என் மலர்
குழந்தை பராமரிப்பு
கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் சூடான விவாத தலைப்பாக மாறி விட்டது.
கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் சூடான விவாத தலைப்பாக மாறி விட்டது. பெரும்பாலான குழந்தைகள் மனதில், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் கொடிய வைரஸாக கொரோனா பதிந்துபோய்விட்டது. குழந்தைகள் வெளியே சென்று விளையாடக்கூடாது என்ற எண்ணத்தில் கொரோனா பற்றிய தவறான அபிப்பிராயமும் அவர்களிடத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. அவர்களை பயமுறுத்துவதற்கு பதிலாக சரியான தகவல்களை அளித்து தைரியமூட்டுவது இன்றியமையாதது.
குழந்தைகளிடம் சரியான தகவல் பகிரப் பட்டால் அவர்கள் மனதில் எழும் குழப்பங்கள் நீங்கிவிடும். வைரஸ் பிடியில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கு கொரோனா வைரஸைப் பற்றிய விழிப்புணர்வை இணையதளங்கள் வழியாக ஏற்படுத்தும் பணியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
கொரோனா வைரஸைப் பற்றி குழந்தைகளுக்கு என்னென்ன தகவல்களெல்லாம் தெரியும் என்று அவர்களிடம் கேளுங்கள். அப்போது அவர்கள் கூறும் தவறான தகவல்களுக்கு சரியான விளக்கம் கொடுங்கள். உதாரணமாக, கிருமி நாசினியை கொண்டு கைகளை கழுவினால் கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்று குழந்தைகள் கூறினால் அது எவ்வாறு சாத்தியம் என்பதை விளக்கி புரியவைக்கலாம்.
குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய சரியான தகவல்களைக் கொடுத்த பிறகு சுகாதாஇரத்தின் முக்கியத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏன் பற்களை சுத்தம் செய்ய வேண்டும், கைகளை ஏன் அடிக்கடி கழுவ வேண்டும் என்பது பற்றி தெளிவுபடுத்தலாம். தரையில் கிடக்கும் உணவு பொருட்களை ஏன் சாப்பிடக்கூடாது, வாய், மூக்கு, கண்களை ஏன் அடிக்கடி தொடக் கூடாது என்பதை விளக்கி புரியவைக்கலாம். கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள பொம்மைகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கலாம். உங்களுக்கு சரியாக தெரியாத விஷயங்களுக்கு யூகமாகவோ, பொய்யாகவோ எந்த தகவலையும் குழந்தைகளிடம் பகிரக்கூடாது.
குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும், வானொலியைக் கேட்கும்போதும், இணையதளங்களை பயன்படுத்தும்போதும் குழந்தைகளுடன் தொடர்பில் இருப்பது அவசியம். இணையத்தில் பல வலைத்தளங்கள் தவறான தகவல்களை வழங்குகின்றன. அதனால் கவனமாக குழந்தைகளை கையாள வேண்டும். அரசாங்க வலைத்தளங்கள், யுனிசெப் அல்லது உலக சுகாதார அமைப்பு வலைத்தளங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை குழந்தைகளுக்கு தெரியப்படுத்துங்கள். கொரோனா வைரஸ் பற்றிய பயத்தை அவர்களின் மனதில் இருந்து அகற்றும் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள்.
குழந்தைகளிடம் சரியான தகவல் பகிரப் பட்டால் அவர்கள் மனதில் எழும் குழப்பங்கள் நீங்கிவிடும். வைரஸ் பிடியில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கு கொரோனா வைரஸைப் பற்றிய விழிப்புணர்வை இணையதளங்கள் வழியாக ஏற்படுத்தும் பணியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
கொரோனா வைரஸைப் பற்றி குழந்தைகளுக்கு என்னென்ன தகவல்களெல்லாம் தெரியும் என்று அவர்களிடம் கேளுங்கள். அப்போது அவர்கள் கூறும் தவறான தகவல்களுக்கு சரியான விளக்கம் கொடுங்கள். உதாரணமாக, கிருமி நாசினியை கொண்டு கைகளை கழுவினால் கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்று குழந்தைகள் கூறினால் அது எவ்வாறு சாத்தியம் என்பதை விளக்கி புரியவைக்கலாம்.
குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய சரியான தகவல்களைக் கொடுத்த பிறகு சுகாதாஇரத்தின் முக்கியத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏன் பற்களை சுத்தம் செய்ய வேண்டும், கைகளை ஏன் அடிக்கடி கழுவ வேண்டும் என்பது பற்றி தெளிவுபடுத்தலாம். தரையில் கிடக்கும் உணவு பொருட்களை ஏன் சாப்பிடக்கூடாது, வாய், மூக்கு, கண்களை ஏன் அடிக்கடி தொடக் கூடாது என்பதை விளக்கி புரியவைக்கலாம். கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள பொம்மைகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கலாம். உங்களுக்கு சரியாக தெரியாத விஷயங்களுக்கு யூகமாகவோ, பொய்யாகவோ எந்த தகவலையும் குழந்தைகளிடம் பகிரக்கூடாது.
குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும், வானொலியைக் கேட்கும்போதும், இணையதளங்களை பயன்படுத்தும்போதும் குழந்தைகளுடன் தொடர்பில் இருப்பது அவசியம். இணையத்தில் பல வலைத்தளங்கள் தவறான தகவல்களை வழங்குகின்றன. அதனால் கவனமாக குழந்தைகளை கையாள வேண்டும். அரசாங்க வலைத்தளங்கள், யுனிசெப் அல்லது உலக சுகாதார அமைப்பு வலைத்தளங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை குழந்தைகளுக்கு தெரியப்படுத்துங்கள். கொரோனா வைரஸ் பற்றிய பயத்தை அவர்களின் மனதில் இருந்து அகற்றும் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள்.
பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சுபவர்கள் பெரும்பாலும் இடதுபுற தோளில்தான் குழந்தைகளை அரவணைப்பார்கள். குழந்தைகளும் அதைத்தான் விரும்பும்.
பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சு பவர்கள் பெரும்பாலும் இடதுபுற தோளில்தான் குழந்தைகளை அரவணைப்பார்கள். தாயும் குழந்தையை இடது புற தோள்பட்டையில்தான் வைத்திருப்பார். குழந்தைகளும் அதைத்தான் விரும்பும். குழந்தைகளை அப்படி இடதுபுறத்தில் தூக்கி வைப்பவர்கள் பெரும்பாலும் வலது கை பழக்கம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தையை தூக்குவதற்கு வலது கையை பயன்படுத்தினாலும் வலது தோள்பட்டையில் அரவணைப்பதில்லை. அது குழந்தையை வைத்திருப்பதற்கு சவுகரியமாக இருக்காது என்று கருதினாலும் அறிவியல் ரீதியாக அதற்கு காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.
1960-ம் ஆண்டிலேயே ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றிய ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். 40 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 72 சதவீதம் பேர் இடது தோள்பட்டையில்தான் குழந்தைகளை வைத்திருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வலது கை பழக்கம் கொண்டவர்கள். அவர்களுடைய மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்ததில் அது உணர்வு ரீதியான பந்தத்தை வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டது. கர்ப்ப காலத்திலேயே பாதுகாப்பான மற்றும் உணர்வு ரீதியான தொடர்பை தாய்க்கும், சேய்க்கும் இடையே உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பதும் தெரியவந்துள்ளது.
அதாவது இதயம் உடலின் இடது பகுதியில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் இதயத் துடிப்பு தெரியும். அந்த துடிப்புடன் நெருக்கமாக இருக்க விரும்பும். குழந்தை அழும்போது தாய் தூக்கி இடது பக்கத்தில் வைக்கும்போது சில நிமிடங்களில் அமைதியாகி விடும். இடது தோள்பட்டையில் சிறிது நேரம் வைத்திருந்தால் தூங்கியும் விடும். தாயின் அரவணைப்பில் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளும். தாயின் உணர்வுகளையும், சமிக்ஞைகளையும் புரிந்து கொள்ளும். அதுவே குழந்தையின் மொழி சமிக்ஞைக்கும் அடித்தளம் அமைத்து கொடுக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
1960-ம் ஆண்டிலேயே ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றிய ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். 40 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 72 சதவீதம் பேர் இடது தோள்பட்டையில்தான் குழந்தைகளை வைத்திருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வலது கை பழக்கம் கொண்டவர்கள். அவர்களுடைய மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்ததில் அது உணர்வு ரீதியான பந்தத்தை வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டது. கர்ப்ப காலத்திலேயே பாதுகாப்பான மற்றும் உணர்வு ரீதியான தொடர்பை தாய்க்கும், சேய்க்கும் இடையே உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பதும் தெரியவந்துள்ளது.
