என் மலர்
பெண்கள் மருத்துவம்
கர்ப்பக்காலம் முழுவதுமே என்ன செய்தாலும் மிக கவனமாக எதிர்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் தூங்கும் போது இந்த பக்கமாக படுத்தால் கருவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கர்ப்பக்காலம் முழுவதுமே என்ன செய்தாலும் மிக கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வதுண்டு. இன்பமான கால கட்டம் என்றாலும் அதிகப்படியான உபாதையால் அவை மன அழுத்தம் வரை கொண்டு சென்றுவிடும் என்பதால் தான் உணவு முதல் அன்றாட பழக்க வழக்கங்கள் வரை ஒவ்வொன்றிலும் கவனமாக இருக்கும்படி மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு அவசியமானது. சாதாரணமாக ஒருவர் உறங்கும் போது, இடது புறமாக படுத்து உறங்குவது சிறந்தது என்பார்கள். கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மல்லாந்து படுக்கும் போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் குப்புற படுக்கக் கூடாது. இரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு பிறகு உறங்க செல்லலாம்.
பெண்கள் கருவுற்றிருக்கும் போது உறங்குவது என்பதே கடினமான ஒன்று. அப்படி நீங்கள் படுக்கும் போதும், வெப்பமாகவும், அசௌகர்யமாகவும், இடுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் அதிகப்படியான நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்.
மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் தூங்கும் போது இடது பக்கமாக தூங்கினால், இதயம், கருப்பைக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இடது பக்கத்தில் தூங்கும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், இது கால்களில் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.
இடதுபக்கத்திலிருந்து அவ்வப்போது ஒரு மணி நேரம் என்ற கணக்கில் வலது புறம் படுக்கலாம். ஆனால் பெரும்பாலும் கர்ப்பிணிகள் இடது பக்கம் தூங்குவதே நல்லது.
கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு அவசியமானது. சாதாரணமாக ஒருவர் உறங்கும் போது, இடது புறமாக படுத்து உறங்குவது சிறந்தது என்பார்கள். கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மல்லாந்து படுக்கும் போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் குப்புற படுக்கக் கூடாது. இரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு பிறகு உறங்க செல்லலாம்.
பெண்கள் கருவுற்றிருக்கும் போது உறங்குவது என்பதே கடினமான ஒன்று. அப்படி நீங்கள் படுக்கும் போதும், வெப்பமாகவும், அசௌகர்யமாகவும், இடுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் அதிகப்படியான நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்.
மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் தூங்கும் போது இடது பக்கமாக தூங்கினால், இதயம், கருப்பைக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இடது பக்கத்தில் தூங்கும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், இது கால்களில் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.
இடதுபக்கத்திலிருந்து அவ்வப்போது ஒரு மணி நேரம் என்ற கணக்கில் வலது புறம் படுக்கலாம். ஆனால் பெரும்பாலும் கர்ப்பிணிகள் இடது பக்கம் தூங்குவதே நல்லது.
பெண்கள் இப்போது பத்து வயதில்கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள். சிறுவயதிலே உங்கள் மகள் வயதுக்கு வருவதை தவிர்க்கவேண்டும் என்றால், நாலைந்து வயதில் இருக்கும் உங்கள் மகள்களை இப்போதே கவனித்து வளருங்கள்.
பெண்கள் தங்கள் அழகை ஆராதித்தாலும், அத்தகைய அழகுக்காக தங்கள் உடல் எத்தகைய மாற்றங்களை சந்தித்திருக்கிறது? ஒவ்வொரு உறுப்புகளும் வளர்ச்சியை பெற என்ன காரணம்? அந்த வளர்ச்சியால் உடலுக்கு என்ன பலன்? திருமணத்திற்கு பின்பு வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க பெண்களின் உடல் உறுப்புகள் எப்படி காரணமாக இருக்கின்றன? தாய்மை அடைய அந்த உறுப்புகள் அவளுக்கு எப்படி உதவுகின்றன? என்பதெல்லாம் பெரும்பாலான பெண்களுக்கு தெரியாத ரகசியங்களாகவும், அதிசயங்களாகவும்தான் இருக்கின்றன.
பெண்களின் உடலில் அதிசயிக்கத்தக்க அளவில் பெரிய மாற்றங்கள் அவர்கள் வயதுக்கு வரும்போதுதான் நிகழ்கிறது. இப்போது பத்துவயதிலே சில சிறுமிகள் வயதுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் 20 வயதுக்குரிய உடல் வளர்ச்சியை பெற்றிருக்கிறார்கள். 10 வயது பெண்ணுக்கு, 20 வயதுக்குரிய உடல் வளர்ச்சி ஏற்படுவது அவளுக்கான பிரச்சினையாக மட்டும் இல்லாமல் சமூகத்திற்கான பிரச்சினையாகவும் மாறிவிடுகிறது.
இப்போது பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு குழந்தையே போதும் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். அந்த ஒரே ஒரு குழந்தையும் பெண்ணாக இருந்தால், அதை செல்லக் குழந்தையாக்கி விரும்பியதை எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள். ருசிக்காக அளவுக்கு அதிகமான கொழுப்பு அடங்கிய உணவை சிறுமிகள் சாப்பிடும்போது அவர்களது உடல், தேவைக்கு அதிகமான வளர்ச்சியை பெற்றுவிடுகிறது. அப்போது அவர்களது கொழுப்பில் இருந்து ‘லெப்டின்’ என்ற ஹார்மோன் உருவாகும். அதுவே மூளையில் தூண்டுதலை உருவாக்கி, பால்ய வயதிலேயே சிறுமிகள் பருவமடைந்துவிடும் சூழலை உருவாக்குகிறது.
பருவமடைதல் என்பது திடீரென்று உடலுக்குள் நடக்கும் ‘மேஜிக்’ போன்ற நிகழ்வு அல்ல. உடலுக்குள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அதற்குரிய வளர்ச்சி மாற்றங்கள் படிப்படியாக நடந்துகொண்டிருக்கும். அவை அத்தனையும் இயற்கையான முறையில் நடந்து முடிந்துவிட்டது என்பதை பருவமடைதல் வெளிப்படையாக உணர்த்துகிறது. பெண்களைப் பொறுத்தவரையில் மார்பக வளர்ச்சி, மறைவிடங்களில் ரோம வளர்ச்சி, இனப்பெருக்க உறுப்புகளின் மேம்பாடு, உடல் உயரமாகுதல், பூசி மெழுகினாற்போன்று அழகு கூடுதல் போன்றவைகள் அவர்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகளாக அமைகின்றன.
ஒரு சிறுமி வயதுக்கு வந்துவிட்டாள் என்றால், அப்போதே அவளது இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி நிலையை அடைந்துவிட்டன என்று அர்த்தம். அடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் அந்த உறுப்புகள் முழு வளர்ச்சியை எட்டிவிடும். அப்போது அவளது உடலும், எண்ணங்களும் குழப்பத்துடன் காணப்படும். அவளது குழப்பத்தை ஒருசிலர் தவறாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும். அதனால்தான் 13, 14 வயதிலேயே ஒருசில சிறுமிகள் கர்ப்பிணியாகிவிடும் சமூக அவலமும் நடக்கிறது.
ஒரு சிறுமி எத்தனை வயதாக இருந்தாலும், அவள் உடல் பிரமிக்கவைக்கும் வளர்ச்சியை பெற்றிருந்தாலும், பெற்றோர் மட்டும்தான் அவளை எப்போதும் தங்கள் மகளாகப் பார்ப்பார்கள். ஆனால் சமூகமும் தன் கண்களால் அப்படித்தான் பார்க்கும் என்று பெற்றோர்கள் கருதுவது தவறு. சிறிய வயதிலேயே அதிக உடல் வளர்ச்சியை பெற்றிருக்கும் சிறுமிகளை சமூகத்தின் எல்லா கண்களும் நல்லவிதமாக பார்ப்பதில்லை.
முன்பு 15 வயதுகளில் பெண்கள் பருவமடைந்தார்கள். இப்போது பத்து வயதில்கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள். அது அவர்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சிறுவயதிலே உங்கள் மகள் வயதுக்கு வருவதை தவிர்க்கவேண்டும் என்றால், நாலைந்து வயதில் இருக்கும் உங்கள் மகள்களை இப்போதே கவனித்து வளருங்கள்.
மகள்களுக்கு கண்ட உணவுகளையும் வாங்கிக்கொடுக்கவேண்டாம். சிறுவயதிலே வயதுக்கு வரும் சிறுமிகளில் பெரும்பாலானவர்கள் உயரம் குறைந்தவர்களாக, குட்டையாக, பருத்த உருவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், குண்டான சிறுமிகளை மைதான வெளி விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் பொருத்தமான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிக்கச்செய்யுங்கள்.
பொருத்தமான வயதில் பருவமடையும் பெண்களின் உடல் நலமும், மனநலமும் சிறப்பாக இருக்கும். அவர்களது உடலும் கட்டுக்கோப்பான அழகுடன் காணப்படும். திருமணத்திற்கு பிறகு அவர்கள் தாய்மை அடைவதிலும் நெருக்கடிகள் தோன்றாது.
