என் மலர்
குழந்தை பராமரிப்பு
‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.
கொரோனா நெருக்கடியால் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் ஏராளமான சிறுவர்-சிறுமியர்கள் ‘மொபைல் போன் கேம்ஸ்’ விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். அதனை நினைத்து பெரும்பாலான பெற்றோர்கள் இப்போது சந்தோஷப் படுகிறார்கள். ‘அடிதடி இல்லாமல் அமைதியாக இருந்து பிள்ளைகள் விளையாடுகிறார்கள்’ என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விடும் பெற்றோர்களால், பள்ளிக்கூடம் திறந்து அவர்கள் பள்ளிக்கு செல்லும்போதுதான் அந்த விளையாட்டின் விபரீதத்தை உணர்ந்து கொள்ள முடியும். மொபைல் போன் கேம்ஸ், கிட்டத்தட்ட குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலும் தகர்க்கும் விளையாட்டாகும்.
இது போலத்தான் ஒருமுறை, இரண்டு மாத விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்தது. பள்ளி சென்ற சிறுவனால் நோட்டில் எழுத முடியவில்லை. கை வலித்தது. கண்கள் இருண்டது. சோர்ந்து போய் வீடு திரும்பினான். அவனை டாக்டரிடம் பெற்றோர் அழைத்து சென்றனர். ‘இவனால் பேனா பிடிக்க முடியவில்லை. கைவிரல்கள் வலிக்கின்றன என் கிறான். என்ன நோய் என்று கண்டுபிடியுங்கள்’ என்று டாக்டரிடம் கேட்டுக்கொண்டார்கள்.
டாக்டர் பரிசோதித்துவிட்டு, என்ன நோய் என்று சொன்னதும் பெற்றோர் அதிர்ந்து போய்விட்டார்கள். அந்த நோயின் பெயர் ‘வீடியோ கேமேர்ஸ் தம்ப்’! நிரந்தரமாக வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் பெருவிரல் வீங்கி, நீர்கட்டுடன் காணப்படுவதுதான் இந்த நோயின் அறிகுறி. மகன் கேட்டபோதெல்லாம் அவன் இஷ்டத்திற்கு மொபைல்போனில் போட்டுக்கொடுத்த விளையாட்டுகள் இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணும் என்று பெற்றோர் நினைத்துப்பார்த் திருக்கவில்லை.
விரல் வீக்கம் முதல்- திருட்டு மனோபாவம் வரை பல விபரீதங்கள் இந்த கேம்ஸ்களால் சிறுவர், சிறுமியர்களிடம் ஏற்படுகின்றன. பஸ்சுக்கு காத்திருக்கும்போது, படிக்க விருப்பம் இல்லாதபோது, ராத்திரி உறக்கம் வராதபோது... இப்படிப்பட்ட பல நேரங்களில் பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த மொபைல்போன் கேம்ஸ்கள் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தையே சிதறடிக்கிறது.
திருடனை பிடிப்பது-மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது-மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது...போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே ‘ஹீரோ’ ஆகிக்கொள்கிறார்கள். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தப்பார்க்கிறார்கள்.
மேலோட்டமாக பார்க்கும்போது இந்த விளையாட்டுகள் புள்ளிகள் அதிகம் எடுக்கவும், அடுத்த லெவலுக்கு செல்லவும் ஏற்ற பொழுதுபோக்கு என்று சொல்வார்கள். ஆனால் குழந்தைகள் இதில் ஆழ்ந்துவிட்டால் தேவைக்கு அதிகமாக ஆவேசம் காட்டுவார்கள். கேம்ஸ்சின் ‘பிரேக் டைம்’ நேஇரத்தில் காத்திருக்க முடியாமல் மொபைலில் தேதியை மாற்றிவிட்டும் ‘பேக்’ செய்துவிட்டும், பெரும்பாலான குழந்தைகள் அடுத்த விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறார்கள்.
பஸ்சிலும், வகுப்பறையிலும், படுக்கை அறையிலும் மறைத்து வைத்து விளையாடும் வசதி மொபைல் போனில் இருக்கிறது. அதனால் அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் அதில் இருந்தாலும் அந்த விளையாட்டுக்கு தேவையான உடல் சக்தியும், மனோபாவமும் மொபைல் கேம்ஸ்க்கு தேவையில்லை. அதனால் அந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.
குழந்தைகளை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்கும்போது படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.
‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள்.
‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும். உங்கள் குழந்தைகள் தினமும் 2 மணி நேஇரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாட அனுமதிக்காதீர்கள். வேறு வெளிவிளையாட்டுகளிலும், நல்ல பொழுதுபோக்குகளிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள்.
தூக்கமின்மை, ஒற்றை தலைவலி, சோர்வு, பலவீனம், பள்ளி பாடங்களில் பின்னடைவு, கை- கால்- முதுகு- கழுத்துவலி, மன அழுத்தம், காரணமற்ற கோபம், எரிச்சல், சுத்தமின்மை, பொய் சொல்லுதல், சக நண்பர்களிடம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துதல் போன்றவை எல்லாம் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையானவர்களின் அறிகுறியாகும்.
இதை எல்லாம் தெரிந்துகொண்டு, வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் இந்த நேரத்தில் குழந்தைகளை கண்காணியுங்கள்.
இது போலத்தான் ஒருமுறை, இரண்டு மாத விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்தது. பள்ளி சென்ற சிறுவனால் நோட்டில் எழுத முடியவில்லை. கை வலித்தது. கண்கள் இருண்டது. சோர்ந்து போய் வீடு திரும்பினான். அவனை டாக்டரிடம் பெற்றோர் அழைத்து சென்றனர். ‘இவனால் பேனா பிடிக்க முடியவில்லை. கைவிரல்கள் வலிக்கின்றன என் கிறான். என்ன நோய் என்று கண்டுபிடியுங்கள்’ என்று டாக்டரிடம் கேட்டுக்கொண்டார்கள்.
டாக்டர் பரிசோதித்துவிட்டு, என்ன நோய் என்று சொன்னதும் பெற்றோர் அதிர்ந்து போய்விட்டார்கள். அந்த நோயின் பெயர் ‘வீடியோ கேமேர்ஸ் தம்ப்’! நிரந்தரமாக வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் பெருவிரல் வீங்கி, நீர்கட்டுடன் காணப்படுவதுதான் இந்த நோயின் அறிகுறி. மகன் கேட்டபோதெல்லாம் அவன் இஷ்டத்திற்கு மொபைல்போனில் போட்டுக்கொடுத்த விளையாட்டுகள் இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணும் என்று பெற்றோர் நினைத்துப்பார்த் திருக்கவில்லை.
விரல் வீக்கம் முதல்- திருட்டு மனோபாவம் வரை பல விபரீதங்கள் இந்த கேம்ஸ்களால் சிறுவர், சிறுமியர்களிடம் ஏற்படுகின்றன. பஸ்சுக்கு காத்திருக்கும்போது, படிக்க விருப்பம் இல்லாதபோது, ராத்திரி உறக்கம் வராதபோது... இப்படிப்பட்ட பல நேரங்களில் பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த மொபைல்போன் கேம்ஸ்கள் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தையே சிதறடிக்கிறது.
திருடனை பிடிப்பது-மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது-மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது...போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே ‘ஹீரோ’ ஆகிக்கொள்கிறார்கள். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தப்பார்க்கிறார்கள்.
மேலோட்டமாக பார்க்கும்போது இந்த விளையாட்டுகள் புள்ளிகள் அதிகம் எடுக்கவும், அடுத்த லெவலுக்கு செல்லவும் ஏற்ற பொழுதுபோக்கு என்று சொல்வார்கள். ஆனால் குழந்தைகள் இதில் ஆழ்ந்துவிட்டால் தேவைக்கு அதிகமாக ஆவேசம் காட்டுவார்கள். கேம்ஸ்சின் ‘பிரேக் டைம்’ நேஇரத்தில் காத்திருக்க முடியாமல் மொபைலில் தேதியை மாற்றிவிட்டும் ‘பேக்’ செய்துவிட்டும், பெரும்பாலான குழந்தைகள் அடுத்த விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறார்கள்.
பஸ்சிலும், வகுப்பறையிலும், படுக்கை அறையிலும் மறைத்து வைத்து விளையாடும் வசதி மொபைல் போனில் இருக்கிறது. அதனால் அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் அதில் இருந்தாலும் அந்த விளையாட்டுக்கு தேவையான உடல் சக்தியும், மனோபாவமும் மொபைல் கேம்ஸ்க்கு தேவையில்லை. அதனால் அந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.
குழந்தைகளை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்கும்போது படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.
‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள்.
‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும். உங்கள் குழந்தைகள் தினமும் 2 மணி நேஇரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாட அனுமதிக்காதீர்கள். வேறு வெளிவிளையாட்டுகளிலும், நல்ல பொழுதுபோக்குகளிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள்.
தூக்கமின்மை, ஒற்றை தலைவலி, சோர்வு, பலவீனம், பள்ளி பாடங்களில் பின்னடைவு, கை- கால்- முதுகு- கழுத்துவலி, மன அழுத்தம், காரணமற்ற கோபம், எரிச்சல், சுத்தமின்மை, பொய் சொல்லுதல், சக நண்பர்களிடம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துதல் போன்றவை எல்லாம் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையானவர்களின் அறிகுறியாகும்.
இதை எல்லாம் தெரிந்துகொண்டு, வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் இந்த நேரத்தில் குழந்தைகளை கண்காணியுங்கள்.
