என் மலர்
குழந்தை பராமரிப்பு
குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகளுக்காக செய்யப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கட்டுனர்கள் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்ட வழிமுறைகளை இங்கே காணலாம்.
இன்றைய நகர வாழ்க்கையில் தனிக்குடித்தனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. அனைத்து அபார்ட்மெண்டுகளிலும் குட்டிக் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வயதான பெரியவர்கள் இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. அந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகளுக்காக செய்யப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கட்டுனர்கள் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்ட வழிமுறைகளை இங்கே காணலாம்.
* தவழும் குழந்தைகள் உள்ள வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சில சமயம் அவர்கள் தரையில் வாய் வைத்து விடுவார்கள் அல்லது தரையில் இருக்கும் பொருட்களை வாயில் போட்டு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
* வீட்டை குழந்தைகளுக்கு ஏற்ற அமைப்பில் மாற்றி அமைத்துக்கொள்வது அவசியம். அவர்களது குறும்பை முன்கூட்டியே யூகித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னதாகவே அமைத்துக்கொள்வது நல்லது.
* வீட்டில் குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் அலமாரிகள் இருந்தால் அவற்றை அவர்கள் திறக்க முடியாதபடி ‘லாக்’ பயன்படுத்தலாம். ‘பிரிட்ஜ்’ எப்போதுமே பூட்டப்பட்டு இருப்பதும், கழிவறைகளை தாளிட்டு மூடப்பட்டு இருப்பதும் முக்கியம்.
* தண்ணீர், எண்ணெய் போன்றவை தரையில் சிந்தினால் உடனே துடைத்துவிட வேண்டும். வழுக்கக்கூடிய தரைத்தளப்பகுதிகளை தேர்ந்தெடுத்து வழுக்கும் தக்க ‘மேட்’ போடவேண்டும்.
* மேசைகளில் உள்ள ‘டிராயர்களை’ திறந்து விடாமல் ‘சைல்டு லாக்’ போட்டு வைப்பது நல்லது.
* சமையலறையில் உள்ள கத்தி போன்ற பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவேண்டும்.
* சோபா, கட்டில் ஆகியவற்றின் மேல் குழந்தைகள் ஏறி விழுந்தால், அடிபடாத வகையில் கெட்டியான ‘ரக்ஸ்’ வகைகளை விரித்து வைக்கலாம்.
* மாடிப் படிக்கட்டுகளில் ஏறாமல் இருப்பதற்கும், மேலே உள்ளபோது கீழே இறங்கி விடாமல் இருப்பதற்கும் ‘பேபி கேட்’ தடுப்பை பொருத்திக்கொள்வது பாதுகாப்பானது.
* டேபிள்களின் முனைகளில் குழந்தைகள் அடிபடுவதை தவிர்க்கும் வகையில் ‘ Co-r-n-er Pr-ot-e-ct-or ’ என்ற சிறிய அமைப்பை பொருத்தி வைக்கலாம்.
* பல குழந்தைகள் ஆர்வம் காரணமாக ‘எலக்ட்ரிகல் சாக்கெட்டுக்குள்’ விரல்களை விட முயற்சிப்பார்கள். அதை தவிர்க்க தக்க ‘கவர்களை’ உபயோகிக்கலாம். அவர்களது கவனத்தை தவிர்க்கும் வகையில் கண்கவரும் டிசைன்கள் இல்லாதவற்றை பயன்படுத்தலாம்.
* ஒரு வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள வீட்டின் சமையலறையில் உள்ள கியாஸ் ஸ்டவ்வுக்கு ‘பர்னர் நாப் கவர்’ போட்டு வைப்பதன் மூலம், அவற்றை திருகி விடுவதை தவிர்க்க இயலும்.
* கதவுகளை அவர்களாகவே திறப்பதை தவிர்க்க ‘டோர் நாப் கவர்’ மற்றும் கதவுகள் மூடிக்கொள்ளாமல் இருக்க ‘டோர் ஸ்டாப்பர்’ ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
* தவழும் குழந்தைகள் உள்ள வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சில சமயம் அவர்கள் தரையில் வாய் வைத்து விடுவார்கள் அல்லது தரையில் இருக்கும் பொருட்களை வாயில் போட்டு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
* வீட்டை குழந்தைகளுக்கு ஏற்ற அமைப்பில் மாற்றி அமைத்துக்கொள்வது அவசியம். அவர்களது குறும்பை முன்கூட்டியே யூகித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னதாகவே அமைத்துக்கொள்வது நல்லது.
* வீட்டில் குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் அலமாரிகள் இருந்தால் அவற்றை அவர்கள் திறக்க முடியாதபடி ‘லாக்’ பயன்படுத்தலாம். ‘பிரிட்ஜ்’ எப்போதுமே பூட்டப்பட்டு இருப்பதும், கழிவறைகளை தாளிட்டு மூடப்பட்டு இருப்பதும் முக்கியம்.
* தண்ணீர், எண்ணெய் போன்றவை தரையில் சிந்தினால் உடனே துடைத்துவிட வேண்டும். வழுக்கக்கூடிய தரைத்தளப்பகுதிகளை தேர்ந்தெடுத்து வழுக்கும் தக்க ‘மேட்’ போடவேண்டும்.
* மேசைகளில் உள்ள ‘டிராயர்களை’ திறந்து விடாமல் ‘சைல்டு லாக்’ போட்டு வைப்பது நல்லது.
* சமையலறையில் உள்ள கத்தி போன்ற பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவேண்டும்.
* சோபா, கட்டில் ஆகியவற்றின் மேல் குழந்தைகள் ஏறி விழுந்தால், அடிபடாத வகையில் கெட்டியான ‘ரக்ஸ்’ வகைகளை விரித்து வைக்கலாம்.
* மாடிப் படிக்கட்டுகளில் ஏறாமல் இருப்பதற்கும், மேலே உள்ளபோது கீழே இறங்கி விடாமல் இருப்பதற்கும் ‘பேபி கேட்’ தடுப்பை பொருத்திக்கொள்வது பாதுகாப்பானது.
* டேபிள்களின் முனைகளில் குழந்தைகள் அடிபடுவதை தவிர்க்கும் வகையில் ‘ Co-r-n-er Pr-ot-e-ct-or ’ என்ற சிறிய அமைப்பை பொருத்தி வைக்கலாம்.
* பல குழந்தைகள் ஆர்வம் காரணமாக ‘எலக்ட்ரிகல் சாக்கெட்டுக்குள்’ விரல்களை விட முயற்சிப்பார்கள். அதை தவிர்க்க தக்க ‘கவர்களை’ உபயோகிக்கலாம். அவர்களது கவனத்தை தவிர்க்கும் வகையில் கண்கவரும் டிசைன்கள் இல்லாதவற்றை பயன்படுத்தலாம்.
* ஒரு வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள வீட்டின் சமையலறையில் உள்ள கியாஸ் ஸ்டவ்வுக்கு ‘பர்னர் நாப் கவர்’ போட்டு வைப்பதன் மூலம், அவற்றை திருகி விடுவதை தவிர்க்க இயலும்.
* கதவுகளை அவர்களாகவே திறப்பதை தவிர்க்க ‘டோர் நாப் கவர்’ மற்றும் கதவுகள் மூடிக்கொள்ளாமல் இருக்க ‘டோர் ஸ்டாப்பர்’ ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
பள்ளி படிப்புக்குப் பின், பட்டப்படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள், தங்கள் விருப்பம், திறமையின் அடிப்படையில் அடுத்து எதைப் படிக்கலாம் என தேர்ந்தெடுப்பது நலம்.
மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் படிப்பை தேர்ந்தெடுக்கும்போது மிக கவனமாக செயல்படுவது அவசியம். பள்ளி படிப்புக்குப் பின், பட்டப்படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள், தங்கள் விருப்பம், திறமையின் அடிப்படையில் அடுத்து எதைப் படிக்கலாம் என தேர்ந்தெடுப்பது நலம். குறிப்பாக, பிளஸ்-2 வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து படித்த மாணவர்களில் பெரும்பாலானோர், பட்டப்படிப்பில், மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கவே விரும்புகின்றனர். ஏனெனில், அந்த இரு படிப்புகளுக்கு மட்டுமே பொருளாதார அடிப்படையில் எதிர்காலம் இருப்பதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருவது தான் காரணம். எனினும் எல்லோரோலும் மருத்துவப் படிப்பிற்கான இடத்தை பெற முடிவதில்லை; பி.இ., படித்து முடிக்கும் அனைவருக்கும், அவர்கள் நினைத்தபடி வளமான எதிர்காலம் உடைய வேலை கிடைத்துவிடுவதும் இல்லை.
அதே சமயம், பிளஸ் 2-வில் கணிதத்தை ஓர் பாடமாக படித்த மாணவர்கள், `ஆக்சூரியல் சயின்ஸ்’ எனப்படும் காப்பீட்டு திட்ட வடிவமைப்பு குறித்த பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயில்வதன் மூலம், அவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவு மிகப் பெரிய சம்பளமாக பெறக்கூடிய வேலைவாய்ப்பை பெற முடியும்.
உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் காப்பீட்டு துறையில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. காப்பீட்டு துறை வேலை வாய்ப்பு என்றால், இன்சூரன்ஸ் ஏஜென்ட் அல்லது டெவலெப்மென்ட் ஆபீசர் வேலை மட்டுமே என பலரும் நினைக்கின்றனர். ஆனால், அந்த துறையில், காப்பீட்டு திட்டங்களை வடிவமைத்தல், காப்பீட்டு தொகையை நிர்ணயித்தல், காப்பீடு அல்லது இழப்பீட்டு தொகையை நிர்ணயித்தல் என பல பிரிவுகள் உள்ளன. அவற்றிற்கான நிபுணர்களும் தேவைப்படுகின்றனர். அப்படி காப்பீட்டு துறை சார்பான நுணுக்கமான விஷயங்களை கற்பிக்கும் படிப்பு தான், ஆக்சூரியல் சயின்ஸ். பிளஸ் -2 வில் கணிதம் படித்தவர்கள் மட்டுமின்றி, புள்ளியியல், வணிகக் கணிதம் உள்ளிட்ட பாடங்களை படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம்.
