என் மலர்
சமையல்
திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக் குணமாக்கும். நோய்களைக் குணப்படுத்தும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
தேவையான பொருட்கள் :
அரிசி திப்பிலி - 10,
கண்டதிப்பிலி - சிறிதளவு,
மிளகு - 10,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் புளிக்கரைசலை கலந்து தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
குறிப்பு: பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட... மிகவும் நன்றாக இருக்கும்.
அரிசி திப்பிலி - 10,
கண்டதிப்பிலி - சிறிதளவு,
மிளகு - 10,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் புளிக்கரைசலை கலந்து தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
குறிப்பு: பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட... மிகவும் நன்றாக இருக்கும்.
ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - அரை கப்,
சர்க்கரை - 2 டீஸ்பூன்,
பால் - ஒரு கப்,
ஏலக்காய் - சிறிது.
செய்முறை:
ஜவ்வரிசியை வாணலியில் போட்டு, நன்கு பொரியும் வரை வறுக்கவும்.
பிறகு மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
பொடித்த மாவுடன், சிறிது கொதிக்கும் நீர் விட்டுக் கரைத்து, அத்துடன் பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பரிமாறவும்.
தோலுக்கு பளபளப்பைக் கொடுக்கும் இந்தக் கஞ்சி.
ஜவ்வரிசி - அரை கப்,
சர்க்கரை - 2 டீஸ்பூன்,
பால் - ஒரு கப்,
ஏலக்காய் - சிறிது.
செய்முறை:
ஜவ்வரிசியை வாணலியில் போட்டு, நன்கு பொரியும் வரை வறுக்கவும்.
பிறகு மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
பொடித்த மாவுடன், சிறிது கொதிக்கும் நீர் விட்டுக் கரைத்து, அத்துடன் பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பரிமாறவும்.
தோலுக்கு பளபளப்பைக் கொடுக்கும் இந்தக் கஞ்சி.
டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள் தினமும் கோதுமையை சப்பாத்தி போன்று செய்யாமல் இப்படி கார ரொட்டி போல் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கோப்பை
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் அப்படியே வைக்கவும். மாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.
ரொட்டிக்குத் தேவையான அளவில் மாவுகளை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளைச் சுற்றிச் சிறிது எண்ணெய் தடவவும். ஒவ்வொரு உருண்டையாக எடுத்து நெகிழிப் பைக்குள் (plastic cover) வைத்து ரொட்டி தட்டவும்.
அடுப்பில் தோசைக்கல், அல்லது சப்பாத்தி செய்யும் பாத்திரத்தை வைத்து, ரொட்டி சுட்டு எடுக்கவும்.
எண்ணெய் தேவையான அளவு ஊற்றி, இரண்டு பக்கமும் புரட்டி எடுக்க, ரொட்டி நன்கு சிவந்து வரும்.
இப்போது சூப்பரான கார கோதுமை ரொட்டி ரெடி.
பருவ கால நிலைக்கு இதமாக சூடான சூப் வகைகளை வீட்டில் தயாரித்து பருகலாம். இன்று முளைக்கட்டிய பயறு வகைகளை சேர்த்து சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முளைக்கட்டிய பயறு வகைகள் (ஏதாவது 5 சேர்ந்தது) - அரை கப்
வெங்காயம் - 1
பூண்டு - 3 பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் - கால் கப்
புளிக்காத கெட்டி தயிர் - கால் கப்
தனியா - அரை டீஸ்பூன்
மிளகு - சிறிதளவு
கொத்தமல்லிதழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முளைக்கட்டிய பயறை வேகவைத்துக் கொள்ளவும்.
பின்னர் கொஞ்சம் வேகவைத்த பயறுடன், பூண்டு, வெங்காயம், தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிக்சியில் அரைத்த விழுதை போட்டு பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கவும்.
பின்னர் அதனுடன் மீதமுள்ள பயறு, உப்பு, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
பின்னர் கெட்டி தயிர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியில் கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.
முளைக்கட்டிய பயறு வகைகள் (ஏதாவது 5 சேர்ந்தது) - அரை கப்
வெங்காயம் - 1
பூண்டு - 3 பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் - கால் கப்
புளிக்காத கெட்டி தயிர் - கால் கப்
தனியா - அரை டீஸ்பூன்
மிளகு - சிறிதளவு
கொத்தமல்லிதழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முளைக்கட்டிய பயறை வேகவைத்துக் கொள்ளவும்.
