என் மலர்
பெண்கள் மருத்துவம்
நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாக பயந்து இந்த பயமே நோயாக மாறுகிறது.
நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அது பற்றி கூகுளில் சர்ச் செய்தபோது அது இன்னென்ன நோய் என்று தெரியவந்ததாகவும் கூறி, டாக்டர்களிடம் பயத்துடன் ஆலோசனை கேட்கிறார்கள். அது மட்டுமின்றி அவர்களே பரிசோதனை கூடங்களுக்கு சென்று சுயமாக தேவையற்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான பயம் இப்போது பலரையும் சூழ்ந்திருக்கிறது. அந்த பயமே அவர்களுக்கு நோயாக மாறுகிறது.
மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு ‘பைப்ரோ அடினோமா’ என்ற கட்டிகளே இருக்கின்றன. அவை, மார்பகத்தில் அங்கும் இங்குமாக அசையும் மிருதுவான வலியற்ற கட்டிகள். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது.
சுவாசத் தடை ஏற்பட்டாலே அது ஆஸ்துமா தான் என்ற பயம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. ஆனால் இதயத்தையும், சுவாச கட்டமைப்புகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்கள் மூலம் சுவாசத்தடை ஏற்படலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் அனீமியா, சுவாச தடைக்கு முக்கிய காரணமாகும். ரத்தத்தை ‘பம்பிங்’ செய்யும் ஆற்றல் இதயத்திற்கு குறையும்போது ஏற்படும் இதய செயலிழப்பை தொடர்ந்தும் சுவாசத்தடை உருவாகும். தலைசுற்றினால் அதை ஆபத்தின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. தலைசுற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
பல்வேறு வகையான நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை அல்ல. அப்படி ஒருவேளை ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருந்தாலும் அதற்கான சரியான சிகிச்சையை பெறுவதற்கு விழிப்புணர்வுதான் தேவை. அதனால் இல்லாத நோய்களை நினைத்து பெண்கள் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. பயம், இல்லாத நோய்களையும் இருப்பதாக நம்பவைத்து தேவையில்லாத மனஉளைச்சலையும், கவலையையும் எற்படுத்திவிடும்.
அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. அதற்காக உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ஈ.சி.ஜி. எடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. நெஞ்சுக்கூட்டில் நீர்கோர்த்திருத்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் நெஞ்சுவலி ஏற்படுவதுண்டு. சுவாசப் பகுதிகளில் ஏற்படும் நெருக்கடிகளும் நெஞ்சுப் பகுதியில் அவஸ்தைகளை ஏற்படுத்துவதுண்டு. நெஞ்சின் நடுப்பகுதியில் பாரம் ஏற்றியதுபோலவோ, நெஞ்சுப் பகுதி உடைவதுபோலவோ கடுமையான வலி ஏற்படுதல். வேலை செய்யும்போது வலி தோன்றுதல், ஓய்வெடுக்கும்போது வலி அகலுதல். வலியோடு நெஞ்சுப் பகுதியில் துடிப்பு ஏற்படுதல், சுவாச தடை உருவாகுதல், அதிகமாக வியர்த்தல்,நெஞ்சுவலியோடு இடது கைகளுக்கோ, இரு கைகளுக்குமோ, கழுத்துக்கோ வலி பரவுதல் போன்றவை கவனிக்கத்தகுந்தவை.
மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு ‘பைப்ரோ அடினோமா’ என்ற கட்டிகளே இருக்கின்றன. அவை, மார்பகத்தில் அங்கும் இங்குமாக அசையும் மிருதுவான வலியற்ற கட்டிகள். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது.
சுவாசத் தடை ஏற்பட்டாலே அது ஆஸ்துமா தான் என்ற பயம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. ஆனால் இதயத்தையும், சுவாச கட்டமைப்புகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்கள் மூலம் சுவாசத்தடை ஏற்படலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் அனீமியா, சுவாச தடைக்கு முக்கிய காரணமாகும். ரத்தத்தை ‘பம்பிங்’ செய்யும் ஆற்றல் இதயத்திற்கு குறையும்போது ஏற்படும் இதய செயலிழப்பை தொடர்ந்தும் சுவாசத்தடை உருவாகும். தலைசுற்றினால் அதை ஆபத்தின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. தலைசுற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
பல்வேறு வகையான நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை அல்ல. அப்படி ஒருவேளை ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருந்தாலும் அதற்கான சரியான சிகிச்சையை பெறுவதற்கு விழிப்புணர்வுதான் தேவை. அதனால் இல்லாத நோய்களை நினைத்து பெண்கள் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. பயம், இல்லாத நோய்களையும் இருப்பதாக நம்பவைத்து தேவையில்லாத மனஉளைச்சலையும், கவலையையும் எற்படுத்திவிடும்.
அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. அதற்காக உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ஈ.சி.ஜி. எடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. நெஞ்சுக்கூட்டில் நீர்கோர்த்திருத்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் நெஞ்சுவலி ஏற்படுவதுண்டு. சுவாசப் பகுதிகளில் ஏற்படும் நெருக்கடிகளும் நெஞ்சுப் பகுதியில் அவஸ்தைகளை ஏற்படுத்துவதுண்டு. நெஞ்சின் நடுப்பகுதியில் பாரம் ஏற்றியதுபோலவோ, நெஞ்சுப் பகுதி உடைவதுபோலவோ கடுமையான வலி ஏற்படுதல். வேலை செய்யும்போது வலி தோன்றுதல், ஓய்வெடுக்கும்போது வலி அகலுதல். வலியோடு நெஞ்சுப் பகுதியில் துடிப்பு ஏற்படுதல், சுவாச தடை உருவாகுதல், அதிகமாக வியர்த்தல்,நெஞ்சுவலியோடு இடது கைகளுக்கோ, இரு கைகளுக்குமோ, கழுத்துக்கோ வலி பரவுதல் போன்றவை கவனிக்கத்தகுந்தவை.
தாய்மையில் உணர்வுபூர்வமாக நடக்கும் நினைவுகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து ரசிப்பதற்கும், பொக்கிஷமாக பாதுகாப்பதற்கும் தான் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் எனும் பெயரில் தற்போது புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் பதிவு செய்து கொள்கிறார்கள்.
தாய்மை என்பது பெண்களின் வாழ்வில் மறக்கவே முடியாத நிகழ்வு. தான் கருவுற்றிருப்பதை முதன் முதலாக அறிந்ததும், அடிவயிற்றில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்து பறப்பதை உணரும் அந்த தருணம் முதலே அவள் தாய்மையை ரசிக்க ஆரம்பித்து விடுவாள். கன்னிப்பருவத்தில் இருந்து கல்யாணம் ஆகும் வரை எடையும், இடையும் கூடாமல் தங்களை பார்த்துக்கொள்ளும் பெண்கள், தாய்மை அடைந்ததும் வயிறு பெரிதாவதை கண்டு மகிழ்ச்சியில் பூரிக்கும் மாயம் தாய்மையில் மட்டுமே நிகழும்.
முதல் நாளிலிருந்து முன்னூறு நாள் வரை தனக்குள் நடக்கும் மாற்றங்களை மகிழ்ச்சியும் பயமும் கலந்த உணர்வோடு அனுபவிப்பாள். தன் கருவை சுமக்கும் துணையையும், பிறக்கப்போகும் மழலையையும் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் தந்தை ஆயிரம் எதிர்ப்பார்ப்புகளோடு காத்திருப்பார். இப்படி உணர்வுபூர்வமாக நடக்கும் இந்த பயணத்தின் நினைவுகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து ரசிப்பதற்கும், பொக்கிஷமாக பாதுகாப்பதற்கும் தான் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் எனும் பெயரில் தற்போது புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் பதிவு செய்து கொள்கிறார்கள்.
அந்த காலத்தில் கருவுற்ற பெண்ணை அடுத்தவர் பார்வைக்கு கூட வரவிடமாட்டடார்கள். பிறந்த குழந்தைகளை ஒரு வயது நிரம்பும் வரை புகைப்படம் எடுக்க விடமாட்டார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. தங்கள் வாழ்வில் நடக்கும் இனிய நிகழ்வுகளை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் ரசிக்க நினைப்பவர்கள் அதிகம். கர்ப்பகாலத்தின் ஏழாவது மாதம் முதல் வயிறு நன்றாக தெரியும் என்பதால் அப்போதிலிருந்து மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் எடுக்க தொடங்குவார்கள்.
ஒரு சிலர் குழந்தை பிறந்து தவழ்வது நடப்பது வரையுமே பதிவு செய்வார்கள். இதற்காகவே இப்போது நிறைய புகைப்பபடக்கலைஞர்கள் உள்ளனர். சாதாரணமாக வீட்டில் எடுப்பது அல்லது வெளியிடங்ளை தேர்வு செய்து எடுப்பது என்று தங்கள் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ப அற்புதமாக படம் பிடித்து கொடுக்கிறார்கள்.
மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்டில் கர்ப்பமாக இருக்கும் பெண்களோடு அவரின் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரும் இடம் பெறுவார்கள். பிரபலங்கள், திரைப்பட நடிகைகள் மட்டுமே எடுத்துவந்த இத்தகைய புகைப்படங்களை தற்போது அனைத்து தரப்பு மக்களும் எடுத்துக்கொள்கிறார்கள், வாடிக்கையாளரின் விருப்பதை பொறுத்து இடம், அணியும் உடை அனைத்தும் தேர்வு செய்யப்படுகின்றன.
பெரும்பான்மையான தம்பதிகள் இயற்கையான சூழ்நிலையில் படம் பிடிப்பதையே விரும்புகின்றனர். அதிகமாக செலவு செய்து அரங்குகள் அமைத்து பிரமாண்டமாக பதிவு செய்து கொள்பவர்களும் இருக்கின்றனர். இயற்கையான சூழலில் எடுக்கும் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் மிகவும் அருமையாக பதிவாகும். கர்ப்பணி பெண் மற்றும் கணவரின் உணர்வுகளை அருமையாக பதிவு செய்து கொடுப்பது இதில் சிறப்பு.
முதல் நாளிலிருந்து முன்னூறு நாள் வரை தனக்குள் நடக்கும் மாற்றங்களை மகிழ்ச்சியும் பயமும் கலந்த உணர்வோடு அனுபவிப்பாள். தன் கருவை சுமக்கும் துணையையும், பிறக்கப்போகும் மழலையையும் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் தந்தை ஆயிரம் எதிர்ப்பார்ப்புகளோடு காத்திருப்பார். இப்படி உணர்வுபூர்வமாக நடக்கும் இந்த பயணத்தின் நினைவுகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து ரசிப்பதற்கும், பொக்கிஷமாக பாதுகாப்பதற்கும் தான் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் எனும் பெயரில் தற்போது புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் பதிவு செய்து கொள்கிறார்கள்.
