என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • ஆரோக்கியமான மூட்டுக்கு சரியான உடல் எடை அவசியம்.
    • நம் அன்றாட செயல்பாட்டிற்கு மூட்டுகள் மிகவும் அவசியம்.

    வேலூர் சத்துவாச்சாரி அமுதம் ஆயுஷ் கூட்டுறவு மருத்துவமனை ஆயுர்வேத டாக்டர் சுபஸ்ரீ பியூலா, மூட்டு வலி மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து கூறியதாவது:-

    மூட்டுகள் எதனால் ஆனவை?

    எலும்பு மற்றும் எலும்பு திசு ஆகியவற்றின் பண்புகளால் ஆரோக்கியமான மூட்டுகள் உருவாகின்றன. அதனுடன், மூட்டுகள் நரம்பு திசு மற்றும் நரம்பு மண்டலத்துடன் ஓர் முக்கிய தொடர்பை பகிர்ந்து கொள்கின்றன.

    ஆரோக்கியமான மூட்டுகள் ஒருவகையான கொழுப்பு பொருளால் உயவூட்டப்படுகிறது. இது உராய்வு இல்லாத இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த செயல்முறை திசு ஊட்டச்சத்தின் செயல்முறையைப் பொறுத்தது. இது மூட்டு ஆரோக்கியத்தில் அக்னியின் பங்கை கூறுகிறது.

    நமது ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் வலுவான அக்னி மற்றும் சரியான அளவிலான செரிமானம் அவசியமானது என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.

    ஆரோக்கியமான மூட்டுகள் மற்றும் அவற்றின் உடலியலை ஆதரிக்கும் அனைத்தும் திசு ஊட்டச்சத்தை நம்பியுள்ளன. இது இறுதியில் அக்னியின் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாகும்.

    மூட்டு நோய்களின் வகைகள்

    வாதம் என்பது நம் உடலின் செயல்படும் ஆற்றல். நமது அன்றாட இயக்கங்களுக்கும், அன்றாட செயல்பாடுகளை செய்வதற்கும் மூட்டுகள் தேவை. ஆனால் நம் உடலில் உள்ள ஒவ்வொரு மூட்டுக்கும் அதன் உகந்த செயல்பாட்டிற்கு சீரான வாதம் அவசியம். மூட்டுகளில் உள்ள வாதத்தில் ஏதேனும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் அது பல்வேறு மூட்டு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

    ஆஸ்டியோபோரோசிஸ், முடக்கு வாதம், கீல்வாதம், அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ். கீல்வாதம் மூட்டு வலி மற்றும் விறைப்பு ஏற்படுத்துதல் ஆகியவை ஆகும். சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், இடுப்பு மற்றும் முழங்கால்கள் போன்ற எடை தாங்கும் பாகங்களில் இது சிதைவை ஏற்படுத்தும். முடக்கு வாதம் என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு அழற்சி நோயாகும். இது முதலில் மூட்டின் சினோவியம் அல்லது புறணியை குறிவைக்கிறது, இதன் விளைவாக வலி, விறைப்பு, வீக்கம், மூட்டு சேதம் மற்றும் மூட்டுகளின் செயல்பாடு இழப்பு ஏற்படுகிறது. வீக்கம் பெரும்பாலும் கைகள் மற்றும் கால்களின் மூட்டுகளை ஒரு சமச்சீர் வழியில் பாதிக்கிறது.

    மூட்டுகளை பராமரிக்கும் எளிய வழிமுறைகள்

    வாதத்தின் பண்புகளில் குளிர்ச்சி மற்றும் வறட்சி ஆகியவை அடங்கும். எனவே குளிர்காலத்தில், மூட்டு தசைகள் மற்றும் எலும்புகள் கடுமையான வாதத்தால் கடினமாகவும் வலியுடனும் இருக்கும். இதை எப்படி தடுப்பது? உங்கள் மூட்டுகளை சூடாக வைத்திருக்கும் ஆடைகளை பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள், எள் எண்ணெய் அல்லது பிற மருத்துவ எண்ணெய்களை கொண்டு உங்கள் மூட்டுகளை தவறாமல் மசாஜ் செய்யுங்கள்.

    நேராக நிற்பது மற்றும் உட்காருவது, உங்கள் கழுத்தில் இருந்து முழங்கால்கள் வரை மற்றும் இடுப்பு மூட்டுகள், முதுகு தசைகளை பாதுகாக்க உதவுகிறது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு முதுகுபையை பயன்படுத்தினால் அதை இரு தோள்களிலும் வைக்க வேண்டும். பளு தூக்கும் போது, உங்கள் முதுகை வளைப்பதற்குப் பதிலாக உங்கள் உடலில் உள்ள மிகப்பெரிய தசைகளை கொண்ட முழங்கால்களை பயன்படுத்துங்கள்.

