என் மலர்
பீகார்
- இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.
- இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.
இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.
- பீகாரில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
- கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாவது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து, தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி பாட்னாவில் மெகா ரோடுஷோ நடத்தினார். தலைவர்கள் முற்றுகையால் பீகார் தேர்தல் களம் சூடு பிடித்தது.
இந்நிலையில், பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளன.
- நாளை முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி நாளை முதல் கட்டமாக 121 தொகுதிகளில் நடைபெற உள்ள வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக 122 தொகுதிகளுக்கு 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பிர்பெயின்தி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான லலன் குமார் இன்று அக்கட்சியில் இருந்து திடீரென விலகி லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் இணைந்தார்.
அவர் கட்சியில் இருந்து விலகியது பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்திருந்த அவர், ஆர்.ஜே.டி.யில் இணைந்துள்ளார். அவர் பீகார் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல் மந்திரி ராப்ரி தேவி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
- வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
- அவர் எந்த அடிப்படையும் இல்லாமல் அரசியலமைப்பு அமைப்புகளை டார்கெட் செய்கிறார்.
பீகார் மாநில தேர்தலுக்கான பிரசாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வாக்குகளுக்காக பிரதமர் மோடி நடனம் கூடி ஆடுவார். வாக்காளர்கள் கேட்டுக்கொண்டால் யோகா கூட செய்வார் என விமர்சனம் செய்திருந்தார். மேலும், மீனவர்களுடன் குளத்தில் குதித்து நீச்சல் அடித்ததுடன், மீன் பிடித்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல் செய்துள்ளார். "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு குளத்தில் குதிப்பதைவிட வேறு வழியில்லை. வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். அவர் எந்த அடிப்படையும் இல்லாமல் அரசியலமைப்பு அமைப்புகளை குறிவைக்கிறார்" என்றார்.
மேலும், "ராகுல் காந்திக்கு என்ன நிகழ்ந்தது. அவர் பாதுகாப்புப்படையில் இடஒதுக்கீடு பிரச்சினையை எழுப்புகிறார். பாதுகாப்புப்படைகளில் இடஒதுக்கீடு கோரிக்கை வைத்து நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்" என்றார்.
- மகர சங்கராந்தி நாளான ஜனவரி 14 அன்று ரூ.30,000 ஒரே தவணையாக வழங்கப்படும்.
- முன்னதாக வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட வாக்குறுதிகளையும் தேஜஸ்வி அறிவித்திருந்தார்.
பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாவது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பினரும் கண்கவர் திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் பேசுகையில், 'மை பஹின் மான் யோஜனா' என்ற திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மகர சங்கராந்தி நாளான ஜனவரி 14 அன்று ரூ.30,000 ஒரே தவணையாக வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு 300 ரூபாயும், கோதுமைக்கு 400 ரூபாயும் போனஸ் தொகையாக வழங்கப்படும். பாசனத்துக்காக இலவச மின்சாரம் வழங்கப்படும்.
விவசாயிகளுக்குஅனைத்து முதன்மை விவசாய கடன் சங்கங்கள், முதன்மை சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களுக்கும் மாநிலத்தில் மக்கள் பிரதிநிதிகள் அந்தஸ்து வழங்கப்படும்.
ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து 70 கி.மீ.க்குள் இடமாற்றங்கள் செய்யப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்" என்று வாக்குறுதி அளித்தார்.
முன்னதாக வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட வாக்குறுதிகளையும் தேஜஸ்வி அறிவித்திருந்தார்.
இதற்கிடையே ஆளும் என்டிஏ கூட்டணி 'முக்கியமந்திரி மகிளா ரோஸ்கர் யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் கணக்குகளில் ஏற்கனவே ரூ.10,000 டெபாசிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்குவதற்கு அடியமாக்க மோடி விரும்புகிறார்.
- கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் தனது அரசை கேள்வி கேட்க கூடாது என்று விரும்புகிறார்.