அதாவது இதயம் உடலின் இடது பகுதியில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் இதயத் துடிப்பு தெரியும். அந்த துடிப்புடன் நெருக்கமாக இருக்க விரும்பும். குழந்தை அழும்போது தாய் தூக்கி இடது பக்கத்தில் வைக்கும்போது சில நிமிடங்களில் அமைதியாகி விடும். இடது தோள்பட்டையில் சிறிது நேரம் வைத்திருந்தால் தூங்கியும் விடும். தாயின் அரவணைப்பில் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளும். தாயின் உணர்வுகளையும், சமிக்ஞைகளையும் புரிந்து கொள்ளும். அதுவே குழந்தையின் மொழி சமிக்ஞைக்கும் அடித்தளம் அமைத்து கொடுக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நீங்கள் உங்கள் குழந்தையை ஏசி அறையில் உறங்க வைக்கின்றீர்கள் என்றால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
உடல் முழுவதும் பரவிய ஆடையை உங்கள் குழந்தைக்கு அணிவித்து விடுங்கள். கால்களுக்கு சாக்ஸூம் கைகளுக்கு கிளவுஸும் அணிந்து விடுங்கள். அல்லது உங்கள் குழந்தையின் முகத்தைத் தவிர்த்து உடல் முழுவதையும் போர்த்தி விடுங்கள்.
தொடர்ந்து ஏசியை பயன் படுத்துவதால், அதற்குள் பல தூசிகள் படிந்திருக்கும். அதனால் அவ்வப்போது ஏசியின் மேல் பாகத்தைக் கழட்டி பில்டரை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் தூசி படிந்த ஏசி காற்றின் மூலமாகக் குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விடும்.
உடனே சூடான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம். குழந்தையை நீங்கள் ஏசி அறையில் இருந்து எடுத்துச் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். உடனே அதிக வெயில் படும் இடத்திற்காே அல்லது சூடான இடத்திற்கோ எடுத்துச் செல்லக்கூடாது. திடீர் தட்பவெப்ப நிலை மாற்றம் குழந்தையின் உடலைப் பாதிக்கும்.
தினம் ஏசி பயன்பாட்டிற்கு முன்னர், குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அறையில் உள்ள கதவுகள் ஜன்னல்கள் மற்றும் திரைச் சீலைகளை முழுவதுமாக நீக்கி வையுங்கள்.இதனால் பழைய காற்று வெளியேறி புதிய சுத்தமான காற்று அறையின் உள்ளே பரவும். கூடுதலாக போதிய சூரிய வெளிச்சம் அறையில் பரவ சாத்தியம் ஏற்படும். இதனால் அறையில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும்.
தொடர்ந்து ஏசியை பயன் படுத்துவதால், அதற்குள் பல தூசிகள் படிந்திருக்கும். அதனால் அவ்வப்போது ஏசியின் மேல் பாகத்தைக் கழட்டி பில்டரை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் தூசி படிந்த ஏசி காற்றின் மூலமாகக் குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விடும்.
உடனே சூடான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம். குழந்தையை நீங்கள் ஏசி அறையில் இருந்து எடுத்துச் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். உடனே அதிக வெயில் படும் இடத்திற்காே அல்லது சூடான இடத்திற்கோ எடுத்துச் செல்லக்கூடாது. திடீர் தட்பவெப்ப நிலை மாற்றம் குழந்தையின் உடலைப் பாதிக்கும்.
தினம் ஏசி பயன்பாட்டிற்கு முன்னர், குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அறையில் உள்ள கதவுகள் ஜன்னல்கள் மற்றும் திரைச் சீலைகளை முழுவதுமாக நீக்கி வையுங்கள்.இதனால் பழைய காற்று வெளியேறி புதிய சுத்தமான காற்று அறையின் உள்ளே பரவும். கூடுதலாக போதிய சூரிய வெளிச்சம் அறையில் பரவ சாத்தியம் ஏற்படும். இதனால் அறையில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும்.
மழலையர் பள்ளியில் பல்வேறு விதமான கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் சில முக்கியமான கல்வி திட்ட அணுகுமுறைகள் குறித்து பார்ப்போம்.
மழலையர் பள்ளியில் பல்வேறு விதமான கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் சில முக்கியமான கல்வி திட்ட அணுகுமுறைகள் குறித்து பார்ப்போம்.
மாண்டிச்சேரி
வித்தியாசமான வகுப்பறை, விளையாட்டு வடிவில் பாடத்திட்டம், வயது வித்தியாசம் இல்லாத வகுப்பு தோழர்கள்... என பட்டைய கிளப்புகிறது, மாண்டிச்சேரி கல்விமுறை. உலகம் முழுக்க 20 ஆயிரம் பள்ளிகளில் இந்தக் கல்வி முறை பின்பற்றப்படுகிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், சப்பாத்தி மாவு பிசைதல், காய்கறிகளை வெட்டுதல், பொருட்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற அன்றாட வேலைகளில் இருந்தும் கல்வி கற்பிக்கப்படும்.
வால்டோர்ப்
‘சிந்தனை செய், முயன்று பார், கற்றுக்கொள்’ என்பதுதான் வால்டோர்ப் முறையின் அடிப்படை. அதாவது குழந்தைகளுக்கு எதை கற்பிக்க இருக்கிறார்களோ, அதை பற்றி கற்பித்து, அதை காண்பித்து, அதை உணர்வுப்பூர்வமாக மனதில் பதியவைக்கிறார்கள். கல்வி மட்டுமின்றி, இசை, நடனம் போன்றவற்றுக்கும் இதில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். திங்கட்கிழமை இசை, செவ்வாய் கதை சொல்லுதல் என வகுப்பு ஜாலியாக நகரும்.
பேரண்ட் கோ-ஆப்ரேஷன்
பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து செயல்படுவதே இந்த கற்றல் முறையின் நோக்கமாகும். பெற்றோர் வகுப்பறையில் அமர்ந்து தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கும் இந்த கற்றல்முறை வழிவகை செய்கிறது. பெற்றோர் வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் சுழன்று பிள்ளைகள் பாடங்களை கவனிப்பதற்கு உதவுகிறார்கள்.
ரெஜியோ எமிலியா
சுய ஒழுக்கம், குழந் தைகளுக்கான பொறுப்புகள், சமூகம் ஆகிய மூன்றையும் மையப்படுத்தும் கல்விமுறைதான் ரெஜியோ எமிலியா. மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழகவிட்டு, நட்புறவை வளர்த்து அதன்மூலம் கல்வியை கொண்டு செல்கிறார்கள். செயல்முறை கல்விக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
ஹைஸ்கோப்
மாணவர்கள் தாங்கள் விரும்பிய திறன்களை அல்லது இலக்கை அடைய தாங்களாகவே திட்டமிடும் கல்விமுறை இது. இளம் மாணவர்களின் தேவைகளையும், கேள்விகளையும் புரிந்துகொள்வதற்கும் அவர்களின் கற்றலை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த கல்வி முறை விளங்கும்.
பேங்க் ஸ்டிரீட்
ஒவ்வொருவரின் தனித்துவமான உணர்ச்சி, சமூக மற்றும் அறிவுசார் அம்சங்களை வளர்க்கும் வகுப்பறையை உருவாக்குவதே இந்த கல்வி முறையின் நோக்கமாகும். ஒவ்வொரு வயதிலும் நிகழும் உணர்ச்சி மற்றும் அறிவுசார் மாற்றங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு பாடத்தையும் எவ்வாறு அணுகுவது என்பதையும் குறிப்பிடுகிறது. உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அர்த்தமுள்ள வகையில் கல்வி கற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்த மழலையர் கல்வி திட்டங்கள் வெளிநாடுகளில் நடைமுறையில் இருப்பவை என்று எண்ணி விடாதீர்கள். நம் நாட்டிலும், நமக்கு அருகில் இருக்கும் பல பள்ளிக்கூடங்களிலும் இந்த கல்வி முறை நடைமுறையில் இருக்கிறது.
மாண்டிச்சேரி
வித்தியாசமான வகுப்பறை, விளையாட்டு வடிவில் பாடத்திட்டம், வயது வித்தியாசம் இல்லாத வகுப்பு தோழர்கள்... என பட்டைய கிளப்புகிறது, மாண்டிச்சேரி கல்விமுறை. உலகம் முழுக்க 20 ஆயிரம் பள்ளிகளில் இந்தக் கல்வி முறை பின்பற்றப்படுகிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், சப்பாத்தி மாவு பிசைதல், காய்கறிகளை வெட்டுதல், பொருட்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற அன்றாட வேலைகளில் இருந்தும் கல்வி கற்பிக்கப்படும்.
வால்டோர்ப்
‘சிந்தனை செய், முயன்று பார், கற்றுக்கொள்’ என்பதுதான் வால்டோர்ப் முறையின் அடிப்படை. அதாவது குழந்தைகளுக்கு எதை கற்பிக்க இருக்கிறார்களோ, அதை பற்றி கற்பித்து, அதை காண்பித்து, அதை உணர்வுப்பூர்வமாக மனதில் பதியவைக்கிறார்கள். கல்வி மட்டுமின்றி, இசை, நடனம் போன்றவற்றுக்கும் இதில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். திங்கட்கிழமை இசை, செவ்வாய் கதை சொல்லுதல் என வகுப்பு ஜாலியாக நகரும்.
பேரண்ட் கோ-ஆப்ரேஷன்
பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து செயல்படுவதே இந்த கற்றல் முறையின் நோக்கமாகும். பெற்றோர் வகுப்பறையில் அமர்ந்து தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கும் இந்த கற்றல்முறை வழிவகை செய்கிறது. பெற்றோர் வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் சுழன்று பிள்ளைகள் பாடங்களை கவனிப்பதற்கு உதவுகிறார்கள்.