    ஆரோக்கியமான மூட்டுக்கு சரியான உடல் எடை அவசியம். அதிக எடையுடன் இருப்பது உங்கள் மூட்டுகளில் அழுத்தத்தை அதிகரித்து உங்கள் மூட்டுகளை சேதப்படுத்தும்.

    சிகிச்சை முறை

    மூட்டு நோய்க்கு சிகிச்சையளிக்கும் போது, உணவு, மருந்துகள் மற்றும் பஞ்சகர்மாவுடன் ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்க பரிந்துரைக்கிறோம். பொதுவாக நாம் இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் கொண்ட உணவுகளை பரிந்துரைக்கிறோம். இது உடலில் உள்ள வாதத்தை குறைக்கிறது. குக்குலு, குடுச்சி, சல்லாகி, அஸ்வங்கந்தா, மஞ்சள் போன்ற மூலிகைகளை உங்கள் உணவில் தவறாமல் பயன்படுத்தலாம். வெவ்வேறு பஞ்சகர்மா சிகிச்சைகள் மூலம் உங்கள் நோயை நிர்வகிக்க ஆயுர்வேத மருத்துவரிடம் முறையான ஆலோசனையை பெறலாம்.

    ஒரு வாகனத்தின் சீரான செயல்பாட்டிற்கு அதன் பாகங்கள் மிகவும் முக்கியம். அதுபோல நம் அன்றாட செயல்பாட்டிற்கு மூட்டுகள் மிகவும் அவசியம்.

    இவர் அவர் கூறினார்.

    • மயக்கம் உள்ளவர்களுக்கு விழிகள் சுழலாது.
    • நீண்டநேர மயக்கம் ஏற்பட சில காரணங்கள் உள்ளன.

    வலிப்பு நோய், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், பக்கவாதம், வெப்பத்தாக்கு, மூளையில் ரத்தக்கசிவு, மூளைக்காய்ச்சல், மூளைக்கட்டி ஆகியவை உள்ளவர்களுக்கு நீண்டநேர மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இதய துடிப்பு, ரத்தச்சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவை குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் இவ்வகை மயக்கம் வர வாய்ப்பு உண்டு. அதிக அளவில் மது அருந்துவது, போதை மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, மின் அதிர்ச்சி, மருந்து ஒவ்வாமை, விஷக்கடி, விஷ வாயு, தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும் நீண்டநேர மயக்கம் ஏற்படலாம்.

    மயக்கம் உள்ளவர்களுக்கு விழிகள் சுழலாது. மயக்கத்தில் உள்ளதுபோல் நடிப்பவர்களுக்கு இமைகளைத் திறந்தால் விழிகள் இங்கும் அங்கும் சுழலும்.

    முதல்முறையாக மயக்கம் ஏற்பட்ட பிறகு உடனடியாக, முழு உடல் பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். மயக்கத்துக்கான காரணத்தை அறிந்து சிகிச்சை மேற்கொள்வது, மீண்டும் மயக்கம் ஏற்படுவதை தடுக்கும்.

    பயம், பதற்றம் போன்ற உளவியல் காரணமாக மயக்கம் வருபவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும்.

    மனபலத்தை உண்டாக்க மருத்துவ ஆலோசனை, தியானம் மற்றும் யோகாசனம் உதவும். பள்ளி மாணவர்கள் காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. வெயிலில் நீண்டநேரம் விளையாடக் கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

    • ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்கவும்.
    • காலணி அணியாமல் கடினமான தரைப்பகுதியில் நடப்பதை தவிர்க்கவும்.

    நீண்டகால நீரிழிவு நோயினால் கால்களிலும், பாதங்களிலும் உள்ள நரம்புகள் மற்றும் அதன் ரத்த ஓட்டத்தில் பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. இதனால் பாதங்கள் மதமதப்பாகவும், கால் தசைகள் வலியாகவும், சோர்வாகவும் காணப்படும்.

    இதற்கான சித்த மருந்துகள்:

    1) ஆவாரைப் பூ குடிநீர் பொடி 1-2 கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, இரவு குடிக்க வேண்டும். இது ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்.

    2) சீந்தில் சர்க்கரை 500 மி.கி. அளவு காலை, இரவு எடுக்க வேண்டும்.

    3) மதுமேக சூரணம் 1 கிராம் அல்லது மதுமேக சூரண மாத்திரை 1-2 காலை, இரவு இருவேளை எடுக்க வேண்டும்.

    4) கால் மதமதப்பு, தசை வலி நீங்க: அமுக்கரா சூரணம் 1 கிராம், பவள பற்பம் 200 மி.கி., அயக்காந்த செந்தூரம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவற்றை காலை, மதியம், இரவு மூன்று வேளை வெந்நீரில் எடுக்க வேண்டும். வாத கேசரி தைலம் அல்லது விடமுட்டி தைலத்தை கால்களிலும் பாதங்களிலும் நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகச் சிறந்தது.