உலக அளவில் காப்பீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், காப்பீட்டு திட்டங்களை வரையறுக்கும் அதிகாரிகளுக்கான தேவையும் அதிகமாகவே உள்ளது. எம்.எஸ்சி., ஆக்சூரியல் சயின்ஸ் படித்தவர் களுக்கு இத்துறையில் கை நிறைய சம்பளத்துடன் வேலை காத்துக்கிடக்கிறது. இத்துறையில் பி.எச்டி., ஆய்வு படிப்பை முடித்தால் மிக வேகமாக உயர் பதவிகளை அடைவது நிச்சயம்.
பி.எஸ்சி. கணிதம், புள்ளியியல் மட்டுமின்றி, இளநிலை பட்டப்படிப்பில் கணிதம், புள்ளியில், வணிகக்கணிதத்தை ஒரு பாடமாக படித்தவர்களும் எம்.எஸ்சி., ஆக்சூரியல் சயின்ஸ் படிக்கலாம்.
பிற பட்டப்படிப்புகளைப் போல் அன்றி, குறிப்பிட்ட சில கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களே ஆக்சூரியல் சையின்ஸ் படிப்பை நடத்துகின்றன. அதனால் `ஆக்சூரியல் சயின்ஸ்’ பட்டப் படிப்பை எந்தெந்த கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன என்பதை அறிந்து, அப்படிப்பால் கிடைக்கும் வேலைவாய்ப்பு பற்றிய சந்தேகங்களை துறை சார் வல்லுனர்களிடம் கேட்டு தெளிந்த பின், அதில் சேர்ந்து பயனுற, வாழ்த்துக்கள்...!
அதே சமயம், பிளஸ் 2-வில் கணிதத்தை ஓர் பாடமாக படித்த மாணவர்கள், `ஆக்சூரியல் சயின்ஸ்’ எனப்படும் காப்பீட்டு திட்ட வடிவமைப்பு குறித்த பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயில்வதன் மூலம், அவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவு மிகப் பெரிய சம்பளமாக பெறக்கூடிய வேலைவாய்ப்பை பெற முடியும்.
உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் காப்பீட்டு துறையில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. காப்பீட்டு துறை வேலை வாய்ப்பு என்றால், இன்சூரன்ஸ் ஏஜென்ட் அல்லது டெவலெப்மென்ட் ஆபீசர் வேலை மட்டுமே என பலரும் நினைக்கின்றனர். ஆனால், அந்த துறையில், காப்பீட்டு திட்டங்களை வடிவமைத்தல், காப்பீட்டு தொகையை நிர்ணயித்தல், காப்பீடு அல்லது இழப்பீட்டு தொகையை நிர்ணயித்தல் என பல பிரிவுகள் உள்ளன. அவற்றிற்கான நிபுணர்களும் தேவைப்படுகின்றனர். அப்படி காப்பீட்டு துறை சார்பான நுணுக்கமான விஷயங்களை கற்பிக்கும் படிப்பு தான், ஆக்சூரியல் சயின்ஸ். பிளஸ் -2 வில் கணிதம் படித்தவர்கள் மட்டுமின்றி, புள்ளியியல், வணிகக் கணிதம் உள்ளிட்ட பாடங்களை படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம்.
உலக அளவில் காப்பீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், காப்பீட்டு திட்டங்களை வரையறுக்கும் அதிகாரிகளுக்கான தேவையும் அதிகமாகவே உள்ளது. எம்.எஸ்சி., ஆக்சூரியல் சயின்ஸ் படித்தவர் களுக்கு இத்துறையில் கை நிறைய சம்பளத்துடன் வேலை காத்துக்கிடக்கிறது. இத்துறையில் பி.எச்டி., ஆய்வு படிப்பை முடித்தால் மிக வேகமாக உயர் பதவிகளை அடைவது நிச்சயம்.
பி.எஸ்சி. கணிதம், புள்ளியியல் மட்டுமின்றி, இளநிலை பட்டப்படிப்பில் கணிதம், புள்ளியில், வணிகக்கணிதத்தை ஒரு பாடமாக படித்தவர்களும் எம்.எஸ்சி., ஆக்சூரியல் சயின்ஸ் படிக்கலாம்.
பிற பட்டப்படிப்புகளைப் போல் அன்றி, குறிப்பிட்ட சில கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களே ஆக்சூரியல் சையின்ஸ் படிப்பை நடத்துகின்றன. அதனால் `ஆக்சூரியல் சயின்ஸ்’ பட்டப் படிப்பை எந்தெந்த கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன என்பதை அறிந்து, அப்படிப்பால் கிடைக்கும் வேலைவாய்ப்பு பற்றிய சந்தேகங்களை துறை சார் வல்லுனர்களிடம் கேட்டு தெளிந்த பின், அதில் சேர்ந்து பயனுற, வாழ்த்துக்கள்...!
குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதியிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்த வேண்டாம்.
மனிதனின் இரண்டு கால்களும் ஒரே உயரத்தில் ஒன்று போலவே தோற்றமளிப்பதுதான் இயல்பானது. ஆனால், சிலருக்கு இரண்டு கால்களில் ஒன்று மட்டும் உயரம் குறைந்தோ அல்லது வளைந்தோ இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. வளரும் பருவத்தில் குழந்தைகளின் தொடை எலும்பின் மேல் பகுதி அல்லது கீழ்ப்பகுதியில் அடிபட்டு வளர்ச்சி குருத்துகளில் முறிவு ஏற்பட்டு இருக்கலாம். அடிபட்டவுடன் சில சமயம் இதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். முறையான வைத்தியம் கிடைக்காமல் இந்த பகுதிகள் சரியாக பொருத்தப்படவில்லை என்றால் கால்களின் அமைப்பில் மாற்றம் வரக்கூடும்.
இதனால் அடிபட்ட காலின் வளர்ச்சி சீராக அமையாமல் குட்டையாகவோ முறுக்கியபடியோ வளருவதற்கு வாய்ப்பு உண்டாகும்.
ஒரு கால் உயரம் குறைவாக அமைவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. குழந்தைகளுக்கு அதுவும் பச்சிளம் குழந்தைகளுக்கு இடுப்பு மூட்டில் சீழ்பிடித்து, சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றால், தொடை எலும்பின் மேல்பாகமும் அதை சார்ந்த குருத்துப் பகுதிகளும் அழிந்தே போய்விடும். வளர்ந்து வரும் நமது நாட்டில் இதுபோன்ற நோய்கள் தற்போது குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.
குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதியிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்த வேண்டாம். உடனே டாக்டரிடம் ஆலோசனை செய்து உரிய சிகிச்சை அளிப்பது கட்டாயம். கால்கள் பெரும்பாலும் உயரம் குறைந்து மெலிந்து போவதற்கு மிக முக்கிய காரணம் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோதான்.
இப்போதெல்லாம் நாடு முழுவதும் நடைபெறும் முகாம்கள் மூலம் போலியோ தடுப்பு மருந்து எல்லோருக்கும் கொடுக்கப்பட்டு விடுவதால் வருங்காலத்தில் இந்த கொடிய நோய் பெரியம்மை போல மருத்துவ வரலாற்றில் மட்டும் இடம் பெறும் நோயாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது இன்னொரு மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
இதனால் அடிபட்ட காலின் வளர்ச்சி சீராக அமையாமல் குட்டையாகவோ முறுக்கியபடியோ வளருவதற்கு வாய்ப்பு உண்டாகும்.
ஒரு கால் உயரம் குறைவாக அமைவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. குழந்தைகளுக்கு அதுவும் பச்சிளம் குழந்தைகளுக்கு இடுப்பு மூட்டில் சீழ்பிடித்து, சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றால், தொடை எலும்பின் மேல்பாகமும் அதை சார்ந்த குருத்துப் பகுதிகளும் அழிந்தே போய்விடும். வளர்ந்து வரும் நமது நாட்டில் இதுபோன்ற நோய்கள் தற்போது குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.
குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதியிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்த வேண்டாம். உடனே டாக்டரிடம் ஆலோசனை செய்து உரிய சிகிச்சை அளிப்பது கட்டாயம். கால்கள் பெரும்பாலும் உயரம் குறைந்து மெலிந்து போவதற்கு மிக முக்கிய காரணம் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோதான்.
இப்போதெல்லாம் நாடு முழுவதும் நடைபெறும் முகாம்கள் மூலம் போலியோ தடுப்பு மருந்து எல்லோருக்கும் கொடுக்கப்பட்டு விடுவதால் வருங்காலத்தில் இந்த கொடிய நோய் பெரியம்மை போல மருத்துவ வரலாற்றில் மட்டும் இடம் பெறும் நோயாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது இன்னொரு மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
குழந்தைக்கு பெயர் சூட்ட பெற்றோர் புதுவிதமாக சிந்திக்கிறார்கள். அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெயர் சூட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு.
குழந்தைக்கு பெயர் சூட்ட பெற்றோர் புதுவிதமாக சிந்திக்கிறார்கள். தங்கள் குழந்தையின் பெயர் மற்ற குழந்தைகளின் பெயர்களை விட தனித்துவமாகவும், வித்தியாசமாகவும், ரசிக்கும்படியும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் சில எழுத்துகளை தாங்கி இருக்க வேண்டும் என்றும் நிறைய பேர் விரும்புவார்கள். அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெயர் சூட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு.
* நீண்ட எழுத்துகளுடன் இருக்கும் பழமை யான பெயர்களை கூடுமானவரை தவிர்த்து விடுவது நல்லது. அதே நேரத்தில் கலாசாரத் துடன் ஒத்திருக்கும்படி பெயர் வைக்கலாம். அது எதிர்காலத்தில் குழந்தைகள் தங்கள் பெயரை உச்சரிப்பதற்கு தயங்காத நிலையை ஏற்படுத்தும். இணையதளங்களில் கொட்டிக்கிடக்கும் பெயர்களில் இருந்து பொருத்தமான பெயரை தேர்ந்தெடுத்து சூட்டலாம்.
* குழந்தையின் பெயர் உச்சரிப்பதற்கு இனிமையாகவும், குறைந்த எழுத்துக்கள் கொண்டதாகவும் இருக்க வேண்டும். நான்கு, ஐந்து எழுத்துக்களுக்கு மேல் இருக்கக்கூடாது. ஏனெனில் பெரும்பாலானவர்கள் முழு நீள பெயரை கூறி அழைப்பதில்லை.
