என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • ஆப்பிளை விட கடினமான தோல் பகுதியை கொண்டது.
    • பேரிக்காய் நரம்புத்தளர்ச்சி நோய்க்கு நல்லது.

    தமிழ்நாட்டில் பேரிக்காய்தான் அதிக அளவில் பயிராகும் குளிர்மண்டல பழப்பயிராகும். இது மலைப்பகுதிகளில் சுமார் 1500 முதல் 2500 மீட்டர் உயரமுள்ள இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. 10 முதல் 12 ஆண்டு வயதுடைய மரங்களில் இருந்து 100 முதல் 120 கிலோ பழங்கள் கிடைக்கும்.

    மே-ஜூன் மாதங்களில் வால்பேரியும், ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை இதர பேரி வகைகள் மற்றும் நாட்டுப்பேரி வகைகள் அறுவடைக்கு வருகின்றன. பேரிக்காய் மரத்தின் தாவரவியல் பெயர் 'பைரஸ் கம்யூனிஸ்' என்பதாகும்.

    பேரிக்காய் வடிவத்தில் ஆப்பிள் போல் தோற்றமளிக்கும். ஆனால், ஆப்பிளை விட கடினமான தோல் பகுதியை கொண்டது. இதன் மேல் தோல் கடினமாகவும், கசப்பாகவும் இருக்கும். எனவே மேல்தோல் நீக்கி உண்ணுவது வழக்கம். 100 கிராம் பேரிக்காயில் புரதம், நார்ப்பொருள், மாவுப் பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, தயமின், ரைபோபிளோவின், நியாசின், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், கந்தகம், குளோரின், ஆக்சாலிக் அமிலம், பைட்டின் பாஸ்பரஸ், கரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    பேரிக்காய் நரம்புத்தளர்ச்சி நோய்க்கு நல்லது. இதயத்தை பலப்படுத்தும். சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் கீல்வாதத்திற்கும் சிறந்தது. கல் அடைப்பை நீக்கும் குணங்கள் பேரிக்காயில் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

    • அன்றாட வாழ்வில் உடல் சோர்வு இன்றி இயக்க இரும்புச்சத்து அவசியம்.
    • இரும்புச்சத்து குறைபாட்டால் கடுமையான மறதி மற்றும் தூக்கத்தன்மை இருந்து கொண்டே இருக்கும்.

    இரும்புச்சத்து குறைபாடு என்பது உலகம் முழுவதும் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடாக கருதப்படுகிறது. உலக மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் இரும்புச்சத்து குறைபாட்டினால் ரத்தசோகை பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. ரத்தத்தில் பிராணவாயுவை கடத்துவதற்கு இரும்புச்சத்து முக்கிய தேவை ஆகும். அன்றாட வாழ்வில் உடல் சோர்வு இன்றி இயக்க இரும்புச்சத்து அவசியம்.

    உண்ணும் உணவில் போதிய அளவு இரும்புச்சத்து இல்லாதபோது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைந்து விடும். இது உடலை சோர்வடைய செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, ரத்த சோகைக்கு வழிவகுக்கும். உடலில் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ரத்த பரிசோதனை செய்யும் வரை பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை.

     

    பொதுவாக, மிகுந்த சோர்வு, கண்ணுக்கு கீழ் கருவளையம், மூச்சுத்திணறல், முடி உதிர்தல், வெளிர் தோல், கால்களில் ஒரு கூச்ச உணர்வு, தலைவலி, தலைச்சுற்றல், கை கால்களில் குளிர்ந்த உணர்வு, வேகமான இதயத்துடிப்பு, கவலை உணர்வு, நாக்கு, வாய் வீக்கம், எளிதாக உடையும் நகங்கள் ஆகிய அறிகுறிகள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது.

    இரும்புச்சத்து குறைபாட்டால் கடுமையான மறதி மற்றும் தூக்கத்தன்மை இருந்து கொண்டே இருக்கும். படி ஏற முடியாது. மூச்சு திணறல் ஏற்படும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு தீவிரமான நிலைகளில் இதய தாக்குதல் வரை ஏற்படும். எனவே இரும்புச்சத்தை கவனியுங்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியாக இருப்பவர்கள் தனிமையை உணரத் தொடங்கி விட்டால் உடனடியாக செல்லப்பிராணி ஒன்றை வாங்குங்கள்.
    • செல்லப்பிராணிகளை வளர்ப்பது நல்லது என்றாலும், அதில் நிறைய பொறுப்புகளும் இருக்கிறது.