தொடர் விடுமுறை, பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்-சிறுமியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. விளையாட்டுடன் குழந்தைகளுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொடுப்பதற்கு இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொடர் விடுமுறை, பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்-சிறுமியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தங்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்கிறார்கள். விளையாட்டுடன் குழந்தைகளுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொடுப்பதற்கு இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் மூலம் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் நமக்கு உருவாகும். கல்வியுடனான தொடர்பை தக்கவைக்கும் விதமாக ‘வீட்டு பள்ளிக்கூடம்’ என்ற சூழலையும் ஏற்படுத்தலாம்.
குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது, பள்ளியிலும், வீட்டிலும் அவர்களின் செயல்பாட்டுக்கான நிலையான அட்டவணை உருவாக்கப்பட்டிருக்கும். அதன்படியே செயல்பட்டு வந்திருப்பார்கள். அதனை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை. பள்ளிக்கூடம் செல்லும்போது இரண்டு மணிநேரம் படிப்புக்காக நேரத்தை ஒதுக்கி இருந்தால், இப்போது ஒரு மணி நேரத்தையாவது செலவிட வைக்கலாம். ஓடியாடி விளையாடும்போது சில மணி நேரங்களில் சோர்ந்து போய்விடுவார்கள். பின்பு ஓய்வு எடுக்க விரும்புவார்கள். அந்த ஓய்வுக்கு பிறகான நேஇரத்தை படிப்புக்காக ஒதுக்கலாம். அதற்கேற்ப வீட்டில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து படிக்கும் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
அது குழந்தைகள் படிப்பின் மீது கவனம் செலுத்துவதற்கு உதவும். தினமும் அதே இடத்தில் படிப்பை தொடரவைக்க வேண்டும். அத்தகைய சூழல், மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். விடுமுறை நாளில் படிக்கும்போது கவனச்சிதறல் ஏற்படலாம். அதனை தவிர்க்க இணையத்தின் உதவியை நாடலாம். குழந்தைகளின் பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி அவர்களின் படிப்பு சார்ந்த ஏராளமான தகவல்களும் வீடியோ வடிவில் இணையதளத்தில் நிறைந்திருக்கின்றன. அதனை பார்க்கவைத்தும் கற்றுக்கொடுக்கலாம். எளிமையான கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை இணையதளத்தில் தேடி கண்டுபிடிக்க வைக்கலாம்.
வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் வகுப்பு நடத்தும் சூழலும் நிலவுவதால், அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு உதவும். ஆசிரியர்களுடன் உரையாடும் சூழல் நிலவும்போது கவனச்சிதறல் இன்றி படிக்கவும் செய்வார்கள். ஓவியம், நடனம், இசை மீது நிறைய குழந்தைகளுக்கு நாட்டம் இருக்கும். அவர் களின் விருப்பத்தை அறிந்து, அதில் தனித்திறனை மெருகேற்றுவதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம். பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்தினால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் எண்ணம் அவர்களுக்குள் எழாது.
குழந்தைகளை வீடியோ கேம்களில் கவனம் செலுத்தவிடாமல், அவர்களோடு விளையாடுவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும். பாரம்பரிய விளையாட்டுகள் அதற்கு துணைநிற்கும். அவை குழந்தைகளின் புத்திக்கூர்மைக்கு வழிவகுக்கும். மூளை உடற் பயிற்சியை உள்ளடக்கிய புதிர்கள் மற்றும் பிற விளையாட்டுகளையும் தேர்வு செய்யலாம். குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதோடு அல்லாமல் அவர்களிடம் மனம் விட்டு பேசுவதற்கும் குறிப்பிட்ட நேஇரத்தை செலவிட வேண்டும். குறிப்பாக குழந்தைகளுடன் நல்லவிதமாக நேஇரத்தை செலவிடக்கூடிய வகையில் உங்கள் நேஇரத்தை ஒதுக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உடற்பயிற்சியும் முக்கியம் என்பதை குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். அதில் ஈடுபாடு கொள்ள வைப்பதற்கு இசையுடன் கூடிய உடற்பயிற்சிகளை தேர்வு செய்யலாம். அது உங்களையும் குழந்தைகளையும் நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க துணை நிற்கும்.
குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது, பள்ளியிலும், வீட்டிலும் அவர்களின் செயல்பாட்டுக்கான நிலையான அட்டவணை உருவாக்கப்பட்டிருக்கும். அதன்படியே செயல்பட்டு வந்திருப்பார்கள். அதனை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை. பள்ளிக்கூடம் செல்லும்போது இரண்டு மணிநேரம் படிப்புக்காக நேரத்தை ஒதுக்கி இருந்தால், இப்போது ஒரு மணி நேரத்தையாவது செலவிட வைக்கலாம். ஓடியாடி விளையாடும்போது சில மணி நேரங்களில் சோர்ந்து போய்விடுவார்கள். பின்பு ஓய்வு எடுக்க விரும்புவார்கள். அந்த ஓய்வுக்கு பிறகான நேஇரத்தை படிப்புக்காக ஒதுக்கலாம். அதற்கேற்ப வீட்டில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து படிக்கும் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
அது குழந்தைகள் படிப்பின் மீது கவனம் செலுத்துவதற்கு உதவும். தினமும் அதே இடத்தில் படிப்பை தொடரவைக்க வேண்டும். அத்தகைய சூழல், மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். விடுமுறை நாளில் படிக்கும்போது கவனச்சிதறல் ஏற்படலாம். அதனை தவிர்க்க இணையத்தின் உதவியை நாடலாம். குழந்தைகளின் பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி அவர்களின் படிப்பு சார்ந்த ஏராளமான தகவல்களும் வீடியோ வடிவில் இணையதளத்தில் நிறைந்திருக்கின்றன. அதனை பார்க்கவைத்தும் கற்றுக்கொடுக்கலாம். எளிமையான கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை இணையதளத்தில் தேடி கண்டுபிடிக்க வைக்கலாம்.
வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் வகுப்பு நடத்தும் சூழலும் நிலவுவதால், அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு உதவும். ஆசிரியர்களுடன் உரையாடும் சூழல் நிலவும்போது கவனச்சிதறல் இன்றி படிக்கவும் செய்வார்கள். ஓவியம், நடனம், இசை மீது நிறைய குழந்தைகளுக்கு நாட்டம் இருக்கும். அவர் களின் விருப்பத்தை அறிந்து, அதில் தனித்திறனை மெருகேற்றுவதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம். பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்தினால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் எண்ணம் அவர்களுக்குள் எழாது.
குழந்தைகளை வீடியோ கேம்களில் கவனம் செலுத்தவிடாமல், அவர்களோடு விளையாடுவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும். பாரம்பரிய விளையாட்டுகள் அதற்கு துணைநிற்கும். அவை குழந்தைகளின் புத்திக்கூர்மைக்கு வழிவகுக்கும். மூளை உடற் பயிற்சியை உள்ளடக்கிய புதிர்கள் மற்றும் பிற விளையாட்டுகளையும் தேர்வு செய்யலாம். குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதோடு அல்லாமல் அவர்களிடம் மனம் விட்டு பேசுவதற்கும் குறிப்பிட்ட நேஇரத்தை செலவிட வேண்டும். குறிப்பாக குழந்தைகளுடன் நல்லவிதமாக நேஇரத்தை செலவிடக்கூடிய வகையில் உங்கள் நேஇரத்தை ஒதுக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உடற்பயிற்சியும் முக்கியம் என்பதை குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். அதில் ஈடுபாடு கொள்ள வைப்பதற்கு இசையுடன் கூடிய உடற்பயிற்சிகளை தேர்வு செய்யலாம். அது உங்களையும் குழந்தைகளையும் நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க துணை நிற்கும்.
இந்தக் காலத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி என்பது குறித்து சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
நவீன காலத்தில் பெண்களும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிப்பது குறைத்து விட்டது. குழந்தைகளிடம் மொபைல் போனை கொடுத்து விட்டு தங்கள் வேலைகளை செய்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். இது முற்றிலும் தவறானது. பண்டைய காலத்தை சிந்தித்து பார்ப்போம். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் நேரமும் தூங்க வைக்கும் நேரமும் கதைகளை சொல்லி தருவார்கள். இன்றைக்கு அப்படி நடப்பதே இல்லை.
ஆனால் பெற்றோர்களே உளவியலாளர்களின் கூற்றுப்படி, படுக்கச் செல்லும் நேரத்தில் குழந்தைகளிடம் கதைகள் சொல்லும் போது குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் நல்ல பிணைப்பு உருவாகும் என்கின்றனர். மேலும் இதனால் குழந்தைகளின் கற்பனைத் திறன் பெருகுவதுடன் அதிகமாக சிந்திப்பதற்கும் தூண்டுகிறது. அவர்கள் வளர்ந்தபின் அறிவாளியாகவும், நுண்நோக்கிப் பார்க்குத் திறன் உடையவர்களாகவும், சிறந்த பேச்சாளர்களாகவும் இருப்பார்கள்.
கதைகள் வழியே அவர்கள் கற்றல் திறன் அதிகரிப்பதுடன் வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் ஏற்படும். இந்தக் காலத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி என்பது குறித்து சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
பேசிப் பழகுங்கள்
ஒரு பெற்றோராக, அன்றைய தினம் முழுவதும் நடந்த விஷயங்களை குழந்தையிடம் முதலில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லுங்கள்.
கதை சொல்லும்போது அவர்கள் என்ன மாதிரியான கதைகளைக் கேட்க விரும்புகிறார்கள் என்று கேளுங்கள். பின்னர் அவர்கள் விரும்பும் கதைகளை அழகாக வர்ணித்து சொல்லுங்கள்.