பின்னர் கொஞ்சம் வேகவைத்த பயறுடன், பூண்டு, வெங்காயம், தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிக்சியில் அரைத்த விழுதை போட்டு பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கவும்.
பின்னர் அதனுடன் மீதமுள்ள பயறு, உப்பு, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
பின்னர் கெட்டி தயிர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியில் கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.
கொண்டைக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை - 1 கப்
கேரட் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 1
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
ப.மிளகாய் - 1
மிளகு தூள் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
இந்துப்பு - சிறிதளவு
செய்முறை
கொண்டைக்கடலையை சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலை, துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதில் துருவிய தேங்காய், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சத்தான கொண்டைக்கடலை கேரட் சாலட் ரெடி.
கொண்டைக்கடலை - 1 கப்
கேரட் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 1
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
ப.மிளகாய் - 1
மிளகு தூள் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
இந்துப்பு - சிறிதளவு
செய்முறை
கொண்டைக்கடலையை சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலை, துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதில் துருவிய தேங்காய், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சத்தான கொண்டைக்கடலை கேரட் சாலட் ரெடி.
தினமும் ஏதாவது சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வெள்ளை சோள வெஜிடபிள் கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உதிரி வெள்ளை சோள முத்துகள் - 1/2 கப்,
பீன்ஸ், கேரட் - 1 கப் (பொடியாக அரிந்தது),
கடுகு - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிது,
தக்காளி - 1 சிறியது.
சின்ன வெங்காயம் - 1/4 கப்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்,
தயிர் - 1 கப்,
உப்பு தேவைக்கு.
செய்முறை
தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோள முத்துகளை தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
இந்த மாவுடன் உப்புக் கலந்து, குக்கரில் 2 கப் தண்ணீர் ஊற்றி 3-4 விசில் விட்டு வேகவிடவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு, வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், உப்பு, பெருங்காயத்தூள், தனியா தூள் போட்டு வதக்கவும்.
இதில் வெந்த வெள்ளைச் சோள பவுடரை தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்து, ஆறியதும் தயிர், கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.
1 டம்ளர் குடித்தாலே போதும். வயிறு நிரம்பிவிடும்.
உதிரி வெள்ளை சோள முத்துகள் - 1/2 கப்,
பீன்ஸ், கேரட் - 1 கப் (பொடியாக அரிந்தது),
கடுகு - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிது,
தக்காளி - 1 சிறியது.
சின்ன வெங்காயம் - 1/4 கப்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்,
தயிர் - 1 கப்,
உப்பு தேவைக்கு.
செய்முறை
தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோள முத்துகளை தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
இந்த மாவுடன் உப்புக் கலந்து, குக்கரில் 2 கப் தண்ணீர் ஊற்றி 3-4 விசில் விட்டு வேகவிடவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு, வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், உப்பு, பெருங்காயத்தூள், தனியா தூள் போட்டு வதக்கவும்.
இதில் வெந்த வெள்ளைச் சோள பவுடரை தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்து, ஆறியதும் தயிர், கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.
1 டம்ளர் குடித்தாலே போதும். வயிறு நிரம்பிவிடும்.
உடலுக்கு வலுவையும் ஏராளமான சத்துகளையும் தரும் மாப்பிள்ளை சம்பாவின் மற்றொரு சிறப்பு ஆண்மை பலப்படுத்தும் என்பது தான். ஒரு மாதத்தில் பலனும் தெரிய ஆரம்பிக்கும்.
தேவையான பொருட்கள்
மாப்பிள்ளை சம்பா அரிசி - 2 கப்,
காய்கறிகள் -400 கிராம்,
துவரம்பருப்பு -150 கிராம்,
மஞ்சள் தூள் -2 சிட்டிகை,
கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம் -அரை தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் -3,
தக்காளி -2,
சின்ன வெங்காயம் -100 கிராம்,
பூண்டு -20 பல்,
சாம்பார்பொடி -3 மேசைக்கரண்டி,
புளி, -ஒரு எலுமிச்சை அளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை -சிறிதளவு,
கொத்துமல்லி- சிறிது.