    செல்லப்பிராணி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். பிடிக்காத சிலரும் கூட அவை பாசமாக வாலாட்டிக்கொண்டு வந்தால் அதை ரசிக்க தொடங்கி விடுவர். செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு. சிலர் காவலுக்காக வளர்ப்பார்கள், சிலர் பாசத்திற்காக வளர்ப்பார்கள். இப்படி பல காரணங்கள் இருந்தாலும் கூட வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பலன்களையும், நன்மைகளையும் அளிக்கிறது. அதை பற்றி அறிந்து கொள்வோம்...

    * மன அமைதி

    ஒருவர் நம்மை அளவில்லாமல் நேசிக்கிறார் என நினைத்தாலே மனசு லேசாகிவிடும். கள்ளங்கபடமில்லாத அன்பை மட்டுமே அள்ளித்தரக் கூடிய செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியையும், மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கிறது. அவை காட்டும் அளவில்லாத அன்பு நாம் இருக்கும் சுற்றுச்சூழலையும் அழகாக்கும்.

    * சுறுசுறுப்பு

    நாம் வாக்கிங் போக சில சமயங்களில் சோம்பேறித்தனம் கொண்டாலும் நாம் வளர்க்கும் நாயை 'வாக்கிங்' கூட்டிச் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தினாலேயே வெளியே சென்று நடக்க ஆரம்பித்து விடுவீர்கள். 'வாக்கிங்' போகும்பொழுதும் கூட அவை போகும் போக்கில் செல்வதால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

    * உற்சாகம்

    மோசமான நாளாக இருந்தாலும் கூட வீட்டிற்குள் நுழையும்பொழுது ஆசையாக வாலாட்டிக்கொண்டு வரும் ஜீவனைக் கண்டு மகிழாத மனித மனமே கிடையாது. செல்லப்பிராணியுடன் உரையாடுவது, விளையாடுவது போன்றவை மகிழ்ச்சி ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து மனநிலையை மேம்படுத்துகிறது.

    * தனிமை இனி இல்லை

    தனியாக இருப்பவர்கள் தனிமையை உணரத் தொடங்கி விட்டால் உடனடியாக செல்லப்பிராணி ஒன்றை வாங்குங்கள். அதன் நிலையான அன்பும், துறுதுறு விளையாட்டும் தனிமையை முற்றிலுமாக போக்க பெரிய அளவில் உதவும்.

    * ஆரோக்கியம்

    செல்லப்பிராணிகளின் செயல்பாடுகள் 'ரிலாக்ஸ்சேஷனை' அதிகரிப்பதால் அவை ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    * சமூகம்

    செல்லப்பிராணிகளை, பூங்கா, கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு வாக்கிங் அழைத்துச்செல்லும் பொழுது பிற செல்லப்பிராணி உரிமையாளர்களுடன் பேசும் வாய்ப்பும் கிடைக்கக்கூடும். அதன் மூலம் உங்களுக்கு நண்பர்கள் கூட கிடைப்பார்கள்.

    * குழந்தை நலம்

    செல்லப்பிராணியுடன் வளரும் குழந்தைகளுக்கு பொறுப்புணர்வு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் குழந்தைகளை உற்சாகப்படுத்த, அவர்களுக்கு நல்ல நண்பர்களாக மாற செல்லப்பிராணிகளை வாங்கி பரிசளியுங்கள்.

    * கவனம்

    செல்லப்பிராணிகளை வளர்ப்பது நல்லது என்றாலும், அதில் நிறைய பொறுப்புகளும் இருக்கிறது. செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் செல்லப்பிராணிகளால் ஏற்படும் நோய்களை தவிர்த்திட கால்நடை மருத்துவரிடம் அதற்கு ஏற்ற தடுப்பூசிகளையும், சிகிச்சைகளையும் பெற வேண்டும். மேலும் அவ்வப்போது, செல்லப்பிராணிகளின் உடல் ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும். அவற்றிற்கு ஏற்ற உணவு, குளியல் பராமரிப்பு பொருட்களிலும் கவனம் தேவை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் ஒரு கையளவு நட்ஸ்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    • நட்ஸ்கள் சாப்பிடுபவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

    பாதாம், வால்நட் போன்றவற்றை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்கும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு நட்ஸ் வகைகளை சாப்பிடுகிறோமோ அந்த அளவுக்கு அதிக காலம் நாம் வாழலாம் என்று 'நியூ இங்கிலாந்து மருத்துவ இதழ்' வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை கூறுகிறது.

    அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தினமும் ஒரு கையளவு நட்ஸ்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    நட்ஸ்களை உண்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக உடல்நலன் குறித்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    நட்ஸ்கள் சாப்பிடுபவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். இவை எல்லாம் இந்த ஆய்வு முடிவுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிலருக்கு தலைவலி பிரச்சனையையும் உண்டாக்கிவிடும்.
    • அதிக தூக்கம் மட்டுமின்றி போதுமான நேரம் தூங்காததும் இதய நோய், நீரிழிவு, கவலை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வித்திடும்.

    தூக்கமின்மை பிரச்சனையால் பலரும் அவதிப்படும் நிலையில் சிலர் அதிக நேரம் தூங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இரவில் காலதாமதமாக தூங்கிவிட்டு காலையில் 10 மணியை கடந்த பிறகும் எழுந்திருக்க மனமில்லாமல் படுக்கையில் உழல்வார்கள். அந்த தூக்கம் 8 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கும். இதற்கிடையே பகல் வேளையில் குட்டி தூக்கம் போடுபவர்களும் இருக்கிறார்கள். இப்படி அதிக நேரம் தூங்குவதும் ஆபத்தானதுதான்.

    தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது, 8 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் உறங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் டைப்-2 நீரிழிவு நோய், உடல் பருமன், இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கச் செய்துவிடும். அதிக நேர தூக்கம் மனச்சோர்வுக்கும் ஆளாக்கும். அறிவாற்றல் குறைபாட்டுக்கும் வழிவகுக்கும். சிலருக்கு தலைவலி பிரச்சனையையும் உண்டாக்கிவிடும்.

    அதிக தூக்கம் மட்டுமின்றி போதுமான நேரம் தூங்காததும் இதய நோய், நீரிழிவு, கவலை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வித்திடும். அதிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் குறைவான நேரம் தூங்குவதை விட அதிக நேரம் தூங்குவதுதான் பாதிப்பை அதிகரிக்க செய்துவிடும்.

    தூங்கும் நேரத்தை முறைப்படுத்தாமல் தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்வது, உட்கார்ந்த நிலையிலேயே அதிக நேரத்தை செலவிடுவது, மது அருந்துவது, தூக்கத்திற்காக மருந்து சாப்பிடுவது, ஹைப்போ தைராய்டிசம், இதய நோய் உள்ளிட்டவை அதிக நேரம் தூங்குவதற்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன. அதற்கு இடம் கொடுக்காமல் தூக்க நேரத்தை வரைமுறைப்படுத்திக்கொள்வது அவசியமானது.

    • சி.டி.ஸ்கேன் கருவியை கண்டுபிடித்தவர் கவுன்ஸ் பீல்டு.
    • கவுன்ஸ் பீல்டு 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி மறைந்தார்.

    கண்ணுக்குத் தெரியாத உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க மருத்துவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது, சி.டி ஸ்கேன். எக்ஸ்ரேயால் காணமுடியாத நுண்ணிய விஷயங்களைக்கூட இது சொல்லி விடும்.

    இந்த சி.டி. ஸ்கேன் (Computed Tomography Scan) முறையையும், அதற்கான கருவியையும் கண்டுபிடித்தவர் கவுன்ஸ் பீல்டு.


    இவர் இங்கிலாந்தில் 1919-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந்தேதி பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங் படித்து பட்டம் பெற்றார்.

    அவரது கவனம் எக்ஸ்ரே பக்கம் திரும்பியது. நோயாளி ஒரு இடத்தில் படுத்துக்கொண்டோ, நின்று கொண்டோ இருக்கும்போது தேவைப்பட்ட இடத்தில் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது.

    அதன் மூலம் கிடைக்கும் படங்கள் எல்லாம் நேராகக் காணும் தோற்றத்தில் எடுக்கப்பட்ட படங்கள். அந்த படங்களை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பார்க்கும் விதமாக எடுத்தால், சாதாரண எக்ஸ்ரே படங்களில் கிடைப்பதைவிட அதிகமாக தகவல்கள் கிடைக்கும் என்று அவர் நம்பினார். உடனே தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார்.

    காமா கதிர்களைக் கொண்டு படம் எடுக்க முயற்சித்து, ஸ்கேன் இயந்திரத்தைக் கண்டறிந்தார். ஆனால் அந்த எந்திரம் மெதுவாக இயங்கியது. ஒரு பொருளை ஸ்கேன் செய்ய ஒன்பது நாட்கள் ஆனது.

