என் மலர்
குழந்தை பராமரிப்பு
அம்மாக்கள், எப்படி தங்கள் குழந்தையை தங்கள் பேச்சை கேட்க வைப்பது (child listen to you) என்பதில் அதிக சிக்கல்களையும், சவால்களையும் சந்திகின்றனர்.
இன்று இருக்கும் குழந்தைகள் பயங்கர கெட்டிக்காரர்கள். தாங்கள் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்வதில் அதிக சாமர்த்தியம் நிறைந்தவர்கள். ஆனால், இதுவே பெற்றோகளுக்கு ஒரு பெரிய சவாலாகி விடுகின்றது. அனேக அம்மாக்கள், எப்படி தங்கள் குழந்தையை தங்கள் பேச்சை கேட்க வைப்பது (child listen to you) என்பதில் அதிக சிக்கல்களையும், சவால்களையும் சந்திகின்றனர். எனினும், அப்படியே குழந்தைகளை விட்டு விடவும் முடியாது.
1. நீங்கள் உங்கள் குழந்தையிடம் சில விடயங்களை பேச நினைத்தால், முதலில் அவர்கள் உங்களை கவனிக்கும் நிலைக்கு வரும் வரை எதுவும் பேசத் தொடங்காதீர்கள். நீங்கள் பேசுவதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலோ, அல்லது விருப்பம் இல்லாமல் இருந்தாலோ, நீங்கள் பேசுவதில் பயன் இல்லை. அதனால், அவர்கள் முழு ஈடுபாட்டோடு உங்களை கவனிக்கும் வரை பேசாதீர்கள்.
2. உங்கள் குழந்தை நீங்கள் கூறியதை மதிக்கவில்லை என்றால், அவர்களிடம் மீண்டும் மீண்டும் அதனை கூறாதீர்கள். அவர்களாகவே உங்களிடம் வரும் வரை, நீங்கள் வேறு வேலையை பாருங்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை கூறுவதால், அவர்கள் உங்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போகலாம்.
3. ஒரு விடயத்தை அவர்கள் செய்ய வேண்டும் என்றாலோ, அல்லது அவர்களுக்கு நீங்கள் ஏதாவது வேலை கொடுக்க நினைத்தாலோ, அவர்களிடம் அதிகம் வார்த்தைகளை பயன்படுத்தி பேசாதீர்கள்,. அவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி அவர்களுக்கு கட்டளை இடுங்கள்.
4. உங்கள் குழந்தையிடம் நீங்கள் பேச வேண்டும் என்றாலோ, அல்லது ஒரு செயலை செய்ய வேண்டினாலோ, முதலில் அவர்கள் பார்வையில் இருந்து பாருங்கள். அந்த வேலையை அவர்களால் செய்ய முடியுமா, அவர்களுக்கு அது பிடித்த வேலையா, அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று பாருங்கள்.
5. எப்போதும் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கட்டளையிடுவது போல அவர்களை மட்டும் வேலை செய்ய சொல்லாமல், நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்த வேலையை செய்ய முயற்சி செய்யுங்கள். அனைவரும் சேர்ந்து வேலை பார்க்கும் போது, பேசிக் கொண்டே செய்வீர்கள். இதனால் உங்கள் குழந்தைக்கும் பல புதிய விடயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதோடு, ஆர்வத்தோடும் செயல்படுவார்கள்.
6. உங்கள் குழந்தை உங்கள் பேச்சை கேட்காமல் உங்களுக்கு இம்சை கொடுத்தால், சண்டை போடாதீர்கள், மற்றும் கோபத்தை காட்டாதீர்கள். முடிந்த வரை பொறுமையாக இருங்கள். உங்கள் அமைதியே அவர்களை சிந்திக்க வைத்து, உங்கள் மீதான மரியாதையையும், பயத்தையும் உண்டாக்கும். இதனால், அவர்களே நாளடைவில், சிந்தித்து, உங்கள் பேச்சை கேட்பதுதான் சரி என்ற முடிவுக்கு வந்து, உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். கோபத்தை காட்டினால், அது எதிர்மறையாக முடிந்து விடக் கூடும்
7. உங்கள் குழந்தைக்கு தினமும் செய்ய வேண்டிய வேலை, வாரா வாரம் செய்ய வேண்டிய வேலை மற்றும் மாதா மாதம் செய்ய வேண்டிய வேலை என்று பட்டியலிட்டு அதனை வழக்கமாக்குங்கள், இப்படி செய்தால், அவர்கள் சில நாட்களிலேயே அந்த அட்டவணைக்கு பழகிக் கொண்டு, அவர்களாகவே அந்த வேலைகளை செய்யத் தொடங்குவார்கள். இது உங்களுக்கு சுலபமாகி விடும்.
8. உங்கள் குழந்தைகள் மட்டும் நீங்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்று இல்லை. நீங்களும் சற்று காது கொடுத்து உங்கள் குழந்தை கூறுவதை கேட்க வேண்டும். அவர்களுக்கு உண்டான மரியாதையையும், முக்கியத்துவத்தையும் நீங்கள் தர வேண்டும்.
9. உங்கள் குழந்தைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் அவர்களை கவனியுங்கள். அவர்களது விருப்பம், வெறுப்பு, என்று அனைத்தையும் கண்காணியுங்கள். அப்படி அவர்களை நீங்கள் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே, சரியான பாதையில் அவர்களை எடுத்து செல்ல முடியும், மேலும் உங்கள் பேச்சையும் அவர்களை கேட்க வைக்க முடியும்.
10. குழந்தைகளுக்கு எப்போது கட்டளையிடும் பாணியும், அதிகார தோரணையும் பிடிக்காது. அதனால் அவர்களுடன் எப்போதும் விளையாட்டு தனத்தோடு நீங்களும் குழந்தையாய் மாறி அவர்களுடன் சேர்ந்து வேலை பாருங்கள். இது அவர்கள் கவனத்தை ஈர்க்கும். மேலும் உங்கள் பேச்சையும் கேட்கத் தொடங்குவார்கள். எப்போதும், அவர்களுக்கு ஏதாவது சுவாரசியமான கதை சொல்லி உங்கள் அன்பு வலைக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
1. நீங்கள் உங்கள் குழந்தையிடம் சில விடயங்களை பேச நினைத்தால், முதலில் அவர்கள் உங்களை கவனிக்கும் நிலைக்கு வரும் வரை எதுவும் பேசத் தொடங்காதீர்கள். நீங்கள் பேசுவதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலோ, அல்லது விருப்பம் இல்லாமல் இருந்தாலோ, நீங்கள் பேசுவதில் பயன் இல்லை. அதனால், அவர்கள் முழு ஈடுபாட்டோடு உங்களை கவனிக்கும் வரை பேசாதீர்கள்.
2. உங்கள் குழந்தை நீங்கள் கூறியதை மதிக்கவில்லை என்றால், அவர்களிடம் மீண்டும் மீண்டும் அதனை கூறாதீர்கள். அவர்களாகவே உங்களிடம் வரும் வரை, நீங்கள் வேறு வேலையை பாருங்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை கூறுவதால், அவர்கள் உங்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போகலாம்.
3. ஒரு விடயத்தை அவர்கள் செய்ய வேண்டும் என்றாலோ, அல்லது அவர்களுக்கு நீங்கள் ஏதாவது வேலை கொடுக்க நினைத்தாலோ, அவர்களிடம் அதிகம் வார்த்தைகளை பயன்படுத்தி பேசாதீர்கள்,. அவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி அவர்களுக்கு கட்டளை இடுங்கள்.
4. உங்கள் குழந்தையிடம் நீங்கள் பேச வேண்டும் என்றாலோ, அல்லது ஒரு செயலை செய்ய வேண்டினாலோ, முதலில் அவர்கள் பார்வையில் இருந்து பாருங்கள். அந்த வேலையை அவர்களால் செய்ய முடியுமா, அவர்களுக்கு அது பிடித்த வேலையா, அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று பாருங்கள்.
5. எப்போதும் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கட்டளையிடுவது போல அவர்களை மட்டும் வேலை செய்ய சொல்லாமல், நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்த வேலையை செய்ய முயற்சி செய்யுங்கள். அனைவரும் சேர்ந்து வேலை பார்க்கும் போது, பேசிக் கொண்டே செய்வீர்கள். இதனால் உங்கள் குழந்தைக்கும் பல புதிய விடயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதோடு, ஆர்வத்தோடும் செயல்படுவார்கள்.
6. உங்கள் குழந்தை உங்கள் பேச்சை கேட்காமல் உங்களுக்கு இம்சை கொடுத்தால், சண்டை போடாதீர்கள், மற்றும் கோபத்தை காட்டாதீர்கள். முடிந்த வரை பொறுமையாக இருங்கள். உங்கள் அமைதியே அவர்களை சிந்திக்க வைத்து, உங்கள் மீதான மரியாதையையும், பயத்தையும் உண்டாக்கும். இதனால், அவர்களே நாளடைவில், சிந்தித்து, உங்கள் பேச்சை கேட்பதுதான் சரி என்ற முடிவுக்கு வந்து, உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். கோபத்தை காட்டினால், அது எதிர்மறையாக முடிந்து விடக் கூடும்
7. உங்கள் குழந்தைக்கு தினமும் செய்ய வேண்டிய வேலை, வாரா வாரம் செய்ய வேண்டிய வேலை மற்றும் மாதா மாதம் செய்ய வேண்டிய வேலை என்று பட்டியலிட்டு அதனை வழக்கமாக்குங்கள், இப்படி செய்தால், அவர்கள் சில நாட்களிலேயே அந்த அட்டவணைக்கு பழகிக் கொண்டு, அவர்களாகவே அந்த வேலைகளை செய்யத் தொடங்குவார்கள். இது உங்களுக்கு சுலபமாகி விடும்.
8. உங்கள் குழந்தைகள் மட்டும் நீங்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்று இல்லை. நீங்களும் சற்று காது கொடுத்து உங்கள் குழந்தை கூறுவதை கேட்க வேண்டும். அவர்களுக்கு உண்டான மரியாதையையும், முக்கியத்துவத்தையும் நீங்கள் தர வேண்டும்.
9. உங்கள் குழந்தைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் அவர்களை கவனியுங்கள். அவர்களது விருப்பம், வெறுப்பு, என்று அனைத்தையும் கண்காணியுங்கள். அப்படி அவர்களை நீங்கள் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே, சரியான பாதையில் அவர்களை எடுத்து செல்ல முடியும், மேலும் உங்கள் பேச்சையும் அவர்களை கேட்க வைக்க முடியும்.
10. குழந்தைகளுக்கு எப்போது கட்டளையிடும் பாணியும், அதிகார தோரணையும் பிடிக்காது. அதனால் அவர்களுடன் எப்போதும் விளையாட்டு தனத்தோடு நீங்களும் குழந்தையாய் மாறி அவர்களுடன் சேர்ந்து வேலை பாருங்கள். இது அவர்கள் கவனத்தை ஈர்க்கும். மேலும் உங்கள் பேச்சையும் கேட்கத் தொடங்குவார்கள். எப்போதும், அவர்களுக்கு ஏதாவது சுவாரசியமான கதை சொல்லி உங்கள் அன்பு வலைக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தையின் வாய் பகுதி மற்றும் உதடுகள் வறண்டு காணப்படுகிறதா? என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும். நாக்கு மற்றும் உமிழ் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதை கொண்டே குழந்தை தாகமாக இருப்பதை யூகித்துவிட முடியும்.
வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையத் தொடங்கும். அது பச்சிளம் குழந்தைகளை வெகுவாக பாதிக்கும். முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்கள் நீரிழப்பை பற்றி புரிந்துகொள்வது கடினம். குழந்தையின் சுபாவத்தையும், செயல்பாடுகளையும் கொண்டே அதை அறிந்துகொள்ள முடியும். பச்சிளம் குழந்தைகளை பொறுத்தவரையில் சிறுநீர், மலம் இவை இரண்டும் சீராக வெளியேறுகிறதா? என கவனிக்க வேண்டும்.
குழந்தையின் வாய் பகுதி மற்றும் உதடுகள் வறண்டு காணப்படுகிறதா? என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும். நாக்கு மற்றும் உமிழ் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதை கொண்டே குழந்தை தாகமாக இருப்பதை யூகித்துவிட முடியும். வாய், உதடு, முகத்தில் நிலவும் வறட்சி சரும தோல்கள் உதிர்வதற்கு காரணமாகிவிடும்.
குழந்தைகள் அழும்போது கண்களில் இருந்து கண்ணீர் வர வேண்டும். அப்படி கண்ணீர் வராமல் அழுதால் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம். எனவே உடனடியாக குழந்தைக்கு தண்ணீர் அல்லது பால் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை தொடர்ந்து கொடுப்பதற்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்குள் தினமும் ஐந்து, ஆறு முறை டயாப்பர் மாற்ற வேண்டியிருக்கும். குழந்தை கழிக்கும் சிறுநீரின் அளவு, அதன் நிறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் நீரிழப்பு பிரச்சினையாக இருக்கக்கூடும். குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் எளிதில் சோர்ந்துபோய்விடுவார்கள். முகத்தில் மகிழ்ச்சி இன்றி சோர்வு வெளிப்படும்.
