என் மலர்
அரியலூர்
அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 353 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களில் அரியலூர் மாவட்டத்தில் 329 பேரும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 பெண்கள் உள்பட 14 பேரும், திருச்சி அரசு மருத்துவமனையில் ஒருவரும், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 பெண்கள் என 17 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஆனால் நேற்று ஒரே நாளில் அரியலூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களின் விவரம் வருமாறு:- அயன்தத்தனூரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், பெரிய திருக்கோணத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவர். இதில் 32 வயதுடைய நபர் மராட்டிய மாநிலத்தில் இருந்து திரும்பி வந்தவர். மற்றொருவர் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் 2 பேரும் தற்போது அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 353-ல் இருந்து 355 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 39 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 353 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களில் அரியலூர் மாவட்டத்தில் 329 பேரும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 பெண்கள் உள்பட 14 பேரும், திருச்சி அரசு மருத்துவமனையில் ஒருவரும், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 பெண்கள் என 17 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஆனால் நேற்று ஒரே நாளில் அரியலூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களின் விவரம் வருமாறு:- அயன்தத்தனூரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், பெரிய திருக்கோணத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவர். இதில் 32 வயதுடைய நபர் மராட்டிய மாநிலத்தில் இருந்து திரும்பி வந்தவர். மற்றொருவர் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் 2 பேரும் தற்போது அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 353-ல் இருந்து 355 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 39 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வு இல்லாததால் ஆட்டோ, கார்கள் இயங்கவில்லை. இதனால் ஆட்டோ, கார் டிரைவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரை கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது. இதனால் ஆரஞ்சு மண்டலத்திற்குள் இடம்பெற்றிருந்த 2 மாவட்டங்களும் பச்சை மண்டலத்திற்கு மாறும் நிலையும் ஏற்பட்டது.
கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய தொழிலாளர்கள் மூலம் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது. முதலில் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படவே, சுதாரித்துக்கொண்ட சுகாதாரத்துறையினர் கோயம்பேடு சந்தையில் இருந்து வரும் தொழிலாளர்கள் அனைவரையும் மாவட்ட எல்லைகளில் மடக்கி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் பலருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனிடையே சுகாதாரத்துறையினரின் பிடியில் சிக்காமல் தொழிலாளர்கள் சிலர் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். அவர்கள் மூலம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் கொரோனா நோய் தொற்று பரவியது. அதிகம் பேர் பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்த மாவட்டங்களில் அரியலூர் 3-வது இடத்தையும் பிடித்தது. அந்த அளவுக்கு அங்கு வைரசின் தாக்கம் இருந்தது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 348 ஆக இருந்தது. இதில் 340 பேர் கோயம்பேடு தொழிலாளர்கள். நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 353 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 329 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புக்குள்ளான 139 நபர்களில் இதுவரை 30 பேர் சிகிச்சை பெற்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 109 பேர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததையடுத்து சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 4-ந் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கில் சிலர் தளர்வுகள் செய்யப்பட்டது. அதன்படி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 34 வகையான வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டது. முக்கிய சேவைகளை அளிக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கியது.
கொரோனா வைரசின் தாக்கம் ஒரு புறம் இருந்தாலும் கடைகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள் இயங்க தொடங்கியதால் வியாபாரிகள், பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
இருப்பினும் 2 மாவட்டங்களிலும் வைரசின் தாக்கம் கூடுவதும், குறைவதுமாக இருந்து வந்ததால் தொடர்ந்து சிவப்பு மண்டலத்திலேயே இடம் பெற்றுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவினை வருகிற 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்து நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திற்குள் இடம் பெற்றுள்ளதால் அந்த மாவட்டங்களில் ஏற்கனவே இருந்த நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் தொடரும் என்றும், தளர்வுகள் ஏதும் இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்தது.
இதன் காரணமாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது. மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில் மாவட்டத்திற்குள் ஆட்டோ, கார்களை இ-பாஸ் இல்லாமல் இயக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் அரியலூர்- பெரம்பலூர் மாவட்டத்திற்கு அந்த தளர்வு பொருந்தாது. இதனால் 2 மாவட்டத்திற்குள்ளும் ஆட்டோ, கார்களை இயக்க முடியவில்லை. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. முந்தைய கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்கிறது. இதனால் 2 மாவட்ட பொதுமக்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
குறிப்பாக ஆட்டோ- கார் டிரைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஆட்டோ- கார்களை இயக்காமல் உள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற மாவட்டங்களில் ஆட்டோ-கார்களை மாவட்டத்திற்குள் மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்திற்குள் இடம் பெற்றிருப்பதை காரணம் காட்டி இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது எங்களை மேலும் பாதிப்படைய செய்துள்ளது என்றனர்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரை கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது. இதனால் ஆரஞ்சு மண்டலத்திற்குள் இடம்பெற்றிருந்த 2 மாவட்டங்களும் பச்சை மண்டலத்திற்கு மாறும் நிலையும் ஏற்பட்டது.
கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய தொழிலாளர்கள் மூலம் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது. முதலில் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படவே, சுதாரித்துக்கொண்ட சுகாதாரத்துறையினர் கோயம்பேடு சந்தையில் இருந்து வரும் தொழிலாளர்கள் அனைவரையும் மாவட்ட எல்லைகளில் மடக்கி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் பலருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனிடையே சுகாதாரத்துறையினரின் பிடியில் சிக்காமல் தொழிலாளர்கள் சிலர் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். அவர்கள் மூலம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் கொரோனா நோய் தொற்று பரவியது. அதிகம் பேர் பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்த மாவட்டங்களில் அரியலூர் 3-வது இடத்தையும் பிடித்தது. அந்த அளவுக்கு அங்கு வைரசின் தாக்கம் இருந்தது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 348 ஆக இருந்தது. இதில் 340 பேர் கோயம்பேடு தொழிலாளர்கள். நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 353 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 329 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புக்குள்ளான 139 நபர்களில் இதுவரை 30 பேர் சிகிச்சை பெற்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 109 பேர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததையடுத்து சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 4-ந் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கில் சிலர் தளர்வுகள் செய்யப்பட்டது. அதன்படி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 34 வகையான வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டது. முக்கிய சேவைகளை அளிக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கியது.
கொரோனா வைரசின் தாக்கம் ஒரு புறம் இருந்தாலும் கடைகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள் இயங்க தொடங்கியதால் வியாபாரிகள், பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
இருப்பினும் 2 மாவட்டங்களிலும் வைரசின் தாக்கம் கூடுவதும், குறைவதுமாக இருந்து வந்ததால் தொடர்ந்து சிவப்பு மண்டலத்திலேயே இடம் பெற்றுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவினை வருகிற 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்து நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திற்குள் இடம் பெற்றுள்ளதால் அந்த மாவட்டங்களில் ஏற்கனவே இருந்த நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் தொடரும் என்றும், தளர்வுகள் ஏதும் இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்தது.
இதன் காரணமாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது. மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில் மாவட்டத்திற்குள் ஆட்டோ, கார்களை இ-பாஸ் இல்லாமல் இயக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் அரியலூர்- பெரம்பலூர் மாவட்டத்திற்கு அந்த தளர்வு பொருந்தாது. இதனால் 2 மாவட்டத்திற்குள்ளும் ஆட்டோ, கார்களை இயக்க முடியவில்லை. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. முந்தைய கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்கிறது. இதனால் 2 மாவட்ட பொதுமக்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
குறிப்பாக ஆட்டோ- கார் டிரைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஆட்டோ- கார்களை இயக்காமல் உள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற மாவட்டங்களில் ஆட்டோ-கார்களை மாவட்டத்திற்குள் மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்திற்குள் இடம் பெற்றிருப்பதை காரணம் காட்டி இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது எங்களை மேலும் பாதிப்படைய செய்துள்ளது என்றனர்.