இது உங்கள் குழந்தையை நன்கு புரிந்து கொள்ள உதவும். மேலும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு புதிய அனுபவத்தை தர கூடியதாக மாறும்.
கதாபாத்திரம்
முதலில் நீங்கள் சொல்ல போகும் கதையின் கதாபாத்திரமாக மாற வேண்டும். அப்போது உங்கள் குழந்தை உங்கள் கதைகளை ரசிக்க ஆரம்பிக்கும். வெறும் வாசிப்பு கதை சொல்லும் போது குழந்தைகளை போர் அடிக்க செய்யும்.
நீங்கள் இன்வோல்வ்மென்டோடு சொல்லும் போது உங்கள் குழந்தை கேட்பதிலும் கவனம் செலுத்துவதிலும் அதிக அக்கறை எடுக்கும். அவர்கள் உங்கள் கதைகளை ரசிக்கத் ஆரம்பிபார்கள். மேலும் அவர்களுக்குத் ஒரு தெளிவான கற்பனை வளரும்.
நண்பர்கள்
உங்கள் குழந்தையுடன் வலுவான உறவை ஏற்படுத்த வேண்டுமானால் அவர்களுடன் இணக்கமாக இருந்து உங்களையே குழந்தை போல மாற்றிக் கொள்ளுங்கள். அவர்கள் நம்பக் கூடிய ஒரு நண்பரைப் போல நடந்து கொள்ளுங்கள்.
இதனால் அவர்கள் தூங்குவதற்கு முன்பு, நீங்கள் சொல்லும் எந்தவொரு கதையையும் ஆழ்ந்து ரசித்து தூங்குவார்கள்.
விவாதம்
கதை முடிந்தவுடன் நீங்கள் சொன்ன கதையைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். அதிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டவை என்னவென்று கேளுங்கள். மேலும் கதையைப் பற்றி உங்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடுங்கள்.
அப்படி இருந்தால் மட்டுமே அக்கதைகளின் உண்மையான நோக்கத்தை அடைய முடியும். அப்போது தான் உங்கள் குழந்தைகள் நேர்மை, பணிவு, தயவு போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள உதவும்.
வாசிக்க கற்று கொடுங்கள்
கடைசியாக, ஏன் கதையை வாசிக்க வேண்டும் என்று வாசிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். கதைகளில் உள்ள எடுத்துக்காட்டுகள் மூலம், அறிவைப் பெறுவதும், வாசிக்கும் பழக்கத்தின் மூலம் தன்னைப் பயிற்றுவிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குக் எடுத்து கூறுங்கள்.
வாழ்க்கையில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தயிரியத்தை அவர்களுக்கு முன்னிலைப்படுத்துங்கள்.
ஆனால் பெற்றோர்களே உளவியலாளர்களின் கூற்றுப்படி, படுக்கச் செல்லும் நேரத்தில் குழந்தைகளிடம் கதைகள் சொல்லும் போது குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் நல்ல பிணைப்பு உருவாகும் என்கின்றனர். மேலும் இதனால் குழந்தைகளின் கற்பனைத் திறன் பெருகுவதுடன் அதிகமாக சிந்திப்பதற்கும் தூண்டுகிறது. அவர்கள் வளர்ந்தபின் அறிவாளியாகவும், நுண்நோக்கிப் பார்க்குத் திறன் உடையவர்களாகவும், சிறந்த பேச்சாளர்களாகவும் இருப்பார்கள்.
கதைகள் வழியே அவர்கள் கற்றல் திறன் அதிகரிப்பதுடன் வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் ஏற்படும். இந்தக் காலத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி என்பது குறித்து சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
பேசிப் பழகுங்கள்
ஒரு பெற்றோராக, அன்றைய தினம் முழுவதும் நடந்த விஷயங்களை குழந்தையிடம் முதலில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லுங்கள்.
கதை சொல்லும்போது அவர்கள் என்ன மாதிரியான கதைகளைக் கேட்க விரும்புகிறார்கள் என்று கேளுங்கள். பின்னர் அவர்கள் விரும்பும் கதைகளை அழகாக வர்ணித்து சொல்லுங்கள்.
இது உங்கள் குழந்தையை நன்கு புரிந்து கொள்ள உதவும். மேலும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு புதிய அனுபவத்தை தர கூடியதாக மாறும்.
கதாபாத்திரம்
முதலில் நீங்கள் சொல்ல போகும் கதையின் கதாபாத்திரமாக மாற வேண்டும். அப்போது உங்கள் குழந்தை உங்கள் கதைகளை ரசிக்க ஆரம்பிக்கும். வெறும் வாசிப்பு கதை சொல்லும் போது குழந்தைகளை போர் அடிக்க செய்யும்.
நீங்கள் இன்வோல்வ்மென்டோடு சொல்லும் போது உங்கள் குழந்தை கேட்பதிலும் கவனம் செலுத்துவதிலும் அதிக அக்கறை எடுக்கும். அவர்கள் உங்கள் கதைகளை ரசிக்கத் ஆரம்பிபார்கள். மேலும் அவர்களுக்குத் ஒரு தெளிவான கற்பனை வளரும்.
நண்பர்கள்
உங்கள் குழந்தையுடன் வலுவான உறவை ஏற்படுத்த வேண்டுமானால் அவர்களுடன் இணக்கமாக இருந்து உங்களையே குழந்தை போல மாற்றிக் கொள்ளுங்கள். அவர்கள் நம்பக் கூடிய ஒரு நண்பரைப் போல நடந்து கொள்ளுங்கள்.
இதனால் அவர்கள் தூங்குவதற்கு முன்பு, நீங்கள் சொல்லும் எந்தவொரு கதையையும் ஆழ்ந்து ரசித்து தூங்குவார்கள்.
விவாதம்
கதை முடிந்தவுடன் நீங்கள் சொன்ன கதையைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். அதிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டவை என்னவென்று கேளுங்கள். மேலும் கதையைப் பற்றி உங்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடுங்கள்.
அப்படி இருந்தால் மட்டுமே அக்கதைகளின் உண்மையான நோக்கத்தை அடைய முடியும். அப்போது தான் உங்கள் குழந்தைகள் நேர்மை, பணிவு, தயவு போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள உதவும்.
வாசிக்க கற்று கொடுங்கள்
கடைசியாக, ஏன் கதையை வாசிக்க வேண்டும் என்று வாசிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். கதைகளில் உள்ள எடுத்துக்காட்டுகள் மூலம், அறிவைப் பெறுவதும், வாசிக்கும் பழக்கத்தின் மூலம் தன்னைப் பயிற்றுவிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குக் எடுத்து கூறுங்கள்.
வாழ்க்கையில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தயிரியத்தை அவர்களுக்கு முன்னிலைப்படுத்துங்கள்.
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளுக்கு, கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
கோடைகாலம் வந்துவிட்டது. குழந்தைகள், கொரோனா பீதியால் வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். ஊரடங்கு காலம் முடிந்ததும், குழந்தைகள் சுதந்திரமாக தங்களை ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்ள அவர்களை ‘சம்மர் கேம்ப்’களில் சேர்த்துவிடலாம் என்று பெற்றோர்கள் நினைப்பதுண்டு. அந்த பயிற்சி முகாம்களில் குழந்தைகள் நீச்சல், தற்காப்பு, நடனம், ஓவியம், இசைக்கருவிகளை மீட்டுதல், கையெழுத்து பயிற்சி, ஸ்கேட்டிங் பயிற்சி போன்றவைகளை பெற்று தங்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்வார்கள் என்பது உண்மைதான்.
ஆனால் ‘சம்மர் கேம்ப்’ நடத்துபவர்களில் சிலர் அனுபவம் இல்லாதவர்களாக இருப்பார்கள். சரியான கட்டமைப்புகள் அவர்களிடம் இருக்காது. கோடை காலம் முடிவதற்குள் பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் முகாம் நடத்துகிறவர்களிடம், உங்கள் குழந்தைகளை சேர்த்துவிடக்கூடாது. கடந்த காலங்களில் சில முகாம்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் கூட நிகழ்ந்திருக்கின்றன. அதனால் குழந்தைகள் மனோரீதியாக பாதிக்கப்படும் சம்பவங்களும் ஏராளமாக நடைபெற்றுள்ளன. ஆகவே உங்கள் மகள், மகனை சம்மர் கேம்ப் களுக்கு அனுப்புவதாக இருந்தால், நீங்கள் நிறைய விஷயங்களை கவனித்து தரமான முகாமை தேர்ந்தெடுக்கவேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளுக்கு, இது தொடர்பாக நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
உங்கள் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுங்கள். முக்கியமாக உடல் உறுப்புகளை பற்றி எடுத்துக் கூறுங்கள். அதோடு ‘உடல் உறுப்புகளில் எவை எல்லாம் உள்ளாடைகளால் மறைக்கப்படுகிறதோ, அவை உனது தனிப்பட்ட உறுப்புகள். அவைகளை உன் உடல் ஆரோக்கிய காரணங்களை தவிர்த்து, வேறு எந்த காரணங்களுக்காகவும் யாரும் தொடுவதோ, பார்ப்பதோ, அவைகளை பற்றி பேசுவதோ சரியானதல்ல’ என்பதை புரிய வையுங்கள். தவறான தொடுதல் எது?, சரியான தொடுதல் எது? என்பதையும் குழந்தை களுக்கு சொல்லிக்கொடுங்கள்.
