என் மலர்
பெண்கள் மருத்துவம்
கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் காபி அருந்துவது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
காபி அருந்துவது சாதாரணமான ஒன்று. வீடு தேடிவரும் விருந்தினரை சிறப்பிக்கும் விதமாக காபி வழங்கப்படும். மனிதனின் வாழ்க்கையோடு காபி, கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டது.
காபியை அருந்துவதால் ஏற்படும் பலன்களை பற்றியும், அதன் மூலம் ஏற்படும் சில ஆரோக்கிய சீர்கேடுகளை பற்றியும் பலவிதமான ஆய்வுத்தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் காபி அருந்துவது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் காபி அருந்துவது குறித்து, சுவீடன் நாட்டில் சால்கிரென்ஸ்கா பல்கலைக்கழக பேராசிரியர் வெரெனா செங்பையீல் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.
50 ஆயிரத்து 943 கர்ப்பிணிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உலக அளவில் கர்ப்பிணி பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய சுகாதார ஆய்வில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
அதில் அதிகமாக காபி அருந்தும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிக எடையுடனோ அல்லது பருமனாகவும் இருக்கக்கூடும் என்ற தகவல் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. குறைவாக காபி எடுத்து கொண்ட தாய்மார்களை விட அதிக காபி எடுத்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு 5 வயது ஆகும்போது உடல் அதிக பருமனாகும் சாத்தியமும் உள்ளது. அதிக வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வயதில் அதிக எடையுடன் இருப்பர்.
எனவே, ஒரு நாளைக்கு அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் காபி பருகக்கூடாது என சுவீடனின் தேசிய உணவுக்கழகம் தெரிவித்துள்ளது.
காபியை அருந்துவதால் ஏற்படும் பலன்களை பற்றியும், அதன் மூலம் ஏற்படும் சில ஆரோக்கிய சீர்கேடுகளை பற்றியும் பலவிதமான ஆய்வுத்தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் காபி அருந்துவது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் காபி அருந்துவது குறித்து, சுவீடன் நாட்டில் சால்கிரென்ஸ்கா பல்கலைக்கழக பேராசிரியர் வெரெனா செங்பையீல் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.
50 ஆயிரத்து 943 கர்ப்பிணிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உலக அளவில் கர்ப்பிணி பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய சுகாதார ஆய்வில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
அதில் அதிகமாக காபி அருந்தும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிக எடையுடனோ அல்லது பருமனாகவும் இருக்கக்கூடும் என்ற தகவல் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. குறைவாக காபி எடுத்து கொண்ட தாய்மார்களை விட அதிக காபி எடுத்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு 5 வயது ஆகும்போது உடல் அதிக பருமனாகும் சாத்தியமும் உள்ளது. அதிக வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வயதில் அதிக எடையுடன் இருப்பர்.
எனவே, ஒரு நாளைக்கு அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் காபி பருகக்கூடாது என சுவீடனின் தேசிய உணவுக்கழகம் தெரிவித்துள்ளது.
இன்றைய காலத்தில் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நோய்தான் “பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்”. இந்த பிரச்சனைக்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நோய்தான் “பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்”. அல்முதிர் சினைமுட்டைகள் நோய்க்குறி அல்லது பலவுறை அண்ட நோய் (PCOS) என்பது, இனப்பெருக்க வயது பிரிவை சார்ந்த பெண்களிடையே காணப்படும் ஒரு பொதுவான கோளாறு ஆகும். டீன் ஏஜ் பருவ பெண்களுக்கு முன்னதாகவே நோய் கண்டறிவதற்கு பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியம்.
டீன்ஏஜ் வயது முதல் 45 வயது வரை இந்த நோய் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இந்த நோய்க்குறிகளால் ஒரு பெண்ணின் உறவினர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பாரானால், அந்தப்பெண்ணுக்கும் PCOS வருவதற்குரிய ஆபத்து ஏற்பட சாத்தியம் உள்ளது.
இதற்கான அறிகுறிகள் என்ன?
ஒழுங்கற்ற மாதவிடாய்
முகம் மற்றும் மார்பில் மிகையாக முடிகள் வளர்ந்திருத்தல்
எடை அதிகரிப்பு
முடியிழப்பு
எண்ணெய் வடியும் சருமம் அல்லது முகப்பரு.
PCOS ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஹார்மோனான இன்சுலின் அதிக அளவில் இருப்பது உட்பட, உடலில் இயல்புக்கு மாறான ஹார்மோன் அளவுகள் தொடர்பானது. PCOS உள்ள பல பெண்கள் இன்சுலின் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு அதிக அளவு ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இது, நுண்குமிழ் உருவாவதுடன் குறுக்கிடக்கூடிய டெஸ்டோடெரான்; (ஆண் ஹார்மோன்) போன்ற ஹார்மோன்களை அதிகளவு உற்பத்தி செய்வதற்கு பங்களிக்கிறது. இதன்மூலம் இயல்பான கரு உருவாகும் இயக்கத்தை தடுக்கிறது.

PCOS-ன் காரணமாக வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் ?
PCOS உள்ள பெண்களுக்கு, இதய நோய், பக்கவாதம் மற்றும் 2-ம் வகை நீரிழிவுநோய் (உயர் ரத்த சர்க்கரை), உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பல ஆண்டுகளாக ஒழுங்கற்ற மாதவிடாய் கொண்ட பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதன் மூலம் அல்லது கருப்பை உள்ளே ஹார்மோன் செறிவூட்டப்பட்ட அமைப்பின் மூலம் (IUS) குறைக்க முடியும்.
PCOS-க்கான சிகிச்சை முறைகள்
நீர்க்கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். அறுவை சிகிச்சை இல்லாமலும் இதனை சரி செய்ய முடியும். அது நம்முடைய வாழ்க்கைமுறை மாற்றங்கள் தொடர்புடையவை. உடல்பருமனுள்ள பெண்கள் எடையை குறைப்பதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். 5 சதவீதம் எடை குறைப்பு கூட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியம் (முற்றிலும் முழு கோதுமையில் தயாரிக்கப்படும் ரொட்டி, முழு தானியங்கள், பழுப்பரிசி போன்றவை) கொழுப்பற்ற உணவுகள், மீன் சேர்த்துக் கொள்வது அவசியம். முகத்தில் தேவையற்ற முடிவளர்ச்சி, ஒழங்குமுறையற்ற மாதவிடாய் மற்றும் கருவுறல் பிரச்சனைகளுக்கு மருந்துகளும் உள்ளன. ஆரம்பகட்டத்திலேயே மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் PCOS பிரச்னை உள்ள பெண்களும் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.
