என் மலர்tooltip icon

    பீகார்

    • வருகிற 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • நிதிஷ்குமார் அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மேம்பட்டுள்ளது.

    பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மீதி உள்ள 122 இடங்களுக்கு 2-ம் கட்டமாக வருகிற 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டின் மிகவும் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற மாநிலங்களில் பீகாரும் ஒன்று. கடந்த 20 ஆண்டுகளில் பீகார் அடைந்துள்ள முன்னேற்றத்தை மக்கள் கண்டிருக்கிறார்கள்.

    லாலு பிரசாத், ராப்ரி தேவி ஆகியோர் பீகாரை பின்னோக்கி இழுத்து சென்றனர். ஆனால் இன்று அது எங்கே இருக்கிறது என்று பாருங்கள். நிதிஷ்குமார் அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மேம்பட்டுள்ளது என்று இளைஞர்கள் கூறி வருகின்றனர்.

    இதுவே முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று அவர்கள் கூறுவார்கள். கங்கை நதியின் கீழ் 4 பாலங்களை கட்டினோம். இன்னும் 10 பாலங்கள் கட்டுமானத்தில் இருக்கின்றன. இது சாத்தியமாகும் என்று யாரும் நினைக்கவில்லை.

    கடந்த ஆட்சியில் விவாதங்கள், கொள்ளை, கொலை, வழிப்பறி பற்றியதாக இருந்தது. ஆனால் இன்று விவாதங்கள் முன்னேற்றம் பற்றி மாறியுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்.

    நாங்கள் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் செல்வதை பல முறை தெளிவுப்படுத்தினோம். அவரே முதலமைச்சர் ஆவார். வெற்றிக்கு பிறகு அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் செயல்படுவோம். எங்கள் பலத்தை பற்றி நினைக்காமல் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதே பா.ஜ.க.,-வின் கொள்கை.

    குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். மாநிலத்தில் 2.8 கோடி குடும்பங்கள் உள்ளன. புதிதாக 2 கோடிக்கும் அதிகமான வேலை கொடுக்க வேண்டுமானால் பி, சி, டி பிரிவுகளில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

    அதற்கு சராசரியாக ரூ.39 ஆயிரம் சம்பளம் என நிர்ணயித்து கொண்டாலும் மொத்தம் ரூ.12.85 லட்சம் கோடி தேவை. இது பீகாரின் பட்ஜெட்டை விட 4 மடங்கு அதிகமாகும். சாத்தியமில்லாத இந்த வாக்குறுதியை தேஜஸ்விக்கு ராகுலும், லாலுவுதான் அளித்திருப்பார்கள்.

    புலம்பெயர்வு குறைய பீகாரிலேயே சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும். மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் காட்டு ராஜ்ஜியம் திரும்பும். எனவே மக்கள் வாக்களிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும்.
    • மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை.

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பூரினியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-

    பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும். மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை. பீகார் மக்கள், மாநிலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துபவர்கள் அல்ல. ஒட்டுமொத்த நாட்டையும் மேம்படுத்துவார்கள். உ.பி. மக்கள் அவாத்தில் பாஜகவை தோற்கடித்தனர். அதேபோல் பீகார் மக்கள் மகாத்தில் அவர்களை தோற்கடிப்பார்கள்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

    மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக-வுக்கு மிகவும் குறைவான இடங்களே கிடைத்தன. இதனால் பாஜக-வால் தனிப்பெரும்பான்மை றெ முடியாமல் போனது. 80 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாடி 37 இடங்களில் வெற்றி பெற்றது.

    • லாலு பிரசாத் கட்சி பீகாரில் மீண்டும் காட்டு ராஜ்ஜியத்தை கொண்டு வர விரும்புகிறது.
    • ஆர்.ஜே.டி. மற்றும் அதன் டிஎன்ஏ மாறவில்லை.

    பீகார் மாநிலத்தில் வருகிற 6ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தலைவர்கள் தீவிர தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மோசமான வானிலை காரணமாக சிவான் மன்றும் முசாபர்பூரில் நடைபெற்ற பேரணியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவால் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் காணொலி மூலம் பேசினார். அப்போது ஜே.பி. நட்டா பேசியதாவது:-

    ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியின் கீழ் பீகார் காட்டு ராஜ்ஜியத்தை கண்டது. மாநிலத்தில் முழுமையான அராஜகம் நிலவியது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது. தொழிலதிபர்கள் கடத்தல் சம்பவம் அதிகரித்து கொண்டு வந்தது.

