என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • பாரம்பரிய உணவுகளில் ஒன்று பருத்தி பால்.
    • நெஞ்சு சளிக்கு உடனே தீர்வளிக்கும் உணவாக பார்க்கப்படுகிறது.

    மாதவிடாய் நாட்களில் அதிக தொல்லை மற்றும் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இப்படி நாள்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு ஒரு அருமையான உணவாகவும் மருந்தாகவும் செயல்படுவது தான் நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான பருத்தி பால். மதுரை ஜிகர்தண்டாவை போல மேலும் ஒரு ஸ்பெஷல் உணவாக பார்க்கப்படுவது பருத்தி பால்.

    பருத்தி பால் மாதவிடாய் பிரச்சனை மட்டும் இல்லாது, நெஞ்சு சளிக்கும் உடனே தீர்வளிக்கும் ஒரு உணவாக பார்க்கப்படுகிறது. நிறைய நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்திற்கு பலம் தருகிறது. சரி இப்படி ஏராளமான பலன்களை தரும் பருத்தி பால் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பருத்தி கொட்டை- 2 கப்

    வெல்லம் - 1 1/2 கப்

    பச்சரிசி-1/4 கப்

    ஏலக்காய் - 5

    சுக்கு-ஒரு சிறிய துண்டு

    தேங்காய் ஒரு கப்

    செய்முறை

    பருத்தி கொட்டைகளை நன்றாக கழுவி இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் பருத்திப் பால் செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஊற வைக்க வேண்டும்.

    இதையடுத்து கிரைண்டர் அல்லது மிக்சியில் பருத்திக் கொட்டையை சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும் பருத்தி நன்றாக அரைத்த பின்னர் அதை பிழிந்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு முறை அரைத்து பால் எடுத்துக்கொள்ளலாம். இதையடுத்து ஊற வைத்த பச்சரிசியை மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே போல் வெல்லத்தை பாகு காய்ச்சி வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பருத்திப் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கிளற ஆரம்பிக்க வேண்டும். பருத்தி பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவை கலந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு சிட்டிகை அளவுக்கு உப்பை சேர்க்க வேண்டும். கைவிடாமல் பருத்தி பாலை கிளறி விட வேண்டும். இல்லை என்றால் கட்டி விழுந்து விடும்.

    பருத்திப் பால் ஓரளவிற்கு கெட்டியாக வரும் போது வடித்து எடுத்து வைத்துள்ள வெல்லப் பாகை சேர்த்துக் கிளற வேண்டும்.

    இதையடுத்து நன்றாக கொதித்த பின்னர் ஏலக்காய் மற்றும் சுக்கை நன்றாக பொடித்து பாலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் தேவையான அளவு தேங்காயை துருவி சேர்த்துக்கொள்ளலாம். இனி சிறிய கிண்ணத்திற்கு மாற்றி பருத்திப் பாலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறலாம்.

    வாரத்திற்கு ஒரு முறையேனும் இதுபோன்ற ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது ஆண்-பெண் இருதரப்பினருக்கும் அதிக பலனைத் தரும்.

    • ஃபோலிகுலர் என்பது அண்டவிடுப்பினை கண்டறிய உதவும் எளிமையான ஸ்கேன்.
    • கருப்பையின் நுண்ணறை வளர்ச்சியை மருத்துவர் ஆராய்வார்.

    குழந்தைபேறு வேண்டும் தம்பதியர் கருத்தரிக்க முயற்சித்தும் இயலாத நிலையில் பெண்ணின் அண்டவிடுப்பினை கண்காணித்து அந்த நேரத்தில் திட்டமிடுவதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அண்டவிடுப்பின் சுழற்சியை கண்காணிக்க ஒவ்வொரு மாதமும் ஃபோலிகுலர் ஆய்வு செய்ய டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    ஃபோலிகுலர் ஆய்வு என்பது அண்டவிடுப்பினை கண்டறிய உதவும் எளிமையான ஸ்கேன் பரிசோதனை. இது மாதவிடாய் கால சுழற்சியில் 9 ஆம் நாளுக்கு பிறகு அண்டவிடுப்பு உண்டாகும் வரை தொடரும். இந்த முட்டை எப்போது வெளிவரும் என்பதை கணக்கிடுவதற்காக கருப்பையின் நுண்ணறை வளர்ச்சியை மருத்துவர் ஆராய்வார். ஏனெனில் இந்த நேரத்தில் தம்பதியர் திட்டமிட்டால் அது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும்.

    ஆய்வுகளின் படி அல்ட்ராசவுண்ட் வழியாக மாதவிடாய் சுழற்சியை கண்காணித்தாலும் கருத்தரிக்க சில மாதங்கள் வரை ஆக கூடும்.

    ஒரு பெண் மாதவிடாய் சுழற்சியின் போது அதாவது 9 முதல் 20 நாட்களில் பல முறை ஃபோலிகுலர் ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும். இது வலியற்ற செயல்முறை. இதனால் கருப்பையில் இருக்கும் நுண்ணறை வளர்ச்சியை பார்க்க இவை உதவுகிறது.

    இது பெண் உறுப்பின் வழியாக செய்யப்படும் பரிசோதனை ஆகும். சோனாகிராஃபர்கள் நுண்ணறைக்குள் முட்டையின் வளர்ச்சியை கண்காணிக்க உதவுகிறது. முட்டையை வெளியிடும் காலத்தை மட்டும் அல்லாமல் இதன் மூலம் மேலும் பல விஷயங்களை காணலாம்.

    வளர்ச்சி குறைபாடான நுண்ணறைகள், முன்கூட்டியே சிதைந்த நுண்ணறைகள், கர்ப்பப்பை புறணிக்குள் முட்டையை பொருத்துதல் என எல்லாவற்றையும் இந்த பரிசோதனையின் மூலம் செய்ய முடியும்.

    மேலும் இந்த பரிசோதனையின் மூலம் கருச்சிதைவு வரலாறு, ஐவிஎஃப் சிகிச்சை, அண்டவிடுப்பு குறைபாடு போன்றவற்றையும் அறிய முடியும்.