அந்த காலத்தில் கருவுற்ற பெண்ணை அடுத்தவர் பார்வைக்கு கூட வரவிடமாட்டடார்கள். பிறந்த குழந்தைகளை ஒரு வயது நிரம்பும் வரை புகைப்படம் எடுக்க விடமாட்டார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. தங்கள் வாழ்வில் நடக்கும் இனிய நிகழ்வுகளை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் ரசிக்க நினைப்பவர்கள் அதிகம். கர்ப்பகாலத்தின் ஏழாவது மாதம் முதல் வயிறு நன்றாக தெரியும் என்பதால் அப்போதிலிருந்து மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் எடுக்க தொடங்குவார்கள்.
ஒரு சிலர் குழந்தை பிறந்து தவழ்வது நடப்பது வரையுமே பதிவு செய்வார்கள். இதற்காகவே இப்போது நிறைய புகைப்பபடக்கலைஞர்கள் உள்ளனர். சாதாரணமாக வீட்டில் எடுப்பது அல்லது வெளியிடங்ளை தேர்வு செய்து எடுப்பது என்று தங்கள் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ப அற்புதமாக படம் பிடித்து கொடுக்கிறார்கள்.
மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்டில் கர்ப்பமாக இருக்கும் பெண்களோடு அவரின் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரும் இடம் பெறுவார்கள். பிரபலங்கள், திரைப்பட நடிகைகள் மட்டுமே எடுத்துவந்த இத்தகைய புகைப்படங்களை தற்போது அனைத்து தரப்பு மக்களும் எடுத்துக்கொள்கிறார்கள், வாடிக்கையாளரின் விருப்பதை பொறுத்து இடம், அணியும் உடை அனைத்தும் தேர்வு செய்யப்படுகின்றன.
பெரும்பான்மையான தம்பதிகள் இயற்கையான சூழ்நிலையில் படம் பிடிப்பதையே விரும்புகின்றனர். அதிகமாக செலவு செய்து அரங்குகள் அமைத்து பிரமாண்டமாக பதிவு செய்து கொள்பவர்களும் இருக்கின்றனர். இயற்கையான சூழலில் எடுக்கும் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் மிகவும் அருமையாக பதிவாகும். கர்ப்பணி பெண் மற்றும் கணவரின் உணர்வுகளை அருமையாக பதிவு செய்து கொடுப்பது இதில் சிறப்பு.
வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது. ஆனால் ‘வயாகரா’ பற்றி அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள் உள்ளன. அவை என்ன தெரியுமா?
உலக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, வயாகரா. ஆண்களின் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தும் இந்த மாத்திரைகளை பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘ஆண்கள் சமூகத்திற்கு கிடைத்த அற்புதம்’ என்றும் இதனை புகழ்கிறார்கள். ஆனால் இது கண்டு பிடிக்கப் பட்ட விதம் ரொம்பவும் வினோதமானது.
பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இதய நோயுள்ளவர்களுக்கு ரத்தத்தை அதிகமாக இதயத் தினுள் செலுத்தும் புதிய மருந்தைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தின் பெயர் ‘சில்டெனபில் சிட்ரேட்’. அதனை மூவாயிரம் பேர் களுக்குக் கொடுத்து ஆய்வு செய்ததில், அந்த மருந்து தோல்விக்குரிய ஒரு கண்டுபிடிப்பு என தெரியவந்தது. அதாவது இதயத்திற்குள் அது அதிக அளவில் ரத்தத்தை செலுத்தவில்லை.
அதே நேரத்தில் அந்த மருந்தை உட்கொண்டவர்கள் தங்களுடைய உடலுறவில் இன்பம் அதிகரித்ததாகக் கூறினர். உடனே அந்த நிறுவனம் அதனை ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கான மருந்தாக ஆராய்ச்சி செய்து, மேம்படுத்தி வயாகரா என்ற பெயரில் வெளியிட்டது. உலகம் முழுவதும் அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஆண்மைக் குறைபாட்டை போக்க பலவகையான மருந்துகள் உள்ளன. எதனால் ஆண்மைக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து அதற்காக பரிந்துரை செய்யப்படும் மருந்தும் மாறுபடும். ஆனால், வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது. அதுவே, பரபரப்புக்கு ஒரு காரணம். வயாகரா சாப்பிடுவதன் மூலம் ரத்த ஓட்டம் குறிப்பிட்ட பகுதிக்கு பாய்ந்து விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.
இதனால் பல்வேறு விதமான பின்விளைவுகளும் தோன்றின. தலைசுற்றல், வாந்தி, மயக்கம், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்பட்டன. இதய நோயுள்ளவர்கள் உயிர் இழக்கும் அபாயமும் ஏற்பட்டது. அதனால் வயாகராவை டாக்டரின் பரிந்துரையின்றி உட்கொள்ளக்கூடாது. நோயில்லாத அமெரிக்க ஆண்களில் நிறைய பேர் இதனை கண்டபடி பயன்படுத்தியதால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின. எய்ட்ஸ் நோய்-பால்வினை நோய்கள் பெருகியதாகவும் கூறப்பட்டது. வயாகரா மாத்திரையை நோயாளிகள் யாரும் பயன்படுத்திவிடக்கூடாது. தற்போது ஆண்மைக் குறைவுக்கு அதைவிட சக்திமிக்க, பின்விளைவுகளற்ற மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இதய நோயுள்ளவர்களுக்கு ரத்தத்தை அதிகமாக இதயத் தினுள் செலுத்தும் புதிய மருந்தைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தின் பெயர் ‘சில்டெனபில் சிட்ரேட்’. அதனை மூவாயிரம் பேர் களுக்குக் கொடுத்து ஆய்வு செய்ததில், அந்த மருந்து தோல்விக்குரிய ஒரு கண்டுபிடிப்பு என தெரியவந்தது. அதாவது இதயத்திற்குள் அது அதிக அளவில் ரத்தத்தை செலுத்தவில்லை.
அதே நேரத்தில் அந்த மருந்தை உட்கொண்டவர்கள் தங்களுடைய உடலுறவில் இன்பம் அதிகரித்ததாகக் கூறினர். உடனே அந்த நிறுவனம் அதனை ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கான மருந்தாக ஆராய்ச்சி செய்து, மேம்படுத்தி வயாகரா என்ற பெயரில் வெளியிட்டது. உலகம் முழுவதும் அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஆண்மைக் குறைபாட்டை போக்க பலவகையான மருந்துகள் உள்ளன. எதனால் ஆண்மைக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து அதற்காக பரிந்துரை செய்யப்படும் மருந்தும் மாறுபடும். ஆனால், வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது. அதுவே, பரபரப்புக்கு ஒரு காரணம். வயாகரா சாப்பிடுவதன் மூலம் ரத்த ஓட்டம் குறிப்பிட்ட பகுதிக்கு பாய்ந்து விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.
இதனால் பல்வேறு விதமான பின்விளைவுகளும் தோன்றின. தலைசுற்றல், வாந்தி, மயக்கம், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்பட்டன. இதய நோயுள்ளவர்கள் உயிர் இழக்கும் அபாயமும் ஏற்பட்டது. அதனால் வயாகராவை டாக்டரின் பரிந்துரையின்றி உட்கொள்ளக்கூடாது. நோயில்லாத அமெரிக்க ஆண்களில் நிறைய பேர் இதனை கண்டபடி பயன்படுத்தியதால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின. எய்ட்ஸ் நோய்-பால்வினை நோய்கள் பெருகியதாகவும் கூறப்பட்டது. வயாகரா மாத்திரையை நோயாளிகள் யாரும் பயன்படுத்திவிடக்கூடாது. தற்போது ஆண்மைக் குறைவுக்கு அதைவிட சக்திமிக்க, பின்விளைவுகளற்ற மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிக்கானவை அல்ல. பெண்கள் தங்கள் இதர உறுப்புகளை பாதுகாத்து, பராமரித்து, அழகுபடுத்த அக்கறை செலுத்துவதுபோல் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிக்கானவை அல்ல. தாய்மைக்கானவை. ஒவ்வொரு பெண்ணும் தாயாகி, தனது குழந்தைகளுக்கு பாலூட்ட படைக்கப்பட்ட உறுப்புகள் அவை. அதே நேரத்தில் பெண்கள் தங்கள் இதர உறுப்புகளை பாதுகாத்து, பராமரித்து, அழகுபடுத்த அக்கறை செலுத்துவதுபோல் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
பெண்களுக்குள் இளம் வயதில் அதிக கேள்விகளை எழுப்பும் உறுப்பாகவும், மனக் குழப்பங்களை உருவாக்கும் உறுப்பாகவும் மார்பகங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள், தங்களுக்கு அவை பெரிதாகிவிட்டால் தங்கள் உடல் அமைப்பு கச்சிதமாக அமைந்துவிடும் என நினைக்கிறார்கள். அதுபோல் பெரிய மார்பகத்தால் அவதிப்படுகிறவர்கள் தங்களுக்கு சிறியதாகிவிட்டால் பெரும் மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்புகிறார்கள். இவை இரண்டிற்கும் இடைபட்ட நிஜங்களையும், அதற்குரிய ஆபரேஷன்களை பற்றியும் பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மார்பகங்களை பெரிதாக்குவதற்கு ஜெனரல் அனஸ்தீஸ்யா கொடுத்து மயக்க நிலைக்கு கொண்டு சென்று, வெளிப்படையாக தழும்புகள் தெரியாத அளவுக்கு மார்புகளின் அடிப்பகுதியிலோ, அக்குள் பகுதியிலோ கீறலை ஏற்படுத்துவார்கள். அதன் உள்ளே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிலிக்கான் இம்பிளான்டினை செலுத்துவார்கள். அதனால் மார்பகங்கள் பெரிய தோற்றத்தினை பெறும். சிலிக்கான் இம்பிளான்ட் எனப்படும் பலூன்கள் முழுவட்டம், அரைவட்டம், உருண்டை போன்ற பலதரப்பட்ட வடிவங்களில் கிடைக்கின்றன. இவை பத்து முதல் பதினெட்டு வருடங்கள் வரை பலன்கொடுக்கும்.