டீன்ஏஜ் வயது முதல் 45 வயது வரை இந்த நோய் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இந்த நோய்க்குறிகளால் ஒரு பெண்ணின் உறவினர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பாரானால், அந்தப்பெண்ணுக்கும் PCOS வருவதற்குரிய ஆபத்து ஏற்பட சாத்தியம் உள்ளது.
இதற்கான அறிகுறிகள் என்ன?
ஒழுங்கற்ற மாதவிடாய்
முகம் மற்றும் மார்பில் மிகையாக முடிகள் வளர்ந்திருத்தல்
எடை அதிகரிப்பு
முடியிழப்பு
எண்ணெய் வடியும் சருமம் அல்லது முகப்பரு.
PCOS ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஹார்மோனான இன்சுலின் அதிக அளவில் இருப்பது உட்பட, உடலில் இயல்புக்கு மாறான ஹார்மோன் அளவுகள் தொடர்பானது. PCOS உள்ள பல பெண்கள் இன்சுலின் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு அதிக அளவு ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இது, நுண்குமிழ் உருவாவதுடன் குறுக்கிடக்கூடிய டெஸ்டோடெரான்; (ஆண் ஹார்மோன்) போன்ற ஹார்மோன்களை அதிகளவு உற்பத்தி செய்வதற்கு பங்களிக்கிறது. இதன்மூலம் இயல்பான கரு உருவாகும் இயக்கத்தை தடுக்கிறது.

PCOS-ன் காரணமாக வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் ?
PCOS உள்ள பெண்களுக்கு, இதய நோய், பக்கவாதம் மற்றும் 2-ம் வகை நீரிழிவுநோய் (உயர் ரத்த சர்க்கரை), உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பல ஆண்டுகளாக ஒழுங்கற்ற மாதவிடாய் கொண்ட பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதன் மூலம் அல்லது கருப்பை உள்ளே ஹார்மோன் செறிவூட்டப்பட்ட அமைப்பின் மூலம் (IUS) குறைக்க முடியும்.
PCOS-க்கான சிகிச்சை முறைகள்
நீர்க்கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். அறுவை சிகிச்சை இல்லாமலும் இதனை சரி செய்ய முடியும். அது நம்முடைய வாழ்க்கைமுறை மாற்றங்கள் தொடர்புடையவை. உடல்பருமனுள்ள பெண்கள் எடையை குறைப்பதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். 5 சதவீதம் எடை குறைப்பு கூட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியம் (முற்றிலும் முழு கோதுமையில் தயாரிக்கப்படும் ரொட்டி, முழு தானியங்கள், பழுப்பரிசி போன்றவை) கொழுப்பற்ற உணவுகள், மீன் சேர்த்துக் கொள்வது அவசியம். முகத்தில் தேவையற்ற முடிவளர்ச்சி, ஒழங்குமுறையற்ற மாதவிடாய் மற்றும் கருவுறல் பிரச்சனைகளுக்கு மருந்துகளும் உள்ளன. ஆரம்பகட்டத்திலேயே மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் PCOS பிரச்னை உள்ள பெண்களும் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.
பெண்கள் வயதுக்கு வந்ததும் ஒவ்வொரு மாதமும் அவர்களின் கர்ப்பப்பை கர்ப்பம் தரிப்பதற்குத் தயாராகிறது. கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
முட்டை கருவுறுவதுதான் கர்ப்பப்பையின் முக்கியமான தருணம். கருவுற்ற முட்டை, கர்ப்பப்பையை அடையும்போது முட்டையின் மஞ்சள்பகுதி தீர்ந்துவிடுகிறது. உணர்விகளைப் பயன்படுத்தி முட்டை, கர்ப்பப்பை உள்ளடுக்கில் (எண்டோமெட்ரியம்) ஒட்டிக்கொள்கிறது.
கர்ப்பத்தின்போது எண்டோமெட்ரிய அடுக்கை `புரொஜெஸ்டிரான்’ பராமரிக்கிறது, சுருக்கங்களைக் குறைத்து, வழக்கத்துக்கு முன்னதாகப் பிரசவ வலி ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வளர்ச்சியையும், பால் சுரப்பையும் தூண்டுகிறது. ஏழாவது மாதத்தின்போதே 96 சதவீத சிசுக்கள் பிரசவத்துக்கு ஏதுவாக தலைகீழான நிலையை எட்டிவிடுகின்றன.
ஒன்பதாவது மாதத்தில், தொப்புள்கொடி ஓர் ஒரு கிலோ அமைப்பாக வளர்ந்து, சிசுவின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செரிமான அமைப்பாகச் செயல்படுகிறது. அதன் சவ்வு வடிகட்டும் அமைப்பு, தாயின் ரத்தத்தையும், குழந்தையின் ரத்தத்தையும் பிரிக்கிறது. நச்சுக்கொடி, சிசுவின் கழிவுகளை வெளியேற்றுகிறது.
கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் இவை…
டிஸ்மெனோரியா - மாதவிலக்குப் பிடிப்பு
பைப்ராய்ட்ஸ் - கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.
கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் - பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.
எண்டோமெட்ரியோசிஸ் - கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.
புரோலாப்ஸ்?- பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.
எக்டோபிக் கருவுறுதல் - கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக்குழாய் களில் கரு வளர்வது.
ஹிஸ்டீரக்டாமி (கர்ப்பப்பையை நீக்குவது) - கடுமையான, குணப்படுத்த முடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய், எண்டோமெட்ரியோசிஸ், புரோலாப்ஸ், தொடர்ச்சியான ரத்தப்போக்கின்போது இது பரிந்துரைக்கப்படுகிறது.
கர்ப்பப்பை புற்றுநோய் - மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே
கண்டுபிடித்துவிட்டால் 90 சதவீதம் குணப்படுத்திவிட முடியும். ஒழுங்கற்ற
ரத்தப்போக்கு, பொதுவான அறிகுறியாகும்.