பெண்களின் உடலில் அதிசயிக்கத்தக்க அளவில் பெரிய மாற்றங்கள் அவர்கள் வயதுக்கு வரும்போதுதான் நிகழ்கிறது. இப்போது பத்துவயதிலே சில சிறுமிகள் வயதுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் 20 வயதுக்குரிய உடல் வளர்ச்சியை பெற்றிருக்கிறார்கள். 10 வயது பெண்ணுக்கு, 20 வயதுக்குரிய உடல் வளர்ச்சி ஏற்படுவது அவளுக்கான பிரச்சினையாக மட்டும் இல்லாமல் சமூகத்திற்கான பிரச்சினையாகவும் மாறிவிடுகிறது.
இப்போது பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு குழந்தையே போதும் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். அந்த ஒரே ஒரு குழந்தையும் பெண்ணாக இருந்தால், அதை செல்லக் குழந்தையாக்கி விரும்பியதை எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள். ருசிக்காக அளவுக்கு அதிகமான கொழுப்பு அடங்கிய உணவை சிறுமிகள் சாப்பிடும்போது அவர்களது உடல், தேவைக்கு அதிகமான வளர்ச்சியை பெற்றுவிடுகிறது. அப்போது அவர்களது கொழுப்பில் இருந்து ‘லெப்டின்’ என்ற ஹார்மோன் உருவாகும். அதுவே மூளையில் தூண்டுதலை உருவாக்கி, பால்ய வயதிலேயே சிறுமிகள் பருவமடைந்துவிடும் சூழலை உருவாக்குகிறது.
பருவமடைதல் என்பது திடீரென்று உடலுக்குள் நடக்கும் ‘மேஜிக்’ போன்ற நிகழ்வு அல்ல. உடலுக்குள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அதற்குரிய வளர்ச்சி மாற்றங்கள் படிப்படியாக நடந்துகொண்டிருக்கும். அவை அத்தனையும் இயற்கையான முறையில் நடந்து முடிந்துவிட்டது என்பதை பருவமடைதல் வெளிப்படையாக உணர்த்துகிறது. பெண்களைப் பொறுத்தவரையில் மார்பக வளர்ச்சி, மறைவிடங்களில் ரோம வளர்ச்சி, இனப்பெருக்க உறுப்புகளின் மேம்பாடு, உடல் உயரமாகுதல், பூசி மெழுகினாற்போன்று அழகு கூடுதல் போன்றவைகள் அவர்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகளாக அமைகின்றன.
ஒரு சிறுமி வயதுக்கு வந்துவிட்டாள் என்றால், அப்போதே அவளது இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி நிலையை அடைந்துவிட்டன என்று அர்த்தம். அடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் அந்த உறுப்புகள் முழு வளர்ச்சியை எட்டிவிடும். அப்போது அவளது உடலும், எண்ணங்களும் குழப்பத்துடன் காணப்படும். அவளது குழப்பத்தை ஒருசிலர் தவறாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும். அதனால்தான் 13, 14 வயதிலேயே ஒருசில சிறுமிகள் கர்ப்பிணியாகிவிடும் சமூக அவலமும் நடக்கிறது.
ஒரு சிறுமி எத்தனை வயதாக இருந்தாலும், அவள் உடல் பிரமிக்கவைக்கும் வளர்ச்சியை பெற்றிருந்தாலும், பெற்றோர் மட்டும்தான் அவளை எப்போதும் தங்கள் மகளாகப் பார்ப்பார்கள். ஆனால் சமூகமும் தன் கண்களால் அப்படித்தான் பார்க்கும் என்று பெற்றோர்கள் கருதுவது தவறு. சிறிய வயதிலேயே அதிக உடல் வளர்ச்சியை பெற்றிருக்கும் சிறுமிகளை சமூகத்தின் எல்லா கண்களும் நல்லவிதமாக பார்ப்பதில்லை.
முன்பு 15 வயதுகளில் பெண்கள் பருவமடைந்தார்கள். இப்போது பத்து வயதில்கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள். அது அவர்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சிறுவயதிலே உங்கள் மகள் வயதுக்கு வருவதை தவிர்க்கவேண்டும் என்றால், நாலைந்து வயதில் இருக்கும் உங்கள் மகள்களை இப்போதே கவனித்து வளருங்கள்.
மகள்களுக்கு கண்ட உணவுகளையும் வாங்கிக்கொடுக்கவேண்டாம். சிறுவயதிலே வயதுக்கு வரும் சிறுமிகளில் பெரும்பாலானவர்கள் உயரம் குறைந்தவர்களாக, குட்டையாக, பருத்த உருவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், குண்டான சிறுமிகளை மைதான வெளி விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் பொருத்தமான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிக்கச்செய்யுங்கள்.
பொருத்தமான வயதில் பருவமடையும் பெண்களின் உடல் நலமும், மனநலமும் சிறப்பாக இருக்கும். அவர்களது உடலும் கட்டுக்கோப்பான அழகுடன் காணப்படும். திருமணத்திற்கு பிறகு அவர்கள் தாய்மை அடைவதிலும் நெருக்கடிகள் தோன்றாது.
கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது கருவிற்கு எந்த பாதிப்பும் வராமல் தடுக்க உதவும். கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகள் பற்றி விவரமாக அறிந்து கொள்ளலாம்.
கர்ப்ப கால தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்து ரத்னா மருத்துவமனையின் டாக்டர் சாந்தி மகிழன் கூறியதாவது:-
தடுப்பூசிகள் ஏன் பயன்படுத்துகிறோம் என்றால், தந்தையின் குரோமோசோம்களை பாதி பெற்றிருக்கும் குழந்தையை ஏற்று கொள்ளும் விதமாக தாய்க்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். இதனால் தாய், குழந்தை ஆகிய இருவருக்கும் நோய் தொற்று எளிதாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தடுக்க தாய் மூலமாக எதிர்ப்பு சக்தி அளிப்பதற்காக தாய்க்கு தடுப்பூசி போடப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகள் விவரம் வருமாறு:-
தொண்டை ஒவ்வாமை நோய், டெட்டனஸ், கக்குவான் இருமல் தடுப்பூசி, TT தடுப்பூசிக்கு பதிலாக 2018-ம் ஆண்டு முதல் TD (Tetenus. Diphtheria) தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2. Influenza எனப்படும் ப்ளூ தடுப்பூசி. மற்ற பெண்களை விட கர்ப்பிணிகளை அதிகம் தாக்கும் எனவே அதற்கு ப்ளூ தடுப்பூசி போட வேண்டும்.
தற்போது Quadrivalent Vaccine தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசியை கர்ப்பத்தின் எந்த காலத்திலும் போட்டு கொள்ளலாம். வைரஸ் கிருமிகளின் மாற்றத்துக்கு ஏற்ப அடிக்கடி புது வகை தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படும். அந்தந்த காலத்திற்கு ஏற்ற புதுவகை தடுப்பூசிகளை போட்டு கொள்வது முக்கியம்.
பிரத்யேக சூழல்களில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள்
1. Hepatitis A Vaccine
2. Hepatitis B Vaccine
3. மூளைக்காய்ச்சல் தடுப்பூசி (Meningococcal Vaccine)
மஞ்சள் காய்ச்சல் பரவலாக காணப்படும் பகுதிகளுக்கு அதாவது ஆப்ரிக்காவுக்கு பயணம் செய்யும் கர்ப்பிணிகள் டாக்டரின் ஆலோசனை மற்றும் கண்காணிப்பில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி (Yellow fever Vaccine) போட்டு கொள்ள வேண்டும். நாய்க்கடி ஏற்பட்ட கர்ப்பிணிகள் (Post Exposure Prophy Laxis Rabies Vaccine) நாய்க்கடி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். நோய் வந்த பின் வருந்துவதை விட வருமுன் காத்து தாய்-சேய் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தடுப்பூசிகள் ஏன் பயன்படுத்துகிறோம் என்றால், தந்தையின் குரோமோசோம்களை பாதி பெற்றிருக்கும் குழந்தையை ஏற்று கொள்ளும் விதமாக தாய்க்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். இதனால் தாய், குழந்தை ஆகிய இருவருக்கும் நோய் தொற்று எளிதாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தடுக்க தாய் மூலமாக எதிர்ப்பு சக்தி அளிப்பதற்காக தாய்க்கு தடுப்பூசி போடப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகள் விவரம் வருமாறு:-
தொண்டை ஒவ்வாமை நோய், டெட்டனஸ், கக்குவான் இருமல் தடுப்பூசி, TT தடுப்பூசிக்கு பதிலாக 2018-ம் ஆண்டு முதல் TD (Tetenus. Diphtheria) தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2. Influenza எனப்படும் ப்ளூ தடுப்பூசி. மற்ற பெண்களை விட கர்ப்பிணிகளை அதிகம் தாக்கும் எனவே அதற்கு ப்ளூ தடுப்பூசி போட வேண்டும்.
தற்போது Quadrivalent Vaccine தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசியை கர்ப்பத்தின் எந்த காலத்திலும் போட்டு கொள்ளலாம். வைரஸ் கிருமிகளின் மாற்றத்துக்கு ஏற்ப அடிக்கடி புது வகை தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படும். அந்தந்த காலத்திற்கு ஏற்ற புதுவகை தடுப்பூசிகளை போட்டு கொள்வது முக்கியம்.