ரெஜியோ எமிலியா
சுய ஒழுக்கம், குழந் தைகளுக்கான பொறுப்புகள், சமூகம் ஆகிய மூன்றையும் மையப்படுத்தும் கல்விமுறைதான் ரெஜியோ எமிலியா. மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழகவிட்டு, நட்புறவை வளர்த்து அதன்மூலம் கல்வியை கொண்டு செல்கிறார்கள். செயல்முறை கல்விக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
ஹைஸ்கோப்
மாணவர்கள் தாங்கள் விரும்பிய திறன்களை அல்லது இலக்கை அடைய தாங்களாகவே திட்டமிடும் கல்விமுறை இது. இளம் மாணவர்களின் தேவைகளையும், கேள்விகளையும் புரிந்துகொள்வதற்கும் அவர்களின் கற்றலை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த கல்வி முறை விளங்கும்.
பேங்க் ஸ்டிரீட்
ஒவ்வொருவரின் தனித்துவமான உணர்ச்சி, சமூக மற்றும் அறிவுசார் அம்சங்களை வளர்க்கும் வகுப்பறையை உருவாக்குவதே இந்த கல்வி முறையின் நோக்கமாகும். ஒவ்வொரு வயதிலும் நிகழும் உணர்ச்சி மற்றும் அறிவுசார் மாற்றங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு பாடத்தையும் எவ்வாறு அணுகுவது என்பதையும் குறிப்பிடுகிறது. உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அர்த்தமுள்ள வகையில் கல்வி கற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்த மழலையர் கல்வி திட்டங்கள் வெளிநாடுகளில் நடைமுறையில் இருப்பவை என்று எண்ணி விடாதீர்கள். நம் நாட்டிலும், நமக்கு அருகில் இருக்கும் பல பள்ளிக்கூடங்களிலும் இந்த கல்வி முறை நடைமுறையில் இருக்கிறது.
நாம் வழக்கமாக நமது ஆடைகளை சுத்தம் செய்வதை போல குழந்தைகளின் மென்மையான பொம்மைகளையும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் குழந்தைகளுக்கு ரைனிடிஸ் (Rinitis alergica)ஏற்படலாம்..!
நாம் வழக்கமாக நமது ஆடைகளை சுத்தம் செய்வதை போல குழந்தைகளின் மென்மையான பொம்மைகளையும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் குழந்தைகளுக்கு ரைனிடிஸ் ஏற்படலாம்..!
மென்மையான பொம்மைகளுடன் (Soft Toys) சேர்ந்து தூங்கும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. பல குழந்தைகள் இந்த பொம்மைகள் இல்லை என்றால் சாப்பிடுவதில்லை. அவர்கள் மென்மையான பொம்மைகளுடன் நெருக்கமான உணர்வு மிக்கவர்கள், அதை யாருடனும் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்புவாதில்லை. ஆனால், இந்த மென்மையான பொம்மைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அவற்றை நாம் அடிக்கடி கழுவப்பட வேண்டும். இல்லையெனில் உங்கள் குழந்தைகளுக்கு ரினிடிஸ் பிரச்சினை இருக்கலாம்.
ரினிடிஸ் பிரச்சனை என்றால் என்ன?
அடிக்கடி தும்மல், மூக்கில் நீர்வாடிதல், மூக்கு, கண்கள் மற்றும் உள்ளங்கைகளில் அரிப்பு ஆகியவை ரைனிடிஸின் அறிகுறிகளாகும். ரினிடிஸின் உண்மையான ஆதாரம் தூசி மற்றும் மண் ஆகும். வானிலை மாற்றத்துடன் ரைனிடிஸ் ஏற்படலாம். நாம் வழக்கமாக நமது ஆடைகளை சுத்தம் செய்வதை போன்று, குழந்தைகளின் மென்மையான பொம்மைகளையும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் குழந்தைகளுக்கு ரைனிடிஸ் பிரச்சினை ஏற்படலாம். அழகிய மென்மையான பொம்மைகளிலிருந்து குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படலாம். இது குழந்தைகளுக்கு விரைவான தொற்றுநோய்களுக்கு ஆளாகக்கூடும்.
மென்மையான பொம்மைகளால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்...
தூசி மற்றும் மண், முதலில், இந்த மென்மையான பொம்மைகளில் விழுகின்றன. நாம் அவற்றை தவறாமல் சுத்தம் செய்வதில்லை. இது இந்த உண்ணிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை ஏற்படுத்தும். இந்த தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மூக்கில் பொம்மைகளுடன் படுத்துக் கொள்ளும்போது மூக்கில் அடைப்பு ஏற்படுகிறது.
இந்த பொம்மைகள் எவ்வளவு சுத்தமாக செய்யலாம்...
- மென்மையான பொம்மைகளை இயந்திரத்தால் கழுவ முடிந்தால், வாரத்திற்கு ஒரு முறை கழுவி நன்கு உலர வைக்கவும். உலர வெயிலில் வைக்கவும்.
- மென்மையான பொம்மைகளை துவைக்க முடிந்தால், அவற்றை சவர்க்காரத்துடன் சூடான நீரில் போட்டு, துடைப்பால் சுத்தம் செய்யுங்கள்.
- வெற்றிடமாகவோ அல்லது உலர்ந்த சுத்தமாகவோ முடியும்.
- குழந்தைகளுக்கு மென்மையான பொம்மை மற்றும் தூக்க முறை இருந்தால், அவர்கள் படுக்கைக்குச் சென்றதும் பொம்மையை மெதுவாக்குங்கள்.
- ஓரிரு பொம்மைகளை மட்டும் கொடுங்கள். மீதமுள்ள பொம்மைகளை ஒரு பிளாஸ்டிக் தாளில் அடைக்கவும்.
- அவர்களின் கவனத்தை மென்மையான பொம்மையிலிருந்து மற்ற நடவடிக்கைகளுக்குத் திருப்பவும்.
மென்மையான பொம்மைகளுடன் (Soft Toys) சேர்ந்து தூங்கும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. பல குழந்தைகள் இந்த பொம்மைகள் இல்லை என்றால் சாப்பிடுவதில்லை. அவர்கள் மென்மையான பொம்மைகளுடன் நெருக்கமான உணர்வு மிக்கவர்கள், அதை யாருடனும் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்புவாதில்லை. ஆனால், இந்த மென்மையான பொம்மைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அவற்றை நாம் அடிக்கடி கழுவப்பட வேண்டும். இல்லையெனில் உங்கள் குழந்தைகளுக்கு ரினிடிஸ் பிரச்சினை இருக்கலாம்.
ரினிடிஸ் பிரச்சனை என்றால் என்ன?
அடிக்கடி தும்மல், மூக்கில் நீர்வாடிதல், மூக்கு, கண்கள் மற்றும் உள்ளங்கைகளில் அரிப்பு ஆகியவை ரைனிடிஸின் அறிகுறிகளாகும். ரினிடிஸின் உண்மையான ஆதாரம் தூசி மற்றும் மண் ஆகும். வானிலை மாற்றத்துடன் ரைனிடிஸ் ஏற்படலாம். நாம் வழக்கமாக நமது ஆடைகளை சுத்தம் செய்வதை போன்று, குழந்தைகளின் மென்மையான பொம்மைகளையும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் குழந்தைகளுக்கு ரைனிடிஸ் பிரச்சினை ஏற்படலாம். அழகிய மென்மையான பொம்மைகளிலிருந்து குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படலாம். இது குழந்தைகளுக்கு விரைவான தொற்றுநோய்களுக்கு ஆளாகக்கூடும்.
மென்மையான பொம்மைகளால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்...
தூசி மற்றும் மண், முதலில், இந்த மென்மையான பொம்மைகளில் விழுகின்றன. நாம் அவற்றை தவறாமல் சுத்தம் செய்வதில்லை. இது இந்த உண்ணிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை ஏற்படுத்தும். இந்த தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மூக்கில் பொம்மைகளுடன் படுத்துக் கொள்ளும்போது மூக்கில் அடைப்பு ஏற்படுகிறது.
இந்த பொம்மைகள் எவ்வளவு சுத்தமாக செய்யலாம்...
- மென்மையான பொம்மைகளை இயந்திரத்தால் கழுவ முடிந்தால், வாரத்திற்கு ஒரு முறை கழுவி நன்கு உலர வைக்கவும். உலர வெயிலில் வைக்கவும்.
- மென்மையான பொம்மைகளை துவைக்க முடிந்தால், அவற்றை சவர்க்காரத்துடன் சூடான நீரில் போட்டு, துடைப்பால் சுத்தம் செய்யுங்கள்.
- வெற்றிடமாகவோ அல்லது உலர்ந்த சுத்தமாகவோ முடியும்.
- குழந்தைகளுக்கு மென்மையான பொம்மை மற்றும் தூக்க முறை இருந்தால், அவர்கள் படுக்கைக்குச் சென்றதும் பொம்மையை மெதுவாக்குங்கள்.
- ஓரிரு பொம்மைகளை மட்டும் கொடுங்கள். மீதமுள்ள பொம்மைகளை ஒரு பிளாஸ்டிக் தாளில் அடைக்கவும்.
