என் மலர்
குழந்தை பராமரிப்பு
பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!
பெற்றோர்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனால் குழந்தைகளோடு பழகுகிறவர்கள் அனைவரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கக்கூடாது என்றாலும், மிகுந்த கண்காணிப்பு தேவைப்படுகிறது. பெண்குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் பெருமளவு பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.
பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!
பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமியர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருந்தால் அவர்களுக்கு படிப்பில் கவனம் குறையும். விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகள் அதில் இருந்தும் விடுபடும். தவிக்கும் மனதோடு அடிக்கடி தனிமையில் உட்கார விரும்பும். வழக்கமான உணவுப் பழக்கத்தில் இருந்தும் மாறுபடுவார்கள். சுமாராக சாப்பிடும் வழக்கம்கொண்டவர்களாக இருந்தால், ஒருவேளை மிக அதிகமான அளவில் சாப்பிடலாம் அல்லது உணவை முழுவதுமாக புறக்கணிக்கலாம். இதற்கு ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ என்று பெயர். பாலியல் பாதிப்பிற்கு உள்ளான சிறுவர் சிறுமியர்களில் பெரும்பாலானவர்கள் இந்த முரண்பாடான உணவுப் பழக்கத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேவையற்ற சிந்தனைகள், கவலைகளுக்கு உள்ளாகி அவர்கள் மனச்சிதைவுக்கும் ஆளாகுவார்கள்.
சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படுவார்கள். அவர்களுக்கு திருமணமும், அதற்கு பிந்தைய தாம்பத்ய உறவும் பயம் தருவதாக அமைந்துவிடும். அதனால் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்வது பற்றியும் சிந்திப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பாலியல் உறவை வலி நிறைந்த கசப்பான அனுபவமாக கருதுவார்கள். பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் நிலைக்கும் செல்லலாம்.
சிறுவயதிலே பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் பயம் அதிகமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் பயம் கொள்வார்கள். அவர்களிடம் தாழ்வுமனப்பான்மையும் உருவாகிவிடும். அதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். மற்றவர்களிடம் பேசவும், பழகவும் விரும்பாமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வார்கள்.
பாலியல் வன்முறையில் சிக்கியவர்களில் சிலர் தொடர்ந்து அதையே நினைத்து விரக்தியான மனநிலைக்கு சென்றுவிடுகிறார்கள். தப்பு என தெரிந்தும், பழிவாங்கும் நோக்கத்தில் தன்னைவிட வயது குறைந்தவர்களை பாலியல் ரீதியாக அணுகலாம். பெற்றோரின் கண்டிப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடும் மனநிலைக்கும் உள்ளாகலாம். எதிர்காலத்தில் தன் உடலைக்காட்டி மற்றவர்களை வசீகரிக்கும் நிலைக்கும் ஒருசில பெண்கள் செல்லலாம்.
இப்படிப்பட்ட பல்வேறு ரீதியான பாதிப்புகள், பாலியல் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளுக்கு ஏற்படுவதால் பெற்றோர்களும், சமூகமும் தனிக்கவனம் செலுத்தி அவர்களை பாதுகாக்கவேண்டும்.
சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படலாம்.
பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!
பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமியர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருந்தால் அவர்களுக்கு படிப்பில் கவனம் குறையும். விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகள் அதில் இருந்தும் விடுபடும். தவிக்கும் மனதோடு அடிக்கடி தனிமையில் உட்கார விரும்பும். வழக்கமான உணவுப் பழக்கத்தில் இருந்தும் மாறுபடுவார்கள். சுமாராக சாப்பிடும் வழக்கம்கொண்டவர்களாக இருந்தால், ஒருவேளை மிக அதிகமான அளவில் சாப்பிடலாம் அல்லது உணவை முழுவதுமாக புறக்கணிக்கலாம். இதற்கு ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ என்று பெயர். பாலியல் பாதிப்பிற்கு உள்ளான சிறுவர் சிறுமியர்களில் பெரும்பாலானவர்கள் இந்த முரண்பாடான உணவுப் பழக்கத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேவையற்ற சிந்தனைகள், கவலைகளுக்கு உள்ளாகி அவர்கள் மனச்சிதைவுக்கும் ஆளாகுவார்கள்.
சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படுவார்கள். அவர்களுக்கு திருமணமும், அதற்கு பிந்தைய தாம்பத்ய உறவும் பயம் தருவதாக அமைந்துவிடும். அதனால் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்வது பற்றியும் சிந்திப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பாலியல் உறவை வலி நிறைந்த கசப்பான அனுபவமாக கருதுவார்கள். பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் நிலைக்கும் செல்லலாம்.
சிறுவயதிலே பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் பயம் அதிகமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் பயம் கொள்வார்கள். அவர்களிடம் தாழ்வுமனப்பான்மையும் உருவாகிவிடும். அதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். மற்றவர்களிடம் பேசவும், பழகவும் விரும்பாமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வார்கள்.
பாலியல் வன்முறையில் சிக்கியவர்களில் சிலர் தொடர்ந்து அதையே நினைத்து விரக்தியான மனநிலைக்கு சென்றுவிடுகிறார்கள். தப்பு என தெரிந்தும், பழிவாங்கும் நோக்கத்தில் தன்னைவிட வயது குறைந்தவர்களை பாலியல் ரீதியாக அணுகலாம். பெற்றோரின் கண்டிப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடும் மனநிலைக்கும் உள்ளாகலாம். எதிர்காலத்தில் தன் உடலைக்காட்டி மற்றவர்களை வசீகரிக்கும் நிலைக்கும் ஒருசில பெண்கள் செல்லலாம்.
இப்படிப்பட்ட பல்வேறு ரீதியான பாதிப்புகள், பாலியல் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளுக்கு ஏற்படுவதால் பெற்றோர்களும், சமூகமும் தனிக்கவனம் செலுத்தி அவர்களை பாதுகாக்கவேண்டும்.
சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படலாம்.
கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச் செய்யும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் நடந்த ஆய்வில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், அறிகுறிகளை காட்டாமலேயே பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இ கிளினிக்கல் மெடிசன் இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளின் அழற்சி நோய் அறிகுறிகள் கொரோனா வைரசுடன் இணைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அவர்களது இதயம் கடுமையாக பாதிக்கப்படலாம். இதன்மூலம் சில குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர்களின் இதயத்தை சேதப்படுத்தும் நிலை உள்ளது.
600-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அழற்சி நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்த போது ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அறிகுறி இல்லாமல் 3 அல்லது 4 வாரங்களுக்கு பிறகு அவர்களை வைரஸ் தொற்று தாக்குகிறது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, ‘குழந்தைகளுக்கு வைரசின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம்.
அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். சில வாரங்கள் கழித்து குழந்தைகள் உடலில் அழற்சி, வீக்கம் ஆகியவை ஏற்படுத்தலாம். அதன்பின் தான் அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்’ என்றனர்.
விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் 662 அழற்சி நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளை ஆய்வு செய்தபோது அவர்களில் 71 சதவீதம் பேர் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 60 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக பாதிக்கப்பட்டு 8 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் இருந்துள்ளனர்.
662 குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 73.7 சதவீத குழந்தைகளுக்கு வயிற்றுவலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 68.3 சதவீதம் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. 90 சதவீத குழந்தைகளுக்கு இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் 54 சதவீதம் பேருக்கு முடிவுகள் அசாதாரனமாக இருந்தது.
5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது . 11 குழந்தைகள் இறந்தன.
இதுகுறித்து அமெரிக்காவின் தான் ஆன்டினோவில் உள்ள சுகாதார மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் அல்வரு, மோரேரா கூறியதாவது:-
தற்போது ஒரு புதிய குழந்தைப்பருவ நோய் உருவாகி இருக்கிறது. இது கொரோனா வைரசுடன் தொடர்புடையது. இது பல உறுப்புகளை பாதிக்கும் என்பதால் மிகவும் ஆபத்தானது.
