என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    காப்பி, தேநீருக்கு, மாற்றாக தினசரி காலை, மாலை எதை அருந்தினால் நல்லது?
    X

    காப்பி, தேநீருக்கு, மாற்றாக தினசரி காலை, மாலை எதை அருந்தினால் நல்லது?

    • சிலருக்கு காலையில் காபி, டீ குடித்தால் தான் அன்றைய பொழுது விடியும்.
    • அதிகளவு டீ, காபி அருந்துவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

    நம் முன்னோர்கள் டீ, காப்பிக்கு பதிலாக காலை, மாலை நேரங்களில் மல்லி, சுக்கு, மிளகு, இவைகளை பொடித்து கருப்பட்டி, பனங்கற்கண்டு, நாட்டு சர்க்கரை, இவைகளில் ஒன்றை சேர்த்து காய்ச்சி குடித்து வந்துள்ளனர். தேயிலைக்கு பதிலாக கஞ்சாங்கோரை என்ற துளசி குடும்ப தாவரத்தின் இலைகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் நுரையீரலில் ஏற்படும் நோய்கள் வராமல் பாதுகாக்க முடியும். சளி, இருமல் இவைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக இன்றளவும் பயன்படுகிறது.

    காபிக்கு பதிலாக நத்தைச்சூரி என்ற தாவரத்தின் விதையை வறுத்து பொடித்து பயன்படுத்தலாம். இதை வறுக்கும்போது காப்பித்தூளின் மணம் வரும். இதனால் உடல் பருமன், தொப்பை, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு இவைகள் குறையும். உடல் ஆரோக்கியமாகத் திகழும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    Next Story
    ×