* குழந்தைக்கு வைக்கும் பெயர் மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்யும்படி அமைந்துவிடக்கூடாது. சட்டென்று மனதில் பதியும்படியும் இருக்க வேண்டும். உச்சரிக்க சிரமப்படும் அளவுக்கும் இருக்கக்கூடாது.
* தங்கள் குழந்தையின் பெயர் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக பிரபலமாக இருக்கும் பிராண்ட்களின் பெயரையோ, விசித்திரமான இடங்களின் பெயர்களை தாங்கி இருக்கும் பெயர்களையோ வைக்கக்கூடாது. அது மற்றவர்களின் விமர்சனத்திற்கு வழிவகுத்துவிடக்கூடும்.
* மூதாதையர்களின் பெயர்களையோ, பழமையான பெயர்களையோ வைப்பதற்கு முன்பு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். பழைய பெயர்களாகவே இருந்தாலும் எல்லா காலகட்டத்திற்கும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.
* அர்த்தமுள்ள பெயராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய பேர் வாய்க்குள் நுழையாத பெயர்களை வைத்துவிடுகிறார் கள். அதனை மற்றவர்கள் கேலி செய்ய நேரிடும். அர்த்தம் பொதிந்த பெயர்கள் கூட சில சமயங்களில் கேலிக்கு உள்ளாகலாம். அதனால் கவனமாக சிந்தித்து பொருத்தமான பெயரை சூட்டுங்கள்.
* சிலர் வைக்கும் பெயர் அது ஆண் குழந்தையா? இல்லை பெண் குழந்தையா? என்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடும். பாலினத்தை சரியாக குறிக்கும் விதத்தில் பெயரும் அமைந்திருக்க வேண்டும்.
* நல்ல பெயராக இருக்கிறது என்பதற்காக உறவினர்கள் ஏற்கனவே பிள்ளைகளுக்கு வைத்திருக்கும் பெயரை திரும்பவும் சூட்டக்கூடாது. அது குழந்தைகளுக்கே குழப் பத்தை ஏற்படுத்திவிடும்.
* ஆங்கில எழுத்துக்களின் தொடக்க எழுத்தில் பெயர் ஆரம்பிப்பது நல்லது. கடைசியில் உள்ள எழுத்துக்களில் பெயர் வைத்தால் வகுப்பில் தொடங்கி பல்வேறு இடங்களில் பெயர் கடைசியாக இடம்பெற நேரிடும். மற்றவர்கள் பெயர்கள் வாசித்து முடியும்வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
* நீண்ட எழுத்துகளுடன் இருக்கும் பழமை யான பெயர்களை கூடுமானவரை தவிர்த்து விடுவது நல்லது. அதே நேரத்தில் கலாசாரத் துடன் ஒத்திருக்கும்படி பெயர் வைக்கலாம். அது எதிர்காலத்தில் குழந்தைகள் தங்கள் பெயரை உச்சரிப்பதற்கு தயங்காத நிலையை ஏற்படுத்தும். இணையதளங்களில் கொட்டிக்கிடக்கும் பெயர்களில் இருந்து பொருத்தமான பெயரை தேர்ந்தெடுத்து சூட்டலாம்.
* குழந்தையின் பெயர் உச்சரிப்பதற்கு இனிமையாகவும், குறைந்த எழுத்துக்கள் கொண்டதாகவும் இருக்க வேண்டும். நான்கு, ஐந்து எழுத்துக்களுக்கு மேல் இருக்கக்கூடாது. ஏனெனில் பெரும்பாலானவர்கள் முழு நீள பெயரை கூறி அழைப்பதில்லை.
* குழந்தைக்கு வைக்கும் பெயர் மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்யும்படி அமைந்துவிடக்கூடாது. சட்டென்று மனதில் பதியும்படியும் இருக்க வேண்டும். உச்சரிக்க சிரமப்படும் அளவுக்கும் இருக்கக்கூடாது.
* தங்கள் குழந்தையின் பெயர் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக பிரபலமாக இருக்கும் பிராண்ட்களின் பெயரையோ, விசித்திரமான இடங்களின் பெயர்களை தாங்கி இருக்கும் பெயர்களையோ வைக்கக்கூடாது. அது மற்றவர்களின் விமர்சனத்திற்கு வழிவகுத்துவிடக்கூடும்.
* மூதாதையர்களின் பெயர்களையோ, பழமையான பெயர்களையோ வைப்பதற்கு முன்பு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். பழைய பெயர்களாகவே இருந்தாலும் எல்லா காலகட்டத்திற்கும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.
* அர்த்தமுள்ள பெயராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய பேர் வாய்க்குள் நுழையாத பெயர்களை வைத்துவிடுகிறார் கள். அதனை மற்றவர்கள் கேலி செய்ய நேரிடும். அர்த்தம் பொதிந்த பெயர்கள் கூட சில சமயங்களில் கேலிக்கு உள்ளாகலாம். அதனால் கவனமாக சிந்தித்து பொருத்தமான பெயரை சூட்டுங்கள்.
* சிலர் வைக்கும் பெயர் அது ஆண் குழந்தையா? இல்லை பெண் குழந்தையா? என்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடும். பாலினத்தை சரியாக குறிக்கும் விதத்தில் பெயரும் அமைந்திருக்க வேண்டும்.
* நல்ல பெயராக இருக்கிறது என்பதற்காக உறவினர்கள் ஏற்கனவே பிள்ளைகளுக்கு வைத்திருக்கும் பெயரை திரும்பவும் சூட்டக்கூடாது. அது குழந்தைகளுக்கே குழப் பத்தை ஏற்படுத்திவிடும்.
* ஆங்கில எழுத்துக்களின் தொடக்க எழுத்தில் பெயர் ஆரம்பிப்பது நல்லது. கடைசியில் உள்ள எழுத்துக்களில் பெயர் வைத்தால் வகுப்பில் தொடங்கி பல்வேறு இடங்களில் பெயர் கடைசியாக இடம்பெற நேரிடும். மற்றவர்கள் பெயர்கள் வாசித்து முடியும்வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
ஒவ்வொரு குழந்தையும் வளர்ந்து வருகின்ற பொழுது தன்னைச் சுற்றியுள்ள இளைஞர்களை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ளத் துடிக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கின்றனர்.
ஒவ்வொரு இளைஞனும் தன்னையறிந்து கொள்ளும் போது வாழ்வில் வெற்றி பெறுகிறான். அதன்பின் தனது தேசத்தின் பண்பாடு, கலாசாரங்களைப் புரிந்துகொண்டு, அதன்படி நடக்கிறபோது அவ்விளைஞனால் அந்நாடும் பெருமையடைகிறது. இளைஞர்கள் ஒவ்வொவரும் நம் தேசத்தின் தூண்கள்; நம்பிக்கை நாயகர்கள், ஆற்றலின் அற்புதங்கள்; முயற்சியின் முழுவடிவங்கள்; சாதிக்கும் அக்னிக் குஞ்சுகள்; சிந்தனைகளைச் சிலைகளாக்கும் சிற்பிகள்; புதிய சரித்திரம் படைக்கும் கதாப்பாத்திரங்கள், மொத்தத்தில் அளப்பரிய மனித வடிவங்கள்.
மாணவப் பருவத்தில் மாணவ ராக்கெட்டுகள் பள்ளி என்னும் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்படுகின்றனர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் விண்ணில் சீறிப்பாயும் ராக்கெட்டுகளாக வெளிவருகின்றனர். சரியான வேகத்தில் பாய்ந்து, விண்வெளியை அடைந்து, அதன் சுற்றுப்பாதையில் சுற்றும் செயற்கைக் கோள்களை போல் தங்களது இலக்குகளை சரியாக அடைகின்ற இளைஞர்களே வாழ்வில் வெற்றி வாகை சூடுகிறார்கள்.
அவ்வாறில்லாமல், இளமைப் பருவத்திலேயே போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல், தீய நண்பர்களிடம் நட்புக்கொள்ளுதல், லட்சியமின்றி சோம்பியிருத்தல் போன்ற செயல்பாடுகளால் அற்புதமான இளமைப்பருவம் அலங்கோலப்படுவது வேதனையே.
இளமைப்பருவம் குழந்தை பருவம்போன்று இயல்பான பருவம் அல்ல. அது ஓர் ஈடில்லாத இன்றியமையாத பருவம். தீயவற்றை ஒதுக்கி, நல்லவற்றை நாடிச் செல்லவேண்டிய நற்பருவம். நதிகளின் வாழ்க்கையைப் போன்றுதான் மனிதனின் வாழ்க்கையும். அதில் துள்ளி வரும் நீர்வீழ்ச்சியைப் போன்றது இளமைப் பருவம். நீர்வீழ்ச்சியின் ஆற்றல் அளப்பரியது. அது கரடு முரடான மலைகளில் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கும். இளமைப் பருவமும் தன் முன்னே இருக்கின்ற பிரச்சினைகளைக் கடந்து வெற்றிவாகை சூடும் இயல்புடையது. எனவே, யார் ஒருவர் அத்தகைய ஆற்றலை நல்வழியில் செயல்படுத்துகிறாரோ அவர் வெற்றியாளராகின்றார்.
இளமையில் துடிப்போடும், ஆற்றலோடும், அறிவுத்திறனோடும் இருப்பவர்களே எதிர்காலத்தில் ஞானியாகவும், புகழ்பெற்றவர்களாகவும் திகழ்கிறார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது அந்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியே. ஆரோக்கியமான திடமான, அறிவான இளைஞர்கள் ஒரு நாட்டினுடைய மிகப்பெரிய பலமாகும்.
1999-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச இளைஞர் தினத்தை ஆகஸ்டு 12-ம் நாளாக கொண்டாடுகிறது. இந்த வருடம் “இளைஞர்கள் இடம் பெயர்தல், வளர்ச்சியை நோக்கி முன்னேறுதல்” என்பதே இவ்வாண்டின் மையக்கருத்தாகும்.
எனவே, “சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப ஒவ்வொரு இளைஞரும் உலகலாவிய பயணம் அடைதல் அவசியம். அதன் மூலமே ஒரு தனி மனிதனின் உயர்வோடு தேசமும் உயரும். பணத்தினைச் சேர்க்கும் அவசரத்தில் நம் பண்பாட்டினை தொலைத்து விடாமல் இருப்பவர்களே தேசத்தின் தூதுவர்களாகின்றனர். பணிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மகாத்மா காந்தியைப் போல், “தனது குடும்பத்திற்கும், பெற்றோருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்களைச் செய்யாமலிருப்பேன் என்றும், நம் தேசத்தின் கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் புறம்பாக எச்செயல்களையும் புரியமாட்டேன் என்று உறுதியோடு செல்பவர்கள்” உயர்வு பெறுகின்றனர்.