இதயம் மற்றும் நுரையீரல், இறைப்பை குடல் அமைப்பு அல்லது நரம்பியல் மண்டலம் என எதுவாக இருந்தாலும் அந்த நோய் அறிகுறிகள் பலவிதமான பரிமாற்றங்களை கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இது மருத்துவர்களுக்கு புரிந்து கொள்வதில் சவாலாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதனால் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இ கிளினிக்கல் மெடிசன் இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளின் அழற்சி நோய் அறிகுறிகள் கொரோனா வைரசுடன் இணைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அவர்களது இதயம் கடுமையாக பாதிக்கப்படலாம். இதன்மூலம் சில குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர்களின் இதயத்தை சேதப்படுத்தும் நிலை உள்ளது.
600-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அழற்சி நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்த போது ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அறிகுறி இல்லாமல் 3 அல்லது 4 வாரங்களுக்கு பிறகு அவர்களை வைரஸ் தொற்று தாக்குகிறது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, ‘குழந்தைகளுக்கு வைரசின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம்.
அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். சில வாரங்கள் கழித்து குழந்தைகள் உடலில் அழற்சி, வீக்கம் ஆகியவை ஏற்படுத்தலாம். அதன்பின் தான் அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்’ என்றனர்.
விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் 662 அழற்சி நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளை ஆய்வு செய்தபோது அவர்களில் 71 சதவீதம் பேர் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 60 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக பாதிக்கப்பட்டு 8 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் இருந்துள்ளனர்.
662 குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 73.7 சதவீத குழந்தைகளுக்கு வயிற்றுவலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 68.3 சதவீதம் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. 90 சதவீத குழந்தைகளுக்கு இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் 54 சதவீதம் பேருக்கு முடிவுகள் அசாதாரனமாக இருந்தது.
5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது . 11 குழந்தைகள் இறந்தன.
இதுகுறித்து அமெரிக்காவின் தான் ஆன்டினோவில் உள்ள சுகாதார மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் அல்வரு, மோரேரா கூறியதாவது:-
தற்போது ஒரு புதிய குழந்தைப்பருவ நோய் உருவாகி இருக்கிறது. இது கொரோனா வைரசுடன் தொடர்புடையது. இது பல உறுப்புகளை பாதிக்கும் என்பதால் மிகவும் ஆபத்தானது.
இதயம் மற்றும் நுரையீரல், இறைப்பை குடல் அமைப்பு அல்லது நரம்பியல் மண்டலம் என எதுவாக இருந்தாலும் அந்த நோய் அறிகுறிகள் பலவிதமான பரிமாற்றங்களை கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இது மருத்துவர்களுக்கு புரிந்து கொள்வதில் சவாலாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் சூடான விவாத தலைப்பாக மாறி விட்டது.
கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் சூடான விவாத தலைப்பாக மாறி விட்டது. பெரும்பாலான குழந்தைகள் மனதில், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் கொடிய வைரஸாக கொரோனா பதிந்துபோய்விட்டது. குழந்தைகள் வெளியே சென்று விளையாடக்கூடாது என்ற எண்ணத்தில் கொரோனா பற்றிய தவறான அபிப்பிராயமும் அவர்களிடத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. அவர்களை பயமுறுத்துவதற்கு பதிலாக சரியான தகவல்களை அளித்து தைரியமூட்டுவது இன்றியமையாதது.
குழந்தைகளிடம் சரியான தகவல் பகிரப் பட்டால் அவர்கள் மனதில் எழும் குழப்பங்கள் நீங்கிவிடும். வைரஸ் பிடியில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கு கொரோனா வைரஸைப் பற்றிய விழிப்புணர்வை இணையதளங்கள் வழியாக ஏற்படுத்தும் பணியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
கொரோனா வைரஸைப் பற்றி குழந்தைகளுக்கு என்னென்ன தகவல்களெல்லாம் தெரியும் என்று அவர்களிடம் கேளுங்கள். அப்போது அவர்கள் கூறும் தவறான தகவல்களுக்கு சரியான விளக்கம் கொடுங்கள். உதாரணமாக, கிருமி நாசினியை கொண்டு கைகளை கழுவினால் கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்று குழந்தைகள் கூறினால் அது எவ்வாறு சாத்தியம் என்பதை விளக்கி புரியவைக்கலாம்.
குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய சரியான தகவல்களைக் கொடுத்த பிறகு சுகாதாஇரத்தின் முக்கியத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏன் பற்களை சுத்தம் செய்ய வேண்டும், கைகளை ஏன் அடிக்கடி கழுவ வேண்டும் என்பது பற்றி தெளிவுபடுத்தலாம். தரையில் கிடக்கும் உணவு பொருட்களை ஏன் சாப்பிடக்கூடாது, வாய், மூக்கு, கண்களை ஏன் அடிக்கடி தொடக் கூடாது என்பதை விளக்கி புரியவைக்கலாம். கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள பொம்மைகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கலாம். உங்களுக்கு சரியாக தெரியாத விஷயங்களுக்கு யூகமாகவோ, பொய்யாகவோ எந்த தகவலையும் குழந்தைகளிடம் பகிரக்கூடாது.
குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும், வானொலியைக் கேட்கும்போதும், இணையதளங்களை பயன்படுத்தும்போதும் குழந்தைகளுடன் தொடர்பில் இருப்பது அவசியம். இணையத்தில் பல வலைத்தளங்கள் தவறான தகவல்களை வழங்குகின்றன. அதனால் கவனமாக குழந்தைகளை கையாள வேண்டும். அரசாங்க வலைத்தளங்கள், யுனிசெப் அல்லது உலக சுகாதார அமைப்பு வலைத்தளங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை குழந்தைகளுக்கு தெரியப்படுத்துங்கள். கொரோனா வைரஸ் பற்றிய பயத்தை அவர்களின் மனதில் இருந்து அகற்றும் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள்.
குழந்தைகளிடம் சரியான தகவல் பகிரப் பட்டால் அவர்கள் மனதில் எழும் குழப்பங்கள் நீங்கிவிடும். வைரஸ் பிடியில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கு கொரோனா வைரஸைப் பற்றிய விழிப்புணர்வை இணையதளங்கள் வழியாக ஏற்படுத்தும் பணியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
கொரோனா வைரஸைப் பற்றி குழந்தைகளுக்கு என்னென்ன தகவல்களெல்லாம் தெரியும் என்று அவர்களிடம் கேளுங்கள். அப்போது அவர்கள் கூறும் தவறான தகவல்களுக்கு சரியான விளக்கம் கொடுங்கள். உதாரணமாக, கிருமி நாசினியை கொண்டு கைகளை கழுவினால் கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்று குழந்தைகள் கூறினால் அது எவ்வாறு சாத்தியம் என்பதை விளக்கி புரியவைக்கலாம்.
குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய சரியான தகவல்களைக் கொடுத்த பிறகு சுகாதாஇரத்தின் முக்கியத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏன் பற்களை சுத்தம் செய்ய வேண்டும், கைகளை ஏன் அடிக்கடி கழுவ வேண்டும் என்பது பற்றி தெளிவுபடுத்தலாம். தரையில் கிடக்கும் உணவு பொருட்களை ஏன் சாப்பிடக்கூடாது, வாய், மூக்கு, கண்களை ஏன் அடிக்கடி தொடக் கூடாது என்பதை விளக்கி புரியவைக்கலாம். கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள பொம்மைகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கலாம். உங்களுக்கு சரியாக தெரியாத விஷயங்களுக்கு யூகமாகவோ, பொய்யாகவோ எந்த தகவலையும் குழந்தைகளிடம் பகிரக்கூடாது.
குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும், வானொலியைக் கேட்கும்போதும், இணையதளங்களை பயன்படுத்தும்போதும் குழந்தைகளுடன் தொடர்பில் இருப்பது அவசியம். இணையத்தில் பல வலைத்தளங்கள் தவறான தகவல்களை வழங்குகின்றன. அதனால் கவனமாக குழந்தைகளை கையாள வேண்டும். அரசாங்க வலைத்தளங்கள், யுனிசெப் அல்லது உலக சுகாதார அமைப்பு வலைத்தளங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை குழந்தைகளுக்கு தெரியப்படுத்துங்கள். கொரோனா வைரஸ் பற்றிய பயத்தை அவர்களின் மனதில் இருந்து அகற்றும் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள்.
பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சுபவர்கள் பெரும்பாலும் இடதுபுற தோளில்தான் குழந்தைகளை அரவணைப்பார்கள். குழந்தைகளும் அதைத்தான் விரும்பும்.
பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சு பவர்கள் பெரும்பாலும் இடதுபுற தோளில்தான் குழந்தைகளை அரவணைப்பார்கள். தாயும் குழந்தையை இடது புற தோள்பட்டையில்தான் வைத்திருப்பார். குழந்தைகளும் அதைத்தான் விரும்பும். குழந்தைகளை அப்படி இடதுபுறத்தில் தூக்கி வைப்பவர்கள் பெரும்பாலும் வலது கை பழக்கம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தையை தூக்குவதற்கு வலது கையை பயன்படுத்தினாலும் வலது தோள்பட்டையில் அரவணைப்பதில்லை. அது குழந்தையை வைத்திருப்பதற்கு சவுகரியமாக இருக்காது என்று கருதினாலும் அறிவியல் ரீதியாக அதற்கு காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.
1960-ம் ஆண்டிலேயே ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றிய ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். 40 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 72 சதவீதம் பேர் இடது தோள்பட்டையில்தான் குழந்தைகளை வைத்திருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வலது கை பழக்கம் கொண்டவர்கள். அவர்களுடைய மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்ததில் அது உணர்வு ரீதியான பந்தத்தை வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டது. கர்ப்ப காலத்திலேயே பாதுகாப்பான மற்றும் உணர்வு ரீதியான தொடர்பை தாய்க்கும், சேய்க்கும் இடையே உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பதும் தெரியவந்துள்ளது.
அதாவது இதயம் உடலின் இடது பகுதியில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் இதயத் துடிப்பு தெரியும். அந்த துடிப்புடன் நெருக்கமாக இருக்க விரும்பும். குழந்தை அழும்போது தாய் தூக்கி இடது பக்கத்தில் வைக்கும்போது சில நிமிடங்களில் அமைதியாகி விடும். இடது தோள்பட்டையில் சிறிது நேரம் வைத்திருந்தால் தூங்கியும் விடும். தாயின் அரவணைப்பில் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளும். தாயின் உணர்வுகளையும், சமிக்ஞைகளையும் புரிந்து கொள்ளும். அதுவே குழந்தையின் மொழி சமிக்ஞைக்கும் அடித்தளம் அமைத்து கொடுக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
1960-ம் ஆண்டிலேயே ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றிய ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். 40 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 72 சதவீதம் பேர் இடது தோள்பட்டையில்தான் குழந்தைகளை வைத்திருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வலது கை பழக்கம் கொண்டவர்கள். அவர்களுடைய மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்ததில் அது உணர்வு ரீதியான பந்தத்தை வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டது. கர்ப்ப காலத்திலேயே பாதுகாப்பான மற்றும் உணர்வு ரீதியான தொடர்பை தாய்க்கும், சேய்க்கும் இடையே உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பதும் தெரியவந்துள்ளது.
அதாவது இதயம் உடலின் இடது பகுதியில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் இதயத் துடிப்பு தெரியும். அந்த துடிப்புடன் நெருக்கமாக இருக்க விரும்பும். குழந்தை அழும்போது தாய் தூக்கி இடது பக்கத்தில் வைக்கும்போது சில நிமிடங்களில் அமைதியாகி விடும். இடது தோள்பட்டையில் சிறிது நேரம் வைத்திருந்தால் தூங்கியும் விடும். தாயின் அரவணைப்பில் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளும். தாயின் உணர்வுகளையும், சமிக்ஞைகளையும் புரிந்து கொள்ளும். அதுவே குழந்தையின் மொழி சமிக்ஞைக்கும் அடித்தளம் அமைத்து கொடுக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நீங்கள் உங்கள் குழந்தையை ஏசி அறையில் உறங்க வைக்கின்றீர்கள் என்றால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
உடல் முழுவதும் பரவிய ஆடையை உங்கள் குழந்தைக்கு அணிவித்து விடுங்கள். கால்களுக்கு சாக்ஸூம் கைகளுக்கு கிளவுஸும் அணிந்து விடுங்கள். அல்லது உங்கள் குழந்தையின் முகத்தைத் தவிர்த்து உடல் முழுவதையும் போர்த்தி விடுங்கள்.
தொடர்ந்து ஏசியை பயன் படுத்துவதால், அதற்குள் பல தூசிகள் படிந்திருக்கும். அதனால் அவ்வப்போது ஏசியின் மேல் பாகத்தைக் கழட்டி பில்டரை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் தூசி படிந்த ஏசி காற்றின் மூலமாகக் குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விடும்.
உடனே சூடான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம். குழந்தையை நீங்கள் ஏசி அறையில் இருந்து எடுத்துச் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். உடனே அதிக வெயில் படும் இடத்திற்காே அல்லது சூடான இடத்திற்கோ எடுத்துச் செல்லக்கூடாது. திடீர் தட்பவெப்ப நிலை மாற்றம் குழந்தையின் உடலைப் பாதிக்கும்.
தினம் ஏசி பயன்பாட்டிற்கு முன்னர், குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அறையில் உள்ள கதவுகள் ஜன்னல்கள் மற்றும் திரைச் சீலைகளை முழுவதுமாக நீக்கி வையுங்கள்.இதனால் பழைய காற்று வெளியேறி புதிய சுத்தமான காற்று அறையின் உள்ளே பரவும். கூடுதலாக போதிய சூரிய வெளிச்சம் அறையில் பரவ சாத்தியம் ஏற்படும். இதனால் அறையில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும்.
தொடர்ந்து ஏசியை பயன் படுத்துவதால், அதற்குள் பல தூசிகள் படிந்திருக்கும். அதனால் அவ்வப்போது ஏசியின் மேல் பாகத்தைக் கழட்டி பில்டரை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் தூசி படிந்த ஏசி காற்றின் மூலமாகக் குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விடும்.
உடனே சூடான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம். குழந்தையை நீங்கள் ஏசி அறையில் இருந்து எடுத்துச் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். உடனே அதிக வெயில் படும் இடத்திற்காே அல்லது சூடான இடத்திற்கோ எடுத்துச் செல்லக்கூடாது. திடீர் தட்பவெப்ப நிலை மாற்றம் குழந்தையின் உடலைப் பாதிக்கும்.
தினம் ஏசி பயன்பாட்டிற்கு முன்னர், குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அறையில் உள்ள கதவுகள் ஜன்னல்கள் மற்றும் திரைச் சீலைகளை முழுவதுமாக நீக்கி வையுங்கள்.இதனால் பழைய காற்று வெளியேறி புதிய சுத்தமான காற்று அறையின் உள்ளே பரவும். கூடுதலாக போதிய சூரிய வெளிச்சம் அறையில் பரவ சாத்தியம் ஏற்படும். இதனால் அறையில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும்.
மழலையர் பள்ளியில் பல்வேறு விதமான கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் சில முக்கியமான கல்வி திட்ட அணுகுமுறைகள் குறித்து பார்ப்போம்.
