என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக காரம் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விடுதல் நல்லது. சாப்பிடாமல் இருந்தால் நமக்கும் குழந்தைக்கும் தேவையான சக்தியும், சத்துக்களும் கிடைக்காது.
    கருவுற்றிருக்கும் ஆரம்ப காலங்களில் கர்ப்பிணிகள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை குமட்டல் மற்றும் வாந்தி. எதை சாப்பிட்டாலும் வயிற்றில் தங்காமல் குமட்டி கொண்டே இருக்கும். இதற்காக சாப்பிடாமல் இருந்தால் நமக்கும் குழந்தைக்கும் தேவையான சக்தியும், சத்துக்களும் கிடைக்காது. இதை தவிர்க்க மூன்று வேளை உணவு உண்பதற்கு பதிலாக அதே உணவை ஆறுவேளையாக பிரித்து சாப்பிடலாம்.

    இதனால் வயிறு காலியாக இருப்பதை தவிர்க்கலாம். கர்ப்ப காலங்களில் சில பெண்களுக்கு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு ஏற்றதாக இருக்கும். சிலருக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் ஏற்றதாக இருக்கும். எனவே நமக்கு ஏற்ற உணவு எது என்பதை கண்டறிந்து சாப்பிடுவது சிறந்தது. நாம் எதை சாப்பிட்டாலும், அது நமக்கும். நமது குழந்தைக்கும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ள வேண்டும்.

    வாந்தி மற்றும் குமட்டல் காலை நேரங்களில் தீவிரமாக இருக்கும். காலையில் வயிறு காலியாக இருப்பதாலும் இவ்வாறு ஏற்படலாம். எனவே படுக்கைக்கு அருகிலேயே சில உணவுகளை வைத்திருப்பது நல்லது. எழுந்த உடனேயே கொஞ்சமாக சாப்பிட்டு 20 நிமிடங்கள் வரை ஓய்வெடுத்தால் குமட்டல் வருவதை தடுக்கலாம்.

    கர்ப்பகாலத்தில் ஆறிய உணவுகளை சாப்பிடாமல் புதிதாத தயாரித்த சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். குளிர்பதன பெட்டியில் வைத்த உணவுகளை சாப்பிட்டாமல் அறை வெப்பநிலையில் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் குளிர்பதன பெட்டியில் வைத்த உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் அதிகமாக ஏற்படும். ஆகையால் அதிக காரம் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விடுதல் நல்லது. ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    ஒரு சில பெண்களுக்கு சில வாசனை திரவியங்கள், அறைகளில் ஒளிரும் விளக்குகள் போன்ற காரணிகளாலும், குமட்டல், வாந்தி போன்ற உணர்வுகள் தூண்டப்படலாம். அவ்வாறு இருந்தால் அத்தகைய காரணிகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. காலை வேளையில் இஞ்சி கலந்த தேநீர் குடிப்பது, இஞ்சி மிட்டாய்கள் சாப்பிடுவது போன்றவை குமட்டலை கட்டுப்படுத்தும்.

    வீட்டில் செய்யப்படும் வைத்தியங்கள் மூலம், நிவாரணம் பெற முடியாத பெண்கள் மருத்துவர் ஆலோசனையை நாடுவது சிறந்தது.
    புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
    காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல், ஐ.டி வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது. புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

    ஆய்வினை மேற்கொண்டவர்கள் 40 முதல் 69 வயதுள்ள 5 லட்சம் பேரை ஆய்வுக்குட்படுத்தினர். இதயம் மற்றும் ரத்த நாள நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததை தொடக்கத்தில் உறுதிப்படுத்திக் கொண்டனர். இவர்களை 7 வருடங்கள் வரை தொடர்ந்து கண்காணித்ததில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு முதல் தடவை ஏற்பட்டது தெரிய வந்தது. அவர்களில், 29%-வினர் பெண்களாக இருந்தனர்.

    புகைப்பழக்கம் இல்லாத ஆண்கள், அப்பழக்கம் உடைய ஆண்கள் ஆகியோரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிகரெட் பழக்கம் உடைய ஆண்களுக்கு குறைந்தது 2 தடவையாது மாரடைப்பு வரும் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதேவேளையில், பெண்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புகைப்பழக்கம் அற்ற மகளிரைவிட, சிகரெட் பழக்கம் உள்ள பெண்களுக்கு இது 3 தடவையாக அதிகமாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்த ஆய்வின் மூலம், புகைப்பிடித்தல் காரணமாக ஆண்களைவிட பெண்களுக்கு 83% உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதும், டைப்-1 நீரிழிவு நோயின் தாக்கம் ஆடவரைவிட பெண்களுக்கு 3 மடங்கு அதிகமாகவும், டைப்-2 நீரிழிவு பாதிப்பு, மகளிருக்கு ஆண்களைவிட 47%-ம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது.

