என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    உளுந்தம் பருப்புடன் கீரை சேர்த்து வடை செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த கீரை வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உளுந்தம்பருப்பு - 200 கிராம்
    முளைக்கீரை - கைப்பிடி அளவு
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    உளுத்தம்பருப்பை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முளைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைத்த மாவில் நறுக்கிய கீரை, உப்பு, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான உளுந்து கீரை வடை ரெடி.

    இதற்குத் தொட்டுக் கொள்ள எல்லா வகை சட்னியும் ஏற்றது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிற்று கோளாறு, அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி இஞ்சி துவையலை செய்து சாப்பிடலாம். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள் :

    இஞ்சி - 1/2 கப்
    தேங்காய் துருவல் - 1/2 கப்
    காய்ந்த மிளகாய் - 2
    உளுத்தம்பருப்பு - 1 ½  மேசைக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - 4 ஈர்க்கு
    பெருங்காயம், புளி - சிறு நெல்லிக்காய் அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 தேக்கரண்டி



    செய்முறை :

    இஞ்சியைத் தோல்சீவி நன்றாகக் கழுவி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிது நேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.

    அடுத்து தேங்காயைத் துருவல், புளி, பச்சை மிளகாயைக் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்,

    ஆறியதும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

    காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

    இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மிளகு சீரக இடியாப்பம் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இடியாப்ப வகைகளுள் ஒன்று. இன்று மிளகு சீரக இடியாப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு / இடியாப்ப மாவு - ¾ கப்
    மிளகு - 2 மேஜைக்கரண்டி
    சீரகம் - 2 தேக்கரண்டி
    துருவிய தேங்காய் - ¼ கப்
    நெய் - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    முந்திரிப் பருப்பு - 8
    கறிவேப்பிலை - 1 கொத்து
    பெருங்காயம் - 2 சிட்டிகை



    செய்முறை

    தண்ணீரில் சில சொட்டுகள் நல்லெண்ணெய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரிசி மாவில் சேர்த்து, மாவாக பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை இடியாப்பமாக பிழிந்து இட்லி சட்டியில் வேக வைத்து கொள்ளவும்.

    இடியப்பம் செய்து ஆறியவுடன் உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.

    மிளகு சீரகத்தை கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

    கடாயில் நெய் சேர்த்து, உடைத்த முந்திரிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    மிளகு சீரகத்தூள், கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    இதனை, வேகவைத்து உதிர்த்த இடியாப்பம், துருவிய தேங்காய், உப்பு (தேவைபட்டால்) சேர்த்து, கலந்து வைக்கவும்.

    சூப்பரான மிளகு சீரக இடியாப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அரிசி, துவரம் பருப்பு, மிளகு சீரகம் கொண்டு செய்யும் இந்த டிபனை மாலையில் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 1 கப்
    துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - ¾ தேக்கரண்டி
    தேங்காய் - 1 கப்
    தண்ணீர் - 2¼ கப்
    தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப

    தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - ½ தேக்கரண்டி
    பெருங்காயம் - 1 சிட்டிகை
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    கொத்தமல்லி இலை - சிறிதளவு



    செய்முறை

    அரிசி மற்றும் பருப்பை கழுவி குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின், தண்ணீரை வடித்து ஒரு சுத்தமான துண்டில் தண்ணீரை வடித்து பரப்பவும்.

    முதலில் மிளகு மற்றும் சீரகத்தை கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, ரவா போல பொடியாக கவனமாக அரைக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து  சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை வரிசையாக சேர்த்து தாளித்த பின்னர் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். துருவிய தேங்காய், உப்பு சேர்க்கவும்.

    பின்னர் அரைத்த அரிசி கலவை சேர்த்து கைவிடாமல் நன்றாக கலந்து விடவும்.

    குறைந்த தீயில் 5 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் (விரும்பினால்). நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.

    கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன் ஒரே அளவு உருண்டைகளாக எடுத்து, மொத்தமான அடைகளாகத் தட்டவும். ஒவ்வொரு முறையும் கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ளவும். பாலிதீன் பை அல்லது வாழை இலையில் தட்டலாம்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் செய்து வைத்த அடைகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு மிதமான தீயில் இரு புறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பூரி, சாதம், புலாவ், நாண், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை உருளைக்கிழங்கு கறி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    முட்டை - 4
    உருளைக்கிழங்கு - 1
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
    மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - 100 கிராம்

    அரைக்க

    இஞ்சி - 1/2 இன்ச் அளவு
    பூண்டு - 3 பல்
    கொத்தமல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி 

    தாளிக்க

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    பட்டை - 1 இன்ச் அளவு
    கிராம்பு - 2
    வெங்காயம் - 1/4 பங்கு
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை  :

    உருளைக்கிழங்கை தோலுரித்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.

    இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழையை அரைத்துக் கொள்ளவும்.

    தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்து தனியாக வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு, கொத்தமல்லித்தழை அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.

    அடுத்து உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றவும்.

    அவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும்.

    உருளைக்கிழங்கு நன்கு வெந்து மசாலா வாடை போனதும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    பின்னர் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    சுவையான முட்டை உருளைக்கிழங்கு கறி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பரோட்டா, சாப்பாட்டிற்கு ஏற்ற தேங்காய்ப்பால் சிக்க‍ன் கிரேவி செய்வது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கிலோ

    இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

    வெங்காயம் நறுக்கியது - 1 கப்

    தக்காளி நறுக்கியது - 1/2 கப்

    பச்சை மிளகாய் - 2

    பட்டை கிராம்பு -சிறிதளவு

    பிரிஞ்சி இலை - 2

    தேங்காய் பால் - அரை கப்

    சிக்கன் மசாலா - 3 ஸ்பூன்

    தனியா தூள் - 2 ஸ்பூன்

    மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, பிரிஞ்சி இலை, தாளித்து அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், தக்காளி பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    சிறிதளவு வதங்கியவுடன் அதோடு சிக்கன் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.



    இவை அனைத்தும் நன்றாக வங்கியவுடன் சிக்கன் துண்டுகளை தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சேர்த்து வேக விடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய்ப்பால்  சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விட்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.  

    சுவையான சிக்கன் கிரேவி தயார்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மட்டன்  - 1 கிலோ
    அரிசி  - 1 கிலோ
    எண்ணெய்  - 100 கிராம்
    நெய் - 150 கிராம்
    பட்டை  - 2 துண்டு
    கிராம்பு  -  ஐந்து
    ஏலக்காய் - முன்று
    வெங்காயம்  - 1/2 கிலோ
    தக்காளி  - 1/2 கிலோ
    இஞ்சி, பூண்டு விழுது
    கொ. மல்லி  - 1 கட்டு
    புதினா  - 1 கட்டு
    மிளகாய்  - 8
    தயிர்  - 225 கிராம்
    சிகப்பு மிளகாய் தூள்  - 3 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 சிறிதளவு
    எலுமிச்சை பழம்  - 1

    செய்முறை:

    * முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணெயும் நெய்யையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை , கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் வெட்டிய வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும்.

    * பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும். ஒவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும்.

    * பிறகு கொத்தமல்லி புதினாவை போட்டு கிளறவும்

    * பின்னர் தக்காளி, ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேக விடவும். எண்ணெயில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போடவும்.

    * மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக ஐந்து நிமிடம் கிளறவும்.

    * பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும். தீயின் அள‌வை குறைத்து வைக்கவும்.

    *  அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.

    * வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஒவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடிக்க வேண்டும். உடனே தீயை குறைத்து கிரேவியில் கொட்டவும்.

    * கிரேவியையும் அரிசியும் நன்கு சேருமாறு கிளறி சமப்படுத்தி மூடி தம் போடவும்.



    * ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி மூடி வைக்கவும். விரும்புபவர்கள் கலரை தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.

    * அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும். சுவையான ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு ஃப்ரூட்ஸ் சேர்த்து தயிர் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,
    பால் - அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது),
    தயிர் - 2 டீஸ்பூன்,
    திராட்சை (பச்சை, கறுப்பு) - தலா 10,
    மாதுளை முத்துகள் - 2 டீஸ்பூன்,
    கடுகு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
    இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப் பருப்பு, இஞ்சி போட்டு தாளிக்கவும்.

    ஒரு அகலமான பாத்திரத்தில் சாதத்துடன் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும்.

    இதனுடன் பால், தயிர், தாளித்த கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, மாதுளை முத்துகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.

    இதை லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பினால், மதியம் சாப்பிடும் போது கொஞ்சம்கூட புளிக்காது.