பிரத்யேக சூழல்களில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள்
1. Hepatitis A Vaccine
2. Hepatitis B Vaccine
3. மூளைக்காய்ச்சல் தடுப்பூசி (Meningococcal Vaccine)
மஞ்சள் காய்ச்சல் பரவலாக காணப்படும் பகுதிகளுக்கு அதாவது ஆப்ரிக்காவுக்கு பயணம் செய்யும் கர்ப்பிணிகள் டாக்டரின் ஆலோசனை மற்றும் கண்காணிப்பில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி (Yellow fever Vaccine) போட்டு கொள்ள வேண்டும். நாய்க்கடி ஏற்பட்ட கர்ப்பிணிகள் (Post Exposure Prophy Laxis Rabies Vaccine) நாய்க்கடி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். நோய் வந்த பின் வருந்துவதை விட வருமுன் காத்து தாய்-சேய் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும் என்று தெரிவதில்லை. அதிக நேரம் ‘சானிட்டரி நாப்கின்’ மாற்றாவிட்டால் பல்வேறு உடல் பிரச்சனைகள் வரலாம்.
பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களை சமாளிக்க எப்பொழுதும் சுகாதார நாப்கின்களையே சார்ந்து உள்ளனர். தற்போது நாப்கின்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்.
சானிட்டரி நாப்கின், டம்பான்கள் மற்றும் மாதவிடாய் கப் என அனைத்தும் தற்போது கிடைக்கிறது. ஆனால் இதில் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துவது சானிட்டரி நாப்கின்களைத் தான். ஏனெனில் சானிட்டரி நாப்கின்களை ரீமூவ் செய்வதும் பயன்படுத்துவதும் எளிது. நம்மில் பெரும்பாலனோர் சானிட்டரி நாப்கின்கள் முற்றிலும் பாதுகாப்பானது என்று நினைக்கின்றனர்.
பெண்கள் மாதவிலக்கு காலகட்டத்தில் (28 நாட்களுக்கு ஒரு முறை) சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் ஏனெனில் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். மாதவிலக்கு நாட்களில் 3 முதல் 5 மணி நேரத்திற்குள் ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும். அந்தப் பகுதியை நன்றாக சுத்தம் செய்யவும் வேண்டும்.
உங்க மாதவிடாய் காலங்களில் இரத்த போக்கு இல்லாவிட்டால் கூட ஒவ்வொரு 3-4 மணி நேரத்திற்கு ஒரு முறை பேடுகளை மாற்ற வேண்டும்.
எப்போதும் சுத்தமான மற்றும் உலர்ந்த உள்ளாடைகளை அணியுங்கள். ஈரமான உள்ளாடைகள் உங்களுக்கு நோய்த்தொற்றை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
முடிந்த வரை கெமிக்கல்கள் நிறைந்த சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக ஆர்கானிக் நாப்கின்களை வாங்கி பயன்படுத்துங்கள்.
உங்க பிறப்புறுப்பு பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
உங்க பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் தடிப்புகள் காணப்பட்டால் அதற்கு தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
சானிட்டரி நாப்கின்களை சரியாக அகற்றி குப்பையில் போடுங்கள்.
சானிட்டரி நாப்கின் மாற்றாவிட்டால் பாக்டீரியா தொற்றுகள் உருவாகி, நாற்றம் வீசத் தொடங்கிவிடும். மாதவிலக்கு நாட்களில் தினமும் இருமுறை இளம் சுடுநீரும், வீரியம் குறைந்த சோப்பும் பயன்படுத்தி, பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் பெண்கள் பொதுவாக இதனை பின்பற்றுவதில்லை.
சானிட்டரி நாப்கின், டம்பான்கள் மற்றும் மாதவிடாய் கப் என அனைத்தும் தற்போது கிடைக்கிறது. ஆனால் இதில் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துவது சானிட்டரி நாப்கின்களைத் தான். ஏனெனில் சானிட்டரி நாப்கின்களை ரீமூவ் செய்வதும் பயன்படுத்துவதும் எளிது. நம்மில் பெரும்பாலனோர் சானிட்டரி நாப்கின்கள் முற்றிலும் பாதுகாப்பானது என்று நினைக்கின்றனர்.
பெண்கள் மாதவிலக்கு காலகட்டத்தில் (28 நாட்களுக்கு ஒரு முறை) சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் ஏனெனில் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். மாதவிலக்கு நாட்களில் 3 முதல் 5 மணி நேரத்திற்குள் ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும். அந்தப் பகுதியை நன்றாக சுத்தம் செய்யவும் வேண்டும்.
உங்க மாதவிடாய் காலங்களில் இரத்த போக்கு இல்லாவிட்டால் கூட ஒவ்வொரு 3-4 மணி நேரத்திற்கு ஒரு முறை பேடுகளை மாற்ற வேண்டும்.
எப்போதும் சுத்தமான மற்றும் உலர்ந்த உள்ளாடைகளை அணியுங்கள். ஈரமான உள்ளாடைகள் உங்களுக்கு நோய்த்தொற்றை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
முடிந்த வரை கெமிக்கல்கள் நிறைந்த சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக ஆர்கானிக் நாப்கின்களை வாங்கி பயன்படுத்துங்கள்.
உங்க பிறப்புறுப்பு பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
உங்க பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் தடிப்புகள் காணப்பட்டால் அதற்கு தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
சானிட்டரி நாப்கின்களை சரியாக அகற்றி குப்பையில் போடுங்கள்.
சானிட்டரி நாப்கின் மாற்றாவிட்டால் பாக்டீரியா தொற்றுகள் உருவாகி, நாற்றம் வீசத் தொடங்கிவிடும். மாதவிலக்கு நாட்களில் தினமும் இருமுறை இளம் சுடுநீரும், வீரியம் குறைந்த சோப்பும் பயன்படுத்தி, பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் பெண்கள் பொதுவாக இதனை பின்பற்றுவதில்லை.
கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது கருவை பாதிக்கும். கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
கருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.
அடிக்கடி தாம்பத்திய உறவு, அலைச்சல், அதிக எடை, சற்று இறுக்கமான ஆடைகள் அணிவது நீண்டநேரம் கண் விழிப்பது, பிளாஸ்டிக் சேர் மற்றும் நைலான் சேரில் உட்கார்வது, மலம், சிறுநீரை அடக்குவது, பட்டினியாக இருப்பது போன்றவற்றை செய்யக் கூடாது.
தூங்கிக்கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம்போட்டு பயமுறுத்தி எழுப்பக்கூடாது. சிறுநீரை அடக்குவதால் சிறுநீரகக் கற்கள், சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் நல்ல நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய் வகைகள், மேலும் குறிப்பாக கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆட்டிறைச்சி, பன்றி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு மாமிச வகைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் சீஸ் அதிகம் கலந்த உணவையும் தவிர்க்க வேண்டும். இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுப்பதோடு, சில உபாதைகளையும் உண்டாக்கக் கூடும்.
பகலில் தூங்குதல் கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் ஏற்படும். உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும்படி பலமாக நடப்பது, வாகனங்களில் பயணம் செய்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவற்றை செய்யக் கூடாது.
காபி மற்றும் தேநீர் போன்றவற்றை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் ரத்தசோகை மற்றும் வேறு சில உபாதைகளை உண்டாக்கக் கூடும்.
அடிக்கடி தாம்பத்திய உறவு, அலைச்சல், அதிக எடை, சற்று இறுக்கமான ஆடைகள் அணிவது நீண்டநேரம் கண் விழிப்பது, பிளாஸ்டிக் சேர் மற்றும் நைலான் சேரில் உட்கார்வது, மலம், சிறுநீரை அடக்குவது, பட்டினியாக இருப்பது போன்றவற்றை செய்யக் கூடாது.
தூங்கிக்கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம்போட்டு பயமுறுத்தி எழுப்பக்கூடாது. சிறுநீரை அடக்குவதால் சிறுநீரகக் கற்கள், சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் நல்ல நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய் வகைகள், மேலும் குறிப்பாக கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆட்டிறைச்சி, பன்றி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு மாமிச வகைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் சீஸ் அதிகம் கலந்த உணவையும் தவிர்க்க வேண்டும். இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுப்பதோடு, சில உபாதைகளையும் உண்டாக்கக் கூடும்.
பகலில் தூங்குதல் கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் ஏற்படும். உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும்படி பலமாக நடப்பது, வாகனங்களில் பயணம் செய்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவற்றை செய்யக் கூடாது.
காபி மற்றும் தேநீர் போன்றவற்றை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் ரத்தசோகை மற்றும் வேறு சில உபாதைகளை உண்டாக்கக் கூடும்.
பெண்கள் அன்றாட சுய உடல் பரிசோதனைகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். உடலில் ஏதேனும் பிரச்சினை என்றால் ஆரம்ப காலத்திலே அதற்கான சிகிச்சையை பெற்றுவிடுவது நல்லது.