    அதற்குக் காரணம், அந்த முறையில் உபயோகப்படுத்தப்பட்ட மிகக் குறைந்த உணர்திறன் கொண்ட காமா கதிர்கள். அந்த படத்தின் தகவல்களை கம்ப்யூட்டர் மூலம் பெற 21 மணி நேரம் பிடித்தது. ஒரு நோயாளியை 9 நாட்கள் ஸ்கேன் செய்தால் அவர் தாக்குப் பிடிப்பாரா?

    இதற்கும் தீர்வு தேடினார் அவர். காமா கதிர்களுக்கு பதிலாக, சக்தி வாய்ந்த எக்ஸ்ரே கதிர்களை பயன்படுத்தினார்.


    அதன் மூலம் ஸ்கேன் செய்யும் நேரம் ஒன்பது நாட்களில் இருந்து ஒன்பது மணி நேரமாகக் குறைந்தது. முதலில் பன்றியின் சிறுநீரகப் பகுதிகள் இம்முறையில் படம் எடுக்கப்பட்டன.

    படிப்படியாக இது மேம்படுத்தப்பட்டு, முதன்முதலாக இந்த ஸ்கேனர் உதவியுடன் 1972-ம் ஆண்டு ஒரு பெண்ணின் மூளை படம் எடுக்கப்பட்டது. அந்த பெண்மணியின் மூளையில் வட்ட வடிவத்தில் கருப்பு நிறத்தில் ஒரு புண் தென்பட்டது.

    இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகிற்கு வரப்பிரசாதமானது. 1979-ம் ஆண்டு இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கி மருத்துவ உலகம் நன்றி தெரிவித்தது.

    எலும்பு, மூளை போன்ற உள் உறுப்புகளில் காணப்படும் மாறுபட்ட நிலைகளை அறிய இந்த ஸ்கேன் உதவுகிறது. ரத்தக் குழாய்களின் அடைப்பையும் இதன் உதவியால் கண்டுபிடிக்கலாம்.

    மேலும் காசநோய், நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் எந்த இடத்தில் எந்த அளவில் இருக்கிறது என்பதை துல்லியமாக அறிய இந்த ஸ்கேன் பெரிய அளவில் உதவுகிறது. கவுன்ஸ் பீல்டு 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி மறைந்தார். உலகத்திற்கு ஈடு செய்ய இயலாத இழப்பு!

    • இனிப்புகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
    • காரமான உணவுகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

    உடல் ஆரோக்கியத்தை பேண பலரும் பலவிதமான முறைகளை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில், அருகம்புல் சாறு, ஏபிசி ஜூஸ் போன்றவற்றை காலையில் அருந்துவார்கள். இவை பல வகையில் உடல் ஆரோக்கியத்த்திற்கு வழி வகுக்கும். அதே போல், வெறும் வயிற்றில் சில குறிப்பிட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்தாலும் பல நோய்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். அவை குறித்து பார்க்கலாம்...

    * சோடாவில் கார்போனேட்டட் அமிலம் அதிகம் இருப்பதால் இவற்றை வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது.

    * காரமான உணவுகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

    * தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதில் உள்ள ஆக்சாலிக் அமிலமானது இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து வயிற்றில் கற்களை உருவாக்கி விடும்.

    * மாத்திரைகளை எப்போதும் வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது.

    * இனிப்புகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அவை இன்சுலின் உற்பத்தியை பாதித்து நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.

    * வெறும் வயிற்றில் சோடா அல்லது மற்ற இரசாயனம் கலந்த குளிர்பானங்கள் எடுத்துக் கொள்ளும்போது அவை வயிற்றில் இரத்த ஓட்டத்தை குறைக்கின்றன.

    * காலையில் வெறும் வயிற்றில் காபி அல்லது டீயை குடித்தால் 'காபின்' ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தை அதிகளவு சுரக்க வைத்து நெஞ்சு எரிச்சல், அஜீரணம், வாயுத்தொல்லை போன்ற வயிற்று உபாதைகள், குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே காபி குடிப்பதற்கு முன்பாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது நல்லது.

    • கனவு என்பது ஒரு நபரின் ஆன்மா அல்லது அவர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் செயலாக கருதப்படுகிறது.
    • பெரும்பாலான சூழ்நிலையில் கனவுகள் தூக்கத்தை பாதிக்காது.

