என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விருதாச்சலம் ரோடு தெருவை சேர்ந்தவர் ராஜவேல் மனைவி கீதா (வயது 41). ராஜவேல், ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கீதாவின் முகநூலில், மீன்சுருட்டி அருகே உள்ள ஒடப்பேரி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் (26) என்பவர், கீதா கொடுத்திருந்த முகநூல் முகவரி பக்கத்தில் நண்பராக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுள்ளார்.
பின்னர் முகநூல் பக்கத்தில் ஆனந்தகுமாரை நண்பராக கீதா ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று ஆனந்த குமார் முகநூலில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது தான், குற்றப்பிரிவு போலீசில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 8-ந்தேதி போன் செய்து வீடியோ காலில் வந்து நீ அழகாக இருக்கிறாய் என பேசியுள்ளார். அப்போது ஆபாசமான முறையில் கீதாவை செல்போனில் ஸ்கிரீன் ஷாட் எடுத்ததாக தெரிகிறது. ஸ்கிரீன் ஷாட் போட்டோவை வைத்து கொண்டு தொடர்ந்து கீதாவை ஆனந்தகுமார் மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து கீதா கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல் பல பெண்களை ஆனந்தகுமார் மிரட்டி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் கைதான ஆனந்த குமாரிடம் இருந்து ஏராளமான செல்போன்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் தனியார் பள்ளியில் படித்த மாணவி கனிமொழி பிளஸ் 2 வில் 600க்கு 562.28 மதிப்பெண் எடுத்திருந்தார்.
10 வகுப்பில் 500க்கு 469 மதிப்பெண்கள் எடுத்து தனியார் பள்ளியில் கனிமொழி முதலிடம் பிடித்திருந்தார்.
ஏற்கனவே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மேட்டூர் தனுஷ் தற்கொலை செய்த நிலையில் இப்போது அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கைவினைப்பொருட்கள் மற்றும் அழகு கலையில் ஆர்வம் கொண்ட இவர் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் போது வித்தியாசமாக விநாயகர் சிலைகளை வடிவமைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த 2008-ல் கொட்டை பாக்கு விநாயகரை தயாரித்து பிள்ளையார் சுழி போட்டார். பின்னர் ஆண்டுதோறும் நவதானிய விநாயகர், பென்சில் துகள் விநாயகர், மாத்திரை விநாயகர், சங்குப்பூ விநாயகர், மக்காச்சோளம் விநாயகர் என விதவிதமாக வடிவமைத்து வழிபட்டார். நடப்பு ஆண்டில் பிரியாவின் எண்ணத்தில் உதித்ததே பொன்வண்டு விநாயகர்.
பொதுவாக விவசாய நிலங்களில் பயிர்களை பாழ்படுத்தும் பூச்சிகளை இந்த பொன் வண்டு தின்றுவிடும். ஆனால் இந்த வண்டு பயிர்களின் இலைகளை தின்பது கிடையாது.
ஆகவே விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருக்கும் இந்த பொன் வண்டை நாம் பாதுகாத்து இயற்கை விவசாயத்திற்கு நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும் என விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே பொன் வண்டு விநாயகரை வடிவமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், இந்த சிலையை வடிவமைக்க கடந்த ஒரு மாத காலமாக தனது குழந்தைகள் உதவியுடன் களி மண்ணை திரட்டி 1,008 எண்ணிக்கையில் பொன் வண்டு உருவம் பதித்து சுமார் 5 கிலோ எடை கொண்டு முழு விநாயகர் சிலை தயாரித்துள்ளேன். நாளை பூஜை செய்ய இருக்கிறேன். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பொன் வண்டு விநாயகருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
இதையும் படியுங்கள்...விநாயகர் சதுர்த்தியையொட்டி சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை
திருச்சியில் இருந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு தனியார் லாரி சர்வீஸ் நிறுவனம் மூலம் சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன. நள்ளிரவில் ஜெயங்கொண்டம் வரும் அந்த லாரியில் இருந்து அதிகாலையில் லோடுமேன்கள் மூலம் சரக்குகள் இறக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகே பெருமாள் கோவில் அருகே பார்சல் சர்வீஸ் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு டிரைவர் மற்றும் லோடுமேன்கள் உட்பட 5 பேர் அந்த லாரிக்கு உள்ளேயே படுத்து தூங்கியுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென லாரியின் ஒரு பகுதியில் இருந்து புகை கிளம்பியது. அடுத்த வினாடி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் லாரியில் வைக்கப்பட்டிருந்த மளிகை பொருட்கள், மருந்து, ஜவுளி, இருசக்கர வாகன உதிரிபாக பொருட்கள் எரிந்தது. மேலும் அந்த லாரியில் பட்டாசு கிப்ட் பாக்சுகளும் இருந்ததால் தீயானது வேமாக பரவி வெடித்து சிதறியது.
இந்த திடீர் தீ விபத்தில் லாரியில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. முன்னதாக லாரிக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்த டிரைவர் உள்பட லோடுமேன்கள் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வேன்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீக்காயம் அடைந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் வேன் மூலம் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில் தீக்காயம் அடைந்தவர்கள் அரியலூர் மாவட்டம் கல்லக்குடி கிராமம் காலனித் தெருவைச் சேர்ந்த லோடுமேன்கள் இளங்கோவன் (வயது 19), விஜயக்குமார் (21), பகவதி (18), மணிகண்டன் (18) மற்றும் திருச்சியை சேர்ந்த பார்சல் சர்வீஸ் லாரி டிரைவர் சபரி (26) என்பது தெரியவந்தது.
விபத்தில் காயம் அடைந்தவர்களில் மணிகண்டன் தவிர மற்றவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்ட இந்த பார்சல் சர்வீஸ் லாரி தீவிபத்து ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் லாரிக்குள் படுத்திருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொசுவர்த்தி பற்ற வைத்து இருந்ததாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து புதுச்சாவடியை சேர்ந்தவர் அபிபுல்லா. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மூத்த இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில் மனைவி மற்றும் இளைய மகளுடன் வசித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அபிபுல்லா, தற்போது ஜெயங்கொண்டத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பு மிகப்பெரிய அளவில் வெடி சத்தம் கேட்டுள்ளது. வெளியே வந்து பார்த்த போது, 3 பெட்ரோல் பாட்டில்களும் பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் வெடித்து சிதறி கிடந்தன. மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீட்டின் மீது வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அபிபுல்லா இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