பிற அபாய காரணிகள்:
* கர்ப்பப்பை உள்ளடுக்கின் அசாதாரண வளர்ச்சி
* குண்டாகுதல்
* `ஈஸ்ட்ரோஜன் ஒன்லி ஹார்மோன் தெரபி’யை பயன்படுத்துவது
* மார்பகப் புற்றுநோய் மருந்தான `டாமோக்சிபென்’னை பயன்படுத்துவது
* இடுப்புப் பகுதிக்குக் கதிர்வீச்சு சிகிச்சை
* குடும்ப பாரம்பரியம்
* குழந்தை இல்லாத பெண்களுக்கும், 12 வயதுக்கு முன் வயதுக்கு வந்தவர்களுக்கும், 55 வயது தாண்டியவர்களுக்கும் அதிக அபாயம் உண்டு.
கர்ப்பத்தின்போது எண்டோமெட்ரிய அடுக்கை `புரொஜெஸ்டிரான்’ பராமரிக்கிறது, சுருக்கங்களைக் குறைத்து, வழக்கத்துக்கு முன்னதாகப் பிரசவ வலி ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வளர்ச்சியையும், பால் சுரப்பையும் தூண்டுகிறது. ஏழாவது மாதத்தின்போதே 96 சதவீத சிசுக்கள் பிரசவத்துக்கு ஏதுவாக தலைகீழான நிலையை எட்டிவிடுகின்றன.
ஒன்பதாவது மாதத்தில், தொப்புள்கொடி ஓர் ஒரு கிலோ அமைப்பாக வளர்ந்து, சிசுவின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செரிமான அமைப்பாகச் செயல்படுகிறது. அதன் சவ்வு வடிகட்டும் அமைப்பு, தாயின் ரத்தத்தையும், குழந்தையின் ரத்தத்தையும் பிரிக்கிறது. நச்சுக்கொடி, சிசுவின் கழிவுகளை வெளியேற்றுகிறது.
கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் இவை…
டிஸ்மெனோரியா - மாதவிலக்குப் பிடிப்பு
பைப்ராய்ட்ஸ் - கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.
கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் - பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.
எண்டோமெட்ரியோசிஸ் - கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.
புரோலாப்ஸ்?- பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.
எக்டோபிக் கருவுறுதல் - கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக்குழாய் களில் கரு வளர்வது.
ஹிஸ்டீரக்டாமி (கர்ப்பப்பையை நீக்குவது) - கடுமையான, குணப்படுத்த முடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய், எண்டோமெட்ரியோசிஸ், புரோலாப்ஸ், தொடர்ச்சியான ரத்தப்போக்கின்போது இது பரிந்துரைக்கப்படுகிறது.
கர்ப்பப்பை புற்றுநோய் - மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே
கண்டுபிடித்துவிட்டால் 90 சதவீதம் குணப்படுத்திவிட முடியும். ஒழுங்கற்ற
ரத்தப்போக்கு, பொதுவான அறிகுறியாகும்.
பிற அபாய காரணிகள்:
* கர்ப்பப்பை உள்ளடுக்கின் அசாதாரண வளர்ச்சி
* குண்டாகுதல்
* `ஈஸ்ட்ரோஜன் ஒன்லி ஹார்மோன் தெரபி’யை பயன்படுத்துவது
* மார்பகப் புற்றுநோய் மருந்தான `டாமோக்சிபென்’னை பயன்படுத்துவது
* இடுப்புப் பகுதிக்குக் கதிர்வீச்சு சிகிச்சை
* குடும்ப பாரம்பரியம்
* குழந்தை இல்லாத பெண்களுக்கும், 12 வயதுக்கு முன் வயதுக்கு வந்தவர்களுக்கும், 55 வயது தாண்டியவர்களுக்கும் அதிக அபாயம் உண்டு.
கர்ப்ப காலத்தில் சாதாரண காய்ச்சலைத் தாண்டி, பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வருவது இயல்பானது. ஆனால், பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பத்தின் காரணமாக இவற்றின் விளைவுகள் கடுமையாகிவிடும் என்பதால் இந்த எச்சரிக்கை அவசியமாகிறது. சாதாரண காய்ச்சல் ஏற்படும்போது கர்ப்பிணிக்கோ, கருவில் வளரும் சிசுவுக்கோ அவ்வளவாக ஆபத்து ஏற்படுவதில்லை. அப்படியே ஆபத்து இருந்தாலும் இன்றைய நவீன சிகிச்சைகளால் அதை எளிதில் எதிர்கொள்ள முடியும்.
டெங்கு:
டெங்கு(Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் வருகிறது. கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் ஏற்பட்டால் ஆபத்துகள் அதிகம். குறைப்பிரசவம் ஆகவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும் அதிக வாய்ப்புண்டு. கர்ப்பிணியிடமிருந்து சிசுவுக்குக் கிருமிகள் பரவி, பிறக்கும் போதே குழந்தைக்கு டெங்கு வரலாம். கர்ப்பிணிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். வயிற்றிலும் நுரையீரலிலும் நீர் கோர்த்துக் கொள்ளலாம். கல்லீரலும் சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் குறைந்து கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து வரலாம்.
எனவே, தட்டணுக்கள் பரிசோதனை, ரத்த உறைவுக்கான பரிசோதனைகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, இந்த விபரீத விளைவுகளைத் தடுப்பதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பன்றிக்காய்ச்சல்:
இன்ஃபுளுயன்சா A (H1N1) என்னும் வைரஸ் கிருமியால் பன்றிக்காய்ச்சல் நோய் வருகிறது. கர்ப்பிணிகளை இது பாதித்தால், காய்ச்சல் கடுமையாவதுடன், மூச்சுக்குழாய் அழற்சிநோய், நிமோனியா, சுவாசத்தடை நோய்(ARDS), மூச்சுச்சிறுகுழாய் அழற்சி நோய், இதயத்தசை அழற்சி நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு என்று பலதரப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரிழப்பு வரை கொண்டு வந்துவிடும். இது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். குறிப்பாக, கருச்சிதைவு ஏற்படலாம். குறைப்பிரசவம் நேரலாம். குழந்தை இறந்தும் பிறக்கலாம்.
குழந்தைக்கு நரம்பு மண்டலத்தில் பிறவி ஊனங்கள் உண்டாகலாம். இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க, இந்த நோயுள்ளவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கர்ப்பிணிகள் முகத்தை மூடிக்கொள்வதற்கு முகமூடி அணிவதாக இருந்தால், மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடி அணிந்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.
