என் மலர்
மகாராஷ்டிரா
- 28 கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பொதுவான அலுவலகம் இல்லை.
- கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும், தலைவராக சோனியா காந்தியும் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து "இந்தியா" (இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சி கூட்டணி) என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
இந்த புதிய கூட்டணியை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கடந்த சில மாதங்களாக கடுமையாக பாடுபட்டு உருவாக்கி உள்ளார். இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.
2-வது ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து 3-வது ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை புறநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்பட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா கூட்டணியின் இன்றைய 3-வது கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 பேர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் டி.ஆர்.பாலுவும் சென்றிருக்கிறார்.
இதுபோல மற்ற கட்சி தலைவர்களும் இன்று காலை மும்பை சென்று சேர்ந்தனர். அவர்களுக்கு ஓட்டலில் மதிய விருந்து அளிக்கப்படுகிறது.
இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டம் முந்தைய 2 கூட்டங்களை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றும், நாளையும் 2 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். குறிப்பாக பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குகிறார்கள்.
அதன் அடிப்படையில் அடுத்தடுத்து கொள்கை அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. அதிலும் குறிப்பாக நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டு போராட்டங்கள் நடத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதுபற்றி 28 கட்சி தலைவர்களும் இன்று விவாதிக்க உள்ளனர்.
28 கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பொதுவான அலுவலகம் இல்லை. டெல்லியில் அதற்கான அலுவலகத்தை திறப்பதற்கு இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. அது போல இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், தலைவர் மற்றும் நிர்வாகிகளும் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும், தலைவராக சோனியா காந்தியும் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் வேட்பாளர் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டுமானால் பெரும்பாலான தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு நாடு முழுவதும் 22 கோடி வாக்குகள் கிடைத்திருந்தன. அதே சமயத்தில் தற்போதைய இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு 23 கோடி வாக்குகள் கிடைத்து இருந்தன.
எனவே பொது வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் பா.ஜனதா வேட்பாளரை எளிதில் வீழ்த்த முடியும் என்று இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் கருதுகிறார்கள். இதற்காக தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்று சில கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
இது தொடர்பாக இன்றும், நாளையும் இந்தியா கூட்டணி தலைவர்கள் விவாதித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்தநிலையில் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இடையே திடீர் சிக்கல் எழுந்துள்ளது. மும்பை கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பட்டியலில் தொகுதி பங்கீடு பிரதானமாக இடம் பெற்று இருந்தது. திடீரென அதை விவாதிக்க வேண்டிய பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர்.
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கேட்டு கொண்டதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்தியா கூட்டணியில் இப்போதே தொகுதி பங்கீடு பற்றி பேசினால் அது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி விடும். அதனால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே தேர்தல் தேதி அறிவித்த பிறகு கடைசி நாட்களில் தொகுதி பங்கீடை தீர்மானிக்கலாம் என்று நிதிஷ் குமார் வலியுறுத்தினார். அதனால் தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க வாய்ப்பில்லை" என்று கூறினார்.
நிதிஷ்குமாரின் கோரிக்கையை சோனியா காந்தி உள்பட பல தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே தொகுதி பங்கீடு இந்தியா கூட்டணியில் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாக பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் என்று தெரிவிக்கிறார்கள்.
பெரும்பாலான மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்பது யார் என்பதில் இன்னமும் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை. பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் மாநிலங்களில் காங்கிரசுக்கும், மாநில கட்சிகளுக்கும் மோதல் ஏற்படும் சூழல் உள்ளது.
டெல்லியிலும், பஞ்சாபிலும் கூட்டணிக்கு தலைமை ஏற்க ஆம் ஆத்மி தீவிரமாக உள்ளது. அதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. அதுபோல மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கொடுக்க விரும்பவில்லை.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் காங்கிரசை களம் இறக்க மாநில கட்சிகள் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால்தான் தொகுதி பங்கீட்டை ஒத்தி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
தொகுதி பங்கீடு செய்ய இயலாவிட்டாலும் குழுக்கள் அமைத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருங்கிணைப்பை உருவாக்கி விட முடியும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கருதுகிறார்கள். இந்திரா காந்தியை எதிர்த்து ஜனதா கட்சி தலைமை புதிய கூட்டணி உருவான போது நாடு முழுவதும் மக்கள் எப்படி ஆதரவு தெரிவித்தார்களோ அதே போன்று இந்தியா கூட்டணிக்கும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று இந்த கூட்டணியின் முக்கிய தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
என்றாலும் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது பற்றி மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. எனவே மும்பை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை பா.ஜனதா ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
- குடோனுக்குள் புகுந்து 105 ஐபோன்களை திருடியதாக கூறப்படுகிறது.