    மனிதர்கள் தூக்கத்தில் கனவு காண்கிறார்கள். இந்த கனவுகளில் பெரும்பாலும் நிகழ்கால வாழ்வுக்கு தொடர்பே இல்லாதவை ஆகும்.

    இந்த கனவுகள் ஏன் வருகின்றன? மூளை இதனை ஏன் உருவாக்குகிறது? என்பது குறித்து நரம்பியல் மருத்துவ விஞ்ஞானிகள் மற்றும் உளவியல் நிபுணர்களால் இதுவரை கண்டறிய முடியவில்லை. பொதுவாக மனிதர்கள் தூக்கத்தில் கண்களை மூடி இருந்தாலும் மூளை தனது சுய கட்டுப்பாட்டை மீறி தனது செயல்திறனை அதிகரிக்கும்போது கனவுகள் தோன்றுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.

    கனவு என்பது ஒரு நபரின் ஆன்மா அல்லது அவர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் செயலாக கருதப்படுகிறது. ஆனால், உண்மையில் கனவுகளில் தோன்றும் சம்பவங்கள் எல்லாம் நிஜ வாழ்க்கைக்கு பெரும்பாலும் பொருத்தம் இல்லாததாகவே தோன்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஆரோக்கியமான மனநிலை உள்ள நபர் கனவு காணும்போது அந்த கனவில் வரும் நிகழ்வுகளை புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கும்போது தெளிவான கனவுகள் ஏற்படுகின்றன என தெரிய வந்துள்ளது. ஆனால், மன அழுத்தம் உள்பட பல்வேறு காரணங்களால் உறக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு ஏற்படும் கனவுகளின் அர்த்தத்தை அந்த நபர் அடையாளம் காண முடியாமல் குழப்பத்தை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    பெரும்பாலான சூழ்நிலையில் கனவுகள் தூக்கத்தை பாதிக்காது. ஆரோக்கியமான தூக்கத்தின் ஒரு பகுதி கனவு ஆகும். தூக்கத்தை கெடுக்கும் கனவுகள் தொடர்ந்து வந்து அன்றாட சிந்தனையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலை இருந்தால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    • நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு தூக்கம் முக்கியமானது.
    • வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்து வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பருவநிலை மாறும்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் பலரையும் ஆட்கொள்ளும். இத்தகைய நோய்த்தொற்றுகளுக்கு எளிதில் ஆளாவதற்கு நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருப்பதும் காரணமாக அமைகிறது. அன்றாடம் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்களும் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து நோய் பாதிப்புக்கு வித்திடுகிறது. அந்த பழக்கவழக்கங்கள் பற்றியும் அவற்றை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பார்ப்போம்.

    ஆழ்ந்த தூக்கமின்மை

    நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு தூக்கம் முக்கியமானது. தூக்கத்தின்போது உடல் சைட்டோகைன்களை உற்பத்தி செய்யும். இதுதான் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவி புரியும். போதுமான நேரமோ, ஆழ்ந்தோ தூங்காதபோது இந்த சைட்டோகைன்களின் உற்பத்தி குறையும்.

    மேலும் நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள் மற்றும் செல்களின் எண்ணிக்கையும் குறையும். அதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து எளிதில் நோய்த்தொற்று நெருங்கிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் தினமும் ஆழ்ந்து தூங்குவது அவசியமானது.

    மன அழுத்தம்

    நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். அதனால் ஏற்படும் அதிக மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும். எனவே மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த வேண்டியது அவசியமானது.

    உணவு பழக்கம்

    கொழுப்புகள் அதிகம் கலந்திருக்கும் உணவுகள், குறிப்பாக நிறைவுற்ற கொழுப்புகளை உள்ளடக்கிய உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை பாதிக்கும். உடல் நோயை எதிர்த்துப் போராடும் திறனையும் குறைக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது நல்லதல்ல.