வீரியம் குறைக்கப்பட்ட மூவகை நுண்ணுயிரித் தடுப்பூசி(Trivalent inactivated vaccine – TIV) பன்றிக்காய்ச்சலைத் தடுக்கிறது. கர்ப்பம் ஆவதற்கு முன்பும் இதைப் போட்டுக் கொள்ளலாம்; கர்ப்பம் ஆன பிறகும் இதைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால், இது ஓராண்டுக்குத்தான் நோயைத் தடுக்கும். எனவே, வருடா வருடம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறவர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் எப்போதும் வராது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்க ‘நேசல் ஸ்பிரே தடுப்பு மருந்து’ ஒன்று உள்ளது. இதை கர்ப்பிணிகள் பயன்படுத்தக் கூடாது.
டெங்கு:
டெங்கு(Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் வருகிறது. கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் ஏற்பட்டால் ஆபத்துகள் அதிகம். குறைப்பிரசவம் ஆகவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும் அதிக வாய்ப்புண்டு. கர்ப்பிணியிடமிருந்து சிசுவுக்குக் கிருமிகள் பரவி, பிறக்கும் போதே குழந்தைக்கு டெங்கு வரலாம். கர்ப்பிணிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். வயிற்றிலும் நுரையீரலிலும் நீர் கோர்த்துக் கொள்ளலாம். கல்லீரலும் சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் குறைந்து கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து வரலாம்.
எனவே, தட்டணுக்கள் பரிசோதனை, ரத்த உறைவுக்கான பரிசோதனைகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, இந்த விபரீத விளைவுகளைத் தடுப்பதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பன்றிக்காய்ச்சல்:
இன்ஃபுளுயன்சா A (H1N1) என்னும் வைரஸ் கிருமியால் பன்றிக்காய்ச்சல் நோய் வருகிறது. கர்ப்பிணிகளை இது பாதித்தால், காய்ச்சல் கடுமையாவதுடன், மூச்சுக்குழாய் அழற்சிநோய், நிமோனியா, சுவாசத்தடை நோய்(ARDS), மூச்சுச்சிறுகுழாய் அழற்சி நோய், இதயத்தசை அழற்சி நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு என்று பலதரப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரிழப்பு வரை கொண்டு வந்துவிடும். இது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். குறிப்பாக, கருச்சிதைவு ஏற்படலாம். குறைப்பிரசவம் நேரலாம். குழந்தை இறந்தும் பிறக்கலாம்.
குழந்தைக்கு நரம்பு மண்டலத்தில் பிறவி ஊனங்கள் உண்டாகலாம். இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க, இந்த நோயுள்ளவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கர்ப்பிணிகள் முகத்தை மூடிக்கொள்வதற்கு முகமூடி அணிவதாக இருந்தால், மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடி அணிந்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.
வீரியம் குறைக்கப்பட்ட மூவகை நுண்ணுயிரித் தடுப்பூசி(Trivalent inactivated vaccine – TIV) பன்றிக்காய்ச்சலைத் தடுக்கிறது. கர்ப்பம் ஆவதற்கு முன்பும் இதைப் போட்டுக் கொள்ளலாம்; கர்ப்பம் ஆன பிறகும் இதைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால், இது ஓராண்டுக்குத்தான் நோயைத் தடுக்கும். எனவே, வருடா வருடம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறவர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் எப்போதும் வராது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்க ‘நேசல் ஸ்பிரே தடுப்பு மருந்து’ ஒன்று உள்ளது. இதை கர்ப்பிணிகள் பயன்படுத்தக் கூடாது.
கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடல் பிரச்சனைகளில் மூல நோயும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
கர்ப்ப காலத்தில் உடல் நலன் மீது அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தாயின் நலம்தான் சிசுவின் நலனும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடல் பிரச்சனைகளில் மூல நோயும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
‘‘நமது ஆசனவாயில் ரத்தத்தாலும் நார்ச்சதையாலும் உண்டான மூன்று தூண்கள் இருக்கும். அதைத்தான் மூலம் என்று சொல்கிறோம். வயிற்றுக்கும் ரத்தத்தால் ஆன இத்தூண்களுக்கும் தொடர்பு இருக்கிறது. உள் வயிற்றில் அழுத்தம் அதிகரிக்கும்போது அந்த அழுத்தம் மூலத்தில் பரவி அதனை உப்பிப்போக வைக்கும். அப்படியாக கர்ப்ப காலத்தின் போது உள் வயிற்றில் அழுத்தம் அதிகரித்துக் காணப்படும். கர்ப்பப்பை பெரிதாக பெரிதாக வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் அழுத்தம் அதிகமாகும்.

ஏனென்றால் மலச்சிக்கலின் காரணமாக மலம் கழிப்பதற்காக முக்க வேண்டி வரும். இதனால் மூலத்தில் ரத்தக்கசிவு ஏற்படும். அதன் விளைவாக ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைத்து விட்டாலே மலச்சிக்கல் இருக்காது.
கர்ப்ப காலத்தில் தாய்க்கு இரத்த சோகை வருவது மிகவும் இயல்பானதுதான். ஏனென்றால் குழந்தைக்கு புதிய அணுக்களை தயாரிப்பதற்காக தாயின் ரத்தம் செலவிடப்படும். இதனால் இரும்புச் சத்து முற்றிலும் குறைந்து போய் விடும். 30 சதவிகிதம் வரை கர்ப்பிணிகளுக்கு இரத்தசோகை ஏற்படலாம். இதைத்தவிர அவர்களுக்கு மூலநோய் இருக்கும் நிலையில் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்தசோகை அதிகரித்து விடும்.
‘‘நமது ஆசனவாயில் ரத்தத்தாலும் நார்ச்சதையாலும் உண்டான மூன்று தூண்கள் இருக்கும். அதைத்தான் மூலம் என்று சொல்கிறோம். வயிற்றுக்கும் ரத்தத்தால் ஆன இத்தூண்களுக்கும் தொடர்பு இருக்கிறது. உள் வயிற்றில் அழுத்தம் அதிகரிக்கும்போது அந்த அழுத்தம் மூலத்தில் பரவி அதனை உப்பிப்போக வைக்கும். அப்படியாக கர்ப்ப காலத்தின் போது உள் வயிற்றில் அழுத்தம் அதிகரித்துக் காணப்படும். கர்ப்பப்பை பெரிதாக பெரிதாக வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் அழுத்தம் அதிகமாகும்.
