என் மலர்
பொது மருத்துவம்
- தமனிகளை விரிவுபடுத்துவதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி பயன்படுத்தப்படுகிறது.
- தமனிகளுக்குள் உருவாகியிருக்கும் ரத்த உறைகட்டிகளை அகற்றுகிறது.
ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, இதயத்திலுள்ள அடைப்புகளை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு டிரான்ஸ் கதீட்டர் செயல்முறையாகும். லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளுக்குள் உருவாகியிருக்கும் ரத்த உறைகட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்றுவதற்கு லேசர் அலைக்கற்றைகளை (அதிக ஆற்றல் உள்ள புறஊதா வெளிச்சத்தை) உமிழ்கின்ற ஒரு சிறப்பு கதீட்டரை பயன்படுத்துகிறது.

இந்த மேம்பட்ட இதய சிகிச்சை தொழில்நுட்பமானது, அடைப்புகளைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைப்பதுடன் குறிப்பிட்ட இலக்குகளுக்கு மட்டும் சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.
குறிப்பாக, சிக்கலான புண்களுக்கு அல்லது கால்சியம் படிமங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இது அதிக பலனளிப்பதாக உள்ளது.
ஆஞ்சியோபிளாஸ்டி என்பது அடைக்கப்பட்ட தமனிகளை திறக்க பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான அறுவை சிகிச்சை முறையாகும். ரத்தம் இதயத்தின் வழியாக சரியாக பாயவில்லை அல்லது இதய தமனிகளில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் இதயம் சுருக்கப்படுகிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது.
இதற்கு சிகிச்சை அளிக்க ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையில் தமனிக்குள் ஒரு சிறிய ஸ்டெண்ட் செருகப்பட்டு ஒரு பலூன் வடிகுழாய் உயர்த்தப்படுகிறது.

ஆஞ்சியோபிளாஸ்டி தமனிகளில் உள்ள அடைப்பை அகற்றவும், குணப்படுத்தவும் செய்யப்படுகிறது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கரோனரி தமனிகளில் அடைப்பு அல்லது மாரடைப்பு ஏற்பட்டால் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் டெண்ட் தேவைப்படுகிறது.
மேலும் நோயாளிகளின் அடைக்கப்பட்ட தமனிகளை விரிவுபடுத்துவதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி பயன்படுத்தப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை இதயத்திற்கு ஏற்படும் சேதத்தை குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது.
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு பிறகு நோயாளிகள் சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். தினசரி யோகா செய்வது, சத்தான உணவுகளை உட்கொள்வது கொழுப்பின் அளவை பராமரிப்பது போன்றவை ஆகும்.
- புகையிலை பழக்கம் மிக முக்கிய காரணம் ஆகும்.
- தொண்டை வறட்சியான நிலை ஒரு மாதங்களுக்கு மேல் நீடிப்பது.
வாய் வழி புற்றுநோயானது தொண்டைக்குள் உள்ளே இருக்கும் செல் அணுக்களில் காணப்படும் வீரியமிக்க நோய் தொற்று அல்லது புற்றுநோய் செல்கள் காரணமாக ஏற்படும் நோயாகும். இவை சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் இருப்பின் உயிர்க்கு ஆபத்தானதாகும்.

வாய் வழிபுற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலும் முதிர்ந்த நிலையில் குறிப்பாக நோய் பரவும் நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. இவை சாதாரண தொண்டை அலர்ஜி அல்லது வாய் புண்கள் போல இருப்பது ஆகும்.
வாய் புற்றுநோய் இந்திய அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நோயை எளிதில் கண்டறிந்து தடுக்க முடியும் என்றாலும், பெரும்பாலும் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது. இதன் விளைவாக இறப்பு அதிகரிக்கிறது. உதடுகள், நாக்கு, அன்னம், வாயின் தளம், ஈறுகளை இந்நோய் பாதிக்கிறது.
ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் தோராயமாக 17 சதவீதம், பெண்களில் 10.5 சதவீதம் பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய அளவில் ஆண்டுதோறும் சுமார் 46 ஆயிரம் பேர் வாய் புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நோய் ஏற்பட புகையிலை பழக்கம் மிக முக்கிய காரணம் ஆகும். ஏறத்தாழ 47.9 சதவீதம் ஆண்கள், 20.3 சதவீதம் பெண்கள் பல்வேறு வடிவங்களில் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.
வயது வந்தவர்களில் 24.3 சதவீத ஆண்கள் மற்றும் 2.9 சதவீத பெண்கள் புகைக்கிறார்கள் என கூறப்படுகிறது. 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையே புகையிலை பயன்பாடு 6.9 முதல் 22.5 சதவீதம் வரை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வறுமை, பசி, இயலாமை மற்றும் மனச்சோர்வு போன்றவைக்காக, 10 வயது வரை உள்ள சிறுவர்கள் கூட புகையிலை, பீடி, சிகரெட் பழக்கத்துக்கு மாறி வருவதாகவும் உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.