    5) ரத்த அழுத்தம் குறைய உணவில் உப்பு, ஊறுகாய் இவைகளை அளவோடு எடுக்க வேண்டும். வெண்தாமரை இதழ் சூரணம், அல்லது அசைச் சூரணம் 1 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை வெந்நீரில் சாப்பிட ரத்த அழுத்தம் குறையும்.

    ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்கவும். காலணி அணியாமல் கடினமான தரைப்பகுதியில் நடப்பதை தவிர்க்கவும். குறிப்பாக, காலையில் கண் விழிக்கும்போது பாதங்களில் வலியை உணர்பவர்கள் வீட்டுக்குள்ளேயும் செருப்பு அணிந்து நடப்பதே பாதுகாப்பானது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    • தற்போது உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
    • நார்ச்சத்து நிறைந்த இதனைத் தினசரி உணவில் சேர்த்தாலே போதுமானது.

    சமூகத்தை அச்சுறுத்தி வரும் ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்று உடல் பருமன். ஆண், பெண், குழந்தைகள், இளம் வயதினர், பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், பலர் அவதிப்படுகின்றனர். தற்போது உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் அனைத்து வயதினருக்கும் ஆயுர்வேத மருத்துவம் சில மூலிகைகளைப் பரிந்துரைக்கிறது. அது குறித்து காண்போம்.

    வெந்தயம்: வெந்தயத்தில் இருக்கும் 'கேலக்டோமேனன்' நீரில் கரையக்கூடியது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. வெந்தய விதைகளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சிறிது வெந்தயப் பொடியைக் கலந்து குடிக்கலாம் அல்லது இரவில் வெந்தய விதைகள் அரை டீஸ்பூன் அளவு ஊறவைத்து மறுநாள் காலையில் எழுந்ததும், காலை உணவுக்கு முன்பு மென்று சாப்பிடலாம்.

    குக்குலு: ஆயுர்வேத மருந்துகளில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படும் மூலிகை குக்குலு. இது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கும். இயற்கையாகவே கொழுப்பைக் குறைக்கும் மூலிகையான இதைத் தேநீராக்கிக் குடித்து வரலாம்.

    விஜய்சர்: விஜய்சர் என்பது வேங்கை மரம் ஆகும். இதன் பட்டை உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. குறிப்பாக வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இந்த மூலிகைப் பட்டையைத் தேநீராக்கிக் குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

    திரிபலா: கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் சேர்த்த கலவையே 'திரிபலா' எனப்படுகிறது. உடலில் கலந்திருக்கும் நச்சுகளை நீக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் இவை உதவுகின்றன. இதை இரவு உணவுக்குப் பிறகும், காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    புனர்னவா: மூக்கிரட்டை கீரை என்று அழைக்கப்படும் இது, எடை இழப்புச் செயல்பாட்டில் பயனுள்ளதாக இருக்கும். இதன் டையூரிடிக் பண்புகள், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சிறப்பாகச் செயல்பட உதவும். பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்கள் போன்ற அத்தியாவசிய தாதுக்களை இழக்காமல், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடல் எடையை அதிகரிக்கும் நச்சு தண்ணீர் உடலில் சேர்வதைத் தடுக்கிறது. மூக்கிரட்டைக் கீரையைத் தேநீராக்கிக் குடிக்கலாம்.

    லவங்கப்பட்டை: உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்ட உதவும் லவங்கப்பட்டை, வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கிறது. இதில் இருக்கும் 'சின்னமால்டிஹைட்' வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. லவங்கப்பட்டையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் தேநீராக்கிக் குடிக்கலாம்.

    கருஞ்சீரகம்: கருஞ்சீரகம் பலவிதமான பயன்பாடுகளுக்கு உகந்தது. குறிப்பாக எடைக்குறைப்பு மற்றும் உடல் பருமனைக் கட்டுப்படுத்தக் கூடியது. நார்ச்சத்து நிறைந்த இதனைத் தினசரி உணவில் சேர்த்தாலே போதுமானது.

    • காபி, டீ அதிகம் அருந்துபவர்களுக்கும் பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும்.
    • சிறுநீரகத்திற்குள் ஏற்படும் கற்களால் ஒரு வலியும் இருக்காது.

    காட்பாடி இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கர், சிறுநீரக கற்கள் எதனால் உண்டாகிறது, அதற்கு அளிக்கப்படும் அதிநவீன லேசர் சிகிச்சை குறித்து கூறியதாவது:-

    சிறுநீரகத்தில் ஒரு கோளாறு என்றால் அது சிறுநீரக கற்களால் ஏற்படும் வியாதியாக இருக்கும். இந்த சிறுநீரக கற்கள் ஒருவருக்கு உருவாகி இருந்தால் அந்த நபருக்கு திடீரென்று வயிற்று வலி, வாந்தி, உடலில் அதிக வேர்வை வருதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஆகியவை ஏற்படும்.

