என் மலர்
குழந்தை பராமரிப்பு
குடும்பத்தில் பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுள் காலம் அதிகரிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தந்தையின் ஆயுளுக்கும், பெண் குழந்தைக்கும் இடையே நெருங்கிய உறவு பந்தம் இருப்பதாக கீலோனியன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. குடும்பத்தில் பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுள் காலம் அதிகரிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வுக்கு 4310 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 2162 பேர் தந்தையர். ஆய்வின் முடிவில் மகன்களின் எண்ணிக்கைக்கும், தந்தையின் ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் மகள் இருந்தால் தந்தையின் ஆயுள் 74 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும், எத்தனை மகள்கள் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து ஆயுள் காலம் மாறுபடும் என்றும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குழந்தைகள் விஷயத்தில் தாய்மார்களின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு பிரசவத்தின்போதும் தாயின் ஆரோக்கியமும், ஆயுட்காலமும் குறைகிறது. அதேவேளையில் தனியாக வாழும் பெண்களுக்கு நீண்ட ஆயுட்காலம் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
குழந்தை இல்லாத தம்பதியரை விட குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதியர் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான ஆய்வுக்கு 4310 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 2162 பேர் தந்தையர். ஆய்வின் முடிவில் மகன்களின் எண்ணிக்கைக்கும், தந்தையின் ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் மகள் இருந்தால் தந்தையின் ஆயுள் 74 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும், எத்தனை மகள்கள் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து ஆயுள் காலம் மாறுபடும் என்றும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குழந்தைகள் விஷயத்தில் தாய்மார்களின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு பிரசவத்தின்போதும் தாயின் ஆரோக்கியமும், ஆயுட்காலமும் குறைகிறது. அதேவேளையில் தனியாக வாழும் பெண்களுக்கு நீண்ட ஆயுட்காலம் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
குழந்தை இல்லாத தம்பதியரை விட குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதியர் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அவர்களுக்கு நேரும் பிரச்சனைகளை தடுத்தல் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை முன்னிறுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும், உயர்வுக்கும் பெண் குழந்தைகள் காரணமாக இருக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பதும், வாழ்வில் உயர்த்துவதும் ஒவ்வொருவரின் கடமையாகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தை பெறவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும் 2011-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல், சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கான சம உரிமையை வழங்குதல், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அவர்களுக்கு நேரும் பிரச்சனைகளை தடுத்தல் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை முன்னிறுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
பெண்களின் சம உரிமை மற்றும் முன்னோற்றத்திற்காக உலக அளவில் இன்றும் போராட்டங்களும், முயற்சிகளும் நடந்து வருகின்றன. பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்பதை குடும்பத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் அனைத்து விதங்களிலும் சமமாக நடத்த வேண்டும்.
பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல், சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கான சம உரிமையை வழங்குதல், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அவர்களுக்கு நேரும் பிரச்சனைகளை தடுத்தல் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை முன்னிறுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
பெண்களின் சம உரிமை மற்றும் முன்னோற்றத்திற்காக உலக அளவில் இன்றும் போராட்டங்களும், முயற்சிகளும் நடந்து வருகின்றன. பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்பதை குடும்பத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் அனைத்து விதங்களிலும் சமமாக நடத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருட்கள் உள்ளன.
வெளி விளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. இது மட்டுமல்லாமல் சுடுவது போன்ற விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய நடவடிக்கைகளில் மூர்க்க குணத்தை உண்டாக்கக்கூடும் என்கிறார்கள், குழந்தைகள் மனநல நிபுணர்கள். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச்சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.
புல்லியிங் என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘பலவீனமானவனை கொடுமைப்படுத்துதல்’ என்ற அர்த்தம் உண்டு. ஒருவரை நேரடியாக மிரட்டுவது, பயமுறுத்துவது, உடல்ரீதியாகத் துன்புறுத்துவது போன்றவை மட்டும்தான் புல்லியிங் என முன்பு கருதப்பட்டது. ஆனால் மேற்கண்ட ஆன்லைன் விளையாட்டுகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான்.
தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச்சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் ‘சைபர் புல்லியிங்’ என்கிறார்கள். நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40 சதவீத இளைஞர்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக இது கருதப்படுகிறது.
ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்தி பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையதளத்தை பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்கு பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உள்பட பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.
‘முள்ளை முள்ளால் எடுப்பது’ போல வளர்இளம் பருவத்தினரின் வலைதள பயன்பாட்டை கண்காணிப்பதற்குப் பல மென்பொருட்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும். தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருட்கள் உள்ளன.
தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, மாணவர்கள், இளைஞர்கள் இணையதளத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.
புல்லியிங் என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘பலவீனமானவனை கொடுமைப்படுத்துதல்’ என்ற அர்த்தம் உண்டு. ஒருவரை நேரடியாக மிரட்டுவது, பயமுறுத்துவது, உடல்ரீதியாகத் துன்புறுத்துவது போன்றவை மட்டும்தான் புல்லியிங் என முன்பு கருதப்பட்டது. ஆனால் மேற்கண்ட ஆன்லைன் விளையாட்டுகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான்.
தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச்சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் ‘சைபர் புல்லியிங்’ என்கிறார்கள். நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40 சதவீத இளைஞர்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக இது கருதப்படுகிறது.
ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்தி பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையதளத்தை பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்கு பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உள்பட பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.
‘முள்ளை முள்ளால் எடுப்பது’ போல வளர்இளம் பருவத்தினரின் வலைதள பயன்பாட்டை கண்காணிப்பதற்குப் பல மென்பொருட்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும். தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருட்கள் உள்ளன.
தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, மாணவர்கள், இளைஞர்கள் இணையதளத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.
மருத்துவம், அறிவியல் படிப்புகளை படிக்க காத்திருக்கும் மாணவர்கள் அதே துறையில் உள்ள குறுகிய கால டிப்ளமோ படிப்புகளை படித்தால் விரைவில் பணி நியமனம் பெறலாம்.
மருத்துவம், அறிவியல் படிப்புகளை படிக்க காத்திருக்கும் மாணவர்கள் அதே துறையில் உள்ள குறுகிய கால டிப்ளமோ படிப்புகளை படித்தால் விரைவில் பணி நியமனம் பெறலாம். குறிப்பாக மருத்துவ துறையில் நிறைய துணை படிப்புகள் இருக்கின்றன. மருத்துவமனைகளில் பணியாற்ற பொது மருத்துவம் மட்டுமே படிக்கவேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற மிக குறைந்த செலவிலான துணைப்படிப்புகளும், மருத்துவமனையில் பணியாற்றும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். குறிப்பாக முதியோர் நலன் பாதுகாப்பு, ஆப்டோமெட்ரிஸ்ட், செவிலி உதவியாளர், பிசியோதெரபிஸ்ட், பேச்சு பயிற்சியாளர்கள் போன்ற வேலைகளுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுபற்றி விளக்கமாக விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...
முதியோர் நலன் பாதுகாப்பு
குழந்தைகள் நல மருத்துவர்களை ‘பிடியாட்ரிஷன்’ என்று அழைப்பது போல முதியோர் நல மருத்துவர் ‘ஜிடியாட்ரிஷன்’ என்று அழைக்கப்படுகிறார்கள். பொதுவாக 60 வயது கடந்த முதியோர்களை கவனிக்கவும், அவர்களது வாழ்நாளை ஆரோக்கியத்துடன் வழிநடத்தவும் கற்றுத்தரும் டிப்ளமோ படிப்பு இது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் உள்ள முதியவர்களுக்கு பணி செய்ய ஜிரீடியாட்ரிக் கேர் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆப்டோமெட்ரிஸ்ட்
கண் மருத்துவம் தொடர்பான டிப்ளமோ பயிற்சியான ‘ஆப்டோமெட்ரிஸ்ட்’ படிப்பு மூலமாக கண் பார்வை திறனை கண்டறிவதற்கும், கண் சிகிச்சை தொடர்பான மருத்துவ உதவி செய்வதற்கும் முடியும். இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கண் மருத்துவமனைகளில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. கண் சிகிச்சை மையங்கள் முதல் கண் கண்ணாடி கடைகளில் கூட இந்த படிப்புகளுக்கு வேலை வழங்கப்படுகிறது.