    ஷஹாபுதீனின் பயங்கரத்தை சிவான் கண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை அவரது மகனை சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் நிறுத்தியுள்ளது. லாலு பிரசாத் கட்சி பீகாரில் மீண்டும் காட்டு ராஜ்ஜியத்தை கொண்டு வர விரும்புகிறது. ஆர்.ஜே.டி. மற்றும் அதன் டிஎன்ஏ மாறவில்லை. அதனால்தான் ஷஹாபுதீன் மகன் ஒசாமா ஷஹாப் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார்.

    மறைந்த முகமது ஷஹாபுதீன் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். 

    • பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
    • தேசிய கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி தேசிய கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், பீகாரின் சமஸ்திப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நவம்பர் 6-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் இங்கு நடைபெறும். நவம்பர் 6-ம் தேதி பீகாரின் ஆட்சி யாருடைய கைகளில் இருக்கும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

    15 ஆண்டுகளாக காட்டு ராஜ்ஜியத்தைப் பரப்பிய கைகளிலோ அல்லது 20 ஆண்டுகளாக நல்லாட்சியைக் கொண்டு வந்த தேசிய ஜனநாயக கூட்டணி கைகளிலா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டும்.

    கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் பாபுவும், 11 ஆண்டுகளாக பிரதமர் மோடியும் நிதிஷ் பாபுவும் இணைந்து பீகாரின் வளர்ச்சிக்கான எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 5 கட்சிகளும் 5 பாண்டவர்கள் போல, ஒன்றாக தேர்தல் களத்தில் இறங்கிவிட்டன.

    நமக்கு முன்னால் மகாகட்பந்தன் கூட்டணி உள்ளது. அது எங்களுக்கு எதிராக போட்டியிடுவதற்குப் பதிலாக, தங்களுக்குள் போட்டியிடும் அளவுக்கு குழப்பத்தையும் உள்கட்சிப் பூசலையும் கொண்டுள்ளது என தெரிவித்தார்.

    • ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம்.
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பீகாரில் பிரசாரம் செய்தார்.

    பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் ஐக்கிய ஜனதாதளம்- பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், எதிர்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பீகாரில் பிரசாரம் செய்தார். பெகுசராய் பகுதியில் அவர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக ஓட்டு சேகரித்தார்.

    முன்னதாக பாட்னா விமான நிலையத்தில் பிரியங்கா காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    ஒரு கோடி வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பா.ஜ.க கூட்டணி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதுவரை அவர்கள் அதை வழங்காதது ஏன்? இப்போது அதைப்பற்றி கூறுவது ஏன்?

    பீகாரில் மெகா கூட்டணி ஏன் ஆட்சி அமைக்காது. நிச்சயமாக நாங்கள் ஆட்சி அமைப்போம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
    • பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    பாட்னா:

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட சட்ட சபைக்கு இரு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடக்கிறது.

    லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் எதிர்க்கட்சிகளின், மகாகட்பந்தன் கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. முதல் மந்திரி நிதிஷ்குமார், பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதன் விபரம் பின்வருமாறு:

    ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

    பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

    விவசாயிகளுக்கு நிதி உதவி ரூ.6,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்படும்.

    பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவு வழங்கப்படும்.

    பீகாரில் மேலும் 4 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்படும்.

    இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐஐடியும் அமைக்கப்படும்.

    பீகாரில் பத்து புதிய தொழில் பூங்காக்கள் திறக்கப்படும்.

    பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

    புதிய வீடுகள், இலவச ரேஷன், 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    • பிகாரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தோல்வியை சந்திக்க உள்ளது.
    • 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

    243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தல் பிரசார களம் பரபரப்பாகி உள்ள நிலையில் நேற்று பீகாரில் சாப்ராவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், பிகாரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தோல்வியை சந்திக்க உள்ளது. பிகார் மக்களை அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். 

    பஞ்சாபில் இருந்த காங்கிரஸ் முதல்வர் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்களை மாநிலத்திற்குள் அனுமதிக்காதீர்கள் என்று பகிரங்கமாக கூறினார்.