மழலையர் பள்ளியில் பல்வேறு விதமான கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் சில முக்கியமான கல்வி திட்ட அணுகுமுறைகள் குறித்து பார்ப்போம்.
மாண்டிச்சேரி
வித்தியாசமான வகுப்பறை, விளையாட்டு வடிவில் பாடத்திட்டம், வயது வித்தியாசம் இல்லாத வகுப்பு தோழர்கள்... என பட்டைய கிளப்புகிறது, மாண்டிச்சேரி கல்விமுறை. உலகம் முழுக்க 20 ஆயிரம் பள்ளிகளில் இந்தக் கல்வி முறை பின்பற்றப்படுகிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், சப்பாத்தி மாவு பிசைதல், காய்கறிகளை வெட்டுதல், பொருட்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற அன்றாட வேலைகளில் இருந்தும் கல்வி கற்பிக்கப்படும்.
வால்டோர்ப்
‘சிந்தனை செய், முயன்று பார், கற்றுக்கொள்’ என்பதுதான் வால்டோர்ப் முறையின் அடிப்படை. அதாவது குழந்தைகளுக்கு எதை கற்பிக்க இருக்கிறார்களோ, அதை பற்றி கற்பித்து, அதை காண்பித்து, அதை உணர்வுப்பூர்வமாக மனதில் பதியவைக்கிறார்கள். கல்வி மட்டுமின்றி, இசை, நடனம் போன்றவற்றுக்கும் இதில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். திங்கட்கிழமை இசை, செவ்வாய் கதை சொல்லுதல் என வகுப்பு ஜாலியாக நகரும்.
பேரண்ட் கோ-ஆப்ரேஷன்
பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து செயல்படுவதே இந்த கற்றல் முறையின் நோக்கமாகும். பெற்றோர் வகுப்பறையில் அமர்ந்து தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கும் இந்த கற்றல்முறை வழிவகை செய்கிறது. பெற்றோர் வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் சுழன்று பிள்ளைகள் பாடங்களை கவனிப்பதற்கு உதவுகிறார்கள்.
ரெஜியோ எமிலியா
சுய ஒழுக்கம், குழந் தைகளுக்கான பொறுப்புகள், சமூகம் ஆகிய மூன்றையும் மையப்படுத்தும் கல்விமுறைதான் ரெஜியோ எமிலியா. மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழகவிட்டு, நட்புறவை வளர்த்து அதன்மூலம் கல்வியை கொண்டு செல்கிறார்கள். செயல்முறை கல்விக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
ஹைஸ்கோப்
மாணவர்கள் தாங்கள் விரும்பிய திறன்களை அல்லது இலக்கை அடைய தாங்களாகவே திட்டமிடும் கல்விமுறை இது. இளம் மாணவர்களின் தேவைகளையும், கேள்விகளையும் புரிந்துகொள்வதற்கும் அவர்களின் கற்றலை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த கல்வி முறை விளங்கும்.
பேங்க் ஸ்டிரீட்
ஒவ்வொருவரின் தனித்துவமான உணர்ச்சி, சமூக மற்றும் அறிவுசார் அம்சங்களை வளர்க்கும் வகுப்பறையை உருவாக்குவதே இந்த கல்வி முறையின் நோக்கமாகும். ஒவ்வொரு வயதிலும் நிகழும் உணர்ச்சி மற்றும் அறிவுசார் மாற்றங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு பாடத்தையும் எவ்வாறு அணுகுவது என்பதையும் குறிப்பிடுகிறது. உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அர்த்தமுள்ள வகையில் கல்வி கற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்த மழலையர் கல்வி திட்டங்கள் வெளிநாடுகளில் நடைமுறையில் இருப்பவை என்று எண்ணி விடாதீர்கள். நம் நாட்டிலும், நமக்கு அருகில் இருக்கும் பல பள்ளிக்கூடங்களிலும் இந்த கல்வி முறை நடைமுறையில் இருக்கிறது.
மாண்டிச்சேரி
வித்தியாசமான வகுப்பறை, விளையாட்டு வடிவில் பாடத்திட்டம், வயது வித்தியாசம் இல்லாத வகுப்பு தோழர்கள்... என பட்டைய கிளப்புகிறது, மாண்டிச்சேரி கல்விமுறை. உலகம் முழுக்க 20 ஆயிரம் பள்ளிகளில் இந்தக் கல்வி முறை பின்பற்றப்படுகிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், சப்பாத்தி மாவு பிசைதல், காய்கறிகளை வெட்டுதல், பொருட்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற அன்றாட வேலைகளில் இருந்தும் கல்வி கற்பிக்கப்படும்.
வால்டோர்ப்
‘சிந்தனை செய், முயன்று பார், கற்றுக்கொள்’ என்பதுதான் வால்டோர்ப் முறையின் அடிப்படை. அதாவது குழந்தைகளுக்கு எதை கற்பிக்க இருக்கிறார்களோ, அதை பற்றி கற்பித்து, அதை காண்பித்து, அதை உணர்வுப்பூர்வமாக மனதில் பதியவைக்கிறார்கள். கல்வி மட்டுமின்றி, இசை, நடனம் போன்றவற்றுக்கும் இதில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். திங்கட்கிழமை இசை, செவ்வாய் கதை சொல்லுதல் என வகுப்பு ஜாலியாக நகரும்.
பேரண்ட் கோ-ஆப்ரேஷன்
பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து செயல்படுவதே இந்த கற்றல் முறையின் நோக்கமாகும். பெற்றோர் வகுப்பறையில் அமர்ந்து தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கும் இந்த கற்றல்முறை வழிவகை செய்கிறது. பெற்றோர் வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் சுழன்று பிள்ளைகள் பாடங்களை கவனிப்பதற்கு உதவுகிறார்கள்.
ரெஜியோ எமிலியா
சுய ஒழுக்கம், குழந் தைகளுக்கான பொறுப்புகள், சமூகம் ஆகிய மூன்றையும் மையப்படுத்தும் கல்விமுறைதான் ரெஜியோ எமிலியா. மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழகவிட்டு, நட்புறவை வளர்த்து அதன்மூலம் கல்வியை கொண்டு செல்கிறார்கள். செயல்முறை கல்விக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
ஹைஸ்கோப்
மாணவர்கள் தாங்கள் விரும்பிய திறன்களை அல்லது இலக்கை அடைய தாங்களாகவே திட்டமிடும் கல்விமுறை இது. இளம் மாணவர்களின் தேவைகளையும், கேள்விகளையும் புரிந்துகொள்வதற்கும் அவர்களின் கற்றலை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த கல்வி முறை விளங்கும்.
பேங்க் ஸ்டிரீட்
ஒவ்வொருவரின் தனித்துவமான உணர்ச்சி, சமூக மற்றும் அறிவுசார் அம்சங்களை வளர்க்கும் வகுப்பறையை உருவாக்குவதே இந்த கல்வி முறையின் நோக்கமாகும். ஒவ்வொரு வயதிலும் நிகழும் உணர்ச்சி மற்றும் அறிவுசார் மாற்றங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு பாடத்தையும் எவ்வாறு அணுகுவது என்பதையும் குறிப்பிடுகிறது. உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அர்த்தமுள்ள வகையில் கல்வி கற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்த மழலையர் கல்வி திட்டங்கள் வெளிநாடுகளில் நடைமுறையில் இருப்பவை என்று எண்ணி விடாதீர்கள். நம் நாட்டிலும், நமக்கு அருகில் இருக்கும் பல பள்ளிக்கூடங்களிலும் இந்த கல்வி முறை நடைமுறையில் இருக்கிறது.