ஒவ்வொரு இளைஞனும் ஓராயிரம் குழந்தைகளின் புத்தகமாகத் திகழ்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் வளர்ந்து வருகின்ற பொழுது தன்னைச் சுற்றியுள்ள இளைஞர்களை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ளத் துடிக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கின்றனர். எந்த ஓர் இளைஞர் அக்குழந்தைகளின்மீது தாக்கத்தை உருவாக்குகிறாரோ அவர்களின் சாயலாகவே அக்குழந்தை சமுதாயத்தில் உருப்பெறுகிறது. எனவே, நல்லவர்களாகவும், ஒழுக்கமுற்றவராகவும் வாழவேண்டியது ஒவ்வொரு இளைஞனின் கடமையாகிறது.
ஒவ்வொரு இளைஞனும் உயர்வினில் இமயமாய், உழைப்பினால் சோர்வடையாத மகா நதியாய், அறிவினில் மகாசமுத்திரமாய், ஆற்றலில் ஒளிவிடும் சூரியனாய், அன்பினில் குளிரும் நிலவாய், போர்க்குணத்தில் ஒரு சூறைக் காற்றாய், நற்சிந்தனைகளைப் பரவவிடும் மெல்லிய தென்றலாய், இம்மண்ணில் வரும்போது மானுடம் உயர்வு பெறும்.
மாணவப் பருவத்தில் மாணவ ராக்கெட்டுகள் பள்ளி என்னும் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்படுகின்றனர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் விண்ணில் சீறிப்பாயும் ராக்கெட்டுகளாக வெளிவருகின்றனர். சரியான வேகத்தில் பாய்ந்து, விண்வெளியை அடைந்து, அதன் சுற்றுப்பாதையில் சுற்றும் செயற்கைக் கோள்களை போல் தங்களது இலக்குகளை சரியாக அடைகின்ற இளைஞர்களே வாழ்வில் வெற்றி வாகை சூடுகிறார்கள்.
அவ்வாறில்லாமல், இளமைப் பருவத்திலேயே போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல், தீய நண்பர்களிடம் நட்புக்கொள்ளுதல், லட்சியமின்றி சோம்பியிருத்தல் போன்ற செயல்பாடுகளால் அற்புதமான இளமைப்பருவம் அலங்கோலப்படுவது வேதனையே.
இளமைப்பருவம் குழந்தை பருவம்போன்று இயல்பான பருவம் அல்ல. அது ஓர் ஈடில்லாத இன்றியமையாத பருவம். தீயவற்றை ஒதுக்கி, நல்லவற்றை நாடிச் செல்லவேண்டிய நற்பருவம். நதிகளின் வாழ்க்கையைப் போன்றுதான் மனிதனின் வாழ்க்கையும். அதில் துள்ளி வரும் நீர்வீழ்ச்சியைப் போன்றது இளமைப் பருவம். நீர்வீழ்ச்சியின் ஆற்றல் அளப்பரியது. அது கரடு முரடான மலைகளில் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கும். இளமைப் பருவமும் தன் முன்னே இருக்கின்ற பிரச்சினைகளைக் கடந்து வெற்றிவாகை சூடும் இயல்புடையது. எனவே, யார் ஒருவர் அத்தகைய ஆற்றலை நல்வழியில் செயல்படுத்துகிறாரோ அவர் வெற்றியாளராகின்றார்.
இளமையில் துடிப்போடும், ஆற்றலோடும், அறிவுத்திறனோடும் இருப்பவர்களே எதிர்காலத்தில் ஞானியாகவும், புகழ்பெற்றவர்களாகவும் திகழ்கிறார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது அந்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியே. ஆரோக்கியமான திடமான, அறிவான இளைஞர்கள் ஒரு நாட்டினுடைய மிகப்பெரிய பலமாகும்.
1999-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச இளைஞர் தினத்தை ஆகஸ்டு 12-ம் நாளாக கொண்டாடுகிறது. இந்த வருடம் “இளைஞர்கள் இடம் பெயர்தல், வளர்ச்சியை நோக்கி முன்னேறுதல்” என்பதே இவ்வாண்டின் மையக்கருத்தாகும்.
எனவே, “சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப ஒவ்வொரு இளைஞரும் உலகலாவிய பயணம் அடைதல் அவசியம். அதன் மூலமே ஒரு தனி மனிதனின் உயர்வோடு தேசமும் உயரும். பணத்தினைச் சேர்க்கும் அவசரத்தில் நம் பண்பாட்டினை தொலைத்து விடாமல் இருப்பவர்களே தேசத்தின் தூதுவர்களாகின்றனர். பணிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மகாத்மா காந்தியைப் போல், “தனது குடும்பத்திற்கும், பெற்றோருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்களைச் செய்யாமலிருப்பேன் என்றும், நம் தேசத்தின் கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் புறம்பாக எச்செயல்களையும் புரியமாட்டேன் என்று உறுதியோடு செல்பவர்கள்” உயர்வு பெறுகின்றனர்.
ஒவ்வொரு இளைஞனும் ஓராயிரம் குழந்தைகளின் புத்தகமாகத் திகழ்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் வளர்ந்து வருகின்ற பொழுது தன்னைச் சுற்றியுள்ள இளைஞர்களை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ளத் துடிக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கின்றனர். எந்த ஓர் இளைஞர் அக்குழந்தைகளின்மீது தாக்கத்தை உருவாக்குகிறாரோ அவர்களின் சாயலாகவே அக்குழந்தை சமுதாயத்தில் உருப்பெறுகிறது. எனவே, நல்லவர்களாகவும், ஒழுக்கமுற்றவராகவும் வாழவேண்டியது ஒவ்வொரு இளைஞனின் கடமையாகிறது.
ஒவ்வொரு இளைஞனும் உயர்வினில் இமயமாய், உழைப்பினால் சோர்வடையாத மகா நதியாய், அறிவினில் மகாசமுத்திரமாய், ஆற்றலில் ஒளிவிடும் சூரியனாய், அன்பினில் குளிரும் நிலவாய், போர்க்குணத்தில் ஒரு சூறைக் காற்றாய், நற்சிந்தனைகளைப் பரவவிடும் மெல்லிய தென்றலாய், இம்மண்ணில் வரும்போது மானுடம் உயர்வு பெறும்.
பெரும்பாலான பெற்றோர்கள் வைரஸ் தொற்று பரவலில் இருந்து குடும்பத்தை பாதுகாக்கும் முயற்சிகளிலே அதிகம் ஈடுபடுவதால், குழந்தைகளின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வதில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை.
கொரோனா வைரஸ் பரவல் பீதியில் இருந்து மக்கள் ஓரளவு இயல்புக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், இரண்டாவது அலை வீசத்தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே பல மாதங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த குழந்தைகள் மீண்டும் மனச்சோர்வுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் வைரஸ் தொற்று பரவலில் இருந்து குடும்பத்தை பாதுகாக்கும் முயற்சிகளிலே அதிகம் ஈடுபடுவதால், குழந்தைகளின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வதில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை.
இந்த நோய்த்தொற்று காலம் குழந்தைகளின் வளர்ச்சி, கற்றல், விளையாட்டு, நடத்தை, தகவல் தொடர்பு, உணர்வுகளை வெளிப் படுத்துதல் போன்றவைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. பெரும்பாலான குழந்தைகள் தொடர்ச்சியாக பள்ளி களுக்கு சென்று தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப விரும்புகிறார்கள். தங்கள் நண்பர்களை சந்திக்கும் ஆவலும் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.
வாழ்க்கை முறை மாற்றத்தால் உருவான மனஅழுத்தம் குழந்தை களின் நடத்தையில் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது. அதில் இருந்து குழந்தைகளை மீட்பதற்கு மேற்கொள்ளவேண்டியவை:
* குழந்தைகளிடையே நிலவும் கொரோனா பற்றிய அச்சத்தை தீர்க்க பெற்றோர் முயற்சிக்கவேண்டும். அதனை பற்றி தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் பெற்றோர் குழந்தைகளிடம் பேச வேண்டும். அதன் மூலம் அவர்களின் கவலை மற்றும் மன சோர்வுக்கு தீர்வு காணலாம். தாத்தா, பாட்டியுடன் வழக்கத்தைவிட அதிக நேரம் செலவிட வைக்கலாம். அப்போது முககவசமும், பாதுகாப்பு உணர்வும் மிக முக்கியம்.
* வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் குழந்தைகளை அவர் களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு அனுமதிக்கலாம். வீடு குப்பையாகிவிடுமே என்று கவலைப்படாமல் அவர்களை மகிழ்ச்சியாக செயல்படவிடுங்கள். அதன்பிறகு அவர் களை கொண்டே வீட்டை சுத்தமாக்குங்கள். வீட்டு வேலைகளை சரியாக செய்தால் பரிசுகொடுத்து அவர்களை பாராட்டுங்கள். சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கும், சமூக பொறுப்புகளை புரிந்துகொள்வதற்கும் வழிகாட்டலாம்.
* உள்அறை விளையாட்டு மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தலாம். குடும்ப உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து குழந்தைகளுக்கு பிடித்தமான எளிய விளையாட்டுகளை விளையாடலாம்.
* பெற்றோரின் மேற் பார்வையில் டிஜிட்டல் தளங்கள் வழியாக நண்பர்கள் மற்றும் வகுப்பு தோழர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு ஊக்குவிக்கலாம். ஆன்லைன் வழியாக வாரம் ஒருமுறை நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பது அவர்களது மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.
* குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் ‘கொரோனா பாதிப்பாக இருக்குமோ?’ என்று பீதி அடையாதீர்கள். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது இயல்பானதுதான். அதனால் கொரோனாவாக இருக்குமோ என்று பயப்பட வேண்டியதில்லை. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடிய தைமஸ் என்னும் சுரப்பி குழந்தைகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். கொரோனா வைரஸ் குழந்தை களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததற்கு தைமஸ் சுரப்பியும் ஒருவகையில் காரணம்.