பெண் பூப்படைதல் முதல் தாய்மை அடையும் வரை சந்திக்கும் பிரச்சினைகள், மாதவிடாய் பிரச்சினைகள், மாதவிடாய் முடிந்த பிறகு பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என பெண்கள் தொடர்பான எல்லா பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
தற்போது அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது அதிகரித்து வருகிறது. அதற்கு தாமதமான திருமணம், கருத்தரிப்பதில் ஏற்படும் தாமதம், பெண்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. வலியில்லாமல் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என பலர் நினைப்பது கூட காரணமாக உள்ளது.
சுக பிரசவத்துக்கு தாய்மார்களை உற்சாகப்படுத்த வேண்டும். சரியான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு கவலைகள் இருக்ககூடாது. உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்யலாம்.
தற்போது குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது, அதற்காக சிகிச்சை பெற விரும்பும் தம்பதிகள் நல்ல தரமான மருத்துவமனையை தேர்வு செய்ய வேண்டும். தற்போது உள்ள வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை அதிகரித்து உள்ளது. தம்பதிகள் ஒன்றாக இருப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை. எனினும் தற்போது குழந்தையில்லாத தம்பதிகள் குழந்தைகள் பெற்றெடுக்க பல வசதிகள் உள்ளன. அவர்கள் நல்ல மகப்பேறு மருத்துவமனையை அணுக வேண்டும்.
என்டோஸ்காபிக் அறுவை சிகிச்சை முறை மூலம் 50 சதவீத குழந்தையின்மை பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பே இல்லாதவர்கள் கூட கருமுட்டை தானம், விந்தணு தானம், ஐ.யு.ஐ, ஐ.வி.எப், ஐ.சி.எஸ்.ஐ. போன்ற பல்வேறு சிகிச்சை மூலம் குழந்தை பெற முடியும்.
பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன. இதன் மூலம் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பெரிய அறுவை சிகிச்சைகள் இன்றியும், கர்ப்பப்பையை நீக்காமலும் தீர்க்கப்பட்டு வருகிறது. கருக்கலைப்புகள் எல்லாம் மருந்து, மாத்திரைகள் மூலமே செய்ய முடியும். அதிக ரத்த போக்கு பிரச்சினைகளை கூட எளிதில் தீர்க்கும் சிகிச்சை முறைகள் உள்ளன.
பெரிய அறுவை சிகிச்சைகள் கூட லேபராஸ்கோபி மூலம் செய்யப்படுவதால் நோயாளிகள் 24 மணி நேரத்தில் வீட்டுக்கு செல்ல முடியும்.
பெண்கள் யாருக்கும் தாழ்வானவராக உங்களை நினைக்க வேண்டாம். அன்றாட சுய மருத்துவ சோதனைகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். உடலில் ஏதேனும் பிரச்சினை என்றால் ஆரம்ப காலத்திலே அதற்கான சிகிச்சையை பெற்றுவிடுங்கள். மற்ற பெண்களையும் அதுபோல இருக்க உற்சாகப்படுத்துங்கள்.
தற்போது அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது அதிகரித்து வருகிறது. அதற்கு தாமதமான திருமணம், கருத்தரிப்பதில் ஏற்படும் தாமதம், பெண்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. வலியில்லாமல் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என பலர் நினைப்பது கூட காரணமாக உள்ளது.
சுக பிரசவத்துக்கு தாய்மார்களை உற்சாகப்படுத்த வேண்டும். சரியான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு கவலைகள் இருக்ககூடாது. உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்யலாம்.
தற்போது குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது, அதற்காக சிகிச்சை பெற விரும்பும் தம்பதிகள் நல்ல தரமான மருத்துவமனையை தேர்வு செய்ய வேண்டும். தற்போது உள்ள வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை அதிகரித்து உள்ளது. தம்பதிகள் ஒன்றாக இருப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை. எனினும் தற்போது குழந்தையில்லாத தம்பதிகள் குழந்தைகள் பெற்றெடுக்க பல வசதிகள் உள்ளன. அவர்கள் நல்ல மகப்பேறு மருத்துவமனையை அணுக வேண்டும்.
என்டோஸ்காபிக் அறுவை சிகிச்சை முறை மூலம் 50 சதவீத குழந்தையின்மை பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பே இல்லாதவர்கள் கூட கருமுட்டை தானம், விந்தணு தானம், ஐ.யு.ஐ, ஐ.வி.எப், ஐ.சி.எஸ்.ஐ. போன்ற பல்வேறு சிகிச்சை மூலம் குழந்தை பெற முடியும்.
பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன. இதன் மூலம் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பெரிய அறுவை சிகிச்சைகள் இன்றியும், கர்ப்பப்பையை நீக்காமலும் தீர்க்கப்பட்டு வருகிறது. கருக்கலைப்புகள் எல்லாம் மருந்து, மாத்திரைகள் மூலமே செய்ய முடியும். அதிக ரத்த போக்கு பிரச்சினைகளை கூட எளிதில் தீர்க்கும் சிகிச்சை முறைகள் உள்ளன.
பெரிய அறுவை சிகிச்சைகள் கூட லேபராஸ்கோபி மூலம் செய்யப்படுவதால் நோயாளிகள் 24 மணி நேரத்தில் வீட்டுக்கு செல்ல முடியும்.
பெண்கள் யாருக்கும் தாழ்வானவராக உங்களை நினைக்க வேண்டாம். அன்றாட சுய மருத்துவ சோதனைகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். உடலில் ஏதேனும் பிரச்சினை என்றால் ஆரம்ப காலத்திலே அதற்கான சிகிச்சையை பெற்றுவிடுங்கள். மற்ற பெண்களையும் அதுபோல இருக்க உற்சாகப்படுத்துங்கள்.
திருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்கள் ருசிகரமானதாக இருப்பதாக புதிய சர்வே வெளிப்படுத்துகிறது.
திருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்கள் ருசிகரமானதாக இருப்பதாக புதிய சர்வே தகவல் ஒன்று வெளிப்படுத்துகிறது. கூடவே அதில் சில சிந்திக்கவைக்கும் தகவல்களும் இருப்பதாக கூறுகிறது. தனியார் பாலியல் நல அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் அந்த சர்வேயில் இருக்கும் முக்கிய விஷயங்கள்:
‘மனைவிக்கு தாம்பத்திய சுகத்தை கொடுப்பது கணவரின் கடமைகளில் மிக முக்கியமானது’ என்ற கருத்தை இந்திய ஆண்கள் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான ஏழை தம்பதியினருக்கு பொழுதுபோக்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால், 30-35 வயதுகளில் அவர்கள் சராசரியாக வாரத்தில் மூன்று முறை தாம்பத்திய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. அதே நேரத்தில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள அதே வயதுகொண்ட தம்பதிகளிடையே பாலுறவு இணக்கம் குறைவாக இருக்கிறது. அவர்கள் இதர வெளி பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் தாம்பத்திய தொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள்.
58 சதவீத பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவு வைத்துக்கொள்வதாக சொல்கிறார்கள். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 17 சதவீத பெண்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் மாதத்திற்கு 2 நாள் என்ற கணக்கை பின்பற்றுகிறார்கள். பெருநகரங்களில் 72 சதவீதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ள 28 சதவீதத்தில் பெரும் பகுதியினர் மாதத்தில் ஒரு தடவை என்று சோர்வாக பதிலளித்துள்ளார்கள்.
தாம்பத்திய தொடர்பில் உள்ள அதிருப்திகளை பற்றி கணவரிடம் பெண்கள் பேசுவதில்லை என்ற கருத்து முன்பு வலுவாக இருந்தது. இப்போது அந்த நிலைமாறிக்கொண்டிருக்கிறது. பாலியல் உறவில் தனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று பெண்கள், கணவரிடம் எடுத்துச்சொல்ல தொடங்கியிருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. ‘அதுபற்றி பேசி கணவருக்கு பக்குவமாக புரியவைப்போம்’ என்று 39 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.
குறிப்பால் அதை உணர்த்துவதாக 32 சதவீத பெண்களும், ‘இதை சொல்வதற்கு தயங்கவேண்டியதில்லை’ என்று 14 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். 15 சதவீத பெண்கள் ‘அவரால் அவ்வளவுதான் முடியும். அதற்குமேல் பேச என்ன இருக்கிறது’ என்று பட்டவர்த்தனமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மும்பை, டெல்லி பெண்களில் 71 சதவீதம்பேர் ‘தாம்பத்தியம் நடந்து முடிந்த பின்பு அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம்விட்டுப் பேசுவதாக’ கூறியிருக்கிறார்கள். இதற்கு பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் பாலியல் விழிப்புணர்ச்சியே காரணம் என்று கருதப்படுகிறது.
பாலியல் உறவு திருப்திக்கு ‘முன்விளையாட்டுகள்’ மிக முக்கியம் என்பதை பெரும்பாலான தம்பதிகள் உணர்ந்திருக்கிறார்கள். பெண்கள் அதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாகவும் சர்வே தெரிவிக்கிறது. 92 சதவீதம் பெண்கள் அதை விரும்புவதாகவும், அதில் 64 சதவீதம் பேர் தங்கள் விருப்பம் நிறைவேற்றப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். டெல்லி பெண்கள் இதில் முதல் இடத்தையும், மும்பை பெண்கள் இரண்டாம் இடத்தையும் பிடிக்கிறார்கள்.