    ‘‘பெண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து இதன் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. இதன்மூலம் சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கு உதவ முடியும் என்பதையும் வலியுறுத்துவதாக இந்த ஆய்வு அமைந்தது’ என்கிறார்கள் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஆய்வுக்குழுவினர். புதுமையான இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டனில் இருந்து வெளியாகும் BMJ என்ற இதழில் வெளியாகின.
    திருமண வாழ்க்கை சளிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது உறவில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.
    எந்த உறவாக இருந்தாலும் நெருக்கம் அதிகரித்தால்தான் அந்த உறவின் பலம் அதிகரிக்கும். நெருக்கம் தான் அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அதற்கு தாம்பத்திய வாழ்க்கை மிகவும் அவசியம்.

    திருமண வாழ்க்கை சளிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீட்டிக்கச் செய்கிறது. இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது உறவில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.

    இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கையில் எத்தனை கவலைகள், சண்டைகள், நெருக்கடிகள் வந்தாலும் அவற்றிலிருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது, மன நிம்மதி கிடைக்கிறது எனில் அதற்கு இருவரின் இணைப்புத்தான் முக்கிய காரணம். அவர்களின் மன அழுத்ததைக் குறைக்க செக்ஸ் சிறந்த மருந்தாகவும் இருக்கிறது. தம்பதிகளுக்கு இது சிறந்த பலன். ஸ்ட்ரெஸ் பஸ்டர்.

    இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது வெறும் உடலளவில் மட்டும் நெருக்கத்தை உண்டாக்காது. மனதளவிலும் உணர்வுப் பூர்வமான நெருக்கத்தை உண்டாக்கும். இந்த உணர்வுப் பூர்வமான காதலை உருவாக்க செக்ஸுக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது.

    பல தகாத உறவுகளுக்கு தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இல்லாததும் காரணமாக இருக்கின்றன. எனவே திருமண வாழ்க்கையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை உடைக்காமல் பார்த்துக்கொள்வதும் இந்த தாம்பத்திய வாழ்க்கைதான். இருவருக்குள் இந்த உறவு ஸ்ட்ராங்காக இருந்தால் அவர்களுக்கு மற்றொருவர் மீது ஈர்ப்பு உண்டாகாது.

    நீங்கள் துணை மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்பதைக் காட்ட உடலுறவும் நல்ல வாய்ப்பு. அவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை, காதல் அனைத்தையும் அதன் மூலம் வெளிப்படுத்த முடியும். எனவேதான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க தாம்பத்தியம் அவசியம் என்கின்றனர்
    பெண்கள் எப்போதுமே தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளாவிட்டால் அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்றுகளும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக் கூடும்.
    ஒவ்வொரு பெண்ணுக்கும் சுத்தமாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி சுத்தம் என்று வரும் போது அதில் அனைத்து உறுப்புகளும் அடங்கும். மேலும் பெண்கள் எப்போதுமே தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்றுகளும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக் கூடும்.

    குறிப்பாக பெண்கள் உறவில் ஈடுபடும் போது தன் துணை முகம் சுளிக்காதவாறு தன் மீது எந்த ஒரு துர்நாற்றமும் வரக் கூடாது என்று அதிக சுத்தத்தைப் பின் பற்றுவார்கள். இப்படி பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள நிறைய பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

    ஆகவே எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை மிகவும் சிறப்பான துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருள். அத்தகைய எலுமிச்சையின் இலையைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை சுத்தம் செய்தால், துர்நாற்றம் வீசுவது நீங்கும். ஏனெனில் எலுமிச்சையின் இலையில் லிமோனின் என்னும் பொருள், பிறப்புறுப்பில் எவ்வித தொற்றுகளும் வராதவாறு நல்ல சிறப்பான பாதுகாப்பை வழங்கும். மேலும் எலுமிச்சையின் இலை பிறப்புறுப்பில் pH-ன் அளவை சீராக பராமரித்து, பிறப்புறுப்பை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் பராமரிக்கும்.

    ஆப்பிள் சீடர் வினிகரை பெரிய டப்பில் உள்ள குளிக்கும் நீரில் சிறிது கலந்து, அந்த நீரில் 15 நிமிடம் உட்கார வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகர் பிறப்புறுப்பை சுத்தம் செய்து விடும். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிடிக் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதனை 1 கப் நீரில் கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பிறப்புறுப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும்.

    பேக்கிங் சோடாவும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும். அதற்கு குளிக்கும் டப்பில் உள்ள நீரில் 1/2 கப் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த நீரில் 20 நிமிடம் உட்கார்ந்து வந்தால், பேக்கிங் சோடா உடலின் pH அளவை சீராக்கி, உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும். தினமும் தயிரை பிறப்புறுப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற்றமும் குறையும்.

