search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவியை கற்பழித்த 2 வாலிபர்கள் கைது
    X

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவியை கற்பழித்த 2 வாலிபர்கள் கைது

    • அஜித்குமார் தனக்கு மின்சார அடுப்பு வேண்டும் என கல்லூரி மாணவியிடம் கேட்டார்.
    • அதிகாலை நேரத்தில் மாணவிக்கு நினைவு திரும்பியது.

    மும்பை:

    மும்பை செம்பூர் போஸ்டல் காலனி பகுதியில் பாபா அணு ஆராய்ச்சி மைய ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள வீட்டில் பாபா அணு ஆராய்ச்சி மைய ஊழியரின் 19 வயது மகள் தங்கியிருந்து, அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். வேலை காரணமாக கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் வேறு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். கல்லூரி மாணவி தங்கி இருந்த வீட்டின் அருகில் அஜித்குமார் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் மாணவி, அஜித்குமாருடன் நட்பாக பேசி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு அஜித்குமார் குடும்பத்தினர் வெளியே சென்று இருந்தனர். அஜித்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். எனவே அவர் கோவண்டி பகுதியை சேர்ந்த தனது நண்பர் பிரபாகரை(30) வீட்டுக்கு அழைத்தாா்.

    இந்தநிலையில் அஜித்குமார் தனக்கு மின்சார அடுப்பு வேண்டும் என கல்லூரி மாணவியிடம் கேட்டார். மாணவி அடுப்பை கொடுக்க அஜித்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் அஜித்குமார், அவரது நண்பர் பிரபாகரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் 2 பேரும் மாணவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்தனர். இதனை அறியாத மாணவி குளிர்பானத்தை குடித்து மயங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து மாணவியை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அதிகாலை நேரத்தில் மாணவிக்கு நினைவு திரும்பியது. தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்த அவர், உடனடியாக சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர், பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். மேலும் செம்பூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

    இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×