நீரிழப்பு பிரச்சினை இருந்தால் குழந்தை தூக்க நிலையிலேயே இருந்துகொண்டிருக்கும். ஆதலால் குழந்தையின் தூக்க சுழற்சி நேரத்தை கண்காணிக்க வேண்டும். அது சீராக இல்லையென்றால் அதுவும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறியாகும். குழந்தைக்கு பசியாக இருந்தாலோ, தாகம் எடுத்தாலோ அழுது கொண்டிருக்கும். அதையும் கவனத்தில் கொண்டு அதன் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும்.
குழந்தையின் வாய் பகுதி மற்றும் உதடுகள் வறண்டு காணப்படுகிறதா? என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும். நாக்கு மற்றும் உமிழ் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதை கொண்டே குழந்தை தாகமாக இருப்பதை யூகித்துவிட முடியும். வாய், உதடு, முகத்தில் நிலவும் வறட்சி சரும தோல்கள் உதிர்வதற்கு காரணமாகிவிடும்.
குழந்தைகள் அழும்போது கண்களில் இருந்து கண்ணீர் வர வேண்டும். அப்படி கண்ணீர் வராமல் அழுதால் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம். எனவே உடனடியாக குழந்தைக்கு தண்ணீர் அல்லது பால் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை தொடர்ந்து கொடுப்பதற்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்குள் தினமும் ஐந்து, ஆறு முறை டயாப்பர் மாற்ற வேண்டியிருக்கும். குழந்தை கழிக்கும் சிறுநீரின் அளவு, அதன் நிறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் நீரிழப்பு பிரச்சினையாக இருக்கக்கூடும். குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் எளிதில் சோர்ந்துபோய்விடுவார்கள். முகத்தில் மகிழ்ச்சி இன்றி சோர்வு வெளிப்படும்.
நீரிழப்பு பிரச்சினை இருந்தால் குழந்தை தூக்க நிலையிலேயே இருந்துகொண்டிருக்கும். ஆதலால் குழந்தையின் தூக்க சுழற்சி நேரத்தை கண்காணிக்க வேண்டும். அது சீராக இல்லையென்றால் அதுவும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறியாகும். குழந்தைக்கு பசியாக இருந்தாலோ, தாகம் எடுத்தாலோ அழுது கொண்டிருக்கும். அதையும் கவனத்தில் கொண்டு அதன் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தன் மகனை இந்த உலகம் சான்றோன் எனக் கூறக் கேட்பதை விட பெருமிதம் தரக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்.
என்ற வள்ளுவனின் சொல்லுக்கேற்ப ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தன் மகனை இந்த உலகம் சான்றோன் எனக் கூறக் கேட்பதை விட பெருமிதம் தரக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?!
இதுவே ஒவ்வொரு பிள்ளைக்கும் பெருமிதம் தரக் கூடியதாக இருப்பது எது தெரியுமா?
தன்னுடைய உலகமான தன் பெற்றோர் தன்னைப் புகழ்வதைக் கேட்பதே.
ஆனால் இந்த உலகமே தன் பிள்ளையைப் புகழ வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் அவர்களை தட்டிக் கொடுத்து வளர்த்து அதை சாதிப்பதில்லை. கொட்டிக் கொட்டியே வளர்க்கிறார்கள் என்கிறது மன இயல் ஆய்வுகள்.
இந்த ஆய்வுகள் ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது பெற்றோருக்கும் பிள்ளைக்குமான கருத்து வேறுபாடும், பெற்றோரின் கண்டிப்பும் தான் எனக் கூறுகிறது.
அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள். குறைகளையே கேட்டு கேட்டு வளரும் அவர்கள் பாஸிட்டிவான சிந்தனைகள் இல்லாமல் நெகட்டிவான சிந்தனை மிக்கவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் குறை காணக் கூடியவர்களாகவும் வளர்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் தருகிறது.
பிரெஞ்ச் நாட்டின் புகழ் பெற்ற கட்டுரையாளரான “ஜோசப் யுபர்ட்” குழந்தைகளுக்கு குறை சொல்லிக் கொண்டே இருக்கும் விமர்சகர்கள் தேவையில்லை, அவர்களுக்கு நல்ல முன் மாதிரியே தேவை என நச்சென்று முன் வைக்கிறார்.
நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.
ஆனால் அதனால் நம்மையுமறியாமல் என்ன செய்கிறோம். அவர்களிடம் இருக்கும் நிறைகளையெல்லாம் நாம் மிக இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அதைப் பற்றி சிறிதளவு கூட அவர்களிடம் சிலாகித்துப் பேசுவதில்லை. ஆனால் இதுவே குறைகளைக் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு துருவித் துருவி பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறோம்.
இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. நல்லதும் அல்லதும் நம்மிடம் இருந்து தான் அவர்களுக்கு தொடர்கிறது.
வாழ்வியல் பட்டறை ஒன்றில், எப்போது பார்த்தாலும் என் கணவர் என்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று அங்கலாய்த்த பெண்ணிடம் அந்த பயிற்சியாளர் கேட்டார், ‘உங்கள் பையன் எப்படி இருக்கிறான் நன்றாகப் படிக்கிறானா?’
நாம் கணவரைப் பற்றி பேசினால் இவர் அதற்கு பதில் சொல்லாமல் நம் பையனைப் பற்றி கேட்கிறாரே என்று சம்பந்தமில்லாத அவர் கேள்வியால் கொஞ்சம் எரிச்சலடைந்த அந்தப் பெண், “படிப்பு பரவாயில்லை நல்ல மார்க் தான் வாங்குகிறான். ஆனால் பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. அவன் தம்பியிடம் எதற்கெடுத்தாலும் சண்டை, அப்படி, இப்படி என குறைகளை ஒரு ஆதங்கத்தோடு அடுக்கிக் கொண்டே போகத் தொடங்கினார். அவர் முடிப்பதற்காகக் காத்திருந்த பயிற்சியாளரும், அது முடிவதாகத் தெரியவில்லை என்பதால் வேறு வழியில்லாமல் அவர் குறைகளினூடே இடை மறிக்கிறார்.
இதையெல்லாம் நீங்கள் என்னிடம் தான் சொல்கிறீர்களா இல்லை உங்கள் பிள்ளையிடமும் சொல்லி இருக்கிறிர்களா?
என்ன கேட்கிறீர்கள் அவனிடம் சொல்லாமலா ஒவ்வொரு முறையும் அவன் குறைகளை சுட்டிக் காட்டுவதிலே தான் என் பொழுதே போகிறது.
“ஏன்?” இது பயிற்சியாளர்.
சொன்னால் தானே தெரியும் .அப்போது தானே திருந்துவான். அவன் அவனைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன். ஆனால் எங்கே திருத்திக் கொள்கிறான், கோபம் தான் படுகிறான். நாம் ஏதோ அவனிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று எரிச்சல் தான் வருகிறது அவனுக்கு என்றார். சற்று முன் தன் கணவர் தன்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று எரிச்சல் பட்ட அந்தப் பெண்.
இது தான் நிதர்சனம். நாம் குறை சொல்லும்போது நாம் அவர்கள் அக்கறை எடுத்து திருத்துகிறோம் என்று பலமாக நம்புகிறோம். ஆனால் இதுவே நம்மை யாராவது குறை சொன்னால,” ஏன் இப்படி இருக்கிறாரகள்?! எப்போது இவர்கள் திருந்துவார்கள் என்று பலவீனமாகித் துடிக்கிறோம்.
படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம். அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.
நாம் செய்வது சரிதானா? வாழ்வியல் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.
பிள்ளைகளை நாம் ஒவ்வொன்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள், “தாங்கள்” எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி தன்னிடம் ஏதோ குறை இருப்பதாக நம்பத் தொடங்கி விடுகிறார்கள். அதனால் மற்றவர்களை விட்டும் தனித்து இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். தன் மனதில் இருப்பதை பிறரிடம் சொல்ல அச்சப்பட்டு தனக்குள்ளே பேசிக்கொள்ளும் இயல்பை வளர்த்துக் கொள்வதோடு, தன் பெற்றோர்கள் தங்களை வெறுக்கிறார்கள் என மன உளைச்சலுக்கும் அவர்கள் ஆளாகி விடுகிறார்கள் என அச்சுறுத்துகிறது வாழ்வியல்.
தவிர, குறைகளோடும் நிறைகளோடும் தன்னை நேசிக்க நம் பிள்ளை களுக்குக் கற்றுக் கொடுத்தால் தானே, அப்படி தன்னை நேசிக்கக் கூடிய ஒருவராக நம் பிள்ளைகளை நாம் வளர்த்தால் தானே அவர்களாலும் குறை களோடும் நிறைகளோடும் மற்றவர்களை ஏற்றுக் கொண்டு நேசிக்க முடியும். இல்லையென்றால் இப்படித்தானே அவர்களும் மற்றவர்களிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில், குறை சொல்ல வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாமல் ஏற்படுமாயின், நாம் கொஞ்சம் நேரம் அதற்காக ஒதுக்கி நாம் எதற்காக இந்தக் குறையை சொல்கிறோம், அந்தக் குறையை மட்டும் திருத்திக்கொண்டால் அந்தப் பிள்ளை எவ்வளவு பெரிய சாதனையாளனாக வரமுடியும் என்று நம்பிக்கை கொடுக்கக்கூடியதாக அது இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒரு குறையை சொல்ல முற்படும் போது அந்தக் குழந்தையுடைய பத்து நிறைகளை அது தாங்கி வர வேண்டும்.
நீ சோம்பேறி, நீ எதற்கும் இலாயக்கில்லாதவன் என்று நம் பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என பெற்றோர்கள் போகிற போக்கில் குறை சொல்லிவிடலாம். ஆனால் இதை மீண்டும் மீண்டும் ஒரு பிள்ளை கேட்கும் போது அதை அவன் ஆழ்மனம் நம்பத் தொடங்கி அவனையு மறியாமல் அவன் அதுவாகவே மாறி விடுகிறான்.
குறைகளைக் கேட்டு கேட்டு வளரும் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் யார் என்ன சொன்னாலும் அது அவர்களுக்கு குறை சொல்வதாகவேப்படும். மனதில் ஆறாத ரணம் ஏற்பட்டு என்றென்றும் அது ஒரு உறுத்தலாகவே மாறி விடுகிறது.
அதனால் நாம் அவர்கள் நிறையில் கவனம் வைத்து,முற்றிலுமாக குறை சொல்வதை தவிர்த்து விடுவது அல்லது முடிந்த வரை குறைத்து விடுவது தான் நல்லது.
குறைகளை சுட்டிக் காட்டுவதை விட்டும் நிறைகளைக் காண்பதே சிறந்த பலன் தரும்” என அறிவுறுத்துகிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதியும் சிறந்த கல்வியாளருமான “டைசகு இக்கிடா”.
நிறைகள் பெரும்பான்மையாக சுட்டிக் காட்டப் படும்போது குறைகள் தானாக நிவர்த்தி செய்யக் கூடியதாக ஆகிவிடும் என ஆருடம் சொல்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் “ஜூடித் மார்ட்டின்”.
இதில் ஆழ்மன இயல் சொல்லும் இரகசியம் என்ன தெரியுமா, நீங்கள் அவர்களின் நிறைகளைப் பார்த்து தட்டிக் கொடுத்தால் அதில் அவர்கள் கவனம் செல்லும். அந்த நிறை வட்டம் பெரிதாகிக் கொண்டே போகும். அப்படிப் போகப் போக நீங்கள் சுட்டிக் காட்டாத, கவனிக்கப்படாத குறைகள் சுருங்கி, சுருங்கி, ஒரு புள்ளியாய் மறைந்து அவர்களை விட்டும் நீங்கி விடும் அல்லது அது அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல் மாறி விடும்.
ஆனால் அதே நேரம் நீங்கள் குறைகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் அந்த குறைகள் அவர்களிடம் விடாப்பிடியான கறையாகி மாறி விடும் வாய்ப்புண்டு என்று நமக்கு எச்சரிக்கை தருகிறது.
உண்மைதானே எதற்கு தண்ணீர் ஊற்று கிறோமோ, அது தானே உயிர் பெறும்.
Email:fajila@hotmil.com
என்ற வள்ளுவனின் சொல்லுக்கேற்ப ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தன் மகனை இந்த உலகம் சான்றோன் எனக் கூறக் கேட்பதை விட பெருமிதம் தரக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?!
இதுவே ஒவ்வொரு பிள்ளைக்கும் பெருமிதம் தரக் கூடியதாக இருப்பது எது தெரியுமா?
தன்னுடைய உலகமான தன் பெற்றோர் தன்னைப் புகழ்வதைக் கேட்பதே.
ஆனால் இந்த உலகமே தன் பிள்ளையைப் புகழ வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் அவர்களை தட்டிக் கொடுத்து வளர்த்து அதை சாதிப்பதில்லை. கொட்டிக் கொட்டியே வளர்க்கிறார்கள் என்கிறது மன இயல் ஆய்வுகள்.
இந்த ஆய்வுகள் ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது பெற்றோருக்கும் பிள்ளைக்குமான கருத்து வேறுபாடும், பெற்றோரின் கண்டிப்பும் தான் எனக் கூறுகிறது.
அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள். குறைகளையே கேட்டு கேட்டு வளரும் அவர்கள் பாஸிட்டிவான சிந்தனைகள் இல்லாமல் நெகட்டிவான சிந்தனை மிக்கவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் குறை காணக் கூடியவர்களாகவும் வளர்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் தருகிறது.
பிரெஞ்ச் நாட்டின் புகழ் பெற்ற கட்டுரையாளரான “ஜோசப் யுபர்ட்” குழந்தைகளுக்கு குறை சொல்லிக் கொண்டே இருக்கும் விமர்சகர்கள் தேவையில்லை, அவர்களுக்கு நல்ல முன் மாதிரியே தேவை என நச்சென்று முன் வைக்கிறார்.
நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.
ஆனால் அதனால் நம்மையுமறியாமல் என்ன செய்கிறோம். அவர்களிடம் இருக்கும் நிறைகளையெல்லாம் நாம் மிக இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அதைப் பற்றி சிறிதளவு கூட அவர்களிடம் சிலாகித்துப் பேசுவதில்லை. ஆனால் இதுவே குறைகளைக் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு துருவித் துருவி பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறோம்.
இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. நல்லதும் அல்லதும் நம்மிடம் இருந்து தான் அவர்களுக்கு தொடர்கிறது.
வாழ்வியல் பட்டறை ஒன்றில், எப்போது பார்த்தாலும் என் கணவர் என்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று அங்கலாய்த்த பெண்ணிடம் அந்த பயிற்சியாளர் கேட்டார், ‘உங்கள் பையன் எப்படி இருக்கிறான் நன்றாகப் படிக்கிறானா?’
நாம் கணவரைப் பற்றி பேசினால் இவர் அதற்கு பதில் சொல்லாமல் நம் பையனைப் பற்றி கேட்கிறாரே என்று சம்பந்தமில்லாத அவர் கேள்வியால் கொஞ்சம் எரிச்சலடைந்த அந்தப் பெண், “படிப்பு பரவாயில்லை நல்ல மார்க் தான் வாங்குகிறான். ஆனால் பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. அவன் தம்பியிடம் எதற்கெடுத்தாலும் சண்டை, அப்படி, இப்படி என குறைகளை ஒரு ஆதங்கத்தோடு அடுக்கிக் கொண்டே போகத் தொடங்கினார். அவர் முடிப்பதற்காகக் காத்திருந்த பயிற்சியாளரும், அது முடிவதாகத் தெரியவில்லை என்பதால் வேறு வழியில்லாமல் அவர் குறைகளினூடே இடை மறிக்கிறார்.
இதையெல்லாம் நீங்கள் என்னிடம் தான் சொல்கிறீர்களா இல்லை உங்கள் பிள்ளையிடமும் சொல்லி இருக்கிறிர்களா?
என்ன கேட்கிறீர்கள் அவனிடம் சொல்லாமலா ஒவ்வொரு முறையும் அவன் குறைகளை சுட்டிக் காட்டுவதிலே தான் என் பொழுதே போகிறது.
“ஏன்?” இது பயிற்சியாளர்.
சொன்னால் தானே தெரியும் .அப்போது தானே திருந்துவான். அவன் அவனைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன். ஆனால் எங்கே திருத்திக் கொள்கிறான், கோபம் தான் படுகிறான். நாம் ஏதோ அவனிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று எரிச்சல் தான் வருகிறது அவனுக்கு என்றார். சற்று முன் தன் கணவர் தன்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று எரிச்சல் பட்ட அந்தப் பெண்.
இது தான் நிதர்சனம். நாம் குறை சொல்லும்போது நாம் அவர்கள் அக்கறை எடுத்து திருத்துகிறோம் என்று பலமாக நம்புகிறோம். ஆனால் இதுவே நம்மை யாராவது குறை சொன்னால,” ஏன் இப்படி இருக்கிறாரகள்?! எப்போது இவர்கள் திருந்துவார்கள் என்று பலவீனமாகித் துடிக்கிறோம்.
படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம். அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.
நாம் செய்வது சரிதானா? வாழ்வியல் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.
பிள்ளைகளை நாம் ஒவ்வொன்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள், “தாங்கள்” எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி தன்னிடம் ஏதோ குறை இருப்பதாக நம்பத் தொடங்கி விடுகிறார்கள். அதனால் மற்றவர்களை விட்டும் தனித்து இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். தன் மனதில் இருப்பதை பிறரிடம் சொல்ல அச்சப்பட்டு தனக்குள்ளே பேசிக்கொள்ளும் இயல்பை வளர்த்துக் கொள்வதோடு, தன் பெற்றோர்கள் தங்களை வெறுக்கிறார்கள் என மன உளைச்சலுக்கும் அவர்கள் ஆளாகி விடுகிறார்கள் என அச்சுறுத்துகிறது வாழ்வியல்.
தவிர, குறைகளோடும் நிறைகளோடும் தன்னை நேசிக்க நம் பிள்ளை களுக்குக் கற்றுக் கொடுத்தால் தானே, அப்படி தன்னை நேசிக்கக் கூடிய ஒருவராக நம் பிள்ளைகளை நாம் வளர்த்தால் தானே அவர்களாலும் குறை களோடும் நிறைகளோடும் மற்றவர்களை ஏற்றுக் கொண்டு நேசிக்க முடியும். இல்லையென்றால் இப்படித்தானே அவர்களும் மற்றவர்களிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில், குறை சொல்ல வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாமல் ஏற்படுமாயின், நாம் கொஞ்சம் நேரம் அதற்காக ஒதுக்கி நாம் எதற்காக இந்தக் குறையை சொல்கிறோம், அந்தக் குறையை மட்டும் திருத்திக்கொண்டால் அந்தப் பிள்ளை எவ்வளவு பெரிய சாதனையாளனாக வரமுடியும் என்று நம்பிக்கை கொடுக்கக்கூடியதாக அது இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒரு குறையை சொல்ல முற்படும் போது அந்தக் குழந்தையுடைய பத்து நிறைகளை அது தாங்கி வர வேண்டும்.
நீ சோம்பேறி, நீ எதற்கும் இலாயக்கில்லாதவன் என்று நம் பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என பெற்றோர்கள் போகிற போக்கில் குறை சொல்லிவிடலாம். ஆனால் இதை மீண்டும் மீண்டும் ஒரு பிள்ளை கேட்கும் போது அதை அவன் ஆழ்மனம் நம்பத் தொடங்கி அவனையு மறியாமல் அவன் அதுவாகவே மாறி விடுகிறான்.
குறைகளைக் கேட்டு கேட்டு வளரும் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் யார் என்ன சொன்னாலும் அது அவர்களுக்கு குறை சொல்வதாகவேப்படும். மனதில் ஆறாத ரணம் ஏற்பட்டு என்றென்றும் அது ஒரு உறுத்தலாகவே மாறி விடுகிறது.
அதனால் நாம் அவர்கள் நிறையில் கவனம் வைத்து,முற்றிலுமாக குறை சொல்வதை தவிர்த்து விடுவது அல்லது முடிந்த வரை குறைத்து விடுவது தான் நல்லது.
குறைகளை சுட்டிக் காட்டுவதை விட்டும் நிறைகளைக் காண்பதே சிறந்த பலன் தரும்” என அறிவுறுத்துகிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதியும் சிறந்த கல்வியாளருமான “டைசகு இக்கிடா”.
நிறைகள் பெரும்பான்மையாக சுட்டிக் காட்டப் படும்போது குறைகள் தானாக நிவர்த்தி செய்யக் கூடியதாக ஆகிவிடும் என ஆருடம் சொல்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் “ஜூடித் மார்ட்டின்”.
இதில் ஆழ்மன இயல் சொல்லும் இரகசியம் என்ன தெரியுமா, நீங்கள் அவர்களின் நிறைகளைப் பார்த்து தட்டிக் கொடுத்தால் அதில் அவர்கள் கவனம் செல்லும். அந்த நிறை வட்டம் பெரிதாகிக் கொண்டே போகும். அப்படிப் போகப் போக நீங்கள் சுட்டிக் காட்டாத, கவனிக்கப்படாத குறைகள் சுருங்கி, சுருங்கி, ஒரு புள்ளியாய் மறைந்து அவர்களை விட்டும் நீங்கி விடும் அல்லது அது அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல் மாறி விடும்.
ஆனால் அதே நேரம் நீங்கள் குறைகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் அந்த குறைகள் அவர்களிடம் விடாப்பிடியான கறையாகி மாறி விடும் வாய்ப்புண்டு என்று நமக்கு எச்சரிக்கை தருகிறது.
உண்மைதானே எதற்கு தண்ணீர் ஊற்று கிறோமோ, அது தானே உயிர் பெறும்.
Email:fajila@hotmil.com
பொதுவாக 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு திடீரென்று காய்ச்சல் வரும் போது வலிப்பு நோய் ஏற்படலாம். இது பொதுவாக ஒன்று அல்லது இரண்டு நிமிஷ நேரம் வரையில் மட்டுமே இருக்கும்.
குழந்தைகளுக்கு சாதாரண நோய் என்றாலே பெற்றோர்கள் துடிதுடித்து விடுவார்கள். அதிலும் காய்ச்சல் மற்றும் வலிப்பு சேர்ந்து வந்தால் அவர்களது அச்சத்தின் எல்லையை குறிப்பிட வார்த்தைகளே இல்லை.
காய்ச்சலோடு வரும் வலிப்பு நோய்கள் குறித்த தகவல்கள் சில...
வலிப்புடன் (ஜன்னி) வரும் காய்ச்சல் என்றால் என்ன?
பொதுவாக 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு திடீரென்று காய்ச்சல் வரும் போது வலிப்பு நோய் ஏற்படலாம். இது பொதுவாக ஒன்று அல்லது இரண்டு நிமிஷ நேரம் வரையில் மட்டுமே இருக்கும். அப்போது குழந்தை மயக்க நிலையை அடையும். காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருக்கும்.
வலிப்புடன் கூடிய காய்ச்சல் யாருக்கு வரும்?
பொதுவாக 25 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இத்தகைய வலிப்பு வரலாம். இதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைக்கு திரும்பத் திரும்ப வலிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஆறு மாதங்களுக்கு முன்போ அல்லது 3 வயதுக்கு பின்போ இது முதன்முறையாக வருவதில்லை. பெரிய குழந்தைகளுக்கு வரும் போது அது திரும்ப வருவது அரிது.
திரும்பத்திரும்ப காய்ச்சல் வலிப்பு வருவதற்குக் காரணம் என்ன?
முதலாவதாக வரும் வலிப்பு 6 முதல் 15 மாதங்களுக்குள் வந்தால் அந்தக் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு திரும்பத் திரும்ப வரும். குடும்பத்தில் இதுபோன்று வேறு யாருக்காவது நோய் இருந்தாலும் திரும்பத் திரும்ப வருவதற்கு வாய்ப்புண்டு. காய்ச்சல் வந்த பின்பு சில மணி நேரங்களில் வரக்கூடிய வலிப்பும் திரும்பத் திரும்ப வரும்.
வலிப்புடன் வரும் காய்ச்சலால் ஆபத்து உண்டா?
இந்த வலிப்புடன் வரும் காய்ச்சல் பெற்றோரை பயமுறுத்துமே தவிர பொதுவாக குழந்தைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. குழந்தைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் அறிவுத்திறன் ஆகியவற்றிலும் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
ஒரு சில குழந்தைகள் வலிப்பு வரும் போது கீழே விழுவதாலோ அல்லது வாயில் உள்ள உமிழ்நீர் மற்றும் உணவுப் பொருள்களால் புரை ஏறுவதாலோ பாதிப்பு ஏற்படலாம்.
வலிப்பு வரும் போது என்ன செய்ய வேண்டும்?
குழந்தைக்கு வலிப்பு வந்தவுடன், பெற்றோர் பதற்றமடைந்து விடக்கூடாது. பொறுமையாக இருந்து குழந்தையை நன்கு பராமரிக்க வேண்டும். வலிப்பு காரணமாக குழந்தையின் உடலில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வலிப்பு ஏற்படும் போது குழந்தையை அழுத்திப் பிடிக்கக்கூடாது. புரையேறுவதைத் தடுக்க குழந்தையை மல்லாக்க படுக்க வைக்காமால் பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும். குழந்தையின் வாயில் உணவையோ, திரவத்தையோ வேறு ஏதேனும் பொருள்களையோ கொடுக்கக் கூடாது.
வலிப்பு வந்த நேரத்தை குறித்து வைத்து கொண்டு 10 நிமிஷ நேரத்துக்கும் அதிகமாக வலிப்பு நீடித்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரிடம் குழந்தையை எடுத்துச் செல்ல வேண்டும். குழந்தைக்கு வலிப்பு நின்ற பின்பு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க குழந்தை மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
எப்போது குழந்தையை உடனே அவசர சிகிச்சைக்கு எடுத்து செல்ல வேண்டும்?
வலிப்பு 10 நிமிஷத்துக்கும் அதிகமாக இருந்தாலோ, குழந்தையின் கழுத்து பிடரி ஆகியவை விரைப்பாக காணப்பட்டாலோ, குழந்தை சோர்வாக இருந்தாலோ, திரும்பத் திரும்ப வாந்தி ஏற்பட்டாலோ உடனே குழந்தையை மருத்துவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் இது மூளைக் காய்ச்சல் அல்லது வேறு வகை காய்ச்சலாகக்கூட இருக்க வாய்ப்பு உண்டு.