    அந்தச் சமயத்தில், அதே மேடையில், தற்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகள்(பிரியங்கா காந்தி), அதற்குச் சந்தோஷமாக கைதட்டிக்கொண்டிருந்தார்.

    அதேபோல் , கர்நாடகா, தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள், பீகார் மக்களை அவதூறு செய்கின்றனர். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது.

    இவ்வளவு நடந்தும், பீகாரில் ஆர்ஜேடி அமைதியாக வாயடைத்துப் போனது போல் இருக்கிறது. இந்தத் தேர்தலில் அவர்கள் எல்லையைக் கடந்துவிட்டனர்.

    பீகாரை அவமதித்த அதே காங்கிரஸ் தலைவர்களை, இப்போது ஆர்ஜேடி இங்கே பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளது" என பேசியுள்ளார்.  

    முன்னதாக ஒடிசா சட்டமன்றத் தேர்தலின்போது, புரி ஜெகநாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், பிகார் தேர்தலில் தமிழ்நாட்டை குறிப்பிட்டு பிரதமர் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

    • இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வுக்கு காயம் ஏற்பட்டது.
    • எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டது.

    பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

    திக்ரி சட்டசபை தொகுதியில் இந்துஸ்தானி அவாம் கட்சி போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் அனில்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்துஸ்தான் அவாம் கட்சி வேட்பாளரும், எம்.எல்.ஏ.வுமான அவர் வாக்கு சேகரிப்பதற்காக கயா மாவட்டத்துக்கு சென்றார். திதோரா கிராமத்தில் பிரசாரம் செய்ய சென்ற போது 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. அதைத் தொடர்ந்து கிராம மக்களும் தாக்கினார்கள்.

    உள்ளூரில் சாலை அமைத்து தருமாறு அந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றி தராததால் ஆத்திரமடைந்து கற்கள் மற்றும் செங்கற்களால் கடுமையாக தாக்கினார்கள்.

    இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வுக்கு காயம் ஏற்பட்டது. கை மற்றும் தலைமையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் அவரைக் காப்பாற்றினார்கள். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டது. கிராம மக்களின் தாக்குதலில் எம்.எல்.ஏ.வின் கார் சேதமானது.

    இந்த தாக்குதல் சம்பவம் கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கற்களை வீசிய சிலரை போலீசார் கைது செய்தனர்.

    • பிரதமர் மோடி 2-வது கட்டமாக இன்று பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
    • சாத் பூஜை திருவிழாவிற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளத்தைப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம்.

    பிரதமர் மோடி கடந்த 24-ந்தேதி பீகார் தேர்தலில் தேர்தல் பிரசாரம் செய்து பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். சமாஸ்கிபூர், பெகுசராய் பகுதியில் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி 2-வது கட்டமாக இன்று பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தார். முசாபர்பூரில் இன்று காலை நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

    இங்கு ஏராளமான இளைஞர்களும், பெண்களும் கூடி இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. மீண்டும் ஒருமுறை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைய இருக்கிறது.

    சாத் பூஜை (சூரிய வழிபாடு) திருவிழாவிற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளத்தைப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம்.

    பீகார் மக்களின் சூரிய வழிபாடு விழாவை காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதா தளமும் (ஆர்.ஜே.டி.) அவமதித்துவிட்டன. வாக்குகளை பெறுவதற்காக காங்கிரஸ், ஆர்.ஜே.டி. தலைவர்கள் சாத் திருவிழாவை அவமானப்படுத்துகிறார்கள். பீகார் மற்றும் நாட்டு மக்கள் இதை பொறுத்துக் கொள்வார்களா? நீங்கள் அவர்களுடன் உடன்படுகிறீர்களா? நீங்கள் அவர்களை தண்டிப்பீர்களா? அல்லது இல்லையா?

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகாரை மேம்படுத்தி வருகிறோம். பீகாரின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளோம். ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரசால் ஒரு போதும் வளர்ச்சி அடைய செய்ய முடியாது. இந்த கட்சிகள் பல ஆண்டு களாக பீகாரை ஆட்சி செய்தன. ஆனால் அவர்கள் மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்தனர். பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்தனர்.