* 18 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 8.5 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றுவதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்துங்கள். ஏனெனில் கொரோனா பற்றிய சரியான புரிதல் குழந்தைகளிடம் இல்லாதபட்சத்தில் அவர்களின் மன நலம் வெகுவாக பாதிப்புக்குள்ளாகிவிடும்.
இந்த நோய்த்தொற்று காலம் குழந்தைகளின் வளர்ச்சி, கற்றல், விளையாட்டு, நடத்தை, தகவல் தொடர்பு, உணர்வுகளை வெளிப் படுத்துதல் போன்றவைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. பெரும்பாலான குழந்தைகள் தொடர்ச்சியாக பள்ளி களுக்கு சென்று தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப விரும்புகிறார்கள். தங்கள் நண்பர்களை சந்திக்கும் ஆவலும் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.
வாழ்க்கை முறை மாற்றத்தால் உருவான மனஅழுத்தம் குழந்தை களின் நடத்தையில் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது. அதில் இருந்து குழந்தைகளை மீட்பதற்கு மேற்கொள்ளவேண்டியவை:
* குழந்தைகளிடையே நிலவும் கொரோனா பற்றிய அச்சத்தை தீர்க்க பெற்றோர் முயற்சிக்கவேண்டும். அதனை பற்றி தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் பெற்றோர் குழந்தைகளிடம் பேச வேண்டும். அதன் மூலம் அவர்களின் கவலை மற்றும் மன சோர்வுக்கு தீர்வு காணலாம். தாத்தா, பாட்டியுடன் வழக்கத்தைவிட அதிக நேரம் செலவிட வைக்கலாம். அப்போது முககவசமும், பாதுகாப்பு உணர்வும் மிக முக்கியம்.
* வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் குழந்தைகளை அவர் களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு அனுமதிக்கலாம். வீடு குப்பையாகிவிடுமே என்று கவலைப்படாமல் அவர்களை மகிழ்ச்சியாக செயல்படவிடுங்கள். அதன்பிறகு அவர் களை கொண்டே வீட்டை சுத்தமாக்குங்கள். வீட்டு வேலைகளை சரியாக செய்தால் பரிசுகொடுத்து அவர்களை பாராட்டுங்கள். சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கும், சமூக பொறுப்புகளை புரிந்துகொள்வதற்கும் வழிகாட்டலாம்.
* உள்அறை விளையாட்டு மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தலாம். குடும்ப உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து குழந்தைகளுக்கு பிடித்தமான எளிய விளையாட்டுகளை விளையாடலாம்.
* பெற்றோரின் மேற் பார்வையில் டிஜிட்டல் தளங்கள் வழியாக நண்பர்கள் மற்றும் வகுப்பு தோழர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு ஊக்குவிக்கலாம். ஆன்லைன் வழியாக வாரம் ஒருமுறை நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பது அவர்களது மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.
* குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் ‘கொரோனா பாதிப்பாக இருக்குமோ?’ என்று பீதி அடையாதீர்கள். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது இயல்பானதுதான். அதனால் கொரோனாவாக இருக்குமோ என்று பயப்பட வேண்டியதில்லை. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடிய தைமஸ் என்னும் சுரப்பி குழந்தைகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். கொரோனா வைரஸ் குழந்தை களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததற்கு தைமஸ் சுரப்பியும் ஒருவகையில் காரணம்.
* 18 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 8.5 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றுவதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்துங்கள். ஏனெனில் கொரோனா பற்றிய சரியான புரிதல் குழந்தைகளிடம் இல்லாதபட்சத்தில் அவர்களின் மன நலம் வெகுவாக பாதிப்புக்குள்ளாகிவிடும்.
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனக் குறைவாகப் பெற்றோர்கள் தவறு செய்வது எல்லா வீட்டிலும் நடப்பதுதான். தாய்மார்கள் செய்யும் சில தவறுகளும், அவற்றின் விளைவுகளும் என்ன என்று பார்ப்போமா?
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனக் குறைவாகப் பெற்றோர்கள் தவறு செய்வது எல்லா வீட்டிலும் நடப்பதுதான். தெரியாமல் செய்யும் தவறை விட நாம் செய்வது தவறு என்று தெரியாமலே, நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள்தான் அதிகம். அப்படிப்பட்ட தவறுகளை தவிர்க்க வேண்டியது மிக முக்கியம். தாய்மார்கள் செய்யும் சில தவறுகளும், அவற்றின் விளைவுகளும் என்ன என்று பார்ப்போமா ?
மருந்து சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை உணவுடன் கலந்து கொடுப்பது பல பெற்றோர்களின் வழக்கம். சிலவகை மருந்துகள் உணவுடன் கலக்கப்படும்போது செயல் திறனை இழப்பதாகத் தெரிவிக்கின்றார்கள் மருத்துவ நிபுணர்கள். எனவே மருத்துவரை கலந்தாலோசித்த பிறகே அப்படிக் கொடுப்பது நல்லது. அப்படியே கொடுப்பதானாலும் முன்கூட்டியே உணவையும் மருந்தையும் கலந்து வைக்காமல், சாப்பிடக் கொடுப்பதற்கு முன் கலக்கவும்.
உங்கள் குழந்தைக்கு மருத்துவர் பத்து நாட்கள் கொடுக்கச் சொல்லி ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். குழந்தைகளின் உடல் நலம் தேறுவது தெரிந்தும் ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே மருந்துகளை நிறுத்தக் கூடாது. இதனால் அரை குறையாகத் தேறிய குழந்தையின் உடல் நிலை இன்னும் மோசமாகலாம்.
சாதரண தும்மல், இருமல் போன்றவற்றுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டியதில்லை. நோய் தீவிரமாகிவிடுமோ என்ற பயத்தில் மருந்துகளைக் கொடுப்பது பக்க விளைவுகளையே ஏற்படுத்தும்.
போனமுறை உங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு இந்த முறையும் ஏற்படலாம். அறிகுறிகள் ஓரே மாதிரி இருப்பதைப் பார்த்து, போன முறை கொடுத்த அதே மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது ஆபத்தானது. அதே போல காலாவதியான மருந்து, மாத்திரைகளை உடனுக்குடன் அப்புறபடுத்த வேண்டும்.
பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஓரே மாதிரி அறிகுறிகள் தென்படும் போது, பெரியவர்களது மருந்து மாத்திரைகள் அளவைக் குறைத்து குழந்தைகளுக்குக் கொடுப்பது பயங்கரமானது. மருந்தின் சக்தியை எதிர் கொள்ள முடியாமல் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.
மருத்துவர் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவையும், கடையில் வாங்கியவையும் ஒரே மருந்துதானா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். பிறகு அதன் லேபிளின் மீதுள்ள எச்சரிக்கைகளையும் கொடுக்கும் முறைகளையும் படிக்க வேண்டும்.
மருந்து சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை உணவுடன் கலந்து கொடுப்பது பல பெற்றோர்களின் வழக்கம். சிலவகை மருந்துகள் உணவுடன் கலக்கப்படும்போது செயல் திறனை இழப்பதாகத் தெரிவிக்கின்றார்கள் மருத்துவ நிபுணர்கள். எனவே மருத்துவரை கலந்தாலோசித்த பிறகே அப்படிக் கொடுப்பது நல்லது. அப்படியே கொடுப்பதானாலும் முன்கூட்டியே உணவையும் மருந்தையும் கலந்து வைக்காமல், சாப்பிடக் கொடுப்பதற்கு முன் கலக்கவும்.
உங்கள் குழந்தைக்கு மருத்துவர் பத்து நாட்கள் கொடுக்கச் சொல்லி ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். குழந்தைகளின் உடல் நலம் தேறுவது தெரிந்தும் ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே மருந்துகளை நிறுத்தக் கூடாது. இதனால் அரை குறையாகத் தேறிய குழந்தையின் உடல் நிலை இன்னும் மோசமாகலாம்.
சாதரண தும்மல், இருமல் போன்றவற்றுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டியதில்லை. நோய் தீவிரமாகிவிடுமோ என்ற பயத்தில் மருந்துகளைக் கொடுப்பது பக்க விளைவுகளையே ஏற்படுத்தும்.
போனமுறை உங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு இந்த முறையும் ஏற்படலாம். அறிகுறிகள் ஓரே மாதிரி இருப்பதைப் பார்த்து, போன முறை கொடுத்த அதே மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது ஆபத்தானது. அதே போல காலாவதியான மருந்து, மாத்திரைகளை உடனுக்குடன் அப்புறபடுத்த வேண்டும்.
பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஓரே மாதிரி அறிகுறிகள் தென்படும் போது, பெரியவர்களது மருந்து மாத்திரைகள் அளவைக் குறைத்து குழந்தைகளுக்குக் கொடுப்பது பயங்கரமானது. மருந்தின் சக்தியை எதிர் கொள்ள முடியாமல் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.
மருத்துவர் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவையும், கடையில் வாங்கியவையும் ஒரே மருந்துதானா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். பிறகு அதன் லேபிளின் மீதுள்ள எச்சரிக்கைகளையும் கொடுக்கும் முறைகளையும் படிக்க வேண்டும்.
வெயில் மதியம் 1:00 முதல் மாலை 4:00 மணி அதிக பாதிப்பை தரும். இந்நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால், சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும்.
பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது பெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்பு சத்து குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.
உடல் உஷ்ணம் தவிர்க்க நீருடன் எவற்றை சேர்க்க வேண்டும்?
வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்கவும். மண்பாண்ட தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உஷ்ணத்தை தவிர்க்கலாம்.
கோடை பாதிப்பை தவிர்க்க வேறு விளையாட்டுக்கள் என்ன?
உணவில் நீர்சத்து அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கை, சுரைக்காய், புடலை, பூசணி காய்கள் சாப்பிடலாம். வெயில் மதியம் 1:00 முதல் மாலை 4:00 மணி அதிக பாதிப்பை தரும். இந்நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால்,சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.
கோடையை சமாளிக்க எப்படி குளிக்க வேண்டும்?
குழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளை குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
உடல் உஷ்ணம் தவிர்க்க நீருடன் எவற்றை சேர்க்க வேண்டும்?
வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்கவும். மண்பாண்ட தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உஷ்ணத்தை தவிர்க்கலாம்.
கோடை பாதிப்பை தவிர்க்க வேறு விளையாட்டுக்கள் என்ன?