நீங்கள் உங்கள் குழந்தையை சேர்க்க விரும்பும் முகாம் பற்றி, முழுமையாக விசாரியுங்கள். அதை நடத்துபவர்களின் பின்னணி, அனுபவம், இடம், சூழல், பயிற்சியாளர்கள் பற்றி எல்லாம் விசாரித்து, திருப்தியடைந்தால் மட்டும் அங்கு கொண்டுபோய் சேருங்கள். தினமும் பயிற்சி முடிந்து வீடு திரும்பியதும் அங்கு என்ன நடந்தது என்று உங்கள் பிள்ளைகளிடம் கேளுங்கள். பயிற்சிக்கு தொடர்பில்லாத நிலையில் தொட்டால், தங்களிடம் சொல்லும்படி கூறுங்கள். சந்தேகத்திற்கு இடமான எல்லா விஷயங்களையும் குழந்தைகளிடம் விளக்கமாக கேளுங்கள்.
பொதுவாக குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தர விரும்புகிறவர்கள், முதலில் அவர் களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்வசப்படுத்தும் விதத்திலோ நடந்துகொள்வார்கள். டான்ஸ் பயிற்சி கொடுக்கும் ஒருவர், பயிற்சி பெறும் சிறுமியிடம் வேண்டுமென்றே பாலியல் ரீதியாக தொடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த சிறுமிக்கு அவரது தொடுதல், பயிற்சி தொடர்புடையதா? அல்லது தவறான எண்ணத்திலானதா? என்று வகைப்படுத்தி பார்க்க முடியாத அளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாமல் சிறுமிகள் தடுமாறுவார்கள்.
சிறுவர்களுக்கோ, சிறுமியர்களுக்கோ பாலியல் ரீதியான அணுகுமுறையை அடையாளம் காணும் பக்குவம் இல்லாததால், அவர்களால் உடனடியாக எந்த முடிவுக்கும் வரமுடிவதில்லை. அப்படியே முடிவுக்கு வந்து பெற்றோரிடம் சொன்னாலும், அவா்கள் சொல்வதை எந்த பெற்றோரும் உடனடியாக நம்புவதும் இல்லை. முதலில் பெற்றோர், தங்கள் குழந்தைகளை நம்பவேண்டும். ‘நீ சொன்னால் சரியாக இருக்கும். நான் உன்னை நம்புகிறேன்’ என்று கூறி, முழு விவஇஇரத்த ையும் கேட்க வேண்டும். பயிற்சியாளர் மிக நல்லவர் என கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.
பயிற்சிக்கு செல்லும் இடங்களில் உங்கள் குழந்தைகள் தனிமையில் இருக்க அனுமதிக்க வேண்டாம். ஒருசில குழந்தைகள் மற்ற குழந்தைகளை சார்ந்திருக்காமல், தனியாக இருப்பார்கள். பாலியல் தொந்தரவு கொடுக்க விரும்புகிறவர்கள், அந்த மாதிரி தனிமையை விரும்பும் குழந்தைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வார்கள். அந்த குழந்தைகளுக்கு பயிற்சியில் முக்கியத்துவம் கொடுப்பது போலவும், அவைகள் மீது தனிப்பட்ட அக்கறை தனக்கு இருப்பது போல் நடந்துகொள்வார்கள்.
மற்றவர்கள் முன்னால் தனக்கு மரியாதை அதிகம் கிடைக்கும்போது, அந்த குழந்தை மகிழ்ந்துபோய் அந்த பயிற்சியாளரிடம் அன்பு செலுத்தும். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கிய பின்பு, அவர் தனது கைவரிசையை காட்டத் தொடங்குவார். அது தவறானது என்பதை குழந்தை உணர்ந்து வெளிப்படுத்த முன்வரும்போது, ‘இது ஒருவித விசேஷ பயிற்சி. நீ இந்த பயிற்சியை பற்றி மற்ற தோழிகளிடம் சொல்லக்கூடாது. சொன்னால் உனக்கு இந்த ஸ்பெஷல் பயிற்சி தரமாட்டேன்’ என்று கூறி குழந்தையை மிரட்டுவார்.
சிலர் குறிப்பிட்ட குழந்தைகளை அழைத்து செல்போனில் இருக்கும் படங்களை காட்டுவார்கள். முதலில் சாதாரண படங்களை காட்டும் அவர்கள், பின்பு பாலியல் தொடர்புடைய படங்களைக்காட்டி, ‘எதுவும் தவறில்லை’ என்பது போன்ற நிலையை உருவாக்கி, குழந்தைகளை தன்வசப்படுத்துகிறார்கள். இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு 2012-ம் ஆண்டில், குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றியுள்ளது. அதில் ‘ஒரு நிறு வனத்தில் குழந்தைகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளானால், அதற்கு நிர்வாகம்தான் பொறுப்பு’ என்று கூறப்பட்டுள்ளது. இது பள்ளிகள், கோடைகால பயிற்சி முகாம்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
இவைகளை எல்லாம் நன்றாக புரிந்துகொண்டு, உங்கள் குழந்தைகளை கோடைகால முகாம்களுக்கு தயாராக்குங்கள்.
ஆனால் ‘சம்மர் கேம்ப்’ நடத்துபவர்களில் சிலர் அனுபவம் இல்லாதவர்களாக இருப்பார்கள். சரியான கட்டமைப்புகள் அவர்களிடம் இருக்காது. கோடை காலம் முடிவதற்குள் பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் முகாம் நடத்துகிறவர்களிடம், உங்கள் குழந்தைகளை சேர்த்துவிடக்கூடாது. கடந்த காலங்களில் சில முகாம்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் கூட நிகழ்ந்திருக்கின்றன. அதனால் குழந்தைகள் மனோரீதியாக பாதிக்கப்படும் சம்பவங்களும் ஏராளமாக நடைபெற்றுள்ளன. ஆகவே உங்கள் மகள், மகனை சம்மர் கேம்ப் களுக்கு அனுப்புவதாக இருந்தால், நீங்கள் நிறைய விஷயங்களை கவனித்து தரமான முகாமை தேர்ந்தெடுக்கவேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளுக்கு, இது தொடர்பாக நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
உங்கள் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுங்கள். முக்கியமாக உடல் உறுப்புகளை பற்றி எடுத்துக் கூறுங்கள். அதோடு ‘உடல் உறுப்புகளில் எவை எல்லாம் உள்ளாடைகளால் மறைக்கப்படுகிறதோ, அவை உனது தனிப்பட்ட உறுப்புகள். அவைகளை உன் உடல் ஆரோக்கிய காரணங்களை தவிர்த்து, வேறு எந்த காரணங்களுக்காகவும் யாரும் தொடுவதோ, பார்ப்பதோ, அவைகளை பற்றி பேசுவதோ சரியானதல்ல’ என்பதை புரிய வையுங்கள். தவறான தொடுதல் எது?, சரியான தொடுதல் எது? என்பதையும் குழந்தை களுக்கு சொல்லிக்கொடுங்கள்.
நீங்கள் உங்கள் குழந்தையை சேர்க்க விரும்பும் முகாம் பற்றி, முழுமையாக விசாரியுங்கள். அதை நடத்துபவர்களின் பின்னணி, அனுபவம், இடம், சூழல், பயிற்சியாளர்கள் பற்றி எல்லாம் விசாரித்து, திருப்தியடைந்தால் மட்டும் அங்கு கொண்டுபோய் சேருங்கள். தினமும் பயிற்சி முடிந்து வீடு திரும்பியதும் அங்கு என்ன நடந்தது என்று உங்கள் பிள்ளைகளிடம் கேளுங்கள். பயிற்சிக்கு தொடர்பில்லாத நிலையில் தொட்டால், தங்களிடம் சொல்லும்படி கூறுங்கள். சந்தேகத்திற்கு இடமான எல்லா விஷயங்களையும் குழந்தைகளிடம் விளக்கமாக கேளுங்கள்.
பொதுவாக குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தர விரும்புகிறவர்கள், முதலில் அவர் களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்வசப்படுத்தும் விதத்திலோ நடந்துகொள்வார்கள். டான்ஸ் பயிற்சி கொடுக்கும் ஒருவர், பயிற்சி பெறும் சிறுமியிடம் வேண்டுமென்றே பாலியல் ரீதியாக தொடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த சிறுமிக்கு அவரது தொடுதல், பயிற்சி தொடர்புடையதா? அல்லது தவறான எண்ணத்திலானதா? என்று வகைப்படுத்தி பார்க்க முடியாத அளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாமல் சிறுமிகள் தடுமாறுவார்கள்.
சிறுவர்களுக்கோ, சிறுமியர்களுக்கோ பாலியல் ரீதியான அணுகுமுறையை அடையாளம் காணும் பக்குவம் இல்லாததால், அவர்களால் உடனடியாக எந்த முடிவுக்கும் வரமுடிவதில்லை. அப்படியே முடிவுக்கு வந்து பெற்றோரிடம் சொன்னாலும், அவா்கள் சொல்வதை எந்த பெற்றோரும் உடனடியாக நம்புவதும் இல்லை. முதலில் பெற்றோர், தங்கள் குழந்தைகளை நம்பவேண்டும். ‘நீ சொன்னால் சரியாக இருக்கும். நான் உன்னை நம்புகிறேன்’ என்று கூறி, முழு விவஇஇரத்த ையும் கேட்க வேண்டும். பயிற்சியாளர் மிக நல்லவர் என கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.
பயிற்சிக்கு செல்லும் இடங்களில் உங்கள் குழந்தைகள் தனிமையில் இருக்க அனுமதிக்க வேண்டாம். ஒருசில குழந்தைகள் மற்ற குழந்தைகளை சார்ந்திருக்காமல், தனியாக இருப்பார்கள். பாலியல் தொந்தரவு கொடுக்க விரும்புகிறவர்கள், அந்த மாதிரி தனிமையை விரும்பும் குழந்தைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வார்கள். அந்த குழந்தைகளுக்கு பயிற்சியில் முக்கியத்துவம் கொடுப்பது போலவும், அவைகள் மீது தனிப்பட்ட அக்கறை தனக்கு இருப்பது போல் நடந்துகொள்வார்கள்.