இதனால் மூல நோய் இல்லாதவர்களுக்கு அது வரக்கூடும். ஏற்கனவே இருப்பவர்களுக்கு அதன் படிநிலை அதிகரிக்கக்கூடும். மலம் கழித்த பின் ஆசனவாயில் ரத்தம் வருதல் மற்றும் ஆசனவாய் ஓரத்தில் சில வீக்கங்கள் தெரிவது ஆகியவை இதற்கான ஆரம்பகால அறிகுறிகளாகும்.

இப்படியான அறிகுறிகள் தெரிய வரும்போது பயப்படத் தேவையில்லை. முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் மலச்சிக்கலின் காரணமாக மலம் கழிப்பதற்காக முக்க வேண்டி வரும். இதனால் மூலத்தில் ரத்தக்கசிவு ஏற்படும். அதன் விளைவாக ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைத்து விட்டாலே மலச்சிக்கல் இருக்காது.
கர்ப்ப காலத்தில் தாய்க்கு இரத்த சோகை வருவது மிகவும் இயல்பானதுதான். ஏனென்றால் குழந்தைக்கு புதிய அணுக்களை தயாரிப்பதற்காக தாயின் ரத்தம் செலவிடப்படும். இதனால் இரும்புச் சத்து முற்றிலும் குறைந்து போய் விடும். 30 சதவிகிதம் வரை கர்ப்பிணிகளுக்கு இரத்தசோகை ஏற்படலாம். இதைத்தவிர அவர்களுக்கு மூலநோய் இருக்கும் நிலையில் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்தசோகை அதிகரித்து விடும்.
தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கழுத்தில் மூச்சுக்குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.
தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர்.
இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்டு கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.
சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.
அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்.

தைராய்டு மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்டு பிரச்சினையால் தான். கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்டு பிரச்சினையை அதிகப்படுத்தும்.
மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.
டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.
ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர்.
இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்டு கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.
சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.
அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்.

தைராய்டு மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்டு பிரச்சினையால் தான். கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்டு பிரச்சினையை அதிகப்படுத்தும்.
மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.
டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.
ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பெண்களின் உடல் அமைப்பு காரணமாகவும் சில புற்றுநோய்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமானது கருப்பை, கருப்பை வாய் மற்றும் சினைப்பைபுற்றுநோய்கள்.
பெண்கள் உடல் சார்ந்த சில நோய்களையும், ஆரோக்கியப் பிரச்சனைகளையும் அதனால் அதிகரிக்கும் ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அப்படி பெண்கள் சந்திக்கும் சில நோய்களில் சினைப்பை புற்றுநோயும் ஒன்று. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உடலின் எந்த உறுப்பையும் விட்டுவைக்காமல் தாக்கும் குணம் கொண்டது புற்றுநோய்.
அப்படி பல்வேறு வகைகளும், பெயர்களும் கொண்ட புற்றுநோய்களில் பாலினம் சார்ந்து தாக்கும் புற்றுநோய்களும் சில உண்டு. குறிப்பாக, பெண்களின் உடல் அமைப்பு காரணமாகவும் சில புற்றுநோய்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமானது கருப்பை, கருப்பை வாய் மற்றும் சினைப்பைபுற்றுநோய்கள். இதில் பெண்களின் உயிரையே பறிக்கும் அளவு அச்சுறுத்தும் காரணியாக சினைப்பை புற்றுநோய் உலக அளவில் 5-வது இடத்தில் இருக்கிறது.
பெரும்பாலான சினைப்பை புற்றுநோய், சினைப்பையின் புற உறை காரணமாக வருகிறது. சில தீவிர நிகழ்வுகளில் இடுப்பறைக்குள் உள்ள பிற உறுப்புகளான அண்டக்குழாய், கருப்பை, சிறுநீர்பை, பெருங்குடல் போன்ற இடங்களுக்கும் பரவகாரணமாகிறது .
சினைப்பை புற்றுநோய்க்கான காரணங்கள்?
சினைப்பை புற்றுநோயை விளைவிக்கக்கூடிய காரணிகளில் குடும்ப வரலாறு(Family history) முக்கிய பங்கு வகிக்கிறது. நெருங்கிய சொந்தத்தில் இருக்கும் ஒருவர் சினைப்பை புற்றுநோய் அல்லது மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நபராக இருக்கும் பட்சத்தில், இவர்களுக்கும் இந்நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது.
மரபியல் காரணியாக, BRCA1 மற்றும் BRCA2 வகை மரபணு மாற்றம் ஏற்படும் பெண்கள் பாதிப்படையக்கூடிய வாய்ப்பு 50 சதவீதம் வரை இருக்கிறது. பொதுவாக, 65 வயதுக்கு அதிகமாக இருக்கும் பெண்கள், குழந்தைப் பேறின்மை அல்லது குழந்தைப்பேறு சம்பந்தமான சிகிச்சைகள் மேற்கொண்ட பெண்கள் மற்றும் மார்பகப்புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் வர அதிகம் வாய்ப்புள்ளது. மேலும், ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்வதன் மூலமும் சினைப்பை புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படும் ஆபத்து கொஞ்சம் அதிகரிக்கிறது.
இதுதவிர, பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பதும் சினைப்பை புற்றுநோய்க்கு காரணமாகிறது. சினைப்பை புற்றுநோய்க்கான தோற்றங்களும், அறிகுறிகளும் ஆரம்ப நிலையில் அடிக்கடி மறைந்து விடும் தன்மையுள்ளவை அல்லது மிக நுட்பமாகவும் தோன்றலாம். இதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது, காலம் கடந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது.
இடுப்பு வளையத்தில் வலி, முதுகு வலி, உடலுறவின்போது வலி, உடலின் கீழ் பகுதியில் வலி ஆரம்ப நிலையில் தோன்றும் அறிகுறிகள்.புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படத் தொடங்கும். எப்பொழுதும் உப்புசமாக இருப்பதாக உணர்தல், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் நலமற்று உணர்தல், வீக்கமான வயிறு, சிறிது உணவு உண்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு அல்லது பசியின்மை, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தேவை அல்லது சிறுநீரை வழக்கத்துக்கு மாறாக கட்டுப்படுத்த முடியாமை, மூச்சுத்திணறல் போன்றவையின் மூலம் கண்டுகொள்ளலாம்.
சினைப்பை புற்றுநோய் இருப்பதை பரிசோதனையில் எப்படி கண்டுபிடிப்பார்கள்?