கல்வி, வேலைவாய்ப்பு பிரச்சினை குறித்து கேள்வி கேட்காமல் இருக்க இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அடிமையாக வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் தேர்தலை முன்னிட்டு அவுரங்காபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் சமூக ஊடகங்களில் போதை பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார்.
உங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்குவதற்கு அடியமாக்க மோடி விரும்புகிறார். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் தனது அரசை கேள்வி கேட்க கூடாது என்பதற்காக மோடி இதுபோன்ற சூழ்நிலையை உருவாக்க விருப்புகிறார்.
நிதிஷ் குமாரும் நரேந்திர மோடியும் இந்த மாநில இளைஞர்களை வேலையின்மையில் தள்ளியுள்ளனர். மீண்டும் மீண்டும் வினாத்தாள் கசிவுகள், தகுதியான ஏழை மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்கின்றன" என்று தெரிவித்தார்.
- இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களை எடுத்துப் பாருங்கள்.
- அதில் நாட்டின் 10 சதவீதமாக உள்ளவர்கள்தான் இருப்பார்கள் என்றார்.
பாட்னா:
பீகார் சட்டசபை தேர்தலுக்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று குடும்பா என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மக்களால் (உயர்ஜாதியினர்) ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது. உன்னிப்பாக கவனித்து பார்த்தால் இது தெரியும்.
நம் நாட்டில் தலித், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் என்று பார்த்தால் 90 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள 500 பெரிய நிறுவனங்களை எடுத்துப் பாருங்கள். அதில் பிற்படுத்தப்பட்டோர் அல்லது தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.
நாட்டின் 10 சதவீதமாக உள்ளவர்கள் (உயர் ஜாதியினர்)தான் இருப்பார்கள். அனைத்துப் பணிகளும் அவர்களுக்கு தான் செல்கிறது. அவர்கள்தான் ஆயுதப்படையை கட்டுப்படுத்துகின்றனர். உங்களால் மற்ற 90 சதவீத மக்கள் எங்கு உள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியாது.
நாட்டின் 90 சதவீத மக்கள் தொகைக்கு உரிய இடமளிக்க வேண்டும். அவர்கள் கண்ணியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழக்கூடிய இந்தியாவை நாங்கள் விரும்புகிறோம்.
காங்கிரஸ் எப்போதும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டுள்ளது. இனியும் அதனை செய்வோம் என தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்தை பா.ஜ.க.வினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். ராகுல் காந்தி உயர்ஜாதியினரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
- பீகாரில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
- இதையடுத்து தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாவது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து, தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி பாட்னாவில் மெகா ரோடுஷோ நடத்தினார். தலைவர்கள் முற்றுகையால் பீகார் தேர்தல் களம் சூடு பிடித்தது.
இந்நிலையில், பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
நாளை மறுதினம் அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- தனக்கு எதிராக தம்பி பிரசாரத்தில் ஈடுபட்டது தேஜ் பிரதாப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
- கட்சியை விட பொதுமக்களே எனக்கு எஜமானர்கள்.
பாட்னா:
பீகாரில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த முன்னாள் முதல்-மந்திரி லல்லு பிரசாத் யாதவ் குடும்பம் அரசியல் பகையால் பிரிந்து கிடக்கிறது. அவரது மகன்கள் தேஜ்பிரதாபும், தேஜஸ்வியும் எதிர் எதிராக களம் இறங்கிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
தந்தை லல்லு பிரசாத் யாதவ்வை பிரிந்துள்ள அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் ஜன்சக்தி ஜனதா தளம் (ஜே.ஜே.டி.) என்ற கட்சியை தொடங்கினார். தேர்தலில் மஹீவா சட்டசபை தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் இவர் முதல் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவருக்கு எதிராக அவரது தம்பியும் முதல்-மந்திரி வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் முகேஷ் ரவுசான் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேஜஸ்வி யாதவ் பிரசாரம் செய்தார். தனது கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யுமாறு அவர் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார்.
