என் மலர்
புதுச்சேரி
- மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, காரைக்கால் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல், தற்போது காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டு குறைந்த வேகத்தில் நகர்ந்துவருவதால், கடல் சீற்றம், தரைகாற்று அதிகம் இருக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு ஏற்றார்போல், காரைக்கால் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்ச ல்மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்டபத்தூர், திரு.பட்டினம் பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவகிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் நேற்று 3ம் நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், மீனவர்கள் விசை ப்படகுகள் காரைக்கால் மீன்பிடிதுறைமுகத்திலும், பைபர் படகுகள் காரைக்கால் அரசலாற்றங்கரையோரம் மற்றும் மீனவ கிரா மங்களிலும் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் தனியார் துறைமுகத்தில், 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் உத்தரவுப்படி, காரைக்கால் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு க்குழுவினர், பிரதீப்குமார் தலைமையில், முன் எச்சரிக்கை நடவடி க்கையாக, காரைக்கால் கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடற்கரையில் உள்ள மீனவர்களிடம் புயல் குறித்து எச்சரிக்கை விடுத்து, மீனவ கிராமங்களில் உள்ள படகுளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தினர். மேலும், பொதுமக்கள் மழை மற்றும் புயல் நேரங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- கடந்த 2 நாட்களாக புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியுள்ளது.
- புயல் எச்சரிக்கையால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
புதுச்சேரி:
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மாண்டஸ் புயலாக உருவெடுத்தது.
மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலையில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது கன மழையுடன் பலத்த காற்றும் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியுள்ளது. குளிர்ந்த காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.
பெரியளவில் மழை பெய்யவில்லை. நேற்று இரவில் காற்றின் வேகம் அதிகரித்தது. புயல் எச்சரிக்கையாக 5-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர், புறநகர் பகுதிகளில் பேனர்கள், கட்அவுட்கள் அகற்றப்பட்டிருந்தது.
இரவு முழுவதும் பலத்த சத்தத்துடன் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. சாலைகள் மரங்களின் இலைகளால் இறைந்து கிடந்தது. பல இடங்களில் மின்வயர்கள் அறுந்து விழுந்தது.
புயல் காரணமாக புதுவையில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையில் வழக்கமான மக்கள் நடமாட்டம் இல்லை. பள்ளி செல்லும் வாகனங்கள், பெற்றோர்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இன்று காலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் அதிகளவு இருந்தது. அலைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு எழும்பி கரையில் மோதின.
பழைய துறைமுகத்திலிருந்து கடலுக்குள் செல்லும் பழைய பாலம் சில மாதம் முன்பு உடைந்தது. இன்று அலையின் சீற்றம் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்தது.
புயல் கரையை கடக்கும்போது பாலம் தப்பிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று காலை முதல் கடல் அலைகளின் சீற்றத்தை வேடிக்கை பார்க்க புதுவை மக்கள் குவிந்தனர்.
வார இறுதி விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். அதில் ஒரு சிலர் கடலில் மணல்பரப்பில் இறங்கி அலைகளில் காலை நனைத்து விளையாடினர்.
அப்போது போலீசார் கடலில் இறங்கி விளையாடிய சுற்றுலா பயணிகளை எச்சரித்து வெளியேற்றினர். கடல் அலைகள் கரையை தாக்கும்போது அங்கு நின்று பலரும் செல்பி எடுத்தனர். அவர்களையும் போலீசார் எச்சரித்தனர். மணல் பரப்பில் இறங்காமல் கடலை பார்த்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் காலை 11 மணியளவில் முதலமைச்சர் ரங்கசாமி கடலோர பகுதிகளை பார்வையிட்டார். அவர் கடற்கரை சாலைக்கு வந்தார். காரில் இருந்தபடியே கடலின் சீற்றத்தை பார்த்தார். பின்னர் பழைய துறைமுகத்துக்கு வந்து இடிந்து நின்ற பாலத்தை பார்வையிட்டார். அங்கிருந்த போலீசாரிடம், கடல் மணல்பரப்பில் மக்கள் இறங்காமல் தடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து போலீசார் பைக் மூலம் கடற்கரை சாலையில் மக்கள் வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தினர். புதுவையில் குறைந்த அளவிலான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. புயல் எச்சரிக்கையால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
- இந்த பேரணியை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
- ஹெல்மெட் அணிந்து, அபராதத்தை தவிர்க்க வேண்டும் என்றார்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில், புதுச்சேரி மாநிலம் முழுவதும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தி வரும் நிலையில், பலர் ஹெல்மெட்டை அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. காரைக்காலில் உள்ள போக்குவரத்து காவல்நிலையம் மற்றும் அனைத்து காவல்நிலைய போலீசார், தினசரி ஹெல்மெட் அணியாமல் செல்லும் 100-க்கு மேற்பட்டோரை பிடித்து தலா ரூ.1000 அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில், காரை க்காலில் பொதுமக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வாயிலில் போலீசார் நேற்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
இந்த பேரணியை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் ஹெல்மெட்டுடன் பங்கேற்றனர். இந்த பேரணி, காரைக்காலின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வாயிலில் நிறைவு பெற்றது. பேரணியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் பேசியதாவது:- சாலை விபத்துகளில் எற்படும் உயிர்பலி மற்றும் பெரும் காயங்களை தவிர்க்க, ஹெல்மெட் மிக அவசியம். அதனால், அனைத்து போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். போலீசாரை பார்த்துதான் பொதுமக்களும் ஹெல்மெட் அணிவார்கள். முக்கியமாக, இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, அபராதத்தை தவிர்க்க வேண்டும். என்றார்.