    சூப்பரான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்து மீந்து போன இடியாப்பத்தை மாலையில் முட்டை சேர்த்து மசாலா இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து அசத்தலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப்,
    முட்டை - 3,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்,
    நாட்டு தக்காளி - 3,
    பூண்டு - 6 பல்,
    மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் துளி உப்பு போட்டு, அதோடு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    அதை கனமான அடையாக ஊற்றி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

    தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள் (விரும்பினால் கால் டீஸ்பூன் கரம் மசாலாதூள் சேர்த்து), எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுங்கள்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்கு வதக்குங்கள்.

    நன்கு எண்ணெய் கசிந்து வரும்போது, உதிர்த்த இடியாப்பத்தையும் நறுக்கிய முட்டை துண்டுகளையும் போட்டு, சுருளச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

    சூப்பரான முட்டை இடியாப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடியை காலை, மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு - ஒன்று
    பச்சை பட்டாணி - கைப்பிடியளவு,
    ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - கைப்பிடியளவு,
    கேரட் துண்டுகள் - கைப்பிடியளவு,
    உப்பு - தேவையான அளவு,
    பச்சை மிளகாய் - 3 (இரண்டாக கீறவும்),
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
    வறுத்த வேர்க்கடலை - 5 டீஸ்பூன்,
    மாதுளை முத்துக்கள் - சிறிதளவு,
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    நெய்யில் வறுத்த முந்திரி - 10.

    தாளிக்க :

    நெய் - 3 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்,
    மிளகு - கால் டீஸ்பூன்.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணி, ஸ்வீட் கார்னை வேகவைத்து கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டவும்.

    வாணலியில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், ஜவ்வரிசி சேர்த்து வதக்கவும்.

    பிறகு அதனுடன் உப்பு, காய்கறிகள் சேர்த்து கிளறி மூடி சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடம் வேக விடவும்.

    பிறகு மூடியை திறந்து எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

    கடைசியாக வறுத்த வேர்க்கடலை, மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சாபுதானா கிச்சடி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரைஸ் ஸ்டிக்ஸ் பலசரக்கு கடைகளில் கிடைக்கும். இன்று இந்த ரைஸ் ஸ்டிக்கை வைத்து சூப்பரான வெஜிடபிள் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    Rice sticks - ஒரு பாக்கெட்டில் பாதி
    சின்ன வெங்காயம் - 10
    பீன்ஸ் - 10,
    கேரட் - 1 சிறியது (நான் சேர்த்தது)
    பச்சை மிளகாய் - 1
    இஞ்சி - சிறு துண்டு
    உப்பு - தேவைக்கு
    எலுமிச்சை சாறு - சிறிது
    கொத்துமல்லி இலை - சிறிதளவு

    தாளிக்க :

    எண்ணெய்
    கடுகு
    உளுந்து
    கடலைப் பருப்பு
    முந்திரி
    பெருங்காயம்
    கறிவேப்பிலை



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    Rice sticks ஐ மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து 20 நிமிடம் வைக்கவும். அப்போதுதான் ஊறி சாஃப்டாக இருக்கும். பிறகு நீரை வடித்துவிட்டு ஒரு இட்லிப் பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல் அவிக்கவும். சீக்கிரமே வெந்துவிடும். வெந்ததும் எடுத்து உதிர்த்துவிடவும். அல்லது ஊறிய Rice sticks ஐ அப்படியே கூட‌ சேர்க்கலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து காய்கள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.

    காய்கள் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள Rice sticks ஐப் போட்டு forks ஐப் பயன்படுத்திக் கிளறி விடவும். எல்லாம் கலந்து ரைஸ் ஸ்டிக்ஸ் நன்றாக சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான ரைஸ் ஸ்டிக்ஸ் வெஜிடபிள் உப்புமா ரெடி.

    தேங்காய் சட்னி, வெஜ் - நான்வெஜ் குருமா தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகவும் நல்லது. இன்று எளிய முறையில் வரகு அரிசியில் கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி -100 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    வறுத்து பொடிக்க :

    உளுந்து - 20 கிராம்
    கடலை பருப்பு - 20 கிராம்
    மிளகு - 5 கிராம்
    சீரகம் - 5 கிராம்
    வெந்தயம் - 5 கிராம்
    கொத்துமல்லி - 30 கிராம்
    கறிவேப்பிலை - 50 கிராம்
    காய்ந்த மிளகாய் - 3

    தாளிக்க :

    கடுகு - 5 கிராம்
    பெருங்காய தூள் - சிறிதளவு



    செய்முறை :

    வரகு அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து ஆறவைத்து கொள்ளவும்.

    வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, உதிரியாக வடித்த சாதம், அரைத்த பொடி சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வரகு கறிவேப்பிலை சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×