பெண்கள் அதிகம் விரும்பும் கருத்தடை சாதனம் எது என்ற கேள்விக்கு, மும்பை, டெல்லி பெண்கள், ‘கணவரை ஆணுறை பயன்படுத்தக்கூறுவோம்’ என்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் தாங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கணவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களில் 68 சதவீதம் பேர் வரை, ‘அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் அதை முடிந்த அளவு குறைக்கிறோம்’ என்கிறார்கள். முதல் குழந்தை பெற்ற பெண்களில் 59 சதவீதம் பேர் பாதுகாப்பான கருத்தடை முறையாக ‘காப்பர்- டி’ பொருத்துவதை குறிப்பிட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களைவிட இப்போது பெண்களிடம் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு மிக அதிகம் இருப்பதாக சர்வே தெரிவிக்கிறது.
‘மனைவிக்கு தாம்பத்திய சுகத்தை கொடுப்பது கணவரின் கடமைகளில் மிக முக்கியமானது’ என்ற கருத்தை இந்திய ஆண்கள் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான ஏழை தம்பதியினருக்கு பொழுதுபோக்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால், 30-35 வயதுகளில் அவர்கள் சராசரியாக வாரத்தில் மூன்று முறை தாம்பத்திய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. அதே நேரத்தில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள அதே வயதுகொண்ட தம்பதிகளிடையே பாலுறவு இணக்கம் குறைவாக இருக்கிறது. அவர்கள் இதர வெளி பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் தாம்பத்திய தொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள்.
58 சதவீத பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவு வைத்துக்கொள்வதாக சொல்கிறார்கள். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 17 சதவீத பெண்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் மாதத்திற்கு 2 நாள் என்ற கணக்கை பின்பற்றுகிறார்கள். பெருநகரங்களில் 72 சதவீதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ள 28 சதவீதத்தில் பெரும் பகுதியினர் மாதத்தில் ஒரு தடவை என்று சோர்வாக பதிலளித்துள்ளார்கள்.
தாம்பத்திய தொடர்பில் உள்ள அதிருப்திகளை பற்றி கணவரிடம் பெண்கள் பேசுவதில்லை என்ற கருத்து முன்பு வலுவாக இருந்தது. இப்போது அந்த நிலைமாறிக்கொண்டிருக்கிறது. பாலியல் உறவில் தனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று பெண்கள், கணவரிடம் எடுத்துச்சொல்ல தொடங்கியிருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. ‘அதுபற்றி பேசி கணவருக்கு பக்குவமாக புரியவைப்போம்’ என்று 39 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.
குறிப்பால் அதை உணர்த்துவதாக 32 சதவீத பெண்களும், ‘இதை சொல்வதற்கு தயங்கவேண்டியதில்லை’ என்று 14 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். 15 சதவீத பெண்கள் ‘அவரால் அவ்வளவுதான் முடியும். அதற்குமேல் பேச என்ன இருக்கிறது’ என்று பட்டவர்த்தனமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மும்பை, டெல்லி பெண்களில் 71 சதவீதம்பேர் ‘தாம்பத்தியம் நடந்து முடிந்த பின்பு அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம்விட்டுப் பேசுவதாக’ கூறியிருக்கிறார்கள். இதற்கு பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் பாலியல் விழிப்புணர்ச்சியே காரணம் என்று கருதப்படுகிறது.
பாலியல் உறவு திருப்திக்கு ‘முன்விளையாட்டுகள்’ மிக முக்கியம் என்பதை பெரும்பாலான தம்பதிகள் உணர்ந்திருக்கிறார்கள். பெண்கள் அதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாகவும் சர்வே தெரிவிக்கிறது. 92 சதவீதம் பெண்கள் அதை விரும்புவதாகவும், அதில் 64 சதவீதம் பேர் தங்கள் விருப்பம் நிறைவேற்றப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். டெல்லி பெண்கள் இதில் முதல் இடத்தையும், மும்பை பெண்கள் இரண்டாம் இடத்தையும் பிடிக்கிறார்கள்.
பெண்கள் அதிகம் விரும்பும் கருத்தடை சாதனம் எது என்ற கேள்விக்கு, மும்பை, டெல்லி பெண்கள், ‘கணவரை ஆணுறை பயன்படுத்தக்கூறுவோம்’ என்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் தாங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கணவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களில் 68 சதவீதம் பேர் வரை, ‘அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் அதை முடிந்த அளவு குறைக்கிறோம்’ என்கிறார்கள். முதல் குழந்தை பெற்ற பெண்களில் 59 சதவீதம் பேர் பாதுகாப்பான கருத்தடை முறையாக ‘காப்பர்- டி’ பொருத்துவதை குறிப்பிட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களைவிட இப்போது பெண்களிடம் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு மிக அதிகம் இருப்பதாக சர்வே தெரிவிக்கிறது.
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது இந்த நோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
உலகளவில் அதிகமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக புற்றுநோய் அமைந்திருக்கிறது. அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதும் சவாலான விஷயமாக இருக்கிறது. ஒருசில உணவு வகைகளை தவறாமல் சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும். பூண்டிற்கு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி இருக்கிறது. மார்பகம், மூளை, நுரையீரல், கணையம், வயிறு போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதை இது தடுக்கும். பிரோக்கோலிக்கும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை நீராவியில் வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது. அதில் சூப், சாலட் தயாரித்தும் சாப்பிடலாம்.
சிட்ரஸ் பழ வகைகளை தினமும் சாப்பிட்டு வருவது வாய், தொண்டை, வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எலுமிச்சம் பழத்தை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவுடன் அரை கப் புளூபெர்ரி பழம் சாப்பிட்டும் வரலாம். அது புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி சேதமடைந்த செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு கப் கருப்பு டீ பருகுவதும் நல்லது. கிவி பழத்திலும் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடெண்ட் நிரம்பியுள்ளது. அதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.
வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்ப்பதன் மூலம் 50 சதவீத புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆப்பிளுக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது. அவகோடா, முளைகட்டிய தானியங்கள், முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், செர்ரி பழம், மக்காச்சோளம், பேரீச்சம்பழம், முட்டை, இஞ்சி, திராட்சை, காளான், பட்டாணி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் புற்றுநோயை தடுக்க உதவும்.
சிட்ரஸ் பழ வகைகளை தினமும் சாப்பிட்டு வருவது வாய், தொண்டை, வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எலுமிச்சம் பழத்தை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவுடன் அரை கப் புளூபெர்ரி பழம் சாப்பிட்டும் வரலாம். அது புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி சேதமடைந்த செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு கப் கருப்பு டீ பருகுவதும் நல்லது. கிவி பழத்திலும் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடெண்ட் நிரம்பியுள்ளது. அதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.
வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்ப்பதன் மூலம் 50 சதவீத புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆப்பிளுக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது. அவகோடா, முளைகட்டிய தானியங்கள், முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், செர்ரி பழம், மக்காச்சோளம், பேரீச்சம்பழம், முட்டை, இஞ்சி, திராட்சை, காளான், பட்டாணி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் புற்றுநோயை தடுக்க உதவும்.
திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல்பருமன் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல்பருமன் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.
பரபரப்பான வாழ்க்கை முறையும், உணவு பழக்கமும் பெண்களுக்கு பலவிதங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல்பருமன் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். உடல் வீக்கம், உடல் அழற்சி போன்றவை அதற்கான ஆரம்பக் கட்ட அறிகுறிகளாக இருக்கின்றன. இதனை தவிர்க்க சிறுவயதிலேயே உடல் நலன் மீது போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் எதிர்மறை விளைவுகள் ஏற்படக்கூடும். உடல் வீக்கம், உடல் அழற்சி ஏற்படுவதற்கு தைராய்டு, ரத்த சோகை, இரைப்பையில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம்.
தைராய்டு பிரச்சினை உடல் பருமனுக்கு காரணமாக இருக்கிறது. அது உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தைராய்டு சுரப்பியானது சாப்பிடும் உணவால் உடலுக்கு தேவையான ஆற்றலை பெறுவதற்கு வழி செய்யும். ஹார்மோன்களின் உற்பத்திக்கும் உதவும். அதன் செயல்பாடுகளில் பாதிப்பு நேரும்போது தைராய்டு பிரச்சினை உருவாகும். கை, கால்களில் வீக்கம் ஏற்படுவதுதான் தைராய்டு பிரச்சினைக்கான முக்கிய அறிகுறியாகும். வீக்கம் வலியை ஏற்படுத்தாமல் அதிகரித்துக் கொண்டிருக்கும். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் சோர்வும், உடல் பலவீனமும் ஏற்படும். உடல் வீக்கமாக இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பெண்களின் உடலில் வீக்கம் ஏற்படுவதற்கு ரத்தம் பற்றாக்குறையாக இருப்பதும் காரணமாகும். ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும். பெரும்பாலும் இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் சோர்வாக இருப்பதாக உணர்வார்கள். உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்தாததே அதற்கு காரணம். உடல் வீக்கமாக இருப்பதாக உணர்ந்தால் ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பெரும்பாலான பெண்கள் வாயு தொல்லை பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதற்கும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தாததே காரணமாகும். ஆரம்ப கட்ட அறிகுறியாக உடல் வெளிர் நிறத்திற்கு மாற தொடங்கும். வாயு பிரச்சினை தொடரும்போது வலி மற்றும் வீக்கம் உண்டாகும். வாயு பிரச்சினை இருந்தால் சரியான நேரத்திற்கு சாப்பிட பழக வேண்டும்.