- மீன் பிடிக்க செல்ல கூடாது என்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- படகுகள் மீனவ கிராமங்களில், கடற்கரை ஓரங்களில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
காரைக்கால் கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்களை பாதுகாப்பாக இருக்கவும், கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்ட் லோகேஸ்வரன் உத்தரவின் பெயரில், மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று மாலை முதல் இரவு வரை கிளிஞ்சல் மேடு, காரைக்கால் மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்களில், கடற்கரை ஓரங்களில் நிறுத்த வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தவும், மீன்பிடி தடவளங்களை பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ளவும், காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என்றும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் கரை திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
காரைக்கால்:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் காரணமாக 8ம் தேதி, 9ம் தேதி மற்றும் 10ம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் காரைக்கால் மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்புமாறும் மீனவ கிராமங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவ கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் இருந்து ஆந்திர பிரதேச கடற்பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்ற 43 படகுகளில் உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டு இதுவரை 31 படகுகள் வந்து சேர்ந்துள்ளதாகவும், 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நிரவி நாகத்தோப்பு தெருவைச்சேர்ந்தவர் கந்தவேல். கொத்தனார் வேலை செய்துவரும் இவரது 2-வது மகள் உமாமகேஸ்வரி(வயது21). இவர் காரைக்கால் அவ்வை யார் அரசு மகளிர் கல்லூரியில், பி.ஏ படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். உமா மகேஸ்வ ரிக்கும், திருவாரூ ரில் உள்ள உறவினர் கலிய பெருமாள் மகன் சதீஷ் என்ப வருகும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
கந்தவேல், உறவினரிடம் திருமணம் குறித்து பேசியபோது, சதீஷ்க்கு மூத்தவர்கள் 2 பேர் இருப்பதால் சதீஷ்க்கு திருமணம் செய்துவைக்க யோசித்தனர். பிறகு, கந்தவேல், தனது மூத்த மகன் இதேபோல் காதல் விசயத்தில் இருந்தபோது, பெண் வீட்டார் சம்மதிக்காத காரணத்தால், தற்கொலை செய்துகொண்டார்.
இருப்பது ஒரே மகள் என கூறியதை அடுத்து, சதீஷ் வீட்டார் கடந்த நவம்பர் 30ந் தேதி கந்தவேல் வீட்டுக்கு சென்று, திருமணம் குறித்து பேசி முடிவெடுத்து, விரைவில் நிச்சயார்த்த தேதி சொல்வதாக கூறி சென்றதாக கூறப்படுகிறது.
மறுநாள் சதீஷ் உமா மகேஸ்வரி ஆகியோர் செல்போனில் பேசியதா கவும், அதன் பிறகு இருவரும் பேசவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3ந் தேதி கந்தவேலின் மனைவி உஷா, விரைவில் நிச்சயதார்த்த தேதி சொல்வதாக கூறினா ர்கள் யாரும் போன் செய்யவில்லை. நீயாவது போன் செய் என மகளிடம் செல்போனை கொடுத்த போது, உமாமகேஸ்வரி போனில் ேபசாமல், போனை உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் 1.30 மணி அளவில், சதீஷ் சகோதரர் கந்தவேலுக்கு போன் செய்து, டிசம்பர் 7ந் தேதி நிச்சயதார்த்தம் செய்துகொள்ளலாம் என்ற தகவலை கூறியுள்ளார். அன்று பிற்பகல் 3 மணி அளவில், உமா மகேஸ்வரி, வீட்டு பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, கந்தவேல், நிரவி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி ன்றனர்.
- கடலுக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.
புதுச்சேரி:
வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லகூடாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் காரைக்கால் பகுதியை சேர்ந்த 11 கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு யாரும் கடலுக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையொட்டி காரை க்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இந்த பகுதியில் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசை படகுகள் அனைத்தும் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
பைபர் படகுகள் அரசலாற்றங்கரை மற்றும் துறைமுக பகுதியில் மீனவர்கள் நிறுத்தி உள்ளனர். காரைக்காலில் கடலில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.