    35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கருவுற முயற்சித்து ஒரு வருடம் வரை காத்திருந்தும் கருவுறுதலை சந்திக்காமல் இருந்தால் அவர்களுக்கு இந்த ஃபோலிகுலர் ஆய்வு அவசியம் தேவை. ஏனெனில் இந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை குறைபாடு, பி.சி.ஓ.எஸ் போன்றவற்றை கொண்டிருந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும். அதனால் அண்டவிடுப்பு சுழற்சி நடைபெறாமல் இருக்கும்.

    அதே நேரம் கருவுற்தல் மருந்துகள் பயன்படுத்தி ஆறுமாதங்கள் கடந்தும் நீங்கள் கருத்தரிக்கவில்லை என்றால் அது கவனிக்க வேண்டிய விஷயமாகும். ஃபோலிகுலர் கண்காணிப்பின் போது பிரச்சனைகள் கண்டறியப்படும் என்றாலும் அது பெண்களின் வயதை பொறுத்தது.

    • கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் பொதுவான நிகழ்வு இது.
    • ட்ரைமெஸ்டர் காலங்களில் மார்பக கசிவு வருவது சாதாரணமானது.

    பிரசவத்துக்கு பிறகு மார்பகம் பால் உற்பத்தி செய்வதில்லை. மார்பகத்தில் மஞ்சள் நிற திரவம் கருவுற்ற காலத்திலேயே வெளியேற கூடும். இது கொலஸ்ட்ரம் என்று அழைக்கப்படுகிறது. பால் சுரப்புக்கு முன்பு மார்பகத்தில் இருந்து வரக்கூடிய குழந்தையின் முதல் ஊட்டச்சத்து இது.

    இந்த கொலஸ்ட்ரம் என்னும் மஞ்சள் நிற பாலானது கருவுற்ற 14 வது வாரத்தில் இருந்தே உற்பத்தி ஆக கூடும். கருவுற்ற துவக்கத்தில் குழந்தை உணவு உற்பத்தி செய்யப்படுவது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை.

    கர்ப்பகாலத்தில் மார்பக கசிவு சங்கடமாக இருந்தாலும் இது சாதாரணமானது. கர்ப்பகாலத்தில் உண்டாகும் இந்த கொலஸ்ட்ரம் என்னும் தெளிவான திரவம் குழந்தையின் உணவை ஆரோக்கியமாக தயார் செய்வதற்கான அறிகுறியாகவே உணரலாம்.

    ஏனெனில் இவைதான் குழந்தைக்கு தேவையான செரிமானத்துக்கு உதவும். இது புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவு. இதில் சர்க்கரை அளவும் குறைவு. குழந்தை எவ்விதமான நோய்த்தொற்றுக்கும் ஆளாகாமல் காக்கும் ஆன்டிபாடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

    கர்ப்பகாலத்தில் எல்லா பெண்களுக்கும் மார்பகத்தில் கசிவு இருக்கும் என்றாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் இருக்கும். சில பெண்களுக்கு இரண்டாவது ட்ரைமெஸ்டரில் மார்பக கசிவு இருக்கலாம்.

    கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் பொதுவான நிகழ்வு இது. எனினும் கர்ப்பத்தின் 12 அல்லது 14 வது வாரங்களில் அதாவது முதல் ட்ரைமெஸ்டர் காலங்களிலும் மார்பகங்களில் கசிவு உண்டாக கூடும்.

    இறுதி மூன்றாவது மாதங்களிலும் இவை உண்டாக கூடும். பிரசவக்காலம் நெருங்கும் போது இந்த கசிவு அதிகரிக்கவும் செய்யும்.

    சிலருக்கு பிரசவத்துக்கு பிறகு இந்த கசிவு இல்லாமலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இது குறித்து கர்ப்பிணி பெண் கவலை கொள்ள தேவையில்லை. இன்னும் சில பெண்களுக்கு பிரசவத்துக்கு பிறகும் மார்பகத்தில் கசிவு இருக்காது. இந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனை அவசியம் தேவையாக இருக்கும்.

    கர்ப்பத்தின் மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் மார்பக கசிவு வருவது சாதாரணமானது.

    மார்பகத்தில் நீர் கசிவு என்பது இயல்பானது சாதாரணமானது என்று சொல்வார்கள். ஆனால் இது அசாதாரணமான அறிகுறிகளை கொண்டிருக்கும் போது தவிர்க்காமல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.

    பால்கசிவு தொடர்ந்து நிற்காமல் இருந்தால் அது அசாதாரணமானது. பாலில் ரத்த புள்ளிகள் ஏதேனும் இருந்தால் அதுவும் அசாதாரணமானது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது பால் குழாய்கள் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதுண்டு.

    எனினும் பாலூட்டிக்குழாயில் எக்டேசியா அல்லது அடைக்கப்பட்ட பால் குழாய் மருத்துவரால் எளிதில் சிகிச்சை அளிக்க கூடியவை. அதனால் அசாதாரணமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு இது குறித்து சந்தேகம் இருந்தால் தயக்கமில்லாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    • பல காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை.
    • உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    சத்து மிகுந்த பல காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. அதன் சுவையிலோ அல்லது மனத்திலோ ஏதாவது பிடிக்காமல் போய்விட்டால் அதை நாம் உண்ண மறுத்து விடுவோம். அப்படி பிடிக்காத காய்களில் முள்ளங்கியும் ஒன்று. ஒரு சிலரே இந்த முள்ளங்கியை விரும்பி சாப்பிடுவார்கள். பலரும் இதை விரும்ப மாட்டார்கள்.

    முள்ளங்கியை நாம் சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கக்கூடிய கல்லீரல், சிறுநீரகம், ரத்த சிவப்பணுக்கள் மற்றும் மலக்குடல் போன்றவற்றின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதில் அதிக அளவு நீர் சத்தும், நார் சத்தும் இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் உணவில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ள வேண்டும். முள்ளங்கியை வைத்து எப்படி காரசாரமான துவையல் செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    முள்ளங்கி- கால் கிலோ

    சின்ன வெங்காயம்- 10

    காய்ந்தமிளகாய்- 4

    மல்லி - ஒரு ஸ்பூன்

    வேர்கடலை- ஒரு ஸ்பூன்

    கடலை பருப்பு- ஒரு ஸ்பூன்

    உளுத்தம்பருப்பு- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    புளி- நெல்லிக்காய் அளவு

    பூண்டு- 4

    செய்முறை:

    முதலில் முள்ளங்கியை எடுத்து தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்த பிறகு அதில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். இவை இரண்டும் லேசாக நிறம் மாறியதும் அதில் மல்லி சேர்க்க வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு வருத்த வேர்க்கடலை சேர்த்து கிளறி ஒரு பாத்திரத்தில் எடுத்து ஆற வைக்க வேண்டும்.