    அதிகம் தண்ணீர் அருந்தாமல் இருப்பதாலும், வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும், துரித உணவு சாப்பிடுபவர்களுக்கும், அதிக தூரம் பிரயாணம் செய்பவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உண்டாகும். அதிக வாகன ஓட்டிகளுக்கும், காபி, டீ அதிகம் அருந்துபவர்களுக்கும் பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும்.

    சிறுநீரக கற்களின் அறிகுறிகள்

    சிறுநீரகத்தை மூன்று பகுதியாக பிரிக்கலாம். சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீரகப்பை ஆகியவை ஆகும். இந்த 3 பகுதியில் எந்தப் பகுதியிலும் சிறுநீரக கற்கள் ஏற்படலாம். ஆனால் அந்தந்த இடத்தில் ஏற்படும் வலிக்கான அறிகுறிகள் வேறுபடும்.

    உதாரணத்திற்கு சிறுநீரகத்திற்குள் ஏற்படும் கற்களால் ஒரு வலியும் இருக்காது. 3 சென்டிமீட்டர் அளவுக்கு கல் இருந்தாலும் அது வலியை தராது. ஆனால் அதுவே சிறுநீர் குழாயில் ஒரு சிறிய அளவு 4 மில்லி மீட்டர் அளவு கற்கள் அடைப்பு ஏற்பட்டாலும் அதிக வயிற்று வலி, வேதனை, வாந்தி, சிறுநீரக எரிச்சல், காய்ச்சல் வருதல் ஆகியவை ஏற்படும். இதில் மூன்றாவது வகை, சிறுநீரகப் பையில் ஏற்படும் கற்களால் சிறுநீர் போகும் போது எரிச்சல், ரத்தம் கலந்த சிறுநீர் கழித்தல், சிறுநீரில் கடுப்பு ஏற்படுதல், சிறுநீர் கழிக்கும் போது கஷ்டப்பட்டு கழித்தல், சொட்டு சிறுநீர் ஆகியவை அறிகுறிகள் ஆகும். இதனால் வெவ்வேறு பகுதிகளில் கற்களினால் ஏற்படும் அறிகுறிகள் வித்தியாசப்படும்.

    லேசர் சிகிச்சை

    பழைய முறையில் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் சிறுநீர் பையில் கற்கள் இருந்தாலும் சிறுநீர் குழாயில் கற்கள் இருந்தாலும் அறுவை சிகிச்சை முறையில் மட்டுமே கற்கள் அகற்றப்பட்டது.

    ஆனால் இப்போது அறுவை சிகிச்சை இல்லாமல் வயிற்றுப் பகுதியில் ஒரு கீறலும் இல்லாமல், லேசர் சிகிச்சையின் மூலம் கற்களை கரைத்து சிறுநீர் வழியாக ஸ்டண்ட் வைத்து அதை வெளியேற்றலாம்.

    சிறுநீரக குழாயில் மற்றும் சிறுநீரகத்தில் செய்யப்படும் லேசர் முறையால் கற்களை சிறு, சிறு துகள்களாக உடைப்பார்கள் அந்த துகள்கள் வெளியேறுவதற்கும் சிறுநீரக குழாயில் அடைப்பு ஏற்படாமல் ஒரு வீக்கம் வருவதை தடுப்பதற்காக இந்த ஸ்டண்ட் வைக்கப்படுகிறது. இது பொதுவாக 15 நாட்களில் இருந்து 25 நாட்களுக்குள் அகற்றப்படும்.

    பழைய அறுவை சிகிச்சை முறையில் 5 நாட்கள் முதல் 7 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டி இருந்தது. தற்போது லேசர் சிகிச்சை செய்பவர்கள் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்தில் வீடு திரும்பலாம்.

    திரும்ப கற்கள் உண்டாகுமா?.

    சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ரத்தத்தின் அளவில் அதிகமாக இருப்பதால் இது போன்ற கற்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆதலால் ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு, கால்சியம் அளவு எதனால் அதிகம் இருக்கிறது என்பதை ரத்த பரிசோதனை செய்து அதற்கு வேண்டிய சிகிச்சை முறையை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்களுடைய உணவு பழக்க வழக்கங்கள், நீர் அருந்துதல், துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு செய்து நம்முடைய வாழ்க்கை முறையை சிறிது மாற்றிக் கொண்டால், சிறுநீரக கற்களில் இருந்து பூரண விடுதலை பெறலாம் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலருக்கு காலையில் காபி, டீ குடித்தால் தான் அன்றைய பொழுது விடியும்.
    • அதிகளவு டீ, காபி அருந்துவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

    நம் முன்னோர்கள் டீ, காப்பிக்கு பதிலாக காலை, மாலை நேரங்களில் மல்லி, சுக்கு, மிளகு, இவைகளை பொடித்து கருப்பட்டி, பனங்கற்கண்டு, நாட்டு சர்க்கரை, இவைகளில் ஒன்றை சேர்த்து காய்ச்சி குடித்து வந்துள்ளனர். தேயிலைக்கு பதிலாக கஞ்சாங்கோரை என்ற துளசி குடும்ப தாவரத்தின் இலைகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் நுரையீரலில் ஏற்படும் நோய்கள் வராமல் பாதுகாக்க முடியும். சளி, இருமல் இவைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக இன்றளவும் பயன்படுகிறது.

    காபிக்கு பதிலாக நத்தைச்சூரி என்ற தாவரத்தின் விதையை வறுத்து பொடித்து பயன்படுத்தலாம். இதை வறுக்கும்போது காப்பித்தூளின் மணம் வரும். இதனால் உடல் பருமன், தொப்பை, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு இவைகள் குறையும். உடல் ஆரோக்கியமாகத் திகழும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • சிகரெட், மதுபானம் குடிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
    • அந்தந்த நோய்க்குரிய மருந்துகள் எடுத்தால் போதுமானது.

    வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதற்கு 'ஹைப்பர் ஹைட்ரோசிஸ்' என்று பெயர். உள்ளங்கை, பாத கசிவுநோய் (Hyperhidrosis). இந்நோயை உடையவர்களுக்கு உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் அதிக அளவு வியர்க்கும் இயல்புடையதாக அமைகிறது. உடலின் சீரான வெப்பம் மாற்றத்திற்கு உள்ளாகிறது.இதனால் அவர்கள் மனதளவிலும், உணர்ச்சி வசப்படுதலிலும், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

    இவ்வாறான உள்ளங்கை பாத கசிவினால் அவதியுறுவோர் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படுதலையும், மன அழுத்தம் தரவல்ல சந்தர்ப்பங்களையும் இயன்றளவில் தவிர்க்க வேண்டும்.

    சிகரெட், மதுபானம் குடிப்பதை தவிர்த்தல் வேண்டும்.

    இதற்கான சித்த மருந்துகள்:

    1) சங்கு புஷ்பம் மலர் 2, இஞ்சிச்சாறு சிறிதளவு, தேன் சிறிதளவு, ஒரு டம்ளர் தண்ணீர். இவைகளைக் காய்ச்சி, காலை, இரவு குடிக்க வேண்டும்.

    2) நன்னாரி மணப்பாகு அல்லது சர்பத் காலை, மாலை 10 மி.லி ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

    3) சிறுநாகப்பூ 1 அல்லது 2 எடுத்து அதை வறுத்து, பொடித்து தேன் அல்லது சர்க்கரையுடன் இருவேளை கொடுத்து வந்தால், உள்ளங்கால், உள்ளங்கைகளில் வருகின்ற அதிகவியர்வை குணமாகும்.

    ஹைப்பர் தைராய்டு, ரத்த சர்க்கரை அளவு குறைதல், இதய நோய்களில் வரும் அதி வியர்வையைத் தடுக்க அந்தந்த நோய்க்குரிய மருந்துகள் எடுத்தால் போதுமானது.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • உடல் பருமனால் பல்வேறு நோய்கள் ஏற்படும்.
    • சமச்சீர் உணவின் அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

    வேலூர் சத்துவாச்சாரியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவராக டாக்டர் அகிலா எல்லாளன் பணியாற்றுகிறார். உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து அவர் கூறியதாவது;

    உடல் பருமன் என்பது எடை அதிகரிப்பு மற்றும் கொழுப்பு திரட்சி என வரையறுக்கப்படுகிறது. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை கொண்டிருக்கும். சமூகம் மற்றும் பொருளாதார தாக்கத்தினால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகளும் உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

    உடல் பருமன் என்பது உலக அளவில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும். 21-ம் நூற்றாண்டில் நவீன உலகில், உடல் பருமன் என்பது கவலையாக உள்ளது. மோசமான உணவு முறைகள், வாழ்வியல் மாற்றங்கள், போதிய தூக்கமின்மை, ஹார்மோன் குறைபாடுகள், புகைபிடித்தல் மற்றும் மது பழக்கங்கள், ஸ்டீராய்டு மருந்துகள், மரபியல் உடல் செயல்பாடு குறைதல் என இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

    நமது உடல்நிலை குறியீடு எண் பி.எம்.ஐ. மூலம் கணக்கிடப்படுகிறது. இது ஒரு நபரின் எடையை உயரத்தினால் கணக்கிடும் முறையாகும். உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி உடல் பருமன் என்பது பி.எம்.ஐ 30- ஐவிட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருப்பது சரியான அளவாகும்.