    நெல்லிக் காய் சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம், வெந்தயம் பெண்களுக்கு மிகவும் நல்லது. இந்த வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலோ அல்லது வெந்தயத்தை ஊற வைத்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவினாலோ, துர்நாற்றம் போய் விடும்.
    புதிதாக பூப்பெய்திருக்கும் பிள்ளைகளை மனரீதியாக எப்படி தயார் படுத்துவது? அவர்களுக்கு எதை சொல்வது? எப்படி சொல்வது? என்பதை பெற்றோர் தெரிந்து கொள்வது அவசியம்.
    புதிதாக பூப்பெய்திருக்கும் பிள்ளைகளை மனரீதியாக எப்படி தயார் படுத்துவது? பெண் குழந்தைகள் உடல் மற்றும் மனதளவில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது? அவர்களுக்கு எதை சொல்வது? எப்படி சொல்வது? என்பதை பெற்றோர் தெரிந்து கொள்வது அவசியம்.

    ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக பருவ வயது பெண்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும், காரணமில்லாமல் கோபப்படுவார்கள். முதல் மாதவிடாயின் போது மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாதமும் இப்படியான மாற்றங்கள் பெண்களிடம் இருக்கவே செய்யும். ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக மன அழுத்தம் அதிகமாகலாம். இந்த பருவத்தில் பிடித்தவை பிடிக்காமல் போகும். பிடிக்காதவை பிடிக்கும்.

    பருவ வயது பெண் குழந்தைகள் ஏதாவது ஒன்றை செய்யும் போது குறிப்பாக விளையாடப்போகவா? என்று கேட்கும் போது நீ இன்னும் சின்னப்பொண்ணு இல்லை, பெரிய பெண்ணாயிட்ட என்று சொல்வதும், ஏதாவது ஒரு விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசினால் நீ பெரிய ஆளு மாதிரி பேசாத என்று சொல்வதும், குழந்தைக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். சிறு பெண்ணாகவும் இல்லாமல் பெரிய பெண்ணாகவும் இல்லாமல் இரண்டும் கெட்ட பருவமாய் இருக்கும் இந்த சமயத்தில் பெற்றோரின் கவனிப்பும் அக்கறையும் அதிகமாகவே தேவை.

    பெண் குழந்தைகளுக்கு இந்த சமயத்தில் ஆண்களின் மீதான ஈர்ப்பு இருக்கவே செய்யும். சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். பருவ வயது பெண் குழந்தைகளுக்கு பெற்றோர், சில விஷயங்களை இலைமறை காயாக சொல்லி புரிய வைப்பது நல்லது. எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல வேண்டியதில்லை. அப்பாவுக்கு குழந்தைக்கு சில விஷயங்களை புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். அண்ணனின் நண்பர்களோடு பழகும்போது எல்லைகள் வைத்து கொள்ள வலியுறுத்த வேண்டும். எல்லை மீறாமல் பேசவும், பழகவும் அனுமதிக்கலாம்.

    டீன்ஏஜ் பருவத்தில் அலைபேசி பயன்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும் அதிக நேரம் சோஷியல் மீடியாக்களில் உலவாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    சுகாதாரத்தை பொறுத்தவரை பெண் குழந்தைகளிடம் பின்வரும் விஷயங்களை வலியுறுத்த வேண்டும்.

    மாதவிலக்காகி இருபது நாட்களை கடந்து விட்டாலே கைப்பையில் சானிட்டரி நாப்கின் வைத்து கொள்வது நல்ல. ஒருநாளைக்கு நான்கு முறை சானிட்டரி நாப்கின் மாற்றுவது சுகாதாரமானது.

    உடலின் மறைமுக பகுதிகளில் முடி வளர ஆரம்பிப்பதால் உடலில் அதிக வியர்வை நாற்றம் வெளியேற கூடும். அதனால் இருவேளை குளிப்பது, இருவேளை பல் துலக்குவது அவசியம். முகப்பரு ஏற்படாமல் இருக்க முகத்தை அடிக்கடி கழுவுவது, தலை சீவுவது, தலையணை உறை மாற்றுவது சீப்பை சுத்தமாக வைத்திருப்பது கட்டாயம்.

    தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் போது மனம் தடுமாறாமல் இருக்கும். அதே போல் நீண்ட நேரம் பாடங்களை படிக்க சொல்லி வற்புறுத்தக்கூடாது.