தனக்கு எதிராக தம்பி பிரசாரத்தில் ஈடுபட்டது தேஜ் பிரதாப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் கூறியதாவது:-
அவர் (தேஜஸ்வி யாதவ்) எனக்கு எதிராக பிரசாரம் செய்து இருப்பதால் அவர் போட்டியிடும் ரகோபூர் தொகுதியில் நான் அதையே செய்வேன். கட்சியை விட பொதுமக்களே எனக்கு எஜமானர்கள்.
மஹீவா மக்கள் விரும்பினால் இந்த முறை நான் முதல்-மந்திரி ஆவேன். எனது கட்சி 20-ல் இருந்து 30 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்
ஒரே குடும்பத்தில் அண்ணன்-தம்பி இடையே நடந்து வரும் இந்த மோதல் பீகார் அரசியலை சூடாக்கி இருக்கிறது. தேஜ்பிரதாப் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் குடும்பத்தை விட்டும் அவர் பிரிந்தார். தற்போது அவருக்கு எதிரான விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மனு ஸ்மிரிதியை நம்பும் பாஜக-வின் மடியில் அமர்ந்து கொண்டிருக்கிறார் நிதிஷ் குமார்.
- ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர லோஹியா, கர்பூரி தாகூர் ஆகியோரை கைவிட்டுவிட்டார்.
காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதன்முறையாக பீகாரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராஜா பகாரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மனு ஸ்மிரிதியை நம்பும் பாஜக-வின் மடியில் அமர்ந்து கொண்டிருக்கிறார் நிதிஷ் குமார். ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா, கர்பூரி தாகூர் ஆகியோரை கைவிட்டுவிட்டார்.
அவரால் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகப் போராட முடியாது. தேர்தலுக்குப் பிறகு பாஜக அவரை முதல்வராக ஆக்கப்போவதில்லை என்பதை நிதிஷ் குமார் அறிந்திருக்கவில்லை. அவருக்குப் பதிலாக பாஜக-வைச் சேர்ந்த சில Chela (Foot Soldier)-க்களுக்கு பதவியை கொடுக்கும்.
பிரதமருக்கு உலகைச் சுற்றிப் பார்க்க நேரம் இருக்கிறது. ஆனால் சொந்த நாட்டில் உள்ள மாநிலங்களில் பிரச்சினைகளை பார்க்க நேரமில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே தென்படுகிறார். மாநகராட்சி தேர்தலில் கூட தெருக்களில் பிரதமர் மோடி கர்ஜிப்பதை உங்களால் பார்க்க முடியும். பீகார் தேர்தலில் மகனின் திருமணம் போல் பிசியாக இருக்கிறார்.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
- ஆர்.ஜே.டி அரசு பீகாரை கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கூடாரமாக மாற்றியது.
- நிதிஷ் குமார் செழிப்பான பாதைக்கு வழி வகுத்தார்.
பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சியாஹரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
சீதாமரியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-
* நக்சல்கள் இல்லாத பீகாரில் முதன்முறையாக வாக்காளர்கள் மாலை 5 மணி வரை வாக்களிக்க இருக்கிறார்கள். ஆர்ஜேடி-காங்கிரஸ் ஆட்சியின் கீழ், மாவோயிஸ்ட் பயம் காரணமாக வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி வரைதான் நடைபெற்றது.
* பாகிஸ்தானுக்கு எதிரான எதிர்கால ராணுவத் தாக்குதல்களில், பீகாரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் பாதுகாப்பு வழித்தடத்தில் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
* ஆர்ஜேடி அரசு பீகாரை கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கூடாரமாக மாற்றியது. நிதிஷ் குமார் செழிப்பான பாதைக்கு வழி வகுத்தார்.
* தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பீகாரில் மூடப்பட்ட அனைத்து சர்க்கரை ஆலைகளும் இரண்டரை ஆண்டுகளில் மீண்டும் திறக்கப்படும்.