மற்றவர்கள் முன்னால் தனக்கு மரியாதை அதிகம் கிடைக்கும்போது, அந்த குழந்தை மகிழ்ந்துபோய் அந்த பயிற்சியாளரிடம் அன்பு செலுத்தும். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கிய பின்பு, அவர் தனது கைவரிசையை காட்டத் தொடங்குவார். அது தவறானது என்பதை குழந்தை உணர்ந்து வெளிப்படுத்த முன்வரும்போது, ‘இது ஒருவித விசேஷ பயிற்சி. நீ இந்த பயிற்சியை பற்றி மற்ற தோழிகளிடம் சொல்லக்கூடாது. சொன்னால் உனக்கு இந்த ஸ்பெஷல் பயிற்சி தரமாட்டேன்’ என்று கூறி குழந்தையை மிரட்டுவார்.
சிலர் குறிப்பிட்ட குழந்தைகளை அழைத்து செல்போனில் இருக்கும் படங்களை காட்டுவார்கள். முதலில் சாதாரண படங்களை காட்டும் அவர்கள், பின்பு பாலியல் தொடர்புடைய படங்களைக்காட்டி, ‘எதுவும் தவறில்லை’ என்பது போன்ற நிலையை உருவாக்கி, குழந்தைகளை தன்வசப்படுத்துகிறார்கள். இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு 2012-ம் ஆண்டில், குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றியுள்ளது. அதில் ‘ஒரு நிறு வனத்தில் குழந்தைகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளானால், அதற்கு நிர்வாகம்தான் பொறுப்பு’ என்று கூறப்பட்டுள்ளது. இது பள்ளிகள், கோடைகால பயிற்சி முகாம்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
இவைகளை எல்லாம் நன்றாக புரிந்துகொண்டு, உங்கள் குழந்தைகளை கோடைகால முகாம்களுக்கு தயாராக்குங்கள்.
இன்றைய காலகட்டத்தில் நிறைய குழந்தைகளுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உங்கள் குழந்தைகளின் கண் பார்வை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் நிறைய குழந்தைகளுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. சிறு வயதிலேயே அவர்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். இதனால் அவர்களால் சரியாகப் படிக்க முடியாமலும், வகுப்பில் கவனம் செலுத்த முடியாமலும் தவிக்கின்றனர். மேலும் அவர்களால் மற்ற குழந்தைகளைப் போல விளையாட முடியாமலும் போகிறது. கண்ணாடி உட்படப் பல மருத்துவ தீர்வுகள் கண் பார்வை பிரச்சனைக்கு இருந்தாலும் வரும் முன் காப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும். உங்கள் குழந்தைகளின் கண் பார்வை அதிகரிக்க சாப்பிட வேண்டிய 9 உணவுகள்!
* முட்டையில் இருக்கும் ஜின்ங்க் மற்றும் லுடீன் போன்ற சத்துக்கள் கண் குறைபாடு ஏற்படாமல் பெரிதளவு காக்கிறது. முட்டைக் கருவில் உள்ள 'ஸிக்ஸாந்தின்' புற ஊதா கதிர் வீச்சின் பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. இதனால் உங்கள் கண் பார்வை ஆரோக்கியமாகிறது.
* ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு மிகவும் தேவையானது. இது ரெடினாவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவும். கூடுதலாகக் கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கிறது. பல வகையான கடல் மீன்களில் இந்த சத்து உட்படப் பல உயிர்ச்சத்துகள் நிறைந்து உள்ளன. குறிப்பாக சால்மன், டுனா ,மேக்கிரல், ட்ராவுட் போன்ற மீன் ரகங்களைக் கூறலாம்.
* பச்சைக் கீரை வகைகளில் அதிகம் வைட்டமின் சி மற்றும் இ சத்து நிறைந்துள்ளன. மேலும் இதில் கரோட்டினாய்டுகள் மற்றும் லியூடீன் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை, பசலை, புதினா, பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இதனால் இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் நீண்ட கால கண் நோய்களை வரவிடாமல் தடுக்கவும் குணப்படுத்தவும் முடிகிறது.
* இதில் பீடாகரோடின் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. இதை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்வதாலும் கண் பார்வை மேம்படும்.
* மாம்பழம், ஆரஞ்சு, காரட், எலுமிச்சை போன்ற பழங்களில் அதிக ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது. இதனால் இரவில் பார்வை பிரகாசமாகத் தெரியும். மேலும் இந்தப் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் கண்களோடு இணைந்திருக்கும் மற்ற தசைகளும் சத்து பெறும். தினம் பச்சையாக ஒரு காரட்டை உண்பதால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.
* சூரிய காந்தி விதையில் நிரம்பியுள்ள ஊட்டச்சத்து இ மற்றும் ஜிங்க் கண் கோளாறு வராமல் தவிர்க்க உதவுகின்றன. இவை பல்வேறு கடைகளில் விற்பனையாகி வருகின்றன. வாங்கி பலன் அடையலாம்.
* காலிஃளாரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கண் பார்வைக்கு மிகவும் உகந்தது. ஆக இதை உணவில் அடிக்கடி சேர்ப்பது நன்மைப் பயக்கும். பொதுவாகவே குழந்தைகள் காலிஃளாரை விரும்பி உண்பார்கள்.
* நாவல் பழம் மற்றும் திரட்சைப்பழங்களில் ஆந்தோசையனின் அதிகம் உள்ளதால் இரவு நேரத்திலும், இருட்டாக இருக்கும் இடங்களிலும் உங்கள் கண்கள் நன்றாகப் பார்வைப் பெற உதவும். இது கண் சோர்வைக் குறைக்கும். ரெட்டினா சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இந்தப் பழங்களில் குரோசிடின், ரெஸ்வெராட்ரால், செலினியம் மற்றும் ஜின்க் அதிக அளவில் இருப்பதால் உங்கள் கண்கள் நல்ல ஆரோக்கியம் பெரும்.
* கண் பார்வைக் கோளாறுகளைக் குணப்படுத்த முட்டைகோஸை அதிகம் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். குறிப்பாகச் சிவப்பு முட்டைகோஸ் கண் பார்வை வளத்திற்குப் பெரிதும் துணைபுரிகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ அதிகம் உள்ளதால் உங்கள் கண் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.
* முட்டையில் இருக்கும் ஜின்ங்க் மற்றும் லுடீன் போன்ற சத்துக்கள் கண் குறைபாடு ஏற்படாமல் பெரிதளவு காக்கிறது. முட்டைக் கருவில் உள்ள 'ஸிக்ஸாந்தின்' புற ஊதா கதிர் வீச்சின் பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. இதனால் உங்கள் கண் பார்வை ஆரோக்கியமாகிறது.
* ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு மிகவும் தேவையானது. இது ரெடினாவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவும். கூடுதலாகக் கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கிறது. பல வகையான கடல் மீன்களில் இந்த சத்து உட்படப் பல உயிர்ச்சத்துகள் நிறைந்து உள்ளன. குறிப்பாக சால்மன், டுனா ,மேக்கிரல், ட்ராவுட் போன்ற மீன் ரகங்களைக் கூறலாம்.
* பச்சைக் கீரை வகைகளில் அதிகம் வைட்டமின் சி மற்றும் இ சத்து நிறைந்துள்ளன. மேலும் இதில் கரோட்டினாய்டுகள் மற்றும் லியூடீன் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை, பசலை, புதினா, பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இதனால் இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் நீண்ட கால கண் நோய்களை வரவிடாமல் தடுக்கவும் குணப்படுத்தவும் முடிகிறது.
* இதில் பீடாகரோடின் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. இதை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்வதாலும் கண் பார்வை மேம்படும்.
* மாம்பழம், ஆரஞ்சு, காரட், எலுமிச்சை போன்ற பழங்களில் அதிக ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது. இதனால் இரவில் பார்வை பிரகாசமாகத் தெரியும். மேலும் இந்தப் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் கண்களோடு இணைந்திருக்கும் மற்ற தசைகளும் சத்து பெறும். தினம் பச்சையாக ஒரு காரட்டை உண்பதால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.
* சூரிய காந்தி விதையில் நிரம்பியுள்ள ஊட்டச்சத்து இ மற்றும் ஜிங்க் கண் கோளாறு வராமல் தவிர்க்க உதவுகின்றன. இவை பல்வேறு கடைகளில் விற்பனையாகி வருகின்றன. வாங்கி பலன் அடையலாம்.
* காலிஃளாரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கண் பார்வைக்கு மிகவும் உகந்தது. ஆக இதை உணவில் அடிக்கடி சேர்ப்பது நன்மைப் பயக்கும். பொதுவாகவே குழந்தைகள் காலிஃளாரை விரும்பி உண்பார்கள்.
* நாவல் பழம் மற்றும் திரட்சைப்பழங்களில் ஆந்தோசையனின் அதிகம் உள்ளதால் இரவு நேரத்திலும், இருட்டாக இருக்கும் இடங்களிலும் உங்கள் கண்கள் நன்றாகப் பார்வைப் பெற உதவும். இது கண் சோர்வைக் குறைக்கும். ரெட்டினா சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இந்தப் பழங்களில் குரோசிடின், ரெஸ்வெராட்ரால், செலினியம் மற்றும் ஜின்க் அதிக அளவில் இருப்பதால் உங்கள் கண்கள் நல்ல ஆரோக்கியம் பெரும்.