- அவர்களின் கவனத்தை மென்மையான பொம்மையிலிருந்து மற்ற நடவடிக்கைகளுக்குத் திருப்பவும்.
கொரோனாவுக்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்? அவர்களது உடலில் கொரோனாவின் வாழ்நாள் எவ்வளவு காலம்? அது ஏற்படுத்தும் அறிகுறிகள்? என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த வேகத்தை கட்டுப்படுத்தி மனித குலத்தை மீட்பதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளும், தடுப்பூசியும் உருவாக்குவதில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இப்படி மருந்துகளுக்கான தேடல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனா குறித்த ஆய்வுகளும் வேகமெடுத்து வருகின்றன. குறிப்பாக வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு, எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? எந்தெந்த நோயாளிகள் வைரசின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாண்டு விடுகிறார்கள்? என்பது போன்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடக்கின்றன.
இந்த வரிசையில் கொரோனாவுக்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்? அவர்களது உடலில் கொரோனாவின் வாழ்நாள் எவ்வளவு காலம்? அது ஏற்படுத்தும் அறிகுறிகள்? என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தென்கொரிய குழந்தைகளிடம் சோதனை
குறிப்பாக தென்கொரியாவின் 22 மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 91 குழந்தைகளிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 22 சதவீத குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லை. 20 சதவீதத்தினர் முதலில் அறிகுறி இல்லாமலும், பின்னர் அறிகுறி தென்பட்டவர்களும் ஆவர். மீதமுள்ள 58 சதவீதத்தினர் தொடக்கத்திலேயே அறிகுறி கொண்டவர்கள்.
சியோல் தேசிய மருத்துவப்பல்கலைக்கழகம், அமெரிக்காவின் தி ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகம் போன்ற மருத்துவ நிறுவனங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட பல நிபுணர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் ஜாமா குழந்தை மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன.
3 வாரங்களுக்கும் மேலாக...
அதன்படி, குழந்தைகளின் உடலில் எவ்வளவு நாட்கள் கொரோனா வைரஸ் இருக்கிறது? என்பதை கண்டறிவதற்காக குழந்தைகள் அனைவருக்கும் சராசரியாக 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் சராசரியாக 2½ வாரங்கள் வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், அறிகுறியற்ற நோயாளர்களில் 5-ல் ஒரு பகுதியினருக்கும், அறிகுறியுள்ள நோயாளர்களில் பாதி பேருக்கும் 3 வாரங்களுக்கும் மேலாக வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு ஆளான குழந்தைகள் பல வாரங்களுக்கு அறிகுறிகளுடன் இருக்க முடியும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வைரஸ் மரபணுக்கள்
அதேநேரம் அறிகுறியற்ற குழந்தைகள் கூட தொடக்க கட்ட சோதனைக்குப்பிறகு நீண்ட நாட்களுக்கு வைரசின் கூடாரமாக இருந்துள்ளனர். இதனால் அவர்கள் நோய் பரப்பும் முக்கிய காரணிகளாக இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட்டா எல்.தெபியாசி உள்ளிட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கலாம். ஏனெனில் அறிகுறி இல்லாமலோ, அறிகுறிகள் அனைத்தும் குணமடைந்த பின்னரோ, குழந்தைகளிடம் எதிர்பார்க்காத வகையில் நீண்ட காலத்துக்கு வைரஸ் மரபணுக்கள் இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளனர்.
இப்படி மருந்துகளுக்கான தேடல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனா குறித்த ஆய்வுகளும் வேகமெடுத்து வருகின்றன. குறிப்பாக வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு, எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? எந்தெந்த நோயாளிகள் வைரசின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாண்டு விடுகிறார்கள்? என்பது போன்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடக்கின்றன.
இந்த வரிசையில் கொரோனாவுக்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்? அவர்களது உடலில் கொரோனாவின் வாழ்நாள் எவ்வளவு காலம்? அது ஏற்படுத்தும் அறிகுறிகள்? என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தென்கொரிய குழந்தைகளிடம் சோதனை
குறிப்பாக தென்கொரியாவின் 22 மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 91 குழந்தைகளிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 22 சதவீத குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லை. 20 சதவீதத்தினர் முதலில் அறிகுறி இல்லாமலும், பின்னர் அறிகுறி தென்பட்டவர்களும் ஆவர். மீதமுள்ள 58 சதவீதத்தினர் தொடக்கத்திலேயே அறிகுறி கொண்டவர்கள்.
சியோல் தேசிய மருத்துவப்பல்கலைக்கழகம், அமெரிக்காவின் தி ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகம் போன்ற மருத்துவ நிறுவனங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட பல நிபுணர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் ஜாமா குழந்தை மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன.
3 வாரங்களுக்கும் மேலாக...
அதன்படி, குழந்தைகளின் உடலில் எவ்வளவு நாட்கள் கொரோனா வைரஸ் இருக்கிறது? என்பதை கண்டறிவதற்காக குழந்தைகள் அனைவருக்கும் சராசரியாக 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் சராசரியாக 2½ வாரங்கள் வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், அறிகுறியற்ற நோயாளர்களில் 5-ல் ஒரு பகுதியினருக்கும், அறிகுறியுள்ள நோயாளர்களில் பாதி பேருக்கும் 3 வாரங்களுக்கும் மேலாக வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு ஆளான குழந்தைகள் பல வாரங்களுக்கு அறிகுறிகளுடன் இருக்க முடியும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வைரஸ் மரபணுக்கள்
அதேநேரம் அறிகுறியற்ற குழந்தைகள் கூட தொடக்க கட்ட சோதனைக்குப்பிறகு நீண்ட நாட்களுக்கு வைரசின் கூடாரமாக இருந்துள்ளனர். இதனால் அவர்கள் நோய் பரப்பும் முக்கிய காரணிகளாக இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட்டா எல்.தெபியாசி உள்ளிட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கலாம். ஏனெனில் அறிகுறி இல்லாமலோ, அறிகுறிகள் அனைத்தும் குணமடைந்த பின்னரோ, குழந்தைகளிடம் எதிர்பார்க்காத வகையில் நீண்ட காலத்துக்கு வைரஸ் மரபணுக்கள் இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குழந்தைகளை வெளி இடங்களுக்கு அழைத்து சென்றால் குஷியாகிவிடுவார்கள். கடற்கரை, பூங்கா, தீம்பார்க் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள்தான் அவர்களின் உலகமாக இருக்கும்.
வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குழந்தைகளை வெளி இடங்களுக்கு அழைத்து சென்றால் குஷியாகிவிடுவார்கள். கடற்கரை, பூங்கா, தீம்பார்க் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள்தான் அவர்களின் உலகமாக இருக்கும். ஆனால் லியோ - ஜெசிகா ஹால்டிங் தம்பதியரோ தங்களின் குழந்தைகளை சாகச பயணங்களில் ஈடுபடவைத்து அசத்தி இருக்கிறார்கள்.
மலையேற்றம் செய்வதுதான் இந்த தம்பதியருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மலையேற்றம் செய்ய சென்றுவிடுவார்கள். இவர்களுக்கு 7 வயதில் ப்ரேயா என்ற மகளும், 3 வயதில் ஜாக்சன் என்ற மகனும் இருக்கிறார்கள். அவர்களின் விடுமுறை காலம் மகிழ்ச்சியாக கழிய வேண்டும் என்று விரும்பியவர்கள், தங்களின் சாகச பயணத்திற்கு உடன் அழைத்து சென்று ஆனந்தப்படுத்தி இருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்து-இத்தாலி நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பிஸ் பாடிலே மலை சிகரத்திற்கு குடும்பத்துடன் மலையேற்றம் மேற்கொண்டிருக்கிறார்கள். சுமார் 11 ஆயிரம் அடி கொண்ட அந்த மலை சிகரத்தின் மீது தாயின் அரவணைப்புடன் சிறுவன் ஜாக்சன் பயமின்றி மலையேறும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. 15 கிலோ எடை கொண்ட ஜாக்சனை ஜெசிகா முதுகில் சுமந்து கொண்டு சர்வ சாதாரணமாக மலை ஏறுகிறார். தனக்கு முன்னால் மகள் ப்ரேயாவை கயிற்று முனையில் நடக்க விட்டு பின் தொடர்கிறார். ப்ரேயாவும் பயமின்றி தந்தைக்கும், தாய்க்கும் இடையே கயிற்றின் பிடியில் உற்சாகத்துடன் பயணத்தை தொடர்கிறார். லியோ பயணத்திற்கு தேவை யான உடமைகளை முதுகில் சுமந்து சென்றபடி மகளுக்கு வழிகாட்டுகிறார். மூன்றே நாட்களில் சாகச பயணத்தை முடித்து அசத்தி இருக்கிறார்கள். ஒரு நாள் இரவு மட்டும் மலையில் தங்கி இருக்கிறார்கள்.
“சில ஆண்டுகளாக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் கொஞ்ச நாட் கள் மலையேற்றம் செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் நெருங்கும்போது குழந்தைகள் பெரியவர்களாகிவிடுகிறார்கள். கடந்த ஆண்டுகளை விட தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்கிறார்கள். ஸ்லோவேனியாவில் உள்ள டிரிக்லாவ் மலை சிகரத்திற்கு சென்றிருக்கிறோம். ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது இந்த மலை சிகரம் சிரமமானது” என்கிறார், லியோ.