    நோய் எதிர்ப்புக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான ஏ, சி மற்றும் ஈ போன்ற வைட்டமின்கள் குறைவது உடலை பலவீனப்படுத்திவிடும். நோய் எதிர்ப்பு சக்தியையும் பாழ்படுத்திவிடும். அதனால் பழங்கள், காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

     

    சர்க்கரை உட்கொள்ளுதல்

    அதிக சர்க்கரை கலந்திருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். புரத அழற்சியை அதிகரிக்கும். குடலில் இருக்கும் பாக்டீரியாக்களின் சமநிலையையும் சீர்குலைக்கும். எனவே சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு பலகாரங்கள், உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    வைட்டமின் டி பற்றாக்குறை

    வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்து வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் நோய்த்தொற்றுகள் எளிதில் ஆட்கொண்டுவிடும். வெளியில் குறிப்பிட்ட நேரத்தை செலவிடாமல் அறைக்குள் முடங்கி கிடப்பவர்களில் பலர் வைட்டமின் டி குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

    எனவே தினமும் காலையில் குறிப்பிட்ட நேரம் சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அத்துடன் வைட்டமின் குறைபாடு இருக்கிறதா? என்று பரிசோதித்து டாக்டர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.

    ஆன்டி பயாடிக் பயன்பாடு

    பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன் படுத்துவது நல்லது என்றாலும் அதனை அதிகம் பயன்படுத்துவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும்.

    அடிக்கடி ஆன்டிபயாடிக் பயன்படுத்துவது குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாவின் சமநிலையையும் சீர்குலைக்கும். இதுதான் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே டாக்டரின் பரிந்துரைக்கேற்ப அளவோடு ஆன்டிபயாடிக் மருந்து, மாத்திரைகளை உபயோகிக்க வேண்டும்.

    உடற்பயிற்சி இன்மை

    உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தொடர்வது ஆரோக்கியத்தை ஊக்குவித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செல்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கும், அவற்றின் வேலைகளை திறம்பட செய்து முடிப்பதற்கும் துணை புரியும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது போன்ற பழக்கங்கள் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழி வகுக்கும்.

    சுகாதார நடைமுறைகள்

    சுகாதாரத்தை முறையாக பின்பற்றாவிட்டால் நோய்க்கிருமிகள் எளிதில் உற்பத்தியாகி நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும். குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் தவறாமல் கைகளைக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் பரவி நோய்களுக்கு நம்மை ஆளாக்கிவிடும்.

    • கால் நகங்கள் `ஓனைக்கோ கிரிப்டோஸிஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.
    • நகங்கள் மென்மையாவதுடன் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

    நீரிழிவு நோயாளிகள் ஒரு சிலருக்கு கால் நகங்களின் விளிம்புகள் தோலுக்குள் உள்நோக்கி வளர்ந்து வலி அல்லது வீக்கத்தை ஏற்படுத்தி தொற்றுக்கு வழிவகுக்கும். உள்நோக்கி வளரும் கால் நகங்கள் 'ஓனைக்கோ கிரிப்டோஸிஸ்' என்றும் அழைக்கப்படுகிறது.


    காரணங்கள்:

    நகங்களை தவறாக வெட்டுதல் அல்லது மிக குறுகியதாக வெட்டுதல், நகங்கள் அசாதாரணமாக வளைந்து வளர்வது, முன்பகுதி இறுக்கமாக உள்ள காலணிகள் மற்றும் இறுக்கமான காலுறைகளை அணிதல், அடிபடுவது மற்றும் கனமான பொருள் கால் விரல் மீது விழும்போது ஏற்படும் காயம், தவறாக நிற்கும் அல்லது நடக்கும் தோரணை, மரபணு காரணங்களால் பிறப்பில் இருந்தே கால் நகங்கள் வளைந்து இருத்தல், அதிக வியர்வையின் வெளிப்பாட்டால் கால் விரல்களில் பூஞ்சை தொற்று ஏற்படுவது, மோசமான கால் பராமரிப்பு.


    தீர்வு:

    கால்களை தினமும் 4 அல்லது 5 முறை, 15 முதல் 20 நிமிடங்களுக்கு, வெதுவெதுப்பான தண்ணீரிலோ அல்லது எம்சம் உப்பு கலந்த நீரிலோ ஊற வைக்க வேண்டும். இதனால் நகங்கள் மென்மையாவதுடன் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மற்ற நேரங்களில் கால்களை உலர்ந்த நிலையில் பராமரிக்க வேண்டும்.

    நகங்களை வெட்டும் போது வளைவு வரை சென்று வெட்டாமல் நேராக வெட்ட வேண்டும். முன் பகுதி அகலமாக அல்லது விசாலமாக உள்ள காலணிகளையே பயன்படுத்த வேண்டும்.