தைராய்டு பிரச்சினை உடல் பருமனுக்கு காரணமாக இருக்கிறது. அது உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தைராய்டு சுரப்பியானது சாப்பிடும் உணவால் உடலுக்கு தேவையான ஆற்றலை பெறுவதற்கு வழி செய்யும். ஹார்மோன்களின் உற்பத்திக்கும் உதவும். அதன் செயல்பாடுகளில் பாதிப்பு நேரும்போது தைராய்டு பிரச்சினை உருவாகும். கை, கால்களில் வீக்கம் ஏற்படுவதுதான் தைராய்டு பிரச்சினைக்கான முக்கிய அறிகுறியாகும். வீக்கம் வலியை ஏற்படுத்தாமல் அதிகரித்துக் கொண்டிருக்கும். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் சோர்வும், உடல் பலவீனமும் ஏற்படும். உடல் வீக்கமாக இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பெண்களின் உடலில் வீக்கம் ஏற்படுவதற்கு ரத்தம் பற்றாக்குறையாக இருப்பதும் காரணமாகும். ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும். பெரும்பாலும் இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் சோர்வாக இருப்பதாக உணர்வார்கள். உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்தாததே அதற்கு காரணம். உடல் வீக்கமாக இருப்பதாக உணர்ந்தால் ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பெரும்பாலான பெண்கள் வாயு தொல்லை பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதற்கும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தாததே காரணமாகும். ஆரம்ப கட்ட அறிகுறியாக உடல் வெளிர் நிறத்திற்கு மாற தொடங்கும். வாயு பிரச்சினை தொடரும்போது வலி மற்றும் வீக்கம் உண்டாகும். வாயு பிரச்சினை இருந்தால் சரியான நேரத்திற்கு சாப்பிட பழக வேண்டும்.
தாம்பத்திய உறவினை ஒவ்வொரு தம்பதிகளும் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். தாம்பத்தியம் பற்றி அனைத்து தம்பதிகளும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் இதோ…!
தாம்பத்தியம் என்பது ஆண் பெண் இருவரும் மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு திருவிழா. தாம்பத்திய உறவினை ஒவ்வொரு தம்பதிகளும் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். தாம்பத்தியம் பற்றி அனைத்து தம்பதிகளும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் இதோ…!
கணவன்- மனைவி இருவரும் எப்போதுமே அந்தரங்க சுத்தத்தை கடைப்பிடித்தல் வேண்டும் அப்போது தான் அவர்களால் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையை என்றுமே அனுபவிக்க முடியும். தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள்.
ஒரு பிரிவினர் அதில் முழுமையான ஈடுபாடு காட்டாமல் அதை ஒரு ஒரு வித சடங்காக மட்டுமே கருதுகிறார்கள். இன்னொரு பிரிவினர் புதுவிதமாக, வித்தியாசமாக அனுபவிக்க வேண்டிய ஒரு சிறந்த கலையாக அதைப் பார்க்கிறார்கள். சடங்காக நினைக்கும் முதல் வகை ஜோடியினர் பெரும்பாலும் உடல் அந்தரங்க சுத்தத்தில் பெரிதாக அக்கறை செலுத்துவதில்லை. ஏனோதானோவாக நடந்து கொள்கிறார்கள். கலையாக கருதும் இரண்டாவது வகையினரே பெரும்பாலும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
தாம்பத்திதியத்தை முழுமையாக கொண்டாடுவதற்கு தம்பதிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக வேண்டியது மிக மிக அவசியம். அத்தகைய தயார் நிலையில், குறிப்பிடத்தக்கது சுத்தம். உடல் மிகுந்த சுத்தமாக இருக்கவேண்டும். அதோடு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கவேண்டும்.
அத்தகைய தம்பதிகளின் உடல் சுத்தத்தில் முதலிடம் பெறுவது, சருமம். மனித உடலை அற்புதமாக மூடி அதற்கு சிறந்த அழகையும், பாதுகாப்பையும் தருவது இந்த சருமம் தான். . உடலில் பெரிய உறுப்பாக கருதப்படும் இந்த சருமத்தை சுத்தமாக வைத்திருந்தால் உடலையே சுத்தமாக வைத்திருப்பதாக அர்த்தம். சருமத்தை சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா, பூஞ்சை போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் வாழும் கூடாரம் போல் உடல் மாறி விடும். அப்போது நாற்றம் வீசுதல், சொறி ஏற்படுதல் போன்றவை உருவாகும். எப்போதாவது உடலை சுத்தம் செய்வதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக சுத்தம் செய்தால் தான் நாம் சுகாதாரமாக வைத்துக்கொள்ள முடியும்.
‘அது தான் நான் தினமும் குளித்துவிடுகிறேனே’ என்கிறீர்களா.. சரிதான். ஆனால் காக்காய் குளியல் போடாமல் நன்றாக குளிக்கவேண்டும். சோப்பு பயன்படுத்திதான் எல்லோரும் குளிக்கிறார்கள் என்றாலும், அந்த சோப்பை எந்த இடத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும். ஆண், பெண் இருவரும் ரோமம் நிறைந்த பகுதிகளில், ரோமம் வளரக்கூடிய பகுதிகளில் சோப்பை தேய்த்து நன்றாக குளிக்கவேண்டும்.
மணக்கும் தன்மைகொண்ட ஏதாவது திரவம் ஒன்றை சேர்த்து மிதமான சுடுநீரில் குளிப்பது நல்லது. அக்குள், தொடை இடுக்கு, காதுகளின் பின்பாகம், தொப்புள், மார்பக இடுக்குகள், பிறப்பு உறுப்பு பகுதி, பின்பகுதி போன்றவைகளில் இருக்கும் அழுக்கு நீங்கும் அளவுக்கு குளிக்கவேண்டும்.
ஆணும், பெண்ணும் தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். நீங்கள் உறவுக்கு தயாராக இருந்தால், உறவு வைத்துக்கொள்ளும் நேரத்திற்கு சற்று முன்பு இரண்டாவது குளியலை வைத்துக்கொள்ளலாம். இது உறவுக்கு மட்டுமல்ல, உறக்கத்திற்கும் ஏற்றது.
பெரும்பாலான தம்பதிகள் ஆரம்பிக்கும் போது முத்தத்தோடு தான் உறவைத் தொடங்குகிறார்கள். அதனால் உறவுக்கு நுழைவு வாசல் போன்று வாய் தான் இருக்கிறது. வாய், உதடுகள், பற்களை கணவன்-மனைவி இரு வருமே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் உறவு இடையில் தடைபடலாம். இரவில் ஒரு முறை பற்களைத் துலக்கி, வாயை சுத்தம் செய்வதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். இந்த இரண்டு நிமிட சுத்தம் தாம்பத்திதியத்தை மிகவும் இனிமையாக்கி விடும்.
கணவன்- மனைவி இருவரும் எப்போதுமே அந்தரங்க சுத்தத்தை கடைப்பிடித்தல் வேண்டும் அப்போது தான் அவர்களால் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையை என்றுமே அனுபவிக்க முடியும். தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள்.
ஒரு பிரிவினர் அதில் முழுமையான ஈடுபாடு காட்டாமல் அதை ஒரு ஒரு வித சடங்காக மட்டுமே கருதுகிறார்கள். இன்னொரு பிரிவினர் புதுவிதமாக, வித்தியாசமாக அனுபவிக்க வேண்டிய ஒரு சிறந்த கலையாக அதைப் பார்க்கிறார்கள். சடங்காக நினைக்கும் முதல் வகை ஜோடியினர் பெரும்பாலும் உடல் அந்தரங்க சுத்தத்தில் பெரிதாக அக்கறை செலுத்துவதில்லை. ஏனோதானோவாக நடந்து கொள்கிறார்கள். கலையாக கருதும் இரண்டாவது வகையினரே பெரும்பாலும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
தாம்பத்திதியத்தை முழுமையாக கொண்டாடுவதற்கு தம்பதிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக வேண்டியது மிக மிக அவசியம். அத்தகைய தயார் நிலையில், குறிப்பிடத்தக்கது சுத்தம். உடல் மிகுந்த சுத்தமாக இருக்கவேண்டும். அதோடு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கவேண்டும்.