    மறுபடியும் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கியை அதில் சேர்த்து வதக்க வேண்டும். முள்ளங்கியின் நிறம் லேசாக மாறிய பிறகு சின்ன வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வெந்த பிறகு புளியை போட்டு ஒரு நிமிடம் அடுப்பில் நன்றாக வதக்க வேண்டும். இதையும் எடுத்து ஆற வைத்து விட வேண்டும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வறுத்து ஆற வைத்திருக்கும் பருப்பு வகைகளை போட்டு தண்ணீர் ஊற்றாமல் ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் வதக்கி வைத்திருக்கும் முள்ளங்கியையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் நன்றாக அரைபட்ட பிறகு அதை ஒரு பவுலுக்கு மாற்றி விட வேண்டும்.

    இப்பொழுது துவையலை தாளிப்பதற்காக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்க வேண்டும். பருப்பு நன்றாக சிவந்த பிறகு அதில் ஐந்து பல் பூண்டை நன்றாக தட்டி சேர்க்க வேண்டும். பூண்டு லேசாக சிவந்த பிறகு அதில் கருவேப்பிலையை போட வேண்டும். கருவேப்பிலை நன்றாக பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் துவையலில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

    இதனை சூடான சாதத்தில் நெய் விட்டு அரைத்து வைத்துள்ள முள்ளங்கி தொக்கு சேர்த்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    • எல்லோருக்கும் இயல்பாக கருத்தரித்தல் அமைந்துவிடுவதில்லை.
    • பலருக்கும் சில காரணங்களால் கருவுறுதலில் சிக்கல் உண்டாகிறது.

    கருத்தரித்தலை எதிர்நோக்கும் எல்லோருக்கும் இயல்பாக கருத்தரித்தல் அமைந்துவிடுவதில்லை. பலருக்கும் சில பல காரணங்களால் கருவுறுதலில் சிக்கல் உண்டாகிறது. இதனால் கருவுறாமை பிரச்சனையை அதிக தம்பதியர் எதிர்கொள்கிறார்கள். கருத்தரிக்க இயலாமையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய பரிசோதனைகளுக்கு பிறகு செய்றகை கருவுறுதல் செய்யலாம் என்று மருத்துவர்கள் பரிசோதிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த IVF கை கொடுக்கிறது.

    கருவுறுதல் தாமதமாகும் போதும் பரிசோதனையில் இயல்பான கருத்தரிப்பு சாத்தியமில்லை எனும் போதும் இந்த இவ்ப் தொழில்நுட்பத்தை விரும்புகிறார்கள்.

    இந்த செயல்முறையின் போது கருப்பையில் இருந்து முட்டைகள் அறுவை சிகிச்சை மூலம் மீட்டெடுக்கப்படுகின்றன. ஆய்வகத்தில் விந்தணுவுடன் சேர்க்கப்பட்டு கருவுறுகின்றன.

    பிறகு பெண்ணின் கருப்பையில் மீண்டும் செருகப்படுகின்றன. தம்பதியர் கருவுறாமை பிரச்சனையில் இருக்கும் போது invitro fertilization (IVF) சிகிச்சையை தேர்வு செய்வதாக இருந்தால் இது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.

     நீங்கள் IVF முயற்சிக்கும் தம்பதியராக இருந்தால் சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.

    ஆரோக்கியமான எடையை பராமரிப்பது அவசியம்

    ஆரோக்கியமான எடையை பராமரிப்பது சிகிச்சையில் முக்கியமானது. உடல் பருமனாக இருப்பது மற்றும் குறைவான எடை கொண்டிருப்பது என இரண்டுமே உங்கள் சிகிச்சை வெற்றி விகிதங்களை பாதிக்கச் செய்யலாம். அதிக எடையுடன் இருக்கும் பெண், சிகிச்சையில் கருப்பை கண்காணிப்பை சிரமமாக வைக்கிறது. முட்டைகளை மீட்டெடுக்கும் போது சிரமத்தை உண்டு செய்கிறது.

    ஆரோக்கியமான எடையை பெறுவது உணவு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள். தேவையெனில் உடல் எடை குறைய பயிற்சி போன்றவற்றை செய்யலாம். உணவியல் நிபுணருடன் ஆலோசித்து கார்டியோ, மெட்டபாலிக் எடை இழப்பு திட்டம் போன்றவை எடையை பராமரிக்க உதவலாம். பெண்களோடு, ஆண்களும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது.

    மன அழுத்தம்

    மன அழுத்தம் உங்கள் சிகிச்சையில் தலையிடலாம். மேலும் IVF சிகிச்சையின் போது மன அழுத்தம் இருந்தால் அது சிகிச்சையை வெற்றி பெற செய்வதில் தடை ஏற்படும். மேலும் இதை குறைப்பது கடினமானதாக இருந்தாலும் கூட மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளில் தம்பதியர் இருவரும் இணைய வேண்டும்.

    மனம், உடல் திட்டங்களில் பதிவு செய்தல், மன அழுத்தத்தை குறைத்தல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கர்ப்பத்தின் வெற்றியை சாத்தியமாக்கலாம்.

    விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சிப்பது நல்லது

    விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த மல்டி வைட்டமின்களின் பயன்பாடு முக்கியம். ஆண்களும் மலட்டுத்தன்மை குறைபாடு வராமல் இருக்க மல்டி வைட்டமின்கள் எடுப்பது நல்லது. உடல் எடையை பராமரிப்பது, உடற்பயிற்சி செய்வது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம். சரியான கவனிப்பின் கீழ் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிக்க உதவும் மருந்துகளை ஆண்களும் உட்கொள்ள தொடங்கலாம்.

    இது IVF விளைவுகளில் நன்மை பயக்கும். சில நேரங்களில் விந்தணுவிலிருந்து நேரடியாக விந்து வெளியேறும் அளவுக்கு இவை பலனளிக்கலாம். விந்து பகுப்பாய்வுகளில் எந்த வகையான அசாதாரணங்கள் இருந்தாலும் கருவுறாமை நிபுணரை சந்தித்து உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.