செய்முறை
காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
குக்கரில் மாப்பிள்ளைச் சம்பா அரிசியுடன் மூன்று பங்கு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பின் வேக வைத்த துவரம் பருப்பு, மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி குழைய வேகவிடவும்.
பின் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் சிறிது வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
பிறகு, அதனுடன் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து, நன்கு வேகவைக்கவும்.
வேகவைத்த பருப்பையும் காய்கறியுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
இந்தச் சாம்பார் கலவையைக் குழைய வேகவைத்த சோறுடன் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
சுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் ரெடி.
மாப்பிள்ளை சம்பா அரிசி - 2 கப்,
காய்கறிகள் -400 கிராம்,
துவரம்பருப்பு -150 கிராம்,
மஞ்சள் தூள் -2 சிட்டிகை,
கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம் -அரை தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் -3,
தக்காளி -2,
சின்ன வெங்காயம் -100 கிராம்,
பூண்டு -20 பல்,
சாம்பார்பொடி -3 மேசைக்கரண்டி,
புளி, -ஒரு எலுமிச்சை அளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை -சிறிதளவு,
கொத்துமல்லி- சிறிது.
செய்முறை
காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
குக்கரில் மாப்பிள்ளைச் சம்பா அரிசியுடன் மூன்று பங்கு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பின் வேக வைத்த துவரம் பருப்பு, மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி குழைய வேகவிடவும்.
பின் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் சிறிது வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
பிறகு, அதனுடன் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து, நன்கு வேகவைக்கவும்.
வேகவைத்த பருப்பையும் காய்கறியுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
இந்தச் சாம்பார் கலவையைக் குழைய வேகவைத்த சோறுடன் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
சுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் ரெடி.
தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.
தேவையான பொருட்கள்
கொய்யா - 1
வெங்காயம் - 1
குடைமிளகாய் - சிறியது 1
ஆப்பிள் - 1 சிறியது
உப்பு - சுவைக்கு
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
செய்முறை
கொய்யாவை மெலிதாக நீளவாக்கில் வெட்டி கொட்டையை எடுத்து விடவும்.
வெங்காயம், குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
ஆப்பிளை முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டிய கொய்யா, வெங்காயம், குடைமிளகாய், ஆப்பிளை போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு, மிளகு தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான கொய்யா குடைமிளகாய் சாலட் ரெடி.
கொய்யா - 1
வெங்காயம் - 1
குடைமிளகாய் - சிறியது 1
ஆப்பிள் - 1 சிறியது
உப்பு - சுவைக்கு
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
செய்முறை
கொய்யாவை மெலிதாக நீளவாக்கில் வெட்டி கொட்டையை எடுத்து விடவும்.
வெங்காயம், குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
ஆப்பிளை முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டிய கொய்யா, வெங்காயம், குடைமிளகாய், ஆப்பிளை போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு, மிளகு தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான கொய்யா குடைமிளகாய் சாலட் ரெடி.
கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. மேலும் சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும்.
தேவையான பொருள்கள் :
கொள்ளு - 100 கிராம்
மிளகாய் வத்தல் - 6
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 10 பற்கள்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கொள்ளு சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். அதை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் மிளகாய் வத்தலை போடவும்.
மிளகாய் வத்தல் நன்கு வறுபட்டதும் பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி அதை தனியாக எடுத்து வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு சூடாக இருக்கும் அதே கடாயில் கறிவேப்பிலையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.
பூண்டை தோலுரித்து வைக்கவும்.
ஆறியவுடன் வறுத்த பொருட்கள் மற்றும் பூண்டு சேர்த்து மிக்ஸ்சியில் நன்றாக திரித்துக் கொள்ளவும்.
அதை ஒரு பேப்பரில் பரப்பி நன்கு ஆற விடவும். ஆறிய பின் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.
சுவையான கொள்ளுப்பொடி ரெடி.
இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கொள்ளு - 100 கிராம்
மிளகாய் வத்தல் - 6
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 10 பற்கள்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கொள்ளு சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். அதை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் மிளகாய் வத்தலை போடவும்.