முதலில் CA125 என்ற புரதத்தின் அளவை பரிசோதனை செய்து, பின்னர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்வது. பரிசோதனையின் முடிவுகள் சினைப்பை புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தால் நோயாளி ஒரு மகளிர் நலவியல் புற்றுநோய் நிபுணரை அணுகி, மற்ற பல தேவையான பரிசோதனைகளையும் கண்டறியும் முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சினைப்பை புற்றுநோய் சிகிச்சைகள் என்னென்ன?
சினைப்பை புற்றுநோய் சிகிச்சைக்கான வழிமுறைகள் நோயின் தன்மை மற்றும் பாதிப்பு சார்ந்து இருக்கும். புற்றுநோய் நிபுணர் ஒற்றைமுறை அல்லது பல்வேறு சிகிச்சை முறைகள் இணைந்த ஒரு சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம். அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றுவது பொதுவான அணுகுமுறை.
சில தீவிர நோய் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு கர்ப்பப்பை, அண்டக்குழாய், கருப்பை, கருப்பை. அருகிலுள்ள நிணநீர் முடிச்சுகள் மற்றும் உதரமடிப்பு ஆகியவற்றையும் சேர்த்து அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியதிருக்கும். இது முழு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை என்று அறியப்படும். கீமோதெரபி சிகிச்சையில் நோயாளிகளுக்கு குறிப்பாக கார்போப்ளாடின் மற்றும் பாக்லிடாக்செல் ஆகிய மருந்துகளின் கலவை நரம்புகள் ஊடாக செலுத்தப்படும்.
புற்றுநோய் அணுக்களுக்கு ஈஸ்ட்ரோஜென் கொண்டு செல்லப்படுவதை தடுத்து அவற்றின் வளர்ச்சியை குன்றச்செய்ய ஹார்மோன் சிகிச்சை சேர்த்து செய்யலாம்.இனப்பெருக்க அமைப்பில் புற்றுநோய் இருப்பதற்கான சுவடுகள் தென்பட்டால் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் சில சமயங்களில் கதிர்வீச்சு சிகிச்சையை பயன்படுத்தலாம், அனால் அதை மட்டும் தனியாக பயன்படுத்தக் கூடாது!
கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தமடையும் பல அறிகுறிகளையும் காட்டும். கடுமையான குமட்டல், வலியை ஏற்படுத்தும் மார்பக மற்றும் பாதங்களின் வீக்கம், கால் வலி போன்ற பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். இது ஆபத்தானதாக கருதப்பட்டாலும் கூட, அனைத்து நேரங்களிலும் இதனால் குழந்தையை இழந்து விட மாட்டோம். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் அறிந்து கொள்ளலாம்.
முதலில், கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லபோனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இரத்தத்தின் தோற்றமே (நிறம், அடர்த்தி, அளவு) பிரச்சனையின் அளவையும் கூறி விடும். "கருமையான சிகப்பு அல்லது பழுப்பு நிற இரத்தம் என்றால் பழமையானதாகும்.
இதனால் கர்ப்பத்தின் மீது தாக்கம் இருக்காது. அதனை ஸ்பாட்டிங்காக கருதுவார்கள். இது இயல்பான ஒன்றே. இதனால் கர்ப்பத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது. பிங்க் நிற சளி இரத்தம் என்றால் அது கருப்பை வாயிலிருந்து வெளியேற்றல், சிராய்ப்பு அல்லது வேறு சில பிரச்சனைகளால் வந்திருக்கும். அடர்த்தியான இரத்தம் என்றால் அது நற்பதமான இரத்தமாகும். இரத்த கசிவின் அளவை பொறுத்து கர்ப்பத்தின் மீது அது தாக்கத்தை கொண்டிருக்கும்.
இயல்பான ஒன்று. கருவுற்ற முட்டை கருப்பையின் உட்பூச்சில் இணைக்கப்படும் போது இது ஏற்படும். கருத்தரித்த 10-14 நாட்களுக்கு பிறகு இந்த கசிவை காணலாம்.
பொதுவாக இடுப்பு சோதனையின் போது இது கண்டறியப்படும். ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் அதிகரிப்பு, அழற்சி அல்லது கருப்பை வாயில் அடைக்கப்பட்ட இரத்த குழாய்கள் போன்றவைகளால் கருப்பை வாய் விழுது வளரும்.
எளிமையான முறையில் இந்த விழுதுகளை நீக்கி விடலாம். அவை குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது. இவையால் கர்ப்பமான ஆரம்ப கட்டத்தில் இரத்த கசிவு ஏற்படலாம். ஆனால் முதல் மூன்று மாதம் கழித்து கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.
மூன்றாம் மூன்று மாத காலத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான முக்கிய பொதுவான காரணம் இதுவாகும். கருப்பையின் கீழ்பகுதியில் நஞ்சுக்கொடி வளர்ந்து, கர்ப்பப்பை வாய் பாதையை மூடுவதால் இந்த பிரச்சனை தொடங்கும்.
இந்த பிரச்சனையை கண்டுபிடித்தவுடன் பெண்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வைக்கப்படுவார்கள். அதேப்போல் இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடுக்கப்படுவார்கள். கர்ப்ப காலம் முடியும் வரை இந்த பிரச்சனை தீரவில்லை என்றால், கண்டிப்பான முறையில் அறுவை சிகிச்சை மூலமாக தான் குழந்தை வெளியே எடுக்கப்படும்.
முதலில், கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லபோனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இரத்தத்தின் தோற்றமே (நிறம், அடர்த்தி, அளவு) பிரச்சனையின் அளவையும் கூறி விடும். "கருமையான சிகப்பு அல்லது பழுப்பு நிற இரத்தம் என்றால் பழமையானதாகும்.
இதனால் கர்ப்பத்தின் மீது தாக்கம் இருக்காது. அதனை ஸ்பாட்டிங்காக கருதுவார்கள். இது இயல்பான ஒன்றே. இதனால் கர்ப்பத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது. பிங்க் நிற சளி இரத்தம் என்றால் அது கருப்பை வாயிலிருந்து வெளியேற்றல், சிராய்ப்பு அல்லது வேறு சில பிரச்சனைகளால் வந்திருக்கும். அடர்த்தியான இரத்தம் என்றால் அது நற்பதமான இரத்தமாகும். இரத்த கசிவின் அளவை பொறுத்து கர்ப்பத்தின் மீது அது தாக்கத்தை கொண்டிருக்கும்.