    புகைப்பிடிக்கும் பழக்கம்

    ஆண்கள் புகைப்பிடிக்கும் போது IVF வெற்றிக்கான வாய்ப்பை வெகுவாக குறைக்கலாம். ஆண்கள் கருத்தரிப்பு சிகிச்சைக்கு முயற்சிக்கும் போது புகைப்பிடிப்பதால் முட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கலாம். நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாலும் அதை நிறுத்துவதுதான் சிறந்த வழி.

    விந்தணுக்களின் தரம் அதிகரிக்க மாத்திரைகள்

    விந்தணுக்களின் தரம் மேலும் உறுதி செய்ய சில சப்ளிமெண்ட்கள் உதவுகிறது. மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைப்பார் அல்லது நீங்களே மருத்துவரிடம் கேட்டு அதற்கான மாத்திரைகளை எடுக்கலாம். இதற்கு மல்டிவைட்டமின்களும் உதவியாக இருக்கும். தம்பதியர் இருவருக்கும் கூட இவை தேவையாக இருக்கலாம்.

    வைட்டமின் டி

    போதுமான அளவு வைட்டமின் டி இருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் கருவுறாமை கொண்டுள்ள தம்பதியரில் 40 சதவீதம் நபர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம். மேலும் இந்த குறைபாடு IVF உடன் மோசமான விளைவுகளை உண்டு செய்யலாம். கருவுற முயற்சிக்கும் தம்பதியர் மற்றும் கருவுறாமை நிலையில் உள்ளவர்கள் உடல் பரிசோதனையில் வைட்டமின் டி பரிசோதனை செய்வதும் நல்லது. வைட்டமின் டி குறைவாக இருந்தால் வைட்டமின் டி உணவுகள் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகள் எடுப்பது நல்லது.

    சரியான மருத்துவரை அணுகவும்

    சிறந்த இனப்பெருக்க உட்சுரப்பியல் நிபுணரை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களுக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் மருத்துவரிடம் ஒளிவு மறைவில்லாத உங்கள் வரலாறு முக்கியம். அப்போதுதான் சரியான காரணங்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

    கருவுறாமைக்கு பரிசோதனைக்கு பிறகு உங்கள் மருத்துவர் IVF தீர்வு என்று சொன்னால் நீங்கள் உங்கள் சிகிச்சை காலத்தில் சில விஷயங்களில் கவனமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்வதும் பொறுமையோடு இருப்பதும் சிகிச்சையில் வெற்றி பெற உதவும். பல நேரங்களில் தம்பதியருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட IVF சுழற்சிகள் இந்த சிகிச்சையில் தேவைப்படலாம். மேலும் முடிவுகள் இந்த சுழற்சியிலிருந்து கணிசமாக வேறுபடலாம்.

    முதல் முறை வெற்றி கிடைக்கவில்லை என்றால் உங்கள் மருத்துவர் அடுத்த சுழற்சியில் மேம்படுத்த சிகிச்சை செய்யலாம். அதனால் பின்னடைவில் சோர்வடையாமல் இருங்கள். ஏனெனில் இவை எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் சில சமயங்களில் இது குறித்து அலட்டிகொள்ளாமல் இருப்பது உங்களை நீங்களே நிம்மதியாக வைத்திருக்க செய்யும். சிகிச்சையில் வெற்றி கிட்டாத போது உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். பொறுமையாக இருங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

    • பவுண்டேஷன் மிகவும் அவசியமானவை.
    • நண்பகல் அளவில் உங்கள் மேக்கப்பை டச்சப் செய்வது அவசியம்.

    நீங்கள் மேக்கப்பை நேசிப்பவரா? மிகவும் நுட்பமாக மேக்கப் செய்து கொண்டு, அலங்காரமாக காட்சி தருவதில் விருப்பம் கொண்டவரா? தினமும் பணிக்கு செல்வதற்கு முன், முகத்தை முழு அலங்காரம் செய்து கொள்ள போதிய நேரமும் இருக்கிறதா?

    உங்கள் காலை நேரத்தை உடனடியாக அழகாக்கி, உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கும் நான்கு அழகு சாதன பொருட்கள். இவை பயணத்திற்கும் ஏற்றவை என்பதோடு மற்ற வேலைகளையும் கவனிக்கலாம். இவற்றை உங்கள் கைப்பையில் வைத்துக்கொண்டால் எப்போது வேண்டும் என்றாலும் எளிமையாக தயாராகலாம். பிசியாக இருக்கும் பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாக வைத்திருக்க கைவசம் வைத்திருக்க வேண்டிய அழகுசாதன பொருட்களை பற்றி பார்க்கலாம்...

     பவுண்டேஷன் கிரீம்

    பவுண்டேஷன் மிகவும் அவசியமானவை. அதிலும் குறிப்பாக உங்களுக்கு நேர்த்தி குறைவான சருமம் இருந்தால், அவை மிகவும் அவசியம். ஆனால் இங்கு உண்மையை ஒப்புக்கொள்வோம். காலை நேரத்தில் முழுமையான பவுண்டேஷனை பயன்படுத்துவதற்கான நேரம் உங்களுக்கு இல்லை. அதாவது நீங்கள் தூக்கத்தை நேசிப்பவர் என்றால், உங்கள் குறைகளை மறந்து, பூசிக்கொள்ள அதிக நேரம் தேவைப்படாத பொருளை தான் நீங்கள் நாட வேண்டும். உங்கள் சருமத்தின் மீது லேசாக அமரக்கூடிய பிபி கிரீம் அல்லது சிசி கீரிமை போடலாம். அதற்கு குஷன் பவுண்டேஷனையும் பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பும் பவுண்டேஷனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

    காம்பேக்ட் பவுடர்

    வெளியே செல்லும் எல்லா பெண்களின் கைப்பையிலும் இருக்க வேண்டிய பொருள் காம்பேக்ட் பவுடர். வியர்வை, ஈரப்பதம் மற்றும் முகத்தை தொடுவது போன்றவை பவுண்டேஷனை பாதிக்கிறது. எனவே நண்பகல் அளவில் உங்கள் மேக்கப்பை டச்சப் செய்வது அவசியம். ஆக, உங்கள் கைப்பையில் காம்பேக்ட் பவுடர் வைத்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும். காம்பேக்ட் பவுடர் உங்கள் சருமத்திற்கு மென்மையான பளபளப்பை தருவதோடு, பவுண்டேஷன் நீடித்து இருக்கவும் உதவுகிறது. வெப்பம் மிகுந்த நாட்களில் வெளியே செல்வதால் உண்டாகும் பாதிப்பாக துளைகளையும் அடைக்கிறது.