மலையேற்றம் செய்வதுதான் இந்த தம்பதியருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மலையேற்றம் செய்ய சென்றுவிடுவார்கள். இவர்களுக்கு 7 வயதில் ப்ரேயா என்ற மகளும், 3 வயதில் ஜாக்சன் என்ற மகனும் இருக்கிறார்கள். அவர்களின் விடுமுறை காலம் மகிழ்ச்சியாக கழிய வேண்டும் என்று விரும்பியவர்கள், தங்களின் சாகச பயணத்திற்கு உடன் அழைத்து சென்று ஆனந்தப்படுத்தி இருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்து-இத்தாலி நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பிஸ் பாடிலே மலை சிகரத்திற்கு குடும்பத்துடன் மலையேற்றம் மேற்கொண்டிருக்கிறார்கள். சுமார் 11 ஆயிரம் அடி கொண்ட அந்த மலை சிகரத்தின் மீது தாயின் அரவணைப்புடன் சிறுவன் ஜாக்சன் பயமின்றி மலையேறும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. 15 கிலோ எடை கொண்ட ஜாக்சனை ஜெசிகா முதுகில் சுமந்து கொண்டு சர்வ சாதாரணமாக மலை ஏறுகிறார். தனக்கு முன்னால் மகள் ப்ரேயாவை கயிற்று முனையில் நடக்க விட்டு பின் தொடர்கிறார். ப்ரேயாவும் பயமின்றி தந்தைக்கும், தாய்க்கும் இடையே கயிற்றின் பிடியில் உற்சாகத்துடன் பயணத்தை தொடர்கிறார். லியோ பயணத்திற்கு தேவை யான உடமைகளை முதுகில் சுமந்து சென்றபடி மகளுக்கு வழிகாட்டுகிறார். மூன்றே நாட்களில் சாகச பயணத்தை முடித்து அசத்தி இருக்கிறார்கள். ஒரு நாள் இரவு மட்டும் மலையில் தங்கி இருக்கிறார்கள்.
“சில ஆண்டுகளாக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் கொஞ்ச நாட் கள் மலையேற்றம் செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் நெருங்கும்போது குழந்தைகள் பெரியவர்களாகிவிடுகிறார்கள். கடந்த ஆண்டுகளை விட தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்கிறார்கள். ஸ்லோவேனியாவில் உள்ள டிரிக்லாவ் மலை சிகரத்திற்கு சென்றிருக்கிறோம். ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது இந்த மலை சிகரம் சிரமமானது” என்கிறார், லியோ.
ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நூலகம், ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும், தனித்துவமும் கிடைக்கும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்பதனை திருக்குறளின் முதல் குறளாக அமைத்துள்ளார் திருவள்ளுவர். என் போன்ற மாணவர்களின் அகவிருள் அகற்றி அறிவொளி ஏற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு இந்த ஆசிரியர் தினத்தில் எம் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிரியர்கள் இல்லாத மனித வாழ்வு என்பது இருக்க இயலாது. படித்து பட்டம் பெற்றவனுக்கும், படிக்காமல் பட்டறிவு பெற்றவனுக்கும் என்றும் மூலதனம் அவன் பெற்ற ஆசிரியர்கள்தான். ஆசிரியருக்கு மட்டும் என்றும் அந்த தனித்தன்மையுண்டு. மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கம், படிப்பு என அறிவுக்கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே.
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுக்கின்றவர்கள் ஆசிரியர்கள். உலகில் உள்ள பெரிய மனிதராக இருக்கட்டும், சிறியளவில் வாழ்பவராக இருக்கட்டும் இருதரப்பிற்கும் வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் ஆவார் என்று கூறியவர் மக்கள் குடியரசுத்தலைவர் என்று போற்றப்பட்ட அப்துல்கலாம் அவர்கள், வகுப்பறையை குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.
“நாட்டின் மிகச்சிறந்த அறிவு வகுப்பறையின் கடைசி இருக்கையில் இருக்கலாம் என்று.
ஒன்றுமற்ற ஒரு கல்லை ஒரு சிற்பி செதுக்கி எவ்வாறு அழகிய சிலையை வடிவமைக்கிறானோ, அவ்வாறே மண்ணாக இருந்த எம்மை மாணிக்க கல்லாக மாற்றியது தலைசிறந்த சிற்பிகாளக்கிய ஆசிரியர்களே. எனவே தான் நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.
ஆசிரியரின் பெருமை
ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நூலகம், ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும், தனித்துவமும் கிடைக்கும். உண்மையில் ஒரு மாணவனுக்கு தனது திறனை அடையாளம் காட்டுபவராக, வாழ்வின் அர்த்தங்களை உணர்விக்கின்றவராக இருப்பவர்தான் ஆசிரியர். மாணவ-மாணவிகளின் முதுகெலும்பாக விளங்குகின்ற ஆசிரியரை கவுரவப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும், முனைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அவரது வேண்டு கோளுக்கு இணங்க 1962-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடப் பட்டு வருகிறது. இவ்வண்ண மயமான நாளில் வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் தெரிவித்து ஆசிரியர் தினத்தை கொண்டாடுவோம்.
பகவன் முதற்றே உலகு
என்பதனை திருக்குறளின் முதல் குறளாக அமைத்துள்ளார் திருவள்ளுவர். என் போன்ற மாணவர்களின் அகவிருள் அகற்றி அறிவொளி ஏற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு இந்த ஆசிரியர் தினத்தில் எம் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிரியர்கள் இல்லாத மனித வாழ்வு என்பது இருக்க இயலாது. படித்து பட்டம் பெற்றவனுக்கும், படிக்காமல் பட்டறிவு பெற்றவனுக்கும் என்றும் மூலதனம் அவன் பெற்ற ஆசிரியர்கள்தான். ஆசிரியருக்கு மட்டும் என்றும் அந்த தனித்தன்மையுண்டு. மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கம், படிப்பு என அறிவுக்கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே.
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுக்கின்றவர்கள் ஆசிரியர்கள். உலகில் உள்ள பெரிய மனிதராக இருக்கட்டும், சிறியளவில் வாழ்பவராக இருக்கட்டும் இருதரப்பிற்கும் வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் ஆவார் என்று கூறியவர் மக்கள் குடியரசுத்தலைவர் என்று போற்றப்பட்ட அப்துல்கலாம் அவர்கள், வகுப்பறையை குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.
“நாட்டின் மிகச்சிறந்த அறிவு வகுப்பறையின் கடைசி இருக்கையில் இருக்கலாம் என்று.
ஒன்றுமற்ற ஒரு கல்லை ஒரு சிற்பி செதுக்கி எவ்வாறு அழகிய சிலையை வடிவமைக்கிறானோ, அவ்வாறே மண்ணாக இருந்த எம்மை மாணிக்க கல்லாக மாற்றியது தலைசிறந்த சிற்பிகாளக்கிய ஆசிரியர்களே. எனவே தான் நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.
ஆசிரியரின் பெருமை
ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நூலகம், ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும், தனித்துவமும் கிடைக்கும். உண்மையில் ஒரு மாணவனுக்கு தனது திறனை அடையாளம் காட்டுபவராக, வாழ்வின் அர்த்தங்களை உணர்விக்கின்றவராக இருப்பவர்தான் ஆசிரியர். மாணவ-மாணவிகளின் முதுகெலும்பாக விளங்குகின்ற ஆசிரியரை கவுரவப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும், முனைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அவரது வேண்டு கோளுக்கு இணங்க 1962-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடப் பட்டு வருகிறது. இவ்வண்ண மயமான நாளில் வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் தெரிவித்து ஆசிரியர் தினத்தை கொண்டாடுவோம்.
கொரோனாவால் அரிய வகை நோய் சிறுவர்களை தாக்குவதாகவும், இதனால் பெற்றோர் விழிப்புடன் இருக்கும்படியும் டாக்டர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமான மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த 7 வயது சிறுவன் கடந்த 10-ந் தேதி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். அவனுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி பிரச்சினை இருந்தது. மேலும் அவனது இதய துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தம் குறைவானது. இதனால் அவனது உடல்நிலை மோசமானது.
இதையடுத்து நடந்த சோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ‘‘ஹைப்பர் இன்பிலேமட்டரி சின்ட்ரோம்’’ என்ற அரியவகை நோய் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் மூலம் சிறுவன் அந்த பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளான்.
இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘‘முதல் கட்ட சிகிச்சையின் போது சிறுவனின் உடல் சோடியம் குளோரைடு, ஆக்சிஜன், இருதய அழுத்தத்தை அதிகரிக்கும் பல்வேறு மருந்துகளை ஏற்று கொண்டது. அதன்பிறகு அவனுக்கு ஸ்டெராய்டு கொடுக்கப்பட்டது. எனினும் சிறுவனின் இருதயம், நுரையீரல், வயிறு, கல்லீரலில் பாதிப்புகள் இருந்தன. இறுதியில் சிறுவனுக்கு டோசிலிசுமாப் மருந்து செலுத்தப்பட்டது. அதன்பிறகு அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது’’ என்றார்.