இயல்பான ஒன்று. கருவுற்ற முட்டை கருப்பையின் உட்பூச்சில் இணைக்கப்படும் போது இது ஏற்படும். கருத்தரித்த 10-14 நாட்களுக்கு பிறகு இந்த கசிவை காணலாம்.
பொதுவாக இடுப்பு சோதனையின் போது இது கண்டறியப்படும். ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் அதிகரிப்பு, அழற்சி அல்லது கருப்பை வாயில் அடைக்கப்பட்ட இரத்த குழாய்கள் போன்றவைகளால் கருப்பை வாய் விழுது வளரும்.
எளிமையான முறையில் இந்த விழுதுகளை நீக்கி விடலாம். அவை குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது. இவையால் கர்ப்பமான ஆரம்ப கட்டத்தில் இரத்த கசிவு ஏற்படலாம். ஆனால் முதல் மூன்று மாதம் கழித்து கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.
மூன்றாம் மூன்று மாத காலத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான முக்கிய பொதுவான காரணம் இதுவாகும். கருப்பையின் கீழ்பகுதியில் நஞ்சுக்கொடி வளர்ந்து, கர்ப்பப்பை வாய் பாதையை மூடுவதால் இந்த பிரச்சனை தொடங்கும்.
இந்த பிரச்சனையை கண்டுபிடித்தவுடன் பெண்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வைக்கப்படுவார்கள். அதேப்போல் இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடுக்கப்படுவார்கள். கர்ப்ப காலம் முடியும் வரை இந்த பிரச்சனை தீரவில்லை என்றால், கண்டிப்பான முறையில் அறுவை சிகிச்சை மூலமாக தான் குழந்தை வெளியே எடுக்கப்படும்.
கர்ப்பமான காலத்தில் அதிக நேரம் பயணம் செய்ய வேண்டும் என ஆசைகள் இருப்பது இயல்பானது.. அவ்வாறு பயணம் செய்யும் காலத்தில் எந்த வகையில் உங்களை பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம்.
கர்ப்பமான காலத்திலிருந்து செய்ய கூடிய ஒவ்வொரு வேலையையும், அணுகுமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். அதிக நேரம் பயணம் செய்ய வேண்டும் என ஆசைகள் இருப்பது அனைத்து பெண்களுக்கும் இயல்பாக தோன்றகூடியது.. அவ்வாறு பயணம் செய்யும் காலத்தில் எந்த வகையில் உங்களை பாதுகாக்கலாம். இதோ உங்களுக்கான சில டிப்ஸ்
கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய பாதுகாப்பான மாதம் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதங்கள் வரை மட்டுமே பயணம் செய்துக் கொள்ளலாம்.. இந்த கால இடைவெளியில் உள்ள பெண்கள் காலை நேரத்தில் அதிக சுறுசுறுப்புடனும் மிகுந்த ஆற்றலுடன் செயல்படுதால் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது அனைத்து சூழ்நிலைகளையும் அவர்களால் எதிர்க்கொள்ளக்கூடிய ஆற்றல் இரண்டாவது முதல் ஆறாவது மாதம் உள்ள கர்ப்பிணிகளுக்கு இருக்கும்.
கர்ப்பமான ஆரம்பக்காலத்தில் அதிக தூரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அக்காலக்கட்டத்தில் தான் கரு வளர்ச்சி அடைகிறது. மேலும் நீங்கள் பயணம் செய்யும் போது குழந்தை அழிவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது உங்கள் உடல் நலமும் பாதிப்பிற்குள்ளாகும்.
நீங்கள் கருவுற்ற காலத்தில் பயணம் செய்யும் போது சுவாதினம் இல்லாத குழந்தை பிறக்க நேரிடலாம், கரு தவறுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளது.. ஒரு வேளை உங்களுக்கு இரட்டை குழந்தையாக இருப்பின் இரு குழந்தைகளும் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை கவனத்தில் கொண்டு பயணம் செய்ய முடிவெடுக்க வேண்டும்.
கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய கூடாது என்று சொல்வதற்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம் அல்லது புணர்புழை இரத்த ஒழுக்கு, கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், போன்றவை பயணம் ஒத்தி வைக்க பிற காரணங்களாக உள்ளன. நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பின் உங்கள் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செல்வது அவசியம்.
பயணம் பற்றி யோசிக்கும் போது ஏற்படக்கூடிய விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். சில கர்ப்பிணிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்வதால் கால்வீக்கம், பசியின்மை, தளர்வு ஏற்படும். மேலும் தேவையான மருந்துக்களை எடுத்து கொண்டு பயணம் செய்யலாம். பயணம் செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொண்டு பயணியுங்கள்..
கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய பாதுகாப்பான மாதம் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதங்கள் வரை மட்டுமே பயணம் செய்துக் கொள்ளலாம்.. இந்த கால இடைவெளியில் உள்ள பெண்கள் காலை நேரத்தில் அதிக சுறுசுறுப்புடனும் மிகுந்த ஆற்றலுடன் செயல்படுதால் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது அனைத்து சூழ்நிலைகளையும் அவர்களால் எதிர்க்கொள்ளக்கூடிய ஆற்றல் இரண்டாவது முதல் ஆறாவது மாதம் உள்ள கர்ப்பிணிகளுக்கு இருக்கும்.
கர்ப்பமான ஆரம்பக்காலத்தில் அதிக தூரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அக்காலக்கட்டத்தில் தான் கரு வளர்ச்சி அடைகிறது. மேலும் நீங்கள் பயணம் செய்யும் போது குழந்தை அழிவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது உங்கள் உடல் நலமும் பாதிப்பிற்குள்ளாகும்.
நீங்கள் கருவுற்ற காலத்தில் பயணம் செய்யும் போது சுவாதினம் இல்லாத குழந்தை பிறக்க நேரிடலாம், கரு தவறுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளது.. ஒரு வேளை உங்களுக்கு இரட்டை குழந்தையாக இருப்பின் இரு குழந்தைகளும் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை கவனத்தில் கொண்டு பயணம் செய்ய முடிவெடுக்க வேண்டும்.
கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய கூடாது என்று சொல்வதற்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம் அல்லது புணர்புழை இரத்த ஒழுக்கு, கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், போன்றவை பயணம் ஒத்தி வைக்க பிற காரணங்களாக உள்ளன. நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பின் உங்கள் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செல்வது அவசியம்.