நாம் வழக்கமாக நமது ஆடைகளை சுத்தம் செய்வதை போல குழந்தைகளின் மென்மையான பொம்மைகளையும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் குழந்தைகளுக்கு ரைனிடிஸ் (Rinitis alergica)ஏற்படலாம்..!
நாம் வழக்கமாக நமது ஆடைகளை சுத்தம் செய்வதை போல குழந்தைகளின் மென்மையான பொம்மைகளையும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் குழந்தைகளுக்கு ரைனிடிஸ் ஏற்படலாம்..!
மென்மையான பொம்மைகளுடன் (Soft Toys) சேர்ந்து தூங்கும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. பல குழந்தைகள் இந்த பொம்மைகள் இல்லை என்றால் சாப்பிடுவதில்லை. அவர்கள் மென்மையான பொம்மைகளுடன் நெருக்கமான உணர்வு மிக்கவர்கள், அதை யாருடனும் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்புவாதில்லை. ஆனால், இந்த மென்மையான பொம்மைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அவற்றை நாம் அடிக்கடி கழுவப்பட வேண்டும். இல்லையெனில் உங்கள் குழந்தைகளுக்கு ரினிடிஸ் பிரச்சினை இருக்கலாம்.
ரினிடிஸ் பிரச்சனை என்றால் என்ன?
அடிக்கடி தும்மல், மூக்கில் நீர்வாடிதல், மூக்கு, கண்கள் மற்றும் உள்ளங்கைகளில் அரிப்பு ஆகியவை ரைனிடிஸின் அறிகுறிகளாகும். ரினிடிஸின் உண்மையான ஆதாரம் தூசி மற்றும் மண் ஆகும். வானிலை மாற்றத்துடன் ரைனிடிஸ் ஏற்படலாம். நாம் வழக்கமாக நமது ஆடைகளை சுத்தம் செய்வதை போன்று, குழந்தைகளின் மென்மையான பொம்மைகளையும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் குழந்தைகளுக்கு ரைனிடிஸ் பிரச்சினை ஏற்படலாம். அழகிய மென்மையான பொம்மைகளிலிருந்து குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படலாம். இது குழந்தைகளுக்கு விரைவான தொற்றுநோய்களுக்கு ஆளாகக்கூடும்.
மென்மையான பொம்மைகளால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்...
தூசி மற்றும் மண், முதலில், இந்த மென்மையான பொம்மைகளில் விழுகின்றன. நாம் அவற்றை தவறாமல் சுத்தம் செய்வதில்லை. இது இந்த உண்ணிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை ஏற்படுத்தும். இந்த தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மூக்கில் பொம்மைகளுடன் படுத்துக் கொள்ளும்போது மூக்கில் அடைப்பு ஏற்படுகிறது.
இந்த பொம்மைகள் எவ்வளவு சுத்தமாக செய்யலாம்...
- மென்மையான பொம்மைகளை இயந்திரத்தால் கழுவ முடிந்தால், வாரத்திற்கு ஒரு முறை கழுவி நன்கு உலர வைக்கவும். உலர வெயிலில் வைக்கவும்.
- மென்மையான பொம்மைகளை துவைக்க முடிந்தால், அவற்றை சவர்க்காரத்துடன் சூடான நீரில் போட்டு, துடைப்பால் சுத்தம் செய்யுங்கள்.
- வெற்றிடமாகவோ அல்லது உலர்ந்த சுத்தமாகவோ முடியும்.
- குழந்தைகளுக்கு மென்மையான பொம்மை மற்றும் தூக்க முறை இருந்தால், அவர்கள் படுக்கைக்குச் சென்றதும் பொம்மையை மெதுவாக்குங்கள்.
- ஓரிரு பொம்மைகளை மட்டும் கொடுங்கள். மீதமுள்ள பொம்மைகளை ஒரு பிளாஸ்டிக் தாளில் அடைக்கவும்.
- அவர்களின் கவனத்தை மென்மையான பொம்மையிலிருந்து மற்ற நடவடிக்கைகளுக்குத் திருப்பவும்.
மென்மையான பொம்மைகளுடன் (Soft Toys) சேர்ந்து தூங்கும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. பல குழந்தைகள் இந்த பொம்மைகள் இல்லை என்றால் சாப்பிடுவதில்லை. அவர்கள் மென்மையான பொம்மைகளுடன் நெருக்கமான உணர்வு மிக்கவர்கள், அதை யாருடனும் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்புவாதில்லை. ஆனால், இந்த மென்மையான பொம்மைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அவற்றை நாம் அடிக்கடி கழுவப்பட வேண்டும். இல்லையெனில் உங்கள் குழந்தைகளுக்கு ரினிடிஸ் பிரச்சினை இருக்கலாம்.
ரினிடிஸ் பிரச்சனை என்றால் என்ன?
அடிக்கடி தும்மல், மூக்கில் நீர்வாடிதல், மூக்கு, கண்கள் மற்றும் உள்ளங்கைகளில் அரிப்பு ஆகியவை ரைனிடிஸின் அறிகுறிகளாகும். ரினிடிஸின் உண்மையான ஆதாரம் தூசி மற்றும் மண் ஆகும். வானிலை மாற்றத்துடன் ரைனிடிஸ் ஏற்படலாம். நாம் வழக்கமாக நமது ஆடைகளை சுத்தம் செய்வதை போன்று, குழந்தைகளின் மென்மையான பொம்மைகளையும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் குழந்தைகளுக்கு ரைனிடிஸ் பிரச்சினை ஏற்படலாம். அழகிய மென்மையான பொம்மைகளிலிருந்து குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படலாம். இது குழந்தைகளுக்கு விரைவான தொற்றுநோய்களுக்கு ஆளாகக்கூடும்.
மென்மையான பொம்மைகளால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்...
தூசி மற்றும் மண், முதலில், இந்த மென்மையான பொம்மைகளில் விழுகின்றன. நாம் அவற்றை தவறாமல் சுத்தம் செய்வதில்லை. இது இந்த உண்ணிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை ஏற்படுத்தும். இந்த தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மூக்கில் பொம்மைகளுடன் படுத்துக் கொள்ளும்போது மூக்கில் அடைப்பு ஏற்படுகிறது.
இந்த பொம்மைகள் எவ்வளவு சுத்தமாக செய்யலாம்...
- மென்மையான பொம்மைகளை இயந்திரத்தால் கழுவ முடிந்தால், வாரத்திற்கு ஒரு முறை கழுவி நன்கு உலர வைக்கவும். உலர வெயிலில் வைக்கவும்.
- மென்மையான பொம்மைகளை துவைக்க முடிந்தால், அவற்றை சவர்க்காரத்துடன் சூடான நீரில் போட்டு, துடைப்பால் சுத்தம் செய்யுங்கள்.
- வெற்றிடமாகவோ அல்லது உலர்ந்த சுத்தமாகவோ முடியும்.
- குழந்தைகளுக்கு மென்மையான பொம்மை மற்றும் தூக்க முறை இருந்தால், அவர்கள் படுக்கைக்குச் சென்றதும் பொம்மையை மெதுவாக்குங்கள்.
- ஓரிரு பொம்மைகளை மட்டும் கொடுங்கள். மீதமுள்ள பொம்மைகளை ஒரு பிளாஸ்டிக் தாளில் அடைக்கவும்.
- அவர்களின் கவனத்தை மென்மையான பொம்மையிலிருந்து மற்ற நடவடிக்கைகளுக்குத் திருப்பவும்.
கொரோனாவுக்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்? அவர்களது உடலில் கொரோனாவின் வாழ்நாள் எவ்வளவு காலம்? அது ஏற்படுத்தும் அறிகுறிகள்? என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த வேகத்தை கட்டுப்படுத்தி மனித குலத்தை மீட்பதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளும், தடுப்பூசியும் உருவாக்குவதில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இப்படி மருந்துகளுக்கான தேடல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனா குறித்த ஆய்வுகளும் வேகமெடுத்து வருகின்றன. குறிப்பாக வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு, எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? எந்தெந்த நோயாளிகள் வைரசின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாண்டு விடுகிறார்கள்? என்பது போன்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடக்கின்றன.