மிளகாய் வத்தல் நன்கு வறுபட்டதும் பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி அதை தனியாக எடுத்து வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு சூடாக இருக்கும் அதே கடாயில் கறிவேப்பிலையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.
பூண்டை தோலுரித்து வைக்கவும்.
ஆறியவுடன் வறுத்த பொருட்கள் மற்றும் பூண்டு சேர்த்து மிக்ஸ்சியில் நன்றாக திரித்துக் கொள்ளவும்.
அதை ஒரு பேப்பரில் பரப்பி நன்கு ஆற விடவும். ஆறிய பின் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.
சுவையான கொள்ளுப்பொடி ரெடி.
இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
சத்து நிறைந்த கோதுமை ரவையை வைத்து ஏராளமான சத்தான உணவுகளை தயாரிக்கலாம். அன்று கோதுமை ரவையை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானப்பொருட்கள் :
கோதுமை ரவா - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பருப்புகள் அனைத்தையும் தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
கோதுமை ரவாவை, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
பருப்புகள் ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன், ஊற வைத்துள்ள கோதுமை ரவாவைச் சேர்த்து கலக்கவும்.
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயத்தை மாவில் சேர்க்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணெய் தடவி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறுபுறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.
விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
கோதுமை ரவா - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பருப்புகள் அனைத்தையும் தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
கோதுமை ரவாவை, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
பருப்புகள் ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன், ஊற வைத்துள்ள கோதுமை ரவாவைச் சேர்த்து கலக்கவும்.
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயத்தை மாவில் சேர்க்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணெய் தடவி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறுபுறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.
விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
அன்றாடம் ஒரு கேரட் சாப்பிடும்போது புற்றுநோய் வராமல் தடுக்கலாம். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும். குறைவான கலோரிகளே இருப்பதால் டயட்டில் இருப்பவர்கள் கேரட்டைச் சாப்பிடுவது நல்லது
தேவையான பொருட்கள்:
கேரட் - 6
தக்காளி - 1
பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா தூள் - சிறிது
வெண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் கேரட்டின் தோலை சீவி, துருவிக் கொள்ள வேண்டும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் தக்காளி மற்றும் கேரட்டை வேக வைத்துக் கொண்டு, இரண்டையும் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும், பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள கேரட் மற்றும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
சூப்பானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும்.
கேரட் - 6
தக்காளி - 1
பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா தூள் - சிறிது
வெண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் கேரட்டின் தோலை சீவி, துருவிக் கொள்ள வேண்டும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் தக்காளி மற்றும் கேரட்டை வேக வைத்துக் கொண்டு, இரண்டையும் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும், பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள கேரட் மற்றும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
சூப்பானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும்.
அவகேடோவை தினமும் உட்கொள்ளும் நபர்களில், உடல் எடை, இடுப்பு சுற்றளவு, BMI எனும் உடல் எடை குறியீட்டு எண் போன்றவை குறைவான அளவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன
தேவையான பொருட்கள் :
கோதுமை பிரெட் - 2,
பழுத்த அவகேடோ - ஒன்று,
வெங்காயத்தாள் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயத்தாளை வெங்காயத்துடன் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அவகேடோ, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.
பிரெட்டின் மீது வெண்ணெய் தடவவும்.
தோசைக்கல்லை காயவைத்து, பிரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து எடுக்கவும்.
டோஸ்ட் செய்த பிரெட்டின் மீது மசித்த கலவையைத் தடவிப் பரிமாறவும்.
சூப்பரான அவகேடோ டோஸ்ட் ரெடி.
கோதுமை பிரெட் - 2,
பழுத்த அவகேடோ - ஒன்று,
வெங்காயத்தாள் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயத்தாளை வெங்காயத்துடன் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அவகேடோ, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.
பிரெட்டின் மீது வெண்ணெய் தடவவும்.
தோசைக்கல்லை காயவைத்து, பிரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து எடுக்கவும்.
டோஸ்ட் செய்த பிரெட்டின் மீது மசித்த கலவையைத் தடவிப் பரிமாறவும்.
சூப்பரான அவகேடோ டோஸ்ட் ரெடி.






