என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    தற்போது விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த புஸ்வாணங்களை குழந்தைகள் வாங்கி சோதனை செய்து பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
    இந்த வருட தீபாவளியை புதுமையாக கொண்டாட, தீ காயம் உண்டாக்காத புஸ்வாணம் அறிமுகமாகி உள்ளது. இதற்கென பிரத்யேக ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, இந்த நவீன ரக புஸ்வாணத்தை தயாரித்துள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். தற்போது விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த புஸ்வாணங்களை குழந்தைகள் வாங்கி சோதனை செய்து பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

    தீபாவளி பண்டிகையின் போது, புது துணிகளுக்கும், இனிப்புகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை போன்று பட்டாசுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நடுத்தர குடும்பத்தில் கூட பட்டாசு வாங்க ஒரு குறிப்பிட்ட தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குவது உண்டு.

    இந்திய தேவையில் 90 சதவீத பட்டாசுகள் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசுகள் கடந்த சில மாதங்களாகவே இங்குள்ள பட்டாசு ஆலைகளில் மும் முரமாக தயாரிக்கப்பட்டு வந்தன. வழக்கத்தை போல எதிர்பார்த்த அளவில் பட்டாசு உற்பத்தி நடைபெறவில்லை என்றாலும், குழந்தைகளையும், இளைஞர் களையும் கவரும் வகையில் பல புதிய ரக பட்டாசுகள் இந்த ஆண்டு அறிமுகமாகி உள்ளன. குறிப்பாக இரவு நேரம் மட்டும் வெடிக்கப்படும் பேன்சி ரக பட்டாசுகள் பல அளவுகளில், பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன. அதே போல் குழந்தைகளை கவரும் வகையில் ஹெலிகாப்டர், கார், சிங்கம், வாத்து, டிரோன், பம்பரம், டிஜிட்டல் கிராக்கர்ஸ் போன்றவையும், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான வெடிகளும் பட்டாசு சந்தைகளை அலங்கரித்துள்ளன.

    இதுதொடர்பாக சிவகாசி பட்டாசு உற்பத்தி, விற்பனையாளர்கள் கூறும் போது, “பட்டாசு தொழிலுக்கு பல்வேறு பிரச்சினைகள் வந்த போதும், தமிழக அரசு பட்டாசு தொழிலை காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது.

    ஒருநாள் பண்டிகைக்காக சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 8 லட்சம் பேர் வருடம் முழுக்க உழைத்து வரும் நிலையில் அவர்களின் உழைப்பு மக்களை முழுமையாக சென்று சேர வேண்டும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில், பட்டாசு தொழிலை நம்பி இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியான தீபாவளியாக அமையும்” என்றனர்.
    இன்றைக்கு மது, கஞ்சா, புகையிலை பொருட்கள், அபின், ஹெராயின், பான் மசாலா, போதை ஏற்றும் ஊசி மருந்துகள், போதை தரும் இன்ஹேலர்கள் என பல்வேறு போதை பொருட்கள் இளம் தலைமுறையினரை வதைத்து வருகின்றன என்றால் மிகையில்லை.
    கண்ணே...மணியே...குலக்கொழுந்தே என்று வாரி அணைத்து முத்தமிட்டு சொர்க்கம் தன் கை அருகே இருப்பதாக பூரித்துத்தான் போவார்கள் பெற்றோர் தங்கள் குழந்தை முகத்தை பார்க்கையில். எதிர்காலத்தில் தனது மகனும், மகளும் சாதனைகள் பல படைத்து நம்மை வெற்றித்தேரில் அழைத்து செல்வார்கள் என்ற எண்ணம் குழந்தையை பெற்ற அத்தனை பெற்றோருக்கும் இருக்கும்.

    பாதையை மாற்றும்

    தத்தி தத்தி நடக்கும் நடையழகு முடிந்து நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் காலம் வந்த போது, நமது குழந்தை இந்த சமுதாயத்தில் இருக்கும் கெட்டபழக்க வழக்கத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விடக்கூாடாதே என்ற கவலையும் பெற்றோரை வாட்டி வதைக்கத் தொடங்கி விடுகிறது. அவர்களது கவலையை பெருங்கவலையாக்கி விடுகின்றனர் சில இளைஞர்களும் இளம் பெண்களும்.

    எந்த வகையில் வந்தாலும் போதை வஸ்து மனிதனின் மனதை மிருகமாக்கி விடும். சொல்லப்போனால் போகும் பாதையையே மாற்றி விடும். அந்த போதை வஸ்தை தேடி இன்றயை இளைய தலைமுறையினர் சிலர் ஓடிக்கொண்டிருப்பதுதான் சமுதாயத்தின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது.

