என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.
    • ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த மாரத்தான் போட்டி காரைக்காலில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நிறைவு பெற்றது.

    • பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் குறித்து ஊழியர்களுக்கு காட்சி ஊடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • தொழிற்சாலை விழாக்கள், கூட்டங்களில் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் வழிபாட்டு தலங்களில் புத்தாண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை தொழிற்சாலைகளிலும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடைமுறைகளை அறிவியல் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, இயக்குனர் பிரியதர்ஷினி, உறுப்பினர் செயலர் ரமேஷ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாசுகட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்டுள்ளது.

    இதன்படி பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் குறித்து ஊழியர்களுக்கு காட்சி ஊடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலை வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம், வாங்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை நீக்க அதிகாரி நியமிக்க வேண்டும்.

    குடிநீர்பாட்டில் பயன்பாடை தடுத்து, கண்ணாடி பாட்டில் பயன்படுத்த வேண்டும். காவலாளிகள் தொழிலாளர்களை பரிசோதித்து பிளாஸ்டிக் கொண்டுவருவதை தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத தொழிற்சாலை அறிவிப்பை முகப்பில் வைக்க வேண்டும்.

    தொழிற்சாலை விழாக்கள், கூட்டங்களில் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனை த்து தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

    • புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
    • அரசு பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் முககவசம் அணிந்து வரும்படி ஒட்டப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    அரையாண்டு விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பள்ளிக்கு வந்தனர்.

    புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

    மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகை கடைபிடிக்க வேண்டும்.

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளின்படி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் மாணவர்களை முககவசம் அணிந்து அனுப்பும்படி தகவல் தெரிவித்திருந்தனர். அரசு பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் முககவசம் அணிந்து வரும்படி ஒட்டப்பட்டிருந்தது.

    இதனால் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்தனர்.

    • கடந்த 10 நாட்களாக புதுவை சுற்றுலாத்து றையின் கட்டுப்பாட்டில் உள்ள நோணாங்குப்பம் சுண்ணம்பாறு படகு குழாம்களை கட்டியிருந்தது.
    • சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் சரா சரியாக 4 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட வெளிமாநில பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் படகு குழாமுக்கு சென்று படகு சவாரி செய்தனர்.

    இதனால் கடந்த 10 நாட்களாக புதுவை சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் களை கட்டியிருந்தது. இதனால் புதுவை அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைத்தது.

    நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.22 லட்சம் வசூலானது. நேற்று முன்தினம் ரூ.9.04 லட்சமும், கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 9.70 லட்சமும் வருவாய் கிடைத்தது. 23-ந்தேதி ரூ.4.29 லட்சமும், 24-ந்தேதி ரூ.8.69 லட்சமும், 25-ந்தேதி ரூ.10.97 லட்சமும், 26-ந்தேதி ரூ. 7.96 லட்சமும், 27-ந் தேதி ரூ.9.66 லட்சமும், 28-ந்தேதி ரூ.8.61 லட்சமும், 29-ந் தேதி ரூ.9.96 லட்சமும் வசூலாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.75 லட்சம் வசூலானது.

    இந்த பணத்தை கொண்டு சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 2 மாத சம்பளமும், 8 மாத ஜி.எஸ்.டி. வரி பாக்கியும் சுற்றுலா வளர்ச்சி கழகம் செலுத்தியுள்ளது.

    சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் சரா சரியாக 4 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர். புத்தாண்டை கொண்டாட நேற்று முன்தினமும், நேற்றும் சுமார் 2½ லட்சம் பேர் புதுவைக்கு வந்துள்ளனர் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.

    மேலும் படகு குழாமில் உள்ள கழிப்பறைகள் மேம்படுத்தும் பணியை தனியார் நிறுவனத்தினர் பெரு நிறுவன பங்களிப்பு திட்டத்தின் கீழ் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • புதுவையில் சாதாரண விடுதிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை அனைத்தும் நிரம்பி வழிந்தன.
    • தாவரவியல் பூங்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 500பேர் சிறுவர் ரெயிலில் பயணித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் புத்தாண்டை கொண்டாட கிறிஸ்துமஸ் முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையில் புதுவை நகரமே ஸ்தம்பித்தது.