உணவில் நீர்சத்து அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கை, சுரைக்காய், புடலை, பூசணி காய்கள் சாப்பிடலாம். வெயில் மதியம் 1:00 முதல் மாலை 4:00 மணி அதிக பாதிப்பை தரும். இந்நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால்,சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.
கோடையை சமாளிக்க எப்படி குளிக்க வேண்டும்?
குழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளை குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
தாய் வயிற்றில் கருவாக உருவாகுவது முதல்- குழந்தையாக பிறந்து, இரண்டு வயதை எட்டும் வரை உள்ள நாட்கள், அந்த குழந்தையின் வாழ்க்கையில் மிக முக்கியமானவை.
தாய் வயிற்றில் கருவாக உருவாகுவது முதல்- குழந்தையாக பிறந்து, இரண்டு வயதை எட்டும் வரை உள்ள நாட்கள், அந்த குழந்தையின் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. அதனை `முதல் 1000 நாட்கள்' என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. முதலில் தாயின் உணவு மூலமும், பின்பு நேரடி உணவு வழியாகவும் குழந்தைகள் பெறும் சத்துக்களே அவர்களை புத்திசாலிகளாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் உருவாக்குகிறது. அதாவது இரண்டு வயது வரைதான் குழந்தையின் மூளை மிக வேகமாக வளருகிறது.
தாய் வயிற்றில் சிசுவாக இருக்கும்போதே குழந்தையின் மூளை வளரத் தொடங்குகிறது. கருத்தரித்த நான்கு வாரத்தில் 10 ஆயிரம் திசுக்களாக அது உருவாக்கம் பெறும். 24 வாரங்களில் குழந்தையின் மூளை 10 பில்லியன் திசுக்களாகிவிடும். முதல் ஆயிரம் நாட்களில் மூளை வளர்ச்சி மட்டுமல்ல, இதர முக்கிய உறுப்புகளின் வளர்ச்சியும் வேகமாக நடக்கிறது.
குழந்தைக்கு முதல் ஆயிரம் நாட்களில் சத்துணவு குறைபாடு ஏற்பட்டால், பிற்காலத்தில் அதனை ஈடுசெய்வது கடினம். குழந்தையின் வளர்ச்சி- சிந்தனை- படிப்பு போன்ற அனைத்துக்குமான அடிப்படை கட்டமைப்புகள் அந்த முதல் காலகட்டத்தில் உருவாகுவதால், ஆயிரம் நாட்களில் ஒவ்வொரு நாளும் அந்த குழந்தைக்கு மிக முக்கியமான நாட்கள்தான்.
கர்ப்பகாலத்தில் தாய் சுவாசிப்பதும், சாப்பிடுவதும் சிசுவிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால், கர்ப்பத்திற்கு தயாராகும்போதே பெண்கள் வாழ்வியல்முறைகளில் மிகுந்த அக்கறை செலுத்தத் தொடங்கிவிடவேண்டும். குறிப்பாக சமச்சீரான சத்துணவை உட்கொள்ளவேண்டும். மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், பிரச்சினைக்குரிய மருந்துகளை உட்கொள்ளுதல் போன்றவைகளை தவிர்க்கவேண்டும். வாழ்க்கை முறைகளை சிறப்பாக்கிக்கொள்ளவேண்டும்.
உணவில் இரும்பு, போலிக் ஆசிட், வைட்டமின் டி போன்றவை இடம்பெறுவது அவசியம். போலிக் ஆசிட் தாய்க்கும், சிசுவுக்கும் தேவையானதாகும். போலிக் ஆசிட் போதுமான அளவு கிடைக்காவிட்டால் சிசுவின் தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். போலிக் ஆசிட் மாத்திரைகளை மகப்பேறு மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிடவேண்டும். ரத்தத்தில் இரும்பின் அளவு குறைந்துவிட்டால் அது ரத்த சோகையை உருவாக்கிவிடும்.
வயதுக்கு தகுந்த உயரமின்மை, உயரத்திற்கு ஏற்ற உடல் எடையின்மை, மூளை வளர்ச்சிக்குறைபாடு, உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடக்கக்கால ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுபவை என்று அத்துறை சார்ந்த நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். உலகத்திலேயே உயரம் குறைந்த குழந்தைகள் மிக அதிகமாக இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்பதை உணரும்போது இதன் விளைவுகளை நம்மால் புரிந்துகொள்ள இயலும். நைஜீரியா, பாகிஸ்தான், சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் இருக்கின்றன.
குறிப்பாக இந்திய கிராம பகுதிகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒன்று வளர்ச்சியின்மையால் உயரக் குறைபாட்டுடன் காட்சியளிக்கிறது. யுனிசெப்பின் சர்வே, இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள 62 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சிக்குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. இத்தகைய குழந்தைகள் பள்ளிப் பருவத்தில் கற்றல்குறைபாடு கொண்டவர்களாகி விடுகிறார்கள். அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
கர்ப்பிணிகள் இரண்டு பேருக்கான உணவினை உண்ணவேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அதிக அளவில் உணவை சாப்பிட்டுவிட்டால் போதுமான அளவில் சத்துக்கள் கிடைத்துவிடும் என்று கூறுவதற்கில்லை. கர்ப்பிணி அதிக அளவில் சாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டாலும் அதுவும் போதுமானதல்ல. தேவைக்கு அதிகமான கலோரி கர்ப்பிணியின் உடலில் சேர்ந்துவிட்டால் இதர சத்துக்கள் உடலில் சேர முடியாத நிலை உருவாகிவிடும். அதிக கலோரி கொழுப்பாக மாறி உடலில் தங்கும். இது உடல் பருமன் மற்றும் சத்துக்குறைபாட்டிற்கு காரணமாகிவிடும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டின் சைவம் மற்றும் அசைவ உணவுகளில் இருக்கிறது. பால், முட்டை, மீன், கோழி இறைச்சி, பயறு- பருப்பு வகைகள் போன்றவைகளில் புரோட்டின் இருக்கிறது. அசைவ உணவுகளில் எல்லா வகை அமினோ அமிலங்களும் இருக்கின்றன. சைவ உணவுகளில் சிலவகை அமினோ அமிலங்கள் குறைவாக உள்ளன.
அதனால் கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தங்கள் உணவில் அவசியம் பால் மற்றும் முட்டையை சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆறு கப் சாதத்தில் கிடைக்கக்கூடிய புரோட்டின் ஒன்றரை முட்டையில் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கிடைக்கும் மீன்களில் 15 சதவீதம் அளவுக்கு புரோட்டின் சத்து இருக்கிறது. ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் தேவையில்லை. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் வளர்ச்சிக்கும் அது போதுமானது.
தாய் வயிற்றில் சிசுவாக இருக்கும்போதே குழந்தையின் மூளை வளரத் தொடங்குகிறது. கருத்தரித்த நான்கு வாரத்தில் 10 ஆயிரம் திசுக்களாக அது உருவாக்கம் பெறும். 24 வாரங்களில் குழந்தையின் மூளை 10 பில்லியன் திசுக்களாகிவிடும். முதல் ஆயிரம் நாட்களில் மூளை வளர்ச்சி மட்டுமல்ல, இதர முக்கிய உறுப்புகளின் வளர்ச்சியும் வேகமாக நடக்கிறது.
குழந்தைக்கு முதல் ஆயிரம் நாட்களில் சத்துணவு குறைபாடு ஏற்பட்டால், பிற்காலத்தில் அதனை ஈடுசெய்வது கடினம். குழந்தையின் வளர்ச்சி- சிந்தனை- படிப்பு போன்ற அனைத்துக்குமான அடிப்படை கட்டமைப்புகள் அந்த முதல் காலகட்டத்தில் உருவாகுவதால், ஆயிரம் நாட்களில் ஒவ்வொரு நாளும் அந்த குழந்தைக்கு மிக முக்கியமான நாட்கள்தான்.
கர்ப்பகாலத்தில் தாய் சுவாசிப்பதும், சாப்பிடுவதும் சிசுவிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால், கர்ப்பத்திற்கு தயாராகும்போதே பெண்கள் வாழ்வியல்முறைகளில் மிகுந்த அக்கறை செலுத்தத் தொடங்கிவிடவேண்டும். குறிப்பாக சமச்சீரான சத்துணவை உட்கொள்ளவேண்டும். மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், பிரச்சினைக்குரிய மருந்துகளை உட்கொள்ளுதல் போன்றவைகளை தவிர்க்கவேண்டும். வாழ்க்கை முறைகளை சிறப்பாக்கிக்கொள்ளவேண்டும்.
உணவில் இரும்பு, போலிக் ஆசிட், வைட்டமின் டி போன்றவை இடம்பெறுவது அவசியம். போலிக் ஆசிட் தாய்க்கும், சிசுவுக்கும் தேவையானதாகும். போலிக் ஆசிட் போதுமான அளவு கிடைக்காவிட்டால் சிசுவின் தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். போலிக் ஆசிட் மாத்திரைகளை மகப்பேறு மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிடவேண்டும். ரத்தத்தில் இரும்பின் அளவு குறைந்துவிட்டால் அது ரத்த சோகையை உருவாக்கிவிடும்.
வயதுக்கு தகுந்த உயரமின்மை, உயரத்திற்கு ஏற்ற உடல் எடையின்மை, மூளை வளர்ச்சிக்குறைபாடு, உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடக்கக்கால ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுபவை என்று அத்துறை சார்ந்த நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். உலகத்திலேயே உயரம் குறைந்த குழந்தைகள் மிக அதிகமாக இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்பதை உணரும்போது இதன் விளைவுகளை நம்மால் புரிந்துகொள்ள இயலும். நைஜீரியா, பாகிஸ்தான், சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் இருக்கின்றன.