- படகிலிருந்து தவறி விழுந்த காரைக்கால் திரு.பட்டினம் மீனவர் மாயமானார்.
- மணிகண்டன் மட்டும் கடலில் நீந்தி கரை திரும்பி னார். ஆனால் சிவா மாயமானார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கடலில் மீன் பிடித்தபோது, கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து தவறி விழுந்த, காரை க்கால் திரு.பட்டினம் மீனவர் மாயமானார். மீனவரை இந்திய கடலோர காவல்படை மற்றும் சக மீனவர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் பட்டின ச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது30). இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் சிவா (28) என்பவ ருடன், நேற்று அதி காலை பட்டினச்சேரி மீனவ கிராமத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
காரைக்கால் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, கடல் சீற்றம் காரணமாக, பைபர் படகு கடலில் கவிழ்ந்தது. தொடர்ந்து, மீனவர்கள் 2 பேரும் கடலில் மூழ்கினர். இதில் மணிகண்டன் மட்டும் கடலில் நீந்தி கரை திரும்பி னார். ஆனால் சிவா மாயமானார். அதைத்தொடர்ந்து, சக மீனவர்கள் படகில் சென்று தேடியும் சிவா கிடைக்க வில்லை. இதனால் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய கடலோர காவல்படை மற்றும் சக மீனவர்கள் மாய மான சிவாவை தீவிரமாக தேடிவருகின்றனர்.
- உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன.
- 196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி:
சென்னையை சேர்ந்த ஹேமந்த் - மோகனப்பிரியா தம்பதியின் மகள் சுபிக்ஷா. 12 வயதான சுபிக்ஷாவை பாடகராக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினர். பல நாடுகளின் தேசிய கீதத்தை சொல்லி கொடுத்தனர்.
உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன. சிறுமி அதையும் தாண்டி கூடுதலாக 3 நாடுகளின் தேசிய கீதங்களையும் சேர்த்து 196 தேசிய கீதங்களை சரளமாக பாடி அசத்தி வருகிறார். புதுவை வந்த இந்த சிறுமி தனது பெற்றோருடன் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு சில நாடுகளின் தேசிய கீதங்களை பாடினார். இதைக்கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்துக்களை கூறினார்.
196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது பத்மஸ்ரீ டெரகோட்டா முனுசாமி உடனிருந்தார்.
- நாடு முழுவதும் 4332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்படுகின்றன.
- 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
மோடி@20 நனவாகும் கனவுகள் என்ற தமிழாக்கப் புத்தகத்தின் வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது. காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளதாவது:
கடந்த 8 ஆண்டுகளில் நாடு மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014ல் இருந்து இதுவரை மீன்வளத்துறைக்காக ரூ.32,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கால்நடைகளுக்கும் அவசர ஊர்திகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது.
அதன் பயனாக தற்போது நாட்டில் 4,332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 5 அவரச ஊர்திகள் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டு உள்ளன. சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது.
8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மகளிருக்கு வழங்கப்பட்டு உள்ளன. ஜன்தன் இயக்கத்தின் மூலம் பெரும்பான்மையாக பெண்கள் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர். 2047ஆம் ஆண்டு இந்தியாவை முழு வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.
- அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.
புதுச்சேரி:
புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 முட்டை மதிய உணவில் வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அரிசியும், பணமும் வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் முட்டை வழங்கப்படவில்லை.
இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அக்சயா என்ற தன்னார்வ நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இந்த தன்னார்வ நிறுவனம் சைவ உணவை மட்டும்தான் வழங்கி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து இன்று முதல் மாணவர்களுக்கு பள்ளிகளில் முட்டை வழங்கப்பட்டது. மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.
இதற்கான பணியை பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சிமொழி குமரன் நேரில் பார்வையிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
வாரத்தில் 2 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. முதல் நாள் 147 பள்ளி மாணவர்களுக்கும் அடுத்து 146 பள்ளி மாணவர்களுக்கும் என சுழற்சி முறையில் கொடுக்கப்பட உள்ளது.
இதேபோல கொரோனா முடிவுற்று பள்ளி தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு இயக்கப்படும் ஒரு ரூபாய் கட்டண பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்தி பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்தனர். பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமின்றி இலவச பஸ் இயக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இதன்படி இன்று முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் இயக்கப்படுகிறது.
இந்த இலவச பஸ் சேவையை பிற்பகலில் கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திருவேட்டக்குடி கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு போனது. இதனை அடுத்து இது குறித்து கோவில் நிர்வாகம், கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இரவு நேரத்தில்2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து தூக்கி செல்லும் சி.சி. டி.வி காட்சி தற்போது சமூக வலைத்தளங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து, மேலும் சி.சி. டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.






