பில் இருந்துள்ளார். வெளியிடங்களுக்கு சென்று வந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சென்னையில் பணியாற்றியபோது யார், யாருடன் தொடர்பில் இருந்தார், எங்கெங்கு சென்றார் உள்ளிட்ட விபரங்களையும் சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தாமரை ராஜேந்திரன் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களாகிய நாமும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கூட்டம் சேராத வகையில், தங்களையே தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ் ஏற்படாமல் தங்களையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
கலெக்டர் ரத்னா கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக உள்ள உதவிக்கு யாரும் இல்லாத முதியவர்கள் தங்களுக்கு மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கு கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04329-228709 மற்றும் 99523 36840 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். அருகில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் என்று அறிந்தால் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளிலும் கொரோனா பாதித்தவர்களை கண்டறிய வீடு வீடாக அதிகாரிகள் குழு சோதனை செய்து வருகிறார்கள். தா.பழூர் வட்டார மருத்துவ அதிகாரி தட்சிணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) பஞ்சாபகேசன், வட்டார ஊராட்சி ஜாகிர் உசேன் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் ஏற்படுத்தி வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருபவர்களையும் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் இருந்து வேலை செய்துவிட்டு கொரோனா பீதி காரணமாக சொந்த ஊர் திரும்பியவர்களையும் தேடி அடையாளம் கண்டு வருகின்றனர்.
மேலும் அவர்களது வீட்டில் முழுமையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களை 14 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் முகப்பில் தனிமை படுத்தப்பட்ட வீடு என்ற எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
மாநில அரசின் 144 தடை உத்தரவு மற்றும் மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மளிகை கடைகள், காய்கறி கடைகள், பால் கடைகள், மருந்து கடைகள், இறைச்சி கடைகள் திறந்திருந்தன. ஊராட்சி மன்ற நிர்வாகங்கள் முழு வீச்சில் தூய்மை படுத்தும் பணிகளை செய்து வருகின்றனர். தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அவசியமில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்தவர்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுரை வழங்கினர்.
இது தவிர கிராம நிர்வாக அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அவரவர்கள் பகுதியில் வேலைக்காக வெளியே சென்று சொந்த ஊர் திரும்பியவர்களை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஒரே ஒரு நபருக்கு மட்டும் சாதாரண சளி, இருமல் இருந்தபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் அரியலூர் கொரோனா பரிசோதனை முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகன்நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. ஐ.நா. சபையால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டு உலகிலேயே பெரியதாக போற்றப்படுகிறது.
இந்த கோவிலுக்கு அனைத்து நாட்களிலும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த கோவிலில் பக்தர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆகமவிதிகளின்படி கோவிலில் நான்கு கால பூஜைகள் மட்டுமே நடைபெறும். வருகிற 31-ந்தேதி வரை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரம் வரலாற்றில் கோவில் மூடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் தோட்டக்கலைதுறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது அவர் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சொட்டு நீர் பாசனம் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கொய்யா தோட்டத்தினையும், 5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை தோட்டத்தினையும் மற்றும் பலா ஆகிய தோட்டங்களையும் 1 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள புடலங்காய் மற்றும் பீர்க்கங்காய் பந்தல் தோட்டத்தினையும் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திட்டங்களையும் ஆய்வு செய்தார்.
பின்னர், வேளாண்மைத்துறையின் சார்பில் உஞ்சினி கிராமத்தில் மல்லியம்பாள் என்பவரின் விதைப்பண்ணையில் 2.50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை தோட்டத்தினை பார்வையிட்டார். அப்போது கலெக்டர் ரத்னா கூறியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம் ஆகிய திட்டங்கள் மானிய விலையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிர்களில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசன அமைத்து தரப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் காய்கறி பரப்பு அதிகரித்தல் இனத்தில் எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மானியத்தில் காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வின் போது அரியலூர் துணை இயக்குனர்கள் அன்புராஜன் (தோட்டக்கலை), பழனிசாமி (வேளாண்மை), உதவி செயற்பொறியாளர் இளவரசன், உதவி இயக்குனர்கள் பெரியசாமி (தோட்டக்கலை), ஜென்ஸி (வேளாண்மை) மற்றும் உதவி தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர்கள் உடனிருந்தனர்.






