search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    செந்துறை அருகே சிமெண்டு ஆலை லாரி மோதி வாலிபர் பலி

    செந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத சிமெண்டு ஆலை லாரி மோதியது. இதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் அஜித்குமார் (வயது 24).இவர் இன்று அதிகாலை கோயம்புத்தூரில் இருந்து அரியலூருக்கு வரும் தனது தாய், தந்தையை அழைத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் செந்துறையில் இருந்து அரியலூர் நோக்கி சென்றார். 

    ராயம்புரம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத தனியார் சிமெண்டு ஆலை லாரி வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். இதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனர். அதிகாலையிலேயே விபத்தில் வாலிபர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×