    உடல் பருமனால் பல்வேறு நோய்கள் ஏற்படும். இருதய நோய்கள், நீரழிவு, ஆஸ்துமா, சில வகை புற்று நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், கருவுறாமை, மாதவிடாய் கோளாறுகள், உளவியல் சார்ந்த பிரச்சினைகள் என பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.

    இதற்கு நோயின் அடிப்படை காரணத்தை அறிந்து நீர், நெருப்பு, ஆகாயம், நிலம், காற்று ஆகிய பஞ்சபூதங்களின் கோட்பாடுகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன் வகைகள் வருமாறு:-

    யோகா, மனிதனின் உடல் மற்றும் மனநலத்தை ஒருங்கிணைக்கும் முறையாகும். உடல் சுத்திகரிப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை பின்பற்றுவதற்கான செயல் முறையாகும்.

    நல்ல உடல் நலத்தை நாடும் ஒவ்வொருவரும் சமச்சீர் உணவின் அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும். சிறு தானிய உணவுகள், பருவ கால காய்கறிகள் மற்றும் பழங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி ஆகியவை சிறந்தவை. உணவு முறைகள் உடல் நல ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செரிமானத்தை சீர்படுத்தவும் உதவுகிறது.

    விரத முறைகள் மூலமும் இதனை தவிர்க்கலாம். விரதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவை விருப்பத்துடன் தவிர்க்கும் முறையாகும். விரதத்தின் தொடக்கத்தில் 'எனிமா' மூலம் குடலை முழுமையாக சுத்தம் செய்யப்படும். இம்முறையில் உடலில் உள்ள கழிவுகள் சிறந்த முறையில் வெளியேற்றப்படும்.

    நீராவி குளியல்

    நீராவி குளியல் என்பது சரும துவாரங்கள் வழியாக நச்சு கழிவுகள் வெளியேற்றப்படும். இது தோஷ சமநிலை சரி செய்து, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டவும் உதவுகிறது.

    வாழை இலை குளியல்

    வாழை இலை பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இது ஒரு ஹீலியோ தெரபி முறையாகும். வாழை இலையில் பொட்டாசியம், வைட்டமின், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் நிலை சமப்படுத்த உதவுகிறது.

    மண் குளியல்

    மண் குளியல் என்பது தோளில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மண்ணில் உள்ள கந்தகம், சல்பர், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் புரோமின் போன்ற தாதுக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

    உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் மற்றும் விளைவுகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு.
    • இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.

    உணவின் ருசியில் மசாலா பொருட்களுக்கு எந்தளவுக்கு பங்கு உள்ளதோ, அதேஅளவு அதனை தயார் செய்யும் போது உண்டாகும் மணத்திலும் உண்டு. இந்திய சமையலில் உள்ள மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. இதற்கு காரணம் உணவில் ஒரு தனித்துவமான சுவையையும், மணத்தையும் அளிப்பதே ஆகும். சமைக்காத சமயங்களில் பெருங்காயத்தின் மணம் பலராலும் வெறுக்கத்தக்க அளவு இருக்கும் என்பதே உண்மை. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்களால் பெருங்காயம் 'கடவுளின் அமிர்தம்' என பல நாட்டு மக்களால் அழைக்கப்படுகிறது.

    பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் ஏராளமான மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்கிறது. உலகளவில் 170 வகையான இனங்களை கொண்டுள்ள பெருங்காயத்தின் 3 இனங்கள் இந்தியாவில் வளர்கின்றன. அப்படியான பெருங்காயத்தில் ஏற்படக்கூடிய நன்மைகள் சிலவற்றை இதில் பார்ப்போம்.

    பெருங்காயத்தின் மிக முக்கியமான செயல்பாடுகளின் ஒன்று செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பது ஆகும். இதற்கு வெங்காயம் மற்றும் பூண்டில் இருப்பதை விட அதிக மருத்துவ குணங்கள் பெருங்காயத்தில் இருப்பதே காரணம். இது ஆக்சிஜனேற்ற தடுப்பானாகவும், உணர்ச்சியை தூண்டும் தடுப்பானாகவும் செயல்படுவதால் வயிறு வீக்கம், வலி, குடல்புண், குடல் புழுக்கள், வாயு, வயிற்று எரிச்சல் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.

    குறிப்பாக செரிமான பிரச்சினைகளில் உடனடி நிவாரணம் கிடைக்க சிறிது பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து குடித்தால் சரியாகும். பெருங்காயம் வயிற்றில் உள்ள என்சைம்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி அமிலத்தன்மையை குறைப்பதால் இரைப்பை தொடர்பான பிரச்சினைகள் குணமாகிறது.