    இன்றைக்கு மது, கஞ்சா, புகையிலை பொருட்கள், அபின், ஹெராயின், பான் மசாலா, போதை ஏற்றும் ஊசி மருந்துகள், போதை தரும் இன்ஹேலர்கள் என பல்வேறு போதை பொருட்கள் இளம் தலைமுறையினரை வதைத்து வருகின்றன என்றால் மிகையில்லை.

    ஒரு காலத்தில் வசதி படைத்தவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது போதை வஸ்த்துக்கள். இன்று பாமரனைத்தேடி ஓடி வந்து விட்டது என்றுதான் நாம் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தும் அளவுக்கு நுகர்வு கலாசாரம் வளர்ந்து இருப்பது காலத்தின் கொடுமை. ஆண் என்ன? பெண் என்ன? யார் செய்தாலும் போதை பழக்கம் கேடு தரத்தான் செய்யும்.

    விழாக்களில் போதை விருந்து

    பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை ஆட்டிப்படைக்கும் இந்த போதை பழக்க வழக்கம் ஒரு சமூக நோயாகவே மாறியிருக்கிறது. கவலையை மறக்கவும், உடல் சோர்வு நீங்கவும் போதை பொருட்களை பயன்படுத்துகிறேன் என்பது தான் போதை அடிமைகள் சொல்லும் காரணம்.

    தற்போதைய கால ஓட்டத்தில் பிறப்பு, இறப்பு, பிறந்தநாள், திருமண நாள், பதவி உயர்வு, திருமணம் விழா, காதுகுத்து விழா, பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, திருவிழா, பண்டிகைகள் என எந்த சுக, துக்க நிகழ்வாக இருந்தாலும் அதில் முக்கிய இடம் வகிப்பது மது மற்றும் போதை தரும் வஸ்துகளை பயன்படுத்தும் விருந்தாக இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும், முதுகெலும்பாகவும் திகழக்கூடிய இளைஞர் சமுதாயம் கஞ்சா போன்ற போதை பழக்க வழக்கங்களில் சிக்கி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இதில் குமரி மாவட்டமும் விதிவிலக்கல்ல.

    தேடி வரும் கஞ்சா

    கடந்த சில ஆண்டுகளாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். அவர்களை குறிவைத்தே கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்தான், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் சீரழிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். அவர்களுக்கு விற்பனை செய்வதால் கிடைக்கும் வருவாயைவிட இளைஞர்கள், மாணவர்களுக்கு விற்பனை செய்வதில் அதிக வருவாய் கிடைத்ததாக தெரிகிறது. இளைஞர்கள், மாணவர்களுக்கு கஞ்சா போதை மீது ஏற்பட்ட இனம்புரியாத ஆசையினால் வியாபாரிகள் கேட்ட பணத்தை கொடுத்து கஞ்சாவை வாங்கிச் சென்றதுதான் அதிக வருவாய் அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இதனால் தேனி மாவட்டப்பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளிடம் இருந்தும், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளிடம் இருந்தும் கஞ்சாவை பெரும் அளவில் வரவழைத்து விற்பனையை அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போதை பழக்கத்துக்கு ஆளாகும் இளைஞர்கள் ஆங்காங்கே சிறு, சிறு குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடத் தொடங்கினர். இதனால் மாணவர்கள், இளைஞர்கள் தங்களது படிப்பு மற்றும் வேலைகள் ஆகியவற்றில் இருந்து தடம்மாறிச் செல்லும் சூழல் ஏற்பட்டது.

    போலீசாரின் வேட்டை

    இதையறிந்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். மாவட்டம் முழுவதும் தனிப்படை போலீசார் ரகசியமாக புலன் விசாரணை மேற்கொண்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை குறிபார்த்து வேட்டையாடினர். அதோடு மட்டுமில்லாமல் கஞ்சா போதையால் தடம் மாறும் இளைஞர்கள், மாணவர்களை அவர்களுடைய பெற்றோர் துணையோடு நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சத்தமின்றி மேற்கொண்டார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப்போல போலீஸ் சூப்பிரண்டின் இந்த நடவடிக்கைகள் அமைந்தன. இதனால் கஞ்சா போதையில் இருந்து மீண்ட மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் போலீஸ் சூப்பிரண்டுக்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை 228 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 647 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தக்கலை சப்-டிவிஷனில் அருமனை பகுதியில் மட்டும் 400 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் சிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்களில் தொடர்புடைய ஏராளமானோரை கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், மூடைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது மாவட்ட காவல்துறை என்பது பெருமை கொள்ளும் விஷயமாகும். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதுதான் மாவட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக இருந்து வருகிறது.