இந்த வரிசையில் கொரோனாவுக்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்? அவர்களது உடலில் கொரோனாவின் வாழ்நாள் எவ்வளவு காலம்? அது ஏற்படுத்தும் அறிகுறிகள்? என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தென்கொரிய குழந்தைகளிடம் சோதனை
குறிப்பாக தென்கொரியாவின் 22 மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 91 குழந்தைகளிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 22 சதவீத குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லை. 20 சதவீதத்தினர் முதலில் அறிகுறி இல்லாமலும், பின்னர் அறிகுறி தென்பட்டவர்களும் ஆவர். மீதமுள்ள 58 சதவீதத்தினர் தொடக்கத்திலேயே அறிகுறி கொண்டவர்கள்.
சியோல் தேசிய மருத்துவப்பல்கலைக்கழகம், அமெரிக்காவின் தி ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகம் போன்ற மருத்துவ நிறுவனங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட பல நிபுணர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் ஜாமா குழந்தை மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன.
3 வாரங்களுக்கும் மேலாக...
அதன்படி, குழந்தைகளின் உடலில் எவ்வளவு நாட்கள் கொரோனா வைரஸ் இருக்கிறது? என்பதை கண்டறிவதற்காக குழந்தைகள் அனைவருக்கும் சராசரியாக 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் சராசரியாக 2½ வாரங்கள் வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், அறிகுறியற்ற நோயாளர்களில் 5-ல் ஒரு பகுதியினருக்கும், அறிகுறியுள்ள நோயாளர்களில் பாதி பேருக்கும் 3 வாரங்களுக்கும் மேலாக வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு ஆளான குழந்தைகள் பல வாரங்களுக்கு அறிகுறிகளுடன் இருக்க முடியும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வைரஸ் மரபணுக்கள்
அதேநேரம் அறிகுறியற்ற குழந்தைகள் கூட தொடக்க கட்ட சோதனைக்குப்பிறகு நீண்ட நாட்களுக்கு வைரசின் கூடாரமாக இருந்துள்ளனர். இதனால் அவர்கள் நோய் பரப்பும் முக்கிய காரணிகளாக இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட்டா எல்.தெபியாசி உள்ளிட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கலாம். ஏனெனில் அறிகுறி இல்லாமலோ, அறிகுறிகள் அனைத்தும் குணமடைந்த பின்னரோ, குழந்தைகளிடம் எதிர்பார்க்காத வகையில் நீண்ட காலத்துக்கு வைரஸ் மரபணுக்கள் இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளனர்.
இப்படி மருந்துகளுக்கான தேடல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனா குறித்த ஆய்வுகளும் வேகமெடுத்து வருகின்றன. குறிப்பாக வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு, எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? எந்தெந்த நோயாளிகள் வைரசின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாண்டு விடுகிறார்கள்? என்பது போன்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடக்கின்றன.
இந்த வரிசையில் கொரோனாவுக்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்? அவர்களது உடலில் கொரோனாவின் வாழ்நாள் எவ்வளவு காலம்? அது ஏற்படுத்தும் அறிகுறிகள்? என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தென்கொரிய குழந்தைகளிடம் சோதனை
குறிப்பாக தென்கொரியாவின் 22 மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 91 குழந்தைகளிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 22 சதவீத குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லை. 20 சதவீதத்தினர் முதலில் அறிகுறி இல்லாமலும், பின்னர் அறிகுறி தென்பட்டவர்களும் ஆவர். மீதமுள்ள 58 சதவீதத்தினர் தொடக்கத்திலேயே அறிகுறி கொண்டவர்கள்.
சியோல் தேசிய மருத்துவப்பல்கலைக்கழகம், அமெரிக்காவின் தி ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகம் போன்ற மருத்துவ நிறுவனங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட பல நிபுணர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் ஜாமா குழந்தை மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன.
3 வாரங்களுக்கும் மேலாக...
அதன்படி, குழந்தைகளின் உடலில் எவ்வளவு நாட்கள் கொரோனா வைரஸ் இருக்கிறது? என்பதை கண்டறிவதற்காக குழந்தைகள் அனைவருக்கும் சராசரியாக 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் சராசரியாக 2½ வாரங்கள் வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், அறிகுறியற்ற நோயாளர்களில் 5-ல் ஒரு பகுதியினருக்கும், அறிகுறியுள்ள நோயாளர்களில் பாதி பேருக்கும் 3 வாரங்களுக்கும் மேலாக வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு ஆளான குழந்தைகள் பல வாரங்களுக்கு அறிகுறிகளுடன் இருக்க முடியும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வைரஸ் மரபணுக்கள்
அதேநேரம் அறிகுறியற்ற குழந்தைகள் கூட தொடக்க கட்ட சோதனைக்குப்பிறகு நீண்ட நாட்களுக்கு வைரசின் கூடாரமாக இருந்துள்ளனர். இதனால் அவர்கள் நோய் பரப்பும் முக்கிய காரணிகளாக இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட்டா எல்.தெபியாசி உள்ளிட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கலாம். ஏனெனில் அறிகுறி இல்லாமலோ, அறிகுறிகள் அனைத்தும் குணமடைந்த பின்னரோ, குழந்தைகளிடம் எதிர்பார்க்காத வகையில் நீண்ட காலத்துக்கு வைரஸ் மரபணுக்கள் இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குழந்தைகளை வெளி இடங்களுக்கு அழைத்து சென்றால் குஷியாகிவிடுவார்கள். கடற்கரை, பூங்கா, தீம்பார்க் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள்தான் அவர்களின் உலகமாக இருக்கும்.
வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குழந்தைகளை வெளி இடங்களுக்கு அழைத்து சென்றால் குஷியாகிவிடுவார்கள். கடற்கரை, பூங்கா, தீம்பார்க் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள்தான் அவர்களின் உலகமாக இருக்கும். ஆனால் லியோ - ஜெசிகா ஹால்டிங் தம்பதியரோ தங்களின் குழந்தைகளை சாகச பயணங்களில் ஈடுபடவைத்து அசத்தி இருக்கிறார்கள்.
மலையேற்றம் செய்வதுதான் இந்த தம்பதியருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மலையேற்றம் செய்ய சென்றுவிடுவார்கள். இவர்களுக்கு 7 வயதில் ப்ரேயா என்ற மகளும், 3 வயதில் ஜாக்சன் என்ற மகனும் இருக்கிறார்கள். அவர்களின் விடுமுறை காலம் மகிழ்ச்சியாக கழிய வேண்டும் என்று விரும்பியவர்கள், தங்களின் சாகச பயணத்திற்கு உடன் அழைத்து சென்று ஆனந்தப்படுத்தி இருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்து-இத்தாலி நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பிஸ் பாடிலே மலை சிகரத்திற்கு குடும்பத்துடன் மலையேற்றம் மேற்கொண்டிருக்கிறார்கள். சுமார் 11 ஆயிரம் அடி கொண்ட அந்த மலை சிகரத்தின் மீது தாயின் அரவணைப்புடன் சிறுவன் ஜாக்சன் பயமின்றி மலையேறும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. 15 கிலோ எடை கொண்ட ஜாக்சனை ஜெசிகா முதுகில் சுமந்து கொண்டு சர்வ சாதாரணமாக மலை ஏறுகிறார். தனக்கு முன்னால் மகள் ப்ரேயாவை கயிற்று முனையில் நடக்க விட்டு பின் தொடர்கிறார். ப்ரேயாவும் பயமின்றி தந்தைக்கும், தாய்க்கும் இடையே கயிற்றின் பிடியில் உற்சாகத்துடன் பயணத்தை தொடர்கிறார். லியோ பயணத்திற்கு தேவை யான உடமைகளை முதுகில் சுமந்து சென்றபடி மகளுக்கு வழிகாட்டுகிறார். மூன்றே நாட்களில் சாகச பயணத்தை முடித்து அசத்தி இருக்கிறார்கள். ஒரு நாள் இரவு மட்டும் மலையில் தங்கி இருக்கிறார்கள்.