    பெருங்காயத்தில் உள்ள வைரஸ் எதிர்ப்பு மற்றும் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் சளி போன்ற சுவாசப்பிரச்சினைகளை சரி செய்கிறது. பெருங்காயத்தை இஞ்சி மற்றும் தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3 முறை குடித்து வந்தால் வறட்டு இருமல், மார்பு சளி போன்றவை குணமாகும். மேலும் இது ஒரு சுவாச தூண்டுதலாக செயல்படுகிறது. நெஞ்சு எரிச்சல், இருமல் மற்றும் கபம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் சிறிது பெருங்காயத்தை தண்ணீர் கலந்து அரைத்து மார்பில் தேய்த்து வர குணமாகும்.

    • வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.
    • தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    மூல நோய் ஏற்படும் காரணத்தை 'அனில பித்த தொந்தமலாது மூலம் வராது' என்று தேரையர் சித்தர் கூறுகிறார். வயிற்றில் அதிகரித்த வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அடி வயிற்றில் ஏற்படும் அழுத்தம், பிரசவ நேரத்தில் ஏற்படும் வலி, அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகில் உள்ள தசைகளில் ஏற்படும் பலவீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, மாவுச்சத்துள்ள உணவுகள், எண்ணெய் பலகாரங்களை அதிகமாக உண்பது, எப்போதும் உட்கார்ந்து இருப்பது, நார்ச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது போன்ற காரணங்களால் மூல நோய் வருகிறது.

    இந்த நோய்களை குணமாக்கும் சித்த மருந்துகள்:

    1) திரிபலா சூரணம் ஒரு கிராம், நாகப்பற்பம் 100 மில்லி கிராம், நத்தை பற்பம் 100 மில்லி கிராம், இவைகளை வெந்நீரில் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    2) கருணைக்கிழங்கு லேகியம், தேற்றான் கொட்டை லேகியம் இவைகளை தலா ஒரு கிராம் வீதம் காலை இரவு இரு வேளை உண்ண வேண்டும்.

    3) நிலவாகை சூரணம் ஒரு கிராம் வீதம் இரவு ஒரு டம்ளர் வெந்நீரில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட வேண்டும்.

    4) மூலக்குடார நெய் 5 மி.லி. இரவு ஒரு வேளை சாப்பிட வேண்டும்.

    உணவுகள்: துத்திக் கீரையுடன் சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசிய வைத்து இரவு உண்ணலாம். கருணைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி புளி சேர்த்து குழம்பாக வாரம் இரு முறை பயன்படுத்தி வரலாம். பிரண்டைத் தண்டை துவையல் அல்லது பொடியாக செய்து பயன்படுத்தலாம். முள்ளங்கி காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கோவைக்காய், கீரைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    • தண்ணீரை கொதிக்க வைத்துப் பருக வேண்டும்.
    • உடலில் நோய் தொற்றுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    குளிர்காலத்தில் உடலின் முக்குற்றங்களுள், பித்தம் அதிகரித்து இருப்பதால் இயல்பாகவே உடலின் வலு சற்று குறைந்திருக்கும். இக்காலங்களில் உடலில் நோய் தொற்றுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக ரைனோ வைரஸ், ஃப்ளூ காய்ச்சல் (இன்புளூயன்சா) போன்றவை அதிகமாகப் பரவும். இவை ஒருவரிடம் இருந்து அவர்களின் தும்மல், இருமல் மூலம் மற்றவருக்கு வேகமாக பரவும். ஆகவே, இக்காலங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இக்காலங்களில் தண்ணீரை கொதிக்க வைத்துப் பருக வேண்டும்.

    சாதாரண சளி, இருமலுக்கு:

    1) ஆடாதோடை இலை - 2, கற்பூரவள்ளி இலை - 2, துளசி இலை - 10 என்ற எண்ணிக்கையில் எடுத்து அவற்றைபிழிந்து சாறு எடுத்து தேனுடன் சூடுபடுத்தி காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். இதனால் நெஞ்சு சளி, இருமல் மூலமாக வெளியேறும்.

    2) தூதுவளை, மிளகு ரசம் வைத்து மதிய உணவை சாப்பிட வேண்டும்.

    3) சிற்றரத்தை, அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி இவைகள் வகைக்கு 10 கிராம் அளவில் எடுக்கவும், கொத்தமல்லி 50 கிராம் எடுத்து இவைகளை எல்லாம் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும்போது ஒரு டீ ஸ்பூன் பொடியை எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். தொண்டை கரகரப்பு, தொண்டை வலி, தொண்டை கட்டு போன்றவை நீங்கும். நல்ல பசியைத் தரும்.