    நம்பிக்கை இருக்கிறது

    இருப்பினும் திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற திரைப்பட பாடலின் வரிகளுக்கு ஏற்ப கஞ்சாவை ருசிக்கும் மாணவர்களும், இளைஞர்களும் விழிப்புணர்வு பெற்று அதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். பெற்றோரின் இதயத்தை கையில் இருக்கும் கஞ்சா ெகாள்ளியால் சுட்ெடரிப்பதை கைவிட வேண்டும். எதிர்காலத்தை முன்னேற்ற பாதையில் கடந்து செல்ல ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே இந்த சமுதாயத்தின் அக்கறை. இளைஞர்கள், இளம் பெண்கள் மட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்தை பயன்படுத்தும் அனைவரும் அந்த தீய பழக்கத்தை கைவிட்டு சமுதாயத்தின் கனவை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. திருந்தினால் மட்டுமமே எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
    மாணவ-மாணவிகள் தங்கள் மீது பாலியல்ரீதியாக துன்பத்தை விளைவிக்கின்ற பார்வையை யாராவது செலுத்தினால் கூட அதுபற்றிய புகார்களை விரைந்து தெரிவிக்க வேண்டும்.
    சட்டங்களால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியாது. சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு அளிக்கலாம். பாலியல் தொடர்பான குற்றங்கள் என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை சார்ந்தது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

    மாணவ-மாணவிகள் தங்கள் மீது பாலியல்ரீதியாக துன்பத்தை விளைவிக்கின்ற பார்வையை யாராவது செலுத்தினால் கூட அதுபற்றிய புகார்களை விரைந்து தெரிவிக்க வேண்டும். பஸ், பொது இடங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் உடலை உரசி செல்பவர்கள், சைகைகளால் பாலியல் இச்சை ஏற்படுத்துபவர்கள், உடல் மொழியால் அச்சம் தரக்கூடிய வகையில் நடப்பவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்கவேண்டும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை பெற்றுத்தர முடியும். எனவே பெண் குழந்தைகளிடம் இதுபற்றி விழிப்புணர்வினை வழங்க வேண்டும்.

    அதே நேரம் ஆண் குழந்தைகளிடம் பெற்றோர் நல்ல மாண்புகளை எடுத்துக்கூறி வளர்க்க வேண்டும். பெண்களை நல்ல தோழிகளாக, சகோதரிகளாக மதிக்கும் வகையில் பழக்க வழக்கத்தை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக செய்யும் சிறு குற்றங்களை கூட உடனடியாக கண்டித்து திருத்த வேண்டும். எதிர்பாலினத்தவரை மதிக்கவும், உண்மையாக இருக்கவும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பது அவசியம்.

    குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்பது ஆண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்குமான சட்டமும்தான். எனவே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியும் புகார் தெரிவிக்கவேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், சமூகமும் இதில் விழிப்புணர்வு பெறவேண்டும். நாட்டில் பாலியல் வன்முறைகள் நிகழாத நிலை ஏற்படவேண்டும்.

    குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களை யோசிக்குமாறு செய்ய வேண்டும்.
    குழந்தை வளர்ப்பு முறையில் பெற்றோருக்கிடையே தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் தங்கள் குழந்தை யாரையும் சாராமல் தனித்து செயல்பட வேண்டும் என்ற நோக்கம் பொதுவாக இருக்கும்.

    குழந்தைகள் 3 வயதிலிருந்தே தங்களை சுற்றி நடக்கும் செயல்களை எளிதாக கிரகிக்க ஆரம்பிப்பார்கள். இந்த வயதிலிருந்தே அவர்களை சுயமாக செயல்பட அனுமதிக்கவும், கற்றுத்தரவும் வேண்டும். இதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும். அதை பற்றி இங்கே பார்ப்போம்.

    குழந்தைகள் தனித்து செயல்படுவதற்கு முடிவு எடுக்கும் திறன் அவசியமானது.

    உடைகள் விளையாட்டு பொருட்கள் உணவு போன்றவற்றை தேர்வு செய்யும் போது அவர்களின் விருப்பத்தை கேட்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். அவர்களின் தேர்வு தவறாக இருக்கும் போது அதைப்பற்றி மென்மையாக எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களது முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.

    தனித்து செயல்படும் போது குழந்தைகளின் தைரியத்தை பாராட்டவேண்டும். அவர்கள் எந்த செயலில் ஈடுட்டாலும் அதன் முடிவை பற்றி கவலைப்படாமல் அதை நிறைவேற்ற எடுக்கும் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும். முடிவு தோல்வியாக இருந்தாலும் அடுத்த முறை அந்த செயலை சரியாக செய்யும் படி உற்சாகம் அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தலாம்.

    குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களை யோசிக்குமாறு செய்ய வேண்டும். அவர்களால் அந்த சிக்கலை சமாளிக்க முடியாத சமயங்களில் மறைமுகமாக உதவ வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் சிந்தனையை தூண்ட முடியும்.

    வீட்டு வேலைகளிலும் குழந்தைகளின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் குடும்ப பொறுப்பை அதிகரிக்க செய்ய முடியும். குறிப்பிட்ட வேலையை செய்யும் போது அதை முடிப்பதற்கான நேரத்தையும் நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நேரத்திற்குள் வேலையை கண்டிப்பாக முடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இதன் மூலமாக குழந்தைகள் தர மேலாண்மையை கற்றுகொள்வார்கள்.

    உங்கள் கருத்தை குழந்தைகள் மீது திணிக்காமல் அவர்களின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்ளுஙகள். இதற்காக தினமும் சிறிது நேரம் செலவழியுங்கள். சாப்பிடும் நேரத்தை கருத்துகளை பரிமாறுவதற்கான நேரமாக மாற்றலாம். அதே சமயம் மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு தகுந்த நேரங்களில் உதவுவது பெற்றோரின் கடமையாக இருந்தாலும், சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். முடிந்தவரை அந்த செயலை அவர்களே முயன்று முடிக்குமாறு செய்ய வேண்டும். இதன்மூலம் மற்றவர்களை சார்ந்திருக்கும் எண்ணம் உருவாகாமல் தானாகவே எந்தவொரு செயலையும் நிறைவேற்றும் வகையில் அவர்களின் மூளை வேகமாக செயல்படும்.

    இன்றைய வாழ்க்கை சூழலில் உடல் சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. ஆன்லைன் விளையாட்டுகள், வீடியோ கேம்கள்தான் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
    குழந்தைகளிடத்தில் சுறுசுறுப்பை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை விளையாட்டுக்கு உண்டு. ஓடியாடி விளையாடும்போது அவர்களுடைய உடல் மட்டுமின்றி மனமும் உற்சாகம் அடையும். தேவையற்ற மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்றவற்றை போக்க உதவும். குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் தினமும் குறிப்பிட்ட நேரமாவது ஈடுபட வைக்க வேண்டும்.

    ஆனால் இன்றைய வாழ்க்கை சூழலில் உடல் சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. ஆன்லைன் விளையாட்டுகள், வீடியோ கேம்கள்தான் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அதற்கு இடம் கொடுக்க பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. குழந்தைகள் வாழ்வில் உடல் சார்ந்த விளையாட்டுகள் ஒரு அங்கமாக அமைந்திருக்க வேண்டும்.

    * எலும்புகள் மற்றும் தசைகள் பலப்படும்.

    * உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.

    * நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

    * சுவாசம் மேம்படுவதற்கு வழிவகுக்கும்.

    * கல்வி கற்கும் திறனை மேம்படுத்துவதற்கும் துணைபுரியும்.

    * விளையாட்டுகள் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பதோடு ஒரு இலக்கை நோக்கி முன்னேறி செல்ல தூண்டுகோலாக அமையும். குழுவாக இணைந்து செயல்படுவதற்கும் வழிவகை செய்யும். சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கும், தீர்க்கமாக முடிவெடுப்பதற்கும் உதவும். குழந்தைகளிடத்தில் சுய மரியாதையையும் அதிகரிக்கச்செய்யும்.

    * கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும்.

    * விளையாடுவதை வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றும்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியம் மேம்படும்.

    * இதய ஆரோக்கியம் சீராக இருக்கும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயம் குறையும்.

    * ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவும்.

    * தசை வலிமை மேம்படும். தசைகள் நெகிழ்வுத்தன்மை அடையவும் கூடும். உடல் இயக்கமும் சீராக நடைபெறும்.

    * மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

    * சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும்.

    * உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    * நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

    * ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும். ஆயுளை அதிகரிக்கும்.

    உணவு பழக்கம்:

    உடல் இயக்க செயல்பாடு என்பது உடற்பயிற்சியின் ஒரு அங்கமாகும். விளையாடுவது உடலுக்கு உகந்த பயிற்சியாகவும் அமையும். விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபட்ட பிறகு உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், ஓட்ஸ், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற மாவுச்சத்து கொண்ட காய்கறிகள், பச்சை இலை காய்கறிகள், கீரைகள், பிராக்கோலி, முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயத் தில் எனர்ஜி பானங்கள், சோடா, அதிக கொழுப்பு கொண்ட பொருட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காபின் கலந்த உணவுகளை குறைவாக உட்கொள்ள வேண்டும்.