    ஆர்.ஜே.டி.-காங்கிரசால் கொடுமை, கசப்பு, தவறான ஆட்சி, ஊழல் உள்ளிட்ட 5 விஷயங்களில் அடையாளம் காண முடியும். ரெயில் வேயை கொள்ளையடித் தார்கள். பீகாரை மேம்படுத்த போவதாக சொல்வார்கள். பீகாரில் ஆர்.ஜே.டி. ஆட்சி யில் குண்டர்கள் வாகன ஷோரூமை கொள்ளை அடித்தனர். 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கடத்தல் வழக்குகள் இருந்தன.

    பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருந்து வருகிறது. ஏழைக ளுக்கு நிரந்தர வீடுகளை வழங்கினோம், பெண்களின் பெயரில் பதிவு செய்தோம். எங்கள் சகோதரிகளின் கஷ்டங்கள் குறையும் வகையில் குழாய் நீர் இணைப்புகள், இலவச எரிவாயு இணைப்புகள் மற்றும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி னோம்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
    • பீகார் தேர்தலுக்கான 101 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது.

    பீகாரில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் மகாபந்தன் (இந்தியா) கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து 32 இடங்களில் மட்டும் களம் காண்கிறது.

    இந்நிலையில் பீகாரின் கோபால்கஞ்ச் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த ஓவைசி, தேர்தல் பிரச்சாரத்தின் போது பீகாரில் இருந்து ஊடுருவல்காரர்களை ஒழிப்போம் என்று அமித் ஷா பலமுறை கூறி வருகிறார்.

    இருப்பினும், மோடிக்கும் ஷாவுக்கும் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஊடுருவல்காரர்கள் டெல்லியில் உள்ளனர்.

    வங்கதேச மக்களால் வெளியேற்றப்பட்ட ஒரு ஊடுருவல்காரரை மோடி வரவேற்று, அவரை சகோதரி என்று அழைத்து வருகிறார்" என்று ஷேக் ஹசீனாவை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்தார்.

    தொடர்ந்து பேசிய ஓவைசி,"அனைவரின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதாகக் கூறும் நரேந்திர மோடி, பீகார் தேர்தலில் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு சீட் கூட வழங்கவில்லை. பீகார் தேர்தலுக்கான 101 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இடம்பெறவில்லை" என்று குறிப்பிட்டார்.   

    • பிரதமர் மோடி உங்கள் வாக்குகளை விரும்புகிறார். நீங்கள் டான்ஸ ஆட சொன்னால் ஆடுவார்.
    • வாக்காளர்களையும், இந்திய ஜனநாயகத்தையும் கேலி செய்துவிட்டார்- பாஜக.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்கினார்.

    முதல் பிரசார கூட்டத்திலேயே பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். பிரதமர் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:-

    பிரதமர் மோடி உங்கள் வாக்குகளை விரும்புகிறார். நீங்கள் நரேந்திர மோடியை டான்ஸ ஆட சொன்னால், அவர் டான்ஸ் ஆடுவார். அவர்கள் உங்கள் வாக்குகளை திருடுவதில் ஈடுபட்டுள்ளனர். ஏனென்றால், அவர்கள் இந்த தேர்தலை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள். மகாராஷ்டிரா, அரியானாவில் தேர்தல்களை திருடினார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். பீகாரில் அவர்கள் உங்களுடைய சிறப்பை திருட முயற்சி செய்வார்கள்.

    இவ்வாறு ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.

    இதற்கு பாஜக உடனடியாக பதலடி கொடுத்துள்ளது. பாஜக-வின் செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி "ராகுல் காந்தி லோக்கல் குண்டர் போல் பேசுகிறார். பிரதமருக்காக வாக்களித்த அனைத்து மக்களையும் அவமதித்துள்ளார். வாக்காளர்களையும், இந்திய ஜனநாயகத்தையும் கேலி செய்துவிட்டார்" என பதில் கொடுத்துள்ளார்.

    • பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • பீகார் சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    ஆட்சியைக் கைப்பற்றும் வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே, பீகார் மாநிலத்தின் சரன் மாவட்டத்தில் உள்ள பர்சா பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் பவன் கெரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், சட்டசபைக்கான தேர்தல் வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி இன்று வெளியிட்டுள்ளது.

    பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.

    ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவசம்

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலைவாய்ப்பு வழங்குவோம்.

    மகளிருக்கு மாதம் தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

    ×