குறிப்பாக இந்திய கிராம பகுதிகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒன்று வளர்ச்சியின்மையால் உயரக் குறைபாட்டுடன் காட்சியளிக்கிறது. யுனிசெப்பின் சர்வே, இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள 62 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சிக்குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. இத்தகைய குழந்தைகள் பள்ளிப் பருவத்தில் கற்றல்குறைபாடு கொண்டவர்களாகி விடுகிறார்கள். அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
கர்ப்பிணிகள் இரண்டு பேருக்கான உணவினை உண்ணவேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அதிக அளவில் உணவை சாப்பிட்டுவிட்டால் போதுமான அளவில் சத்துக்கள் கிடைத்துவிடும் என்று கூறுவதற்கில்லை. கர்ப்பிணி அதிக அளவில் சாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டாலும் அதுவும் போதுமானதல்ல. தேவைக்கு அதிகமான கலோரி கர்ப்பிணியின் உடலில் சேர்ந்துவிட்டால் இதர சத்துக்கள் உடலில் சேர முடியாத நிலை உருவாகிவிடும். அதிக கலோரி கொழுப்பாக மாறி உடலில் தங்கும். இது உடல் பருமன் மற்றும் சத்துக்குறைபாட்டிற்கு காரணமாகிவிடும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டின் சைவம் மற்றும் அசைவ உணவுகளில் இருக்கிறது. பால், முட்டை, மீன், கோழி இறைச்சி, பயறு- பருப்பு வகைகள் போன்றவைகளில் புரோட்டின் இருக்கிறது. அசைவ உணவுகளில் எல்லா வகை அமினோ அமிலங்களும் இருக்கின்றன. சைவ உணவுகளில் சிலவகை அமினோ அமிலங்கள் குறைவாக உள்ளன.
அதனால் கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தங்கள் உணவில் அவசியம் பால் மற்றும் முட்டையை சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆறு கப் சாதத்தில் கிடைக்கக்கூடிய புரோட்டின் ஒன்றரை முட்டையில் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கிடைக்கும் மீன்களில் 15 சதவீதம் அளவுக்கு புரோட்டின் சத்து இருக்கிறது. ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் தேவையில்லை. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் வளர்ச்சிக்கும் அது போதுமானது.
தேர்வை கண்டு பயப்படக்கூடாது. நாம், கடந்த ஓராண்டாக படித்த பாடங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகிறது. சரி, தேர்வுக்கு முன் செய்ய வேண்டிய-வேண்டாத விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
தற்போது பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வுகள் தொடங்க உள்ளது. தேர்வை கண்டு பயப்படக்கூடாது. நாம், கடந்த ஓராண்டாக படித்த பாடங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகிறது. ஆகவே, பயப்படாமல் தேர்வு எழுதுங்கள். சரி, தேர்வுக்கு முன் செய்ய வேண்டிய-வேண்டாத விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
* ‘தேர்வு‘ என்கிற அச்சமின்றி நிதானமாக தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள். அடுத்த நாள் தேர்வுக்கான பாடங்களை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இடைவேளை நாட்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.
* படிக்கும் வேளையில் குழுவாக சேர்ந்து படித்தால் உற்சாகமாக இருக்கும். சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். குழுவாக படிக்க முடியாவிட்டால் தேர்வு முடியும் வரை பெற்றோரை அல்லது சகோதரர்களை உதவிக்கு அழைத்து கொள்ளலாம்.
* இரவு 11 மணிக்கு மேல் விழித்திருந்து படித்தால், காலை தேர்வு மையத்தில் சோர்வை ஏற்படுத்தும். ஆகவே, வழக்கமாக தூங்க செல்லும் நேரத்திற்கு ஓய்வெடுக்க சென்று விட வேண்டும். அதிகாலை சீக்கிரமாக எழுந்து படிக்கலாம்.
* நாளைய தேர்வுக்கான உபகரணங்களை முந்தைய நாள் இரவே தயார் படுத்த வேண்டும். கூடுதலாக இன்னொரு பேனா வைத்திருப்பது நல்லது. பள்ளி அடையாள அட்டை, தேர்வு அடையாள அட்டை, பஸ் பயண அட்டை ஆகியவற்றையும் மறக்காமல் எடுத்து செல்லுதல் வேண்டும்.
* எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறி உணவுகள், பழங்களை சாப்பிட வேண்டும். படிக்கும்போது சோம்பல் ஏற்பட்டால் சூடான பானம் அல்லது பழச்சாறு அருந்தலாம். கிரிக்கெட் விளையாடுவது, மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடுவது, கிணற்றில் குதித்து குளிப்பது, மரங்களில் ஏறி விளையாடுவது போன்ற காயம் ஏற்பட வாய்ப்புள்ள செயல்களில் ஈடுபடக்கூடாது. படிக்கும்போது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடத்தல் வேண்டும்.
* படிக்காத பாடங்கள் நிறைய இருப்பதாக புலம்பி கொண்டிருக்க கூடாது. படித்த பாடங்களை திரும்ப நினைவுபடுத்தி படித்தாலே போதுமானது. அவசியமான காரியங்களுக்கு மட்டும் நேரத்தை செலவிட வேண்டும். செல்போனில் விளையாடுவது, டி.வி.பார்ப்பது போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும்.
* குறிப்பாக, தேர்வு நன்றாக எழுதவில்லை என்று நண்பர்களிடம் புலம்பக்கூடாது. அடுத்த தேர்வை சிறப்பாக எழுவது பற்றி சிந்திக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் பெற்றோருடன் பயனுள்ள வகையில் ஆன்மிக சுற்றுலா, கல்வி சுற்றுலா செல்லலாம்.
* ‘தேர்வு‘ என்கிற அச்சமின்றி நிதானமாக தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள். அடுத்த நாள் தேர்வுக்கான பாடங்களை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இடைவேளை நாட்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.
* படிக்கும் வேளையில் குழுவாக சேர்ந்து படித்தால் உற்சாகமாக இருக்கும். சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். குழுவாக படிக்க முடியாவிட்டால் தேர்வு முடியும் வரை பெற்றோரை அல்லது சகோதரர்களை உதவிக்கு அழைத்து கொள்ளலாம்.
* இரவு 11 மணிக்கு மேல் விழித்திருந்து படித்தால், காலை தேர்வு மையத்தில் சோர்வை ஏற்படுத்தும். ஆகவே, வழக்கமாக தூங்க செல்லும் நேரத்திற்கு ஓய்வெடுக்க சென்று விட வேண்டும். அதிகாலை சீக்கிரமாக எழுந்து படிக்கலாம்.
* நாளைய தேர்வுக்கான உபகரணங்களை முந்தைய நாள் இரவே தயார் படுத்த வேண்டும். கூடுதலாக இன்னொரு பேனா வைத்திருப்பது நல்லது. பள்ளி அடையாள அட்டை, தேர்வு அடையாள அட்டை, பஸ் பயண அட்டை ஆகியவற்றையும் மறக்காமல் எடுத்து செல்லுதல் வேண்டும்.
* எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறி உணவுகள், பழங்களை சாப்பிட வேண்டும். படிக்கும்போது சோம்பல் ஏற்பட்டால் சூடான பானம் அல்லது பழச்சாறு அருந்தலாம். கிரிக்கெட் விளையாடுவது, மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடுவது, கிணற்றில் குதித்து குளிப்பது, மரங்களில் ஏறி விளையாடுவது போன்ற காயம் ஏற்பட வாய்ப்புள்ள செயல்களில் ஈடுபடக்கூடாது. படிக்கும்போது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடத்தல் வேண்டும்.
* படிக்காத பாடங்கள் நிறைய இருப்பதாக புலம்பி கொண்டிருக்க கூடாது. படித்த பாடங்களை திரும்ப நினைவுபடுத்தி படித்தாலே போதுமானது. அவசியமான காரியங்களுக்கு மட்டும் நேரத்தை செலவிட வேண்டும். செல்போனில் விளையாடுவது, டி.வி.பார்ப்பது போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும்.
* குறிப்பாக, தேர்வு நன்றாக எழுதவில்லை என்று நண்பர்களிடம் புலம்பக்கூடாது. அடுத்த தேர்வை சிறப்பாக எழுவது பற்றி சிந்திக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் பெற்றோருடன் பயனுள்ள வகையில் ஆன்மிக சுற்றுலா, கல்வி சுற்றுலா செல்லலாம்.
குழந்தைகள் விடுமுறையை உபயோகமான முறையில் கழிக்க சில வழிமுறைகளை பெற்றோர் அவர்களது சொல்லித்தரலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸால் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு விட்டதால் குழந்தைகள் வீட்டில் சுற்றி சுற்றி வருகிறார்கள். எவ்வளவு நேரம் தான். டிவி, போனை நோட்டி கொண்டிருப்பார்கள். குழந்தைகள் விடுமுறையை உபயோகமான முறையில் கழிக்க சில வழிமுறைகளை பெற்றோர் அவர்களது சொல்லித்தரலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
* குழந்தைகளை காலையில் அல்லது மாலையில் அழைத்துக்கொண்டு வாக்கிங் செல்லலாம். அப்போது அவற்றின் பலன்களைக் கூறலாம்.
* ஆன்லைன் விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் இணைந்து விளையாடலாம்.
* காய்கறிகளை கழுவுதல், வேக வைத்த உருளைக்கிழங்கை உரித்தல், வெங்காயம் உரித்தல் என சின்னச் சின்ன வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தலாம்.
* தேங்காய் ஓடு, இளநீர் காலி தேங்காயில் சிவப்பு மண்ணை நிரப்பி, கொத்தமல்லி உட்பட எளிதில் வளரும் தானியங்களை தெளித்து தினமும் தண்ணீர் தெளித்து வரச்செய்யலாம். அவை துளிர் வருவதை பார்க்கும் போது அவர்களுக்கு மேலும் ஆர்வம் ஏற்படும். அதன் பிறகு பெரிய தொட்டியில் மிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளை வளர்க்க சொல்லித் தரலாம்.
* வீட்டை சுத்தப்படுத்த கற்றுத்தரலாம்.
* ‘போர்’ என வரும் குழந்தைகளை விரட்டாமல் புதிதாக ஏதாவது ஐடியா கொடுக்க தயாராக இருக்க வேண்டும். அப்படி கொடுக்கும்போது குழந்தை அதனைப் பிடித்துக்கொண்டு ஆர்வமாய் விளையாடுவர்.
* புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட இதை விட சிறந்த நேரம் கிடையாது. அதனால் குழந்தைகளை கதை புத்தகங்களை தமிழில் வாங்கிக் கொடுத்து படிக்க பழகப்படுத்தலாம்.
* பணம், காசு கொடுத்து அதில் அவர்களுக்கு எளிதாக கணக்கு சொல்லித் தரலாம்.
* குழந்தைகளை காலையில் அல்லது மாலையில் அழைத்துக்கொண்டு வாக்கிங் செல்லலாம். அப்போது அவற்றின் பலன்களைக் கூறலாம்.