அத்தகைய தம்பதிகளின் உடல் சுத்தத்தில் முதலிடம் பெறுவது, சருமம். மனித உடலை அற்புதமாக மூடி அதற்கு சிறந்த அழகையும், பாதுகாப்பையும் தருவது இந்த சருமம் தான். . உடலில் பெரிய உறுப்பாக கருதப்படும் இந்த சருமத்தை சுத்தமாக வைத்திருந்தால் உடலையே சுத்தமாக வைத்திருப்பதாக அர்த்தம். சருமத்தை சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா, பூஞ்சை போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் வாழும் கூடாரம் போல் உடல் மாறி விடும். அப்போது நாற்றம் வீசுதல், சொறி ஏற்படுதல் போன்றவை உருவாகும். எப்போதாவது உடலை சுத்தம் செய்வதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக சுத்தம் செய்தால் தான் நாம் சுகாதாரமாக வைத்துக்கொள்ள முடியும்.
‘அது தான் நான் தினமும் குளித்துவிடுகிறேனே’ என்கிறீர்களா.. சரிதான். ஆனால் காக்காய் குளியல் போடாமல் நன்றாக குளிக்கவேண்டும். சோப்பு பயன்படுத்திதான் எல்லோரும் குளிக்கிறார்கள் என்றாலும், அந்த சோப்பை எந்த இடத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும். ஆண், பெண் இருவரும் ரோமம் நிறைந்த பகுதிகளில், ரோமம் வளரக்கூடிய பகுதிகளில் சோப்பை தேய்த்து நன்றாக குளிக்கவேண்டும்.
மணக்கும் தன்மைகொண்ட ஏதாவது திரவம் ஒன்றை சேர்த்து மிதமான சுடுநீரில் குளிப்பது நல்லது. அக்குள், தொடை இடுக்கு, காதுகளின் பின்பாகம், தொப்புள், மார்பக இடுக்குகள், பிறப்பு உறுப்பு பகுதி, பின்பகுதி போன்றவைகளில் இருக்கும் அழுக்கு நீங்கும் அளவுக்கு குளிக்கவேண்டும்.
ஆணும், பெண்ணும் தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். நீங்கள் உறவுக்கு தயாராக இருந்தால், உறவு வைத்துக்கொள்ளும் நேரத்திற்கு சற்று முன்பு இரண்டாவது குளியலை வைத்துக்கொள்ளலாம். இது உறவுக்கு மட்டுமல்ல, உறக்கத்திற்கும் ஏற்றது.
பெரும்பாலான தம்பதிகள் ஆரம்பிக்கும் போது முத்தத்தோடு தான் உறவைத் தொடங்குகிறார்கள். அதனால் உறவுக்கு நுழைவு வாசல் போன்று வாய் தான் இருக்கிறது. வாய், உதடுகள், பற்களை கணவன்-மனைவி இரு வருமே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் உறவு இடையில் தடைபடலாம். இரவில் ஒரு முறை பற்களைத் துலக்கி, வாயை சுத்தம் செய்வதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். இந்த இரண்டு நிமிட சுத்தம் தாம்பத்திதியத்தை மிகவும் இனிமையாக்கி விடும்.
சிலருக்கு மெடிக்கல் முறைப்படி கருக்கலைப்பு செய்யாமல் தாமாகவே கருக்கலைந்துவிடும். இதை மிஸ்கேரேஜ் என்போம். பொதுவாக, மிஸ்கேரேஜ் ஏற்படக்கூடிய காரணங்கள் சில…
சிலருக்கு மெடிக்கல் முறைப்படி கருக்கலைப்பு செய்யாமல் தாமாகவே கருக்கலைந்துவிடும். இதை மிஸ்கேரேஜ் என்போம். இந்த கேஸ்களில் கருத்தரித்த இருபது வாரங்களுக்குள் கரு தானாகவே கலைந்துவிடும். பொதுவாக, மிஸ்கேரேஜ் ஏற்படக்கூடிய காரணங்கள் சில…
* நாற்பது வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பது.
* ஏற்கெனவே மிஸ்கேரேஜ் ஏற்பட்டிருப்பது.
* டயாபடீஸ், ஹைபோதைராய்டிஸம் போன்ற கேஸ்களில்.
* உடல் ஹார்மோன்களில் கோளாறுகள்.
* தாய்க்கு புகை, மது போன்ற பழக்கங்கள் இருந்தால்.
* கருப்பையின் ஷேப் சரியாக இல்லையென்றாலும், பொதுவாக கருப்பை வீக்காக இருந்தாலும் தானாகவே கர்ப்பம் கலையலாம்.
* தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், எதிர்பாராத விபத்துகளாலும் ஏற்படலாம்.
பிளீடிங், வயிற்றுப் பகுதியில் சதைப் பிடிப்பு, முதுகுத் தண்டின் அடிபாகத்தில் வலி போன்றவை மிஸ்கேரேஜ் ஏற்படுவதற்கு முன்பு தெரியும் சில அறிகுறிகள்.
வைட்டமின் பி சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், கருத்தரித்த பெண்ணின் உடல் நிலை சரியில்லையென்றால் ரொம்ப கவனமாக, ஸ்பெஷலாகப் பார்த்துக்கொள்வதன் மூலமும் தானாகவே கருக்கலைப்பு ஏற்படுவதை ஓரளவுக்குத் தடுக்கலாம்.
கருக்கலைப்பு செய்துகொள்வதில் குழப்பம் ஏற்பட்டால், கவுன்சிலிங் மையங்களை அணுகி தகுந்த கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால், கருக்கலைப்புப் பற்றி ஒரு தெளிவு கிடைக்கும். மருத்துவர்களும் பெரும்பாலும் கருவை தக்கவைத்துக் கொள்வதில்தான் கவுன்சிலிங் அளிப்பார்கள். இதையும் தாண்டி கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டால், கருக்கலைப்புக்கு அரசு அங்கீகரித்து, லைஸென்ஸ் பெற்ற மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துகொள்வதே சட்டப்படி சரியான முறை!
* நாற்பது வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பது.
* ஏற்கெனவே மிஸ்கேரேஜ் ஏற்பட்டிருப்பது.
* டயாபடீஸ், ஹைபோதைராய்டிஸம் போன்ற கேஸ்களில்.
* உடல் ஹார்மோன்களில் கோளாறுகள்.
* தாய்க்கு புகை, மது போன்ற பழக்கங்கள் இருந்தால்.
* கருப்பையின் ஷேப் சரியாக இல்லையென்றாலும், பொதுவாக கருப்பை வீக்காக இருந்தாலும் தானாகவே கர்ப்பம் கலையலாம்.
* தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், எதிர்பாராத விபத்துகளாலும் ஏற்படலாம்.
பிளீடிங், வயிற்றுப் பகுதியில் சதைப் பிடிப்பு, முதுகுத் தண்டின் அடிபாகத்தில் வலி போன்றவை மிஸ்கேரேஜ் ஏற்படுவதற்கு முன்பு தெரியும் சில அறிகுறிகள்.
வைட்டமின் பி சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், கருத்தரித்த பெண்ணின் உடல் நிலை சரியில்லையென்றால் ரொம்ப கவனமாக, ஸ்பெஷலாகப் பார்த்துக்கொள்வதன் மூலமும் தானாகவே கருக்கலைப்பு ஏற்படுவதை ஓரளவுக்குத் தடுக்கலாம்.
கருக்கலைப்பு செய்துகொள்வதில் குழப்பம் ஏற்பட்டால், கவுன்சிலிங் மையங்களை அணுகி தகுந்த கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால், கருக்கலைப்புப் பற்றி ஒரு தெளிவு கிடைக்கும். மருத்துவர்களும் பெரும்பாலும் கருவை தக்கவைத்துக் கொள்வதில்தான் கவுன்சிலிங் அளிப்பார்கள். இதையும் தாண்டி கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டால், கருக்கலைப்புக்கு அரசு அங்கீகரித்து, லைஸென்ஸ் பெற்ற மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துகொள்வதே சட்டப்படி சரியான முறை!
பெண்களுக்கான ‘வயாகரா’ தற்போது அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் அதனுடன் கூடவே சர்ச்சைகளும் வந்திருக்கின்றன. இந்த மருந்துகளைச் சாப்பிடுவதால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சில மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
பெண்களுக்கான ‘வயாகரா’ தற்போது அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் அதனுடன் கூடவே சர்ச்சைகளும் வந்திருக்கின்றன. இப்போதைக்கு அமெரிக்க மருந்தகங்களில், பெண்களுக்கு பாலுணர்வை அதிகரிக்கக் கூடிய அந்த மருந்து கிடைக்கிறது. அந்த மருந்தின் பெயர் ‘வைலீசி’ என்றாலும், அதை ‘பெண்களின் வயாகரா’ என்றே குறிப்பிடுகிறார்கள்.
அமெரிக்காவில் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானவை என மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் அரசு அமைப்பான உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம், ‘வைலீசி’க்கு அனுமதி அளித்தபோது, பெண்களின் பாலுறவு ஆரோக்கியத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஆரம்பத்தில் அமோக வரவேற்புக் கிடைத்தது. ஆனால் சில வாரங்களிலேயே புதிய சர்ச்சைகள் தலைதூக்கின. பாலுணர்வு விருப்பம் போன்ற சிக்கலான விஷயங்களில் மருந்துகளின் பங்கு என்ன என்பது பற்றி விவாதங்கள் எழத் தொடங்கின.