    மஸ்காரா

    பெண்களுக்கு மிகவும் தேவையான பொருட்களில் மஸ்காராவும் ஒன்று. இவை உங்கள் கண்களுக்கு உடனடியாக தீர்க்கமான தன்மையை அளித்து, உங்கள் கண் இமைகள் புத்துணர்ச்சியுடன் இருக்க வழி செய்கிறது. எப்போது உங்கள் கண்களை மெருகேற்ற மஸ்காரா தேவைப்படும் என்று தெரியாது என்பதால், அதை எப்போதும் கைப்பையில் வைத்திருப்பது நல்லது. மேலும், சுருளான மைகள் தேவை எனில், லாக்மே கர்லிங் மஸ்காராவை முயற்சிக்கவும். அதே போல இமைகளை நீளமாக தோன்ற வைக்க விரும்பினால் தி லாக்மே பிளட்டர் சீக்ரெட்ஸ் டிராமட்டிக் ஐஸ் மஸ்காரா ஏற்றதாக இருக்கும்.

    லிப்ஸ்டிக்

    வாய்ப்புள்ள போதெல்லாம் உங்கள் கைப்பையில், ஒரு சில ஷேட் லிப்ஸ்டிக்குகளை வைத்திருக்கவும். 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை லிப்ஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். மனநிலை அல்லது சூழலுக்கு ஏற்ப பொருத்தமான ஷேடை பயன்படுத்தலாம். எப்போது எந்த வண்ண லிப்ஸ்டிக் தேவை என சொல்ல முடியாது. கைவசம் சில வண்ணங்களை வைத்திருக்க வேண்டும்.

    • லிப்ஸ்டிக்குகளில் உள்ள டெக்ஸ்சர்கள் ஒவ்வொரு சீசனுக்கும் வேறுபடும்.
    • செமி-மேட் முதல் கிரீம் வரை சீசனுக்கு மிகவும் சிறந்தவை.

    லிப்ஸ்டிக்குகளில் உள்ள டெக்ஸ்சர்கள் ஒவ்வொரு சீசனுக்கும் வேறுபடும். செமி-மேட் முதல் கிரீம் வரை இந்த சீசனுக்கு மிகவும் சிறந்தவை. அதிக அளவு கிளாஸ், அதாவது ஜொலிக்கும் விதமான லிப்ஸ்டிக்குகள் கண்ணை பறிக்கும், ஆனால் எளிதில் கலைந்து விடும். முழுவதும் மேட் ஸ்டைலில் உள்ள லிப்ஸ்டிக் உங்கள் உதட்டை உலர்ந்ததாக, வயதானதாக காட்டும். ஒரு லிப் பாம் கொண்டு முதலில் உதடுகளை தயார் செய்யலாம், பின்னர் லிப் கலரை பயன்படுத்தலாம் அல்லது கிரீமி லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். மேட் ஸ்டைல் பகலுக்கும், கிரீமி ஸ்டைல் இரவுக்கும் சிறந்தவையாக இருக்கும்.

     அலுவலக மேக்கப்

    அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஆர்ப்பாட்டமில்லாத மேக்கப்பே போதுமானது. நேர்த்தியான கூந்தல், அலங்காரமற்ற உதடுகள் தேவையான மந்திரஜாலத்தை உருவாக்கும்.

    * ஃபவுண்டேஷன் மூலம் சருமத்தை சமமாக்குங்கள்.

    * மென்மையான, நியூட்ரல் கலர் பிளஷை கன்னங்களில் பூசுங்கள்

    * இயற்கையான பீஜ் ஷேடு அல்லது உங்கள் உதட்டு கலரோடு ஒத்துப்போகும் கலரை இடுங்கள்

    * கருவளையங்களை குறைக்க கன்சீலர் இட்டு, உங்கள் கண் இமையில் நியூட்ரல் கலரை பூசுங்கள்

    * கண்ணின் மேல் இமையின் உள்முனையில் இருந்து வெளிமுனை வரை லிக்விட் ஐலைனர் இடுங்கள். கூந்தலை தாழ்வான கொண்டையாக போட்டுக்கொள்ளவும். இறுக்கமாக முடிந்து வையுங்கள். பேங்க்ஸ் இருந்தால், அவை நெற்றியில் அழகாக விழட்டும்.

    • பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் உடல் எடை அதிகரிக்க கூடும்.
    • முழு நேரமும் ஓய்வில் இருப்பதால் கூட எடை அதிகரிக்கலாம்.

    பிரசவத்துக்கு பிறகு இளம் தாய்மார்களின் உடல் எடை அதிகரிக்க கூடும். கொஞ்சம் கவனமெடுத்தால் பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை எளிதாக கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும்.

    கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு போஷாக்கான உணவு தேவை என்பதால் எடுத்துகொள்ளும் அதிகப்படியான உணவுகள் கர்ப்பகாலத்தில் அதிக எடையை உண்டாக்குகிறது. ஆனால் பிரசவத்துக்கு பிறகும் எடை கூட வாய்ப்புண்டு என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அதற்கு காரணமாக உடல் சோர்வு, மனசோர்வு குழந்தையை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பு போன்றவையே காரணமாக சொல்லப்படுகிறது. இவை தவிர பிரசவக்காலத்துக்கு பிறகு முழு நேரமும் ஓய்வில் இருப்பதாலும் கூட சமயத்தில் எடை அதிகரித்துவிடுகிறது.

     உடற்பயிற்சி செய்யுங்கள்

    பிரசவம் சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சையாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரையோடு உடற்பயிற்சி செய்யலாம். சுகப்பிரசம் ஆன பெண்கள் 7 நாட்களுக்கு பிறகு மிதமான உடற்பயிற்சி செய்யலாம்.