“சில ஆண்டுகளாக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் கொஞ்ச நாட் கள் மலையேற்றம் செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் நெருங்கும்போது குழந்தைகள் பெரியவர்களாகிவிடுகிறார்கள். கடந்த ஆண்டுகளை விட தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்கிறார்கள். ஸ்லோவேனியாவில் உள்ள டிரிக்லாவ் மலை சிகரத்திற்கு சென்றிருக்கிறோம். ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது இந்த மலை சிகரம் சிரமமானது” என்கிறார், லியோ.
மலையேற்றம் செய்வதுதான் இந்த தம்பதியருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மலையேற்றம் செய்ய சென்றுவிடுவார்கள். இவர்களுக்கு 7 வயதில் ப்ரேயா என்ற மகளும், 3 வயதில் ஜாக்சன் என்ற மகனும் இருக்கிறார்கள். அவர்களின் விடுமுறை காலம் மகிழ்ச்சியாக கழிய வேண்டும் என்று விரும்பியவர்கள், தங்களின் சாகச பயணத்திற்கு உடன் அழைத்து சென்று ஆனந்தப்படுத்தி இருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்து-இத்தாலி நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பிஸ் பாடிலே மலை சிகரத்திற்கு குடும்பத்துடன் மலையேற்றம் மேற்கொண்டிருக்கிறார்கள். சுமார் 11 ஆயிரம் அடி கொண்ட அந்த மலை சிகரத்தின் மீது தாயின் அரவணைப்புடன் சிறுவன் ஜாக்சன் பயமின்றி மலையேறும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. 15 கிலோ எடை கொண்ட ஜாக்சனை ஜெசிகா முதுகில் சுமந்து கொண்டு சர்வ சாதாரணமாக மலை ஏறுகிறார். தனக்கு முன்னால் மகள் ப்ரேயாவை கயிற்று முனையில் நடக்க விட்டு பின் தொடர்கிறார். ப்ரேயாவும் பயமின்றி தந்தைக்கும், தாய்க்கும் இடையே கயிற்றின் பிடியில் உற்சாகத்துடன் பயணத்தை தொடர்கிறார். லியோ பயணத்திற்கு தேவை யான உடமைகளை முதுகில் சுமந்து சென்றபடி மகளுக்கு வழிகாட்டுகிறார். மூன்றே நாட்களில் சாகச பயணத்தை முடித்து அசத்தி இருக்கிறார்கள். ஒரு நாள் இரவு மட்டும் மலையில் தங்கி இருக்கிறார்கள்.
“சில ஆண்டுகளாக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் கொஞ்ச நாட் கள் மலையேற்றம் செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் நெருங்கும்போது குழந்தைகள் பெரியவர்களாகிவிடுகிறார்கள். கடந்த ஆண்டுகளை விட தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்கிறார்கள். ஸ்லோவேனியாவில் உள்ள டிரிக்லாவ் மலை சிகரத்திற்கு சென்றிருக்கிறோம். ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது இந்த மலை சிகரம் சிரமமானது” என்கிறார், லியோ.
ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நூலகம், ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும், தனித்துவமும் கிடைக்கும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்பதனை திருக்குறளின் முதல் குறளாக அமைத்துள்ளார் திருவள்ளுவர். என் போன்ற மாணவர்களின் அகவிருள் அகற்றி அறிவொளி ஏற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு இந்த ஆசிரியர் தினத்தில் எம் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிரியர்கள் இல்லாத மனித வாழ்வு என்பது இருக்க இயலாது. படித்து பட்டம் பெற்றவனுக்கும், படிக்காமல் பட்டறிவு பெற்றவனுக்கும் என்றும் மூலதனம் அவன் பெற்ற ஆசிரியர்கள்தான். ஆசிரியருக்கு மட்டும் என்றும் அந்த தனித்தன்மையுண்டு. மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கம், படிப்பு என அறிவுக்கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே.
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுக்கின்றவர்கள் ஆசிரியர்கள். உலகில் உள்ள பெரிய மனிதராக இருக்கட்டும், சிறியளவில் வாழ்பவராக இருக்கட்டும் இருதரப்பிற்கும் வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் ஆவார் என்று கூறியவர் மக்கள் குடியரசுத்தலைவர் என்று போற்றப்பட்ட அப்துல்கலாம் அவர்கள், வகுப்பறையை குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.
“நாட்டின் மிகச்சிறந்த அறிவு வகுப்பறையின் கடைசி இருக்கையில் இருக்கலாம் என்று.
ஒன்றுமற்ற ஒரு கல்லை ஒரு சிற்பி செதுக்கி எவ்வாறு அழகிய சிலையை வடிவமைக்கிறானோ, அவ்வாறே மண்ணாக இருந்த எம்மை மாணிக்க கல்லாக மாற்றியது தலைசிறந்த சிற்பிகாளக்கிய ஆசிரியர்களே. எனவே தான் நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.
ஆசிரியரின் பெருமை
ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நூலகம், ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும், தனித்துவமும் கிடைக்கும். உண்மையில் ஒரு மாணவனுக்கு தனது திறனை அடையாளம் காட்டுபவராக, வாழ்வின் அர்த்தங்களை உணர்விக்கின்றவராக இருப்பவர்தான் ஆசிரியர். மாணவ-மாணவிகளின் முதுகெலும்பாக விளங்குகின்ற ஆசிரியரை கவுரவப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும், முனைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அவரது வேண்டு கோளுக்கு இணங்க 1962-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடப் பட்டு வருகிறது. இவ்வண்ண மயமான நாளில் வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் தெரிவித்து ஆசிரியர் தினத்தை கொண்டாடுவோம்.
பகவன் முதற்றே உலகு
என்பதனை திருக்குறளின் முதல் குறளாக அமைத்துள்ளார் திருவள்ளுவர். என் போன்ற மாணவர்களின் அகவிருள் அகற்றி அறிவொளி ஏற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு இந்த ஆசிரியர் தினத்தில் எம் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிரியர்கள் இல்லாத மனித வாழ்வு என்பது இருக்க இயலாது. படித்து பட்டம் பெற்றவனுக்கும், படிக்காமல் பட்டறிவு பெற்றவனுக்கும் என்றும் மூலதனம் அவன் பெற்ற ஆசிரியர்கள்தான். ஆசிரியருக்கு மட்டும் என்றும் அந்த தனித்தன்மையுண்டு. மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கம், படிப்பு என அறிவுக்கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே.
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுக்கின்றவர்கள் ஆசிரியர்கள். உலகில் உள்ள பெரிய மனிதராக இருக்கட்டும், சிறியளவில் வாழ்பவராக இருக்கட்டும் இருதரப்பிற்கும் வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் ஆவார் என்று கூறியவர் மக்கள் குடியரசுத்தலைவர் என்று போற்றப்பட்ட அப்துல்கலாம் அவர்கள், வகுப்பறையை குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.
“நாட்டின் மிகச்சிறந்த அறிவு வகுப்பறையின் கடைசி இருக்கையில் இருக்கலாம் என்று.
ஒன்றுமற்ற ஒரு கல்லை ஒரு சிற்பி செதுக்கி எவ்வாறு அழகிய சிலையை வடிவமைக்கிறானோ, அவ்வாறே மண்ணாக இருந்த எம்மை மாணிக்க கல்லாக மாற்றியது தலைசிறந்த சிற்பிகாளக்கிய ஆசிரியர்களே. எனவே தான் நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.