அறிகுறிகள்:
* வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற தொற்றுகள் 3 வாரங்களுக்கு மேல் தொண்டையில் இருப்பது.
* தொண்டை வறட்சியான நிலை ஒரு மாதங்களுக்கு மேல் நீடிப்பது.
* வாய், தொண்டையில் புணள் 3-ல் இருந்து 4 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து ஆறாமல் இருப்பது.
* தொண்டை குழு அல்லது வாயினுள் கட்டி அல்லது அசாதாரண கட்டி போன்ற அமைப்பு காணப்படுவது.
* காரணம் இன்றி பற்கள் வலுவிழந்து விழுவது.
* தொடர் தொண்டை வலியினால் உணவை விழுங்குவதில் பிரச்சனை.
* பேசுவதில் சிரமம்.
* உதடு, தொண்டை, நாக்கு காது, கழுத்து பகுதியில் வலி இருப்பின் அதனை கவனிக்காமல் இருக்க கூடாது. அதற்கான காரணங்களை உடனடியாக அறிந்து ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவசியம்.
- அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களை செய்து கொள்வதும் மிகவும் அவசியம்.
- சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இதயநோய் மீண்டும் தாக்கும் அபாயத்தை தடுக்கவும், மீண்டும் தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவும், அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களை செய்து கொள்வதும் மிகவும் அவசியம்.

அறுவை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய முதல் வாரம் உங்களது அன்றாட வேலைகளை பழையபடி தொடர்வது முக்கியம். சிலநேரங்களில் ஒரு சிறு வேலைகூட உங்களை களைப்படையச் செய்யும். மூச்சு விடுவதற்கு சிரமமாகத் தெரியலாம். ஆனால் இது சாதாரணமான விஷயம் தான்.
நீங்கள் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால் மீண்டும் உங்களது தினசரி வேலைகளை செய்வதற்கு முன்னாள் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். 4 முதல் 8 வாரத்தில் உங்களது இயல்பான நிலை மீண்டும் திரும்பும்.
உங்களது அன்றாட தினசரி வேலைகளுக்கு இடையே சற்று ஓய்வு எடுப்பது முக்கியம். அன்றாட வேலைகளும், உடற்பயிற்சிகளும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முக்கியமானதாக இருந்தாலும் சரியான வேலைக்கும், அதிகப்படியான வேலைக்கும் இடையே சிறிய வித்தியாசம் உள்ளது.

உங்கள் தினசரி வேலைகளை திட்டமிடுவது போல் அவ்வப்போது இடை இடையே ஓய்வெடுக்கவும் திட்டமிடுதல் அவசியம். இரவில் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவது அவசியம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முதல் சில வாரங்கள் தினமும் பகலில் ஒரு குட்டி தூக்கம் தூங்கலாம்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆஸ்பத்திரியில் உடற்பயிற்சி செய்து இருப்பீர்கள். உடற்பயிற்சி செய்வது உடல் பலத்தை மேம்படச் செய்ய உதவுகிறது. உங்களது இதயத்தின் பலத்தை அதிகரிக்கச் செய்வதுடன் எதிர்காலத்தில் இதயநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் உதவும்.

நடைபயிற்சி செய்வதற்கு சமதள இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தையல்களை பிரித்த பிறகு பூங்காவிலோ அல்லது வீட்டு வளாகத்திலோ நடைபயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படுத்தும் சக்தியின் விகிதாச்சாரம் உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
- சிறுநீரகம் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு சுரைக்காய் ஒரு நல்ல மருந்து.
- உடலில் உள்ள கெட்ட உப்புகள் அனைத்து சிறுநீரகத்தின் வழியே வெளியேறிவிடும்.
பல நேரங்களில் சுரைக்காயில் உப்பு இல்லை என்று பலர் கூறுவதை கேள்விபட்டிருப்போம். இதற்கு சுரைக்காயில் உப்பு இல்லை என்று அர்த்தம் இல்லை. உண்மையில் அர்த்தம் வேறு.
சுரைக்காய் என்பது உடல் நலத்திற்கு மிகுந்த நன்மை தரும் காய்களிகளில் ஒன்று. சுரைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட உப்புகள் அனைத்து சிறுநீரகத்தின் வழியே வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுநீர் கோளாறு இருப்பவர்கள் சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் விரைவில் குணமாவார்கள். சிறுநீரகம் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு சுரைக்காய் ஒரு நல்ல மருந்து.
சுரைக்காய் உடலில் உள்ள கெட்ட உப்புச்சத்துக்களை வெளியே தள்ளிவிடுவதால் தான் சுரைக்காயை சாப்பிட்டால் உடலில் உப்புச் சத்து இருக்காது என்பதையே சுரைக்காயில் உப்பு இல்லை என்று கூறுகின்றனர்.