வழக்கமாக இந்த அரிய வகை பாதிப்பு கொரோனாவால் சிறுவர்களை தாக்கி வருகிறது. எனவே சிறுவர்களை கொரோனா தாக்கும் போது பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த பாதிப்பை விரைவில் கண்டறிந்தால் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற முடியும் எனவும் டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.
இதையடுத்து நடந்த சோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ‘‘ஹைப்பர் இன்பிலேமட்டரி சின்ட்ரோம்’’ என்ற அரியவகை நோய் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் மூலம் சிறுவன் அந்த பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளான்.
இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘‘முதல் கட்ட சிகிச்சையின் போது சிறுவனின் உடல் சோடியம் குளோரைடு, ஆக்சிஜன், இருதய அழுத்தத்தை அதிகரிக்கும் பல்வேறு மருந்துகளை ஏற்று கொண்டது. அதன்பிறகு அவனுக்கு ஸ்டெராய்டு கொடுக்கப்பட்டது. எனினும் சிறுவனின் இருதயம், நுரையீரல், வயிறு, கல்லீரலில் பாதிப்புகள் இருந்தன. இறுதியில் சிறுவனுக்கு டோசிலிசுமாப் மருந்து செலுத்தப்பட்டது. அதன்பிறகு அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது’’ என்றார்.
வழக்கமாக இந்த அரிய வகை பாதிப்பு கொரோனாவால் சிறுவர்களை தாக்கி வருகிறது. எனவே சிறுவர்களை கொரோனா தாக்கும் போது பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த பாதிப்பை விரைவில் கண்டறிந்தால் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற முடியும் எனவும் டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.
உலக நாடுகளையெல்லாம், உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து கதி கலங்க வைத்து வருகிறது. 2 கோடியே 32 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர். ஆனாலும் கொரோனாவில் மரணப்பசி தீரவில்லை. அதே வேளையில் இன்னும் அதை தடுத்து நிறுத்த தடுப்பூசியோ, சிகிச்சைக்கான மருந்துகளோ சந்தைக்கு வந்தபாடில்லை.
ஆனால் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் இந்த புள்ளிவிவரங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கக்கூடும், போதுமான அளவுக்கு உலக நாடுகளில் பரிசோதனைகள் நடத்தப்படாததும், அறிகுறிகள் அற்று கொரோனாவால் பாதிப்பு ஏற்படுவதாலும், உண்மையான பாதிப்பு விவரம் இன்னும் தெரியவில்லை என்றே சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.
தற்போது கொரோனா தென்கொரியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் லெபனானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில், 12 வயது மற்றும் அதற்கு அதிகமான வயது குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.
குறிப்பாக மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்துக்காவது இடைவெளி உத்தரவாதம் தர முடியாதபோது, கண்டிப்பாக கொரோனா பரவும் நிலை உள்ளதால் கண்டிப்பாக இந்த வயது குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டும்.
6 முதல் 11 வயது குழந்தைகளை பொறுத்தமட்டில், அவர்கள் பகுதியில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பதையும், முதியவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்களுடன் குழந்தைகள் தொடர்பில் இருக்கிற நிலை உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. இத்தகைய குழந்தைகள் முக கவசத்தை அணிந்து கொள்ளவும், அகற்றவும் பெரியவர்கள் உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது அடிப்படை உடல்நல பிரச்சினை உடையவர்கள் கண்டிப்பாக மருத்துவ முக கவசம் அணிதல் வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் சொல்லி இருக்கிறது.
சமீபத்தில் 11 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது குழந்தைகள் முக கவசம் அணிவதை பிரான்ஸ் கட்டாயம் ஆக்கி உள்ளதும், இங்கிலாந்தில் நிறைய பள்ளிக்கூடங்கள் இப்படிப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.
ஆனால் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் இந்த புள்ளிவிவரங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கக்கூடும், போதுமான அளவுக்கு உலக நாடுகளில் பரிசோதனைகள் நடத்தப்படாததும், அறிகுறிகள் அற்று கொரோனாவால் பாதிப்பு ஏற்படுவதாலும், உண்மையான பாதிப்பு விவரம் இன்னும் தெரியவில்லை என்றே சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.
தற்போது கொரோனா தென்கொரியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் லெபனானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில், 12 வயது மற்றும் அதற்கு அதிகமான வயது குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.
குறிப்பாக மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்துக்காவது இடைவெளி உத்தரவாதம் தர முடியாதபோது, கண்டிப்பாக கொரோனா பரவும் நிலை உள்ளதால் கண்டிப்பாக இந்த வயது குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டும்.
6 முதல் 11 வயது குழந்தைகளை பொறுத்தமட்டில், அவர்கள் பகுதியில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பதையும், முதியவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்களுடன் குழந்தைகள் தொடர்பில் இருக்கிற நிலை உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. இத்தகைய குழந்தைகள் முக கவசத்தை அணிந்து கொள்ளவும், அகற்றவும் பெரியவர்கள் உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது அடிப்படை உடல்நல பிரச்சினை உடையவர்கள் கண்டிப்பாக மருத்துவ முக கவசம் அணிதல் வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் சொல்லி இருக்கிறது.
சமீபத்தில் 11 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது குழந்தைகள் முக கவசம் அணிவதை பிரான்ஸ் கட்டாயம் ஆக்கி உள்ளதும், இங்கிலாந்தில் நிறைய பள்ளிக்கூடங்கள் இப்படிப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.
நமது பிள்ளைகள் திறமையானவர்களாக, நல்லவர்களாக உருவாகுவார்கள் என்று முதலில் நாம் உறுதியாக நம்ப வேண்டும். அவர்களை நாம் குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு நல்லதை தெரிந்து கொள்ள நான்கு வழிகள் இருக்கிறது என்றால், கெட்டதை அறிந்து கொள்ள ஆயிரம் வழிகள் கிடைக்கின்றன. இதற்கு மத்தியில்தான் திறமையான இளைஞர்கள் உருவாக வேண்டியதிருக்கிறது. ஆகவே அவர்களை நாம் குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நமது பிள்ளைகள் திறமையானவர்களாக, நல்லவர்களாக உருவாகுவார்கள் என்று முதலில் நாம் உறுதியாக நம்ப வேண்டும்.
பள்ளி ஒன்றிற்கு சென்றிருந்தபோது, ஒரு மாணவியின் கைவினைப் பொருள் தயாரிப்பை பார்த்து பாராட்டினேன்.
அப்பொழுது அவள் என்னிடம் மிக நெருக்கமாக வந்து, “என்னை உங்களுக்கு பிடிக்குமா ஆன்டி?” என்று கேட்டாள்.
“ஆமாம் செல்லம்.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா” என்று நான் கூறியவுடன், அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.
“ஏன் அழுகிறாய்?” என்று கேட்டவுடன் “நான் படிப்பதெல்லாம் மறந்து போய் பரீட்சையில் பெயில் ஆகி விடுகிறேன். மிஸ் திட்டுறாங்க, யாரும் என்னோட பேச மாட்டேங் கிறாங்க.. என்னை யாருக்கும் பிடிக்கல..” என்று தொடர்ந்து அழ, அவளை அரவணைத்துக் கொண்டு “உன்னால் முடியும். நிச்சயமாக நீ நல்ல மார்க் வாங்குவாய்” என்று நான் சொன்னவுடன் அவள் முகத்தில் புன்னகை வெளிப்பட்டது.
வகுப்பு முடிந்ததும் அவள் ஆசிரியையை சந்தித்து “அவள் மனதில் உன்னால் முடியும் நிச்சயம் நீ வெல்வாய் என்று நம்பிக்கையை விதையுங்கள். அதையே அவள் பெற்றோரும் கூறும்படி சொல்லுங்கள்” என்றேன். அதன் பின்பு அவள் கல்வித்திறன் மேம்பட்டது. இதுதான் சரியான அணுகுமுறை.
பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளீர்களோ, அந்த அளவு கண்காணிப்பும் அவசியம். பிள்ளைகள் மேல் எந்த அளவு அன்பை காட்டுகின்றீர்களோ, அந்த அளவு கண்டிப்பும் தேவை. ஆனால் அது தண்டனையாக இல்லாமல், தான் செய்தது தவறு என்பதை அவர்கள் உணரும் வண்ணம் இருக்கவேண்டும்.
பெற்றோர்களாகிய நாம், பிள்ளைகளின் கல்வி, உடல்நலம், பொழுதுபோக்கு அம்சங்கள், ஏனைய திறமைகளை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றில் காட்டும் அக்கறை போல பிள்ளைகளின் மன நலனில் அக்கறை செலுத்துவதில்லை. இந்த காரணத்தினால்தான் பெற்றோர்-பிள்ளைகள் இடையே கருத்து மோதல் பல வீடுகளில் ஏற்படுகிறது.
‘அந்த காலத்தில் நாங்க எப்படி இருந்தோம் தெரியுமா?’ என்று நம் பிள்ளைகளிடம், கேள்வி கேட்கும் முன் கொஞ்சம் யோசிப்போம். யோசித்தால் இன்று இவர்களின் மாற்றத்திற்கு நாமும் காரணம் என்பதை புரிந்துகொள்ளலாம்.