    புதுவையில் சாதாரண விடுதிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை அனைத்தும் நிரம்பி வழிந்தன. ரூ.500 கட்டணம் வசூலித்த விடுதிகள்கூட ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்தன. புதுவைக்கு காரில் வந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அறை கிடைக்காமல் ஆங்காங்கே சாலையிலேயே காரில் படுத்து தூங்கினர்.

    பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து புத்தாண்டை கொண்டாட குடும்பத்தோடு வந்திருந்தனர். நள்ளிரவில் கடற்கரையில் கூடிய கூட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைக்கும் சூழல் ஏற்பட்டது. கடற்கரையில் கூடிய மக்கள் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக வெளியேறியதால் நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உருவானது.

    மது போதையாலும் இளைஞர்கள் வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதனால்பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டது. நகர பகுதியில் மட்டும் 28 விபத்துகளில் 31 பேர் காயமடைந்தனர். 10 பேர் படுகாயத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். 21 பேர் லேசான காயத்துடன் வீடு திரும்பினர்.

    கதிர்காமம், மேட்டுப்பாளையம், கோரிமேட்டில் 8 விபத்துகளில் 8 பேர் காயமடைந்தனர். ஒருவர் ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். வில்லியனூர் சுற்று வட்டார பகுதியில் 4 விபத்துகள், கிருமாம்பாக்கத்தில் 4 விபத்துகளில் 8 பேர் காயடைந்தனர். மொத்தம் 44 விபத்துகளில் 47 பேர் காயமடைந்தனர்.

    நேற்று அதிகாலை வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் தொடர்ந்தது. நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. சென்னை, திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கு பயணிகள் அதிகளவில் காத்திருந்தனர்.

    சென்னை பஸ்களில் முண்டியடித்து ஏறி இடம் பிடித்து சென்றனர். புதுவைக்கு காரில் வந்தவர்களும் புறப்பட்டதால் மொரட்டாண்டி டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. புதுவை மாநில எல்லைகள் நேற்று மாலை முதல் இரவு வரை நெரிசலாக இருந்தது.

    புத்தாண்டு தினமான நேற்று புதுவை நேணாங்குப்பத்தில் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகு சவாரி செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் படகு குழாமிற்கு ரூ.15 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

    தாவரவியல் பூங்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 500பேர் சிறுவர் ரெயிலில் பயணித்துள்ளனர்.

    புத்தாண்டையொட்டி நேற்று மதியம் ஓட்டல்களில் கூட்டம் அலைமோதியது.நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண ஓட்டல்கள் வரை உணவருந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாலை 4 மணி வரை மதிய உணவுக்காக காத்திருந்து சாப்பிட்ட பின் சுற்றுலா பயணிகள் புதுவையிலிருந்து கிளம்பிச் சென்றனர்.

    புதுவைக்கு வந்திருந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கிளம்பிச்சென்றதால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நிறைவு பெற்று இயல்பு நிலை திரும்பியுள்ளது.

    • அ.தி.மு.க. 4 ஆக உடைந்து கிடக்கிறது.
    • சிலர் விளம்பர அரசியல் செய்கிறார்கள்.

    புதுச்சேரி :

    புதுச்சேரியில் நடந்த பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    வருகிற புதிய ஆண்டு நமக்கு முக்கியமான ஆண்டாகும். தேர்தல் பணிக்கு நாம் தயாராக வேண்டும். இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக பா.ம.க. உள்ளது. அவர்களை நல்வழியில் அழைத்துச் செல்வதுதான் நமது நோக்கம். பா.ம.க. வேகமாக வளர்ந்து வருகிறது.

    நாம் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளோம். பா.ம.க. இல்லாவிட்டால் மக்களுக்கு சமச்சீர் கல்வி கிடைத்து இருக்காது. லாட்டரி ஒழிந்து இருக்காது. 20 சதவீத இடஒதுக்கீடு கிடைத்து இருக்காது. இந்தியாவில் 108 ஆம்புலன்சு வந்து இருக்காது. மது ஒழிப்பு பிரசாரமும் இருந்து இருக்காது. புகையிலை ஒழிந்து இருக்காது.