* கண் பார்வைக் கோளாறுகளைக் குணப்படுத்த முட்டைகோஸை அதிகம் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். குறிப்பாகச் சிவப்பு முட்டைகோஸ் கண் பார்வை வளத்திற்குப் பெரிதும் துணைபுரிகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ அதிகம் உள்ளதால் உங்கள் கண் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.
உலகில் எத்தனை அன்பான உறவுகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு மிக மிக அவசியமான ஒன்று.
உலகில் எத்தனை அன்பான உறவுகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு மிக மிக அவசியமான ஒன்று. எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர்.
அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது. படிப்பில் முழுத்திறனையும் வெளிப்படுத்துவார்கள்.
எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும். எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமையுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக்கிறது.
தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும். அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும் போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது.
தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது. அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை.
அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது. படிப்பில் முழுத்திறனையும் வெளிப்படுத்துவார்கள்.
எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும். எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமையுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக்கிறது.
தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும். அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும் போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது.
தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது. அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை.
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பால் பருகும் அளவு வேறுபடும். எந்தெந்த வயது குழந்தைகள் எவ்வளவு பால் பருக வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் அவர்கள் தினமும் பால் பருகுவது அவசியம். இது சிறந்த புரத மூலமாகவும், இறைச்சிக்கு சைவ மாற்றாகவும் விளங்குகிறது. உடலின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பால் பருகும் அளவு வேறுபடும். எந்தெந்த வயது குழந்தைகள் எவ்வளவு பால் பருக வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
6 மாதங்கள் வரை
பிறந்த குழந்தைக்கு குறைந்தது 6 மாதங் களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்த சமயத்தில் குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுவதும், அதனை தாய்ப்பால் நிவர்த்தி செய்வதும் அதற்கு முக்கிய காரணம். சீரான இடைவெளியில் குழந்தையின் பசியை போக்க உணவளிப்பதும் இன்றியமையாதது. தினமும் 600 மி.லிட்டர் அளவாவது பால் கொடுப்பதும் மிகவும் முக்கிய மானது. அப்போதுதான் குழந்தைக்கு சரியான அளவு ஊட்டச்சத்து கிடைக்கும்.
6-12 மாதங்கள்
6 முதல் 12 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாத பட்சத்தில் புட்டிப்பால் கொடுக்கலாம். அது ஒத்துக்கொள்ளாவிட்டால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருபோதும் பாலை தவிர்க்கக்கூடாது. தினமும் சுமார் 600 முதல் 700 மி.லி. பால் கொடுக்க வேண்டும்.
1-2 வயது
இது குழந்தைகள் சாப்பிட தொடங்கும் வயது. சில குழந்தைகள் பால் பருகுவதற்கு தயங்குவார்கள். அவர்களுக்கு தாய்ப்பால் தவிர வேறு பால் ஒத்துக்கொள்ளாது. வலுக்கட்டாயமாக கொடுத்தால் வாந்தி எடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு புட்டிப்பால் கொடுப்பதை தவிர்க்கவேண்டும். சத்தான பால் பவுடர் மூலம் பால் தயாரித்து கொடுக்கலாம். இந்த வயதில் தினமும் சுமார் 800-900 மி.லி. பால் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
3-8 வயது
இந்த வயது குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. குழந்தையின் எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற, இந்த வயதில் தினமும் குறைந்தது இரண்டரை கப் பால் பருகுவது அவசியம். அதனுடன் பால் சார்ந்த பொருட்களையும் கொடுத்து பழக்கலாம்.
9 முதல் 15 வயது
குழந்தைகள் 9 வயதில், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுப்பட தொடங்கிவிடுவார்கள். வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் பால் பருகுவது அவசியமானது. 9 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தினமும் 3 கப்புக்கும் அதிகமாக பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் டீன் ஏஜ் வயதுக்குள் அடியெடுத்து வைப்பதால் தினமும் சுமார் 3000 கலோரிகள் தேவை. அதனால் பால் அதிகம் பருகுவது நல்லது.
15 வயதுக்கு மேற்பட்டவர்கள்
இந்த வயதில் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்வது முக்கியமானது. அதுபோல் தினமும் பால் பருகுவதும் அவசியமானது. தினமும் 2 டம்ளர் பால் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண் டும். அதன் மூலம் போது மான ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.
6 மாதங்கள் வரை
பிறந்த குழந்தைக்கு குறைந்தது 6 மாதங் களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்த சமயத்தில் குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுவதும், அதனை தாய்ப்பால் நிவர்த்தி செய்வதும் அதற்கு முக்கிய காரணம். சீரான இடைவெளியில் குழந்தையின் பசியை போக்க உணவளிப்பதும் இன்றியமையாதது. தினமும் 600 மி.லிட்டர் அளவாவது பால் கொடுப்பதும் மிகவும் முக்கிய மானது. அப்போதுதான் குழந்தைக்கு சரியான அளவு ஊட்டச்சத்து கிடைக்கும்.
6-12 மாதங்கள்
6 முதல் 12 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாத பட்சத்தில் புட்டிப்பால் கொடுக்கலாம். அது ஒத்துக்கொள்ளாவிட்டால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருபோதும் பாலை தவிர்க்கக்கூடாது. தினமும் சுமார் 600 முதல் 700 மி.லி. பால் கொடுக்க வேண்டும்.
1-2 வயது
இது குழந்தைகள் சாப்பிட தொடங்கும் வயது. சில குழந்தைகள் பால் பருகுவதற்கு தயங்குவார்கள். அவர்களுக்கு தாய்ப்பால் தவிர வேறு பால் ஒத்துக்கொள்ளாது. வலுக்கட்டாயமாக கொடுத்தால் வாந்தி எடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு புட்டிப்பால் கொடுப்பதை தவிர்க்கவேண்டும். சத்தான பால் பவுடர் மூலம் பால் தயாரித்து கொடுக்கலாம். இந்த வயதில் தினமும் சுமார் 800-900 மி.லி. பால் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
3-8 வயது
இந்த வயது குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. குழந்தையின் எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற, இந்த வயதில் தினமும் குறைந்தது இரண்டரை கப் பால் பருகுவது அவசியம். அதனுடன் பால் சார்ந்த பொருட்களையும் கொடுத்து பழக்கலாம்.
9 முதல் 15 வயது
குழந்தைகள் 9 வயதில், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுப்பட தொடங்கிவிடுவார்கள். வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் பால் பருகுவது அவசியமானது. 9 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தினமும் 3 கப்புக்கும் அதிகமாக பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் டீன் ஏஜ் வயதுக்குள் அடியெடுத்து வைப்பதால் தினமும் சுமார் 3000 கலோரிகள் தேவை. அதனால் பால் அதிகம் பருகுவது நல்லது.
15 வயதுக்கு மேற்பட்டவர்கள்
இந்த வயதில் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்வது முக்கியமானது. அதுபோல் தினமும் பால் பருகுவதும் அவசியமானது. தினமும் 2 டம்ளர் பால் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண் டும். அதன் மூலம் போது மான ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.
சிலருக்கு குழந்தை பருவத்திலேயே வெள்ளை முடி துளிர்விட தொடங்கி விடுகிறது. இதற்கான காரணத்தையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
வயது அதிகரிக்க தொடங்கும்போது தலைமுடியில் நரை முடி எட்டிப்பார்ப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் சிலருக்கு குழந்தை பருவத்திலேயே வெள்ளை முடி துளிர்விட தொடங்கி விடுகிறது. முடி கருமை நிறத்தில் காட்சி அளிப்பதற்கு மெலனின் எனும் நிறமிதான் முக்கிய பங்கு வகிக்கிறது.
வயது அதிகரிக்கும்போது அந்த நிறமியின் சுரப்பு தடைபடும். அல்லது அதன் வீரியம் குறைய தொடங்கும். அதன் காரணமாக முடி வெள்ளை நிறத்திற்கு மாறலாம். வைட்டமின்- பி12 குறைபாடும் முடியின் வெள்ளை நிறத்திற்கு மற்றொரு காரணமாகும்.
கால்சியம், தைராய்டு போன்ற குறைபாடுகளும் முடியின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும். குழந்தை பருவத்திலேயே வெள்ளை முடி தென்பட தொடங்கினால் அதற்கு மரபணுக்கள் முக்கிய காரணமாக அமையலாம். பெற்றோருக்கோ அல்லது அவர்களின் தலைமுறையினருக்கோ இந்த பிரச்சினை இருந்தால் அது மரபு ரீதியாக பின் தொடர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. மேலும் புற ஊதாக்கதிர்வீச்சுகள் அதிகமாக உடலில் படுவது, மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவையும் வெள்ளை முடி வளர்வதற்கு வழிவகுத்துவிடும்.
கறிவேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது. மேலும் வைட்டமின்-பி12, கால்சியம் அதிகம் கொண்ட உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
ஷாம்பு, கண்டிஷனர்கள் கூந்தலுக்கு உகந்ததா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மருதாணி, நெல்லிக்காய், செம்பருத்தி போன்ற மூலிகை பொடி வகைகளை கூந்தலுக்கு பயன்படுத்திவரலாம்.
வயது அதிகரிக்கும்போது அந்த நிறமியின் சுரப்பு தடைபடும். அல்லது அதன் வீரியம் குறைய தொடங்கும். அதன் காரணமாக முடி வெள்ளை நிறத்திற்கு மாறலாம். வைட்டமின்- பி12 குறைபாடும் முடியின் வெள்ளை நிறத்திற்கு மற்றொரு காரணமாகும்.