காய்ச்சலால் வரும் வலிப்புக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்?
ரத்த பரிசோதனை, முதுகுத் தண்டுவட நீர் பரிசோதனை மற்றும் இதர மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்வது அவசியம். இதனால் குழந்தைக்கு மூளைச் காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோய் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். பரிசோதனை முடிவுக்கு ஏற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
வலிப்பைத் தடுக்க என்ன வழி?
காய்ச்சல் வரும் போது அதனைத் தொடர்ந்து வலிப்பும் வருவதால் காய்ச்சலைத் தடுக்க மருத்துவர் கொடுக்கும் காய்ச்சல் தடுப்பு மருந்தை (பாராசிட்டாமல்) வீட்டில் வைத்துக் கொண்டு சரியான நேரத்தில் குழந்தைக்குக் கொடுத்தால் வலிப்பைத் தடுக்கலாம்.
மருத்துவர் ஆலோசனையின் படி காய்ச்சல் வரும் போது ஏற்படும் வலிப்புக்கு அளிக்குமாறு கூறிய மருந்தை முதல் மூன்று நாள்கள் மட்டும் கொடுக்க வேண்டும். இந்த மருந்தை 6 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது இல்லை.
காய்ச்சல் இல்லாமல் வரும் வலிப்புக்கு என்ன செய்ய வேண்டும்?
காய்ச்சல் இல்லாமல் வலிப்பு வந்தால் அது மேற்கூறிய வகை வலிப்பு நோயாக இருக்காது. அதற்கு தகுந்த குழந்தை மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.
இத்தனை விவரங்களையும் தெரிந்து கொண்ட நீங்கள் இனி மேல் குழந்தைக்கு காய்ச்சலால் வலிப்பு வந்தால் பயப்பட மாட்டீர்கள் தானே!
டாக்டர் வி.டி.ராஜேஷ் இளம்சிசு மற்றும் குழந்தை மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவமனை, பாளையங்கோட்டை செல்: 94865 59911.
காய்ச்சலோடு வரும் வலிப்பு நோய்கள் குறித்த தகவல்கள் சில...
வலிப்புடன் (ஜன்னி) வரும் காய்ச்சல் என்றால் என்ன?
பொதுவாக 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு திடீரென்று காய்ச்சல் வரும் போது வலிப்பு நோய் ஏற்படலாம். இது பொதுவாக ஒன்று அல்லது இரண்டு நிமிஷ நேரம் வரையில் மட்டுமே இருக்கும். அப்போது குழந்தை மயக்க நிலையை அடையும். காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருக்கும்.
வலிப்புடன் கூடிய காய்ச்சல் யாருக்கு வரும்?
பொதுவாக 25 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இத்தகைய வலிப்பு வரலாம். இதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைக்கு திரும்பத் திரும்ப வலிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஆறு மாதங்களுக்கு முன்போ அல்லது 3 வயதுக்கு பின்போ இது முதன்முறையாக வருவதில்லை. பெரிய குழந்தைகளுக்கு வரும் போது அது திரும்ப வருவது அரிது.
திரும்பத்திரும்ப காய்ச்சல் வலிப்பு வருவதற்குக் காரணம் என்ன?
முதலாவதாக வரும் வலிப்பு 6 முதல் 15 மாதங்களுக்குள் வந்தால் அந்தக் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு திரும்பத் திரும்ப வரும். குடும்பத்தில் இதுபோன்று வேறு யாருக்காவது நோய் இருந்தாலும் திரும்பத் திரும்ப வருவதற்கு வாய்ப்புண்டு. காய்ச்சல் வந்த பின்பு சில மணி நேரங்களில் வரக்கூடிய வலிப்பும் திரும்பத் திரும்ப வரும்.
வலிப்புடன் வரும் காய்ச்சலால் ஆபத்து உண்டா?
இந்த வலிப்புடன் வரும் காய்ச்சல் பெற்றோரை பயமுறுத்துமே தவிர பொதுவாக குழந்தைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. குழந்தைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் அறிவுத்திறன் ஆகியவற்றிலும் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
ஒரு சில குழந்தைகள் வலிப்பு வரும் போது கீழே விழுவதாலோ அல்லது வாயில் உள்ள உமிழ்நீர் மற்றும் உணவுப் பொருள்களால் புரை ஏறுவதாலோ பாதிப்பு ஏற்படலாம்.
வலிப்பு வரும் போது என்ன செய்ய வேண்டும்?
குழந்தைக்கு வலிப்பு வந்தவுடன், பெற்றோர் பதற்றமடைந்து விடக்கூடாது. பொறுமையாக இருந்து குழந்தையை நன்கு பராமரிக்க வேண்டும். வலிப்பு காரணமாக குழந்தையின் உடலில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வலிப்பு ஏற்படும் போது குழந்தையை அழுத்திப் பிடிக்கக்கூடாது. புரையேறுவதைத் தடுக்க குழந்தையை மல்லாக்க படுக்க வைக்காமால் பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும். குழந்தையின் வாயில் உணவையோ, திரவத்தையோ வேறு ஏதேனும் பொருள்களையோ கொடுக்கக் கூடாது.
வலிப்பு வந்த நேரத்தை குறித்து வைத்து கொண்டு 10 நிமிஷ நேரத்துக்கும் அதிகமாக வலிப்பு நீடித்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரிடம் குழந்தையை எடுத்துச் செல்ல வேண்டும். குழந்தைக்கு வலிப்பு நின்ற பின்பு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க குழந்தை மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
எப்போது குழந்தையை உடனே அவசர சிகிச்சைக்கு எடுத்து செல்ல வேண்டும்?
வலிப்பு 10 நிமிஷத்துக்கும் அதிகமாக இருந்தாலோ, குழந்தையின் கழுத்து பிடரி ஆகியவை விரைப்பாக காணப்பட்டாலோ, குழந்தை சோர்வாக இருந்தாலோ, திரும்பத் திரும்ப வாந்தி ஏற்பட்டாலோ உடனே குழந்தையை மருத்துவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் இது மூளைக் காய்ச்சல் அல்லது வேறு வகை காய்ச்சலாகக்கூட இருக்க வாய்ப்பு உண்டு.
காய்ச்சலால் வரும் வலிப்புக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்?
ரத்த பரிசோதனை, முதுகுத் தண்டுவட நீர் பரிசோதனை மற்றும் இதர மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்வது அவசியம். இதனால் குழந்தைக்கு மூளைச் காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோய் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். பரிசோதனை முடிவுக்கு ஏற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
வலிப்பைத் தடுக்க என்ன வழி?
காய்ச்சல் வரும் போது அதனைத் தொடர்ந்து வலிப்பும் வருவதால் காய்ச்சலைத் தடுக்க மருத்துவர் கொடுக்கும் காய்ச்சல் தடுப்பு மருந்தை (பாராசிட்டாமல்) வீட்டில் வைத்துக் கொண்டு சரியான நேரத்தில் குழந்தைக்குக் கொடுத்தால் வலிப்பைத் தடுக்கலாம்.
மருத்துவர் ஆலோசனையின் படி காய்ச்சல் வரும் போது ஏற்படும் வலிப்புக்கு அளிக்குமாறு கூறிய மருந்தை முதல் மூன்று நாள்கள் மட்டும் கொடுக்க வேண்டும். இந்த மருந்தை 6 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது இல்லை.
காய்ச்சல் இல்லாமல் வரும் வலிப்புக்கு என்ன செய்ய வேண்டும்?
காய்ச்சல் இல்லாமல் வலிப்பு வந்தால் அது மேற்கூறிய வகை வலிப்பு நோயாக இருக்காது. அதற்கு தகுந்த குழந்தை மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.
இத்தனை விவரங்களையும் தெரிந்து கொண்ட நீங்கள் இனி மேல் குழந்தைக்கு காய்ச்சலால் வலிப்பு வந்தால் பயப்பட மாட்டீர்கள் தானே!
டாக்டர் வி.டி.ராஜேஷ் இளம்சிசு மற்றும் குழந்தை மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவமனை, பாளையங்கோட்டை செல்: 94865 59911.
ஒரு வயது நிறைந்த குழந்தைக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும்.
ஒரு வயது நிறைந்த குழந்தைக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். மருத்துவர்கள் 1-3 வயது நிறைந்த குழந்தைக்கு தினசரி 1300 கலோரிகளும் 16 கிராம் புரதமும் கொடுக்க வேண்டும் என்கின்றனர். ஒரு கப் பாலில் 8 கிராம் புரதம் உள்ளது. பாக்கெட் பால் சுத்திகரிக்கப்படுவதால் கொழுப்பு, புரத அளவு மாறுபடலாம். எனவே பசும்பால் எருமைப் பால் இருந்தால் காய்ச்சி கொடுங்கள். கிவி பழம், அத்திப்பழம், நாவல் பழம், பலாப்பழம், கொய்யா பழம் கொடுக்கலாம்.
பலாப்பழம் கொடுக்கும்போது அளவாகக் கொடுக்க வேண்டும். விரைவில் செரிமானம் ஆகாது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தினசரி உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இட்லி, தோசைக்கு சாம்பாரில் பருப்பு கூடுதலாக சேர்த்து ஊட்டுங்கள். அதேபோல் பாதாம், முந்திரி, வேர்க்கடலையும் கொடுக்கலாம். அவற்றில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருப்பு வகையாகக் கொடுங்கள். பசலைக் கீரையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதை நன்கு வேக வைத்து குழைத்து சாதத்துடன் கலந்து ஊட்டுங்கள்.
முட்டையை நன்கு வேக வைத்து மசித்துக் கொடுக்க வேண்டும். மதிய உணவுக்கு முன் 10-11 மணி அளவில் வேக வைத்து தனியாக ஊட்டலாம். நன்கு வேக வைத்த மீனை முள் இல்லாமல் பார்த்து கவனமுடன் கொடுங்கள். கோழியை நன்கு வேக வைத்து கைகளில் மசித்துக் கொடுங்கள். ஏனெனில் விரைவில் ஜீரணிக்காது. உபாதையாகலாம். நாட்டுக்கோழி வாங்கி ஊட்டுவது நல்லது.
தயிர் /நெய் இவை இரண்டிலும் போதுமான அளவு புரதச்சத்து உள்ளது. எனவே தயிர் சாதம் ஊட்டலாம். நெய் சாதத்துடன் தினமும் சிறிதளவு பிசைந்து ஊட்டலாம். குறிப்பிட்டுள்ள உணவுகள் உங்கள் குழந்தைக்கு ஒத்துக்கொள்கிறதா அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என பார்த்துவிட்டுக் கொடுங்கள். அதேபோல் குழந்தை அவற்றை சாப்பிடவில்லை எனில் அவர்கள் மறுக்காதவாறு வேறெந்த வழிகளில் கொடுக்கலாம் என சிந்தித்து ஊட்டிப் பாருங்கள்.
உங்கள் குழந்தை உங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளாமல் போவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அவருக்கும் சமாளிக்க ஏராளமான பிரச்சனைகள் இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமின்றி, எப்போதும் நீங்களே அதிகாரமிக்கவராக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். அவர்கள் நிலைக்கு இறங்கிபோய் பேசுவது, குறிப்பாக அவர்கள் கோபத்தில் இருக்கும்போது பேசுவது அவர்களுக்கு கூடுதலான சாதகத்தைத் தந்து விடலாம். இதேபோல அடிக்கடி நடக்கும் வாய்ப்பிருந்தால், உங்களால் கையாள முடியாத அளவுக்கு சூழ்நிலை கடினமாக இருந்தால், பேச்சுவார்த்தையில் இருந்து விலகி, குழந்தை அமைதியடையும் வரை காத்திருங்கள்.
ஆனால், நீங்கள் அடிபணிந்து போக முடிவெடுக்காதீர்கள். அதுவும் ஒரு அதிகாரப் போட்டி ஏற்படும் நேரத்தில் அப்படி செய்யக் கூடாது. ஏற்றுக்கொள்ளத்தக்க நடத்தை, முரட்டுத்தனம் மற்றும் காயப்படுத்தும் நடத்தை என்று இருப்பதை அவர்களுக்குப் புரிய வைத்திடுங்கள். நீங்கள் விரும்பினால், கோபங்கள் குறைந்தவுடன், அந்த விஷயத்தைப் பற்றி மீண்டும் பேசுங்கள்.
குழந்தை தன்னுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்ள நினைத்தாலும், அவர்கள் எடுத்துக்காட்டின் மூலம் கற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொள்ளக் கூடிய நடத்தையைப் பற்றி உங்களிடமிருது கற்று கொள்வார்கள். அதனால் நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் குழந்தையை நோக்கி நீங்கள் கத்தினால், அவர்களும் பதிலுக்கு கத்துவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்; நீங்கள் கட்டுப்பாட்டு இழந்து அவர்களை அடித்தால், அதேபோலவே ஒரு வன்முறை நிறைந்த அடித்து பழகும் ஒரு டீனேஜரை எதிர்பார்க்கலாம்.