    இப்படி ஆட்சியில் இல்லாமலேயே எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளோம். டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை விட்டால் அதற்கு உடனடியாக பதில் கிடைக்கிறது. அவரது கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவிப்பு வெளியாகிறது. இதுதான் வளர்ச்சி அரசியல். வெற்றி அரசியல். டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்தால் அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். ஆனால் ஊடகங்கள் கூட்டணி என்று சொல்கிறார்கள். நமது இலக்கு தமிழகத்தின் வளர்ச்சிதான்.

    சிலர் விளம்பர அரசியல் செய்கிறார்கள். என்னிடம் சிலர், ஒவ்வொரு அரசியல்வாதிகளையும் சுட்டிக்காட்டி தினமும் பேட்டி கொடுகிறார்கள். அறிக்கை விடுகிறார்கள் என்கிறார்கள். சிலர் வாட்ச்-ஐ காட்டுகிறார்கள். அது நமக்கு தேவையில்லை. மக்கள் மத்தியில் நமக்கான சூழ்நிலை நிலவுகிறது.

    அ.தி.மு.க. 4 ஆக உடைந்து கிடக்கிறது. தி.மு.க. மீதான மக்களின் விமர்சனம் உங்களுக்கு தெரியும். மற்றவர்கள் சத்தம்தான் போடுகிறார்கள்.

    தமிழகத்தில் 2 பெரிய சாதிகள் உள்ளன. ஒன்று ஆதிதிராவிடர். மற்றொன்று வன்னியர். இந்த இரு சமூகத்தினரும் தலா 20 சதவீதம் உள்ளனர். அதில் ஆதிதிராவிட மக்கள் முன்னேறி வருகிறார்கள். அவர்கள் இன்னும் முன்னேற வேண்டும். இந்த 2 சமுதாயமும் வளர்ந்தால்தான் தமிழகம் முன்னேறும்.

    இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவ்வையின் ஆத்திசூடியை போன்று தானே எழுதிய ஆத்திசூடி ஒன்றை படித்தார்.

    • வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.
    • இதனால் புதுச்சேரியில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர்.

    புத்தாண்டை சிறப்பாக கொண்டாட ஓட்டல்கள், மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வண்ணமயமான ஒளிவிளக்கு அலங்காரங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, புதுச்சேரியில் இரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் கூடுதாக ஒரு மணி நேரம் நீட்டித்து 2 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என கலெக்டர் வல்லவன் அறிவித்துள்ளார்.

    • மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
    • ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டுமா? வேண்டாமா? என முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரசும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாநில அந்தஸ்து பெற அரசு ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? எனவும் தெரிவிக்க வேண்டும்.

    மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது. புதுவையின் நிர்வாக தலைமையாக இருக்கும் கவர்னர் மாநில அந்தஸ்தில் கிடைப்பதெல்லம் இப்போதே கிடைக்கிறது என்கிறார். ஆனால் முதலமைச்சர் அதிகாரம் தேவை என கூறுகிறார்.

    உண்மையிலேயே மாநில அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சியில்தான் ரங்கசாமி உள்ளாரா? இல்லை கவர்னரையும், மத்திய அரசையும் மிரட்டுவதற்காக மாநில அந்தஸ்தை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா? அண்ணன் தங்கையாக இருந்தாலே பாக பிரிவினை, பங்கு பிரிவினை இருக்கத்தான் செய்யும். வரும் ஆண்டிலாவது முதலமைச்சர் நிலையான முடிவை இவ்விவகாரத்தில் தெரிவிக்க வேண்டும்.

    சுயேச்சை எம்.எல்.ஏ. வை தூண்டிவிடுவது, பிற கட்சியினரை தூண்டுவது போன்ற நிலைப்பாடை கைவிட வேண்டும். நேரடியாக முதலமைச்சரே களம் இறங்க வேண்டும். அப்படி முதலமைச்சர் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்தால் பாராளுமன்றத்திலும், வெளியிலும் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.