    அன்றாட செயல்பாடுகளில் ஏரோபிக் பயிற்சிகள் மற்றும் தசை, எலும்புகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளையும் சேர்க்க வேண்டும். மேலும், காலை உணவை தவிர்க்காமல் உண்ண வேண்டும். தேவைப்பட்டால் வழக்கமாக சாப்பிடும் நேரத்திற்கு இடையே சிறிது உணவு உட்கொள்ளலாம்.
    கடந்த 25 ஆண்டுகளில் உலக அளவில் சுமார் 80 மில்லியன் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை மோசமாக்கிவிட்டது.
    உலகின் பல பகுதிகளிலும் குழந்தை திருமணங்கள் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தெற்காசியாவில் கிட்டத்தட்ட 6 பெண்களும், உலகம் முழுவதும் 60 சிறுமிகளும் குழந்தை திருமணம் காரணமாக ஏற்படும் கர்ப்பம் மற்றும் பிரசவம் காரணமாக தினமும் இறக்கிறார்கள்.

    இதுதொடர்பாக ‘சேவ் தி சில்ட்ரன் 'அறக்கட்டளை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 22 ஆயிரம் பெண்கள் உயிரிழக்கிறார்கள். மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகிறது.

    அதாவது உலகளவில் நடக்கும் இறப்புகளில் கிட்டத்தட்ட பாதி இறப்புகள் (9,600 ) அங்குதான் நடக்கின்றன. நாள் ஒன்றுக்கு 26 பேர் இறக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக தெற்காசியாவில் சுமார் 2 ஆயிரம் இறப்புகளும், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் 650 இழப்புகளும், லத்தீன் அமெரிக்கன் மற்றும் கரீபியனில் 500 இழப்பு களும் வருடந்தோறும் பதிவாகின்றன.

    அடிப்படை உரிமைகளை இழந்த பெண்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அமைப்பின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி இங்கர் ஆஷிங் கூறுகையில், ‘‘பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையின் கொடிய வடிவங்களில் குழந்தை திருமணமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானவர்கள் வயதான ஆண்களுடன் திருமண பந்தத்தில் இணைத்துவைக்கப்படுகிறார்கள். தங்களின் அடிப்படை உரிமைகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் இழக்கிறார்கள்.

    பிரசவம், டீன்ஏஜ் பெண்களின் `முதல் கொலையாளி'யாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்களின் இளம் உடல் குழந்தை பெற்றெடுக்க தகுதியானதாக இருக்காது. அந்த சமயத்தில் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளையும் புறக்கணிக்கக் கூடாது’’ என்கிறார்.

    குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்த நிலையில் கொரோனா காலகட்டம் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. கடந்த 25 ஆண்டுகளில் உலக அளவில் சுமார் 80 மில்லியன் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை மோசமாக்கிவிட்டது.

    நோய்த்தொற்று காரணமாக மில்லியன் கணக்கான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டன. ஊரடங்கு மத்தியில் பல பெண்கள் வன்முறை, பாலியல் தாக்குதல் போன்றவற்றை எதிர்கொண்டனர். 2030-ம் ஆண்டுக்குள் 10 மில்லியன் சிறுமிகள் திருமணம் செய்து கொள்ளும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
    வீட்டுச்சுவரில் ஆங்காங்கே குழந்தைகளின் கிறுக்கல்கள் இடம் பிடித்திருந்தால் அவற்றை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாகவே அகற்றிவிடலாம்.
    கொரோனா அச்சுறுத்தலால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் குழந்தைகள் பலர் தங்களின் தனித்திறன்களை மெருகேற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க குழந்தைகளின் கிறுக்கல்கள் இல்லாத வீட்டு சுவர்களை பார்ப்பது அரிது. பேனா, பென்சில், கிரையான்ஸ் இவற்றுள் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தங்கள் கைவண்ணத்தை காண்பித்திருப்பார்கள். வீட்டுச்சுவரில் ஆங்காங்கே குழந்தைகளின் கிறுக்கல்கள் இடம் பிடித்திருந்தால் அவற்றை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாகவே அகற்றிவிடலாம்.

    பேக்கிங் சோடா: இது சமையலறையில் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். சுவர் கறைகளை போக்கும் தன்மையும் இதற்கு உண்டு. பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். அதனை பெயிண்ட் பிரஷிலோ, வீணான பல் துலக்கும் பிரஷிலோ முக்கி சுவரில் கறைகள் படிந்திருக்கும் பகுதியில் அழுத்தி தேய்த்தால் போதும். எல்லாவிதமான கறைகளும் முற்றிலும் நீங்கிவிடும்.