பிள்ளைகளுக்கு பெற்றோரின் அன்பு தேவை. அரவணைப்பு தேவை. பிள்ளைகளின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நடக்கவேண்டும். பிள்ளைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை தெரிந்து, அதை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும். பிள்ளைகளிடம் சுய கட்டுப்பாட்டை வளர்க்கவேண்டும். முறையான முயற்சியுடன் திறமைகளைத் தானே முன்வந்து வளர்க்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும். கொடுத்த வேலையை அதிக கண் காணிப்பு இன்றி நிறைவேற்றும் ஆற்றலை மேம்படுத்தவேண்டும். நல்ல மனப்பக்குவம், நல்லொழுக்கம், தலைமைப் பண்புகள், பண்பு நெறி எனும் சீரிய அம்சங்களில் பிள்ளைகளை ஜொலிக்கச் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்கள், தகுதியான நல்ல பிள்ளைகளாக, கவலை கொள்ள வேண்டிய அம்சங்கள் எதுவும் இல்லாதவர்களாக வளர்வார்கள்.
இன்றைய தாய்மார்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் மகள்களிடம் பேசுவதே தங்களுக்கு சவாலான விஷயமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது மகள்கள் தங்களிடம் மனந்திறந்து பேசுவதில்லை என்று குறைபடுகிறார்கள். அவர்களுடன் பேசுவதற்கென்று தனி நேரம் எதுவும் ஒதுக்கவேண்டியதில்லை. அவர்கள் ஏதாவது செய்துகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்து, அந்த வேலையை செய்துகொண்டே அவர்களுடன் பேசலாம். பிள்ளைகளோடு சேர்ந்து வீட்டிலேயே சின்ன சின்ன வேலைகள் செய்யலாம், சேர்ந்து சாப்பிடலாம், அவர் களோடு விளையாடலாம். இப்படி அவர்களோடு நேரம் செலவிட்டால், பிள்ளைகளிடம் மனந்திறந்து பேச நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
தாய் பொறுமையாகக் கேட்டால்தான் பிள்ளைகள் மனந்திறந்து பேசுவார்கள். நாம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தால், நம்மிடம் பேசத் தயங்குவார்கள். பிள்ளைகளிடம் நாம் நட்போடு பழகினால், வெளிப்படையாகப் பேசுவார்கள். ‘என்னை உன் நண்பன் மாதிரி நினைச்சுக்கோ, எதுவாக இருந்தாலும் சொல்லு’ என்று சொன்னால் மட்டும் போதாது. அதே உணர்வுடன் பழகவேண்டும். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளை அசட்டை செய்யாமல், அவர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல், பிள்ளைகள் விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக காது கொடுத்து கேட்க வேண்டும்.
“என் அம்மாவிடம் எதை பத்தி வேண்டுமானாலும் தயங்காமல் பேசலாம். நான் பேசும்போது என் அப்பா குறுக்கே பேசமாட்டார். என்னை பத்தி தப்புக்கணக்கு போட மாட்டார். நான் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியாக கேட்பார். அதுக்கப்புறம் எனக்கு தேவையான, நல்ல ஆலோசனைகளை கொடுப்பார்” என்று அவளது தோழியிடம், உங்கள் மகள் பேசும் அளவுக்கு நீங்கள் அவளிடம் நம்பிக்கையை பெறுங்கள்.
சில விஷயங்களைப் பற்றி மகள்களிடம் பேசும்போது, உதாரணமாக காதலிப்பதைப் பற்றிப் பேசும்போது அதிலிருக்கும் ஆபத்துகளைப் பற்றி மட்டும் சொல்லாமல் அவர்கள் சரியான தீர்மானம் எடுக்க உதவ வேண்டும். காதலிப்பதற்கு முன்னால் அந்த நபரை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள என்ன செய்யவேண்டும்? சரியான நபரை தேர்ந்தெடுப்பது எப்படி? தற்போது காதல் தேவையா? உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பது எப்படி? என்பதை எல்லாம் தெளிவாக உணர்த்தவேண்டும். ஒருவரின் புற அழகை விட அக அழகு முக்கியம், பொறுமை முக்கியம் என்பதை தோழமையுணர்வுடன் சொல்லவேண்டும். அப்படி சொல்லும்போது பிள்ளைகள் ‘நமக்கு யாரையாவது பிடித்திருந்தால், அதை அப்பா-அம்மாவிடம் மறைக்காமல் சொல்லவேண்டும்’ என்று கருதுவார்கள். ஒருவேளை யாரையாவது காதலித்தால்கூட பொறுமையாக காத்திருப்பார்களே தவிர தவறான முடிவு எடுக்க மாட்டார்கள்.
‘நம் பிள்ளைகள் மீது நம்பிக்கைவைப்போம். அவர்கள் நல்லவர்களாக வளர்வார்கள்’ என்பது நல்ல பண்பாடு. நல்ல பழக்கங்களை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதைவிட, நாம் அவைகளை கடைப்பிடித்து அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். எங்கோ இருக்கும் தலைவர்கள் நமது குழந்தை களுக்கு முன்மாதிரியில்லை. அவர்கள் முன்னால் வாழ்ந்துகாட்டும் நாமே அவர்களுக்கு முன்மாதிரியாவோம்.
-ஆ.ஆண்டனி ரோஸ்லின்,
தொழில் முனைவு மற்றும் மனிதவள ஆலோசகர், மதுரை.
பள்ளி ஒன்றிற்கு சென்றிருந்தபோது, ஒரு மாணவியின் கைவினைப் பொருள் தயாரிப்பை பார்த்து பாராட்டினேன்.
அப்பொழுது அவள் என்னிடம் மிக நெருக்கமாக வந்து, “என்னை உங்களுக்கு பிடிக்குமா ஆன்டி?” என்று கேட்டாள்.
“ஆமாம் செல்லம்.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா” என்று நான் கூறியவுடன், அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.
“ஏன் அழுகிறாய்?” என்று கேட்டவுடன் “நான் படிப்பதெல்லாம் மறந்து போய் பரீட்சையில் பெயில் ஆகி விடுகிறேன். மிஸ் திட்டுறாங்க, யாரும் என்னோட பேச மாட்டேங் கிறாங்க.. என்னை யாருக்கும் பிடிக்கல..” என்று தொடர்ந்து அழ, அவளை அரவணைத்துக் கொண்டு “உன்னால் முடியும். நிச்சயமாக நீ நல்ல மார்க் வாங்குவாய்” என்று நான் சொன்னவுடன் அவள் முகத்தில் புன்னகை வெளிப்பட்டது.
வகுப்பு முடிந்ததும் அவள் ஆசிரியையை சந்தித்து “அவள் மனதில் உன்னால் முடியும் நிச்சயம் நீ வெல்வாய் என்று நம்பிக்கையை விதையுங்கள். அதையே அவள் பெற்றோரும் கூறும்படி சொல்லுங்கள்” என்றேன். அதன் பின்பு அவள் கல்வித்திறன் மேம்பட்டது. இதுதான் சரியான அணுகுமுறை.
பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளீர்களோ, அந்த அளவு கண்காணிப்பும் அவசியம். பிள்ளைகள் மேல் எந்த அளவு அன்பை காட்டுகின்றீர்களோ, அந்த அளவு கண்டிப்பும் தேவை. ஆனால் அது தண்டனையாக இல்லாமல், தான் செய்தது தவறு என்பதை அவர்கள் உணரும் வண்ணம் இருக்கவேண்டும்.
பெற்றோர்களாகிய நாம், பிள்ளைகளின் கல்வி, உடல்நலம், பொழுதுபோக்கு அம்சங்கள், ஏனைய திறமைகளை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றில் காட்டும் அக்கறை போல பிள்ளைகளின் மன நலனில் அக்கறை செலுத்துவதில்லை. இந்த காரணத்தினால்தான் பெற்றோர்-பிள்ளைகள் இடையே கருத்து மோதல் பல வீடுகளில் ஏற்படுகிறது.
‘அந்த காலத்தில் நாங்க எப்படி இருந்தோம் தெரியுமா?’ என்று நம் பிள்ளைகளிடம், கேள்வி கேட்கும் முன் கொஞ்சம் யோசிப்போம். யோசித்தால் இன்று இவர்களின் மாற்றத்திற்கு நாமும் காரணம் என்பதை புரிந்துகொள்ளலாம்.
பிள்ளைகளுக்கு பெற்றோரின் அன்பு தேவை. அரவணைப்பு தேவை. பிள்ளைகளின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நடக்கவேண்டும். பிள்ளைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை தெரிந்து, அதை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும். பிள்ளைகளிடம் சுய கட்டுப்பாட்டை வளர்க்கவேண்டும். முறையான முயற்சியுடன் திறமைகளைத் தானே முன்வந்து வளர்க்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும். கொடுத்த வேலையை அதிக கண் காணிப்பு இன்றி நிறைவேற்றும் ஆற்றலை மேம்படுத்தவேண்டும். நல்ல மனப்பக்குவம், நல்லொழுக்கம், தலைமைப் பண்புகள், பண்பு நெறி எனும் சீரிய அம்சங்களில் பிள்ளைகளை ஜொலிக்கச் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்கள், தகுதியான நல்ல பிள்ளைகளாக, கவலை கொள்ள வேண்டிய அம்சங்கள் எதுவும் இல்லாதவர்களாக வளர்வார்கள்.
