என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டம் அருகே வயலில் ஆடுமேய்ந்த தகராறில் 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்6 Sep 2021 10:14 AM GMT (Updated: 6 Sep 2021 10:14 AM GMT)
ஜெயங்கொண்டம் அருகே வயலில் ஆடுமேய்ந்த தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி சந்தியா. இவர் தனது வயலில் ஆடு மேய்ந்து விட்டதாக கூறி திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கவிதா தன்னை திட்டுவதாக கூறி தமிழரசன் மனைவியிடம் சண்டை போட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் கவிதாவின் கணவர் சக்திவேல், அவரது மகன் அருண், மகாதேவன் ஆகியோர் ஒன்று சேர்ந்து சந்தியாவின் வீட்டிற்கு வந்து சந்தியாவை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த சந்தியா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையில் இருந்தவாறு சந்தியா இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தகராறில் ஈடுபட்ட சக்திவேல், அருண், மகாதேவன், கவிதா ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X