    பற்பசை: பல் துலக்க பயன்படுத்தும் பற்பசையையும் குழந்தைகளின் கிறுக்கல்களை போக்குவதற்கு பயன்படுத்தலாம். பென்சில், கிரையான்ஸ் கறைகள் எளிதில் நீங்கிவிடும். பற்பசையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை போல் கெட்டியாக குழப்பிக்கொள்ளவும். அதனை பிரஷில் முக்கி கறை படிந்திருக்கும் இடத்தில் அழுத்தி தேய்த்தாலே போதும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவினால் கறைகள் இருந்த சுவடே தெரியாது.

    வினிகர்: தண்ணீரின் அளவில் நான்கில் ஒரு பங்கு வினிகர் கலந்து அதில் பஞ்சை நனைத்து கறை படிந்துள்ள பகுதியில் துடைக்க வேண்டும். சில கறைகள் எளிமையாக நீங்கிவிடும். இல்லாவிட்டால் சிறிது நேரம் கழித்து வினிகரை மட்டும் பஞ்சில் நனைத்து தேய்த்தால் போதும். வெதுவெதுப்பான நீரில் வினிகரை ஊற்றி பயன்படுத்துவது சிறந்தது.

    வாஷிங் சோடா: சுவர் கறைகளை அகற்றும் விஷயத்தில் இது பேக்கிங் சோடாவை விட சிறப்பாக செயல்படக்கூடியது. வாஷிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து குழப்பி, கறை படிந்திருக்கும் இடத்தில் அழுத்தி தேய்க்க வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து அந்த இடத்தில் பிரஷ் கொண்டு தேய்த்தால் கறைகள் காணாமல் போய்விடும்.
    சக மாணவர்களின் வற்புறுத்தலாலும், மாணவர்களின் மனதில் போதை பொருட்களை பயன்படுத்துவது ஸ்டைலாக காட்சியளிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதாலும் 90 சதவீத மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள்.
    இந்தியாவில் ஏழ்மை, கல்லாமையை விட கொடுமையானது போதை பழக்கம். இந்தியாவை போதை பழக்கம் இல்லாத நாடாக நாம் மாற்ற வேண்டும். பொதுவாக பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு எதனால் போதை பழக்கம் ஏற்படுகிறது. காரணங்கள் என்ன? அதிலிருந்து அவர்கள் விடுபட பெற்றோர்கள் அதற்காக என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து திண்டுக்கல் ‘ஸ்பீக் யுவர் மைண்ட் கவுன்சிலிங் சென்டர்’ டாக்டர் டீன் வெஸ்லி கூறியதாவது:-

    இன்றைய நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கூல்லிப்ஸ், ஹேன்ஸ், கெய்னி, சுபாரி, குட்கா, மாவா, பான் போன்ற போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது எஸ்.எல்.டி எனும் புகையில்லா புகையிலை போதை பழக்கம் ஆகும். இதில் 4:200 கெமிக்கல் இருக்கிறது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை உட்கொள்வதால் கண்டிப்பாக வாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பற்கள் சீர் கெடும். வயிற்றில் புண் ஏற்படும். ஆரம்பத்தில் இதனை பழகும் மாணவர்கள் பின் மெதுவாக சிகரெட், பீடி, கஞ்சாவிற்கும், பலர் மதுவுக்கும் அடிமை ஆகின்றனர்.

    சக மாணவர்களின் வற்புறுத்தலாலும், மாணவர்களின் மனதில் போதை பொருட்களை பயன்படுத்துவது ஸ்டைலாக காட்சியளிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதாலும் 90 சதவீத மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். அதேபோல் கவலைகளை மறக்க குடிப்பதாக பலர் கூறுகின்றனர். பொதுவாக போதையில் இருக்கும் போது ஞாபகசக்தி குறைவாக இருக்கும். அதனால் தங்களுக்கு உள்ள பிரச்சினைகள் அனைத்தும் சரியாகி விடும் என நினைப்பார்கள். ஆனால் மனக்கவலையையும், மன பயத்தையும், மன அழுத்தத்தையும் போதை பொருட்களால் தடுக்க முடியாது.

    பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அவர்களின் நடத்தையை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு அன்பு, பாசத்தை புரிய வைக்க வேண்டும். அவர்களை அதிக நேரம் தனிமையில் இருக்க விடக்கூடாது. போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை ஆரம்ப நிலையிலேயே டாக்டரிடம் அழைத்து சென்று கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

    அவர்களுக்கு ‘காக்னடிவ் பிகேவியர் தெரபி’ மற்றும் ‘பேமிலி தெரபி’ மூலமாகவும் தேவையான மருந்துகள் கொடுக்க வேண்டும். இதனை ஒரு நல்ல டாக்டரால் எளிதாக கையாள முடியும். அத்தகைய கவுன்சிலிங், சிகிச்சையை திண்டுக்கல்லில் உள்ள எங்களது ‘ஸ்பீக் யுவர் மைண்ட் கவுன்சிலிங் சென்டரில்’ வழங்குகிறோம். எனவே போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை கிண்டல், கேலி செய்யாமல் அவர்களுக்கு உதவியாக இருந்து, ஊக்குவித்து சமுதாயத்தில் அவர்களும் நல்ல வாழ்க்கை வாழ உதவுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர் டீன் வெஸ்லி

    10 குழந்தைகளில் 7 பேர் தினமும் இரண்டு முறை பல் துலக்குவதில்லை. அதனால் குழந்தைகளில் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் பல் சார்ந்த பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்.
    குழந்தைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க ஊக்குவிக்க தூண்டும் வகையிலான விழிப்புணர்வு பாடலை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) குழந்தைகள் மற்றும் பல் பாதுகாப்புத்துறை உருவாக்கி உள்ளது. இனிமையான இசையுடன் இரண்டு நிமிடங்கள் ஒளிபரப்பாகும் அந்த பாடலில் வாய்வழி சுகாதார நடைமுறைகள் பற்றிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

    பல் துலக்குதல், பல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் குறிப்புகள், பெண்கள் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய வாய்வழி சுகாதாரம் சார்ந்த விஷயங்கள், பற்களின் பாதுகாப்பு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், அதற்கான பதில்கள் என ஏராளமான தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதற்காக `ஹெல்த்தி ஸ்மைல்’ என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

    இது குறித்து எய்ம்ஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘முறையாக பல் துலக்காதது, தவறான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது போன்றவை காரணமாக பல் சார்ந்த பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

    60 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வாய்வழி சுகாதார பிரச்சினைகள் பற்றி அறிந்திருக்கவில்லை. 10 குழந்தைகளில் 7 பேர் தினமும் இரண்டு முறை பல் துலக்குவதில்லை. அதனால் குழந்தைகளில் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் பல் சார்ந்த பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். எனவே பல் சுகாதாரத்தை பேணும் நோக்கோடு இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம்’’ என்கிறார்கள்.
    நாம் தினமும் குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளைக் கொடுத்து வந்தாலே, பிற்காலத்தில் மருந்து, மாத்திரை போன்றவை தேவைப்படாது. குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டியவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இளம் தாய்மார்கள் என்னதான் தங்கள் குழந்தைக்குக் கொடுக்கவேண்டிய உணவுகள் பற்றி படித்தும் கேட்டும் அறிந்திருந்தாலும், திடீர் சந்தேகங்களும் குழப்பங்களும் அடிக்கடி ஏற்படும். என்ன உணவை எப்படிக் கொடுக்கலாம்? இது கொடுத்தால் குழந்தையின் உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா என்ற பதற்றம் இருக்கும். பிறந்த நாள் முதல் ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டியவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    படுத்துக்கொண்டே பால் கொடுப்பது தவறு. அது குழந்தைக்கு மிகவும் ஆபத்து.

    சில சமயங்களில் உணவின் கலப்படத்தாலோ, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவினாலோ குழந்தைக்கு ஒவ்வாமை உண்டாகி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்குத் தாய்ப்பாலிலேயே பாதி குணமாகிவிடும். அது மட்டுமின்றி, ORS எனப்படும் ( oral rehydration solution / உப்பு சத்து குடிநீர்) என்று சொல்லப்படும் மருந்தினைக் கொடுக்கலாம். இவை கிடைக்காதபட்சத்தில், 200 மில்லி தண்ணீரைக் கொதிக்கவைத்து ஆறியவுடன், அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் ஒரு சிட்டிகை உப்பும் கலந்து 50 மில்லியாகக் கொடுக்க வேண்டும்.
    குழந்தைகளைக் குளிக்க வைக்கும்போது கண்களை மூடுதல் போன்றவை செய்யக் கூடாது.

    குழந்தைகளுக்கு பவுடர் போடுவது, மை வைப்பது, சாம்பூராணி காட்டுவது போன்றவை, நுரையீரல் பிரச்னையை ஏற்படுத்தும். சிலருக்கு நிமோனியா, ஆஸ்துமா போன்றவையும் ஏற்படலாம்.