* சீதாமரியில் உள்ள சீதா கோயில் மத, கலாச்சார, கல்வி மையமாக மாறும்
* லாலுவின் ஆட்சிக் காலத்தில் ஊழல்கள் நிறைந்திருந்ததாக இருந்தது. நிதிஷ் குமார்- நரேந்திர மோடி ஜோடி மட்டுமே பீகாரின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.
* லாலுவின் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு பீகாருக்கு ரூ.2.80 லட்சம் கோடி வழங்கிய நிலையில், 10 ஆண்டுகளில் ரூ.18.70 லட்சம் கோடியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
* நவம்பர் மாதம் 14ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, மதியம் 1 மணிக்கு பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும். ஆர்.ஜே.டி. தூக்கி எறியப்படும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
- ஆர்ஜேடி-யின் காட்டு ராஜ்ஜியத்தின் போது போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை.
- காங்கிரஸ் 'அரச குடும்பம்' பல வெளிநாட்டு விழாக்களைக் கொண்டாடுகிறது. ஆனால் சாத் பூஜையை நாடகம் என்கிறது.
பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று பிரதமர் மேதாடி சஹர்சாவில் நடைபெற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
* முதல் முறையாக வாக்களிப்பவர்கள், தங்களது வாக்குகள், பீகாரில் அடுத்த NDA அரசாங்கத்தை அமைப்பதற்கானது என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்
* இந்திய மகள்கள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளனர். இந்த வெற்றி நாட்டின் பெண்களின் தன்னம்பிக்கையை குறிக்கிறது
* ஒரு காலத்தில் 'பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ'வை கேலி செய்தவர்கள் இப்போது இந்தியாவின் மகள்களை அவமதித்ததைப் பற்றி சிந்திக்கிறார்கள்
* விகாஸ்க்கு (வளர்ச்சி) பெயர் பெற்றது தேசிய ஜனநாயக கூட்டணி. அதே நேரத்தில் 'வினாஷ்'க்கு (அழிவு) பெயர் பெற்றது ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ்.
* 2005 தேர்தல் தோல்விக்காக, பீகாரில் அனைத்து மத்திய திட்டங்களையும் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம் நிறுத்தி பழிவாங்கியது.
* கோசி நதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க நீண்டகால தீர்வுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
* வெளிநாட்டு பயணத்தின்போது உலகத் தலைவர்களுக்கு நான் மக்கானா (makhana) பெட்டிகளை பரிசளிக்கிறேன். இது பீகாரின் விவசாயிகளின் கடின உழைப்பு என்று அவர்களிடம் சொல்லப்படும்.
* ஆர்ஜேடி-யின் காட்டு ராஜ்ஜியத்தின் போது போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை. டிஎஸ்பி சத்யபால் சிங் சட்டத்தை மீறுவதற்கு எதிராக செயல்பட்டதால் சஹர்சாவில் கொலை செய்யப்பட்டார்.
* ஆட்சிக்கு வந்ததும் நாலந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் கட்டுவேன் என்று காங்கிரஸ் நாம்தார் (ராகுல்காந்தி) கூறுகிறார். பொய் சொல்வதற்கும் எல்லை உண்டு.
* நாலந்தா பல்கலைக்கழகத்தின் மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் அரசு ரூ.20 கோடி வழங்கிய நிலையில், நாங்கள் ரூ.2,000 கோடி செலவிட்டோம்.
* காங்கிரஸ் தொண்டர்கள் மிகவும் கோபமாக உள்ளனர். அவர்கள் ராஷ்டிரிய ஜனதா தளத்தை தோற்கடிக்க பணியாற்றுகிறார்கள்.
* காங்கிரஸ் 'அரச குடும்பம்' பல வெளிநாட்டு விழாக்களைக் கொண்டாடுகிறது. ஆனால் சாத் பூஜையை நாடகம் என்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






