search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    உடையார்பாளையம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    உடையார்பாளையம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள காங்கேயன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 48). விவசாயி. இவரது மகன் சுதாகர்(19). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும், பல்வேறு டாக்டர்களிடம் காண்பித்தும் வயிற்றுவலி சரியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் வீட்டில் கடலை செடிக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) சுதாகர் எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சுதாகரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுதாகர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசில் சுதாகரின் தாய் உஷாராணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×