search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வெங்கனூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சப்-இன்ஸ்பெக்டர் பலி

    வெங்கனூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழந்து சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 54). இவர் கீழப்பலூர் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து, வெங்கனூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு வெங்கனூர் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக  அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். 

    இது குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×