சுரைக்காயை வேகவைத்தோ, பொரியல் செய்தோ அல்லது சாம்பார் வடிவத்திலோ, ஜூஸ் செய்தோ சாப்பிடலாம். இதன்மூலம் அனைத்துவிதமான சிறுநீரக கோளாறும் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரைக்காயின் பயன்கள்:
* சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.
* சுரைக்காயில் வைட்டமின் பி சி சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து 96. 07 % , இரும்பு சத்து 3. 2 %, தாது உப்பு 0. 5 % பாஸ்பரஸ் 0. 2 % புரதம் 0. 3 % கார்போ ஹைட்ரேட் 2. 3 % போன்ற சத்துக்களை கொண்டுள்ளது சுரைக்காய்.
* சுரைக்காயின் சதை பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச் சாற்றை சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய நோய்களுக்கு சிறந்தது.
* அஜீரண கோளாறு உள்ளவர்கள் சுரைக்காய் சாப்பிடலாம். கோடைக் காலத்தில் சுரைக்காய் சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.

* கை கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைப் பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.
* நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.
* வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப் பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
* சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.
* மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறும். சுரையின் இலைகளை நீர்விட்டு ஊற வைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம் பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.
* சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.
* சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம்.
- மலச்சிக்கல் இருந்தால் உடலில் ஏராளமான பிணிகள் வரும்.
- செரிமான மண்டலத்தின் மெதுவான அசைவால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
மலம் கழிப்பது என்பது செரிமான அமைப்பின் கடைசி நிலை ஆகும். தொடர் மலச்சிக்கல் இருந்தால் உடலில் ஏராளமான பிணிகள் வரும்.

மலச்சிக்கலுக்கான காரணங்கள்:
1) நாம் உண்ணும் உணவில் இருந்து பெருங்குடல் அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சும் போது மலச்சிக்கல் ஏற்படுகிறது. செரிமான மண்டலத்தின் மெதுவான அசைவால், பெருங்குடலில் அதிக நீர் உறிஞ்சப்படுகிறது. இதன் விளைவாக மலம் உலர்ந்து மலம் கழித்தல் கடினமாகவும், வலியாகவும் மாறுகிறது.
2) உணவில் போதிய நார்ச்சத்து சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது.
3) நமது பரபரப்பான வாழ்க்கை முறைகள், மன அழுத்தம், மனக்கவலை, பயம் போன்ற உளவியல் பிரச்சனைகள்.
4) சரியான உடற்பயிற்சி இல்லாமல் ஒரே இடத்தில் நிலையாக இருந்து வேலை செய்வது.
5) மலம் வரும் போது அதை கழிக்காமல் அடக்குவது.
6) மாவுச்சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது, தண்ணீர் குறைவாக குடிப்பது, தொடர் பயணங்கள், உடல் சூடு போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

உணவுப் பழக்கவழக்கங்கள்:
1) உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
2) தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும்.
3) வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.
4) கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
5) கோழிக்கறி சாப்பிடுவது உடல் வெப்பத்தை அதிகரிக்கும். ஆகவே கோழிக்கறி சாப்பிடும் போது எலுமிச்சை பழச்சாறு எடுப்பது நல்லது.
6) நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
7) சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். வயிற்றில் வாயு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
8) மாவு பதார்த்தங்களை அளவாக எடுக்க வேண்டும்.
9) காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு நடைப்பயிற்சி, ஆசனவாய் தசைகளை உறுதிபடுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
10) சீரகம், கொத்தமல்லி, ஓமம் இவைகளை சிறிதளவு சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரை காலை, இரவு குடித்து வர வேண்டும்.

சித்த மருந்துகள்:
சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கீழ்கண்ட ஏதாவது ஒரு மருத்துவ முறையை கையாளலாம்.
1) திரிபலா சூரணம் ஒரு டீஸ்பூன், இரவு உறங்கும் முன் வெந்நீரில் எடுக்க வேண்டும்.
2) நிலவாகை சூரணம் ஒரு டீஸ்பூன், இரவு உறங்கும் முன் வெந்நீரில் எடுக்க வேண்டும்.
3) மூலக்குடார நெய் 5-10 மி.லி. வீதம் இரவு தூங்கும் முன் எடுக்க வேண்டும்.
- செடிகளை பராமரிப்பது, அதனுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்கும், மன நிலையை மேம்படுத்தவும் செய்யும்.
- மகிழ்ச்சியான மன நிலையை உண்டாக்கும்.