பயணம் பற்றி யோசிக்கும் போது ஏற்படக்கூடிய விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். சில கர்ப்பிணிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்வதால் கால்வீக்கம், பசியின்மை, தளர்வு ஏற்படும். மேலும் தேவையான மருந்துக்களை எடுத்து கொண்டு பயணம் செய்யலாம். பயணம் செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொண்டு பயணியுங்கள்..
ஞாபகமறதி நோய் என்று எல்லோராலும் அறியப்படுகிற அல்ஸைமர் நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இந்த நோய் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது.
ஞாபகமறதி நோய் என்று எல்லோராலும் அறியப்படுகிற அல்ஸைமர் நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இந்நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நோய் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பொதுவாக பெண்களை பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால், சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்ஸைமரே பெண்களை அதிகம் பாதிக்கிறது.
அல்ஸைமரில் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் வயது ஏற ஏற இந்நோய் பாதிப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வயதானாலே அல்ஸைமர் வந்துவிடும் என கருதுவது தவறு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
பெண்களிடையே காணப்படும் மன அழுத்தப் பிரச்சனையும் அல்ஸைமருக்கு வழி வகுக்கிறது. பிரசவ கால சிக்கல்கள், மாதவிடாயை அறுவை சிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்ஸைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள் மற்றும் காரணிகளும் இந்நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக் கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்ஸைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்கிறார் ஆரோக்கிய உடற்கூறியியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர்.
பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்ஸைமர் குறித்த விரிவான தகவல்களை வெளியிட்டதுடன், பாலின அடிப்படையில் இந்நோய்க்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அல்ஸைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் உள்ள மனரீதியான வெளிப்பாடுகள் மற்றும் அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுவதாக இந்த ஆலோசனைக்குழு தெரிவித்திருக்கிறது. இவற்றைக் கொண்டு அல்ஸைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.
மூளையில் சேர்ந்துள்ள இருவகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்ஸைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை.
ஆனால், அல்ஸைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வந்துள்ளது. ஆண்களைவிட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது.
பொதுவாக பெண்களை பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால், சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்ஸைமரே பெண்களை அதிகம் பாதிக்கிறது.
அல்ஸைமரில் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் வயது ஏற ஏற இந்நோய் பாதிப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வயதானாலே அல்ஸைமர் வந்துவிடும் என கருதுவது தவறு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
பெண்களிடையே காணப்படும் மன அழுத்தப் பிரச்சனையும் அல்ஸைமருக்கு வழி வகுக்கிறது. பிரசவ கால சிக்கல்கள், மாதவிடாயை அறுவை சிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்ஸைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள் மற்றும் காரணிகளும் இந்நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக் கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்ஸைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்கிறார் ஆரோக்கிய உடற்கூறியியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர்.
பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்ஸைமர் குறித்த விரிவான தகவல்களை வெளியிட்டதுடன், பாலின அடிப்படையில் இந்நோய்க்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அல்ஸைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் உள்ள மனரீதியான வெளிப்பாடுகள் மற்றும் அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுவதாக இந்த ஆலோசனைக்குழு தெரிவித்திருக்கிறது. இவற்றைக் கொண்டு அல்ஸைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.
மூளையில் சேர்ந்துள்ள இருவகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்ஸைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை.
ஆனால், அல்ஸைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வந்துள்ளது. ஆண்களைவிட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது.
ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதற்கான காரணங்களையும், தீர்வையை அறிந்து கொள்ளலாம்.
ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து காணப்படும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது.
பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, `சிசேரியன்’ எனப்படும் மகப்பேறு கால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
அடுத்ததாக, பெண்களுக்கு வயது ஏற ஏற, எடை கூடுவது இயற்கையான ஒன்று. இப்படி எடை கூடுவது அவர்களது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது. ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில், மாதம் ஆகஆக அவளது வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி வலுவிழக்கச் செய்கிறது.
இப்படித்தான் பெண்களுக்கு பெரும்பாலும் குடலிறக்கப் பாதிப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு குடலிறக்கம் ஏற்பட சில பொதுவான காரணங்களும் உள்ளன.
இயற்கை கடன்களைக் கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டாலும் அதன் காரணமாகவும் ஒருவருக்கு குடலிறக்கம் ஏற்படும்.
ஒருவர் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இருமினாலும் கூட குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருமல் ஏற்படும்போது, வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிப்பதுதான் அதற்கு காரணம்.
தடுப்பு முறைகள்
பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்படும்போது இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்காக சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த வலை திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்த பகுதிக்கு வலுவூட்டுகிறது.
இயற்கைக் கடன்களை கழிக்கும்போது தேவையில்லாமல் சிரமப்படுவதை (முக்குவது) தவிர்த்தாலும் குடலிறக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து காணப்படும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது.
பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, `சிசேரியன்’ எனப்படும் மகப்பேறு கால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
அடுத்ததாக, பெண்களுக்கு வயது ஏற ஏற, எடை கூடுவது இயற்கையான ஒன்று. இப்படி எடை கூடுவது அவர்களது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது. ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில், மாதம் ஆகஆக அவளது வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி வலுவிழக்கச் செய்கிறது.
இப்படித்தான் பெண்களுக்கு பெரும்பாலும் குடலிறக்கப் பாதிப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு குடலிறக்கம் ஏற்பட சில பொதுவான காரணங்களும் உள்ளன.
இயற்கை கடன்களைக் கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டாலும் அதன் காரணமாகவும் ஒருவருக்கு குடலிறக்கம் ஏற்படும்.
ஒருவர் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இருமினாலும் கூட குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருமல் ஏற்படும்போது, வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிப்பதுதான் அதற்கு காரணம்.
தடுப்பு முறைகள்
பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்படும்போது இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்காக சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த வலை திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்த பகுதிக்கு வலுவூட்டுகிறது.
இயற்கைக் கடன்களை கழிக்கும்போது தேவையில்லாமல் சிரமப்படுவதை (முக்குவது) தவிர்த்தாலும் குடலிறக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.
தாம்பத்தியம் ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.
மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்ச்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.
நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.
ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.
இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது.
மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்ச்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.
நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.
ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.
இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது.






