என் மலர்tooltip icon

    குஜராத்

    • ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்காக நாங்கள் கடந்த காலங்களைவிட தற்போது மிகவும் சிறப்பாக தயாராகி உள்ளோம்.
    • குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பதால் இறுதிப் போட்டி நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். இறுதிப்போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளரும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுமான ஸ்டீபன் பிளம்பிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்காக நாங்கள் கடந்த காலங்களைவிட தற்போது மிகவும் சிறப்பாக தயாராகி உள்ளோம். குஜராத் அணியை எதிர்கொள்ள நாங்கள் எல்லா வகையிலும் தயார் நிலையில் இருக் கிறோம்.

    சுப்மன் கில் குஜராத் அணியின் பலமாக இருக்கிறார். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது விக்கெட்டை முடிந்த வரை விரைவாக கைப்பற்ற முயற்சிப்போம். அதற்கு தேவையான திட்டங்களும் எங்களிடம் உள்ளது.

    சுப்மன் கில் விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்திவிட்டால் குஜராத் அணிக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்க முடியும். குஜராத் வீரர்களை நெருக்கடிக்குள் வைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்தையும் செய்ய முயற்சிப்போம். குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பதால் இறுதிப் போட்டி நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும்.

    சி.எஸ்.கே. அணியின் வெற்றித் தோல்வி விகிதம் சுமார் 50 சதவீதமாக இருக்கிறது. இறுதிப் போட்டியின் வெற்றி எங்களுக்கு 50 சதவீதமாக உள்ளது. சென்னையில் நடந்த முதலாவது தகுதிச் சுற்றில் நாங்கள் முதலில் பந்து வீசவே விரும்பினோம்.

    ஒரு அணி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வெல்வது என்பது எளிதல்ல. இதனால் நாங்கள் குஜராத்தை வீழ்த்த முழு திறமையையும் வெளிபடுத்துவோம்.

    இவ்வாறு ஸ்டீபன் பிளம்பிங் கூறியுள்ளார்.

    • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
    • இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வெல்லும் அணி சாம்பியன் பட்டத்துடன் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்.

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 16வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கான குவாலிபயர் 2 போட்டியில் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    ஏற்கனவே, பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்த சென்னை அணியை குஜராத் எதிர்கொள்ள உள்ளது. இதன் மூலம் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வெல்லும் அணி சாம்பியன் பட்டத்துடன் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியின் முடிவில் குஜராத் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா ? அல்லது நடப்பு சாம்பியனிடம் இருந்து பட்டத்தை சென்னை தன்வசமாக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    • 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
    • மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சதம் அடித்த ஷூப்மான் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    இதில், 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர். தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார்.

    இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், மூன்றாவது சதம் அடித்த ஷூப்மான் கில் களத்தில் தனது பேட்டை முத்தமிட்டு கொண்டாடினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சதம் அடித்த ஷூப்மான் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    விராட் கோலி, ஜோஸ் பட்லருக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் மூன்று சதங்கள் அடித்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.

    • குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களை குவித்தது.
    • மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர். தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில்-சாய் சுதர்சன் ஜோடி 138 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்து ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

    இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களை குவித்தது. பாண்ட்யா 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, திலக் வர்மா 43 ரன்களும், கேமரன் கிரீன் 30 ரன்களும் எடுத்தனர்.

    ரோகித் சர்மா 8 ரன்களிலும், விஷ்ணு வினோத் 5 ரன்களிலும், நேகல் வதேரா 4 ரன்களிலும், திம் டேவிட் மற்றும் கிறிஸ் ஜோர்டன் தலா இரண்டு ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    17ம் ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மும்பை இந்தியன்ஸ் எடுத்திருந்தனர்.

    சரியாக 18வது ஓவரில் 12 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வந்தனர்.

    அப்போது களத்தில் இருந்த குமார் கார்த்திகேயா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜாசன் 3 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    இதன்மூலம், குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

    அடுத்ததாக, மே 28 ம்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 233 ரன்களை குவித்தது.

    அகமதாபாத்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர்.

    தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில்-சாய் சுதர்சன் ஜோடி 138 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்து ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

    இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களை குவித்தது. பாண்ட்யா 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
    • முதலில் ஆடிய குஜராத் அணியின் ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.

    இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின், மழை நின்ற பிறகு ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர்.

    தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்திற்கு மேலே வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
    • இந்த சம்பவத்திற்கு வழக்கமான தகவல் தொடர்பு பிரச்சனையே காரணம் என்று விமானி கூறியிருக்கிறார்.

    அகமதாபாத்:

    சண்டிகரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன், இண்டிகோ விமானம் வந்தது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. ஆனால் ரன்வேயை தொட்ட அடுத்த வினாடி திடீரென வீமானம் மீண்டும் டேக் ஆப் ஆகி வானில் பறந்தது.

    உள்ளே இருந்த பயணிகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கடும் குழப்பமும், அச்சமும் அடைந்தனர். சிலருக்கு உடல் வியர்த்து கொட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிலர் பயத்தில் கதறி அழுதுள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்திற்கு மேலே வானில் வட்டமடித்த விமானம், அதன்பின்னர் பத்திரமாக தரையிறங்கியது. அதன்பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த சம்பவத்திற்கு வழக்கமான தகவல் தொடர்பு பிரச்சனையே காரணம் என்றும், விமானத்தை தரையிறக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தில் (ஏடிசி) அனுமதி கிடைக்கவில்லை என்றும் விமானி கூறியிருக்கிறார்.