வீட்டில் தோட்டம் அமைத்து காய்கறி செடிகள், பூச்செடிகள் வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு மன நலனை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டில் தோட்டம் வளர்ப்பது மன மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

செடிகளை பராமரிப்பது, அதனுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்கும், மன நிலையை மேம்படுத்தவும் செய்யும். செடிகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்து முக்கியமான விஷயங்களை பற்றி விவாதிப்பது, சிந்திப்பது படைப்பாற்றல் திறனை 45 சதவீதம் அதிகரிக்க செய்யும் என்பது இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸிடெர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தனிமை சூழலில் வசிப்பவர்கள் செடிகளை வளர்த்து பராமரிப்பது தனிமை உணர்வை போக்கும், மனச்சோர்வை விரட்டும். மன மகிழ்ச்சியையும் அதிகரிக்க வழிவகுக்கும். பசுமை சூழ்ந்த இடத்தில் ஓய்வு எடுப்பது மூளையில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி மன நிம்மதியாக உணர வைக்கும். மகிழ்ச்சியான மன நிலையையும் உண்டாக்கும். ஈரப்பதமுள்ள மண்ணில் கைகளை புதைத்து தோட்ட வேலை செய்யும்போது நரம்பு மண்டலத்திலும் அமைதியான உணர்வை ஏற்படுத்தும். மன நலனில் மாற்றங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சியான சூழலையும் உணர வைக்கும்.
- உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்ச்சல் தாக்கும் ஆபத்து அதிகம் உண்டு.
- உடனடியாக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
நமது உடலில் சராசரியாக இருக்கவேண்டிய வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆகும். இருப்பினும், வெளிப்புற தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப உடல் வெப்ப அளவு மாறும். நமது உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும் வேலையை மூளையின் அடிப்பகுதியிலுள்ள 'ஹைப்போதலாமஸ்' என்கிற உறுப்பு கவனித்துக் கொள்கிறது.
நமது உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகள், வைரஸ், பாக்டீரியாக்கள் போன்றவற்றை அழிக்க உடலில் உற்பத்தியாகும் 'ப்ராஸ்டோக்ளாண்டின்' என்கிற திரவம் உடலின் வெப்பநிலையை 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அதிகப்படுத்திவிடுகிறது. இதைத் தான் நாம் பொதுவாக 'காய்ச்சல்' என்கிறோம். மழைக்காலத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் பிற வைரஸ் கிருமிகள் தாக்குதல்களால் காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகமாக காணப்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு விதிவிலக்கு கிடையாது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்ச்சல் தாக்கும் ஆபத்து அதிகம் உண்டு.
உங்களுக்கு நோய்கிருமி தாக்குதல் இருந்தால் அதை எதிர்க்கும் வேலையை உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தி அமைப்பு உடனே செய்ய ஆரம்பித்துவிடும். அப்போது காய்ச்சல் காணப்படும். உடல் சூடு 103 டிகிரியை தாண்டிவிட்டாலே உடல் முழுவதும் சோர்வு, அசதி, குழப்பம், பேச்சு குளறுதல், நாக்கு-உதடு வறண்டு போதல், உடல் இயக்கங்களில் மாற்றம், மயக்கம் போன்றவை சிலருக்கு ஏற்படலாம்.
காய்ச்சலைக் கண்டு பயப்பட வேண்டாம். உடனடியாக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடுங்கள். இந்த நேரத்தில் குளிப்பது கூடாது. சாதாரண தண்ணீரில் துணியை நனைத்து பிழிந்து உடல் முழுக்க நான்கைந்து முறை ஒத்தடம் கொடுக்க வேண்டும். காய்ச்சல் 3 அல்லது 4 நாட்களுக்கு மேலும் இருக்கிறது என்றால் குடும்ப டாக்டரைச் சந்தித்து ரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
சாதாரண காய்ச்சலா, விஷக்காய்ச்சலா, வைரஸ் காய்ச்சலா என எந்தக் காய்ச்சல் தாக்கியுள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்ப உடனே சிகிச்சை பெறுவது நல்லது.
- ஒருவரின் அகத்தில் இருப்பது முகத்தில் இயல்பாகவே தெரியும்.
- நமது துன்பமிகு சூழலில், மனது சரியில்லாத நேரத்தில் நமக்கு நம்பிக்கைக்குரியவர்களிடம் உரையாடலாம்.
ஒரு மனிதனுக்கு உடல் நலம் எப்படி முக்கியமோ அது போல மன நலமும் முக்கியமானது. இன்றைய அறிவியல் உலகில் ஓடிக்கொண்டு இருக்கிற மனித குலம் தங்கள் உடலையும் கவனிப்பதில்லை, உள்ளத்தையும் கவனிப்பதில்லை. உடல் நோயினால் ஏற்படும் வலிகளை கூட ஓரளவு மருந்து, மாத்திரைகள் எடுத்து வலியை தற்காலிகமாக பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் மன வலிகளை தற்காலிகமாக சரி செய்ய முடியாது. அதற்கு பல நாட்கள், பல சிகிச்சைகள் தேவைப்படும். அதற்கு பாதிக்கப்பட்டவர் ஒத்துழைப்பு கொடுப்பதே ஒரு கட்டத்தில் சவாலாகிவிடும்.