    எந்த சமயத்திலும், பெற்றோரின் அன்பும், அக்கறையும், அரவணைப்புமே பருவ வயது பெண் குழந்தைகளிடம் நல்ல மாற்றத்தை விதைக்கும்.
    கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. நமக்கு பிடிச்ச விஷயத்தை நாம் செய்ய ஆரம்பிச்சா கண்டிப்பாக மன அழுத்தமோ, சோர்வோ இருக்காது.
    எல்லா பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு  நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. கர்ப்ப காலத்துல மன அழுத்தம் வர்றதுக்கு முக்கிய காரணமான ஹார்மோன் சமநிலையை சொல்லலாம். பிறகு வாந்தி, தூக்கமின்மை, அல்லது  ரொம்ப நேரம் தூங்கறது, சாப்பிட பிடிக்காம இருக்கறது மற்றொரு முக்கியமான ஒன்று வீட்டுச்சூழல். இப்படி பல காரணம் இருக்குது.

    மன அழுத்தம் தவிர்க்க இந்த கர்ப்ப காலத்துல நம்மை சுத்தி  நல்ல விஷயங்களை மட்டுமே பேசற மாதிரி பார்த்து கொள்ள வேண்டும்.  ஏன்னா தேவையில்லாத பயத்தை, கோபத்தை ஏற்படுத்துறவங்க கிட்ட கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது.  எந்த எதிர்மறையான விஷயங்களும் நம்ம மனசுக்குள்ளே போகாம இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் அல்லது அப்படியே போனாலும் அதிலிருந்து உடனே வெளிவர உங்களுக்கு புடிச்ச விஷயத்தை செய்யும் போது எளிதாக அந்த மனநிலையில இருந்து வெளியில வர முடியும்.

    உங்க கணவரோட மாலை நேரத்துல கண்டிப்பா ஒரு நடைப்பயிற்சி போங்க. அப்படி போகும் போது அவர் கூட மகிழ்ச்சியான விஷயங்களை மட்டும் பேசிட்டு போங்க.

    மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர  உதவுவதில் உணவு  ஒரு நல்ல மருந்தாகும். ஒமேகா 3 அதிகமா இருக்கிற வால்நட் (walnut),  அளவாக டார்க் சாக்லேட் கூட சாப்பிடலாம். இதெல்லம் நம்ம மன நிலைமையை சரி பண்றதுக்கான உணவுகள் ஆகும்.

    குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மன அழுத்தம் இருக்குன்னா  நீங்க கண்டிப்பாக யோகா, மூச்சு பயிற்சி, தியானம் பண்ணலாம். நடந்த கசப்பான சம்பவங்களை நினைக்காம நம்ம குழந்தைக்காக நேர்மறையான விஷயங்களை மட்டும் யோசிக்கவோ இல்லனா பேசவோ பழகிக்கோங்க. இது நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும்.

    இப்படி நமக்கு பிடிச்ச விஷயத்தை நாம் செய்ய ஆரம்பிச்சா கண்டிப்பாக மன அழுத்தமோ, சோர்வோ இருக்காது.
    இரவு படுக்கும்போது பிரா அணியலாமா? வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் மற்றும் சௌகரியத்தைப் பொருத்தது. ஆனால் இரவில் தூங்கும் போது இறுக்கமான பிரா அணிந்தால் என்ன பிரச்சனைகள் வரும் என்று அறிந்து கொள்ளலாம்.
    தூங்கும்போது பிரா அணியலாமா என்னும் கேள்வி பல பெண்களிடம் இருக்கிறது. ஆனால் எதுவாயினும் அது அவர்களுடைய சௌகரியத்தைப் பொருத்தது என சிலர் கருத்துக்களை முன் வைப்பார்கள். அது அவரவர் விருப்பம் என்பதை விட அவ்வாறு செய்வதால் மருத்துவ ரீதியாக நல்லதா கெட்டதா என்னும் வாதமும் முன் வைக்கப்படுகிறது.

    உண்மையில் மருத்துவர்களின் வாய் வழியில் இரவு பிரா அணிவதால் மார்பகங்கள் தளர்வடைவதை தவிர்க்கலாம் என்கின்றனர். ஆனால் அலுவலகம் செல்லும் பெண்கள் நாள் முழுவதும் இறுக்கமான பிராவை அணிந்திருப்பதால் வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அதை கழட்டி எறிவதைதான் பெரிய ரிலீஃபாக நினைக்கின்றனர். எனவே அவர்கள் சௌகரியத்தைதான் பெரிதாக நினைக்கின்றனர்.

    பொதுவாக மார்பகங்கள் தளர்வடைதல் என்பது வயது செல்ல செல்ல இயற்கையாக நிகழக்கூடியது. அதை பிரா அணிவதால் தடுக்கமுடியாது. இருப்பினும் தளர்ந்து தொங்கும் மார்பகங்கள் பெண்களுக்கு சங்கடத்தையும், அசௌகரியத்தையும் கொடுக்கலாம். எனவே இதுபோன்ற பிராக்கள்தான் அவர்களுக்கான வரமாக உள்ளது. அதேபோல் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கும் பிரா அணிவது சௌகரியத்தை தரும். இரவு புரண்டு படுக்கும்போது அவை அதிக வலியை தரலாம். எனவே பிரா நல்ல சாய்ஸாக இருக்கும்.