    சர்க்கரை நோயாளிகளில் ரத்த நாளங்கள் பாதிப்புள்ளவர்களுக்கும், நரம்புகளை பாதிக்கும் டயாபட்டிக் நியூரோபதி பிரச்சனை உள்ளவர்களுக்கும் உள் நோக்கி வளரும் நகங்களால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    தொற்றுக்கள் ஏற்பட்டால் அதை கட்டுக்குள் கொண்டு வர நுண்ணுயிர் எதிர்ப்புகள் மற்றும் அழற்சியை தடுக்கும் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டும்.

    இம்முயற்சிகள் அனைத்தும் பலன் தராவிட்டால் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காணலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன.
    • சுத்தமான நெய் என்பது அறை வெப்பநிலையில் உருகும் தன்மை கொண்டது.

    நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    நெய்யில் தாவர எண்ணெய், வனஸ்பதி மற்றும் விலங்கு கொழுப்புகள் கலக்கப்படுவதாக தற்போது பெரும் சர்ச்சையாகி வருகிறது.

    இன்றைய காலத்தில் சுத்தமான நெய்யை கண்டுபிடிப்பது சவாலாக இருந்தாலும் சில எளிய வழிகளைப் பயன்படுத்தி நாம் அதை கண்டறியலாம்.

    சுத்தமான நெய் என்பது அறை வெப்பநிலையில் உருகும் தன்மை கொண்டது.

    சிறிது நெய்யை உள்ளங்கையில் வைத்து சிறிது நேரம் வரை பாருங்கள். சிறிது நேரத்திலேயே உள்ளங்கையில் வைக்கப்பட்ட நெய் உருகிவிட்டால் அது சுத்தமான நெய் ஆகும்.

    இரண்டாவதாக, நெய்யை ஒரு வாணலியில் வைத்து சூடுபடுத்தும்போது அது உருகி பிரவுன் நிறத்தில் வந்தால் அது சுத்தமான நெய். அதனை தவிர்த்து, காலதாமதமாக உருகி, மஞ்சள் நிறத்தில் வந்தால் அது கலப்படமான நெய் ஆகும்.

    ஒரு திரியை நெய்யில் நனைத்து தீபம் ஏற்றிப் பாருங்கள். சுத்தமான நெய் நீண்ட நேரம் எரியும். கலப்படம் செய்யப்பட்ட நெய் விரைவில் கருகிவிடும்.

    • சின்ன கண்ணாடி டம்ளரில் தொடங்கி, பெரிய தொட்டிகள் வரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பலவற்றில் மீன் வளர்க்கலாம்.
    • நீரில் வாழும் மீன்கள் சுவாசிக்க தேவையான பிராணவாயுவை நீர் வாழ்தாவரங்கள் வெளியிடும்.

    நகர்ப்புற வீடுகளில் தொட்டிகளில் அலங்கார மீன்களை வளர்ப்பது பொழுது போக்காக இருக்கிறது. மன அழுத்தம், இதயம் தொடர்பான பாதிப்புகள் இருப்பவர்கள் அன்றாடம் சிறிது நேரம் தொட்டிகளில் நீந்தும் மீன்களை கவனித்துக் கொண்டிருந்தால் மனம் அமைதி அடைவதுடன், இதய பாதிப்பும் குறைவதாக கூறப்படுகிறது.

    வீடுகளில் மீன் வளர்க்கும்போது சரியான தொழில்நுட்பங்கள் தெரியாததால் சிறிது நாளில் மீன் வளர்ப்பதை விட்டு விடுகின்றனர். அலங்கார மீன்களை வளர்க்கும் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதன் மூலம் மீன் வளர்ப்பை எளிதாக செய்ய முடியும்.

     

    * மீன் தொட்டி

    சின்ன கண்ணாடி டம்ளரில் தொடங்கி, பெரிய தொட்டிகள் வரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பலவற்றில் மீன் வளர்க்கலாம். வீடுகளில் பெரிய மீன் தொட்டிகளும், அலுவலகங்களில் சிறிய மீன் தொட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

    தொட்டிகள் சிறியதோ, பெரியதோ... மீன் வளர்ப்புக்கு வாங்கும் தொட்டி நீர்க்கசிவு இன்றி இருக்க வேண்டும். எத்தனை மீன்களை வளர்க்கப்போகிறோமோ அதற்கு தக்கபடி நீள, அகலத்தில் தொட்டி வாங்குவது நல்லது. பொதுவாக, மீன் வளர்ப்பு தொட்டியின் ஆழமும், அகலமும் ஒன்றாக இருத்தல் அவசியம்.