உடல் நோய்களுடன் கூட மனிதர்களால் ஓரளவு இயங்கிட முடியும். ஆனால் மன வலிகளோடு சரியாக செயல்பட முடியாது. எனவே அடிப்படையில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மனநலத்தில் எப்பொழுதும் அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தில் இருக்கும் ஒருவர் மற்றவருடைய மன நலத்தில் எப்போதும் கவனம் செலுத்திக் கொண்டே இருக்கவேண்டும். பெற்றோர் குழந்தைகளையும், குழந்தைகள் பெற்றோரையும் அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.
கவனித்தல் என்பது அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை பார்ப்பது மட்டும் அல்ல. அவர்கள் மனதளவில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். ஒருவரின் அகத்தில் இருப்பது முகத்தில் இயல்பாகவே தெரியும். அதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? சோகமாக இருக்கிறார்களா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
சோகமாக இருப்பின் ஏன் சோகமாக இருக்கிறார்கள் என்று கேட்டு அவர்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களது உரையாடலில் குறுக்கீடு செய்யாமல் முழுமையாக பேச அனுமதித்தால் போதுமானது. அதுவே அவர்களுக்கு சிறந்த மருந்தாக அமையும். இவ்வாறு நமது துன்பமிகு சூழலில், மனது சரியில்லாத நேரத்தில் நமக்கு நம்பிக்கைக்குரியவர்களிடம் உரையாடலாம். நமக்கு பிடித்ததை உண்ணலாம். நமக்கு பிடித்த பாடல்களை கேட்கலாம். ஒரு சில சுற்றுலா இடங்களுக்கு செல்லலாம். இவ்வாறு செய்யும்போது நம் மன நலம் சீராக இருக்கும்.
- பல்வேறு உணவுகளை அளித்தால் புரதம் கிடைக்கும்.
- அதிக புரத உணவுகளை சாப்பிட வேண்டும்.
புரதம் பற்றிய பல கட்டுக்கதைகள் இந்தியாவில் உள்ளன. முதல் கட்டுக்கதையே இந்தியர்களுக்கு புரதச்சத்து குறைபாடு உள்ளது என்பது தான். இருப்பினும், NSS (தேசிய மாதிரி ஆய்வு) வீட்டு உணவு உட்கொள்வோரிடம் புரதக் குறைபாட்டின் ஆபத்து பெரியவர்களிடம் குறைவாக உள்ளதும், இளம் வயதினருக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது.
சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு புரதம் முக்கியமான கட்டுப்படுத்தும் காரணி என்று மற்றொரு கட்டுக்கதை உள்ளது. உண்மையில், குழந்தைகளின் வளர்ச்சி ஆற்றல் சார்ந்தது. ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு உணவுகளை அவர்களுக்கு அளித்தால், புரதம் கிடைக்கும்.
உணவில் ஆற்றலும் புரதமும் இணைந்திருப்பதால், புரதத் தேவையைப் பார்ப்பதற்கு முழுமையான வழி, உணவுகள் மற்றும் தேவை ஆகிய இரண்டிலும் உள்ள "புரோட்டின் ஆற்றல் விகிதம்" (PER) அடிப்படையில் உள்ளது. இதைக் கணக்கிட, புரதம் முதலில் ஆற்றலாக மாற்றப்படுகிறது, பின்னர் மொத்த ஆற்றலின் விகிதமாக PER பெறப்படும்.
இங்கே, ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு உணவுகளை சாப்பிடுவது தேவையான புரதத்தையும் உடலுக்கு வழங்கும். வயதான, உட்கார்ந்த நிலையில் இருப்பவர்களின் ஆற்றல் தேவைகள் குறைவாக இருக்கும், இதன் விளைவாக அதிக PER தேவைப்படும். எனவே அவர்கள் அதிக புரத உணவுகளை சாப்பிட வேண்டும்.
NSS ஆய்வில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பலவகை உணவு உட்கொள்பவர்களின் PER வயது வந்தவர்கள் முதல் அனைத்து வயதினருக்கும் 8% மற்றும் 9% ஆக இருந்தது. இது பெரியவர்களின் தேவைக்கு சமமாகவும், குழந்தைகளுக்கு தேவையான PER அளவு 5-7% ஆக இருந்தது.

PER தேவையை பூர்த்தி செய்ய என்ன உணவுகளை உண்ண வேண்டும்?