சூழ்நிலையை அமைதியாகக் கையாளுங்கள், அதேநேரத்தில் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடாதீர்கள். எதனால் கோபமடைகிறாய் என்று கேளுங்கள், அதற்கு பதிலாக மன உளைச்சலுடன், கோபத்துடன் எதிர்த்து பேசாதீர்கள். நேர்மையான, நீங்கள் அந்த வயதில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்கிற தர்க்கரீதியான பதில்களை சொல்லுங்கள். நீங்கள் மரியாதை கொடுத்தால், உங்களுக்கும் பதிலுக்கு மரியாதை கிடைக்கும். உங்கள் குழந்தை தன்னை சீரியஸாக மற்றவர்கள் கருத வேண்டும், பெரியவர்களைப் போல நடத்த வேண்டும் என்பதற்காகவே முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறா(ன்)ள் என்பதை மறக்காதீர்கள்.
எதையெல்லாம் தவறாக செய்கிறார்கள் என்று உங்கள் குழந்தையிடம் தொடர்ச்சியாக அறிவுரை சொல்லிக் கொண்டே இருந்தால், அவர்கள் உங்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வார்கள். பதின் வயதினர் இயல்பாகவே உங்களை விடவும் புத்திசாலிகள் என்று தங்களை நினைத்துக் கொள்கிறார்கள், நீங்கள் ஆலோசனை பேச்சுகளை பேசிக்கொண்டிருப்பதால் அந்த எண்ணம் மாறப்போவதில்லை.
அவர்களுடைய செயல்களில் உள்ள தவறுகளைச் சுட்டிகாட்டுவதற்கு பதிலாக, அவர்களுக்கான வேலைகள இ நிர்ணயித்து, அவற்றைப் பின்பற்றா விட்டால் ஏற்படும் பாதிப்புகளை அவர்களே சமாளிக்க சொல்லுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தை அறையை சுத்தம் செய்ய மறுத்தால், அவர்களுடைய பாக்கேட் மணியை நிறுத்தி விடுங்கள், அதற்கு பதிலாக அழுகை, கோபம் எதிர்கொண்டால், விட்டுக் கொடுக்காதீர்கள்.உறுதியாக கையாளுங்கள்.
ஆனால், நீங்கள் அடிபணிந்து போக முடிவெடுக்காதீர்கள். அதுவும் ஒரு அதிகாரப் போட்டி ஏற்படும் நேரத்தில் அப்படி செய்யக் கூடாது. ஏற்றுக்கொள்ளத்தக்க நடத்தை, முரட்டுத்தனம் மற்றும் காயப்படுத்தும் நடத்தை என்று இருப்பதை அவர்களுக்குப் புரிய வைத்திடுங்கள். நீங்கள் விரும்பினால், கோபங்கள் குறைந்தவுடன், அந்த விஷயத்தைப் பற்றி மீண்டும் பேசுங்கள்.
குழந்தை தன்னுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்ள நினைத்தாலும், அவர்கள் எடுத்துக்காட்டின் மூலம் கற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொள்ளக் கூடிய நடத்தையைப் பற்றி உங்களிடமிருது கற்று கொள்வார்கள். அதனால் நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் குழந்தையை நோக்கி நீங்கள் கத்தினால், அவர்களும் பதிலுக்கு கத்துவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்; நீங்கள் கட்டுப்பாட்டு இழந்து அவர்களை அடித்தால், அதேபோலவே ஒரு வன்முறை நிறைந்த அடித்து பழகும் ஒரு டீனேஜரை எதிர்பார்க்கலாம்.
சூழ்நிலையை அமைதியாகக் கையாளுங்கள், அதேநேரத்தில் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடாதீர்கள். எதனால் கோபமடைகிறாய் என்று கேளுங்கள், அதற்கு பதிலாக மன உளைச்சலுடன், கோபத்துடன் எதிர்த்து பேசாதீர்கள். நேர்மையான, நீங்கள் அந்த வயதில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்கிற தர்க்கரீதியான பதில்களை சொல்லுங்கள். நீங்கள் மரியாதை கொடுத்தால், உங்களுக்கும் பதிலுக்கு மரியாதை கிடைக்கும். உங்கள் குழந்தை தன்னை சீரியஸாக மற்றவர்கள் கருத வேண்டும், பெரியவர்களைப் போல நடத்த வேண்டும் என்பதற்காகவே முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறா(ன்)ள் என்பதை மறக்காதீர்கள்.
எதையெல்லாம் தவறாக செய்கிறார்கள் என்று உங்கள் குழந்தையிடம் தொடர்ச்சியாக அறிவுரை சொல்லிக் கொண்டே இருந்தால், அவர்கள் உங்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வார்கள். பதின் வயதினர் இயல்பாகவே உங்களை விடவும் புத்திசாலிகள் என்று தங்களை நினைத்துக் கொள்கிறார்கள், நீங்கள் ஆலோசனை பேச்சுகளை பேசிக்கொண்டிருப்பதால் அந்த எண்ணம் மாறப்போவதில்லை.
அவர்களுடைய செயல்களில் உள்ள தவறுகளைச் சுட்டிகாட்டுவதற்கு பதிலாக, அவர்களுக்கான வேலைகள இ நிர்ணயித்து, அவற்றைப் பின்பற்றா விட்டால் ஏற்படும் பாதிப்புகளை அவர்களே சமாளிக்க சொல்லுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தை அறையை சுத்தம் செய்ய மறுத்தால், அவர்களுடைய பாக்கேட் மணியை நிறுத்தி விடுங்கள், அதற்கு பதிலாக அழுகை, கோபம் எதிர்கொண்டால், விட்டுக் கொடுக்காதீர்கள்.உறுதியாக கையாளுங்கள்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எத்தனையோ மாணவர்கள் விசயத்தை புரிந்து கொள்ளாமலேயே மனப்பாடம் செய்து கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எத்தனையோ மாணவர்கள் விசயத்தை புரிந்து கொள்ளாமலேயே மனப்பாடம் செய்து கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள். விசயத்தை புரிந்து கொள்வது என்பது வேறு, புரியாமல் மனப்பாடம் செய்வது வேறு. மனப்பாடம் செய்கிற விசயங்கள் நினைவில் நீடித்து நிற்பதில்லை. காரியம் முடிந்தவுடன் மறந்து போய் விடுகிறது. இதற்கு காரணம், நினைவில் வைத்துக் கொண்ட ஒரு விசயத்தை ஏற்கனவே மூளையில் உள்ள எதனுடனும் இணைத்து பார்க்காமல் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்வதன் விளைவாகும். கண்மூடித்தனமாக மனப்பாடம் செய்யும் விசயங்கள் நீண்டநேரம் மனதில் நிலைத்திருப்பதில்லை.
இதை பீரங்கியில் போடும் வெடி மருந்துக்கு ஒப்பிடப்பிடலாம். பீரங்கி வெடித்தவுடன் அத்தனை மருந்தும் எரிந்து தீர்ந்து போய் விடும். மறுபடியும் வெடிக்க வேண்டுமென்றால் புதிதாகத்தான் மருந்து போட வேண்டும். அதுபோலவே, மனப்பாடம் செய்யும் விசயங்கள் எதற்காக செய்யப்படனவோ அந்த நோக்கம் முடிந்தவுடன், மறக்கப்பட்டு விடுகின்றன. மீண்டும் பயன்படுத்த வேண்டுமென்றால், மறுபடியும் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கிறது. பரீட்சைக்கு மனப்பாடம் செய்வது இந்த கதைதான். பரீட்சை முடிந்தவுடன் அவை மறக்கப்பட்டு விடுகின்றன.
மனப்பாடம் செய்வதற்கு சுலபமான வழி ஒன்றை திரும்ப, திரும்ப படிப்பதாகும். ஒரே மூச்சில் திரும்ப, திரும்ப படிப்பதன் மூலம் மனதில் நிறுத்திக் கொள்வது சாத்தியமாக இருக்கலாம். ஆனால், அது நெடுநேரம் நிலைப்பதில்லை. அப்படி செய்யாமல் இடைவெளி விட்டு திரும்ப, திரும்ப படித்தால் அது நினைவில் நிற்பதோடு மட்டுமின்றி நீண்ட காலத்துக்கும் நினைவில் நிற்கிறது.
அதேபோல, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முழு விசயத்தையும் ஒரேடியாக மனதில் ஏற்றிக் கொள்ளாமல், சிறிது சிறிதாக அவகாசம் எடுத்துக் கொண்டு மனப்பாடம் செய்கிறபோது முழு விசயமும் மனதில் நிற்பதோடு மட்டுமின்றி நீண்ட காலத்துக்கும் பயன்படுகிற வகையில், நிலைத்து விடுகிறது. கல்வி என்பது பொதுவாக கற்றுக் கொள்ளும் முறைதான். ஒரு விசயத்தை மனப்பாடம் செய்வது மட்டுமே கல்வியாகி விடாது.
நீங்கள் கற்றுக் கொள்ளாத எதையும் நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை. ஆகவே, உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு மெதுவாக படிப்பதில் தவறில்லை. ஆனால், கற்றவை மனதில் படிய வேண்டுமானால் அதற்கு அவகாசம் தேவை என்பதையும் மறந்து விடாதீர்கள். கற்றவற்றை திரும்பதிரும்ப நினைவு படுத்தி பார்த்து கொள்வது அவசியம். எதை, எதை மனதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா அதைஅதை அவ்வப்போது நினைவிற்கு கொண்டு வர முயலுங்கள்.
சச.துர்காதேவி, பி.எஸ்சி.வேதியியல் (இரண்டாம் ஆண்டு), மதர் தெரசா கலை அறிவியல் கல்லூரி, இலுப்பூர், புதுக்கோட்டை.
இதை பீரங்கியில் போடும் வெடி மருந்துக்கு ஒப்பிடப்பிடலாம். பீரங்கி வெடித்தவுடன் அத்தனை மருந்தும் எரிந்து தீர்ந்து போய் விடும். மறுபடியும் வெடிக்க வேண்டுமென்றால் புதிதாகத்தான் மருந்து போட வேண்டும். அதுபோலவே, மனப்பாடம் செய்யும் விசயங்கள் எதற்காக செய்யப்படனவோ அந்த நோக்கம் முடிந்தவுடன், மறக்கப்பட்டு விடுகின்றன. மீண்டும் பயன்படுத்த வேண்டுமென்றால், மறுபடியும் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கிறது. பரீட்சைக்கு மனப்பாடம் செய்வது இந்த கதைதான். பரீட்சை முடிந்தவுடன் அவை மறக்கப்பட்டு விடுகின்றன.
மனப்பாடம் செய்வதற்கு சுலபமான வழி ஒன்றை திரும்ப, திரும்ப படிப்பதாகும். ஒரே மூச்சில் திரும்ப, திரும்ப படிப்பதன் மூலம் மனதில் நிறுத்திக் கொள்வது சாத்தியமாக இருக்கலாம். ஆனால், அது நெடுநேரம் நிலைப்பதில்லை. அப்படி செய்யாமல் இடைவெளி விட்டு திரும்ப, திரும்ப படித்தால் அது நினைவில் நிற்பதோடு மட்டுமின்றி நீண்ட காலத்துக்கும் நினைவில் நிற்கிறது.
அதேபோல, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முழு விசயத்தையும் ஒரேடியாக மனதில் ஏற்றிக் கொள்ளாமல், சிறிது சிறிதாக அவகாசம் எடுத்துக் கொண்டு மனப்பாடம் செய்கிறபோது முழு விசயமும் மனதில் நிற்பதோடு மட்டுமின்றி நீண்ட காலத்துக்கும் பயன்படுகிற வகையில், நிலைத்து விடுகிறது. கல்வி என்பது பொதுவாக கற்றுக் கொள்ளும் முறைதான். ஒரு விசயத்தை மனப்பாடம் செய்வது மட்டுமே கல்வியாகி விடாது.
நீங்கள் கற்றுக் கொள்ளாத எதையும் நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை. ஆகவே, உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு மெதுவாக படிப்பதில் தவறில்லை. ஆனால், கற்றவை மனதில் படிய வேண்டுமானால் அதற்கு அவகாசம் தேவை என்பதையும் மறந்து விடாதீர்கள். கற்றவற்றை திரும்பதிரும்ப நினைவு படுத்தி பார்த்து கொள்வது அவசியம். எதை, எதை மனதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா அதைஅதை அவ்வப்போது நினைவிற்கு கொண்டு வர முயலுங்கள்.
சச.துர்காதேவி, பி.எஸ்சி.வேதியியல் (இரண்டாம் ஆண்டு), மதர் தெரசா கலை அறிவியல் கல்லூரி, இலுப்பூர், புதுக்கோட்டை.
நினைவாற்றல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தேவை. குழப்பமில்லாத மனநிலையோடும், தன்னம்பிக்கையோடும் செயல்பட்டால் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும்.
நினைவாற்றல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தேவை. குழப்பமில்லாத மனநிலையோடும், தன்னம்பிக்கையோடும் செயல்பட்டால் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தேர்வு சமயத்தில் சில வகை உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். நினைவுத்திறனையும் மேம்படுத்தும்.