    தேவைக்கு அதிகமான பெரிய தொட்டிகளை தவிர்க்க வேண்டும். அதிகமான ஆழமுள்ள தொட்டிகளில் நீரின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் தொட்டி உடைந்து விடும் அபாயம் உண்டு. மீன் தொட்டியை சமதளமான இடத்தில் வைக்க வேண்டும். பெரும்பாலும், கண்ணாடி தொட்டிக்கு கீழ், தெர்மாக்கோல் வைப்பது நல்லது. இது விரிசலை தவிர்க்கும்.

    * மண் இடுதல், நீர் நிரப்புதல்

    முன்பெல்லாம், மீன் தொட்டிக்குள் சரளை கற்களை நிரப்புவார்கள். ஆனால் இப்போது டிரெண்ட் மாறிவிட்டது. அக்வாஸ்கேப் என்ற கலை மூலமாக மீன் வளர்ப்பு தொட்டிகளை அலங்கரிக்கிறார்கள்.

    நன்றாக சுத்தம் செய்யப்பட்ட மணலை மீன் தொட்டிக்குள் நிரப்பி, மீன்களுக்கு சிறப்பான வாழ்விடத்தை உருவாக்குகிறார்கள். மேலும் நீர் பரப்பில் வாழும் நீர்வாழ் தாவரங்கள், பாசி வகைகள், பாசி படர்ந்த மரக்கட்டை... இவற்றை மீன் தொட்டிக்குள் அமைத்து, மீன்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாகவே மீன் தொட்டியை உருவாக்குகிறார்கள். இது கொஞ்சம் செலவு நிறைந்த வேலை. எளிமையாக மீன் வளர்க்க நினைப்பவர்கள், சிறிய கூழாங்கற்களை தொட்டிகளில் பரப்பி விடலாம். மேலும், இறந்து போன மெல்லுடலிகளின் ஓடுகள், சங்குகள், சிப்பிகள் போன்றவற்றை பரப்பி விடலாம்.

    இதற்குப் பின்னர், தொட்டிக்குள் எந்த அளவுக்கு நீரை நிரப்ப விரும்புகிறோமோ அந்த அளவுக்கு நீரை நேரடியாக விடலாம். பொதுவாக ஆழ்துளை கிணறு தண்ணீரை மீன் வளர்க்க பயன்படுத்தலாம்.

    * நீர்த்தாவரங்கள்

    நீரில் வாழும் மீன்கள் சுவாசிக்க தேவையான பிராணவாயுவை நீர் வாழ்தாவரங்கள் வெளியிடும். மேலும், மீன்கள் வெளியிடும் கரியமில வாயுவை இந்த தாவரங்கள் கிரகித்துக்கொள்ளும். முட்டையிடும் மீன்கள் இந்த நீர்த்தாவரங்களில் முட்டையிடும். மீன் வளர்ப்புத் தொட்டிகளில் வேலம்பாசி, செரட்டோபில்லம், நாஜாஸ் உள்ளிட்ட நீர்வாழ்த்தாவரங்களை வளர்க்கலாம். மீன்களை இனப்பெருக்கம் செய்யும் பண்ணைகளில் இந்த நீர்வாழ்த்தாவரங்கள் கிடைக்கும்.

    * வளர்ப்பு முறை

    மீன்களை விற்பனையாளரிடம் இருந்து வாங்கி வந்த உடனேயே ஏற்கனவே மீன்கள் வளர்ந்து கொண்டிருக்கும் தொட்டிகளில் விடக்கூடாது. புதிய மீன்களை ஒரு கண்ணாடி குடுவையில் நல்ல தண்ணீரில் ஒரு சில நிமிடங்கள் வைக்க வேண்டும். பின்னர் ஐந்து சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் விட்டு உடனே எடுத்து விடவும்.

    பிறகு கண்ணாடிக்குடுவையில் வைத்து இந்த மீன்களை ஒரு வாரம் வரை கவனித்து வர வேண்டும. அந்த மீன்களுக்கு எந்தவித நோய்களும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகே மற்ற மீன்கள் வளரும் தொட்டிகளில் விட வேண்டும்.

    * வியாபார வாய்ப்பு

    இதுபோல், மீன் வளர்ப்பில் ஈடுபடும்போது இதனை சிறிய தொழிலாகவும் செய்யலாம். சிறிய குடுவை மற்றும் தொட்டிகளில் அழகான மீன்களை வளர்த்து விற்பனை செய்து வருமானத்தையும் ஈட்டலாம்.

    ×