    எதுவாயினும் உங்களுக்கு ஃபிட்டான , சரியான அளவிலான பிராக்களை அணியுங்கள். காட்டன் துணியால் ஆனா பிரா அணிவது காற்றோட்டமாக இருக்கும். இறுக்கமான பிரா அணிவது வேறு ஏதேனும் பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.
    ஆரோக்கியமான சரிவிகிதச் சத்துணவு உங்கள் மேனியழகில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பெண்களே நீங்கள் என்றும் 16 ஆக ஜொலிக்க விரும்பினால் ஆரோக்கியத்தில் இந்த 5 விஷயங்களை மறக்கக்கூடாது.
    நீங்களும் அழகு ராணி போல் ஜொலிக்க ஐந்து வழிகள்:

    1. சரியான உணவு

    ஆரோக்கியமான சரிவிகிதச் சத்துணவு உங்கள் மேனியழகில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. எண்ணெய்ப் பதார்த்தங்கள் மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொந்தரவுகளை உண்டாக்கக்கூடும். அதற்காக நீங்கள் முற்றிலுமாக பக்கோடா, பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்கவேண்டும் என்கிற அவசியமில்லை. எப்போதாவது குறைந்த அளவில் மட்டும் ருசிக்கலாம். அவற்றை விரும்பி, அதிக அளவில் பசிக்காகச் சாப்பிடுவது நல்லதல்ல!

    பசுமையான பச்சைக் காய்கறிகளையும், கீரை வகைகளையும், பழவகைகளையும் உங்கள் அன்றாட உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்! உங்கள் மேனி பளபளக்கும்! கீரை வகைகளில் முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, அரைக்கீரை போன்றவையும், பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, புளுபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவையும், சிட்ரஸ் பழங்கள் என்று சொல்லப்படும் ஆரஞ்சு, நெல்லிக்கனி மற்றும் எலுமிச்சைக் கனிகளும், ஆப்பிள், வாழைப்பழம் போன்ற சத்தான பழங்களும் உங்கள் மேனியை வசீகரிக்கும் வனப்புடன் திகழச்செய்யும்!

    2. உடற்பயிற்சி

    உடற்பயிற்சிக் கூடங்களில் தினமும் அதிகாலையில் நீங்கள் செய்யும் உடற்பயிற்சி உங்கள் உடலின்ரத்த ஓட்டத்தைச் சீராக்கி உங்களை உடல் பாரமின்றி எடை குறைந்து எழில்மிகு மேனியுடன் வலம்வரச் செய்யும்..! உடற்பயிற்சியின்போது வெளிவரும் வியர்வையில் உடலில் உள்ள நச்சுப்பொருட்களும் வெளி வருகின்றன. ஆதலால் உடற்பயிற்சியின் இன்றியமையாமையை எளிதில் புரிந்து கொள்ளலாம்!

    3, தளதள உடம்புக்கு தண்ணீர்

    நல்ல உடலுக்கு நாள் ஒன்றிற்கு 8 கப் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த நீராகாரப் பழக்கம் உடலின் ஜீரணப் பாதையைச் சுத்தமாக்கி மலச்சிக்கலைத் தவிர்த்து மேனியையும் சருமத்தையும் சுத்தமாக்கி சுறுசுறுப்படையச் செய்யும்! சருமம் மென்மையாகி ஜொலிக்கவும் செய்யும்.

    உங்கள் மேனி உலர்ந்துவிடாமல் இருக்க தினமும் குளிப்பதும், அடிக்கடி முகத்தை நீரால் அலம்புவதும் அவசியம்! சூரியக் குளியல் எனப்படும் காலை மாலை இளவெயில் மேனியில் படுதலும் அழகிய மேனிக்கு அவசியத் தேவையாகும்.

    4, நிறைவான மனம்

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே! அதிகப்படியான அழகு சாதனங்களை பயன்படுத்தி உங்கள் மேனியழகைப் பாழாக்குவதும் அதுபோன்றதே. முக அழகு கிரீம் பூசாமல் என் முகத்தை வெளியே காட்டவே முடியாது என்று நினைக்க வேண்டாம். படுக்கைக்குப் போகும்முன்பு நீரால் முகத்தை கழுவி மென்மையாக துடைத்துவிட்டு தூங்கச்செல்லுங்கள்.