செவிலி உதவியாளர்
மருத்துவமனைகளில் செவிலி யருக்கு உதவி செய்யும் பணிகளை செய்ய இந்த படிப்புகள் உதவுகின்றன. நோயாளிகளின் படுக்கை மாற்றுவது தொடங்கி, அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு செல்வது, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு உதவி செய்வதற்காக இவர்கள் பயன்படுகிறார்கள். இந்த ஓராண்டு படிப்பை முடித்த பிறகு இவர்களுக்கு எளிதாக அனைத்து மருத்துவமனைகளிலும் வேலை கிடைக்கும்.
பிசியோதெரபிஸ்ட்
முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், விபத்தினால் காயம் ஏற்பட்டவர்கள் போன்றோருக்கு ஏற்படும் உடல்நிலை சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க இந்த மருத்துவர்கள் பயன்படுகின்றனர். மூன்றாண்டு படிப்பிற்கு பிறகு 1 ஆண்டு பயிற்சி படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பேச்சு பயிற்சியாளர்கள்
செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கைகள் மூலம் சைகை மொழி கற்றுக்கொடுத்தல் பணிகளுக்கான ஓராண்டு டிப்ளமோ பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
முதியோர் நலன் பாதுகாப்பு
குழந்தைகள் நல மருத்துவர்களை ‘பிடியாட்ரிஷன்’ என்று அழைப்பது போல முதியோர் நல மருத்துவர் ‘ஜிடியாட்ரிஷன்’ என்று அழைக்கப்படுகிறார்கள். பொதுவாக 60 வயது கடந்த முதியோர்களை கவனிக்கவும், அவர்களது வாழ்நாளை ஆரோக்கியத்துடன் வழிநடத்தவும் கற்றுத்தரும் டிப்ளமோ படிப்பு இது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் உள்ள முதியவர்களுக்கு பணி செய்ய ஜிரீடியாட்ரிக் கேர் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆப்டோமெட்ரிஸ்ட்
கண் மருத்துவம் தொடர்பான டிப்ளமோ பயிற்சியான ‘ஆப்டோமெட்ரிஸ்ட்’ படிப்பு மூலமாக கண் பார்வை திறனை கண்டறிவதற்கும், கண் சிகிச்சை தொடர்பான மருத்துவ உதவி செய்வதற்கும் முடியும். இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கண் மருத்துவமனைகளில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. கண் சிகிச்சை மையங்கள் முதல் கண் கண்ணாடி கடைகளில் கூட இந்த படிப்புகளுக்கு வேலை வழங்கப்படுகிறது.
செவிலி உதவியாளர்
மருத்துவமனைகளில் செவிலி யருக்கு உதவி செய்யும் பணிகளை செய்ய இந்த படிப்புகள் உதவுகின்றன. நோயாளிகளின் படுக்கை மாற்றுவது தொடங்கி, அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு செல்வது, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு உதவி செய்வதற்காக இவர்கள் பயன்படுகிறார்கள். இந்த ஓராண்டு படிப்பை முடித்த பிறகு இவர்களுக்கு எளிதாக அனைத்து மருத்துவமனைகளிலும் வேலை கிடைக்கும்.
பிசியோதெரபிஸ்ட்
முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், விபத்தினால் காயம் ஏற்பட்டவர்கள் போன்றோருக்கு ஏற்படும் உடல்நிலை சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க இந்த மருத்துவர்கள் பயன்படுகின்றனர். மூன்றாண்டு படிப்பிற்கு பிறகு 1 ஆண்டு பயிற்சி படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பேச்சு பயிற்சியாளர்கள்
செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கைகள் மூலம் சைகை மொழி கற்றுக்கொடுத்தல் பணிகளுக்கான ஓராண்டு டிப்ளமோ பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
மீனையோ, இறைச்சியையோ அதிக அளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால், செரிமான மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். சிறுநீரகத்தின் இயக்கத்திலும் அசவுகரியம் ஏற்படக்கூடும்.
பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரதச்சத்து இன்றியமையாதது. காய்கறிகள், பழங்களைவிட இறைச்சி வகைகளில்தான் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் சிறுவயதிலேயே குழந்தைகளை இறைச்சி உணவு வகைகளை சாப்பிட பழக்கலாம். எந்தெந்த வயதில் எந்தவிதமான இறைச்சி வகைகளை சாப்பிட கொடுக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளின் உணவாக இருக்க வேண்டும். 6 மாதத்திற்கு பிறகு காய்கறிகள், பழங்களை கூழாகவோ, சூப்பாகவோ கொடுக்கலாம். 9 மாதத்திற்கு பிறகு விரும்பினால் அசைவ உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்தலாம்.
முதலில் முட்டையை சாப்பிட வைக்க வேண்டும். அதில் புரதம் மட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்கள் உள்பட குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
கோழி இறைச்சி, மீன் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது முட்டையில் புரதச்சத்து குறைவாக இருந்தாலும் அது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. குழந்தைக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுவதை முட்டையை வைத்தே பரிசோதித்துக்கொள்ளலாம். முதலில் வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை குழந்தைக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். அதனை சாப்பிட பழகிய பிறகு வெள்ளை கருவை கொடுக்க தொடங்கலாம்.
ஒரு வயதை கடந்த பிறகு குழந்தைகளுக்கு மீன், கோழி போன்ற இறைச்சிகளை நன்றாக வேக வைத்து சிறிதளவு சாப்பிட கொடுக்கலாம். ஆரம்பத்தில் கோழி இறைச்சியை குழம்பாகவோ, சூப்பாகவோ சாப்பிட கொடுக்க வேண்டும். அதன்பிறகு இறைச்சி துண்டுகளை மிக குறைந்த அளவில் கொடுக்கலாம்.
மீனையோ, இறைச்சியையோ அதிக அளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால், செரிமான மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். சிறுநீரகத்தின் இயக்கத்திலும் அசவுகரியம் ஏற்படக்கூடும்.
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவைகளை 5 வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அவைகளில் அதிக அளவில் புரதம் இருக்கிறது என்றாலும் அவை செரிமானத்தில் நெருக்கடியை உருவாக்கும்.
இறைச்சி உணவுகளை சாப்பிட கொடுத்தாலும் இரண்டு வயதுவரை தாய்ப்பாலும் கொடுக்கலாம்.
6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளின் உணவாக இருக்க வேண்டும். 6 மாதத்திற்கு பிறகு காய்கறிகள், பழங்களை கூழாகவோ, சூப்பாகவோ கொடுக்கலாம். 9 மாதத்திற்கு பிறகு விரும்பினால் அசைவ உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்தலாம்.
முதலில் முட்டையை சாப்பிட வைக்க வேண்டும். அதில் புரதம் மட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்கள் உள்பட குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
கோழி இறைச்சி, மீன் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது முட்டையில் புரதச்சத்து குறைவாக இருந்தாலும் அது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. குழந்தைக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுவதை முட்டையை வைத்தே பரிசோதித்துக்கொள்ளலாம். முதலில் வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை குழந்தைக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். அதனை சாப்பிட பழகிய பிறகு வெள்ளை கருவை கொடுக்க தொடங்கலாம்.
ஒரு வயதை கடந்த பிறகு குழந்தைகளுக்கு மீன், கோழி போன்ற இறைச்சிகளை நன்றாக வேக வைத்து சிறிதளவு சாப்பிட கொடுக்கலாம். ஆரம்பத்தில் கோழி இறைச்சியை குழம்பாகவோ, சூப்பாகவோ சாப்பிட கொடுக்க வேண்டும். அதன்பிறகு இறைச்சி துண்டுகளை மிக குறைந்த அளவில் கொடுக்கலாம்.
மீனையோ, இறைச்சியையோ அதிக அளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால், செரிமான மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். சிறுநீரகத்தின் இயக்கத்திலும் அசவுகரியம் ஏற்படக்கூடும்.
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவைகளை 5 வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அவைகளில் அதிக அளவில் புரதம் இருக்கிறது என்றாலும் அவை செரிமானத்தில் நெருக்கடியை உருவாக்கும்.
இறைச்சி உணவுகளை சாப்பிட கொடுத்தாலும் இரண்டு வயதுவரை தாய்ப்பாலும் கொடுக்கலாம்.
