search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    30 மணி நேரத்தில் 200 மி.மீ அளவுக்கு கொட்டிய மழை - தெப்பக் குளமான ரெயில் நிலையம்
    X

    30 மணி நேரத்தில் 200 மி.மீ அளவுக்கு கொட்டிய மழை - தெப்பக் குளமான ரெயில் நிலையம்

    • கடந்த 30 மணி நேரத்தில் பல இடங்களில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
    • அகமதாபாத் உள்பட பல்வேறு நகரங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 30 மணி நேரத்தில் பல இடங்களில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

    கட்ச் பகுதியில் பலத்த மழை காரணமாக, காந்திதாம் ரெயில் நிலையத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கனமழை தொடர்பான விபத்துகளில் கடந்த 3 நாளில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

    ஜூனாகத், ஜாம்நகர், கட்ச், வல்சாத், நவ்சாரி, மெஹ்சானா மற்றும் சூரத் ஆகிய இடங்களில் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    அகமதாபாத் உள்பட பல்வேறு நகரங்களின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×