search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helped"

    • பள்ளி படிக்கின்ற மாாணவர்களுக்கு பழங்குடி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • பெரும்பாலும் பள்ளி மாணவர்களின் தந்தை, தாய்க்கு வழங்க படுவதில்லை

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டியல் பழங்குடியினர் மாணவர்கள் ஏரளாமானோர் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்கள்.இதில் பெரும்பாலான பழங்குடி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பங்கள் செய்ய உள்ளனர்கள்.அப்படி விண்ணப்பம் செய்ய உள்ள மாணவர்களுக்கு சில நிபந்தனைக்கு ஆளாகி உள்ளனர்கள் ஏனேன்றால் பழங்குடி மாணவர்களின் தந்தைக்கு, தாய்க்கு,பழங்குடி சாதிச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பழங்குடி மாணகர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் செய்ய முடியும் என கூறுகின்றனர்கள்.

    ஆனால் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலும் பள்ளி படிக்கின்ற மாாணவ ர்களுக்கு பழங்குடி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்களின் தந்தை தாய்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவது மிகவும் மிகவும் குறைவு. ஏதாவது ஒரு சில இடங்களில் மட்டுமே வழங்கி இருப்பதாக தெரிகிறது பெரும் பாலும் பள்ளி மாணவர்களின் தந்தை, தாய்க்கு வழங்க படுவதில்லை.இப்படி ஒரு நிலை இருப்பதால் தமிழ்நாட்டில் பெரும்பாலான பழங்குடி மக்களின் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் செய்ய முடியாத நெருக்கடிக்கு உள்ளாகிஉள்ளனர்.தமிழகத்தில் நல்லாட்சி புரிந்துவரும் தமிழ்நாடு முதல்- அமைச்சர் பழங்குடி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் செய்ய ஆலோசனைக் குழு ஒன்று அமைத்து மருத்துவ படிப்பிற்கு பழங்குடி மாணகர்கள் விண்ணபித்து மருத்துவம் படிப்பதற்கு வழிவகை செய்து உதவிடுமாறு பழங்குடியினர் செயல்பாட்டாளர் வக்கீல் அகத்தியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வரும் வழியில், சாலை விபத்தில் காயமடைந்தவரை தன்னுடன் வந்த ஆம்புலன்ஸ் வேன் மூலம் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார்.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் 90 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, திருமணத்தை நடத்திவைத்ததுடன் மணமக்களை வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சி முடிந்ததும், கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு எடப்பாடி பழனிசாமி காரிலேயே புறப்பட்டார். கார் ஆம்பூர் அருகே வடசேரி என்னும் இடத்தில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே சாலையில் மினி லாரியும், மொபட்டும் மோதிய விபத்தில் ஒருவர் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை, எடப்பாடி பழனிசாமி பார்த்தார். உடனே, தனது காரை நிறுத்தச்சொல்லி, இறங்கி சென்று காயமடைந்தவரின் அருகில் சென்று விசாரித்தார்.

    உடனடியாக, தன்னுடன் வந்த ஆம்புலன்ஸ் வேனை கொண்டுவரச் செய்து, காயமடைந்தவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைவாக அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், மாவட்ட கலெக்டரிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, காயமடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடுமாறு கூறினார்.

    காயமடைந்தவர் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றிச்செல்லப்படும் வரை அங்கேயே இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னர், அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். 
    விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள். #KamalHaasan
    விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

    இது குறித்த விவரம் வருமாறு:-

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் குளச்சலில் இருந்து கருங்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் கருங்கல் அருகே ஆனக்குழியில் ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.



    இதில் கீழே விழுந்த ஒரு பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை, அவருடன் ஸ்கூட்டரில் வந்த மற்றொரு பெண் தனது மடியில் தூக்கி வைத்துவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

    அந்த வழியாக சென்ற கமல்ஹாசன் இதனை பார்த்தார். உடனே, அவர் தனது காரில் இருந்து இறங்கி சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் தனது காரிலேயே அந்த பெண்ணை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வேறொரு காரில் கமல்ஹாசன் ஏறி, தனது பயணத்தை தொடர்ந்தார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனின் உதவியை அங்கு கூடியிருந்த மக்கள் பாராட்டினர்.  #KamalHaasan
    ×