தேசத்தை வலுவாக்க தேசப்பற்றும் அவசியம். எனவே மாணவர்கள் கல்வி அறிவுடன் நாட்டுப்பற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தியா, இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்திருக்கும் ஒற்றுமை தேசம். நிலம், நீர், மலை, கனிமம் போன்ற வளங்கள் நிரம்பப் பெற்ற நாடு. இன்றைய உலகப் பரப்பளவை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் இந்தியா ஏழாவது மிகப் பெரிய நாடாக திகழ்கிறது. இத்தகைய தேசத்தில் மக்கள் மதம், இனம், மொழி போன்றவற்றால் வேறுபட்டாலும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். நாட்டு நலனில் மாணவர்களின் பங்களிப்பு மிகுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் இன்றைய மாணவர்களே நாளைய பாரதத்தின் தூண்களாவார்கள். எனவே மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்று ஊற்றெடுக்க வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு தனிமனித வளர்ச்சி மிகவும் அவசியம். தனிமனித வளர்ச்சிக்கு கல்வி அறிவு மிக முக்கியம். பள்ளி பருவத்தில்தான் கல்வி அறிவினை வளர்த்துக் கொள்ள முடியும். பள்ளிக்கூடங்களில் பெறும் கல்வி அறிவினால் மட்டும் இந்தியாவை வலுவானதாக மாற்ற முடியாது. தேசத்தை வலுவாக்க தேசப்பற்றும் அவசியம். எனவே மாணவர்கள் கல்வி அறிவுடன் நாட்டுப்பற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ‘தேசிய மாணவர் படை‘ என்ற அமைப்பின் மூலம் தேசப்பற்றினை ஊட்டுகின்றனர். துப்பாக்கி சுடுதல், தற்காப்பு பயிற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்த அமைப்பினால் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பின் மூலம் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாணவர்களால் பங்களிப்பு கொடுக்க முடியும்.
இந்தியாவின் விடுதலை சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், ஜவகர்லால் நேரு, பகத்சிங், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றோர் பள்ளி பருவத்திலே தேசப்பற்றினை வளர்த்துக் கொண்டவர்கள்தாம். இன்னும் பல விடுதலை போராளிகள் பள்ளி பருவத்திலே தேசிய பற்றினால் வார்க்கப்பட்டார்கள். அவர்கள் வழியில் நாமும் பயணம் செய்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.
இந்தியாவை அடிமை பூமியாக மாற்றி ஆண்டுவந்த ஆங்கிலேயரை விடுதலை போராட்ட தியாகிகள் தங்களின் கல்வி அறிவினாலும், நாட்டுப் பற்றினாலும் விரட்டி அடித்தனர். வழக்கறிஞராக திகழ்ந்த காந்தியடிகள் தேசபற்றினால் அன்னியர் ஆட்சியை எதிர்த்து உப்பு சத்தியாகிரகம், உண்ணாவிரத அறப்போர் போன்ற பல போராட்டங்களை நடத்தினார். இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் அன்னிய பொருட்களை தவிர்த்து இந்திய பொருட்களை வாங்கி உபயோகிக்க அறிவுரை கூறினார்.
தேசியக்கவி பாரதியார், தித்திக்கும் தேன் தமிழில் விடுதலை முழக்க பாடல்களை எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். சுபாஷ்சந்திரபோஸ், நாட்டுப்பற்று கொண்ட வீரர்களை இணைத்து பெரும்படையை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்கொண்டார். இன்னும் ஆயிரம் ஆயிரம் தலைவர்களும், விடுதலை போராளிகளும் நாட்டுப்பற்றினால் தன் உயிரையும் ஈந்து போராடினார்கள். அவர்களின் நாட்டுப்பற்றால்தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.
மாணவர்களாகிய நாமும் நாட்டுப்பற்றினை நமது உயிர்மூச்சாக கருதவேண்டும். பள்ளி பருவத்திலிருந்தே நாம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த முடியும். அது எப்படி தெரியுமா?
