என் மலர்
நீங்கள் தேடியது "Cyclone Bibarjai"
- பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது.
- சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன.
அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவில் கரையை கடந்த போது ஜாகவ் துறைமுக பகுதியில் 125 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அப்போது கடலில் பல மீட்டர் உயரத்திற்கு அலைகளும் எழுந்தது. அதோடு கன மழையும் பெய்தது.
பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது. சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
- எட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 1,171 கர்ப்பிணி பெண்களில் 1,152 கர்ப்பிணி பெண்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
- கரையோரத்தில் வசித்து வந்த சுமார் ஒரு லட்சம் பேரை வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.
புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவில் கரையை கடந்த போது ஜாகவ் துறைமுக பகுதியில் 125 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயல் கரையை கடக்கும்போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடலோர கிராம மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது. சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஜாகவ், பவ் மாவட்டங்களை சேர்ந்த 1000 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
இவ்வளவு இடர்பாடுக்கு மத்தியில், பிபோர்ஜோய் புயலின்போது குஜராத்தில் 700 குழந்தைகள் பிறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரையோரத்தில் வசித்து வந்த சுமார் ஒரு லட்சம் பேரை வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதில் எட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 1,171 கர்ப்பிணி பெண்களில் 1,152 கர்ப்பிணி பெண்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில், 707 கர்ப்பிணி பெண்கள் வெற்றிகரமாக குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
குறிப்பாக கட்ச் மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 308 குழந்தைகள் பிறந்துள்ளன. ராஜ்கோட் மாவட்டத்தில் நூறு குழந்தைகளும், தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் 93 குழந்தைகளும் பிறந்துள்ளன.
இதுகுறித்து குஜராத் அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கைியல், " குஜராத் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் 707 குழந்தைகள் வெற்றிகரமாக பிறந்துள்ளன. புயல் எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 302 அரசு வாகனங்கள் மற்றும் 202 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. ஒவ்வொன்றும் மருத்துவ பணியாளர்களுடன், இரவும் பகலும் விடாமுயற்சியுடன் பணியாற்றின" என்று குறிப்பிட்டிருந்தது.
- குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
- குஜராத்தில் புயலின் சேதம் குறித்து ஆய்வு செய்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்தார்.
அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.
பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது.
சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.
இதைதொடர்ந்து, புயலால் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
குஜராத்தில் புயலின் சேதம் குறித்து ஆய்வு செய்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- பிபர்ஜாய் புயலால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. புயல் காரணமாக 47 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 234 விலங்குகள் உயிரிழந்துள்ளனர்.
1,600 கிராமங்களில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது மற்றும் ஜூனாகத் மற்றும் போர்பந்தர் மாவட்டங்களில் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.
பயிர்கள், பழத்தோட்டங்கள் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து மாநில அரசு விரைவில் கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணப் தொகை குறித்து அறிவிக்கும்.
புயலை எதிர்கொள்ள மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டன.
முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள் ஓரிரு நாட்களில் அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சகம், குஜராத் அரசு மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் தொடர்ந்து வழிகாட்டி வருகிறார். இந்த பேரழிவிலிருந்து குறைந்தபட்ச சேதத்துடன் வெளிவருவது பயனுள்ள குழுப்பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
இவ்வாறு அவர் கூறினார்.