    5. தூக்கம் சொர்க்கம்

    ஆண்களையும், பெண்களையும் என்றென்றும் இளமை அழகுடன் மிளிரச்செய்வது ஆழ்ந்த நிம்மதியான தூக்கம்தான். ஆழ்ந்த தூக்கமானது உங்கள் முகத்தில் தோன்றும் கருவளையங்களை நீக்கிட பேருதவி புரிகின்றது! தினமும் 6 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் சருமத்திற்கு பொலிவைத் தருகிறது. முகத்திற்கு பளபளப்பை தருகிறது. அதனால் தான் அழகு ராணிகள் ஆழ்ந்த தூக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள்.
    மகத்தான தாய்மையை அடைய எப்படி தயாராக வேண்டும்? கர்ப்பம் தரிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை? செய்ய வேண்டியவை எவை? என்று அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தாய்மை என்பது இனிதான ஒரு அனுபவம். இன்றைய காலக்கட்டத்தில் இதனை ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். எல்லோருக்கும் எளிதில் கிட்டிவிடுவதில்லை. அத்தகைய மகத்தான தாய்மையை அடைய எப்படி தயாராக வேண்டும்? கர்ப்பம் தரிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை? செய்ய வேண்டியவை எவை?

    * திருமணம் முடிந்த உடனே கணவனும் மனைவியும் முழு உடல் பரிசோதனை (Master health check up) செய்துவிட்டு, குடும்ப மருத்துவரை அல்லது ஒரு நல்ல மருத்துவரை சந்தித்து உங்களது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமானது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள் அல்லது இல்லை என்பது பிரச்சனை அல்ல. எல்லோரும் ஒருமுறை இதனைச் செய்தல் மிகவும் நல்லது. இதனால் பலன் இருக்குமே தவிர இழப்பு எதுவும் இருக்கப் போவதில்லை.

    * கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ பரம்பரை நோய்கள் ஏதேனும் இருந்தால் அதை ஒருவர் மற்றவரிடம் சொல்லாமல் மறைக்கவே முயற்சி செய்கின்றார்கள். அதன் விளைவாக பிறக்கும் குழந்தை அதே பாதிப்பிற்கு உள்ளாகின்றது. கணவன் மனைவி என்ற ஆன பின்னர், ஒருவருக்கொருவர் ஒளிவு மறைவில்லாமல் தங்களது உடல் பிரச்சனைகளைத் தெரிவித்து, தகுந்த மருத்துவரிடம் கலந்தாலோசிக்கும் போது அந்த பிரச்சனையில் இருந்து உங்கள் குழந்தை விடுபட என்ன தீர்வு என்பதை அவர் தெரிவிப்பார். உங்கள் குழந்தையின் எதிர்கால நலன் கருதி இதனை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

    * கர்ப்பம் தரித்தலுக்கு முன்பு இருந்தே ஃபோலிக் ஆசிட் மருந்துகளை பெண்கள் எடுத்துக் கொள்வது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

    * கணவன், மனைவி இருவரும் இரத்தப் பரிசோதனை செய்து தங்களது ப்ளட் க்ரூப் என்ன என்பதை அறிவது மிகவும் அவசியம். ஒருவர் பாஸிடிவ் இரத்த வகையிலும், மற்றொருவர் நெகட்டிவ் இரத்த வகையிலும் இருந்தால், கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறப்பின்போதும் வழக்கத்தை விட அதிக அக்கறையும், கவனமும் செலுத்த வேண்டும்.

    * பற்களில் பூச்சி பல், ஓட்டை போன்ற பிரச்சனைகள் இருந்தால், கர்ப்ப காலத்தில் பல் ஈறுகளின் வீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது எதிர்மறை விளைவுகளை உண்டு செய்யலாம். எனவே, கர்ப்பம் தரித்தலுக்கு முன்பு ஒரு நல்ல பல் மருத்துவரைச் சந்தித்து பற்கள் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவற்றை எல்லாம் சரி செய்துவிடுங்கள்.

    * கர்ப்பம் தரித்தலுக்கு முன்பே நல்ல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். உங்களது எடை ஆரோக்கியமான எடையாக இருப்பின் குழந்தை பிறப்பில் பிரச்சனைகள் வருவதில்லை. உங்கள் எடை உங்கள் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான எடையா என்பதை அறுசுவையில் கொடுக்கப்பட்டுள்ள உடல் பருமன் சுட்டு (Body Mass Index)  மூலம் உத்தேசமாக கணக்கிடலாம். அதீத பருமனும், மிகவும் மெல்லிய உடம்பும் குழந்தை பிறப்பின் போது தேவையில்லாத சிக்கல்களை தரவல்லது. எனவே, முறையான உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்.