அரியலூரில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 348 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலனோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டி லிருந்து திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களில் அரியலூர் மாவட்டத்தில் 329 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவே யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருந்ததால் பொதுமக்கள் சற்று நிம்மதியாக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் பொய்யாதநல்லூர், ராயபுரம், பெரியதிருக்கோணம், முனியங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதால் மீண்டும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 5 பேரும் கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். அவர்கள் தற்போது அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 348-ல் இருந்து 353 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 13 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 139 பேரில், 95 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலவே, நேற்றும் யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 15 கர்ப்பிணிகள் உள்பட 48 பேருக்கும் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 348 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலனோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டி லிருந்து திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களில் அரியலூர் மாவட்டத்தில் 329 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவே யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருந்ததால் பொதுமக்கள் சற்று நிம்மதியாக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் பொய்யாதநல்லூர், ராயபுரம், பெரியதிருக்கோணம், முனியங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதால் மீண்டும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 5 பேரும் கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். அவர்கள் தற்போது அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 348-ல் இருந்து 353 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 13 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 139 பேரில், 95 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலவே, நேற்றும் யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 15 கர்ப்பிணிகள் உள்பட 48 பேருக்கும் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 139 பேரும், அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 348 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தினமும் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்கள் போலவே, நேற்று யாரும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்படாததால் அரியலூர் மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஏற்கனவே 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 25 பேர் குணமடைந்ததால் அவர்கள் நேற்று வீடு திரும்பினர். முன்னதாக அவர்களுக்கு சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, மருத்துவ நலப்பணிகளின் இணை இயக்குனர் (பொறுப்பு) திருமால், பெரம்பலூர் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவ அதிகாரி ராஜா, டாக்டர் அன்பரசு, மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியன், பெரம்பலூர் வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், வி.களத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் சுகாதாரத்துறையினர், மருத்துவக்குழுவினர் பழங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 49 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 7 கர்ப்பிணிகள் உள்பட மொத்தம் 27 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து பெரம்பலூருக்கு வந்த 56 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மொத்தம் 348 பேரில், 327 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 21 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 30 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 139 பேரும், அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 348 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தினமும் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்கள் போலவே, நேற்று யாரும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்படாததால் அரியலூர் மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஏற்கனவே 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 25 பேர் குணமடைந்ததால் அவர்கள் நேற்று வீடு திரும்பினர். முன்னதாக அவர்களுக்கு சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, மருத்துவ நலப்பணிகளின் இணை இயக்குனர் (பொறுப்பு) திருமால், பெரம்பலூர் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவ அதிகாரி ராஜா, டாக்டர் அன்பரசு, மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியன், பெரம்பலூர் வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், வி.களத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் சுகாதாரத்துறையினர், மருத்துவக்குழுவினர் பழங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 49 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 7 கர்ப்பிணிகள் உள்பட மொத்தம் 27 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து பெரம்பலூருக்கு வந்த 56 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மொத்தம் 348 பேரில், 327 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 21 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 30 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ஆண்டிமடம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் வரதராஜன்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வரதராஜன்பேட்டை ஆரோக்கியபுரம் பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது.
அவரை பிடித்து விசாரித்ததில் அவர் வரதராஜன்பேட்டை செங்கமேடு பகுதியை சேர்ந்த ஏரோணிராஜ்(வயது 31) என தெரியவந்தது. அவரிடம் இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி ஏரோணிராஜை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்கிரமங்கலம் பகுதியில் மும்முனை மின்சாரம் இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் வீட்டுஉபயோக பொருட்களும் பழுதடைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தை சுற்றியுள்ள முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான் ஆகிய பகுதிகளில் கோடை உழவு பணி மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களாக முன்முனை மின்சாரம் சரியாக வினியோகம் செய்யாதால் விவசாயிகள் செய்துள்ள கோடை உழவு பணி மற்றும் காய்கறிகள் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் குறைவாக வருவதால் மின்மோட்டார் இயங்க வில்லை. இதனால் விவசாயிகள் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனபெட்டி போன்ற வீட்டு உபயோக பொருட்களும் மின் அழுத்த குறைபாடு காரணமாக சரியாக இயங்காமல் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. மேலும் அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஊராட்சி மும்முனை மின் மோட்டார்களும் சரியாக இயங்காததால் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தற்போது கோடைகாலம் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சரியான அளவு மின்சாரம் வந்தாலே ஆழ்துளை கிணறுகளில் அமைக் கப்பட்டுள்ள மின் மோட்டார்களில் இருந்து குறைந்த அளவு தண்ணீரே வரும். மேலும் இப்பகுதி மக்களும், கால்நடைகளும் போதுமான அளவு தண்ணீர் இன்றி தவித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக மும்முனை