தரமற்ற பலூன்களை மார்பகத்திற்குள் பொருத்திவிட்டால், அவை மார்புக்குள்ளே உடைந்து அவைகளில் இருக்கும் திரவம் பரவிவிடும். சிலிக்கான் பலூனில் மிக நுண்ணிய ஓட்டைகள் இருந்தாலும் சிலிக்கான் திரவம் வெளியேறி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொருத்தப்படும் சிலிக்கான் பலூன்கள் சில வருடங்கள் ஆனதும் சுருண்டு மடங்கிவிடுவதும் உண்டு. சில பெண்களின் உடல் திசுக்கள் சிலிக்கானுக்கு எதிராக செயல்பட்டு அதனை சுற்றிலும் திட்டுப்போன்ற படலத்தை உருவாக்கிவிடவும் செய்யும். சிலருக்கு இந்த இணைப்பினை உருவாக்கிய பின்பு மார்பின் உள்ளே வலியும், கிருமித்தொற்றும் உருவாகிவிடும். இதை எல்லாம் நன்றாக ஆராய்ந்த பின்பே பெண்கள் சிலிக்கான் இம்பிளான்ட் செய்துகொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கவேண்டும்.
வயதாகும்போது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். அப்போது மார்பகத்தின் அளவும் அதிகரித்துவிடும். அதனால் அவர்களது உடல் மெருகு குலைவதோடு மட்டுமல்லாமல், வேறு பல உடல்சார்ந்த அவஸ்தைகளும் ஏற்படும். தொடர்ச்சியாக கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி ஏற்படலாம். பெண்கள் தங்கள் பெரிய மார்பகங்களை ஆபரேஷன் மூலம் சிறிதாக்கலாம். அதற்கு ‘பிரெஸ்ட் டிடெக்ஷன்’ என்று பெயர். அதோடு மார்பகத்தை மேல்நோக்கி தூக்கி நிலைநிறுத்தும் ‘பிரெஸ்ட் லிப்ட்’டும் செய்யலாம்.
சில மணிநேரம் நடக்கும் இந்த ஆபரேஷனில் சில பின்விளைவுகளும் உண்டு. காயத்தில் தொற்று உருவானால் பாதிப்பு ஏற்படும். ஆபரேஷனுக்கு பிறகு தாய்ப்பால் புகட்டுவது சிரமமாகும். மார்பக காம்புகளில் தொடு உணர்ச்சியும் குறையும்.
சில பெண்களுக்கு மார்பக காம்புகள் உள்அமுங்கிய நிலையில் இருக்கும். அதனால் கணவருடன் திருப்தியான தாம்பத்ய உறவு கொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் தங்கள் குழந்தைக்கு பால்புகட்ட முடியாது என்றும் கருதுகிறார்கள். அதெல்லாம் தவறான நம்பிக்கைகள். மார்பக காம்பு உள்அமுங்கியிருந்தால் ‘ஸ்கின் கிரீம்’ பயன்படுத்தி, உள்வட்டத்தில் இருந்து நிதானமாக தினமும் 15 முதல் 30 நிமிடங் கள் மசாஜ் செய்துவரவேண்டும். அதிலும் சரியாகாவிட்டால் சிறிய அளவிலான ஆபரேஷன் தேவைப்படும். இதை நினைத்து பெண்கள் மனக்கலக்கம் அடையவேண்டியதில்லை.
பெண்களில் சிலருக்கு மார்பகம் சரிந்து காணப்படும். சிலருக்கு சிறிய பை போன்றும் தோன்றும். அவர்களுக்கு ‘பிரெஸ்ட் லிப்ட்’, ‘போடோக்ஸ்’, ‘திரெட் லிப்ட்’ போன்றவை பலன்தரும். மார்பகத்தில் இளமையை தக்கவைக்க பிரெஸ்ட் லிப்ட் செய்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் ‘சப்போர்ட் பிரா’ அணிய வேண்டியதிருக்கும். மார்பகம் ஓரளவுதான் தொங்கிய நிலையில் இருக்கிறது என்றால் ‘போடோக்ஸ்’ என்ற ஊசி மருந்து போதுமானது. மார்பக சருமத்தின் அடியில் பிரத்யேக நூலை செலுத்தி மேல்நோக்கி தூக்கி நிறுத்துவது ‘திரெட் லிப்ட்’ எனப்படுகிறது. இது தற்காலிக பலனையே தரும்.
மார்பகங்களை எதிர்கால சந்ததிக்கு தேவையான உணவினை வழங்க இயற்கை படைத்திருக்கிறது. தாய்மையின் அடையாளமாக திகழும் அவைகளை ஆரோக்கியத்தோடும், அழகோடும் பராமரிப்பது மிக அவசியம்.
பெண்களுக்குள் இளம் வயதில் அதிக கேள்விகளை எழுப்பும் உறுப்பாகவும், மனக் குழப்பங்களை உருவாக்கும் உறுப்பாகவும் மார்பகங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள், தங்களுக்கு அவை பெரிதாகிவிட்டால் தங்கள் உடல் அமைப்பு கச்சிதமாக அமைந்துவிடும் என நினைக்கிறார்கள். அதுபோல் பெரிய மார்பகத்தால் அவதிப்படுகிறவர்கள் தங்களுக்கு சிறியதாகிவிட்டால் பெரும் மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்புகிறார்கள். இவை இரண்டிற்கும் இடைபட்ட நிஜங்களையும், அதற்குரிய ஆபரேஷன்களை பற்றியும் பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மார்பகங்களை பெரிதாக்குவதற்கு ஜெனரல் அனஸ்தீஸ்யா கொடுத்து மயக்க நிலைக்கு கொண்டு சென்று, வெளிப்படையாக தழும்புகள் தெரியாத அளவுக்கு மார்புகளின் அடிப்பகுதியிலோ, அக்குள் பகுதியிலோ கீறலை ஏற்படுத்துவார்கள். அதன் உள்ளே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிலிக்கான் இம்பிளான்டினை செலுத்துவார்கள். அதனால் மார்பகங்கள் பெரிய தோற்றத்தினை பெறும். சிலிக்கான் இம்பிளான்ட் எனப்படும் பலூன்கள் முழுவட்டம், அரைவட்டம், உருண்டை போன்ற பலதரப்பட்ட வடிவங்களில் கிடைக்கின்றன. இவை பத்து முதல் பதினெட்டு வருடங்கள் வரை பலன்கொடுக்கும்.
தரமற்ற பலூன்களை மார்பகத்திற்குள் பொருத்திவிட்டால், அவை மார்புக்குள்ளே உடைந்து அவைகளில் இருக்கும் திரவம் பரவிவிடும். சிலிக்கான் பலூனில் மிக நுண்ணிய ஓட்டைகள் இருந்தாலும் சிலிக்கான் திரவம் வெளியேறி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொருத்தப்படும் சிலிக்கான் பலூன்கள் சில வருடங்கள் ஆனதும் சுருண்டு மடங்கிவிடுவதும் உண்டு. சில பெண்களின் உடல் திசுக்கள் சிலிக்கானுக்கு எதிராக செயல்பட்டு அதனை சுற்றிலும் திட்டுப்போன்ற படலத்தை உருவாக்கிவிடவும் செய்யும். சிலருக்கு இந்த இணைப்பினை உருவாக்கிய பின்பு மார்பின் உள்ளே வலியும், கிருமித்தொற்றும் உருவாகிவிடும். இதை எல்லாம் நன்றாக ஆராய்ந்த பின்பே பெண்கள் சிலிக்கான் இம்பிளான்ட் செய்துகொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கவேண்டும்.
வயதாகும்போது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். அப்போது மார்பகத்தின் அளவும் அதிகரித்துவிடும். அதனால் அவர்களது உடல் மெருகு குலைவதோடு மட்டுமல்லாமல், வேறு பல உடல்சார்ந்த அவஸ்தைகளும் ஏற்படும். தொடர்ச்சியாக கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி ஏற்படலாம். பெண்கள் தங்கள் பெரிய மார்பகங்களை ஆபரேஷன் மூலம் சிறிதாக்கலாம். அதற்கு ‘பிரெஸ்ட் டிடெக்ஷன்’ என்று பெயர். அதோடு மார்பகத்தை மேல்நோக்கி தூக்கி நிலைநிறுத்தும் ‘பிரெஸ்ட் லிப்ட்’டும் செய்யலாம்.
சில மணிநேரம் நடக்கும் இந்த ஆபரேஷனில் சில பின்விளைவுகளும் உண்டு. காயத்தில் தொற்று உருவானால் பாதிப்பு ஏற்படும். ஆபரேஷனுக்கு பிறகு தாய்ப்பால் புகட்டுவது சிரமமாகும். மார்பக காம்புகளில் தொடு உணர்ச்சியும் குறையும்.
சில பெண்களுக்கு மார்பக காம்புகள் உள்அமுங்கிய நிலையில் இருக்கும். அதனால் கணவருடன் திருப்தியான தாம்பத்ய உறவு கொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் தங்கள் குழந்தைக்கு பால்புகட்ட முடியாது என்றும் கருதுகிறார்கள். அதெல்லாம் தவறான நம்பிக்கைகள். மார்பக காம்பு உள்அமுங்கியிருந்தால் ‘ஸ்கின் கிரீம்’ பயன்படுத்தி, உள்வட்டத்தில் இருந்து நிதானமாக தினமும் 15 முதல் 30 நிமிடங் கள் மசாஜ் செய்துவரவேண்டும். அதிலும் சரியாகாவிட்டால் சிறிய அளவிலான ஆபரேஷன் தேவைப்படும். இதை நினைத்து பெண்கள் மனக்கலக்கம் அடையவேண்டியதில்லை.
பெண்களில் சிலருக்கு மார்பகம் சரிந்து காணப்படும். சிலருக்கு சிறிய பை போன்றும் தோன்றும். அவர்களுக்கு ‘பிரெஸ்ட் லிப்ட்’, ‘போடோக்ஸ்’, ‘திரெட் லிப்ட்’ போன்றவை பலன்தரும். மார்பகத்தில் இளமையை தக்கவைக்க பிரெஸ்ட் லிப்ட் செய்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் ‘சப்போர்ட் பிரா’ அணிய வேண்டியதிருக்கும். மார்பகம் ஓரளவுதான் தொங்கிய நிலையில் இருக்கிறது என்றால் ‘போடோக்ஸ்’ என்ற ஊசி மருந்து போதுமானது. மார்பக சருமத்தின் அடியில் பிரத்யேக நூலை செலுத்தி மேல்நோக்கி தூக்கி நிறுத்துவது ‘திரெட் லிப்ட்’ எனப்படுகிறது. இது தற்காலிக பலனையே தரும்.