    * உடல் ஆரோக்கியத்தைவிட முக்கியமான ஒன்று மன ஆரோக்கியம். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் மிகவும் ஓய்வான மனநிலையில், மனக் குழப்பங்கள், பயம் எதுவும் இல்லாமல் இருத்தல் மிகவும் அவசியமானது. மனதிற்கு ஸ்ட்ரெஸ் எதுவும் கொடுக்காமல் எப்போதும் ரிலாக்ஸ்டாக இருப்பது, தாய்மையையும், பிள்ளைப் பேற்றையும் இனிமையான அனுபவமாக்கும். எனவே, கர்ப்பம் தரித்தலுக்கு முன்பு மனதளவில் தயாராகுதல் மிகவும் முக்கியமானது. இதற்காக யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம்.

    * அடுத்த விசயம், பட்ஜெட். பொருளாதார ரீதியில் கணவன், மனைவி தயாராய் இருப்பதும் அவசியமானது. இயற்கையான பிரசவம் நடைபெற வேண்டும் என்பதுதான் எல்லாரது விருப்பமாக இருந்தாலும், எதிர்பாராத காரணங்களால் பிரசவம் சிக்கலாக செல்வதற்கு வாய்ப்புகளும் உள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தாலோ, அல்லது பிறந்த குழந்தைக்கு உடனடியாக ஏதேனும் மருத்துவ சிகிச்சைகள் கொடுக்க வேண்டிய சூழல் வந்தாலோ, பணம் என்பது மிக முக்கிய தேவையாய் இருக்கும். எனவே, போதுமான பணத்தை முன்கூட்டியே சேமித்து வைத்து, பிரசவத்திற்கென்றே தனியே ஒதுக்கி வைத்தல் நல்லது.

    * இறுதியாக, கருத்தரிக்க தயாராகும் பெண்கள் தங்களது மாதவிடாய் சுழற்சியை சரியாய் கணக்கிட்டு, குழந்தைப்பேறு உண்டாக வாய்ப்பு உள்ள நாட்களில் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் முக்கியமான ஒன்று. கருத்தரிக்க உகந்த நாட்களை அறுசுவையின் இந்த பக்கத்தின் மூலமாக கணக்கிடலாம். இது ஒரு உத்தேச கணக்கிடுதல். எல்லோருக்கும் சரியாக இருக்கும் என்று சொல்ல இயலாது.

    குழந்தைபேற்றிற்கு இத்தனை விசயங்களை செய்ய வேண்டுமா? எல்லோரும் இப்படித்தான் செய்கின்றார்களா? என்ற கேள்விகள் எழலாம். இவை செய்வதற்கு சிரமமானவை அல்ல. இதனால் பாதிப்புகள் எதுவும் நிகழப் போவதில்லை. மாறாக நன்மைகளே பிறக்கும். சுகமான தாய்மைக்கு தயாராக இந்த வழிமுறைகள் பெரிதும் உதவிடும்.
    சில பெண்களுக்கு உடல்நல குறைபாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
    உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சத்து சேர்ந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவு பழக்கம், உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாக சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது.

    தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் கொழுப்பு சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையை குறைக்க முயல்வது தவறானதாகும்.

    அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு ஓர் காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்த பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும்.

    இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைபாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
    இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகமான கருமுட்டைகளை இடமாற்றம் செய்து வைப்பதால் கருவுறும் வாய்ப்பு, இயற்கையாக கருவுறும் வாய்ப்பைவிட, பல மடங்காகிறது.
    குழந்தையின்மை குறித்து மகப்பேறு நிபுணர் டாக்டர் மினிகோபால் கூறியதாவது:-

    குழந்தையின்மைக்கு 45 சதவீத காரணம் உயிரணு, கருமுட்டை உற்பத்தி தொடர்பான பிரச்சனைகள்தான். இவை எளிதில் சரி செய்யக்கூடியவை ஆகும்.

    ஆண் சம்பந்தப்பட்ட கருவூட்டும் திறனின்மை (மலட்டுத் தன்மை) பிரச்சினைகளை சரி செய்ய உதவும் இனவிருத்தி செய்யும் தொழில் நுட்பம் ‘‘இன்ட்ரோ சைட்டோ ப்ளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜக்சன்’’ ஆகும். சிறப்பான முறையில் உருவாக்கப்பட்ட நுண்ணோக்கியின் உதவியுடன் உயிரணுவை முதிர்ச்சியடைந்த முட்டையினுள் செலுத்தி உடலுக்கு வெளியே கருவுறும் வாய்ப்பை அதிகப்படுத்த ஐ.சி.எஸ்.ஐ. பயன்படுகிறது. சோதனைக்குழாயில் சினையுற்ற முட்டை பின்னர் பெண்ணின் கர்ப்பப்பையினுள் வைக்கப்படுகிறது.