    நடைபயிற்சி, வயிறு, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைப்பகுதியை இறுகச் செய்யும் பயிற்சிகள் செய்யலாம். அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை செய்து இரண்டு மாதங்களில் உடல்நிலையை பொறுத்து பயிற்சி செய்யலாம்.

    படிப்படியாக சில மாதங்களுக்கு பிறகு ஏரோபிக் பயிற்சியான ஜாகிங், ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங் போன்றவற்றை செய்யலாம். இவை பின்னாளில் கர்ப்பப்பை இறக்கம், சிறுநீர் தானாக வெளியேறும் பிரச்சனை போன்றவற்றை உண்டாக்காது.

    தாய்ப்பால் கொடுக்க தவிர்க்க வேண்டாம்

    பிரசவத்துக்கு பிறகு உடல் எடை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனில் அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது நாள் ஒன்றுக்கு 2000 முதல் 2500 கலோரிகள் வரை உட்கொள்ள வேண்டும். அப்பொதுதான் தாய்ப்பால் குறைவில்லாமல் கிடைக்கும். அதே போன்று தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கலோரிகள் எரிக்க முடியும். அதனால் குழந்தைக்கு தாய்ப்பால் நிறைவாக தந்தாலே உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

    உணவில் கவனம்

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று அதிகமாக உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றில்லை. பிரசவம் முடிந்த கையோடு ஒரு டயட்டீஷியனை தொடர்பு கொண்டு ஆலோசித்து குழந்தைக்கு வேண்டிய சத்தான உணவு வகைகளை பட்டியலிடுங்கள். தாய்மார்கள் சத்தான உணவை எடுத்துகொள்வதன் மூலம் அந்த சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் செல்லும்.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், உலர் பருப்புகள், கீரைகள் நிச்சயம் ஆரோக்கியம் காக்கும். உடல் எடை குறைப்பிலும் உதவக்கூடும். ஏனெனில் உடல் எடையை குறைக்கும் போது உணவுகள் மீது அதிக கவனம் இருக்க வேண்டும்.

    திரவ ஆகாரங்கள் அவசியம்

    திரவ ஆகாரங்கள் உடலுக்கு நீர்ச்சத்து தரக்கூடியவை மட்டுமே அல்ல. இவை உடலுக்கு வேண்டிய சத்துகளையும் கொடுக்க கூடியவை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும் உணவை தாய்மார்கள் எடுத்துகொள்ள வேண்டும். அதே நேரம் அந்த உணவுகள் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான சாய்ஸ் திரவ ஆகாரங்கள் தான்.

    தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது கூட முதலில் ஒரு டம்ளர் நீர் குடித்தபிறகு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் தாய்ப்பால் சுரப்பு வேகம் கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    பிரசவத்துக்கு பிறகு உடல் எடை குறையவும், கட்டுக்குள் வைக்கவும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் என பலவிதமான திரவ ஆகாரங்கள் உண்டு. இவை எல்லாமே பக்கவிளைவுகளையும் உண்டாக்காது என்பதால் இதை முயற்சி செய்யலாம்.

    உதாரணத்துக்கு வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, தேன், சீரகம், மிளகுத்தூள், புதினா, கறிவேப்பிலை சேர்த்த பானம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பதோடு இவை உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்தும் வெளியேற்றும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலைத் தவிர்க்க சிறந்த வழிகள் மற்றும் பிரச்சனையும் அதிகரிக்காது.

    தவிர்க்க வேண்டியது

    கர்ப்பகாலத்தில் அதிக எண்ணெய் பொருள்கள், கொழுப்பு பொருள்கள், துரித உணவுகள், பேக்கரி உணவுகள், நொறுக்கு தீனிகள், பாக்கெட் உணவுகள், உடனடி தயாரிப்பு உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள், செயற்கை குளிர்பானங்கள் என எதையெல்லாம் தவிர்த்தொமோ அதை இப்போது முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை எல்லாமே கொழுப்பு நிறைந்தவை உடலில் கொழுப்பை அதிகரிக்க கூடியவை.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
    • தேரலி இலைகள் அல்லது வாழை இலைகளில் வேகவைக்கப்படுகிறது.

    பலாப்பழ அப்பம் என்பது பழுத்த பலாப்பழம், வெல்லம், தேங்காய் மற்றும் வீட்டில் வறுத்த அரிசி மாவுடன் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய தேநீர் நேர சிற்றுண்டாகும். தயாரிக்கப்பட்ட மாவை தேரலி இலைகள் அல்லது வாழை இலைகளில் வேகவைக்கப்படுகிறது.

    கேரளாவிலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் பிரபலமானது. இது சக்கா அப்பம், எலாய் அடாய் கும்பலியப்பம் சக்கா அடா இலா அடா எலாய் கொசுகட்டாய் சக்கா கோலுகாட்டா போன்ற பல பெயர்களில் அறியப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    வறுத்த அரிசி மாவு - 1.5 கப்

    பலாப்பழம் - 1.5 கப் நசுக்கியது

    வெல்லம் - 3/4 கப்

    அரைத்த தேங்காய் - 1/4 கப்

    வாழை இலை -8 துண்டுகள்

    நெய் - 1 ஸ்பூன்

    ஏலக்காய் - 4

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை

    அனைத்து பலாப்பழ துண்டுகளிலும் விதைகளை அகற்றிவிட்டு மிக்சி ஜாரில் கரகரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து அது முழுமையாக உருகும் வரை சூடாக்க வேண்டும். பின்னர் வெல்லம் கரைந்த பிறகு அதை வடிகட்ட வேண்டும்.

    ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் நெய் ஊற்றி காய்ந்த பிறகு நசுக்கிய பலாப்பழத்தை சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து வதக்க வேண்டும்.

    பின்னர் உருகிய வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பலாப்பழம் மென்மையாகி, கலவை கெட்டியாகும் வரை கிளற வேண்டும். இதில் அரைத்த தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    இப்போது வறுத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்க்க வேண்டும். எல்லாம் நன்கு ஒன்றாக சேரும்' வரை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்து விட்டுசில நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.

     இதற்கிடையில், வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த இலையில் சிறிது நெய் தடவி சிறிய பங்கு மாவை நடுவில் வைத்து வட்டமாக தட்டி விரல்களால் அதைப் பரப்பவும். வாழை இலையை பாதியாக மடித்து ஒரு பொட்டலமாக அமைக்கலாம். மீதமுள்ள மாவையும் அதைப் போலவே செய்யுங்கள்.