    4) நண்டு ரசம், நாட்டுக்கோழி ரசம் இவைகளும் சிறப்புடையது.

    சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் இரண்டு மாத்திரைகளை வாயிலிட்டு மென்று சாப்பிட வேண்டும். துளசி மாத்திரை 1-2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். குளிர்காலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நிலவேம்பு குடிநீர் 30 முதல் 60 மி.லி. வீதம் தினம் ஒருவேளைக் குடிக்கலாம். இது வைரஸ் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தது. இரவு தூங்கும் முன்பு மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு இவைகளை பாலில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி, இருமல் குறையும். ஆடாதோடை மணப்பாகு 5 மி.லி. காலை, இரவு இருவேளை குடிக்க வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    • நகங்களை ஒழுங்காக வெட்டவேண்டும்.
    • வெளியே போகும் போது காலணி போட்டுத்தான் செல்ல வேண்டும்.

    நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையை விட அதிகமாக இருப்பது ஆகும். மிகவும் தாகமாக உணர்வது, வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல், மிகவும் சோர்வாக உணர்வது, உடல் எடை குறைதல், கால்கள் மரத்துப்போதல், வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல், கண் பார்வை மங்குதல், புண்கள் ஏற்பட்டால் எளிதில் குணமடையாத நிலை, தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாத நிலை போன்றவை நீரிழிவு நோயில் காணப்படும் பொதுவான அறிகுறிகள். இது நபருக்கு நபர் வேறுபடும்.

    சித்த மருத்துவத்தில் நீரிழிவு, இனிப்பு நீர், மதுமேகம் என்றழைக்கப்படுகிறது, நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் ஏழு உடல் தாதுக்களையும் பாதித்து உடலை உருக்கி விடும். ஆங்கில மருத்துவமுறையில் டைப் 1, டைப் 2 என்று நீரிழிவு நோய்கள் இரண்டுவிதமாக அழைக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்ப காலத்தில் வரும் ஜெஸ்டேசனல் நீரிழிவு, சிறு குழந்தைகளுக்கு வரும் ஜுவைனல் நீரிழிவு நோய்களும் உண்டு.

    சித்த மருத்துவ தீர்வுகள்:

    1) மதுமேக சூரணம் 1 முதல் 2 கிராம் அல்லது மதுமேக மாத்திரை 1 முதல் 2 மாத்திரை வீதம், காலை, இரவு சாப்பிட வேண்டும்.

    2) திரிபலா சூரணம் அல்லது திரிபலா மாத்திரை காலை, இரவு எடுக்கலாம்.

    3) சீந்தில் சர்க்கரை 500 மி.கி. காலை, இரவு எடுக்க வேண்டும்.

    4) ஆவாரை குடிநீர் பொடி 1 முதல் 2 கிராம் அளவில் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, இரவு குடிக்க வேண்டும்.

    5) சர்க்கரைக் கொல்லி பொடி காலை, இரவு 500 மி.கி. முதல் ஒரு கிராம் வெந்நீரில் சாப்பிடலாம்.

    சிலர் தேன் காய் அல்லது மகாகனி என்றழைக்கப்படுகிற ஸ்வெட்டீனியா தாவரத்தின் விதையை பொடித்து சாப்பிடலாமா என்று கேட்கிறார்கள், ரத்த சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தையும் இது குறைக்கும். சித்தமருத்துவரின் ஆலோசனையின்பேரில் இதை சாப்பிடலாம். ஆனால் கல்லீரல் நோய் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

    கால் எரிச்சல் நீங்க

    நீரிழிவு நோயில் வருகிற கால் மத மதப்பு, கால் எரிச்சல், கால் பலவீனம் இவைகளுக்கு காரணம் கால், மற்றும் பாதங்களில் மேலோட்டமாக உள்ள ரத்த குழாய்களில் ஏற்படும் சீரற்ற ரத்த சுழற்சி ஆகும். இதற்கு சித்த மருத்துவத்தில்,

    1) திரிபலா சூரணம் பொடி 1 கிராம் எடுத்து அதனுடன் முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., ஆறுமுகச் செந்தூரம் அல்லது அயக்காந்த செந்தூரம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. சேர்த்து காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    கால்கள், பாதங்களில் வாத கேசரி தைலம் அல்லது சிவப்பு குக்கில் தைலம் அல்லது விடமுட்டி தைலத்தை தேய்த்து வரவேண்டும். உள்ளங்கால், கால் தசைகளை நன்றாக பிடித்து விடவேண்டும். நீரிழிவு நோயாளிகள் கால் மற்றும் பாதங்கள், விரல்களின் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நகங்களை ஒழுங்காக வெட்டவேண்டும். வெளியே போகும் போது காலணி போட்டுத்தான் செல்ல வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    ×