மின்சாரத்தை சரியாக வழங்கிட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தை சுற்றியுள்ள முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான் ஆகிய பகுதிகளில் கோடை உழவு பணி மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களாக முன்முனை மின்சாரம் சரியாக வினியோகம் செய்யாதால் விவசாயிகள் செய்துள்ள கோடை உழவு பணி மற்றும் காய்கறிகள் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் குறைவாக வருவதால் மின்மோட்டார் இயங்க வில்லை. இதனால் விவசாயிகள் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனபெட்டி போன்ற வீட்டு உபயோக பொருட்களும் மின் அழுத்த குறைபாடு காரணமாக சரியாக இயங்காமல் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. மேலும் அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஊராட்சி மும்முனை மின் மோட்டார்களும் சரியாக இயங்காததால் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தற்போது கோடைகாலம் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சரியான அளவு மின்சாரம் வந்தாலே ஆழ்துளை கிணறுகளில் அமைக் கப்பட்டுள்ள மின் மோட்டார்களில் இருந்து குறைந்த அளவு தண்ணீரே வரும். மேலும் இப்பகுதி மக்களும், கால்நடைகளும் போதுமான அளவு தண்ணீர் இன்றி தவித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக மும்முனை மின்சாரத்தை சரியாக வழங்கிட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சார்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட கீழக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சார்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது அப்பகுதியில் ஏராளமானோர் முக கவசம் அணியாமல் இருந்தனர். இதனை பார்த்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி மற்றும் சோப்புகளை கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது அவசியம் முக கவசம் அணிந்து பேச வேண்டும். அரசு கூறும் சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைப்பிடிப்பதால் மட்டுமே கொரோனோ நோயிலிருந்து நாம் தப்ப முடியும் என பொதுமக்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் பலர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சென்னையில் போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு பயிற்சி பெறும் கபிலன் கலைச்செல்வன் என்பவர் சார்பில் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் கை கழுவும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட முகாம்களில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 160 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று ஒரு இளம்பெண்ணுக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு செந்துறை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களை தொடர்ந்து அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் 108 ஊழியர்கள் என 11 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டு குறைவான எண்ணிக்கையில் அரியலூர் மாவட்டம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து செந்துறை அருகே உள்ள நமங்குணம் கிராமத்திற்கு வந்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் உஷாரான மாவட்ட நிர்வாகம் சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களை முகாம்களில் தங்க வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இவர்களில் சுமார் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 30 பேரும், அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த 38 பேரும், ராயம்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிகிச்சை பெற்றுவந்த 64 பேரும், ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த 28 பேரும் என மொத்தம் 160 கோயம்பேடு கூலி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பூரண குணமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராயம்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் இந்துமதி, டாக்டர் ரேவதி உள்ளிட்டவர்கள் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர். மேலும் வீடுகளில் அவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 243 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மாவட்ட கலெக்டர் ரத்னா தகவல் தெரிவித்து உள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று ஒரு இளம்பெண்ணுக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு செந்துறை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களை தொடர்ந்து அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் 108 ஊழியர்கள் என 11 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டு குறைவான எண்ணிக்கையில் அரியலூர் மாவட்டம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து செந்துறை அருகே உள்ள நமங்குணம் கிராமத்திற்கு வந்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் உஷாரான மாவட்ட நிர்வாகம் சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களை முகாம்களில் தங்க வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இவர்களில் சுமார் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 30 பேரும், அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த 38 பேரும், ராயம்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிகிச்சை பெற்றுவந்த 64 பேரும், ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த 28 பேரும் என மொத்தம் 160 கோயம்பேடு கூலி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பூரண குணமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராயம்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் இந்துமதி, டாக்டர் ரேவதி உள்ளிட்டவர்கள் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர். மேலும் வீடுகளில் அவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 243 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மாவட்ட கலெக்டர் ரத்னா தகவல் தெரிவித்து உள்ளார்.
அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 35 பேர் நேற்று வீடு திரும்பினர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் நோய் தனிப்பிரிவில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
தற்போது அவர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது வீட்டிற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பழங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி 14 நாட்கள் தனிமையில் அவர்களது வீடுகளில் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வருகை புரிந்தவர்களில் 525 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 301 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 224 நபர்களுக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதன் விளைவாக அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும், எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழுவினரின் கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரத்னா கூறுகையில், இன்று (அதாவது நேற்று) அரியலூர் அரசு மருத்துவ மனையில் கொரோனா தொற்று நேரடி பாதிப்பு ஏற்பட்ட 24 ஆண்களும், தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 9 பெண்களும், 2 குழந்தைகளும் என 35 நபர்கள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிற்கு ஒருவர் என வெளியில் வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு என்பதை கடைபிடிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் நோய் தனிப்பிரிவில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