ஆசிரியரின் பெருமை
ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நூலகம், ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும், தனித்துவமும் கிடைக்கும். உண்மையில் ஒரு மாணவனுக்கு தனது திறனை அடையாளம் காட்டுபவராக, வாழ்வின் அர்த்தங்களை உணர்விக்கின்றவராக இருப்பவர்தான் ஆசிரியர். மாணவ-மாணவிகளின் முதுகெலும்பாக விளங்குகின்ற ஆசிரியரை கவுரவப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும், முனைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அவரது வேண்டு கோளுக்கு இணங்க 1962-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடப் பட்டு வருகிறது. இவ்வண்ண மயமான நாளில் வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் தெரிவித்து ஆசிரியர் தினத்தை கொண்டாடுவோம்.
கொரோனாவால் அரிய வகை நோய் சிறுவர்களை தாக்குவதாகவும், இதனால் பெற்றோர் விழிப்புடன் இருக்கும்படியும் டாக்டர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமான மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த 7 வயது சிறுவன் கடந்த 10-ந் தேதி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். அவனுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி பிரச்சினை இருந்தது. மேலும் அவனது இதய துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தம் குறைவானது. இதனால் அவனது உடல்நிலை மோசமானது.
இதையடுத்து நடந்த சோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ‘‘ஹைப்பர் இன்பிலேமட்டரி சின்ட்ரோம்’’ என்ற அரியவகை நோய் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் மூலம் சிறுவன் அந்த பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளான்.
இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘‘முதல் கட்ட சிகிச்சையின் போது சிறுவனின் உடல் சோடியம் குளோரைடு, ஆக்சிஜன், இருதய அழுத்தத்தை அதிகரிக்கும் பல்வேறு மருந்துகளை ஏற்று கொண்டது. அதன்பிறகு அவனுக்கு ஸ்டெராய்டு கொடுக்கப்பட்டது. எனினும் சிறுவனின் இருதயம், நுரையீரல், வயிறு, கல்லீரலில் பாதிப்புகள் இருந்தன. இறுதியில் சிறுவனுக்கு டோசிலிசுமாப் மருந்து செலுத்தப்பட்டது. அதன்பிறகு அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது’’ என்றார்.
வழக்கமாக இந்த அரிய வகை பாதிப்பு கொரோனாவால் சிறுவர்களை தாக்கி வருகிறது. எனவே சிறுவர்களை கொரோனா தாக்கும் போது பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த பாதிப்பை விரைவில் கண்டறிந்தால் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற முடியும் எனவும் டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.
இதையடுத்து நடந்த சோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ‘‘ஹைப்பர் இன்பிலேமட்டரி சின்ட்ரோம்’’ என்ற அரியவகை நோய் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் மூலம் சிறுவன் அந்த பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளான்.
இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘‘முதல் கட்ட சிகிச்சையின் போது சிறுவனின் உடல் சோடியம் குளோரைடு, ஆக்சிஜன், இருதய அழுத்தத்தை அதிகரிக்கும் பல்வேறு மருந்துகளை ஏற்று கொண்டது. அதன்பிறகு அவனுக்கு ஸ்டெராய்டு கொடுக்கப்பட்டது. எனினும் சிறுவனின் இருதயம், நுரையீரல், வயிறு, கல்லீரலில் பாதிப்புகள் இருந்தன. இறுதியில் சிறுவனுக்கு டோசிலிசுமாப் மருந்து செலுத்தப்பட்டது. அதன்பிறகு அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது’’ என்றார்.
வழக்கமாக இந்த அரிய வகை பாதிப்பு கொரோனாவால் சிறுவர்களை தாக்கி வருகிறது. எனவே சிறுவர்களை கொரோனா தாக்கும் போது பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த பாதிப்பை விரைவில் கண்டறிந்தால் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற முடியும் எனவும் டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.
உலக நாடுகளையெல்லாம், உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து கதி கலங்க வைத்து வருகிறது. 2 கோடியே 32 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர். ஆனாலும் கொரோனாவில் மரணப்பசி தீரவில்லை. அதே வேளையில் இன்னும் அதை தடுத்து நிறுத்த தடுப்பூசியோ, சிகிச்சைக்கான மருந்துகளோ சந்தைக்கு வந்தபாடில்லை.
ஆனால் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் இந்த புள்ளிவிவரங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கக்கூடும், போதுமான அளவுக்கு உலக நாடுகளில் பரிசோதனைகள் நடத்தப்படாததும், அறிகுறிகள் அற்று கொரோனாவால் பாதிப்பு ஏற்படுவதாலும், உண்மையான பாதிப்பு விவரம் இன்னும் தெரியவில்லை என்றே சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.
தற்போது கொரோனா தென்கொரியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் லெபனானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில், 12 வயது மற்றும் அதற்கு அதிகமான வயது குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.
குறிப்பாக மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்துக்காவது இடைவெளி உத்தரவாதம் தர முடியாதபோது, கண்டிப்பாக கொரோனா பரவும் நிலை உள்ளதால் கண்டிப்பாக இந்த வயது குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டும்.
6 முதல் 11 வயது குழந்தைகளை பொறுத்தமட்டில், அவர்கள் பகுதியில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பதையும், முதியவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்களுடன் குழந்தைகள் தொடர்பில் இருக்கிற நிலை உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. இத்தகைய குழந்தைகள் முக கவசத்தை அணிந்து கொள்ளவும், அகற்றவும் பெரியவர்கள் உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது அடிப்படை உடல்நல பிரச்சினை உடையவர்கள் கண்டிப்பாக மருத்துவ முக கவசம் அணிதல் வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் சொல்லி இருக்கிறது.
சமீபத்தில் 11 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது குழந்தைகள் முக கவசம் அணிவதை பிரான்ஸ் கட்டாயம் ஆக்கி உள்ளதும், இங்கிலாந்தில் நிறைய பள்ளிக்கூடங்கள் இப்படிப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.
ஆனால் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் இந்த புள்ளிவிவரங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கக்கூடும், போதுமான அளவுக்கு உலக நாடுகளில் பரிசோதனைகள் நடத்தப்படாததும், அறிகுறிகள் அற்று கொரோனாவால் பாதிப்பு ஏற்படுவதாலும், உண்மையான பாதிப்பு விவரம் இன்னும் தெரியவில்லை என்றே சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.
தற்போது கொரோனா தென்கொரியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் லெபனானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில், 12 வயது மற்றும் அதற்கு அதிகமான வயது குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.
குறிப்பாக மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்துக்காவது இடைவெளி உத்தரவாதம் தர முடியாதபோது, கண்டிப்பாக கொரோனா பரவும் நிலை உள்ளதால் கண்டிப்பாக இந்த வயது குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டும்.
6 முதல் 11 வயது குழந்தைகளை பொறுத்தமட்டில், அவர்கள் பகுதியில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பதையும், முதியவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்களுடன் குழந்தைகள் தொடர்பில் இருக்கிற நிலை உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. இத்தகைய குழந்தைகள் முக கவசத்தை அணிந்து கொள்ளவும், அகற்றவும் பெரியவர்கள் உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது அடிப்படை உடல்நல பிரச்சினை உடையவர்கள் கண்டிப்பாக மருத்துவ முக கவசம் அணிதல் வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் சொல்லி இருக்கிறது.
சமீபத்தில் 11 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது குழந்தைகள் முக கவசம் அணிவதை பிரான்ஸ் கட்டாயம் ஆக்கி உள்ளதும், இங்கிலாந்தில் நிறைய பள்ளிக்கூடங்கள் இப்படிப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.