உணவுப் புரதங்களை செரிமானம் மற்றும் அமினோ அமில உள்ளடக்கத்தை சரிசெய்த பிறகு, தானியங்களின் PER சுமார் 6%, பருப்பு 18%, பால் 20%, முட்டை 30% மற்றும் இறைச்சி 75%. ஆனால் கொழுப்பு மற்றும் சர்க்கரை கொண்ட பலவகை உணவு, குறைந்த PER கொண்டிருக்கும்.
எனவே, ஒரு குழந்தைக்கு, 5% PER தேவையெனில் தானியம் (6% PER) மற்றும் கொழுப்பு/சர்க்கரை (0% PER) கலந்த உணவு மட்டும் போதுமானதாக இருக்காது. சிறிய அளவிலான பருப்பு அல்லது விலங்கு புரதத்துடன் கூடுதலாக இருந்தால், புரத உள்ளடக்கம் மற்றும் PER 5% ஐ விட அதிகமாக இருக்கும்.
பெரிய குழந்தைகளின் உணவுகளில், பருப்பு அல்லது பால்/முட்டை/இறைச்சி போன்ற விலங்கு உணவுகள் மூலம் தானியங்கள் ஆதிக்கம் செலுத்தும் உணவின் PER மேம்படும். பெரியவர்களில், அவர்களின் தேவை அதிகரிக்கும்போது, தானியங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, அதிக புரதம்-தாவரம் அல்லது விலங்கு உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு கட்டுக்கதை:
உடற்பயிற்சிக்கு அதிக புரதம் தேவைப்படுகிறது. உடற்பயிற்சி செய்த உடனேயே தசை புரத தொகுப்பு அதிகரிக்கிறது, இதற்கு புரதம் உட்கொள்வது அவசியம் ஆகும். உடற்பயிற்சிக்கு பின் ஆற்றல் தேவைகளும் அதிகரிப்பதால் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய பலவகை உணவு எடுத்துக் கொள்வதே போதுமானது.
கடைசி கட்டுக்கதை:
அதிகளவு புரதம் உட்கொள்வதால் எந்த ஆபத்தும் இல்லை. அதிக புரதம் எடுத்துக் கொள்வதால் எலும்பு மறு உருவாக்கம், சிறுநீரக நோய் அபாயங்கள் உள்ளன. இதுபற்றி மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் அதிகளவு புரதம் தேவை என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் படி புரத அளவில் 22% PER எடுத்துக் கொள்ளும் போது வெள்ளை இரத்த அணுக்கள் பாதிக்கப்படவில்லை.
இந்தியாவில் பரவி வரும் புரதச்சத்து குறைபாடு பற்றிய கூற்றுகளை நியாயப்படுத்த வேண்டிய நேரம் இது. நமக்கு நிச்சயமாக நல்ல புரதம் தேவை, ஆனால் மிதமான அளவு மற்றும் இயற்கையான தாவர அல்லது விலங்கு உணவுகளே போதுமானவை. நல்ல ஆரோக்கியத்திற்காக பண்ணைகளை நம்பலாம் ஆனால், மருந்தகங்களை நாட வேண்டிய அவசியம் இல்லை.
- பிஸியான கால அட்டவணையில் இயங்குபவர்கள் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவது இயல்பானது.
- அடிக்கடி நினைவூட்டும் படி செல்போன், ஸ்மார்ட் வாட்சு போன்றவற்றின் மூலம் நினைவூட்டல்களை மேற்கொள்ளலாம்.
ஒருபுறம் மழை, மறுபுறம் வெயில் என பருவ காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் உடல் நலனிலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டியது அவசியமானது. வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல், ஊட்டச்சத்துக்களை முக்கிய உறுப்புகளுக்கு எடுத்து செல்லுதல், நச்சுக்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்செயல்பாடுகள் நடைபெறுவதற்கு நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
இருப்பினும் பலரும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதில்லை. பிஸியான வேலை, மறதி, தாகத்தை உணராதது போன்ற காரணங்களை மையப்படுத்தி நீரேற்றத்தை அலட்சியம் செய்வது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தண்ணீர் பருகும் விஷயத்தில் சில விதிமுறைகளை பின்பற்றுவது நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனைகள் எழாமல் தடுக்கும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...
1. நீரின் தேவையை புரிந்து கொள்ளுங்கள்
உடலில் நீர்ச்சத்தை பேணுவதற்கான முதல் படி, உங்கள் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்வதாகும்.
'ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்' என்பது பொதுவான வழிகாட்டுதலாக இருந்தாலும் வயது, உடல் எடை, உடல் இயக்க செயல்பாடு, காலநிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் நீரின் தேவை மாறுபடக்கூடும்.
உணவியல், ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து எவ்வளவு தண்ணீர் பருகவேண்டும் என்பதை தீர்மானிக்கவும்.
2. தண்ணீருடன் தொடங்குங்கள்
ஒவ்வொரு நாளையும் தண்ணீருடன் தொடங்குங்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கிவிடுங்கள். பல மணி நேர தூக்கத்திற்கு பிறகு அருந்தும் அந்த நீர், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும், இழந்த நீர்ச்சத்தை மீட்டெடுக்கவும் உதவும்.