மார்பகங்களை எதிர்கால சந்ததிக்கு தேவையான உணவினை வழங்க இயற்கை படைத்திருக்கிறது. தாய்மையின் அடையாளமாக திகழும் அவைகளை ஆரோக்கியத்தோடும், அழகோடும் பராமரிப்பது மிக அவசியம்.
கணவரிடம் புகைப்பழக்கம் இருந்தால் அது மனைவியின் கருவைப் பாதிக்கும். அதன் மூலம் மனைவி கர்ப்பம்தரிக்கும்போது பிறவிக் குறைபாடு கொண்ட குழந்தை பிறக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
கணவரிடம் புகைப்பழக்கம் இருந்தால் அது மனைவியின் கருவைப் பாதிக்கும். புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் ஆண்களின் உயிரணுக்களைப் பாதிப்பதால், அவர்களுக்கு குறைபாடான அணுக்கள் உருவாகும். அதன் மூலம் மனைவி கர்ப்பம்தரிக்கும்போது பிறவிக் குறைபாடு கொண்ட குழந்தை பிறக்கும் சூழ்நிலை ஏற்படலாம். குழந்தை எடை குறைவாகவும் பிறக்க நேரிடும். புகையிலையின் பாதிப்பு உள்ளவர்களின் குழந்தை, அப்பழக்கம் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைவிட இருநூறு கிராம் குறைவான எடையுடன் இருக்கும்.
கணவர் வெளியிடும் புகையை மனைவியும் சுவாசிக்கும் சூழ் நிலை உருவாகும். மனைவி கர்ப்பிணியாக இருக்கும்போது, சுவாசத்தின் வழியாக உள்ளே செல்லும் நிக்கோட்டின் நச்சு கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு, மனைவியின் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் குழந்தைக்குச் செல்லும் ஆக்சிஜனில் பற்றாக்குறை தோன்றும். இதன் விளைவாக, குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கும் சூழ்நிலை உருவாகலாம்.
அதோடு பிரசவத்தின்போது, தாய் வேறு சில நெருக்கடியான கட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் மனைவி ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்களும், எதிர்கால வாரிசு நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களும் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்துவிடுபடவேண்டும். அவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது, அவர்களது எதிர்கால சந்ததியின் சிறப்பான வாழ்க்கைக்கு வழங்கும் பரிசாக இருக்கும்.
அதுபோல் உறவுக்குள் திருமணம் செய்து கொள்வதையும் முடிந்த அளவு தவிர்த்திடவேண்டும். உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளும்போது ரத்தம் வழியாக பல பரம்பரை நோய்கள் கடத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். அந்த ஜோடிகளுக்குள் ரத்தப்பொருத்தம் சரியாக அமையாவிட்டால், பெண்ணின் வயிற்றிலே குழந்தை இறக்கும் நிலையும் ஏற்படலாம். இப்படி பலவிதமான சிக்கல்கள் இருப்பதால் பெரும்பாலானவர்கள் உறவுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை.
திருமணமான இளம்பெண்களில் பலர் தொடக்கத்தில் தாங்கள் கருத்தரித்திருப்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள். சில அறிகுறிகளை வைத்து கர்ப்பமாகியிருப்பதை உணர்ந்து கொள்ளலாம். மாதவிலக்கு தள்ளிப்போகுதல், குமட்டல், உடல் நலன் குன்றியிருப்பது போன்ற உணர்வைத் தரும் மசக்கை, அடிக்கடி சிறுநீர் பிரிதல், புண்ணோ- எரிச்சலோ இல்லாமல் வெள்ளைப்படுதல், வாசனையைக் கண்டால் தலைச்சுற்றுதல் போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும்.
கர்ப்பமாகிவிட்டால் மார்பகங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகும். மார்பகங்கள் பெரியதாவதோடு வலி மற்றும் உறுத்தல் தோன்றும். மார்பக நரம்புகள் புடைத்தும், காம்புகள் கறுப்பாகியும், முன்பக்கம் சற்று நீட்டியவாறும் மாறும். மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். புளி, களிமண் அல்லது ஐஸ்கட்டி போன்ற வழக்கத்துக்கு மாறான பொருள்களை சுவைக்கும் ஆசை ஏற்படலாம்.
இவைதவிர, நாட்கள் செல்லும்போது வயிறு பெருத்தல், கரு நெளிதல் போன்ற அறிகுறிகளும் தென்படும். அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறி ஏற்படும் என்று சொல்லமுடியாது. கர்ப்பத்தை துல்லியமாக அறிந்துகொள்ள அதற்குரிய பரிசோதனையை பெண்கள் மேற்கொள்ளவேண்டும்.
கணவர் வெளியிடும் புகையை மனைவியும் சுவாசிக்கும் சூழ் நிலை உருவாகும். மனைவி கர்ப்பிணியாக இருக்கும்போது, சுவாசத்தின் வழியாக உள்ளே செல்லும் நிக்கோட்டின் நச்சு கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு, மனைவியின் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் குழந்தைக்குச் செல்லும் ஆக்சிஜனில் பற்றாக்குறை தோன்றும். இதன் விளைவாக, குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கும் சூழ்நிலை உருவாகலாம்.
அதோடு பிரசவத்தின்போது, தாய் வேறு சில நெருக்கடியான கட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் மனைவி ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்களும், எதிர்கால வாரிசு நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களும் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்துவிடுபடவேண்டும். அவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது, அவர்களது எதிர்கால சந்ததியின் சிறப்பான வாழ்க்கைக்கு வழங்கும் பரிசாக இருக்கும்.
அதுபோல் உறவுக்குள் திருமணம் செய்து கொள்வதையும் முடிந்த அளவு தவிர்த்திடவேண்டும். உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளும்போது ரத்தம் வழியாக பல பரம்பரை நோய்கள் கடத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். அந்த ஜோடிகளுக்குள் ரத்தப்பொருத்தம் சரியாக அமையாவிட்டால், பெண்ணின் வயிற்றிலே குழந்தை இறக்கும் நிலையும் ஏற்படலாம். இப்படி பலவிதமான சிக்கல்கள் இருப்பதால் பெரும்பாலானவர்கள் உறவுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை.
திருமணமான இளம்பெண்களில் பலர் தொடக்கத்தில் தாங்கள் கருத்தரித்திருப்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள். சில அறிகுறிகளை வைத்து கர்ப்பமாகியிருப்பதை உணர்ந்து கொள்ளலாம். மாதவிலக்கு தள்ளிப்போகுதல், குமட்டல், உடல் நலன் குன்றியிருப்பது போன்ற உணர்வைத் தரும் மசக்கை, அடிக்கடி சிறுநீர் பிரிதல், புண்ணோ- எரிச்சலோ இல்லாமல் வெள்ளைப்படுதல், வாசனையைக் கண்டால் தலைச்சுற்றுதல் போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும்.
கர்ப்பமாகிவிட்டால் மார்பகங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகும். மார்பகங்கள் பெரியதாவதோடு வலி மற்றும் உறுத்தல் தோன்றும். மார்பக நரம்புகள் புடைத்தும், காம்புகள் கறுப்பாகியும், முன்பக்கம் சற்று நீட்டியவாறும் மாறும். மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். புளி, களிமண் அல்லது ஐஸ்கட்டி போன்ற வழக்கத்துக்கு மாறான பொருள்களை சுவைக்கும் ஆசை ஏற்படலாம்.
இவைதவிர, நாட்கள் செல்லும்போது வயிறு பெருத்தல், கரு நெளிதல் போன்ற அறிகுறிகளும் தென்படும். அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறி ஏற்படும் என்று சொல்லமுடியாது. கர்ப்பத்தை துல்லியமாக அறிந்துகொள்ள அதற்குரிய பரிசோதனையை பெண்கள் மேற்கொள்ளவேண்டும்.
கருப்பை புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. கருப்பையின் ஆரோக்கியத்திற்கு முறையான உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் முக்கியமானது.
கருப்பை புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஆரம்ப நிலையில் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் இந்த நோயில் இருந்து மீண்டு விடலாம்.
பொதுவாக மாதவிடாய் முடிவடையும் காலகட்டத்தில் கருப்பையில் வீக்கம் ஏற்படக்கூடும். குறிப்பாக 50 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களின் கருப்பையில் வீக்கம் தோன்றலாம். அதுபோல் கருத்தரிக்கும் காலகட்டத்திலும் கருப்பையில் வீக்கம் தோன்றக் கூடும். கருப்பையின் உள் பகுதியில் இருக்கும் எண்டோமெட்ரியத்தின் செல்கள் அசாதரணமாக வளரும்போது எண்டோமெட்ரியல் புற்றுநோய் உருவாகும். இந்த புற்றுநோய் பெண்கள் தாய்மை அடையும் திறனை அழிக்கக்கூடும்.
மாதவிடாய் காலம் தவிர மற்ற சமயத்தில் திடீரென்று உறுப்பு பகுதியில் ரத்தப்போக்கு அல்லது வேறு திரவம் வெளியேறுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் அது எண்டோமெட்ரியல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டால் பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுவதும் எண்டோமெட்ரியல் புற்றுநோயின் ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கலாம்.
வறுத்த, பொரித்த உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவது, உடல் உழைப்பு இல்லாதது, மன அழுத்தத்தை எதிர்கொள்வது போன்றவையும் கருப்பையில் வீக்கம் ஏற்பட காரணமாக இருக்கின்றன. அதனால் கருத்தரிக்க முடியாமை, கருப்பை புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இது தவிர கருப்பையில் ஏற்படும் அழற்சியும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வயிற்று பிடிப்பு, மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்குடன் வலி, அடிவயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு, உடல் பலவீனம், இடுப்பை சுற்றி கொழுப்பு படிவது, கால்வலி, வீக்கம், உடல் உறவின்போது கடுமையான வலி போன்றவை கருப்பை அழற்சிக்கான அறிகுறிகளாகும்.
கருப்பையின் ஆரோக்கியத்திற்கு முறையான உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் முக்கியமானது. போதிய உடல் உழைப்பு இல்லாவிட்டாலோ, உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலோ கருப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ரத்தம் சரியாக சென்றடையாது. அதாவது உடல் இயக்க செயல்பாடு இல்லாவிட்டால் கருப்பை தசைகள் பலவீனமடைந்துவிடும்.
தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அது போல் எளிமையான உடற்பயிற்சிகளையாவது சில நிமிடங்கள் செய்ய வேண் டும். அவ்வாறு செய்து வந்தால் கருப்பை தசைகள் நெகிழ்வடையும். யோகா செய்வதும் பயனுள்ளதாக இருக்கும்.