    வீதிக்கு வீதி திறக்கப்படும் மதுக்கடைகளால் மக்கள் போராட்டம் ஏற்பட்டுள்ளது. ரேஷன்கடை இருந்த இடமெல்லாம் மதுக்கடைகள் திறந்து வருகின்றனர். இதில் சில மதுக்கடைகளில் பெண்களுக்கு தனி வசதி என விளம்பரப்படுத்துகின்றனர். இதுவரை ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது. இது மிகப்பெரும் கலாச்சார சீரழிவு. குடும்பங்களை அழிக்கும் முயற்சி.

    எனவே மதுக்கடைகளின் எண்ணிக்கை, நேரத்தை குறைக்க வேண்டும். மாநில அந்தஸ்து கேட்பவர்கள் மீதும், மதுக்கடை எதிர்ப்பு போராளிகள் மீதும் கடுமையான சட்டங்கள் பாய்கிறது. மதுக்கடை உரிமையாளர்களுக்கு அரசு துணை செல்கிறதா? இதுதான் பிரதமர் மோடி அறிவித்த பெஸ்ட் புதுவையா? அமித்ஷா அறிவித்த எக்சலண்ட் புதுவையா? இதற்காகத்தான் மாநில அந்தஸ்து கேட்கிறார்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 பேரும் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்
    • 2 மாதத்திற்கு நுழைய தடை விதித்து மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராமு. இவரது 2-வது மனைவி எழிலரசி. எழிலரசி மற்றும் விக்ரமன் ஆகிய 2 பேர் மீதும் புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. 2 பேரும் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.இந்நிலையில் இவர்கள் 2 பேரும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பலருக்கு மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் வந்த நிலையில், 2 பேரையும் காரைக்கால் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என போலீஸ் சூப்பிரண்டு சுப்பிமணியம், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி ஆகியோர் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்சுக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி 2 பேரையும் 144 சட்டத்தின் கீழ், காரைக்கால் மாவட்டத்துக்குள், நேற்றி லிருந்து 2 மாதத்திற்கு நுழைய தடை விதித்து மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் உத்தரவிட்டுள்ளார்.

    • மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.
    • இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், அவர் கூறியிருப்பதாவது:-உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட்- 19 ஓமிக்கிரான் பி.எப்7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை கள் அமல்படுத்தப்படுகிறது. இதனால், மக்கள் அனைவரும் பொது இடங்கள், கடற்கரை, சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கட்டா யமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    எதிர்வரும் புது வருட, 1.1.2023 அன்று 01 மணிக்கு மேல்(டிசம்பர் 31 நள்ளிரவுக்கு பிறகு) தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், மதுபான கடைகள், பார்கள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் கோவிட்-19 தடுப்புக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றி தங்களின் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்க படுகிறது. மேலும், தங்களின் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச்செல்லும் போது அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 பேர் பெரிய கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தினர்.
    • மோட்டார் சைக்கிள், கையில் வைத்திருந்த பெரிய கத்தியை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான நூல்கடை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில், 2 பேர் பெரிய கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியும், ஆபாசமாக திட்டியும் செல்வதாக காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பெரிய கத்தியுடன், மோட்டார் சைக்களில் சுற்றிவந்த 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை விசாரித்த போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் திரு.பட்டினம் பண்டக சாலையைச்சேர்ந்த முகம்மது ஆசிக்(20), பின்னால் பெரிய கத்தியை வைத்திருந்த நபர் காரைக்கால் உமர் புலவர் வீதியைச்சேர்ந்த ஹமீது சுல்தான்(19) என்பதும் தெரிவந்தது. அவர்களின் மோட்டார் சைக்கிள், கையில் வைத்திருந்த பெரிய கத்தியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
    • புத்தாண்டு தினத்தன்று இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை.

    புதுச்சேரி:

    பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    பொது இடங்கள், கடற்கரை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் அனைவரும் கட்டாயம் முக கவம் அணிய வேண்டும்.

    புத்தாண்டு தினத்தன்று இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை.

    அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×