படுக்கை அறையில் தண்ணீர் பாட்டிலை வையுங்கள். காலையில் எழுந்ததும் அது கண்ணீல் பட்டு, தண்ணீர் பருகுவதை நினைவூட்டுவதாக அமைய வேண்டும். அப்படி தண்ணீர் பருகுவது நாள் முழுவதும் நேர்மறையான எண்ணங்களை கட்டமைக்கவும், நீரேற்றத்தை தக்கவைக்கவும் வழிவகை செய்யும்.
3. நினைவூட்டல் செய்யுங்கள்
பிஸியான கால அட்டவணையில் இயங்குபவர்கள் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவது இயல்பானது. அடிக்கடி நினைவூட்டும் படி செல்போன், ஸ்மார்ட் வாட்சு போன்றவற்றின் மூலம் நினைவூட்டல்களை மேற்கொள்ளலாம்.
4. நீர்ச்சத்து கொண்ட பொருட்களை உண்ணுங்கள்
உணவில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது உடலில் நீரேற்றத்தை அதிகரிக்க செய்வதற்கேற்ற சிறந்த வழியாகும். அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட வெள்ளரி, தர்பூசணி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பழங்கள், காய்கறிகளை தினமும் உண்ணலாம்.
5.கண்காணியுங்கள்
ஒவ்வொரு முறையும் எவ்வளவு நீர் அருந்துகிறீர்கள், எத்தனை முறை அருந்துகிறீர்கள் என்பதை கண்காணியுங்கள். அது நீரேற்ற இலக்கை அடைவதை உறுதிப்படுத்த உதவும்.
6.தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நீரேற்றத்துடன் இருக்க தொழில்நுட்பம் பயனுள்ள சாதனமாக அமைந்திருக்கிறது. ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்கள் முதல் ஹைட்ரேஷன் ஆப்ஸ் வரை அதிக தண்ணீர் குடிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட கேஜெட்டுகள் பல உள்ளன. அவற்றை பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் பருகும் வழக்கத்தை இடையூறு இன்றி பின் தொடரலாம்.
7. தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள்
எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்து செல்லுங்கள். அது குறிப்பிட்ட நேரத்துக்குள் தண்ணீர் பருகுவதை எளிதாக்கும். அலுவலகம், ஜிம் என இடத்திற்கு ஏற்ப நேர்த்தியான பாட்டிலை தேர்ந்தெடுத்து அருகில் வைத்துக்கொள்ளலாம். அது தண்ணீர் பருக வேண்டும் என்பதை நினைவூட்டும் வண்ணம் இருக்க வேண்டும்.
8. தண்ணீருக்கு சுவை சேருங்கள்
வெறுமனே தண்ணீர் பருக பிடிக்கவில்லை என்றால் விரும்பிய பழங்கள், காய்கறிகள் அல்லது மூலிகைகளை அதில் சேர்த்து ருசிக்கலாம். இளநீர் அல்லது பழ, காய்கறி ஜூஸாக பருகலாம். எலுமிச்சை, புதினா, வெள்ளரி, பெர்ரி, துளசி போன்றவற்றை தண்ணீரில் சேர்த்து பருகலாம். அவற்றை தனியே வைப்பதற்கு வசதி கொண்ட 'இன்-பில்ட்' பாட்டில்களும் கிடைக்கின்றன.
9. வாடிக்கையாக்குங்கள்
தினமும் உணவிற்கு முன்பும், பின்பும், வேலைக்கு இடையேயும் தண்ணீர் பருகுவதை வாடிக்கையாக்கி விடுங்கள். இந்த பழக்கம் காலப்போக்கில் தண்ணீர் பருகும் வழக்கத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளச் செய்துவிடும்.
10. உடற்பயிற்சியின்போது நீரேற்றத்துடன் இருங்கள்
உடற்பயிற்சி போன்ற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவது உடலில் தண்ணீரின் தேவையை அதிகரிக்க செய்துவிடும். வியர்வையின் மூலம் இழந்த திரவங்களை ஈடு செய்வதற்கு உடற்பயிற்சியின் முன்பும், பின்பும் தண்ணீர் பருகுவது அவசியமானது.
- உடல் நீரில் 15 முதல் 25 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டால் மரணம் ஏற்படுகிறது.
- நீர்ச்சத்து மிகுந்த பழங்களை உண்ணுங்கள்.
நமது உடலுக்குத் தேவையான மொத்த நீரின் அளவு குறையும்போது ஏற்படுகிற உடலியல் மாற்றமே நீரிழப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த நீர்ப்பற்றாக்குறையால் வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. பொதுவாக அதிக நேரம் உடற்பயிற்சி செய்யும்போதும், உடல் நலமற்று இருக்கும்போதும், அதிக வெப்பநிலை காரணமாக நீர் உட்கொள்ளலை மீறும் போதும் நீர்ப்போக்கு ஏற்படுகிறது.