    இயற்கையான முறையில் உயிரணுவை எடுக்க முடியாவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் விதைப் பையில் இருந்து எடுக்கப்படுகிறது. உயிரணு குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் ஆண்கள் இந்த ஐ.சி.எஸ்.ஐ. முறையை பின்பற்றும் முன் மரபியல் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

    கருமுட்டை சேகரிக்க வசதியாக கர்ப்பப்பையில் அதிக அளவில் முட்டை உருவாகுதலை தூண்டும் வகையில் தினசரி ஊசிகள் போடப்பட்டு ஸ்கேன் கருவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

    உயர்திறன் கொண்ட உருப்பெருக்கி (ஐ.சி.எஸ்.ஐ. மைக்ரோஸ்கோப்) உதவியுடன் விசே‌‌ஷமாக வடிவமைக்கப்பட்ட பிப்பெட்டில் இருந்து ஐ.வி.எப். சோதனைக்கூடத்தில் ஒரு உயிரணு ஒரு அண்டத்தினுள் செலுத்தப்படுகிறது. சிறந்த மருந்துகளால் சோதனைக் கூடத்தில் மேம்படுத்தப்பட்ட கருமுட்டைகளில் கருத்தரித்தலுக்கான அறிகுறிகள் உள்ளதா என சோதிக்கப்படுகிறது. வெற்றிகரமாக கருவுற்ற இரண்டு அல்லது மூன்று முட்டைகள் தேர்வு செய்யப்பட்டு, கர்ப்பப்பைக்குள் அலட்ரா சவுண்ட் வழிகாட்டுதலுடன் வைக்கப்படுகிறது. கரு இடமாற்றம் நடந்த 14-வது நாள் ரத்த பரிசோதனை மூலம் முடிவை அறிந்து கொள்ளலாம்.

    இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகமான கருமுட்டைகளை இடமாற்றம் செய்து வைப்பதால் கருவுறும் வாய்ப்பு, இயற்கையாக கருவுறும் வாய்ப்பைவிட, பல மடங்காகிறது.

    இவ்வாறு டாக்டர் மினிகோபால் தெரிவித்தார்.
    திருமணத்திற்கு முன்பு மணமகனும், மணமகளும் செய்ய வேண்டிய அத்தியாவசியமான மருத்துவ பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்.
    திருமண பந்தத்தில் இணையும் ஆண்-பெண் இருவருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இருவரில் யாராவது ஒருவருக்கு தோஷம் இருந்தாலும் அதனை போக்குவதற்கும் முயற்சி எடுப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் மருத்துவ ரீதியான சில பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும் இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். ரத்த பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். திருமணத்திற்கு முன்பு மணமகனும், மணமகளும் செய்ய வேண்டிய அத்தியாவசியமான மருத்துவ பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்.

    எச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய்கள்

    எச்.ஐ.வி-எய்ட்ஸ், சிபிலிஸ், கோனோரியா, ஹெர்பெஸ், சான்கிராய்டு போன்றவை பால்வினை நோய்கள்(எஸ்.டி.டி) என்று அழைக்கப்படுகின்றன. இவை பாலியல் உறவுகள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவிவிடக்கூடும். அதிலும் எய்ட்ஸ் ஆபத்தானது. இத்தகைய பரிசோதனைகள் செய்வதன் மூலம் திருமணத்திற்கு பிந்தைய பாதிப்புகளில் இருந்து தப்பித்துவிடலாம்.

    ரத்த வகை

    திருமணத்திற்கு முன்பு துணையின் ரத்த வகையை அறிந்து கொள்வதும் நல்லது. அது பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். மனைவிக்கு ஆர்.எச் நெகட்டிவ் ஆகவும், கணவருக்கு ஆர்.எச் பாசிட்டிவ்வாகவும் இருந்தால் அது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அதனால் அதனை முதலிலேயே கண்டறிந்து அதற்குரிய ஊசி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

    கருவுறுதல் சோதனை

    இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் தாமதமாகத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி தாமதமாக திருமணம் செய்வது கருத்தரிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆதலால் ஆண், பெண் இருவரும் கருவுறுதலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக் கின்றார்கள் என்பதற்கான பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.

    மரபணு சோதனை

    நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயம், சிறுநீரகம், கல்லீரல் நோய், மார்பக புற்றுநோய் போன்ற பல நோய்கள் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். திருமணத்திற்கு முன்பே இருவரும் அவரவர் குடும்பத்தினரின் மருத்துவ நிலையையும், நாள்பட்ட நோய்கள் பற்றிய விவரத்தையும் தெரிந்து கொள்வதன் மூலம் பின்னாளில் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

    மனநல பரிசோதனை

    ஆண், பெண் இருவருமே நல்ல மன நிலையில் இருந்தால்தான் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக அமையும். அதனால் இருவருக்கும் தேவைப்பட்டால் மன நலம் சார்ந்த பரிசோதனைகளும் அவசியம்.
    ×