கல்வியில் முழு கவனம் செலுத்தி, பிறருக்கு பயன் அளிக்கும் விதத்தில் வாழ வேண்டும். சாதாரண மாணவனாக இல்லாமல் சாதனை மாணவனாக திகழ வேண்டும். பள்ளி பருவத்தில் பாடங்களையும், வீரதீர பயிற்சிகளையும் மேற்கொண்டு இந்தியாவின் வெற்றிக்கு வித்திட வேண்டும்.“இந்திய பாரதம் இளைஞர்கள் கையில்“ என்ற வாசகத்திற்கு உயிர் கொடுத்து உலகில் இந்தியாவின் புகழை உயர்த்த பாடுபட வேண்டும். எல்லைப் பகுதிகளில் நிகழும் அன்னிய அச்சுறுத்தல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும், உலக பொருளாதாரத்திற்கு நிகராக இந்திய பொருளாதார நிலையை பலப்படுத்தி உயர்த்த நாம் என்றும் உறுதி கொள்ள வேண்டும். தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் வழி செயல்படுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம்..!
நாட்டின் வளர்ச்சிக்கு தனிமனித வளர்ச்சி மிகவும் அவசியம். தனிமனித வளர்ச்சிக்கு கல்வி அறிவு மிக முக்கியம். பள்ளி பருவத்தில்தான் கல்வி அறிவினை வளர்த்துக் கொள்ள முடியும். பள்ளிக்கூடங்களில் பெறும் கல்வி அறிவினால் மட்டும் இந்தியாவை வலுவானதாக மாற்ற முடியாது. தேசத்தை வலுவாக்க தேசப்பற்றும் அவசியம். எனவே மாணவர்கள் கல்வி அறிவுடன் நாட்டுப்பற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ‘தேசிய மாணவர் படை‘ என்ற அமைப்பின் மூலம் தேசப்பற்றினை ஊட்டுகின்றனர். துப்பாக்கி சுடுதல், தற்காப்பு பயிற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்த அமைப்பினால் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பின் மூலம் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாணவர்களால் பங்களிப்பு கொடுக்க முடியும்.
இந்தியாவின் விடுதலை சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், ஜவகர்லால் நேரு, பகத்சிங், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றோர் பள்ளி பருவத்திலே தேசப்பற்றினை வளர்த்துக் கொண்டவர்கள்தாம். இன்னும் பல விடுதலை போராளிகள் பள்ளி பருவத்திலே தேசிய பற்றினால் வார்க்கப்பட்டார்கள். அவர்கள் வழியில் நாமும் பயணம் செய்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.
இந்தியாவை அடிமை பூமியாக மாற்றி ஆண்டுவந்த ஆங்கிலேயரை விடுதலை போராட்ட தியாகிகள் தங்களின் கல்வி அறிவினாலும், நாட்டுப் பற்றினாலும் விரட்டி அடித்தனர். வழக்கறிஞராக திகழ்ந்த காந்தியடிகள் தேசபற்றினால் அன்னியர் ஆட்சியை எதிர்த்து உப்பு சத்தியாகிரகம், உண்ணாவிரத அறப்போர் போன்ற பல போராட்டங்களை நடத்தினார். இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் அன்னிய பொருட்களை தவிர்த்து இந்திய பொருட்களை வாங்கி உபயோகிக்க அறிவுரை கூறினார்.
தேசியக்கவி பாரதியார், தித்திக்கும் தேன் தமிழில் விடுதலை முழக்க பாடல்களை எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். சுபாஷ்சந்திரபோஸ், நாட்டுப்பற்று கொண்ட வீரர்களை இணைத்து பெரும்படையை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்கொண்டார். இன்னும் ஆயிரம் ஆயிரம் தலைவர்களும், விடுதலை போராளிகளும் நாட்டுப்பற்றினால் தன் உயிரையும் ஈந்து போராடினார்கள். அவர்களின் நாட்டுப்பற்றால்தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.
மாணவர்களாகிய நாமும் நாட்டுப்பற்றினை நமது உயிர்மூச்சாக கருதவேண்டும். பள்ளி பருவத்திலிருந்தே நாம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த முடியும். அது எப்படி தெரியுமா?