மனிதர்கள் உடலில் உள்ள மொத்த நீரில் 3 முதல் 4 சதவீதம் நீர் குறையும்போது ஏற்படுகிற உடல் பாதிப்புகளை பொறுத்துக்கொள்ள முடியும். அது 5 முதல் 8 சதவீதமாக உயரும்போது உடல் சோர்வையும் தலைச்சுற்றலையும் ஏற்படுத்தும். மொத்த உடல் நீரில் 10 சதவீதத்துக்கும் மேலாக நீர் இழப்பு ஏற்படுகிறபோது கடுமையான தாகத்துடன் உடலும் மனமும் பலவீனம் அடைந்து கீழே சரிந்து விழுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
உடல் நீரில் 15 முதல் 25 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டால் மரணம் ஏற்படுகிறது. நீரிழப்பு பாதிப்பால் ரத்தத்தில் சோடியம் அயனிகளின் அளவு அதிகமாகி, ரத்த பிளாஸ்மா குறைகிறது. இதுவே, உடலை சோர்வாக்கி, கடுமையான விளைவுகளை உண்டாக்குகிறது. எனவே குழந்தைகளே பெற்றோர்களே தண்ணீர் குடியுங்கள். உங்கள் உடலில் உள்ள தண்ணீர் அளவு குறையாமல் பார்த்து கொள்ளுங்கள். நீர்ச்சத்து மிகுந்த பழங்களை உண்ணுங்கள்.
வீட்டு வாசல்களில் மண்பானையில் தண்ணீர் வைக்கும் பழக்கமுறையை உங்கள் வீடுகளில் செயல்படுத்துங்கள். தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் விலைமதிப்பற்ற உயிர்களை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
- ஏ.சி.யில் இருந்து வருவது இயற்கையான காற்று கிடையாது.
- நாம் இருக்கும் அறை எப்போதுமே மூடியிருந்தால், குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு, அறைக்குள் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும்.
ஒரு காலத்தில் ஏ.சி. (ஏர் கண்டிசனர்) என்பது வசதியானவர்களின் ஆடம்பர பொருளாக இருந்தது. ஆனால், இன்று அது எங்கும் நிரம்பி விட்டது. ஏ.சி.யை பயன்படுத்தாதவர்கள் என்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.
இப்படி பயன்படுத்துபவர்களில் பலர் ஏ.சி. வசதி வைக்கப்பட்ட படுக்கை அறையின் கதவு, ஜன்னலை யாரேனும் திறந்தால் ஏ... கதவை மூடு ஏ.சி. காற்று வெளியேறுகிறது என்று சொல்வதுண்டு.
உடனே அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு, வெளிக்காற்று உள்ளே வராத வகையில், அந்த அறைக்குள் கூண்டு கிளியாக அடைப்பட்டு, தூங்குவதை நம்மில் பலர் வழக்கமாக கொண்டுள்ளோம். வெளிக்காற்றுக்கு உள்ளே அனுமதி அளிக்காமல் இருப்பது என்பது, நம் உடலுக்கு நாமே தீங்கு விளைவித்துக்கொள்வதாக அமைகிறது.
ஏனெனில், ஏ.சி.யில் இருந்து வருவது இயற்கையான காற்று கிடையாது. இயற்கையான காற்றில் இருந்து ஈரப்பதத்தை எடுத்து, அதை பயன்படுத்திக் குளிர் காற்றாக கொடுக்கிறது. மேலும் அறையில் உள்ள வெப்பமான காற்றை வெளியேற்றுகிறது. அது இயற்கைக்கு மாறான விஷயம்.

எனவே நாம் இருக்கும் அறை எப்போதுமே மூடியிருந்தால், குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு, அறைக்குள் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் பெருக்கமும், பரவலும் அதிகரிக்கும் ஆபத்துகளும் உண்டு. ஆகையால் தான் வெளிக்காற்று அறைக்குள் வருவது அவசியமாகும்.
ஆகையால், ஏ.சி. வசதி செய்யப்பட்ட அறைகளுக்குள் இருக்கும்போது கதவு மற்றும் ஜன்னல்களை முழுவதுமாக மூடாமல், வெளிக்காற்று உள்ளே வர அனுமதிக்க வேண்டும். இதனால் அந்த அறைக்குள் நச்சுத்தன்மை ஏற்படாமல் இருக்கும்.
இதுஒருபுறம் இருக்க, ஏ.சி.யின் பில்டர்களை சரியாக சுத்தப்படுத்துவதுடன், அதை பராமரிப்பு செய்வது என்பதும் அவசியமான ஒன்றாகும்.