மாணவர்கள் தேர்வு காலங்களில் நொறுக்குத்தீனிகளை சாப்பிடக்கூடாது. அதற்கு மாற்றாக ஆரோக்கியமான சிற்றுண்டி வகைளை சாப்பிட வேண்டும். பாதாம், முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்புகள் உள்ளிட்டவைகளை சாப்பிட்டு வருவது உடல் நிலையிலும், மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அவைகளில் இருக்கும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ நியூட்ரியன்ஸ் போன்றவை மூளையின் ஆரோக்கியத்திற்கு முக்கிய தேவை.
செரிமானத்திற்கு மட்டுமின்றி நினைவாற்றல் திறனுக்கும், மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் தேன் உதவும். மூளையில் ஆக்ஸிஜனேற்ற நிலையை மேம்படுத்துவதற்கு தேன் உதவுவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேனில் இருக்கும் பாலிபினால்கள், நரம்பு மண்டலத்தை பலப் படுத்தும் தன்மை கொண்டது.
பூசணி விதைகள் மூளை செல்கள் சேதமடைவதை தடுத்து நிறுத்தும்தன்மை கொண்டவை. அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நரம்பு மண்டலத்திற்கும், மூளையின் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்ப்பவை. அதிலிருக்கும் செம்பு, நரம்பு களின் செயல் திறனை அதிகரிக்கும். மெக்னீசியம் நினைவாற்றலுக்கு துணை நிற்கும்.
ஆரோக்கிய பானமாக கருதப்படும் கிரீன் டீயில் காபின் அதிகம் கலந்திருக்கிறது. மூளையில் ரத்தம் தடையின்றி செயல்பட அதிலிருக்கும் அமினோ அமிலங்கள் துணைபுரிகிறது. தேவையற்ற பதற்றம் ஏற்படுவதையும் அது தடுக்கும்.
நினைவாற்றலுக்கு உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டும். நன்றாக தூங்குவதும் அவசியமானது.
மாணவர்கள் தேர்வு காலங்களில் நொறுக்குத்தீனிகளை சாப்பிடக்கூடாது. அதற்கு மாற்றாக ஆரோக்கியமான சிற்றுண்டி வகைளை சாப்பிட வேண்டும். பாதாம், முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்புகள் உள்ளிட்டவைகளை சாப்பிட்டு வருவது உடல் நிலையிலும், மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அவைகளில் இருக்கும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ நியூட்ரியன்ஸ் போன்றவை மூளையின் ஆரோக்கியத்திற்கு முக்கிய தேவை.
செரிமானத்திற்கு மட்டுமின்றி நினைவாற்றல் திறனுக்கும், மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் தேன் உதவும். மூளையில் ஆக்ஸிஜனேற்ற நிலையை மேம்படுத்துவதற்கு தேன் உதவுவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேனில் இருக்கும் பாலிபினால்கள், நரம்பு மண்டலத்தை பலப் படுத்தும் தன்மை கொண்டது.
பூசணி விதைகள் மூளை செல்கள் சேதமடைவதை தடுத்து நிறுத்தும்தன்மை கொண்டவை. அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நரம்பு மண்டலத்திற்கும், மூளையின் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்ப்பவை. அதிலிருக்கும் செம்பு, நரம்பு களின் செயல் திறனை அதிகரிக்கும். மெக்னீசியம் நினைவாற்றலுக்கு துணை நிற்கும்.
ஆரோக்கிய பானமாக கருதப்படும் கிரீன் டீயில் காபின் அதிகம் கலந்திருக்கிறது. மூளையில் ரத்தம் தடையின்றி செயல்பட அதிலிருக்கும் அமினோ அமிலங்கள் துணைபுரிகிறது. தேவையற்ற பதற்றம் ஏற்படுவதையும் அது தடுக்கும்.
நினைவாற்றலுக்கு உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டும். நன்றாக தூங்குவதும் அவசியமானது.
பெரும்பாலான தாய்மார்களால் பிஞ்சுக்குழந்தையின் கண்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா? என்று கண்டறிய முடிவதில்லை. ஆயிரம் குழந்தைகளில் ஒரு சிலவற்றுக்கு கண்களில் பாதிப்பு உள்ளது.
‘‘குழந்தை பிறந்ததும் தாய், அந்த குழந்தையின் முகத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிப்பார். பத்து மாதம் சுமந்த கஷ்டமும், பிரசவ வலியில் துடித்த வேதனையும் அப்போதே அவரிடமிருந்து அகன்றுவிடும். தனது குழந்தையை அள்ளி எடுத்து கொஞ்சுவார். தனது குடும்பத்தின் வாரிசான அந்த குழந்தை எந்தவிதத்திலும் அங்க குறைபாடு கொண்டிருக்கக்கூடாது என்று கருதி, அதன் கை கால்கள் முழு வளர்ச்சியுடன் இருக்கிறதா என்றும், கேள்வித்திறன் எப்படி இருக்கிறது என்றும் பரிசோதிப்பார். ஆனால் பெரும்பாலான தாய்மார்களால் அந்த பிஞ்சுக்குழந்தையின் கண்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா? என்று கண்டறிய முடிவதில்லை. ஆயிரம் குழந்தைகளில் ஒரு சிலவற்றுக்கு கண்களில் பாதிப்பு உள்ளது. பிறந்த சில மாதங்களுக்குள் அதை கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சை அளித்து எளிதாக குணப்படுத்திவிடலாம். கவனிக்காமலே விட்டு விட்டால், அந்த குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பார்வைத்திறன் இழப்புகூட ஏற்படலாம்’’ என்று கூறுகிறார், கண் மருத்துவர் வசுமதி வேதாந்தம்.
வெளிநாடுகளில் மருத்துவ கல்வி பயின்று, விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணராகத் திகழும் இவர் அரசு மகப்பேறு மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு பிறந்த குழந்தைகளின் கண்களை பரிசோதித்து, குறைபாடுகள் இருப்பின் சிகிச்சைக்காக பரிந்துரைக்கிறார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை களுக்கு சென்று அங்குள்ள மகப்பேறு மருத்துவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் கண்களில் குறைபாடு இருந்தால் எப்படி கண்டறிவது என்பதற்கான விளக்க நிகழ்ச்சிகளும் நடத்துகிறார். இவரது இந்த சேவையை பாராட்டி இந்தியாவிலும், வெளிநாட்டிலும் விருதுகள் கிடைத்துள்ளன.
‘‘தாய் வயிற்றில் இருந்து முழு வளர்ச்சி பெற்று, பத்து மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் பொதுவாகவே இயல்பான கண் வளர்ச்சி பெற்றுவிடுகின்றன. ஆனால் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் கண்கள் பெரும்பாலும் இயல்பான வளர்ச்சியை பெற்றிருப்பதில்லை. 35 வாரங்களுக்கு முன்பு பிறந்துவிடும் குழந்தைகளை, குறைமாதத்தில் பிறந்தவை என்கிறோம். அவை அனேகமாக 2 கிலோவுக்கும் குறைவான எடையை கொண்டிருக்கும். அத்தகைய குழந்தைகளின் கண்களில் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
அதுபோல் குழந்தையின்மைக்காக சிகிச்சை பெற்று, தாய்மை யடைந்து பிரசவிக்கும் பெண்களும், ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களும் குழந்தைகளின் கண்கள் மீது கவனம் செலுத்தவேண்டும். சொந்தத்தில் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், மரபணுகுறைபாடு கொண்ட குழந்தை களுக்கும் விழித்திரை பாதிப்பு ஏற்படலாம்.
இந்த பாதிப்பை ‘ரெட்டினோபதி ஆப் பிரிமெச்சூரிட்டி’ (ஆர்.ஓ.பி) என்று குறிப்பிடுவோம். ஒருசில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கண்புரை பாதிப்பு ஏற்படுவதும் உண்டு. கண்புரையை அகற்றினால்தான் குழந்தைகளின் கண்கள் முழு வளர்ச்சிபெறும். மிக அரிதாக லட்சத்தில் ஒரு குழந்தைக்கு கண்களில் புற்றுநோய் கட்டிகூட இருக்கும். அதையும் தொடக்கத்திலே கண்டறிந்து சரியான சிகிச்சை அளித்து, குழந்தையின் பார்வைத்திறன் பாதிக்காத அளவுக்கு சரிசெய்துவிடலாம்.
குழந்தைகள் பிறந்து 2 மாதம் ஆன பிறகுதான் பார்வைத் திறன் லேசாக கிடைக்கும். அப்போது 8 அங்குலம் முதல் 12 அங்குலம் வரையிலான தூரத்தில் தாய் நின்றால்தான், குழந்தையால் தாயின் முகத்தை பார்க்க இயலும். பின்பு நிறங்களை பார்க்க முயற்சிக்கும். முதலில் சிவப்பு நிறத்தைதான் குழந்தைகள் உணரும். பின்பு மஞ்சள் நிறத்தை அடையாளங்காணும். பேசத் தொடங்கியதும், மெல்ல மெல்ல நிறங்களை அறிந்து சொல்லும். 5 வயதை கடக்கும்போதுதான் முழு பார்வைத்திறனை பெறும்.
அதனால் மற்ற உடல் உறுப்புகளில் இருக்கும் குறைபாடுகளை எளிதாக அறிந்துகொள்வதுபோல், குழந்தைகளின் கண் பார்வைத்திறன் குறைபாட்டை பெற்றோரால் எளிதாக கண்டறிய இயலுவதில்லை. அதனால்தான் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று பெற்றோர்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்துகிறேன். இதை சேவை உணர்வோடு செய்து வருகிறேன்’’ என்கிறார்.
‘குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த விழித்திரை வளர்ச்சியின்மை குறைபாட்டை (ஆர்.ஓ.பி) கண்டறிவது எப்படி?’ என்று கேட்டபோது..
‘‘குறைமாதத்தில் பிறக்கும் குழந்தை களுக்கு நுரையீரல் சரியாக வளர்ச்சியடைந்திருக்காது. அதனால் சுவாசிக்கும் திறன் குறையும். அதை ஈடுகட்ட ஆக்சிஜன் கொடுப்பார்கள். சில குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆக்சிஜன் சென்றதால் விழித்திரை பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்தார்கள். அதன் பின்பு சீராக ஆக்சிஜன் கொடுக்கும் நிலை உருவானது. குறைமாதத்தில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் விழித்திரை வளர்ச்சி குறைபாடு இருக்காது. ஒருவேளை இந்த குறைபாடு இருந்தாலும், பிறந்து மூன்று நான்கு வாரங்கள் கழித்துதான் தெரிந்துகொள்ள முடியும்.
இதற்கு பெற்றோர் என்ன செய்யவேண்டும் என்றால், குழந்தை பிறந்த நான்கு வாரத்திற்குள் கண்களை ‘ஸ்கிரீனிங்’ பரிசோதனை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய கருவி மூலம் எளிதாக இதனை கண்டறிந்துவிடலாம். விழித்திரை வளர்ச்சியின்மை இருந்தால், குழந்தைகளுக்கு லேசர் சிகிச்சை தேவைப்படும். இது மயக்க மருந்து கொடுத்து செய்யப்படுவதில்லை. அறுவை சிகிச்சையும் அவசியம் இல்லை. குழந்தைகளுக்கு நெருக்கடிகொடுக்காமல் 15 முதல் 20 நிமிடத்தில் இந்த லேசர் சிகிச்சையை முடித்துவிடலாம். இது குழந்தைகளின் எதிர்காலத்தோடு தொடர்புடையது என்பதால் பெற்றோர் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இப்போது கிராமங்களுக்கும் சென்றும் இந்த சேவையை செய்துகொண்டிருக்கிறோம்’’
‘கிராமத்து தாய்மார்களிடம் இருந்து உங்களுக்கு கிடைத்த அனுபவம் என்ன?’ என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்..
‘‘உலக அளவிலான எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், இந்தியாவில்தான் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் நகரங்களைவிட கிராமத்து தாய்மார்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. குழந்தையின் உடலில் வெளிப்புறமாக எந்த குறைபாடு இருந்தாலும் அவர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தெளிவாக கண்டறிந்துவிடுகிறார்கள். அவர்களால் குழந்தையின் உள்உறுப்பான கண்களின் பாதிப்பை உணரமுடிவதில்லை. இது பற்றி கிராமத்து தாய்மார் களிடம் எடுத்துக்கூறி, பிறந்த குழந்தைகளை தேடிச்சென்று ‘ஸ்கிரீனிங்’ பரிசோதனை செய்கிறோம். இதுவரை 2 லட்சம் குழந்தைகளுக்கு இந்த பரிசோதனையை செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக லேசர் சிகிச்சை செய்திருக்கிறோம்.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா போன்ற பிற நாடுகளிலும் இத்தகைய பாதிப்பு இருக்கிறது. அதனால் உலக சுகாதார நிறுவனமும் இதில் அதிக கவனம் செலுத்துகிறது. உலக சுகாதார நிறுவனம் தனது செயல்திட்டத்தில் ‘விஷன் 2020 புரோகிராமில்’ இந்த விழித்திரை வளர்ச்சியின்மை விழிப்புணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அதனால் உலகமே இப்போது குழந்தைகளின் கண்களின் மீது தனது கவனத்தை ஆழமாக பதித்திருக்கிறது.