- புனே மாவட்டத்தில் உள்ள லோனிகண்ட் காவல் நிலையத்தில் குர்ஷித் ஒப்படைப்பு.
புனே மாவட்டத்தில் உள்ள குடோனின் ஷட்டரை உடைத்து ரூ. 65 லட்சம் மதிப்பிலான ஐபோன்களை திருடியதாக 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜார்க்கண்டை சேர்ந்த தோபாஜுல் குர்ஷித் ஷேக் என்றும் மும்பை காவல்துறையின் குற்றப் பிரிவின் மிரட்டி பணம் பறித்தல் தடுப்புப் பிரிவினரால் மஸ்ஜித் பந்தர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
தோபாஜூல் குர்ஷித் கடந்த ஜூலை 15ம் தேதி புனே அருகே வாகோலி பகுதியில் உள்ள குடோனுக்குள் புகுந்து 105 ஐபோன்களை திருடியதாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து, குர்ஷித் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்கும் புனே மாவட்டத்தில் உள்ள லோனிகண்ட் காவல் நிலையத்தில் குர்ஷித் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மகாராஷ்டிரா தலைமை செயலகத்திற்குள் விவசாயிகள் கூட்டமாக புகுந்தனர்.
- அவர்கள் தலைமை செயலக கட்டிட மாடியில் இருந்து கீழே குதித்தனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தலைமை செயலகத்திற்குள் இன்று விவசாயிகள் கூட்டமாகப் புகுந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வறட்சியால் ஏற்ப்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்திற்குள் புகுந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தலைமை செயலக கட்டிட மாடியில் இருந்து விவசாயிகள் கீழே குதித்தனர்.
தலைமை செயலகத்தில் வலை அமைக்கப்பட்டிருந்ததால் மாடியில் இருந்து குதித்த விவசாயிகள் அதிர்ஷ்டவசமாக வலையில் விழுந்தனர். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
- வாலிபர் மீது தாக்குதல் நடத்திய நிலையில், மூன்று சிறுவர்கள் மீதும் தாக்குதல்
- வீட்டிற்குள் அழைத்து சென்று ஆடைகளை கழற்றி தாக்குதல்
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் நான்கு பேரை சிலர் மரத்தில தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியதோடு, அவர்கள் மீது சிறுநீர் கழித்து, ஷூவை நாக்கால் நக்க வலியுWத்திய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகியதால், போலீசார் வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். ஆடு மற்றும் புறாக்களை திருடியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டி, இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கூறியதாவது:-
நாங்கள் மஹார் என்ற குறைந்த சாதியை சேர்ந்தவர்கள். அவர்கள் எங்கள் மீது மிகவும் கோபமாக இருந்தார்கள். எங்கள் மீது சிறுநீர் கழித்தார்கள். அவர்களுடைய ஷூவில் எச்சில் துப்பி, அதை நக்குமாறு தெரிவித்தார்கள்
என்னுடைய கால்களை கட்டி மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டார்கள். என்னுடன் மூன்று சிறுவர்கள் இருந்தனர். அவர்கள் மீதும் தாக்கினர். நாங்கள் அவர்களுடைய அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்தவர்கள்தான்" என்றார்.
மேலும், "தன்னை தாக்கிய நான்கு பேரின் பெயர்களை குறிப்பிட்ட அவர், ஒருவரின் வீட்டிற்குள் அழைத்துச் சென்று ஆடைகளை கழற்றி தாக்கினார்கள்" என்றார்.
இந்த வீடியோ காட்டுத்தீயாக பரவ, போலீசார் கொலை முயற்சி, கடத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. "பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காக பரப்பும் வெறுப்பின் விளைவுதான் இதுபோன்ற சம்பவங்கள். இது மனித குலத்தின் மீதான கறை'' என அம்மாநில காங்கிரஸ தலைவர் நானா பட்டோல் தெரிவித்துள்ளார்.
- ஏக்நாத் ஷிண்டே அரசில் இணைந்தது மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்காக...
- அனைத்து மக்களையும் பாதுகாப்பதுதான் எங்களது பணி
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கி தனி கோஷ்டியாக செயல்படும் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அஜித் பவார், பேசியபோது "நாங்கள் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அரசில் இணைந்தது, மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகத்தான். நாங்கள் இந்த முடிவை மாநில வளர்ச்சிக்காக எடுத்தோம்.
அரசியலில், நிரந்தர எதிரியும் கிடையாது. நண்பனும் கிடையாது. நாங்கள் மகாயுதி கூட்டணியில் உள்ளோம். எங்களுடைய பணி அனைத்து சாதி மற்றும் மத மக்களை காப்பாற்றுவதுதான். இதை மகாராஷ்டிர மாநிலத்தை ஒவ்வொருவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
நாங்கள் விவசாயிகளின் நலனுக்காக பணிபுரிவோம். நிலத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. நீர்வளத்துறை மந்திரியாக இருக்கும்போது இதற்கான ஏராளமான பணிகளை செய்துள்ளேன்" என்றார்.
