search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    இளம்பெண்ணை ஆபாசமாக போட்டோ எடுத்து மிரட்டிய போலி போலீஸ்காரர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இளம்பெண்ணை ஆபாசமாக போட்டோ எடுத்து வைத்து மிரட்டிய போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விருதாச்சலம் ரோடு தெருவை சேர்ந்தவர் ராஜவேல் மனைவி கீதா (வயது 41). ராஜவேல், ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கீதாவின் முகநூலில், மீன்சுருட்டி அருகே உள்ள ஒடப்பேரி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் (26) என்பவர், கீதா கொடுத்திருந்த முகநூல் முகவரி பக்கத்தில் நண்பராக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுள்ளார்.

    பின்னர் முகநூல் பக்கத்தில் ஆனந்தகுமாரை நண்பராக கீதா ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று ஆனந்த குமார் முகநூலில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது தான், குற்றப்பிரிவு போலீசில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து கடந்த 8-ந்தேதி போன் செய்து வீடியோ காலில் வந்து நீ அழகாக இருக்கிறாய் என பேசியுள்ளார். அப்போது ஆபாசமான முறையில் கீதாவை செல்போனில் ஸ்கிரீன் ஷாட் எடுத்ததாக தெரிகிறது. ஸ்கிரீன் ஷாட் போட்டோவை வைத்து கொண்டு தொடர்ந்து கீதாவை ஆனந்தகுமார் மிரட்டி வந்துள்ளார்.

    இதுகுறித்து கீதா கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல் பல பெண்களை ஆனந்தகுமார் மிரட்டி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் கைதான ஆனந்த குமாரிடம் இருந்து ஏராளமான செல்போன்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
    Next Story
    ×