    இதனை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும். சூடு ஆறியதும் பொட்டலத்தை அகற்றி சூடான தேநீருடன் பலாப்பழ அப்பத்தை சுவைக்கலாம்.

    • குழந்தைக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் சிசேரியனை திட்டமிடலாம்.
    • பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும்.

    சிசேரியன் என்பது கர்ப்பிணியின் வயிறு மற்றும் கருப்பையை திறக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு வழி. இது சிசேரியன் முறை பிரசவம் என்று அழைக்கப்படுகிறது.

    சிசேரியனுக்கான காரணங்கள்

    கர்ப்பிணிக்கு அல்லது குழந்தைக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் சிசேரியனை திட்டமிடலாம். ஏற்கனவே சிசேரியன் இருந்தால் அடுத்த குழந்தையை பிரசவிப்பதும் சிசேரியனாக இருக்கலாம்.

    யோனி பிரசவத்தின் போது தாய்க்கு அல்லது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி மற்றும் செயலில் உள்ள ஹெர்ப்ஸ் போன்ற சில நோய்த்தொற்றுகளை கொடுக்கலாம்.

    கர்ப்பிணி நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற சில நிபந்தனைகள் கொண்டிருக்கும் போது மருத்துவர் சிசேரியனை அறிவுறுத்தலாம்.

    நஞ்சுக்கொடி கருப்பை வாயை தடுக்கலாம். சில பிரசவங்கள் சிசேரியனை அவசியமாக்கலாம். குழந்தை மிகவும் பெரியதாக இருக்கலாம். அல்லது பிரசவத்துக்கு தவறான நிலையில் இருக்கலாம். சில பெண்கள் சுகப்பிரசவத்தில் தொடங்கினாலும் சிசேரியனுக்கு மாற்றப்படலாம்.

    வயிற்றில் குழந்தைக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற மோசமான அறிகுறிகளை மருத்துவர்கள் கவனிக்கலாம். ஏனெனில் பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு, கரு எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதற்கான நல்ல அறிகுறியாகும். பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும். சாதாரண விகிதம் நிமிடத்துக்கு 120 முதல் 160 வரை இடையில் மாறுபடும்.

    கருவின் இதயத்துடிப்பு ஏதேனும் சிக்கல் இருப்பதாக தெரிந்தால் மருத்துவர் உடனடி நடவடிக்கையை எடுப்பார். தாய்க்கு ஆக்சிஜனை வழங்குவது, திரவத்தை அதிகரிப்பது மற்றும் தாயின் நிலையை மாற்றுவது போன்றவை முயற்சிக்கப்படும். இதயத்துடிப்பு மேம்படவில்லை எனில் டாக்டர் சிசேரியன் சிகிச்சைக்கு வலியுறுத்தலாம்.

    சில குழந்தைகள் பிறக்கும் போது கருவின் அசாதாரண நிலையில் இருக்கலாம். பிரசவத்தின் போது கருவின் இயல்பான நிலை தாயின் முதுகை எதிர்கொள்ளும் வகையில் தலை கீழாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கரு சரியான நிலையில் இருக்காது. இது யோனி வழியாக பிரசவத்தை கடினமாக்கலாம் எனவே டாக்டர் சிசேரியனை திட்டமிடுகின்றனர்.

    திட்டமிட்ட சிசேரியன்

    சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் என்று முன்கூட்டியே தெரிந்தால் நீங்கள் பிரசவ தேதியையும் மருத்துவர் மூலம் அறிந்துகொள்ளலாம். ஐவிஎஃப் முலம் மருந்துகள் மற்றும் திரவங்களை பெற்று, அறுவை சிகிச்சையின் போது உங்கள் சிறுநீர்ப்பை காலியாக வைக்க ஒரு வடிகுழாய் வைக்கப்படும்.

    சிசேரியனை திட்டமிடும் பெரும்பாலான பெண்களுக்கு மயக்க மருந்து ஒரு எபிட்யூரல் அல்லது ஸ்பைனல் பிளாக் இடுப்பிலிருந்து கீழே இறங்கிவிடும். இதனால் எந்த வலியையும் அவர்கள் உணரமாட்டார்கள். இந்த வகையான மயக்க மருந்து உங்களை இன்னும் விழித்திருக்கவும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவும் உதவுகிறது.

    அறுவை சிகிச்சையின் போது இடுப்புக்கு குறுக்கே ஒரு திரை வைக்கப்படும் இதனால் அதை பார்க்க முடியாது. வயிற்றில் அதன் பிறகு கருப்பையில் ஒரு வெட்டு இருக்கும் என்றாலும் மயக்க மருந்து காரணமாக நீங்கள் அதை உணர மாட்டீர்கள்.

    கருப்பையில் இருந்து குழந்தையை அகற்ற மருத்துவர்கள் பணிபுரியும் போது நடுப்பகுதியை அவர்கள் தள்ளுவதையோ அல்லது இழுப்பதையோ நீங்கள் உணர முடியும். அல்லது அழுத்தமாக உணர்வீர்கள். குழந்தை பிறந்தவுடன் அழுவதை கேட்கவும், பார்க்கவும் முடியும். எனினும் சிசேரியன் முடிந்ததும் மருத்துவர் உங்களை அனுமதித்தால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கலாம். அதே நேரம் எல்லா கர்ப்பிணி பெண்களும் தங்கள் குழந்தையை உடன் வைத்திருக்க முடியாது.

    சில நேரங்களில் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் மற்றும் மருத்துவர்களின் உதவி தேவைப்படலாம்.

    குழந்தையின் நஞ்சுக்கொடியை அகற்றி தையல் போடப்படும். சிசேரியன் பிரசவம் செய்வதற்கு ஒரு மணி நேரம் வரை இருக்கலாம்.

    அதே நேரம் அவசரகால சிசேரியன் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சையின் வேகம் மற்றும் அவசரம் உள்பட சில வித்தியாசங்கள் இருக்கலாம். திட்டமிடப்பட்ட சிசேரியனை காட்டிலும் அவசரமாக செய்யப்படும் சிசேரியனில் வேகம் அதிகமாக இருக்கும்.

    • கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் அசவுகரியங்கள் உண்டாவது இயல்பு.
    • கரு முட்டை கருப்பைக்குள் வராமல் கருப்பையின் வெளிப்புற சுவரில் இணைந்துவிடும்.

    கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் அசவுகரியங்கள் உண்டாவது இயல்பு. அதேநேரம் ஒவ்வொரு பெண்ணும் கருவுற்றதும் தங்களது கர்ப்பம் சரியானதா என்பதை மருத்துவரை அணுகி உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் கருவானது கருப்பைக்குள் வராமல் ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருந்தால் அது எப்போதும் கருப்பைக்குள் வராது. மேலும் அது தாய்க்கு ஆபத்தை உண்டாக்கலாம்.

    எக்டோபிக் கர்ப்பம் என்பது ஆரோக்கியமான கர்ப்பம் தரித்தலில் இருந்து முற்றிலும் வேறானது. எக்டோபிக் கர்ப்பத்தில் கருவுற்ற முட்டையானது கருப்பைக்குள் வராமல் கருப்பையின் வெளிப்புற சுவரில் இணைந்துவிடும்.

    ஆரோக்கியமான கர்ப்பத்தில் கருமுட்டையானது விந்தணுக்களுடன் இணைந்து தானாகவே கருப்பையின் சுவரில் இணைந்து விடும். எக்டோபிக் கர்ப்பத்தில் கருமுட்டை தவறான இடத்தில் வளரும். வெளிப்புற சுவரில் அமைந்துவிடும், ஃபெலோப்பியன் குழாய்களில் அமைந்துவிடும். மேலும் இது கருவறையின் வேறு பகுதிகளிலும் கூட அமைந்துவிடும். கர்ப்பப்பைக்குள் இல்லாமல் கருப்பை வாய் பகுதியில் அடிவயிற்றுக்குழிக்குள் என்று கருவானது வளரலாம்.

    ஏன் ஆபத்தானது?

    எக்டோபிக் கர்ப்பமானது தீவிர நிலை. இந்த நிலையில் இருக்கு பெண்ணுக்கு உடனடி சிகிச்சை தேவை. ஏனெனில் கருமுட்டையால் உயிர் பெற்று இருந்தாலும் கருப்பை தவிர்த்து எங்கு இருந்தாலும் அவற்றால் வளர முடியாது. மேலும் இது அப்பெண்ணின் உறுப்புகளை பாதிக்க செய்யும். இதனால் உட்புறத்தில் ரத்தக்கசிவு உண்டாகலாம். நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம். எக்டோபிக் கர்ப்பம் வந்தால் அந்த கருவை அகற்றுவது தான் சிறந்த வழி. 100 பெண்களில் 2 பேருக்கு இந்த எக்டோபிக் கர்ப்பம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

     அறிகுறிகள்

    கருவுற்ற உடன் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், அசெளகரியங்கள் போன்றவையே குழப்பமாக இருக்கும் என்றாலும் இந்த எக்டோபிக் கர்ப்பம் அறிகுறிகள் தனியாக தீவிரமாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அறிகுறி மாறுபடும். சிலருக்கு கருவுற்ற அறிகுறி போன்று இவையும் இருக்கும். எனினும் கருவுற்றதை உறுதி செய்த உடன் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    * யோனி ரத்தப்போக்கு (புள்ளிகளாக இல்லாமல் துளிகளாக வெளியேறுவது)

    * குமட்டல் மற்றும் வலியுடன் வாந்தி

    * வயிற்று வலி

    * தீவிரமான வயிற்றுப்பிடிப்புகள்

    * தலைச்சுற்றல் அல்லது பலவீனம்

    * தோள்பட்டை, கழுத்து அல்லது மலக்குடலில் வலி

    * ஃபெலோப்பியன் குழாய் சிதைந்தால் வலி மற்றும் இரத்தப்போக்கு கடுமையானதாக இருக்கும்.

    * அதிகப்படியான களைப்பு

    மேற்கண்ட அறிகுறிகள் கருவுற்ற அறிகுறிகளோடு தொடர்பு கொண்டவை என்றாலும் அறிகுறிகளில் உண்டாகும் வித்தியாசத்தை நீங்கள் கண்டறிய வேண்டும்.

    கருமுட்டைகள் சரியான பாதையில் செல்ல கருப்பை தொடர்பான அனைத்து செயல்முறைகளும் அதன் பணிகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கருமுட்டை கருப்பைக்குள் வர முயற்சிக்கும் பாதையில் ஃபெலோப்பியன் குழாய்கள் சேதம் அடைந்தாலும் எக்டோபிக் கர்ப்பம் உண்டாகலாம். அப்போது கருமுட்டையானது வேறு ஏதேனும் இடத்தில் அமர்ந்துவிடலாம். இது இடம் மாறிய கர்ப்பம் என்று சொல்லப்படுகிறது.

    35 வயதுக்கு மேல் குறிப்பாக 40 வயதுக்கு மேல் கருவுறுபவர்கள், அடிக்கடி அபார்ஷன் செய்து கொண்டவர்கள், பெல்விக் டிசீஸ் கொண்டவர்கள் இந்த பாதிப்பை எதிர்கொள்ள வாய்ப்புண்டு. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்கும் எக்டோபிக் கர்ப்பம் சாத்தியமுண்டு.

    • கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும்.
    • ஜாதிக்காய் அரைத்து போட்டு வர கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

    அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான்.

    ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம்.

    இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பரு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகுபடுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் கலந்துள்ள சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா...

    எலுமிச்சை ஸ்கரப்

    இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது.

    எலுமிச்சை- சர்க்கரை ஸ்க்ரப்

    கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்க்ரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும்.

    எலுமிச்சை-முட்டையின் வெள்ளைக் கரு

    இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    எலுமிச்சை-ரோஸ் வாட்டர்

    ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

    மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளை புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தியப் பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும். முகத்தில் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு மேலும் பல வழிகள் உள்ளன.

    * ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

    * வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

    * வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

    * உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.

    * ஜாதிக்காய் அரைத்துப் போட்டு வரவும் கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

    * முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.

    * பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.

    * வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.

    * கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்.

    இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவுடன் அழகாகவும் காணப்படும்.

    ×