    பிறந்த குழந்தைக்கு பசும் பால் கொடுக்கக் கூடாது. குழந்தைக்கு ஜீரணமாகாமல் ஒவ்வாமை ஏற்படும். ஒரு வயத்துக்குப் பிறகுதான் பசும் பால் கொடுக்க வேண்டும்.

    உணவை மிகவும் குளிர்ச்சியாகவோ, சூடாகவோ கொடுக்கக் கூடாது. மிதமான நிலையில் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழங்களைச் சுடுநீரில் சுத்தமாகக் கழுவி கொடுக்க வேண்டும். ஃப்ரிஜில் வைக்கப்பட்ட உணவுகளைக் கொடுக்கவே கூடாது.

    ஒரு குழந்தைக்கு சிறு வயதில் கொடுக்கும் உணவுதான், ஆயுள் முழுவதும் சத்தாகத் தொடரும். நாம் தினமும் குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளைக் கொடுத்து வந்தாலே, பிற்காலத்தில் மருந்து, மாத்திரை போன்றவை தேவைப்படாது.
    இன்று இளம் தாய்மார்கள் குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் மூலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலையில் உள்ளனர்.
    சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது.

    வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள். ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் மூலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலை.

    காய்ச்சல்

    குழந்தை தன் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்ளும். வீறிட்டு அழும். திடீரென்று தன் தாயை சேர்த்து அணைத்துக்கொள்ளும். இலேசாக இருமிக்கொண்டே இருக்கும். பால் குடிக்காது. உடலின் நிறம் மாறுபட்டு காணப்படும். உமிழ்நீர் சூடாக இருக்கும். அடிக்கடி கொட்டாவி விடும்.

    உடலில் அக்கி உண்டானால்

    குழந்தையின் நாவில் நீர் வறட்சி காணப்படும். அடிக்கடி அழும். காய்ச்சல் இருக்கும். உதடுகள் வறண்டு காணப்படும்.

    வயிற்றுப் பொருமல்

    குழந்தைக்கு மூட்டுகளில் வலி இருக்கும் அது சொல்லத் தெரியாமல் கால்களை அசைத்து அழும். கண்களை அகலமாக விரித்து நிலையாக ஒரே இடத்தைப் பார்க்கும். உடல் மிகவும் வாட்டமாக இருக்கும். பால் குடிக்காது. மலம் வெளியேறாது.

    காமாலை

    குழந்தைக்கு முகம், கண்கள், நகம் முதலியவை மஞ்சள் நிறமாக தோன்றும். பசியில்லாமல் இருக்கும். பால் குடிக்காது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறும். மலம் சாம்பல் நிறமாக இருக்கும்.

    விக்கல்

    மூச்சுக்காற்றில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். குழந்தை அடிக்கடி முனகிக்கொண்டே இருக்கும். திடீரென்று ஏப்பம் விடும்.

    நாக்கில் பாதிப்பு

    உமிழ்நீர் அதிகம் சுரக்கும். கன்னங்கள் வீக்கமாக இருக்கும். நாக்கு தடித்து வெள்ளையாக காணப்படும். சில சமயங்களில் புள்ளி புள்ளியாக புண்கள் காணப்படும். வாயை மூடமுடியாமல் குழந்தை தவிக்கும்.

    தொண்டைப் பிடிப்பு

    இலேசான சுரம் இருக்கும். குழந்தைகள் எச்சில் விழுங்க முடியாமல் வலி இருக்கும். எதையும் விருப்பமுடன் சாப்பிடாது.

    காது பாதிப்பு

    கையினால் காதுகளைத் தொடும். காதுகளை அழுத்தித் தேய்க்கும். தூக்கமிருக்காது. பால் குடிக்காது.

    கழுத்தில் பாதிப்பு

    குடித்த பால் ஜீரணம் ஆகாது. தொண்டையில் சளி கட்டும். பசி எடுக்காது. காய்ச்சல் இருக்கும். குழந்தை சோர்வாக காணப்படும்.

    வயிற்றுவலி

    குழந்தை அழுதுகொண்டே இருக்கும். தாய்ப்பால் குடிக்காது. நிற்க வைத்தால் வயிற்றில் கைவைத்து முன்பக்கமாகவே விழும். உடல் குளிர்ந்திருக்கும். முகம் வியர்த்துக் காணப்படும்.

    இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளுக்கு உண்டானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.
    குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
    * மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.
    * இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.
    * குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
    * தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.
    * தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.
    * பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.
    * குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
    * தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.
    * தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
    * அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.
    * மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
    * குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.
    * தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
    * குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.
    * சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.
    * மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.
    * மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.
    * மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.
    * குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
    ×