இன்றைய தாய்மார்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் மகள்களிடம் பேசுவதே தங்களுக்கு சவாலான விஷயமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது மகள்கள் தங்களிடம் மனந்திறந்து பேசுவதில்லை என்று குறைபடுகிறார்கள். அவர்களுடன் பேசுவதற்கென்று தனி நேரம் எதுவும் ஒதுக்கவேண்டியதில்லை. அவர்கள் ஏதாவது செய்துகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்து, அந்த வேலையை செய்துகொண்டே அவர்களுடன் பேசலாம். பிள்ளைகளோடு சேர்ந்து வீட்டிலேயே சின்ன சின்ன வேலைகள் செய்யலாம், சேர்ந்து சாப்பிடலாம், அவர் களோடு விளையாடலாம். இப்படி அவர்களோடு நேரம் செலவிட்டால், பிள்ளைகளிடம் மனந்திறந்து பேச நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
தாய் பொறுமையாகக் கேட்டால்தான் பிள்ளைகள் மனந்திறந்து பேசுவார்கள். நாம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தால், நம்மிடம் பேசத் தயங்குவார்கள். பிள்ளைகளிடம் நாம் நட்போடு பழகினால், வெளிப்படையாகப் பேசுவார்கள். ‘என்னை உன் நண்பன் மாதிரி நினைச்சுக்கோ, எதுவாக இருந்தாலும் சொல்லு’ என்று சொன்னால் மட்டும் போதாது. அதே உணர்வுடன் பழகவேண்டும். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளை அசட்டை செய்யாமல், அவர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல், பிள்ளைகள் விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக காது கொடுத்து கேட்க வேண்டும்.
“என் அம்மாவிடம் எதை பத்தி வேண்டுமானாலும் தயங்காமல் பேசலாம். நான் பேசும்போது என் அப்பா குறுக்கே பேசமாட்டார். என்னை பத்தி தப்புக்கணக்கு போட மாட்டார். நான் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியாக கேட்பார். அதுக்கப்புறம் எனக்கு தேவையான, நல்ல ஆலோசனைகளை கொடுப்பார்” என்று அவளது தோழியிடம், உங்கள் மகள் பேசும் அளவுக்கு நீங்கள் அவளிடம் நம்பிக்கையை பெறுங்கள்.
சில விஷயங்களைப் பற்றி மகள்களிடம் பேசும்போது, உதாரணமாக காதலிப்பதைப் பற்றிப் பேசும்போது அதிலிருக்கும் ஆபத்துகளைப் பற்றி மட்டும் சொல்லாமல் அவர்கள் சரியான தீர்மானம் எடுக்க உதவ வேண்டும். காதலிப்பதற்கு முன்னால் அந்த நபரை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள என்ன செய்யவேண்டும்? சரியான நபரை தேர்ந்தெடுப்பது எப்படி? தற்போது காதல் தேவையா? உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பது எப்படி? என்பதை எல்லாம் தெளிவாக உணர்த்தவேண்டும். ஒருவரின் புற அழகை விட அக அழகு முக்கியம், பொறுமை முக்கியம் என்பதை தோழமையுணர்வுடன் சொல்லவேண்டும். அப்படி சொல்லும்போது பிள்ளைகள் ‘நமக்கு யாரையாவது பிடித்திருந்தால், அதை அப்பா-அம்மாவிடம் மறைக்காமல் சொல்லவேண்டும்’ என்று கருதுவார்கள். ஒருவேளை யாரையாவது காதலித்தால்கூட பொறுமையாக காத்திருப்பார்களே தவிர தவறான முடிவு எடுக்க மாட்டார்கள்.
‘நம் பிள்ளைகள் மீது நம்பிக்கைவைப்போம். அவர்கள் நல்லவர்களாக வளர்வார்கள்’ என்பது நல்ல பண்பாடு. நல்ல பழக்கங்களை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதைவிட, நாம் அவைகளை கடைப்பிடித்து அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். எங்கோ இருக்கும் தலைவர்கள் நமது குழந்தை களுக்கு முன்மாதிரியில்லை. அவர்கள் முன்னால் வாழ்ந்துகாட்டும் நாமே அவர்களுக்கு முன்மாதிரியாவோம்.
-ஆ.ஆண்டனி ரோஸ்லின்,
தொழில் முனைவு மற்றும் மனிதவள ஆலோசகர், மதுரை.
உங்கள் பிள்ளைகள் புத்திசாலித்தனமானவர்களாகவும், அறிவுக்கூர்மையுடையவர்களாகவும் வளர விரும்பினால், தூங்க செல்லும் முன்பு கதை வாசிக்கும் பழக்கத்தை பின்பற்றவையுங்கள்.
குழந்தைகளை இரவில் தூங்க வைப்பது நிறைய பெற்றோருக்கு கடினமான விஷயமாக இருக்கிறது. சில குழந்தைகள் நள்ளிரவு நெருங்கும் வரை தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பார்கள். குழந்தைகள் நன்றாக தூங்கினால்தான் அவர்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். சுறுசுறுப்புடன் செயல்படவும் தூண்டும். இரவில் தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் வழக்கத்தை பின்பற்றலாம். அது குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பதோடு அவர்களது ஆளுமைத்திறனையும் வளர்க்கும்.
உங்கள் பிள்ளைகள் புத்திசாலித்தனமானவர்களாகவும், அறிவுக்கூர்மையுடையவர்களாகவும் வளர விரும்பினால், தூங்க செல்லும் முன்பு கதை வாசிக்கும் பழக்கத்தை பின்பற்றவையுங்கள். நல்ல ஒழுக்கங்களை போதிக்கும் கதைகளைப் படிப்பதன் மூலம் நல்ல பண்புகளை பின்பற்றி வளர்வார்கள்.
குழந்தை பருவத்தில் இருந்தே நீங்கள் அவர்களுக்கு கதை சொல்லும் வழக்கத்தை தொடரலாம். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். சிறந்த கற்பனைத்திறன், அறிவுத்திறன் கொண்டவர்களாகவும் வளர்வார்கள். நல்ல புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்வார்கள். குழந்தைகள் வளரும்போது அவர்களின் மூளையும் வளர்ச்சி பெறும். அப்போது கேட்கும் தகவல்களை சிறப்பாக உள்வாங்கினால் சரியான அறிவு வளர்ச்சியை பெறுவார்கள். அதற்கு கதை கேட்கும், படிக்கும் பழக்கம் உதவும்.
குழந்தைகள் பேசும்போது அவர்களின் உடல் மொழிகளையும், உதட்டு அசைவுகளையும் ரசித்து பாருங்கள். அது அவர்களின் அறிவாற்றல் செயல்பாடுகளை அதிகரிக்க உதவும். கதை வாசிக்கும் பழக்கம் கொண்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை திறமையாக சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக விளங்குவார்கள். அவர்களின் தகவல்தொடர்பு திறனை மேம்படுத்துவதில் கதை சொல்லுதலும், கதை வாசிப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. கதையில் வரும் சம்பவங்களை கேள்விகளாக கேட்டு பதில் சொல்வதற்கு ஊக்குவிப்பது அவர்களை தைரியமானவர்களாக உருவாக்க உதவும். மேலும் புதிய சொற்களை ஆர்வமாக கற்றுக்கொள்ளவும் முயற்சிப்பார்கள்.
குழந்தைகள் தினமும் வீட்டில் உள்ளவர்கள் பேசும் மொழியை நன்றாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். அதனால்தான் தாய்மொழியில் சரளமாக பேச தொடங்குகிறார்கள். எவ்வளவு அதிகமாக கேட்கிறார்களோ, அதற்கேற்ப அதிக சொற்களையும் கற்றுக்கொள்வார்கள். அதற்கு கதை கேட்கும் வழக்கம் துணைபுரியும்.
புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கம். குழந்தை பருவத்தில் இருந்தே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தால் அறிவாற்றல் மேம்படுவதுடன் சிந்தனைத்திறனும், கற்றல் திறனும் மேம்படும். ஆரம்பத்தில் குழந்தைகளை கவரும் கார்ட்டூன் புத்தகங்களுடன் கதை சொல்லிக்கொடுக்கும் பழக்கத்தை தொடங்கலாம்.
குழந்தைகள் எப்போதும் புதிய விஷயங்களை காணவும், கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருப்பார்கள். பிரமாண்டமான படங்களுடன் கூடிய கதை விளக்கங்கள் அவர்களை எளிதாக கவர்ந்திழுத்துவிடும். அதில் இடம்பெறும் புதிய சொற்களையும் ஆர்வமாக படிப்பார்கள். எழுச்சியூட்டும் கதைகளைப் படிப்பது, அதேபோன்ற ஆளுமை திறன் கொண்டவர்களாக வளர்வதற்கு ஊக்கப்படுத்தும். எதையும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் எதிர்கொள்ள வும் தயாராகுவார்கள்.