நாங்கள் பச்சிளங்குழந்தைகளுக்கு உதவுவதற்காக ‘ப்ராஜெக்ட் விஷன் ஆப் வீல்ஸ்’ என்ற திட்டத்தையும் நடைமுறைப் படுத்துகிறோம். அதற்கான வாகனத்தில் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யக்கூடிய மெஷின்கள் இருக்கும். அதனை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று, பயிற்சி பெற்ற தொழில்நுட்ப ஊழியர்கள் குழந்தைகளை பரிசோதித்து அங்கிருந்து குழந்தைகளின் விழித்திரையை படமெடுத்து அனுப்புவார்கள். அதனை நாங்கள் இங்கிருந்து ஆய்வு செய்து, விழித்திரை வளர்ச்சியின்மை இருந்தால் அந்த குழந்தையை தாயாருடன் அந்த வாகனத்திலே அழைத்து வந்து சிகிச்சை அளித்து குணப்படுத்துகிறோம். இதனை சேவை உணர்வோடு பல்வேறு சேவை நிறுவனங்களின் உதவியோடு செய்து வருகிறோம். இது எங்களுக்கு மிகுந்த ஆத்மதிருப்தியை தருகிறது’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், டாக்டர் வசுமதி வேதாந்தம்.
பாராட்டவேண்டிய சேவைதான்!
டாக்டர் வசுமதி வேதாந்தம்
வெளிநாடுகளில் மருத்துவ கல்வி பயின்று, விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணராகத் திகழும் இவர் அரசு மகப்பேறு மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு பிறந்த குழந்தைகளின் கண்களை பரிசோதித்து, குறைபாடுகள் இருப்பின் சிகிச்சைக்காக பரிந்துரைக்கிறார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை களுக்கு சென்று அங்குள்ள மகப்பேறு மருத்துவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் கண்களில் குறைபாடு இருந்தால் எப்படி கண்டறிவது என்பதற்கான விளக்க நிகழ்ச்சிகளும் நடத்துகிறார். இவரது இந்த சேவையை பாராட்டி இந்தியாவிலும், வெளிநாட்டிலும் விருதுகள் கிடைத்துள்ளன.
‘‘தாய் வயிற்றில் இருந்து முழு வளர்ச்சி பெற்று, பத்து மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் பொதுவாகவே இயல்பான கண் வளர்ச்சி பெற்றுவிடுகின்றன. ஆனால் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் கண்கள் பெரும்பாலும் இயல்பான வளர்ச்சியை பெற்றிருப்பதில்லை. 35 வாரங்களுக்கு முன்பு பிறந்துவிடும் குழந்தைகளை, குறைமாதத்தில் பிறந்தவை என்கிறோம். அவை அனேகமாக 2 கிலோவுக்கும் குறைவான எடையை கொண்டிருக்கும். அத்தகைய குழந்தைகளின் கண்களில் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
அதுபோல் குழந்தையின்மைக்காக சிகிச்சை பெற்று, தாய்மை யடைந்து பிரசவிக்கும் பெண்களும், ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களும் குழந்தைகளின் கண்கள் மீது கவனம் செலுத்தவேண்டும். சொந்தத்தில் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், மரபணுகுறைபாடு கொண்ட குழந்தை களுக்கும் விழித்திரை பாதிப்பு ஏற்படலாம்.
இந்த பாதிப்பை ‘ரெட்டினோபதி ஆப் பிரிமெச்சூரிட்டி’ (ஆர்.ஓ.பி) என்று குறிப்பிடுவோம். ஒருசில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கண்புரை பாதிப்பு ஏற்படுவதும் உண்டு. கண்புரையை அகற்றினால்தான் குழந்தைகளின் கண்கள் முழு வளர்ச்சிபெறும். மிக அரிதாக லட்சத்தில் ஒரு குழந்தைக்கு கண்களில் புற்றுநோய் கட்டிகூட இருக்கும். அதையும் தொடக்கத்திலே கண்டறிந்து சரியான சிகிச்சை அளித்து, குழந்தையின் பார்வைத்திறன் பாதிக்காத அளவுக்கு சரிசெய்துவிடலாம்.
குழந்தைகள் பிறந்து 2 மாதம் ஆன பிறகுதான் பார்வைத் திறன் லேசாக கிடைக்கும். அப்போது 8 அங்குலம் முதல் 12 அங்குலம் வரையிலான தூரத்தில் தாய் நின்றால்தான், குழந்தையால் தாயின் முகத்தை பார்க்க இயலும். பின்பு நிறங்களை பார்க்க முயற்சிக்கும். முதலில் சிவப்பு நிறத்தைதான் குழந்தைகள் உணரும். பின்பு மஞ்சள் நிறத்தை அடையாளங்காணும். பேசத் தொடங்கியதும், மெல்ல மெல்ல நிறங்களை அறிந்து சொல்லும். 5 வயதை கடக்கும்போதுதான் முழு பார்வைத்திறனை பெறும்.
அதனால் மற்ற உடல் உறுப்புகளில் இருக்கும் குறைபாடுகளை எளிதாக அறிந்துகொள்வதுபோல், குழந்தைகளின் கண் பார்வைத்திறன் குறைபாட்டை பெற்றோரால் எளிதாக கண்டறிய இயலுவதில்லை. அதனால்தான் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று பெற்றோர்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்துகிறேன். இதை சேவை உணர்வோடு செய்து வருகிறேன்’’ என்கிறார்.
‘குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த விழித்திரை வளர்ச்சியின்மை குறைபாட்டை (ஆர்.ஓ.பி) கண்டறிவது எப்படி?’ என்று கேட்டபோது..
‘‘குறைமாதத்தில் பிறக்கும் குழந்தை களுக்கு நுரையீரல் சரியாக வளர்ச்சியடைந்திருக்காது. அதனால் சுவாசிக்கும் திறன் குறையும். அதை ஈடுகட்ட ஆக்சிஜன் கொடுப்பார்கள். சில குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆக்சிஜன் சென்றதால் விழித்திரை பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்தார்கள். அதன் பின்பு சீராக ஆக்சிஜன் கொடுக்கும் நிலை உருவானது. குறைமாதத்தில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் விழித்திரை வளர்ச்சி குறைபாடு இருக்காது. ஒருவேளை இந்த குறைபாடு இருந்தாலும், பிறந்து மூன்று நான்கு வாரங்கள் கழித்துதான் தெரிந்துகொள்ள முடியும்.
இதற்கு பெற்றோர் என்ன செய்யவேண்டும் என்றால், குழந்தை பிறந்த நான்கு வாரத்திற்குள் கண்களை ‘ஸ்கிரீனிங்’ பரிசோதனை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய கருவி மூலம் எளிதாக இதனை கண்டறிந்துவிடலாம். விழித்திரை வளர்ச்சியின்மை இருந்தால், குழந்தைகளுக்கு லேசர் சிகிச்சை தேவைப்படும். இது மயக்க மருந்து கொடுத்து செய்யப்படுவதில்லை. அறுவை சிகிச்சையும் அவசியம் இல்லை. குழந்தைகளுக்கு நெருக்கடிகொடுக்காமல் 15 முதல் 20 நிமிடத்தில் இந்த லேசர் சிகிச்சையை முடித்துவிடலாம். இது குழந்தைகளின் எதிர்காலத்தோடு தொடர்புடையது என்பதால் பெற்றோர் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இப்போது கிராமங்களுக்கும் சென்றும் இந்த சேவையை செய்துகொண்டிருக்கிறோம்’’
‘கிராமத்து தாய்மார்களிடம் இருந்து உங்களுக்கு கிடைத்த அனுபவம் என்ன?’ என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்..
‘‘உலக அளவிலான எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், இந்தியாவில்தான் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் நகரங்களைவிட கிராமத்து தாய்மார்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. குழந்தையின் உடலில் வெளிப்புறமாக எந்த குறைபாடு இருந்தாலும் அவர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தெளிவாக கண்டறிந்துவிடுகிறார்கள். அவர்களால் குழந்தையின் உள்உறுப்பான கண்களின் பாதிப்பை உணரமுடிவதில்லை. இது பற்றி கிராமத்து தாய்மார் களிடம் எடுத்துக்கூறி, பிறந்த குழந்தைகளை தேடிச்சென்று ‘ஸ்கிரீனிங்’ பரிசோதனை செய்கிறோம். இதுவரை 2 லட்சம் குழந்தைகளுக்கு இந்த பரிசோதனையை செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக லேசர் சிகிச்சை செய்திருக்கிறோம்.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா போன்ற பிற நாடுகளிலும் இத்தகைய பாதிப்பு இருக்கிறது. அதனால் உலக சுகாதார நிறுவனமும் இதில் அதிக கவனம் செலுத்துகிறது. உலக சுகாதார நிறுவனம் தனது செயல்திட்டத்தில் ‘விஷன் 2020 புரோகிராமில்’ இந்த விழித்திரை வளர்ச்சியின்மை விழிப்புணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அதனால் உலகமே இப்போது குழந்தைகளின் கண்களின் மீது தனது கவனத்தை ஆழமாக பதித்திருக்கிறது.
நாங்கள் பச்சிளங்குழந்தைகளுக்கு உதவுவதற்காக ‘ப்ராஜெக்ட் விஷன் ஆப் வீல்ஸ்’ என்ற திட்டத்தையும் நடைமுறைப் படுத்துகிறோம். அதற்கான வாகனத்தில் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யக்கூடிய மெஷின்கள் இருக்கும். அதனை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று, பயிற்சி பெற்ற தொழில்நுட்ப ஊழியர்கள் குழந்தைகளை பரிசோதித்து அங்கிருந்து குழந்தைகளின் விழித்திரையை படமெடுத்து அனுப்புவார்கள். அதனை நாங்கள் இங்கிருந்து ஆய்வு செய்து, விழித்திரை வளர்ச்சியின்மை இருந்தால் அந்த குழந்தையை தாயாருடன் அந்த வாகனத்திலே அழைத்து வந்து சிகிச்சை அளித்து குணப்படுத்துகிறோம். இதனை சேவை உணர்வோடு பல்வேறு சேவை நிறுவனங்களின் உதவியோடு செய்து வருகிறோம். இது எங்களுக்கு மிகுந்த ஆத்மதிருப்தியை தருகிறது’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், டாக்டர் வசுமதி வேதாந்தம்.
பாராட்டவேண்டிய சேவைதான்!
டாக்டர் வசுமதி வேதாந்தம்
ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லெட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் குழந்தைகளின் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன.
இன்றைய குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகிறார்கள். ஆனால் பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லெட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் குழந்தைகளின் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த குழந்தைகள் இழக்க தொடங்குகிறார்கள். கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பில் சிக்கிக்கொள்கின்றனர்.
சும்மா உட்கார்ந்தபடி தொடுதிரையை விரல்களால் தேய்த்து கொண்டிருக்கும் பழக்கம் விரல்களுக்கோ கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவதில்லை. இயல்பாக குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகள் அந்த வயதில் பெறவேண்டிய ஆற்றலை பெறுவதில்லை. அதனால் அவை திடமான வளர்ச்சி அடைவதில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேரும்போது பிரச்சினை முளைக்கத் தொடங்குகிறது.
அவர்கள் 2, 3 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியாமல் திணறிபோகிறார்கள். கைகள் எழுத ஒத்துழைப்பதில்லை. மேலும், குழந்தைகள் வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலைந்து உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதோடு உடலை வருத்தி எந்த விளையாட்டிலும் ஈடுபடாததால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது பிறகு சர்க்கரை நோயிலும் உயர் ரத்த அழுத்தத்திலும் கொண்டு வந்து விட்டு விடுகிறது.
ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. பொதுவாக பெற்றோர்களும், மற்றோர்களும் பேசிப்பேசிதான் குழந்தைகளின் பேச்சுத்திறனும், மூளைத்திறனும் வளர்ச்சி பெறுகிறது. இந்த வளர்ச்சியை மொபைல் போன்ற பொருட்களின் திரைகளில் தோன்றும் மாயக்காட்சிகள் குழந்தைகளை வெறும் பார்வையாளர் என்ற நிலைக்கு அடிமையாக்கி விடுகின்றன. இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். உங்கள் குழந்தைகள் மொபைல் மற்றும் கம்பயூட்டர் போன்றவற்றிற்கு அடிமை ஆகியுள்ளார்களா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.
செல்போனோ, டேப்லெட்டோ இல்லாத விளையாட்டுகளை விளையாட மறுப்பார்கள். யாருடனும் இயல்பாக பழகமாட்டார்கள். பக்கத்து வீட்டுக்குழந்தையுடன் நட்பாக இருப்பதில்லை.. வீடியோ கேமை விளையாட விடாமல் தடுத்தால் ஆக்ரோஷமாகி கத்துவார்கள். உங்களோடு பேசமாட்டார்கள். இவையெல்லாம் அறிகுறிகள். இதை தடுக்க இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளிடம் செல்போன் உட்பட எந்த திரையுள்ள கருவிகளையும் தராதீர்கள், என்கிறார்கள் குழந்தைகள் நல டாக்டர்கள்.
சும்மா உட்கார்ந்தபடி தொடுதிரையை விரல்களால் தேய்த்து கொண்டிருக்கும் பழக்கம் விரல்களுக்கோ கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவதில்லை. இயல்பாக குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகள் அந்த வயதில் பெறவேண்டிய ஆற்றலை பெறுவதில்லை. அதனால் அவை திடமான வளர்ச்சி அடைவதில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேரும்போது பிரச்சினை முளைக்கத் தொடங்குகிறது.