உண்மையில் பிரமெலனோடைட் பலன் தருமா? அதனால் ஏற்படக்கூடிய ஆரோக்கியப் பிரச்சினைகள் என்ன?
தானாகவே ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் மருந்தாக வைலீசி உள்ளது. இந்த மருந்து, பதற்றத்தைத் தணித்து, பாலுறவு ஆசையை அதிகரிக்கச் செய்கிறது. டேபோமைன் அளவை அதிகரிக்கச்செய்யும் இரண்டு நரம்பியல் கடத்திகளின் அளவைக் கட்டுப்படுத்தி, செரோட்டோனின் வெளியாவதைக் குறைத்து இது செயல்படுகிறது.
ஏற்கனவே சந்தையில் உள்ள, இதேபோன்ற ‘ஆட்யி’ என்ற மாத்திரையுடன், இந்தப் புதிய மருந்து போட்டியிட வேண்டியிருக்கும். ‘ஆட்யி’ மாத்திரை, 2015-ல் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாத்திரை ஆகும். அதை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்யி மாத்திரையால் குறைந்த பலன்தான் உள்ளது என்றும், அநேகமாக பாதுகாப்பற்றது என்றும் சில நிபுணர்கள் கூறிவரும் நிலையில், புதிய மருந்துக்கு அங்கீகாரம் அளித்தது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆட்யி மாத்திரையைப் பயன்படுத்தும்போது மதுப் பயன்பாடு கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் வைலீசி பயன்படுத்துபவர்கள் மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டிய அவசியம் இல்லை என்று அதைத் தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது லேசான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றாலும், வேகமான செயல்பாடு கொண்டது, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என அந்நிறுவனம் உத்தரவாதம் அளிக்கிறது.
ஆனால், மருந்து மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத் துறைகள் பற்றி செய்திகளை எழுதிவரும் பத்திரிகையாளர் மேடலெய்ன் ஆர்ம்ஸ்டிராங், ‘‘பாலுறவு கொள்வதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு முன்னதாக வைலீசி மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போது குமட்டல் போன்ற உணர்வு ஏற்படுவதாக இதைப் பயன்படுத்திய 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் ஒரு மணி நேரத்துக்குள் அப்படி ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்’’ என்கிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வின்படி, பாலியல் நாட்டமின்மை அமெரிக்கப் பெண்களில் 10-ல் ஒருவருக்கு உள்ளது. அவர்களில் பலர், ஒருபோதும் சிகிச்சையை நாடியதில்லை என்றும் தெரியவந்துள்ளது.
அதுகுறித்து ஆர்ம்ஸ்டிராங், ‘‘பெண்கள் பாலியல் நாட்டமில்லாமல் இருப்பது நோயா என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. சுமார் 60 லட்சம் பெண்களுக்கு மாதவிலக்குக்கு முந்தைய பருவத்தில் இந்தப் பாதிப்பு இருக்கிறது என்றும், தங்களுக்கு மருத்துவக் குறைபாடு இருப்பதையே 95 சதவீதம் பெண்கள் அறிந்திருக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்’’ என்கிறார்.
வைலீசி மருந்தின் பரிசோதனைக் காலத்தில் கவனிக்கப்பட்ட பெரும்பாலான பக்க விளைவுகளில், இதைப் பயன்படுத்திய 40 சதவீதம் பேருக்கு ஓரளவு முதல் தீவிர குமட்டல் இருந்திருக்கிறது. காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட பக்கவிளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. வைலீசி மருந்தின் நீண்டகாலப் பாதிப்புகள் பற்றி மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் பரிசீலிக்கவில்லை என்று மகளிர் ஆரோக்கிய அமைப்புகள் பலவும் குற்றஞ்சாட்டுகின்றன.
இப்போதைக்கு, பாலியல் நாட்டமின்மை பிரச்சினை உள்ள பலர், மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் ஒரு வாரத்தில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தவில்லை. இந்த மருந்து எடுத்துக்கொண்டவர்களில் 25 சத வீதம் பேர் பாலுறவு விருப்பம் அதிகரித்ததாகவும் கூறியுள்ளனர்.
‘உல்லாசத்துக்கான’ இந்த மாத்திரை குறித்த வாத, பிரதிவாதங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் மறுபுறம் இதன் விற்பனையும் கூடிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானவை என மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் அரசு அமைப்பான உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம், ‘வைலீசி’க்கு அனுமதி அளித்தபோது, பெண்களின் பாலுறவு ஆரோக்கியத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஆரம்பத்தில் அமோக வரவேற்புக் கிடைத்தது. ஆனால் சில வாரங்களிலேயே புதிய சர்ச்சைகள் தலைதூக்கின. பாலுணர்வு விருப்பம் போன்ற சிக்கலான விஷயங்களில் மருந்துகளின் பங்கு என்ன என்பது பற்றி விவாதங்கள் எழத் தொடங்கின.
உண்மையில் பிரமெலனோடைட் பலன் தருமா? அதனால் ஏற்படக்கூடிய ஆரோக்கியப் பிரச்சினைகள் என்ன?
தானாகவே ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் மருந்தாக வைலீசி உள்ளது. இந்த மருந்து, பதற்றத்தைத் தணித்து, பாலுறவு ஆசையை அதிகரிக்கச் செய்கிறது. டேபோமைன் அளவை அதிகரிக்கச்செய்யும் இரண்டு நரம்பியல் கடத்திகளின் அளவைக் கட்டுப்படுத்தி, செரோட்டோனின் வெளியாவதைக் குறைத்து இது செயல்படுகிறது.
ஏற்கனவே சந்தையில் உள்ள, இதேபோன்ற ‘ஆட்யி’ என்ற மாத்திரையுடன், இந்தப் புதிய மருந்து போட்டியிட வேண்டியிருக்கும். ‘ஆட்யி’ மாத்திரை, 2015-ல் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாத்திரை ஆகும். அதை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்யி மாத்திரையால் குறைந்த பலன்தான் உள்ளது என்றும், அநேகமாக பாதுகாப்பற்றது என்றும் சில நிபுணர்கள் கூறிவரும் நிலையில், புதிய மருந்துக்கு அங்கீகாரம் அளித்தது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆட்யி மாத்திரையைப் பயன்படுத்தும்போது மதுப் பயன்பாடு கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் வைலீசி பயன்படுத்துபவர்கள் மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டிய அவசியம் இல்லை என்று அதைத் தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது லேசான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றாலும், வேகமான செயல்பாடு கொண்டது, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என அந்நிறுவனம் உத்தரவாதம் அளிக்கிறது.
ஆனால், மருந்து மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத் துறைகள் பற்றி செய்திகளை எழுதிவரும் பத்திரிகையாளர் மேடலெய்ன் ஆர்ம்ஸ்டிராங், ‘‘பாலுறவு கொள்வதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு முன்னதாக வைலீசி மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போது குமட்டல் போன்ற உணர்வு ஏற்படுவதாக இதைப் பயன்படுத்திய 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் ஒரு மணி நேரத்துக்குள் அப்படி ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்’’ என்கிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வின்படி, பாலியல் நாட்டமின்மை அமெரிக்கப் பெண்களில் 10-ல் ஒருவருக்கு உள்ளது. அவர்களில் பலர், ஒருபோதும் சிகிச்சையை நாடியதில்லை என்றும் தெரியவந்துள்ளது.
அதுகுறித்து ஆர்ம்ஸ்டிராங், ‘‘பெண்கள் பாலியல் நாட்டமில்லாமல் இருப்பது நோயா என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. சுமார் 60 லட்சம் பெண்களுக்கு மாதவிலக்குக்கு முந்தைய பருவத்தில் இந்தப் பாதிப்பு இருக்கிறது என்றும், தங்களுக்கு மருத்துவக் குறைபாடு இருப்பதையே 95 சதவீதம் பெண்கள் அறிந்திருக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்’’ என்கிறார்.
வைலீசி மருந்தின் பரிசோதனைக் காலத்தில் கவனிக்கப்பட்ட பெரும்பாலான பக்க விளைவுகளில், இதைப் பயன்படுத்திய 40 சதவீதம் பேருக்கு ஓரளவு முதல் தீவிர குமட்டல் இருந்திருக்கிறது. காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட பக்கவிளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. வைலீசி மருந்தின் நீண்டகாலப் பாதிப்புகள் பற்றி மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் பரிசீலிக்கவில்லை என்று மகளிர் ஆரோக்கிய அமைப்புகள் பலவும் குற்றஞ்சாட்டுகின்றன.
இப்போதைக்கு, பாலியல் நாட்டமின்மை பிரச்சினை உள்ள பலர், மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் ஒரு வாரத்தில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தவில்லை. இந்த மருந்து எடுத்துக்கொண்டவர்களில் 25 சத வீதம் பேர் பாலுறவு விருப்பம் அதிகரித்ததாகவும் கூறியுள்ளனர்.
‘உல்லாசத்துக்கான’ இந்த மாத்திரை குறித்த வாத, பிரதிவாதங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் மறுபுறம் இதன் விற்பனையும் கூடிக்கொண்டிருக்கிறது.