கல்வியில் முழு கவனம் செலுத்தி, பிறருக்கு பயன் அளிக்கும் விதத்தில் வாழ வேண்டும். சாதாரண மாணவனாக இல்லாமல் சாதனை மாணவனாக திகழ வேண்டும். பள்ளி பருவத்தில் பாடங்களையும், வீரதீர பயிற்சிகளையும் மேற்கொண்டு இந்தியாவின் வெற்றிக்கு வித்திட வேண்டும்.“இந்திய பாரதம் இளைஞர்கள் கையில்“ என்ற வாசகத்திற்கு உயிர் கொடுத்து உலகில் இந்தியாவின் புகழை உயர்த்த பாடுபட வேண்டும். எல்லைப் பகுதிகளில் நிகழும் அன்னிய அச்சுறுத்தல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும், உலக பொருளாதாரத்திற்கு நிகராக இந்திய பொருளாதார நிலையை பலப்படுத்தி உயர்த்த நாம் என்றும் உறுதி கொள்ள வேண்டும். தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் வழி செயல்படுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம்..!
குழந்தைகள் பள்ளி செல்லும்போதும், வெளியே விளையாடும் போதும் உடலில் சூரிய வெளிச்சம் படுவதால் வைட்டமின்-டி சத்து கிடைக்கும். ஆனால் இப்போது பல குழந்தைகளுக்கு இந்த சத்து மிகவும் குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 18 மாதங்களாக குழந்தைகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் வீடுகளில் முடங்கிப் போனார்கள். இப்போதுதான் படிப்படியாக தளர்வுகள் கொடுக்கப்பட்டு கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
1 முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு அடுத்தமாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கிறது. பள்ளிகளுக்கு அனுப்பும் உற்சாகத்தில் பெற்றோர்களும், பள்ளி செல்லும் ஆர்வத்தில் மாணவர்களும் இருக்கிறார்கள்.
வீடுகளில் இவ்வளவு நாளும் குழந்தைகள் முடங்கி கிடந்ததால் அவர்களின் படிப்பும் எதிர்காலமும், பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் வீடுகளிலேயே இருந்தாலும் அந்த குழந்தைகள் பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருப்பதை பல பெற்றோர்கள் கண்டு கொள்ளவில்லை.
வழக்கமாக குழந்தைகளை அதிகாலையிலேயே தட்டி எழுப்பி குளிப்பாட்டி உணவுகள் கொடுத்து பள்ளிக்கு அனுப்புவார்கள். அந்த குழந்தைகளும் உற்சாகமாக புத்தகப்பையை தோளில் சுமந்துகொண்டு ஓடும்.
பள்ளிகளிலும் சக மாணவர்களோடு சிரித்து பேசி விளையாடுவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த 18 மாதங்களில் இவை எதுவும் இல்லை. பல பிள்ளைகள் பள்ளிகளை கூட மறந்து விட்டனர். வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் கட்டிப்போட்டனர்.
இதனால் குழந்தைகள் காலையிலேயே கையில் ஒரு செல்போன் அல்லது கம்ப்யூட்டரை மட்டுமே பார்த்தபடி தன்னந்தனியாக இருட்டு அறைக்குள் முடக்கப்பட்டார்கள். வீடுகளிலேயே இருந்ததால் எப்போதும் நொறுக்குத்தீனிகள் மற்றும் கேட்ட உணவுகளையும் பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்து அவர்களை கவனித்துக்கொண்டார்கள். இதனால் உடலுக்கு எந்த விதமான பயிற்சியும் இல்லாமல் பூசணிக்காய் போல் உடல் பருத்துப்போனது.
சில குழந்தைகள் 10 கிலோ வரை உடல் எடை அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். படிக்கட்டு ஏறினால் மூட்டு வலிக்கிறது என்று பல குழந்தைகள் மருத்துவர்களிடம் சொல்கிறார்கள். அந்த குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களின் வாழ்க்கை முறை மாற்றம் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறார்கள்.
வழக்கமாக குழந்தைகள் பள்ளி செல்லும்போதும், வெளியே விளையாடும் போதும் உடலில் சூரிய வெளிச்சம் படுவதால் வைட்டமின்-டி சத்து கிடைக்கும். ஆனால் இப்போது பல குழந்தைகளுக்கு இந்த சத்து மிகவும் குறைந்துள்ளது.
எப்போதும் செல்போன், கம்ப்யூட்டர் திரைகளையே பார்த்துக்கொண்டு இருந்ததால் கண்கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. தலைவலி, சரியான தூக்கமின்மை ஆகியவற்றால் சிரமப்படுகிறார்கள்.