அவர்கள் 2, 3 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியாமல் திணறிபோகிறார்கள். கைகள் எழுத ஒத்துழைப்பதில்லை. மேலும், குழந்தைகள் வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலைந்து உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதோடு உடலை வருத்தி எந்த விளையாட்டிலும் ஈடுபடாததால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது பிறகு சர்க்கரை நோயிலும் உயர் ரத்த அழுத்தத்திலும் கொண்டு வந்து விட்டு விடுகிறது.
ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. பொதுவாக பெற்றோர்களும், மற்றோர்களும் பேசிப்பேசிதான் குழந்தைகளின் பேச்சுத்திறனும், மூளைத்திறனும் வளர்ச்சி பெறுகிறது. இந்த வளர்ச்சியை மொபைல் போன்ற பொருட்களின் திரைகளில் தோன்றும் மாயக்காட்சிகள் குழந்தைகளை வெறும் பார்வையாளர் என்ற நிலைக்கு அடிமையாக்கி விடுகின்றன. இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். உங்கள் குழந்தைகள் மொபைல் மற்றும் கம்பயூட்டர் போன்றவற்றிற்கு அடிமை ஆகியுள்ளார்களா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.
செல்போனோ, டேப்லெட்டோ இல்லாத விளையாட்டுகளை விளையாட மறுப்பார்கள். யாருடனும் இயல்பாக பழகமாட்டார்கள். பக்கத்து வீட்டுக்குழந்தையுடன் நட்பாக இருப்பதில்லை.. வீடியோ கேமை விளையாட விடாமல் தடுத்தால் ஆக்ரோஷமாகி கத்துவார்கள். உங்களோடு பேசமாட்டார்கள். இவையெல்லாம் அறிகுறிகள். இதை தடுக்க இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளிடம் செல்போன் உட்பட எந்த திரையுள்ள கருவிகளையும் தராதீர்கள், என்கிறார்கள் குழந்தைகள் நல டாக்டர்கள்.
காதைத் தடவி தடவி குழந்தை அழுதால், காதில் என்ன பிரச்சனை எனக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிக முக்கியம்.
குழந்தைகளின் காதுகள் மிகவும் சென்சிடிவ்வான உறுப்பு. காது வலி வந்தால்தான் தெரியும். அந்த வலி மிகவும் கொடுமையானது என்று. காதைத் தடவி தடவி குழந்தை அழுதால், காதில் என்ன பிரச்சனை எனக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிக முக்கியம். முதலாவதாக, தெரிந்து கொள்ளுங்கள். பட்ஸ், ஹேர் பின், கொண்டை பின் என எதுவும் குழந்தைக்கு பயன்படுத்தவே கூடாது. இதெல்லாம் குழந்தையின் சின்ன காதுகளைப் பாதிக்கும்.
எந்தவித கூர்மையான பொருட்களையும் குழந்தையின் காது அருகில் தயவு செய்து கொண்டு செல்லாதீர்கள். டவல் (துண்டு), ஒரு முனையை எடுத்துக்கொண்டு அதை மெல்லியதாக உருட்டி, குழந்தையின் காதில் விட்டு ஈரத்தை எடுக்கலாம். குழந்தை குளித்த பின் செய்ய வேண்டிய முறை இது. குழந்தையின் காது அழுக்காக இருந்தால், துணியை ஈரம் செய்துவிட்டு காதை லேசாகத் தொட்டு துடைத்து எடுக்கவும். சோப் பயன்படுத்தவே கூடாது.
காதுகளின் உள் மடலையும் வெளி காதையும் மென்மையான, ஈரமான துணியால் துடைத்து எடுக்கவும். ஒவ்வொரு முறை குழந்தை குளித்த பின்னும் துண்டால் காதின் ஈரத்தை ஒத்தி ஒத்தி எடுக்கலாம். குழந்தை காதில் ஏதோ அசௌகரியமான உணர்வு உணர்ந்தாலோ, காதில் வலி இருப்பது போல அழுதாலோ மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
காதை சுத்தம் செய்யும்போது, குழந்தை கதகதப்பான உணர்வை உணர வேண்டும். ஆதலால், அடர்த்தியான, துணியால் குழந்தையை போர்த்திக்கொள்ளுங்கள். சில குழந்தைகளுக்கு இயல்பாகவே அதிகமாக வாக்ஸ் காதில் உருவாகும். அவர்களை கட்டாயமாக காது மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பிக்கவும்.
எந்தவித கூர்மையான பொருட்களையும் குழந்தையின் காது அருகில் தயவு செய்து கொண்டு செல்லாதீர்கள். டவல் (துண்டு), ஒரு முனையை எடுத்துக்கொண்டு அதை மெல்லியதாக உருட்டி, குழந்தையின் காதில் விட்டு ஈரத்தை எடுக்கலாம். குழந்தை குளித்த பின் செய்ய வேண்டிய முறை இது. குழந்தையின் காது அழுக்காக இருந்தால், துணியை ஈரம் செய்துவிட்டு காதை லேசாகத் தொட்டு துடைத்து எடுக்கவும். சோப் பயன்படுத்தவே கூடாது.
காதுகளின் உள் மடலையும் வெளி காதையும் மென்மையான, ஈரமான துணியால் துடைத்து எடுக்கவும். ஒவ்வொரு முறை குழந்தை குளித்த பின்னும் துண்டால் காதின் ஈரத்தை ஒத்தி ஒத்தி எடுக்கலாம். குழந்தை காதில் ஏதோ அசௌகரியமான உணர்வு உணர்ந்தாலோ, காதில் வலி இருப்பது போல அழுதாலோ மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
காதை சுத்தம் செய்யும்போது, குழந்தை கதகதப்பான உணர்வை உணர வேண்டும். ஆதலால், அடர்த்தியான, துணியால் குழந்தையை போர்த்திக்கொள்ளுங்கள். சில குழந்தைகளுக்கு இயல்பாகவே அதிகமாக வாக்ஸ் காதில் உருவாகும். அவர்களை கட்டாயமாக காது மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பிக்கவும்.
குழந்தையை சீக்கிரம் நடக்க வைப்பதற்கு சுலபமான முறையில் என்ன வழிகள் உள்ளது என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
குழந்தைகள் பிறந்து 8 மாதம் ஆன பிறகு 8 அடி வைக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவது வழக்கம். ஆனாலும் சில குழந்தைகள் 8 மாதம் ஆன பிறகும் நிற்கவே மிகவும் சிரமப்படுவார்கள். தங்கள் குழந்தை 8 மாதம் ஆன பிறகும் நடக்காமல் இருப்பதை பார்த்து தாய்மார்கள் பலரும் மிகவும் வருத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள். சரி வாங்க இப்போது 8 மாதம் ஆன பிறகும் நடக்காமல் இருக்கும் குழந்தையை சுலபமாக எப்படி நடக்க வைக்கலாம் என்பதை பற்றிய சில டிப்ஸ் இதோ உங்களுக்காக..!
குழந்தை எந்த வித கஷ்டமும் இல்லாமல் சீக்கிரம் நடக்க இரவு தூங்கும் முன் பாத்திரத்தில் புழுங்கல் அரிசியை எடுத்து அதிகமாக தண்ணீர் ஊற்றி அரிசியை ஊறவைத்து கொள்ளவும். ஊறவைத்த அரிசி தண்ணீரை மறுநாள் வடிகட்டி குழந்தையை அந்த நீரில் குளிப்பாட்ட வேண்டும். ஊறவைத்த அரிசி தண்ணீரில் மட்டும் குழந்தையை குளிப்பாட்ட வேண்டும். குழந்தையை குளிப்பாட்ட தண்ணீர் பற்றவில்லை என்பதற்காக வேறு எந்த நீரிலும் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.
சாதாரண நீரில் குழந்தையை நன்றாக குளிப்பாட்டிய பிறகு ஊறவைத்த அரிசி தண்ணீரை குழந்தையின் கால், முதுகு, இடுப்பு பகுதிகளில் நன்றாக ஊற்றிவிட்டு குளிப்பாட்டிவிட வேண்டும். குழந்தையை எப்போதும் குளிப்பாட்ட வைக்கும் நீரின் வெப்பத்தை விட இந்த அரிசி ஊறவைத்த நீரின் வெப்பத்தன்மை அதிகமாக இருக்க வேண்டும். இந்த அரிசி ஊறவைத்த நீரில் குழந்தையை குளிப்பாட்டுவதால் குழந்தையின் முதுகெலும்பு, தொடையெலும்பு, மூட்டு பகுதிகள் குழந்தைக்கு மிகவும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
காலையில் குழந்தையை குளிப்பாட்டிய பிறகு பாத்திரத்தில் அரிசியை ஊறவைத்து கொள்ளவும். மாலை 4 மணி அளவில் ஊறவைத்த அரிசியை நன்றாக வடிகட்டிய பின் மிதமான அளவிற்கு வடிகட்டிய நீரை ஹீட் செய்து குழந்தையின் இடுப்பிற்கு கீழ் நன்றாக ஊற்றிவிட வேண்டும். இது போன்று 2 முறை குழந்தைக்கு செய்துவிட வேண்டும்.
குழந்தையை தினமும் நிற்க வைத்து பழக்கி விட வேண்டும். அதிக நேரமும் குழந்தை நின்றால் வலி ஏற்பட்டுவிடும். இதனால் குழந்தைகள் அழ தொடங்கிவிடுவார்கள். அப்போது நிற்கவைப்பதை தவிர்த்துவிட்டு சிறிதுநேரம் பிறகு நிற்க வைத்து பழக்குங்கள்.
இந்த அரிசி ஊறவைத்த தண்ணீரில் குழந்தையின் முதுகு பகுதி, இடுப்பு பகுதிகளில் தினமும் ஊற்றி குளிப்பாட்டி வந்தால் நடக்க பழகாமல் இருக்கும் எந்த குழந்தையும் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். அரிசி ஊறவைத்த தண்ணீரை பிறந்த குழந்தை முதல் பயன்படுத்தி வரலாம்.
குழந்தை எந்த வித கஷ்டமும் இல்லாமல் சீக்கிரம் நடக்க இரவு தூங்கும் முன் பாத்திரத்தில் புழுங்கல் அரிசியை எடுத்து அதிகமாக தண்ணீர் ஊற்றி அரிசியை ஊறவைத்து கொள்ளவும். ஊறவைத்த அரிசி தண்ணீரை மறுநாள் வடிகட்டி குழந்தையை அந்த நீரில் குளிப்பாட்ட வேண்டும். ஊறவைத்த அரிசி தண்ணீரில் மட்டும் குழந்தையை குளிப்பாட்ட வேண்டும். குழந்தையை குளிப்பாட்ட தண்ணீர் பற்றவில்லை என்பதற்காக வேறு எந்த நீரிலும் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.
சாதாரண நீரில் குழந்தையை நன்றாக குளிப்பாட்டிய பிறகு ஊறவைத்த அரிசி தண்ணீரை குழந்தையின் கால், முதுகு, இடுப்பு பகுதிகளில் நன்றாக ஊற்றிவிட்டு குளிப்பாட்டிவிட வேண்டும். குழந்தையை எப்போதும் குளிப்பாட்ட வைக்கும் நீரின் வெப்பத்தை விட இந்த அரிசி ஊறவைத்த நீரின் வெப்பத்தன்மை அதிகமாக இருக்க வேண்டும். இந்த அரிசி ஊறவைத்த நீரில் குழந்தையை குளிப்பாட்டுவதால் குழந்தையின் முதுகெலும்பு, தொடையெலும்பு, மூட்டு பகுதிகள் குழந்தைக்கு மிகவும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
காலையில் குழந்தையை குளிப்பாட்டிய பிறகு பாத்திரத்தில் அரிசியை ஊறவைத்து கொள்ளவும். மாலை 4 மணி அளவில் ஊறவைத்த அரிசியை நன்றாக வடிகட்டிய பின் மிதமான அளவிற்கு வடிகட்டிய நீரை ஹீட் செய்து குழந்தையின் இடுப்பிற்கு கீழ் நன்றாக ஊற்றிவிட வேண்டும். இது போன்று 2 முறை குழந்தைக்கு செய்துவிட வேண்டும்.
குழந்தையை தினமும் நிற்க வைத்து பழக்கி விட வேண்டும். அதிக நேரமும் குழந்தை நின்றால் வலி ஏற்பட்டுவிடும். இதனால் குழந்தைகள் அழ தொடங்கிவிடுவார்கள். அப்போது நிற்கவைப்பதை தவிர்த்துவிட்டு சிறிதுநேரம் பிறகு நிற்க வைத்து பழக்குங்கள்.
இந்த அரிசி ஊறவைத்த தண்ணீரில் குழந்தையின் முதுகு பகுதி, இடுப்பு பகுதிகளில் தினமும் ஊற்றி குளிப்பாட்டி வந்தால் நடக்க பழகாமல் இருக்கும் எந்த குழந்தையும் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். அரிசி ஊறவைத்த தண்ணீரை பிறந்த குழந்தை முதல் பயன்படுத்தி வரலாம்.