கருப்பை வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும். பழச்சாறு மற்றும் காய்கறிகளை சாறு எடுத்து பருகலாம். இவை கருப்பை வீக்கத்திற்கு நிவாரணமளிக்கும். கருப்பையின் ஆரோக்கியத்திற்கு வேப்ப இலைகளை பயன்படுத்தலாம்.
ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிதளவு இஞ்சியை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து காபியாக தயாரித்து வாரத்தில் ஓரிருநாட்கள் பருகலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பாலில் ஆளி விதைகளை சேர்த்து கொதிக்கவைத்தும் பருகலாம். பாலில் மஞ்சள் கலந்து தினமும் இரண்டு வேளை பருகுவதும் நல்லது. பாதாம் பால் பருகுவதும் இதமளிக்கும்.
பொதுவாக மாதவிடாய் முடிவடையும் காலகட்டத்தில் கருப்பையில் வீக்கம் ஏற்படக்கூடும். குறிப்பாக 50 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களின் கருப்பையில் வீக்கம் தோன்றலாம். அதுபோல் கருத்தரிக்கும் காலகட்டத்திலும் கருப்பையில் வீக்கம் தோன்றக் கூடும். கருப்பையின் உள் பகுதியில் இருக்கும் எண்டோமெட்ரியத்தின் செல்கள் அசாதரணமாக வளரும்போது எண்டோமெட்ரியல் புற்றுநோய் உருவாகும். இந்த புற்றுநோய் பெண்கள் தாய்மை அடையும் திறனை அழிக்கக்கூடும்.
மாதவிடாய் காலம் தவிர மற்ற சமயத்தில் திடீரென்று உறுப்பு பகுதியில் ரத்தப்போக்கு அல்லது வேறு திரவம் வெளியேறுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் அது எண்டோமெட்ரியல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டால் பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுவதும் எண்டோமெட்ரியல் புற்றுநோயின் ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கலாம்.
வறுத்த, பொரித்த உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவது, உடல் உழைப்பு இல்லாதது, மன அழுத்தத்தை எதிர்கொள்வது போன்றவையும் கருப்பையில் வீக்கம் ஏற்பட காரணமாக இருக்கின்றன. அதனால் கருத்தரிக்க முடியாமை, கருப்பை புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இது தவிர கருப்பையில் ஏற்படும் அழற்சியும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வயிற்று பிடிப்பு, மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்குடன் வலி, அடிவயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு, உடல் பலவீனம், இடுப்பை சுற்றி கொழுப்பு படிவது, கால்வலி, வீக்கம், உடல் உறவின்போது கடுமையான வலி போன்றவை கருப்பை அழற்சிக்கான அறிகுறிகளாகும்.
கருப்பையின் ஆரோக்கியத்திற்கு முறையான உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் முக்கியமானது. போதிய உடல் உழைப்பு இல்லாவிட்டாலோ, உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலோ கருப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ரத்தம் சரியாக சென்றடையாது. அதாவது உடல் இயக்க செயல்பாடு இல்லாவிட்டால் கருப்பை தசைகள் பலவீனமடைந்துவிடும்.
தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அது போல் எளிமையான உடற்பயிற்சிகளையாவது சில நிமிடங்கள் செய்ய வேண் டும். அவ்வாறு செய்து வந்தால் கருப்பை தசைகள் நெகிழ்வடையும். யோகா செய்வதும் பயனுள்ளதாக இருக்கும்.
கருப்பை வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும். பழச்சாறு மற்றும் காய்கறிகளை சாறு எடுத்து பருகலாம். இவை கருப்பை வீக்கத்திற்கு நிவாரணமளிக்கும். கருப்பையின் ஆரோக்கியத்திற்கு வேப்ப இலைகளை பயன்படுத்தலாம்.
ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிதளவு இஞ்சியை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து காபியாக தயாரித்து வாரத்தில் ஓரிருநாட்கள் பருகலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பாலில் ஆளி விதைகளை சேர்த்து கொதிக்கவைத்தும் பருகலாம். பாலில் மஞ்சள் கலந்து தினமும் இரண்டு வேளை பருகுவதும் நல்லது. பாதாம் பால் பருகுவதும் இதமளிக்கும்.
பருவடைதல் மனமும் உடலும் சேர்ந்து மாற்றம் பெறும் நேரம். இந்த நேரத்தில் உணவு விஷயத்தில் என்னவெல்லாம் சேர்க்க வேண்டும் என தெரியுமா?
பருவடைதல் மனமும் உடலும் சேர்ந்து மாற்றம் பெறும் நேரம். இந்த நேரத்தில் மனதிற்கும் உடலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது பெண்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய பருவம். இந்த நேரத்தில் உணவு விஷயத்தில் என்னவெல்லாம் சேர்க்க வேண்டும் என தெரியுமா?
புரதத்திற்கு பருப்பு வகைகளையும், கால்சியத்திற்கு முருங்கைக்கீரை சேர்த்த கேழ்வரகு அடை, இவற்றையும் துத்தநாகத்திற்கு எள்ளையும், வாரத்திற்கு இரண்டு முறை சேர்த்து கொள்ளலாம்.
வாரத்தில் மூன்று நாட்கள் ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள கீரை மசியல், கீரைப்பொரியல் என கீரையைப்பருப்புடன் சேர்த்து சேர்த்து கொள்ள வேண்டும். முடியாத பட்சத்தில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றை துவையலாகவோ, சட்னியாகவோ சேர்த்து கொள்ளலாம்.
வாரம் ஒருமுறை மீன் சேர்த்து கொள்ள வேண்டும். பொரித்த மீனை விட குழம்பு வைத்த மீன் சேர்த்து கொள்வது நல்லது. அதிலும் புரதம் அதிகம் இருக்கும் சிறிய வகை மீன்கள் நல்லது.
தினமும் ஒரு முட்டை எடுத்துக்கொள்வது நல்லது. சைவ உணவு உண்பவர்கள் பருப்பை கட்டாயம் தினமும் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
எள், வால்நட், பாதாம், முந்திரி இவற்றுடன் உலர் திராட்சையும் பேரீச்சம்பழமும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்து கொள்ள வேண்டும். தினம் ஒரு உருண்டை சாப்பிடலாம்.
புரதத்திற்கு பருப்பு வகைகளையும், கால்சியத்திற்கு முருங்கைக்கீரை சேர்த்த கேழ்வரகு அடை, இவற்றையும் துத்தநாகத்திற்கு எள்ளையும், வாரத்திற்கு இரண்டு முறை சேர்த்து கொள்ளலாம்.
வாரத்தில் மூன்று நாட்கள் ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள கீரை மசியல், கீரைப்பொரியல் என கீரையைப்பருப்புடன் சேர்த்து சேர்த்து கொள்ள வேண்டும். முடியாத பட்சத்தில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றை துவையலாகவோ, சட்னியாகவோ சேர்த்து கொள்ளலாம்.
வாரம் ஒருமுறை மீன் சேர்த்து கொள்ள வேண்டும். பொரித்த மீனை விட குழம்பு வைத்த மீன் சேர்த்து கொள்வது நல்லது. அதிலும் புரதம் அதிகம் இருக்கும் சிறிய வகை மீன்கள் நல்லது.
தினமும் ஒரு முட்டை எடுத்துக்கொள்வது நல்லது. சைவ உணவு உண்பவர்கள் பருப்பை கட்டாயம் தினமும் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
எள், வால்நட், பாதாம், முந்திரி இவற்றுடன் உலர் திராட்சையும் பேரீச்சம்பழமும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்து கொள்ள வேண்டும். தினம் ஒரு உருண்டை சாப்பிடலாம்.
நமது உடல் ஆரோக்கியமாக இயங்க மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்களுள் முக்கியமானவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். மார்பக புற்றுநோயை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எந்த உணவுகளில் உள்ளது என்று பார்க்கலாம்.
இன்றைய உலகில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மார்பக புற்றுநோய் உருவாகிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோயால் லட்சக்கணக்கில் மரணம் ஏற்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு அதிக அளவில் இந்த நோய் ஏற்படுகிறது. புற்றுநோயை குணப்படுத்தும் அரிய மருத்துவ முறைகள் தற்போது வந்து விட்டன. சித்த மற்றும் ஆங்கில முறை இணைந்த நவீன மருத்துவம் மூலம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்துவதுடன் திரும்பவும் வராமல் செய்து விடலாம்.
நமது உடல் ஆரோக்கியமாக இயங்க மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்களுள் முக்கியமானவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். இவற்றை நம் உடலால் தயாரிக்க முடியாது. உணவு மூலம் மட்டுமே பெறமுடியும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டுக்கும், பார்வைத்திறனுக்கும் முக்கியமானவை. கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் இவை போதுமான அளவு கிடைக்கவில்லையென்றால் அது குழந்தையின் அறிவுக்கூர்மையை பாதிக்கும். இவை பெண்களுக்கு ஏற்படும்மூளை வளர்ச்சி குறைபாடு போனறவற்றை தடுப்பதோடு, சில வகை நோய்கள் ஏற்படாமலும் காக்கின்றன.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நமக்கு எளிதில் கிடைக்கும் பல உணவுகளில் அதிக அளவில் உள்ளன. சோயா பீன்ஸ், வால்நட், மத்தி மீன், மீன் எண்ணெய், ஆளிவிரை, முட்டை, கீரை வகைகள், முளைகட்டிய தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் குறிப்பாக பச்சை புல் சாப்பிடும் விலங்குகளில் பால் போன்றவற்றில் அதிகம் உள்ளன.
புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது கறிவேப்பிலை. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட ப்ராக்கோலி சாப்பிட்டால். இது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.
பப்பாளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால் அதனை உட்கொண்டால் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம்.
நமது உடல் ஆரோக்கியமாக இயங்க மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்களுள் முக்கியமானவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். இவற்றை நம் உடலால் தயாரிக்க முடியாது. உணவு மூலம் மட்டுமே பெறமுடியும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டுக்கும், பார்வைத்திறனுக்கும் முக்கியமானவை. கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் இவை போதுமான அளவு கிடைக்கவில்லையென்றால் அது குழந்தையின் அறிவுக்கூர்மையை பாதிக்கும். இவை பெண்களுக்கு ஏற்படும்மூளை வளர்ச்சி குறைபாடு போனறவற்றை தடுப்பதோடு, சில வகை நோய்கள் ஏற்படாமலும் காக்கின்றன.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நமக்கு எளிதில் கிடைக்கும் பல உணவுகளில் அதிக அளவில் உள்ளன. சோயா பீன்ஸ், வால்நட், மத்தி மீன், மீன் எண்ணெய், ஆளிவிரை, முட்டை, கீரை வகைகள், முளைகட்டிய தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் குறிப்பாக பச்சை புல் சாப்பிடும் விலங்குகளில் பால் போன்றவற்றில் அதிகம் உள்ளன.
புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது கறிவேப்பிலை. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட ப்ராக்கோலி சாப்பிட்டால். இது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.
பப்பாளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால் அதனை உட்கொண்டால் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம்.
ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து என்றெல்லாம் குழந்தைகள் பிறக்கிறதே, அதற்கு என்ன காரணம் எனக்கேட்டால், எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம்தான், என்கிறார்கள், மருத்துவர்கள்.
சின்ன வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாமல் அச்சு அசலாக ஒரேமாதிரி பிறக்கும் இரட்டை குழந்தைகளை ‘யூனியோவலர்ட் ட்வின்ஸ்’ என்று மருத்துவ உலகில் அழைக்கிறார்கள்.
பெலோப்பியன் குழாயில் இருக்கும் கருமுட்டையோடு ஆணின் உயிரணு சேர்ந்து கருவானவுடனே அந்தக் கரு எதிர்பாராத விதமாக இரண்டாக உடைந்துவிடும். உடைந்த கருவின் இரண்டு பகுதிகளும் தனித்தனி கருவாக செல் பிரிந்து வளர்ந்து கொண்டு போய் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது.
ஒரே கரு இரண்டாக உடைந்து உருவாவதால் இரட்டை குழந்தைகள் என்றாலும், நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்த கரு சில சமயம் இரண்டாக உடையும்போது சரியாக பிரியாமல், லேசாக ஒட்டியபடியே நின்றுவிடும். இப்படியாக ஒட்டிப்பிறக்கும் இரட்டை குழந்தைகளை ‘சயாமிஸ் ட்வின்ஸ்' என்கிறார்கள்.
குழந்தைகள் எந்த அளவிற்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்து அந்த குழந்தைகள் இருவருக்கும் ஒரே இதயம், இரண்டு சிறுநீரகம்,, இரண்டே கால்கள் என்று அமைகின்றன.
இன்னொரு வகையான இரட்டை பிறவியும் இருக்கிறது. இதில் ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் கூட பிறக்கும். ஒன்று சிவப்பாகவும் மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும். இப்படி ஒன்றுக்கொன்று கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘பைனோவளர் ட்வின்ஸ்' என்று அழைக்கிறார்கள்.
இரட்டையர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரே மாதிரியாக பிறக்கும் இரட்டையர்களைவிட இருவருக்கும் சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்களே உலகில் அதிகம்.
இந்த வகை இரட்டைக்குழந்தைகள் உருவாவதற்கு காரணம் பெண்ணின் சினைப் பையில் பொதுவாக ஒரு கரு முட்டை மட்டுமே வெடித்து வெளிவரும். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இரண்டு கரு முட்டைகள் வெடித்து வெளியே வரும். அவை ஆணின் உயிரணுவோடு தனித்தனியாக சேர்ந்து இரண்டு கருவாகி ஒரே சமயத்தில் பிறப்பதுதான் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயலில் இருக்கும்.
இதெல்லாம் சரி, ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து என்றெல்லாம் குழந்தைகள் பிறக்கிறதே, அதற்கு என்ன காரணம் எனக்கேட்டால், எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம்தான், என்கிறார்கள், மருத்துவர்கள். குழந்தை பிறப்புக்காக கருமுட்டையை வெடிக்கச் செய்யும் ஊசிகளை போடும்போது ஒரு கருமுட்டைக்கு பதிலாக நான்கைந்து கருமுட்டைகளை வெடிக்கச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அந்த மருந்தின் வீரியம் ஒரே சமயத்தில் ஏழு முட்டைகளைக்கூட வெடிக்கச் செய்துவிடுகிறது.
இதுவரை ஒரே பிரசவத்தில் அதிகபட்சமாக 8 குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த குழந்தைகளை பிரசவித்த பெண்ணின் பெயர் நாடிய சுலேமன். 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றெடுத்து அவர் சாதனை செய்துள்ளார்.
பெலோப்பியன் குழாயில் இருக்கும் கருமுட்டையோடு ஆணின் உயிரணு சேர்ந்து கருவானவுடனே அந்தக் கரு எதிர்பாராத விதமாக இரண்டாக உடைந்துவிடும். உடைந்த கருவின் இரண்டு பகுதிகளும் தனித்தனி கருவாக செல் பிரிந்து வளர்ந்து கொண்டு போய் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது.
ஒரே கரு இரண்டாக உடைந்து உருவாவதால் இரட்டை குழந்தைகள் என்றாலும், நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்த கரு சில சமயம் இரண்டாக உடையும்போது சரியாக பிரியாமல், லேசாக ஒட்டியபடியே நின்றுவிடும். இப்படியாக ஒட்டிப்பிறக்கும் இரட்டை குழந்தைகளை ‘சயாமிஸ் ட்வின்ஸ்' என்கிறார்கள்.
குழந்தைகள் எந்த அளவிற்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்து அந்த குழந்தைகள் இருவருக்கும் ஒரே இதயம், இரண்டு சிறுநீரகம்,, இரண்டே கால்கள் என்று அமைகின்றன.
இன்னொரு வகையான இரட்டை பிறவியும் இருக்கிறது. இதில் ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் கூட பிறக்கும். ஒன்று சிவப்பாகவும் மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும். இப்படி ஒன்றுக்கொன்று கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘பைனோவளர் ட்வின்ஸ்' என்று அழைக்கிறார்கள்.
இரட்டையர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரே மாதிரியாக பிறக்கும் இரட்டையர்களைவிட இருவருக்கும் சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்களே உலகில் அதிகம்.
இந்த வகை இரட்டைக்குழந்தைகள் உருவாவதற்கு காரணம் பெண்ணின் சினைப் பையில் பொதுவாக ஒரு கரு முட்டை மட்டுமே வெடித்து வெளிவரும். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இரண்டு கரு முட்டைகள் வெடித்து வெளியே வரும். அவை ஆணின் உயிரணுவோடு தனித்தனியாக சேர்ந்து இரண்டு கருவாகி ஒரே சமயத்தில் பிறப்பதுதான் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயலில் இருக்கும்.
இதெல்லாம் சரி, ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து என்றெல்லாம் குழந்தைகள் பிறக்கிறதே, அதற்கு என்ன காரணம் எனக்கேட்டால், எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம்தான், என்கிறார்கள், மருத்துவர்கள். குழந்தை பிறப்புக்காக கருமுட்டையை வெடிக்கச் செய்யும் ஊசிகளை போடும்போது ஒரு கருமுட்டைக்கு பதிலாக நான்கைந்து கருமுட்டைகளை வெடிக்கச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அந்த மருந்தின் வீரியம் ஒரே சமயத்தில் ஏழு முட்டைகளைக்கூட வெடிக்கச் செய்துவிடுகிறது.
இதுவரை ஒரே பிரசவத்தில் அதிகபட்சமாக 8 குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த குழந்தைகளை பிரசவித்த பெண்ணின் பெயர் நாடிய சுலேமன். 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றெடுத்து அவர் சாதனை செய்துள்ளார்.
மாதவிடாய் நாட்களில் வலி, வீக்கம், பதற்றம், மனச்சோர்வு, முதுகுவலி போன்ற பாதிப்புகளை பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் என்னென்ன உணவுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?
மாதவிடாய் நாட்களில் வலி, வீக்கம், பதற்றம், மனச்சோர்வு, முதுகுவலி போன்ற பாதிப்புகளை பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்கிறார்கள். மாதவிடாயின்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு கூடும். புரோஜெஸ்டிரானும் உயர்ந்து செரிமான செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் நெருங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பே அதற்கான அறிகுறிகள் தென்படும். மாதவிடாய் காலத்தில் என்னென்ன உணவுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?
* உப்பில் சோடியம் உள்ளது. அது மாதவிடாய் காலகட்டத்தில் உடலில் உள்ள தண்ணீரின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாக வயிற்று பகுதியில் வலி உண்டாகும். எனவே அந்த நாட்களில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உப்பு சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடியம் கலந்த உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும்.
* காபி பருகுவதும் வலியை அதிகப்படுத்திவிடும். மாதவிடாய் கால பிற நோய்த்தொற்று அறிகுறிகளையும் அதிகப்படுத்திவிடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காபி உட்கொள்வதற்கு பதிலாக தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவும்.
* காய்கறிகள், கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழங்கள், வெண்ணெய், தக்காளி போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவு களை உட்கொள்ள வேண்டும். இவை வலியை குறைக்க உதவும். மேலும் உடலில் சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்தவும் பொட்டாசியம் உதவும். தேவையற்ற கழிவுகளை சிறுநீர் வழியாக அதிகம் வெளியேற்றவும் வழிவகுக்கும். மாதவிடாய் நாட்கள் நெருங்கும்போதே இத்தகைய உணவு பழக்கத்தை பின்பற்ற தொடங்கிவிட வேண்டும்.
* வெள்ளை மாவு மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளில் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கும். அதனால் இன்சுலின் அளவும் அதிகமாகும். சிறுநீரகங்களும் அதிக சோடியத்தை தக்கவைக்கும் நிலை உருவாகும். எனவே மாதவிடாய் சமயத்தில் கார்போஹைட்ரேட் கலந்த உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
* உடற்பயிற்சி செய்வதையும் அந்த நாட்களில் தவிர்க்கக்கூடாது. சிறிது நேரம் செய்யும் உடற்பயிற்சிகள் கூட உடலுக்கு இதமளிக்கும். வலி, வீக்கம், தசைபிடிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை கையாளவும் உதவும். அதற்காக கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதில்லை. வீட்டுக்குள் கூட நடைப்பயிற்சி செய்யலாம். வீட்டு வேலைகளையும் செய்யலாம். பாலசனா, உத்ராசனா, புஜங்காசனா போன்ற யோகாசனங்களையும் செய்யலாம்.
* உப்பில் சோடியம் உள்ளது. அது மாதவிடாய் காலகட்டத்தில் உடலில் உள்ள தண்ணீரின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாக வயிற்று பகுதியில் வலி உண்டாகும். எனவே அந்த நாட்களில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உப்பு சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடியம் கலந்த உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும்.
* காபி பருகுவதும் வலியை அதிகப்படுத்திவிடும். மாதவிடாய் கால பிற நோய்த்தொற்று அறிகுறிகளையும் அதிகப்படுத்திவிடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காபி உட்கொள்வதற்கு பதிலாக தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவும்.