கால்சியம், தைராய்டு போன்ற குறைபாடுகளும் முடியின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும். குழந்தை பருவத்திலேயே வெள்ளை முடி தென்பட தொடங்கினால் அதற்கு மரபணுக்கள் முக்கிய காரணமாக அமையலாம். பெற்றோருக்கோ அல்லது அவர்களின் தலைமுறையினருக்கோ இந்த பிரச்சினை இருந்தால் அது மரபு ரீதியாக பின் தொடர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. மேலும் புற ஊதாக்கதிர்வீச்சுகள் அதிகமாக உடலில் படுவது, மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவையும் வெள்ளை முடி வளர்வதற்கு வழிவகுத்துவிடும்.
கறிவேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது. மேலும் வைட்டமின்-பி12, கால்சியம் அதிகம் கொண்ட உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
ஷாம்பு, கண்டிஷனர்கள் கூந்தலுக்கு உகந்ததா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மருதாணி, நெல்லிக்காய், செம்பருத்தி போன்ற மூலிகை பொடி வகைகளை கூந்தலுக்கு பயன்படுத்திவரலாம்.
உங்கள் மகன் செய்யக்கூடாத தவறை செய்திருந்தால் கூட இது போன்ற சொற்களை தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். இது அவர்களுக்கு ஒரு கொடுங்கனவு போல் தூங்க விடாது.
பெண் குழந்தைகள் தான் சென்சிட்டிவ். அவர்களிடம் சட்டென்று எதையாவது சொல்லி விட்டால் மனம் உடைந்து அழுது விடுவார்கள்' என்கிற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. ஆனால் ஆண் குழந்தைகளும் சென்சிடிவ் தான். அவர்கள் அழுது வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்களே தவிர, உள்ளுக்குள்ளே வேதனைப்படுவார்கள்.
சிறு குழந்தையில் ஆரம்பித்து 10 வயது ஆகிவிட்ட மகன் சேட்டையில் ஈடுபட்டால், பெற்றோர் சொல்லும் வார்த்தை இது. இந்த வயதில் ''பி ய மேன்” என்பதற்கு இதில் என்ன இருக்கிறது? இப்படி சொல்லியே வளர்த்தால் பிள்ளைகள் தங்களது குழந்தை பருவத்தில் பாதியை இழந்து வலுக்கட்டாயமாக மனதளவில் வளர்கிறார்கள்.
நீ ஏன் வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற? உன் ஃப்ரெண்ட்ஸ பாரு.. சூப்பரா விளையாடுறாங்க' என்று நச்சரிக்காதீர்கள். அது அவர்களின் விருப்பம். நீங்கள் ஓயாமல் சொல்லும் போது ''ஓ பையன்னா கண்டிப்பா விளையாடனும் போல, அப்போ என்கிட்ட ஏதோ குறை இருக்கோ" என்று தனக்குள் அவர்கள் குழம்பிப்போக வைக்காதீர்கள்.
பொதுவாக பெண்கள் ஆண்களை விட மிக விரைவில் மனதளவில் பக்குவம் அடைந்து விடுவார்கள். இதை உணராமல் பெற்றோர்கள் பேசுவது, உடன் பிறந்தவர் களுடன் நாமே போட்டிக்கான சூழலை அவர்களிடம் விதைப்பது போலாகும். உங்கள் மகன் செய்யக்கூடாத தவறை செய்திருந்தால் கூட இது போன்ற சொற்களை தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். இது அவர்களுக்கு ஒரு கொடுங்கனவு போல் தூங்க விடாது.
எங்கே தனது பெற்றோரின் அன்பை, பாசத்தை இழந்து விடுவோமோ என்ற குற்ற வுணர்ச்சியில் தவிப்பார்கள். நீங்கள் உடன் இருந்தாலும் தனிமை அவர்களை வாட்டும். அஞ்சு வயசானாலும் சரி, அம்பது வயசானாலும் சரி, அவனுக்கு அம்மா என்பது அம்மாதான். அக்கா என்பது அக்காதான். பத்து வயசானாலே போதும், 'அம்மாகூட படுக்காத, அக்காகூட படுக்காத.
ஏண்டா... எப்ப பார்த்தாலும் அம்மா முந்தானையே புடுச்சிகிட்டு சுத்துற. நீ பொண்ணா பொறந்திருக்க வேண்டியவன்' என்று சொற்களை தயவு செய்து பிரயோகிக்காதீரக்ள். மொத்ததில் உங்கள் பிள்ளைகள் மனதில் ஆறாத வடுவை, ரணத்தை, குற்ற உணர்வை எப்போதும் ஏற்படுத்தி விடாதீர்கள். அதை எதைக் கொண்டு அழிக்க முடியாது,
சிறு குழந்தையில் ஆரம்பித்து 10 வயது ஆகிவிட்ட மகன் சேட்டையில் ஈடுபட்டால், பெற்றோர் சொல்லும் வார்த்தை இது. இந்த வயதில் ''பி ய மேன்” என்பதற்கு இதில் என்ன இருக்கிறது? இப்படி சொல்லியே வளர்த்தால் பிள்ளைகள் தங்களது குழந்தை பருவத்தில் பாதியை இழந்து வலுக்கட்டாயமாக மனதளவில் வளர்கிறார்கள்.
நீ ஏன் வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற? உன் ஃப்ரெண்ட்ஸ பாரு.. சூப்பரா விளையாடுறாங்க' என்று நச்சரிக்காதீர்கள். அது அவர்களின் விருப்பம். நீங்கள் ஓயாமல் சொல்லும் போது ''ஓ பையன்னா கண்டிப்பா விளையாடனும் போல, அப்போ என்கிட்ட ஏதோ குறை இருக்கோ" என்று தனக்குள் அவர்கள் குழம்பிப்போக வைக்காதீர்கள்.
பொதுவாக பெண்கள் ஆண்களை விட மிக விரைவில் மனதளவில் பக்குவம் அடைந்து விடுவார்கள். இதை உணராமல் பெற்றோர்கள் பேசுவது, உடன் பிறந்தவர் களுடன் நாமே போட்டிக்கான சூழலை அவர்களிடம் விதைப்பது போலாகும். உங்கள் மகன் செய்யக்கூடாத தவறை செய்திருந்தால் கூட இது போன்ற சொற்களை தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். இது அவர்களுக்கு ஒரு கொடுங்கனவு போல் தூங்க விடாது.
எங்கே தனது பெற்றோரின் அன்பை, பாசத்தை இழந்து விடுவோமோ என்ற குற்ற வுணர்ச்சியில் தவிப்பார்கள். நீங்கள் உடன் இருந்தாலும் தனிமை அவர்களை வாட்டும். அஞ்சு வயசானாலும் சரி, அம்பது வயசானாலும் சரி, அவனுக்கு அம்மா என்பது அம்மாதான். அக்கா என்பது அக்காதான். பத்து வயசானாலே போதும், 'அம்மாகூட படுக்காத, அக்காகூட படுக்காத.
ஏண்டா... எப்ப பார்த்தாலும் அம்மா முந்தானையே புடுச்சிகிட்டு சுத்துற. நீ பொண்ணா பொறந்திருக்க வேண்டியவன்' என்று சொற்களை தயவு செய்து பிரயோகிக்காதீரக்ள். மொத்ததில் உங்கள் பிள்ளைகள் மனதில் ஆறாத வடுவை, ரணத்தை, குற்ற உணர்வை எப்போதும் ஏற்படுத்தி விடாதீர்கள். அதை எதைக் கொண்டு அழிக்க முடியாது,
பல்வேறு வகையான ஊறுகாய்களை பார்த்து இருப்பீங்க. இன்று பச்சை மிளகு வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகு - 200 கிராம்,
எலுமிச்சைப்பழம் - 6,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சை மிளகு கொத்து கொத்தாக இருக்கும். இதில் முற்றிய மிளகு உள்ளதாகப் பார்த்து வாங்கவும்.
இந்த மிளகை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, எலுமிச்சைச்சாறு, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
நன்றாக ஊறியதும் பச்சை நிறம் மாறி, மஞ்சள் நிறமாக ஆகும். அப்போது ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் கெட்டுப் போகாமல் இருக்கும். நீண்ட நாள்கள் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.
பச்சை மிளகு - 200 கிராம்,
எலுமிச்சைப்பழம் - 6,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சை மிளகு கொத்து கொத்தாக இருக்கும். இதில் முற்றிய மிளகு உள்ளதாகப் பார்த்து வாங்கவும்.
இந்த மிளகை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, எலுமிச்சைச்சாறு, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
நன்றாக ஊறியதும் பச்சை நிறம் மாறி, மஞ்சள் நிறமாக ஆகும். அப்போது ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் கெட்டுப் போகாமல் இருக்கும். நீண்ட நாள்கள் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.
சிறப்பு: மிளகு, உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!
பெற்றோர்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனால் குழந்தைகளோடு பழகுகிறவர்கள் அனைவரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கக்கூடாது என்றாலும், மிகுந்த கண்காணிப்பு தேவைப்படுகிறது. பெண்குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் பெருமளவு பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.
பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!
பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமியர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருந்தால் அவர்களுக்கு படிப்பில் கவனம் குறையும். விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகள் அதில் இருந்தும் விடுபடும். தவிக்கும் மனதோடு அடிக்கடி தனிமையில் உட்கார விரும்பும். வழக்கமான உணவுப் பழக்கத்தில் இருந்தும் மாறுபடுவார்கள். சுமாராக சாப்பிடும் வழக்கம்கொண்டவர்களாக இருந்தால், ஒருவேளை மிக அதிகமான அளவில் சாப்பிடலாம் அல்லது உணவை முழுவதுமாக புறக்கணிக்கலாம். இதற்கு ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ என்று பெயர். பாலியல் பாதிப்பிற்கு உள்ளான சிறுவர் சிறுமியர்களில் பெரும்பாலானவர்கள் இந்த முரண்பாடான உணவுப் பழக்கத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேவையற்ற சிந்தனைகள், கவலைகளுக்கு உள்ளாகி அவர்கள் மனச்சிதைவுக்கும் ஆளாகுவார்கள்.
சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படுவார்கள். அவர்களுக்கு திருமணமும், அதற்கு பிந்தைய தாம்பத்ய உறவும் பயம் தருவதாக அமைந்துவிடும். அதனால் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்வது பற்றியும் சிந்திப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பாலியல் உறவை வலி நிறைந்த கசப்பான அனுபவமாக கருதுவார்கள். பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் நிலைக்கும் செல்லலாம்.
சிறுவயதிலே பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் பயம் அதிகமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் பயம் கொள்வார்கள். அவர்களிடம் தாழ்வுமனப்பான்மையும் உருவாகிவிடும். அதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். மற்றவர்களிடம் பேசவும், பழகவும் விரும்பாமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வார்கள்.
பாலியல் வன்முறையில் சிக்கியவர்களில் சிலர் தொடர்ந்து அதையே நினைத்து விரக்தியான மனநிலைக்கு சென்றுவிடுகிறார்கள். தப்பு என தெரிந்தும், பழிவாங்கும் நோக்கத்தில் தன்னைவிட வயது குறைந்தவர்களை பாலியல் ரீதியாக அணுகலாம். பெற்றோரின் கண்டிப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடும் மனநிலைக்கும் உள்ளாகலாம். எதிர்காலத்தில் தன் உடலைக்காட்டி மற்றவர்களை வசீகரிக்கும் நிலைக்கும் ஒருசில பெண்கள் செல்லலாம்.
இப்படிப்பட்ட பல்வேறு ரீதியான பாதிப்புகள், பாலியல் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளுக்கு ஏற்படுவதால் பெற்றோர்களும், சமூகமும் தனிக்கவனம் செலுத்தி அவர்களை பாதுகாக்கவேண்டும்.
சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படலாம்.
பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!
பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமியர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருந்தால் அவர்களுக்கு படிப்பில் கவனம் குறையும். விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகள் அதில் இருந்தும் விடுபடும். தவிக்கும் மனதோடு அடிக்கடி தனிமையில் உட்கார விரும்பும். வழக்கமான உணவுப் பழக்கத்தில் இருந்தும் மாறுபடுவார்கள். சுமாராக சாப்பிடும் வழக்கம்கொண்டவர்களாக இருந்தால், ஒருவேளை மிக அதிகமான அளவில் சாப்பிடலாம் அல்லது உணவை முழுவதுமாக புறக்கணிக்கலாம். இதற்கு ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ என்று பெயர். பாலியல் பாதிப்பிற்கு உள்ளான சிறுவர் சிறுமியர்களில் பெரும்பாலானவர்கள் இந்த முரண்பாடான உணவுப் பழக்கத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேவையற்ற சிந்தனைகள், கவலைகளுக்கு உள்ளாகி அவர்கள் மனச்சிதைவுக்கும் ஆளாகுவார்கள்.
சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படுவார்கள். அவர்களுக்கு திருமணமும், அதற்கு பிந்தைய தாம்பத்ய உறவும் பயம் தருவதாக அமைந்துவிடும். அதனால் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்வது பற்றியும் சிந்திப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பாலியல் உறவை வலி நிறைந்த கசப்பான அனுபவமாக கருதுவார்கள். பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் நிலைக்கும் செல்லலாம்.
சிறுவயதிலே பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் பயம் அதிகமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் பயம் கொள்வார்கள். அவர்களிடம் தாழ்வுமனப்பான்மையும் உருவாகிவிடும். அதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். மற்றவர்களிடம் பேசவும், பழகவும் விரும்பாமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வார்கள்.
பாலியல் வன்முறையில் சிக்கியவர்களில் சிலர் தொடர்ந்து அதையே நினைத்து விரக்தியான மனநிலைக்கு சென்றுவிடுகிறார்கள். தப்பு என தெரிந்தும், பழிவாங்கும் நோக்கத்தில் தன்னைவிட வயது குறைந்தவர்களை பாலியல் ரீதியாக அணுகலாம். பெற்றோரின் கண்டிப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடும் மனநிலைக்கும் உள்ளாகலாம். எதிர்காலத்தில் தன் உடலைக்காட்டி மற்றவர்களை வசீகரிக்கும் நிலைக்கும் ஒருசில பெண்கள் செல்லலாம்.
இப்படிப்பட்ட பல்வேறு ரீதியான பாதிப்புகள், பாலியல் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளுக்கு ஏற்படுவதால் பெற்றோர்களும், சமூகமும் தனிக்கவனம் செலுத்தி அவர்களை பாதுகாக்கவேண்டும்.
சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படலாம்.
கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச் செய்யும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் நடந்த ஆய்வில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், அறிகுறிகளை காட்டாமலேயே பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இ கிளினிக்கல் மெடிசன் இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளின் அழற்சி நோய் அறிகுறிகள் கொரோனா வைரசுடன் இணைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அவர்களது இதயம் கடுமையாக பாதிக்கப்படலாம். இதன்மூலம் சில குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர்களின் இதயத்தை சேதப்படுத்தும் நிலை உள்ளது.
600-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அழற்சி நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்த போது ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அறிகுறி இல்லாமல் 3 அல்லது 4 வாரங்களுக்கு பிறகு அவர்களை வைரஸ் தொற்று தாக்குகிறது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, ‘குழந்தைகளுக்கு வைரசின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம்.
அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். சில வாரங்கள் கழித்து குழந்தைகள் உடலில் அழற்சி, வீக்கம் ஆகியவை ஏற்படுத்தலாம். அதன்பின் தான் அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்’ என்றனர்.
விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் 662 அழற்சி நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளை ஆய்வு செய்தபோது அவர்களில் 71 சதவீதம் பேர் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 60 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக பாதிக்கப்பட்டு 8 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் இருந்துள்ளனர்.
662 குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 73.7 சதவீத குழந்தைகளுக்கு வயிற்றுவலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 68.3 சதவீதம் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. 90 சதவீத குழந்தைகளுக்கு இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் 54 சதவீதம் பேருக்கு முடிவுகள் அசாதாரனமாக இருந்தது.
5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது . 11 குழந்தைகள் இறந்தன.
இதுகுறித்து அமெரிக்காவின் தான் ஆன்டினோவில் உள்ள சுகாதார மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் அல்வரு, மோரேரா கூறியதாவது:-
தற்போது ஒரு புதிய குழந்தைப்பருவ நோய் உருவாகி இருக்கிறது. இது கொரோனா வைரசுடன் தொடர்புடையது. இது பல உறுப்புகளை பாதிக்கும் என்பதால் மிகவும் ஆபத்தானது.
இதயம் மற்றும் நுரையீரல், இறைப்பை குடல் அமைப்பு அல்லது நரம்பியல் மண்டலம் என எதுவாக இருந்தாலும் அந்த நோய் அறிகுறிகள் பலவிதமான பரிமாற்றங்களை கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இது மருத்துவர்களுக்கு புரிந்து கொள்வதில் சவாலாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதனால் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இ கிளினிக்கல் மெடிசன் இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளின் அழற்சி நோய் அறிகுறிகள் கொரோனா வைரசுடன் இணைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அவர்களது இதயம் கடுமையாக பாதிக்கப்படலாம். இதன்மூலம் சில குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர்களின் இதயத்தை சேதப்படுத்தும் நிலை உள்ளது.
600-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அழற்சி நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்த போது ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அறிகுறி இல்லாமல் 3 அல்லது 4 வாரங்களுக்கு பிறகு அவர்களை வைரஸ் தொற்று தாக்குகிறது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, ‘குழந்தைகளுக்கு வைரசின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம்.
அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். சில வாரங்கள் கழித்து குழந்தைகள் உடலில் அழற்சி, வீக்கம் ஆகியவை ஏற்படுத்தலாம். அதன்பின் தான் அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்’ என்றனர்.
விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் 662 அழற்சி நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளை ஆய்வு செய்தபோது அவர்களில் 71 சதவீதம் பேர் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 60 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக பாதிக்கப்பட்டு 8 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் இருந்துள்ளனர்.
662 குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 73.7 சதவீத குழந்தைகளுக்கு வயிற்றுவலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 68.3 சதவீதம் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. 90 சதவீத குழந்தைகளுக்கு இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் 54 சதவீதம் பேருக்கு முடிவுகள் அசாதாரனமாக இருந்தது.
5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது . 11 குழந்தைகள் இறந்தன.
இதுகுறித்து அமெரிக்காவின் தான் ஆன்டினோவில் உள்ள சுகாதார மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் அல்வரு, மோரேரா கூறியதாவது:-
தற்போது ஒரு புதிய குழந்தைப்பருவ நோய் உருவாகி இருக்கிறது. இது கொரோனா வைரசுடன் தொடர்புடையது. இது பல உறுப்புகளை பாதிக்கும் என்பதால் மிகவும் ஆபத்தானது.
இதயம் மற்றும் நுரையீரல், இறைப்பை குடல் அமைப்பு அல்லது நரம்பியல் மண்டலம் என எதுவாக இருந்தாலும் அந்த நோய் அறிகுறிகள் பலவிதமான பரிமாற்றங்களை கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இது மருத்துவர்களுக்கு புரிந்து கொள்வதில் சவாலாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.