* ஆன்லைன் விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் இணைந்து விளையாடலாம்.
* காய்கறிகளை கழுவுதல், வேக வைத்த உருளைக்கிழங்கை உரித்தல், வெங்காயம் உரித்தல் என சின்னச் சின்ன வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தலாம்.
* தேங்காய் ஓடு, இளநீர் காலி தேங்காயில் சிவப்பு மண்ணை நிரப்பி, கொத்தமல்லி உட்பட எளிதில் வளரும் தானியங்களை தெளித்து தினமும் தண்ணீர் தெளித்து வரச்செய்யலாம். அவை துளிர் வருவதை பார்க்கும் போது அவர்களுக்கு மேலும் ஆர்வம் ஏற்படும். அதன் பிறகு பெரிய தொட்டியில் மிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளை வளர்க்க சொல்லித் தரலாம்.
* வீட்டை சுத்தப்படுத்த கற்றுத்தரலாம்.
* ‘போர்’ என வரும் குழந்தைகளை விரட்டாமல் புதிதாக ஏதாவது ஐடியா கொடுக்க தயாராக இருக்க வேண்டும். அப்படி கொடுக்கும்போது குழந்தை அதனைப் பிடித்துக்கொண்டு ஆர்வமாய் விளையாடுவர்.
* புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட இதை விட சிறந்த நேரம் கிடையாது. அதனால் குழந்தைகளை கதை புத்தகங்களை தமிழில் வாங்கிக் கொடுத்து படிக்க பழகப்படுத்தலாம்.
* பணம், காசு கொடுத்து அதில் அவர்களுக்கு எளிதாக கணக்கு சொல்லித் தரலாம்.
குழந்தைகளை பயனுள்ள செயல்களில் ஈடுபடும் வகையில் திசை திருப்புவது அவசியம். அதன் மூலம் அவர்களின் திறமையை வளர்க்கவும் முடியும். அதற்கான வழிகளை இங்கே காணலாம்.
கொரோனா தொற்று காரணமாக குழந்தைகள் தற்போது வீட்டிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் வழக்கதை விட அதிகரிக்கும் அவர்களின் குறும்புத்தனத்தை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கும் பெற்றோர் நிறைய உள்ளனர். இந்த சிக்கலை தவிர்க்க குழந்தைகளை பயனுள்ள செயல்களில் ஈடுபடும் வகையில் திசை திருப்புவது அவசியம். அதன் மூலம் அவர்களின் திறமையை வளர்க்கவும் முடியும். அதற்கான வழிகளை இங்கே காணலாம்.
1. பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் தபால் அலுவலகத்திலோ, வங்கியிலோ மைனர் அக்கவுண்டு தொடங்கலாம். வங்கியில் உள்ள ஃபார்ம் நிரப்புவது, பணம் செலுத்துவது எப்படி அணுகுவது கணக்கு புத்தகத்தில் வரவு வைப்பது ஆகியவற்றை செய்ய சொல்லலாம். போஸ்ட் ஆபிசுக்கு அழைத்து சென்று பணம் செலுத்துவது எடுப்பது போன்ற நடைமுறைகளை கற்றுத்தரலாம்.
2. வீட்டிலேயே பழச்சாறுகள் தயாரிப்பது சப்பாத்திக்கு மாவு தேய்ப்பது அதில் வித்தியாசமான உருவங்களை செய்வது, சமையலுக்கு உதவுவது போன்ற விஷயஙகளை ஆண் குழந்தைக்கும் கற்றுத்தரலாம். பாத்திரம் கழுவுவது வீட்டை பெருக்குவது ஆகியவை எல்லோரும் செய்யக்கூடிய வேலைதான் என்பதை மனதில் பதியும்படி சொல்லித்தரலாம்.
3. அருகில் இருக்கும் நூலகத்திற்கு அழைத்து சென்று படிக்கும் ஆர்வத்தை உருவாக்கலாம். நாளிதழ்கள், பத்திரிக்கைகள், அங்கிருக்கும் புத்தகங்கள் ஆகியவற்றை படிக்க சொல்லலாம். அதில் இருந்து என்ன தெரிந்து கொண்டாய் என்று கேட்டு அவர்களது பொது அறிவை வளர்க்கலாம்.
4. இரவில் தூங்குவதற்கு முன்னர் இன்று என்ன புதிதாய் கற்று கொண்டாய் என்பது பற்றி டைரியில் எழுதும் பழக்கத்தை மேற்கொள்ள செய்யலாம். விடுமுறை காலங்களில் காலை தாமதமாக எழுவதை பழக்கமாக்கி விடாமல் சரியான நேரத்திற்கு தூங்கி எழுவதை வலியுறுத்த வேண்டும்.
5. குழந்தைகளை கூட்டமாக உட்காரவைத்து கதையின் தொடர்ச்சியை இன்னொருவர் சொல்ல ஊக்கப்படுத்தலாம். அதாவது ஒருவர் சொல்லத் தொடங்கிய கதையில் ஒரு பகுதியை மட்டுமே சொல்ல வேண்டும். அடுத்தவர் அவரது கற்பனை திறனுக்கேற்ப அந்த கதையின் அடுத்த பகுதியை சொல்லலாம். பின்னர் அடுத்தவர் மேற்கொண்டு கதையின் மற்றொரு பகுதியை சொல்ல வேண்டும். பெரிய குழுவாக இருந்தால் ஒரு சுற்று வந்த பின்னர் ஆரம்பித்த இடத்தில் கதையை முடிக்க சொல்லலாம். குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை முயற்சிக்கலாம்.
6.செய்தித்தாள்களில் வரும் குறிப்பிட்ட செய்திகளை சேகரித்து ஒரு நோட்டு புத்தகத்தில் ஒட்டி வைக்கும் பழக்கதை ஏற்படுத்தலாம். அது விளையாட்டு, வானிலை, அரசியல், அறிவியல் என எதுவாகவும் இருக்கலாம். செய்தியை சுருக்கி தேதியிட்டு நோட்டில் எழுதி வைக்க சொல்லலாம்.
7. விடுகதைகளின் விடையை கண்டறிய உதவலாம். நான்கைந்து குழந்தைகளை ஒன்றாக சேர்த்து அவர்களிடம் பொது அறிவு தகவலை கொடுத்து யார் விரைவில் மனப்பாடம் செய்கிறார்கள் என போட்டி வைக்கலாம். இந்த விஷயத்தை குழந்தைகள் விரும்பும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
1. பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் தபால் அலுவலகத்திலோ, வங்கியிலோ மைனர் அக்கவுண்டு தொடங்கலாம். வங்கியில் உள்ள ஃபார்ம் நிரப்புவது, பணம் செலுத்துவது எப்படி அணுகுவது கணக்கு புத்தகத்தில் வரவு வைப்பது ஆகியவற்றை செய்ய சொல்லலாம். போஸ்ட் ஆபிசுக்கு அழைத்து சென்று பணம் செலுத்துவது எடுப்பது போன்ற நடைமுறைகளை கற்றுத்தரலாம்.
2. வீட்டிலேயே பழச்சாறுகள் தயாரிப்பது சப்பாத்திக்கு மாவு தேய்ப்பது அதில் வித்தியாசமான உருவங்களை செய்வது, சமையலுக்கு உதவுவது போன்ற விஷயஙகளை ஆண் குழந்தைக்கும் கற்றுத்தரலாம். பாத்திரம் கழுவுவது வீட்டை பெருக்குவது ஆகியவை எல்லோரும் செய்யக்கூடிய வேலைதான் என்பதை மனதில் பதியும்படி சொல்லித்தரலாம்.
3. அருகில் இருக்கும் நூலகத்திற்கு அழைத்து சென்று படிக்கும் ஆர்வத்தை உருவாக்கலாம். நாளிதழ்கள், பத்திரிக்கைகள், அங்கிருக்கும் புத்தகங்கள் ஆகியவற்றை படிக்க சொல்லலாம். அதில் இருந்து என்ன தெரிந்து கொண்டாய் என்று கேட்டு அவர்களது பொது அறிவை வளர்க்கலாம்.
4. இரவில் தூங்குவதற்கு முன்னர் இன்று என்ன புதிதாய் கற்று கொண்டாய் என்பது பற்றி டைரியில் எழுதும் பழக்கத்தை மேற்கொள்ள செய்யலாம். விடுமுறை காலங்களில் காலை தாமதமாக எழுவதை பழக்கமாக்கி விடாமல் சரியான நேரத்திற்கு தூங்கி எழுவதை வலியுறுத்த வேண்டும்.
5. குழந்தைகளை கூட்டமாக உட்காரவைத்து கதையின் தொடர்ச்சியை இன்னொருவர் சொல்ல ஊக்கப்படுத்தலாம். அதாவது ஒருவர் சொல்லத் தொடங்கிய கதையில் ஒரு பகுதியை மட்டுமே சொல்ல வேண்டும். அடுத்தவர் அவரது கற்பனை திறனுக்கேற்ப அந்த கதையின் அடுத்த பகுதியை சொல்லலாம். பின்னர் அடுத்தவர் மேற்கொண்டு கதையின் மற்றொரு பகுதியை சொல்ல வேண்டும். பெரிய குழுவாக இருந்தால் ஒரு சுற்று வந்த பின்னர் ஆரம்பித்த இடத்தில் கதையை முடிக்க சொல்லலாம். குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை முயற்சிக்கலாம்.
6.செய்தித்தாள்களில் வரும் குறிப்பிட்ட செய்திகளை சேகரித்து ஒரு நோட்டு புத்தகத்தில் ஒட்டி வைக்கும் பழக்கதை ஏற்படுத்தலாம். அது விளையாட்டு, வானிலை, அரசியல், அறிவியல் என எதுவாகவும் இருக்கலாம். செய்தியை சுருக்கி தேதியிட்டு நோட்டில் எழுதி வைக்க சொல்லலாம்.
7. விடுகதைகளின் விடையை கண்டறிய உதவலாம். நான்கைந்து குழந்தைகளை ஒன்றாக சேர்த்து அவர்களிடம் பொது அறிவு தகவலை கொடுத்து யார் விரைவில் மனப்பாடம் செய்கிறார்கள் என போட்டி வைக்கலாம். இந்த விஷயத்தை குழந்தைகள் விரும்பும் வகையில் செயல்படுத்த வேண்டும்.