தற்போது அவர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது வீட்டிற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பழங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி 14 நாட்கள் தனிமையில் அவர்களது வீடுகளில் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வருகை புரிந்தவர்களில் 525 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 301 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 224 நபர்களுக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதன் விளைவாக அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும், எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழுவினரின் கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரத்னா கூறுகையில், இன்று (அதாவது நேற்று) அரியலூர் அரசு மருத்துவ மனையில் கொரோனா தொற்று நேரடி பாதிப்பு ஏற்பட்ட 24 ஆண்களும், தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 9 பெண்களும், 2 குழந்தைகளும் என 35 நபர்கள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிற்கு ஒருவர் என வெளியில் வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு என்பதை கடைபிடிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 36 பேர் வீடு திரும்பினர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 308 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர்கள் ஆவார்கள். இதில் பாதிக்கப்பட்ட 308 பேரில் ஏற்கனவே திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 11 பேரும், அரியலூர் அரசு மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு காய்கறி மார்க்கெட் தொழிலாளர்கள் 24 பேர், 108 ஆம்புலன்சு டிரைவர் உள்பட மொத்தம் 36 பேர் பூரண குணமடைந்ததால், அவர்களை மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்து ஆம்புலன்சு மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். முன்னதாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பழங்கள் வழங்கி வழியனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் தற்போது அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ள 12 முகாம்களை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு கூறுகையில், முகாம்களில் எந்தவித அறிகுறியும் இன்றி தங்க வைக்கப்பட்டுள்ள 178 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளும், கபசூரண குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினர்களும் கண்காணித்து வருகின்றனர். மேலும் விளாங்குடி அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தில் மராட்டியத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த 35 நபர்களை தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 308 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர்கள் ஆவார்கள். இதில் பாதிக்கப்பட்ட 308 பேரில் ஏற்கனவே திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 11 பேரும், அரியலூர் அரசு மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு காய்கறி மார்க்கெட் தொழிலாளர்கள் 24 பேர், 108 ஆம்புலன்சு டிரைவர் உள்பட மொத்தம் 36 பேர் பூரண குணமடைந்ததால், அவர்களை மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்து ஆம்புலன்சு மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். முன்னதாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பழங்கள் வழங்கி வழியனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் தற்போது அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ள 12 முகாம்களை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு கூறுகையில், முகாம்களில் எந்தவித அறிகுறியும் இன்றி தங்க வைக்கப்பட்டுள்ள 178 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளும், கபசூரண குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினர்களும் கண்காணித்து வருகின்றனர். மேலும் விளாங்குடி அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தில் மராட்டியத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த 35 நபர்களை தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மராட்டியத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 22 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அரியலூர்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை என்ற நிலை இருந்தது. சென்னையில் இருந்து அரியலூர் வந்த ஒரு பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வந்த நாட்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்தது.
இதற்கிடையே சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதை தொடர்ந்து அங்கு வேலை பார்த்த அரியலூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். அதன்பின்னர் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று வரை மாவட்டத்தில் மொத்தம் 275 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே மாவட்டத்தில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 தொழிலாளர்கள் மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் ரெயில் மூலம், அங்கிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் 22 பேரும் விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழு வினரால் கண்காணிப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை என்ற நிலை இருந்தது. சென்னையில் இருந்து அரியலூர் வந்த ஒரு பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வந்த நாட்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்தது.
இதற்கிடையே சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதை தொடர்ந்து அங்கு வேலை பார்த்த அரியலூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். அதன்பின்னர் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று வரை மாவட்டத்தில் மொத்தம் 275 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே மாவட்டத்தில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 தொழிலாளர்கள் மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் ரெயில் மூலம், அங்கிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் 22 பேரும் விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழு வினரால் கண்காணிப்பட்டு வருகின்றனர்.
மீன்சுருட்டி அருகே 155 லிட்டர் சாராயம்- ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி புதுத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). இவர் ரெட்டிப்பாளையம் அளவேரி கரையில் மண்பானையில் சுமார் 5 லிட்டர் சாராயம் வைத்து இருப்பதாக மீன்சுருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் அங்கு சென்று, அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
மேலும் பாஸ்கரை பிடித்து, அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய ஊறல் போடப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது காவேட்டேரி கிராமத்தில் உள்ள ஒரு வயலில் போடப்பட்டிருந்த சுமார் 150 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, சாராய ஊறல் போட்டதாக குண்டவெளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகரை (வயது 55) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி புதுத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). இவர் ரெட்டிப்பாளையம் அளவேரி கரையில் மண்பானையில் சுமார் 5 லிட்டர் சாராயம் வைத்து இருப்பதாக மீன்சுருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் அங்கு சென்று, அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
மேலும் பாஸ்கரை பிடித்து, அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய ஊறல் போடப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது காவேட்டேரி கிராமத்தில் உள்ள ஒரு வயலில் போடப்பட்டிருந்த சுமார் 150 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, சாராய ஊறல் போட்டதாக குண்டவெளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகரை (வயது 55) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