- 3-வது கூட்டத்தில் அடுத்த நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்கப்படும்.
- மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 26 முதல் 27 கட்சிகள் பங்கேற்கும்.
மும்பை:
அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்- மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டார்.
எதிர்க்கட்சிகள் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது. இதில் 17 கட்சிகள் பங்கேற்கின்றன.
எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் அணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயரிடப்பட்டது.
இந்த கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன. அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பா.ஜனதாவை வீழ்த்துவது என்று இந்த கூட்டம் முடிவு செய்யப்பட்டது.
எதிர்க்கட்சி அணியான இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி ஆகிய 2 தினங்களில் நடக்கிறது.
இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மகா விகாஸ் அகாதி கூட்டணியில இடம் பெற்றுள்ள காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தங்குவதற்கு 175 ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மும்பையில் 31-ந் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் லோகோ வெளியிடப்படும் என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியும், அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 26 முதல் 27 கட்சிகள் பங்கேற்கும். வருகிற 31 மற்றும் செப்டம்பர் 17-ந் தேதிகூட்டம் நடைபெறும். 3-வது கூட்டத்தில் அடுத்த நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்கப்படும்.
நாங்கள் ஒரு பொதுவான லோகோவை உருவாக்க முடிவு செய்துள்ளோம். வருகிற 31-ந் தேதி லோகோ வெளியிடப்படும்.
இவ்வாறு அசோக் சவான் கூறியுள்ளார்.
- அஜித் பவார் தலைமையிலான குழு தனியாக இயங்கி வருகிறது
- தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை என சரத் பவார் உறுதியாக கூறுகிறார்
மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார், சில ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் உடன் தனியாக செயல்பட்டு வருகிறார். நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் என அவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் எப்படி காய் நகர்த்த வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் சரத் பவாரே, தனது கட்சியை தக்கவைத்துக் கொள்வதில திண்டாடி வருகிறார். பொதுவாக ஒரு கட்சி பிளவுப்படும்போது எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அதிகமாக யார் பக்கம் இருக்கிறார்களோ? அவர்கள் கைதான் ஓங்கியிருக்கும்.
ஆனால், சரத் பவார் எம்.எல்.ஏ.-க்கள் ஒட்டுமொத்த கட்சிகள் என்று அர்த்தம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில் ''தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. சில எம்.எல்.ஏ.-க்கள் விலகியுள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், எம்.எல்.ஏ.-க்கள் அரசியல் கட்சி என்று அர்த்தம் கிடையாது. அவர்களுடைய பெயர்கள் கூறி, பிரிந்து சென்றவர்களுக்கு ஏன் முக்கியத்தும் கொடுக்க வேண்டும்.
நேற்று சரத் பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவருமான சுப்ரியா சுலே, ''தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. அஜித் பவார் அதன் தலைவராக தொடர்கிறார்'' என்றார்.
இதற்கு முதலில் பதில் அளித்த சரத் பவார், ''இந்த விசயத்தில் எந்த சர்ச்சையும் இல்லை'' எனக் கூறியிருந்தார். பின்னர், இதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 2-ந்தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து அஜித் பவார் உள்ளிட்ட 9 சட்டசபை உறுப்பினர்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா மந்திரிசபையில் இணைந்தனர்.
- மழை பெய்ததன் காரணமாக அரசு பஸ்சில் தண்ணீர் ஒழுகுகிறது.
- அதில் நனையாமல் இருக்க பஸ் டிரைவர் குடை பிடித்தபடி பஸ்சை ஓட்டிச் செல்கிறார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் அரசு பஸ் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவது அம்பலமாகி உள்ளது.
பஸ்சினுள் மழை தண்ணீர் ஒழுகியதால் டிரைவர் குடை பிடித்தபடி அரசு பஸ்சை ஓட்டிச் செல்கிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட வீடியோவில் மழை காரணமாக அரசு பஸ்சில் தண்ணீர் ஒழுகுகிறது. அதில் நனையாமல் இருக்க பஸ் டிரைவர் குடை பிடித்தபடியே ஒரு கையில் பஸ்சை ஓட்டிச் செல்கிறார். மழை நீர் ஒழுகிய பஸ் கட்சிரோலி அகேரி டெப்போவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
இதுபோன்ற மோசமான நிலையில் உள்ள பஸ்கள் இயக்கப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.
- விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திற்கு போதுமான விலையை வழங்குவது அரசின் பொறுப்பு
- விவசாயிகளின் செலவைக் கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்
விலையை கட்டுப்படுத்துவதற்காக வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசு, இந்த வரிவிதிப்பு டிசம்பர் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற வேண்டும் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கடந்த நில தினங்களாக நாசிக் பகுதியில் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய உற்பத்தி வெங்காயத்திற்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், அரசு அதன்மீது 40 சதவீதம் வரி விதித்துள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திற்கு போதுமான விலையை வழங்குவது அரசின் பொறுப்பு. ஆனால், இதுகுறித்த உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
வெங்காயத்தை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,410-க்கு கொள்முதல் செய்வதாகவும், 2 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதிப்பதாகவும் அரசு அறிவித்தது. விவசாயிகளின் செலவைக் கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
எப்படி இருந்தாலும் 40 சதவீத ஏற்றுமதி வரி திரும்பப்பெறுதல் வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிரா 2-வது மிகப்பெரிய மாநிலமாக உள்ளது. உலகிலளவில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த வருடம் பிரேசிலில் ஏற்பட்ட வறட்சியால் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.
இதனால் இந்தியாவில் உள்ள சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக சூழ்நிலை நிலவுகிறது. அவர்கள் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால், தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க அரசு யோசனை செய்து வருகிறது. அப்படி நடந்தால், மாநில அரசு கரும்புக்கு நல்ல விலை கொடுக்க முடியாது.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
- பண்டிகை காலம் நெருங்குவதால் வெங்காயம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
- டிசம்பர் 31-ந்தேதி வரை கட்டுப்பாடு நீடிக்கும் என்றதால், விவசாயிகள், வியாபாரிகள் எதிர்ப்பு
வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்கவும், உள்ளூர் மார்க்கெட்டில் சப்ளையை அதிகரிக்கவும் மத்திய அரசு, வெங்காயம் மீது 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்தது. மேலும், இந்த வரிவிதிப்பு டிசம்பர் 31-ந்தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதற்கு மகாராஷ்டிராவில், முக்கியமாக நாசிக் மாவட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாசிக் மார்க்கெட் வியாபாரிகள், காலவரையின்றி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய அரசு இந்த உத்தரவை திரும்பப்பெறும் வரை, எந்தவொரு ஏலத்திலும் பங்கேற்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குவிண்டாலுக்கு 2410 ரூபாய் விதம், 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யும் என மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜப்பானில் இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ''நான் மத்திய உள்துறை மந்திரி, மத்திய வணிக மந்திரி பியூஷ் கோயல் ஆகியோரிடம் வெங்காயம் தொடர்பான பிரச்சனை குறித்து பேசினேன். மத்திய அரசு இரண்டு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை குவிண்டாலுக்கு 2410 ரூபாய் அடிப்படையில் வாங்கிக் கொள்ளும்.
நாசிக் மற்றும் அகமதுநகர் மாவட்டங்களில் இதற்காக சிறப்பு கொள்முதல் மையம் அமைக்கப்படும். இது வெங்காயம் பயிரிட்டோருக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும்'' என்றார்.
- விமானத்தில் பயணித்த தேவானந்த் திவாரி என்ற பயணி ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
- விமான கேப்டன், அந்த விமானத்தை உடனடியாக நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க திட்டமிட்டார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு இன்டிகோ விமானம் நேற்றிரவு புறப்பட்டு சென்றது.
சிறிது நேரத்திலேயே விமானத்தில் பயணித்த தேவானந்த் திவாரி (வயது62) என்ற பயணி ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவர் தொடர்ந்து ரத்த வாந்தி எடுப்பதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து விமான கேப்டன், அந்த விமானத்தை உடனடியாக நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க திட்டமிட்டார்.
அதன்படி விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் மருத்துவக்குழு வினர் தேவானந்த் திவாரிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தேவானந்த் திவாரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அவர் ஏற்கனவே காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
- தாய் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு
- மற்றொரு நபருக்கு மெசேஜ் அனுப்பியதால், வெட்டிக்கொலை செய்துள்ளார்
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் சந்தேகத்தின் உச்சிக்கே சென்ற 17 வயது மகன், தனது தாயை கோடறியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 வயது மகனுக்கு, அவனுடைய தாயாரின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 35 வயதான தனது தாயாருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது தாயாருடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவனது தாயார், அவருடைய செல்போனில் இருந்து யாருக்கோ மெசேஜ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே, தனது தாயாரின் மீது சந்தேகப்பார்வை வைத்துள்ள நிலையில், தன்முன்னே மெசேஜ் அனுப்பியது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
கோபம் அதிகரிக்க அருகில் இருந்த கோடறியால், தாய் என்று கூட பார்க்காமல் வெட்டி சாய்த்தார். படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்கடர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெறும்போது அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அருகில் இல்லை.
இந்திய தண்டனை சட்டம் 302-வது (கொலை) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