* காய்கறிகள், கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழங்கள், வெண்ணெய், தக்காளி போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவு களை உட்கொள்ள வேண்டும். இவை வலியை குறைக்க உதவும். மேலும் உடலில் சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்தவும் பொட்டாசியம் உதவும். தேவையற்ற கழிவுகளை சிறுநீர் வழியாக அதிகம் வெளியேற்றவும் வழிவகுக்கும். மாதவிடாய் நாட்கள் நெருங்கும்போதே இத்தகைய உணவு பழக்கத்தை பின்பற்ற தொடங்கிவிட வேண்டும்.
* வெள்ளை மாவு மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளில் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கும். அதனால் இன்சுலின் அளவும் அதிகமாகும். சிறுநீரகங்களும் அதிக சோடியத்தை தக்கவைக்கும் நிலை உருவாகும். எனவே மாதவிடாய் சமயத்தில் கார்போஹைட்ரேட் கலந்த உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
* உடற்பயிற்சி செய்வதையும் அந்த நாட்களில் தவிர்க்கக்கூடாது. சிறிது நேரம் செய்யும் உடற்பயிற்சிகள் கூட உடலுக்கு இதமளிக்கும். வலி, வீக்கம், தசைபிடிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை கையாளவும் உதவும். அதற்காக கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதில்லை. வீட்டுக்குள் கூட நடைப்பயிற்சி செய்யலாம். வீட்டு வேலைகளையும் செய்யலாம். பாலசனா, உத்ராசனா, புஜங்காசனா போன்ற யோகாசனங்களையும் செய்யலாம்.
பெண்கள் குண்டாக இருப்பதால் மனது நிறைய ஆசை இருந்தாலும், அதை நிறைவேற்ற பெரும்பாலன நேரங்களில் உடல் ஒத்துழைக்காத நிலை தோன்றுகிறது. விரும்பியதுபோல் எல்லாம் அவர்களால் பாலியல் உறவு நிலைகளை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை.
நாம் வாழும் இந்த உலகம், குண்டான மனிதர்களால் நிரம்பி வழியப்போகிறது. கிட்டத்தட்ட இப்போது 50 கோடி பேர் அளவுக்கு அதிகமான உடல் எடையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதாவது நூறு பேரில் பத்துபேர் உடல் எடை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் பிரசவத்திற்கு பின்புதான் பெண்களின் உடல் எடை அதிகமாகும் என்ற கருத்து இருந்தது. இப்போது பள்ளியில் படிக்கும் பருவத்திலே, பூப்படையும் காலத்திலே சிறுமிகள் அதிக எடைகொண்டவர்களாக இருக்கிறார்கள். கல்லூரிப்பருவத்திலும், கல்யாண காலகட்டத்திலும் பெண்கள் குண்டாக இருப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலக அளவில் ஆண்களைவிட பெண்களே பெருமளவில் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
இந்தியாவில் நகரப்பகுதிகளில் வாழும் மக்களில் 5.5 சதவீதம் ஆண்களும், 12.6 சதவீதம் பெண்களும் அதிக எடை கொண்டவர்கள். இதில் நகரக் குடிசைவாசி ஆண்கள் 1.9 சத வீதம், பெண்கள் 7.2. சதவீதம். கிராமங்களில் அதிக எடை உள்ளவர்கள் குறைவு. ஆண்கள் 1.6 சதவீதம், பெண்கள் 3.8 சத வீதம். சமூக நிலையும், பொருளாதார நிலையும்கூட அதிக உடல் எடைக்கு காரணமாகிறது.
உயர் சமூகப் பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களின் அதீத உடல் எடை 10.4 சதவீதமாக இருக்கிறது. குறைந்த சமூகப்பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களில் 0.9 சதவீதம் மட்டுமே அதிக எடை கொண்டவர்கள் இருக்கிறார்கள். சமூகப் பொருளாதார அந்தஸ்து உயரும்போது எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளின் அளவும் அதிகரிக்கிறது. ஏழைகள் அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்பதில்லை. உண்டாலும், அவர்கள் உழைக்கும் வர்க்கமாக இருப்பதால் கலோரி எளிதாக செலவாகிவிடுகிறது.
குறைந்த கலோரிகள் உள்ள உணவு, அதிக நார்ச்சத்துள்ள உணவு, அதிகம் குடிநீர், புகைத்தல்- மதுபானம் அருந்துவதை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாது கடைப்பிடித்தாலே உடல் எடையைக் குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகமாக இருக்கின்றன. ஆனால் அதை தொடர்ச்சியாக கடைப்பிடிப்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். மாயாஜாலம்போல் அதிரடியாக உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணமே பலரிடமும் இருக்கிறது. அப்படி அதிரடியாக உடல் எடையை குறைப்பது ஆபத்தான செயல் என்பதை பலரும் புரிந்துகொள்வதில்லை.
உடல் எடையை குறைக்க 1 மணி நேரம் வேகமாக நடத்தல், ஜாகிங் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான சமச்சீரான உணவு பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வேகமாக நடப்பது இருதய நோய்கள், மாரடைப்பு வரும் வாய்ப்புகளையும் குறைக்கும்.
அதீத உடல் எடை காரணமாக உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்களை அது அதிகமாக தாக்குகிறது. தற்போது பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கு பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். அதற்கு அதிக உடல் எடை ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை, அதீத உதிரப்போக்கு அல்லது குறைந்த உதிரப்போக்கு ஏற்பட காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படையும் நிலையும் உருவாகிறது.
இப்போது ஆணும், பெண்ணும் அதிக எடையுடன் இருப்பதால், கல்யாண வாழ்க்கையில் இணையும் ‘எடை கூடிய தம்பதிகளின்’ எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதிக எடைகொண்ட தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை அவ் வளவு திருப்திகரமாக அமைவதில்லை. குண்டான உடல் அவர்களது பாலியல் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கிறது.
மனது நிறைய ஆசை இருந்தாலும், அதை நிறைவேற்ற பெரும்பாலன நேரங்களில் உடல் ஒத்துழைக்காத நிலை தோன்றுகிறது. விரும்பியதுபோல் எல்லாம் அவர்களால் பாலியல் உறவு நிலைகளை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு பாலியல் உறவு மீது சலிப்பும், விரக்தியும் தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் வரை பாலியல் உறவுகளில் இருந்து விலக விரும்புகிறார்கள். அப்போது அவர்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்காக நீலப்படங்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். அதுவே அவர்களை, அதற்கு அடிமையாக்கிவிடுகிறது. அதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
உடல் எடை அதிகரித்தவர்கள் எண்ணிக்கை இப்போது உயர்ந்துகொண்டிருப்பதால், அவர்களை கருத்தில்கொண்டும் பாலியல் நிபுணர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் பாலியல் உறவை மேம்படுத்திக்கொள்ளவும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் வழிகாட்டுகிறார்கள். அவர்களுக்கு தக்கபடியான உணவு வகைகளையும் பரிந்துரைக்கிறார்கள். மனோரீதியாக அவர்கள் பாலியல் நாட்டம் கொள்ள தேவையான ஆலோசனை மற்றும் சிகிச்சைகளும் வழங்குகிறார்கள்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க...
உடல் எடை என்பது அதிரடியாக கிடுகிடுவென உயர்வதில்லை. வெகுகால உணவுப் பழக்கமும், பல வருட வாழ்வியல் முறைகளும் படிப்படியாக உடல் எடையை உயர்த்துகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அதனால் ஒவ்வொருமுறை உணவுக்காக வாயை திறக்கும்போதும் உங்களுக்கு அது தேவைதானா? தேவையில்லாமல் ருசிக்காக அதை திணிக்கிறீர்களா என்பதை நினைத்துப்பாருங்கள்.
உணவின் அளவைக் குறையுங்கள். சாப்பிட்ட உணவும் உடலில் அப்படியே கொழுப்பாக படிந்துவிடாத அளவுக்கு என்ன செய்யவேண்டும் என்றும் சிந்தியுங்கள்.
வயது கூடும்போது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்கும் சக்தி குறையும் என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.
உடலுழைப்பு குறையும்போது உடல் எடை அதிகரித்துவிடும் என்பதால், உடலை வேலைக்கு பழக்குங்கள். உடலை சொகுசுக்கு அடிமையாக்கிவிடாதீர்கள்.
தைராய்டு நோய் காரணமாக ஹார்மோன் அளவுகளில் சீரற்ற நிலை தோன்றுவதாலும் உடல் எடை அதிகரிக்கும். அதனால் தேவைப்படும்போது மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
மூளையில் இருக்கும் ஹைபோதாலமஸ், பசி மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தூண்டுகிறது. இதன் காரணமாகவே திருப்தி ஏற்பட்ட பிறகே உண்பதை நிறுத்து கின்றனர். அதனால் பாதி அளவு திருப்தி ஏற்பட்டதும் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.
குழந்தைகளுக்கு தாய்மார்கள் அதிக உணவை ஊட்டிக்கொண்டே இருப்பது, அவர்களது உடல் உடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது.
அதிக கொழுப்பு சத்துள்ள பீட்சா, பர்கர், கேக், குளிர்பானங்கள் அருந்துவதால் உடல் எடை கூடும்.
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதும் ஏதாவது உணவைக் கொறித்துக்கொண்டே இருப்பது மிக தவறானது. இதனால் உடல் எடை வேகமாக அதிகரித்துவிடுகிறது.
உணவை வீணாக்கக்கூடாது என்ற உணர்வில் பெண்கள் மீதம் இருப்பதையும் சாப்பிடுவது தவறான முன்னுதாரணம். பெண்கள் உடல் எடையால் அவதிப்பட இது முக்கிய காரணம்.
புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பல காரணங்களாலும் உடல் குண்டாகிறது.
இந்தியாவில் நகரப்பகுதிகளில் வாழும் மக்களில் 5.5 சதவீதம் ஆண்களும், 12.6 சதவீதம் பெண்களும் அதிக எடை கொண்டவர்கள். இதில் நகரக் குடிசைவாசி ஆண்கள் 1.9 சத வீதம், பெண்கள் 7.2. சதவீதம். கிராமங்களில் அதிக எடை உள்ளவர்கள் குறைவு. ஆண்கள் 1.6 சதவீதம், பெண்கள் 3.8 சத வீதம். சமூக நிலையும், பொருளாதார நிலையும்கூட அதிக உடல் எடைக்கு காரணமாகிறது.