    எனினும், விமானி சரியான நடைமுறையை பின்பற்றினாரா, இல்லையா? என்பது குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

    • ஒரு கும்பல் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து சித்ரவதை செய்தது மட்டுமில்லாமல் அந்த சிறுமியை 15 பேருக்கு விற்பனை செய்துள்ளது.
    • கைதான அசோக் பட்டேல் கும்பலின் தலைவராக செயல்பட்டுள்ளார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள கன்பா கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.

    புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் காந்தி நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அந்த சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    ஒரு கும்பல் அந்த சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து சித்ரவதை செய்தது மட்டுமில்லாமல் அந்த சிறுமியை 15 பேருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியை விற்பனை செய்த கும்பலை சேர்ந்த அசோக் பட்டேல், அவரது மனைவி ரேணுகா (வயது 45), இவர்களது 16 வயது மகன் மற்றும் ரூபல் மெக்வான் (34) என்ற பெண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களது கூட்டாளிகளான மான்சா பகுதியை சேர்ந்த மோதி சென்மா (50) மற்றும் பாலன்பூரை சேர்ந்த அம்ரத் தாகூர் (70), சேகர்சிங் சோலங்கி (34) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான அசோக் பட்டேல் இந்த கும்பலின் தலைவராக செயல்பட்டுள்ளார். மேலும் மெக்வான் சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி நைசாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் பின்னர் அந்த சிறுமிகளுக்கு நிறைய பரிசுகள் மற்றும் ஆடைகள் கிடைக்கும் என்று கூறி அவர்களை பலருக்கு விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கடந்த 2015-ம் ஆண்டு முதலே இந்த கும்பல் இதே போன்று சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சம்பாதித்து வந்துள்ளனர்.

    மேலும் சில சிறுமிகளை திருமண ஆசை காட்டி மணமகள் என கூறி ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள இந்த கும்பலின் கூட்டாளிகள் மூலம் பல ஆண்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளில் இந்த கும்பல் 8 சிறுமிகளை கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் சிறுமிகளை தலா ரூ. 2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கும்பலின் பிடியில் உள்ள சிறுமிகளை மீட்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • பரூச் மாவட்டம் முல்லர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர்.
    • 6 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதில் 4 பேர் இளம் வயதுடையவர்கள்.

    சூரத்:

    குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் முல்லர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது 8 பேர் கடல் அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்கள். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கடலில் தத்தளித்த 2 இளைஞர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 6 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதில் 4 பேர் இளம் வயதுடையவர்கள்.

    இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில நாட்களுக்கு முன்புதான், நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலின் காதலிக்கு அவர் ஏற்கனவே திருமணமானவர் எனவும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
    • விசாரணை நடத்திய போலீசார் நிகுஞ்ச் குமாரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல்.

    நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலுக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணிடம் நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல் தனக்கு திருமணமானதை மறைத்து பழகினார். இந்த பழக்கம் காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்புதான், நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலின் காதலிக்கு அவர் ஏற்கனவே திருமணமானவர் எனவும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதை அறிந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலுடன் இருந்த காதலை முறித்து கொண்டார். மேலும் அவரை சந்திக்கவும் மறுத்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல் சம்பவத்தன்று, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியையும் வைத்தார். இதில் உடலில் எரிச்சல் ஏற்பட்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி சூரத் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். அதில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் நிகுஞ்ச் குமாரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • முதலில் ஆடிய குஜராத் 9 விக்கெட்டுக்கு 188 ரன்களை குவித்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.

    தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஷுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார். சாய் சுதர்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார் அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. குஜராத் அசத்தலாக பந்துவீச, முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இதனால் ஐதராபாத் அணி 59 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட் இழந்து தத்தளித்தது. கிளாசன் மட்டும் தனியாகப் போராடி அரை சதம் கடந்தார்.

    8-வது விக்கெட்டுக்கு கிளாசனுடன் புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பின்னர் கிளாசன் பவுண்டரி, சிக்சர்களை விளாசினார். கிளாசன் 64 ரன்னில் அவுட்டானார். புவனேஷ்வர் குமார் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஐதராபாத் அணி 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. அத்துடன் பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது.

    குஜராத் சார்பில் முகமது ஷமி, மோகித் சர்மா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நீரிழ் மூழ்கி உயிரிழந்த 5 சிறுவர்களின் சடலங்களையும் மீட்டனர்.

    குஜராத் மாநிலம் பொடாட் நகரில் உள்ள கிருஷ்ணா சாகர் ஏரியில் குளிப்பதற்காக சிறுவர்கள் 5 பேர் நேற்று மதியம் சென்றுள்ளனர். முதலில் 2 சிறுவர்கள் ஏரியில் இறங்கி நீந்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இருவரும் நீருக்குள் திடீரென மூழ்கத் தொடங்கினர்.

    இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கரையில் இருந்த மூன்று சிறுவர்களும் ஏரியில் மூழ்கிய நண்பர்களை காப்பாற்ற முயன்று ஏரியில் குதித்தனர். ஆனால், அவர்களும் நீரில் மூழ்கினர். இதில், 5 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நீரிழ் மூழ்கி உயிரிழந்த 5 சிறுவர்களின் சடலங்களையும் மீட்டனர்.

    மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×