உயர் சமூகப் பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களின் அதீத உடல் எடை 10.4 சதவீதமாக இருக்கிறது. குறைந்த சமூகப்பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களில் 0.9 சதவீதம் மட்டுமே அதிக எடை கொண்டவர்கள் இருக்கிறார்கள். சமூகப் பொருளாதார அந்தஸ்து உயரும்போது எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளின் அளவும் அதிகரிக்கிறது. ஏழைகள் அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்பதில்லை. உண்டாலும், அவர்கள் உழைக்கும் வர்க்கமாக இருப்பதால் கலோரி எளிதாக செலவாகிவிடுகிறது.
குறைந்த கலோரிகள் உள்ள உணவு, அதிக நார்ச்சத்துள்ள உணவு, அதிகம் குடிநீர், புகைத்தல்- மதுபானம் அருந்துவதை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாது கடைப்பிடித்தாலே உடல் எடையைக் குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகமாக இருக்கின்றன. ஆனால் அதை தொடர்ச்சியாக கடைப்பிடிப்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். மாயாஜாலம்போல் அதிரடியாக உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணமே பலரிடமும் இருக்கிறது. அப்படி அதிரடியாக உடல் எடையை குறைப்பது ஆபத்தான செயல் என்பதை பலரும் புரிந்துகொள்வதில்லை.
உடல் எடையை குறைக்க 1 மணி நேரம் வேகமாக நடத்தல், ஜாகிங் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான சமச்சீரான உணவு பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வேகமாக நடப்பது இருதய நோய்கள், மாரடைப்பு வரும் வாய்ப்புகளையும் குறைக்கும்.
அதீத உடல் எடை காரணமாக உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்களை அது அதிகமாக தாக்குகிறது. தற்போது பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கு பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். அதற்கு அதிக உடல் எடை ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை, அதீத உதிரப்போக்கு அல்லது குறைந்த உதிரப்போக்கு ஏற்பட காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படையும் நிலையும் உருவாகிறது.
இப்போது ஆணும், பெண்ணும் அதிக எடையுடன் இருப்பதால், கல்யாண வாழ்க்கையில் இணையும் ‘எடை கூடிய தம்பதிகளின்’ எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதிக எடைகொண்ட தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை அவ் வளவு திருப்திகரமாக அமைவதில்லை. குண்டான உடல் அவர்களது பாலியல் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கிறது.
மனது நிறைய ஆசை இருந்தாலும், அதை நிறைவேற்ற பெரும்பாலன நேரங்களில் உடல் ஒத்துழைக்காத நிலை தோன்றுகிறது. விரும்பியதுபோல் எல்லாம் அவர்களால் பாலியல் உறவு நிலைகளை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு பாலியல் உறவு மீது சலிப்பும், விரக்தியும் தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் வரை பாலியல் உறவுகளில் இருந்து விலக விரும்புகிறார்கள். அப்போது அவர்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்காக நீலப்படங்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். அதுவே அவர்களை, அதற்கு அடிமையாக்கிவிடுகிறது. அதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
உடல் எடை அதிகரித்தவர்கள் எண்ணிக்கை இப்போது உயர்ந்துகொண்டிருப்பதால், அவர்களை கருத்தில்கொண்டும் பாலியல் நிபுணர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் பாலியல் உறவை மேம்படுத்திக்கொள்ளவும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் வழிகாட்டுகிறார்கள். அவர்களுக்கு தக்கபடியான உணவு வகைகளையும் பரிந்துரைக்கிறார்கள். மனோரீதியாக அவர்கள் பாலியல் நாட்டம் கொள்ள தேவையான ஆலோசனை மற்றும் சிகிச்சைகளும் வழங்குகிறார்கள்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க...
உடல் எடை என்பது அதிரடியாக கிடுகிடுவென உயர்வதில்லை. வெகுகால உணவுப் பழக்கமும், பல வருட வாழ்வியல் முறைகளும் படிப்படியாக உடல் எடையை உயர்த்துகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அதனால் ஒவ்வொருமுறை உணவுக்காக வாயை திறக்கும்போதும் உங்களுக்கு அது தேவைதானா? தேவையில்லாமல் ருசிக்காக அதை திணிக்கிறீர்களா என்பதை நினைத்துப்பாருங்கள்.
உணவின் அளவைக் குறையுங்கள். சாப்பிட்ட உணவும் உடலில் அப்படியே கொழுப்பாக படிந்துவிடாத அளவுக்கு என்ன செய்யவேண்டும் என்றும் சிந்தியுங்கள்.
வயது கூடும்போது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்கும் சக்தி குறையும் என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.
உடலுழைப்பு குறையும்போது உடல் எடை அதிகரித்துவிடும் என்பதால், உடலை வேலைக்கு பழக்குங்கள். உடலை சொகுசுக்கு அடிமையாக்கிவிடாதீர்கள்.
தைராய்டு நோய் காரணமாக ஹார்மோன் அளவுகளில் சீரற்ற நிலை தோன்றுவதாலும் உடல் எடை அதிகரிக்கும். அதனால் தேவைப்படும்போது மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
மூளையில் இருக்கும் ஹைபோதாலமஸ், பசி மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தூண்டுகிறது. இதன் காரணமாகவே திருப்தி ஏற்பட்ட பிறகே உண்பதை நிறுத்து கின்றனர். அதனால் பாதி அளவு திருப்தி ஏற்பட்டதும் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.
குழந்தைகளுக்கு தாய்மார்கள் அதிக உணவை ஊட்டிக்கொண்டே இருப்பது, அவர்களது உடல் உடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது.
அதிக கொழுப்பு சத்துள்ள பீட்சா, பர்கர், கேக், குளிர்பானங்கள் அருந்துவதால் உடல் எடை கூடும்.
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதும் ஏதாவது உணவைக் கொறித்துக்கொண்டே இருப்பது மிக தவறானது. இதனால் உடல் எடை வேகமாக அதிகரித்துவிடுகிறது.
உணவை வீணாக்கக்கூடாது என்ற உணர்வில் பெண்கள் மீதம் இருப்பதையும் சாப்பிடுவது தவறான முன்னுதாரணம். பெண்கள் உடல் எடையால் அவதிப்பட இது முக்கிய காரணம்.
புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பல காரணங்களாலும் உடல் குண்டாகிறது.
பெண்கள் நாற்பது வயதை நெருங்கும் போது சில எளிய வாழ்வியல் மாற்றங்களை கடைபிடித்தாலே போதும். நல்ல உடல் மற்றும் மனநலத்தை பெறுவது சாத்தியம்.
பெண்கள் நாற்பது வயதை நெருங்கும் போது ஹார்மோன் மாற்றங்களால் உடலின் வளர்சிதை மாற்றம் குறைவது முதற்கொண்டு பல மாற்றங்கள் ஏற்படும். இதன் விளைவாக உடல்எடை அதிகரிப்பு, மூட்டு வலி, இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் சிலவகை புற்றுநோய்கள் போன்ற பல உபாதைகளுக்கு ஆளாகிறார்கள்.
இவற்றை எல்லாம் எதிர்கொண்டு நல்ல உடல் மற்றும் மனநலத்தை பெறுவது சாத்தியம். அதற்கு சில எளிய வாழ்வியல் மாற்றங்களை கடைபிடித்தாலே போதும். செய்ய வேண்டிய மாறறங்களில் மிக முக்கியமானது உணவு பழக்கதில் தான். அன்றாடம் சாப்பிடும் உணவில் புரதம், மாவுச்சத்து, வைட்டமின்கள் தாது உப்புக்கள் போன்றவை தேவையான அளவு இருத்தல் அவசியம்.
இதுவரை நீங்கள் சரியான உணவு முறையை கடைபிடிக்கவில்லையெனில் இப்போதிலிருந்து சத்தான உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள். பலவகையான காய்கறிகள், பருப்பு மற்றும் வகைகள் கீரைகள் உணவில் அன்றாடம் சேர்த்து கொள்ள வேண்டியதில்லை.
தினமும் ஏதாவது ஒரு பழத்தை அவசியம் சாப்பிடுங்கள். முழு தானியங்ளை கட்டாயம் சேர்த்து கொள்ளுங்கள்.
அதிக கொழுப்பு இல்லாத பால் பொருட்களை உண்ணுங்கள். கோழி இறைச்சி, கடல் உணவுகள், முட்டை, சோயாப்பொருட்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கொட்டைடைகளை உணவில் தவிர்க்காமல் சேர்த்து கொள்ளுங்கள். கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்கள் உணவில் கட்டாயம் இருக்க வேண்டியவை. எனவே சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். காலை உணவை சாப்பிடாமல் இருப்பதை தவிர்த்து விடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். எட்டு மணி நேர நிம்மதியான தூக்கம் இருக்குமாறுபார்த்து கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் பருகுங்கள். இவற்றையெல்லாம் சரியாக செய்தாலே எந்த வயதிலும் இளமையாகவும் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.
இவற்றை எல்லாம் எதிர்கொண்டு நல்ல உடல் மற்றும் மனநலத்தை பெறுவது சாத்தியம். அதற்கு சில எளிய வாழ்வியல் மாற்றங்களை கடைபிடித்தாலே போதும். செய்ய வேண்டிய மாறறங்களில் மிக முக்கியமானது உணவு பழக்கதில் தான். அன்றாடம் சாப்பிடும் உணவில் புரதம், மாவுச்சத்து, வைட்டமின்கள் தாது உப்புக்கள் போன்றவை தேவையான அளவு இருத்தல் அவசியம்.
இதுவரை நீங்கள் சரியான உணவு முறையை கடைபிடிக்கவில்லையெனில் இப்போதிலிருந்து சத்தான உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள். பலவகையான காய்கறிகள், பருப்பு மற்றும் வகைகள் கீரைகள் உணவில் அன்றாடம் சேர்த்து கொள்ள வேண்டியதில்லை.
தினமும் ஏதாவது ஒரு பழத்தை அவசியம் சாப்பிடுங்கள். முழு தானியங்ளை கட்டாயம் சேர்த்து கொள்ளுங்கள்.
அதிக கொழுப்பு இல்லாத பால் பொருட்களை உண்ணுங்கள். கோழி இறைச்சி, கடல் உணவுகள், முட்டை, சோயாப்பொருட்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கொட்டைடைகளை உணவில் தவிர்க்காமல் சேர்த்து கொள்ளுங்கள். கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்கள் உணவில் கட்டாயம் இருக்க வேண்டியவை. எனவே சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். காலை உணவை சாப்பிடாமல் இருப்பதை தவிர்த்து விடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். எட்டு மணி நேர நிம்மதியான தூக்கம் இருக்குமாறுபார்த்து கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் பருகுங்கள். இவற்றையெல்லாம் சரியாக செய்தாலே எந்த வயதிலும் இளமையாகவும் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.