மேலும் இந்த முறையற்ற நேரங்களில் சாப்பிடுவது, தூக்கமின்மை போன்றவற்றால் மலச்சிக்கல் ஏற்பட்டு குடல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். மன உளைச்சல் காரணமாக அவர்களுடைய தனி திறமைகளும் மழுங்கிப் போயுள்ளன. விளையாட்டு, உடல்பயிற்சி இல்லாததால் சுவாசக் கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள முன்னணி குழந்தைகள் மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் இந்த மாதிரி கோளாறுகளால் சிகிச்சை பெற்றுள்ளார்கள். எனவே குழந்தைகள் பராமரிப்பில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இப்படிப்பட்ட நெருக்கடிக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு 1-ந்தேதி பள்ளிகள் திறப்பது நல்ல விஷயம். அதேநேரம் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியுடன் அமர்ந்திருத்தல் அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற வழிமுறைகளை கடைபிடிக்கவும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
1 முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு அடுத்தமாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கிறது. பள்ளிகளுக்கு அனுப்பும் உற்சாகத்தில் பெற்றோர்களும், பள்ளி செல்லும் ஆர்வத்தில் மாணவர்களும் இருக்கிறார்கள்.
வீடுகளில் இவ்வளவு நாளும் குழந்தைகள் முடங்கி கிடந்ததால் அவர்களின் படிப்பும் எதிர்காலமும், பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் வீடுகளிலேயே இருந்தாலும் அந்த குழந்தைகள் பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருப்பதை பல பெற்றோர்கள் கண்டு கொள்ளவில்லை.
வழக்கமாக குழந்தைகளை அதிகாலையிலேயே தட்டி எழுப்பி குளிப்பாட்டி உணவுகள் கொடுத்து பள்ளிக்கு அனுப்புவார்கள். அந்த குழந்தைகளும் உற்சாகமாக புத்தகப்பையை தோளில் சுமந்துகொண்டு ஓடும்.
பள்ளிகளிலும் சக மாணவர்களோடு சிரித்து பேசி விளையாடுவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த 18 மாதங்களில் இவை எதுவும் இல்லை. பல பிள்ளைகள் பள்ளிகளை கூட மறந்து விட்டனர். வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் கட்டிப்போட்டனர்.
இதனால் குழந்தைகள் காலையிலேயே கையில் ஒரு செல்போன் அல்லது கம்ப்யூட்டரை மட்டுமே பார்த்தபடி தன்னந்தனியாக இருட்டு அறைக்குள் முடக்கப்பட்டார்கள். வீடுகளிலேயே இருந்ததால் எப்போதும் நொறுக்குத்தீனிகள் மற்றும் கேட்ட உணவுகளையும் பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்து அவர்களை கவனித்துக்கொண்டார்கள். இதனால் உடலுக்கு எந்த விதமான பயிற்சியும் இல்லாமல் பூசணிக்காய் போல் உடல் பருத்துப்போனது.
சில குழந்தைகள் 10 கிலோ வரை உடல் எடை அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். படிக்கட்டு ஏறினால் மூட்டு வலிக்கிறது என்று பல குழந்தைகள் மருத்துவர்களிடம் சொல்கிறார்கள். அந்த குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களின் வாழ்க்கை முறை மாற்றம் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறார்கள்.
வழக்கமாக குழந்தைகள் பள்ளி செல்லும்போதும், வெளியே விளையாடும் போதும் உடலில் சூரிய வெளிச்சம் படுவதால் வைட்டமின்-டி சத்து கிடைக்கும். ஆனால் இப்போது பல குழந்தைகளுக்கு இந்த சத்து மிகவும் குறைந்துள்ளது.
எப்போதும் செல்போன், கம்ப்யூட்டர் திரைகளையே பார்த்துக்கொண்டு இருந்ததால் கண்கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. தலைவலி, சரியான தூக்கமின்மை ஆகியவற்றால் சிரமப்படுகிறார்கள்.
மேலும் இந்த முறையற்ற நேரங்களில் சாப்பிடுவது, தூக்கமின்மை போன்றவற்றால் மலச்சிக்கல் ஏற்பட்டு குடல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். மன உளைச்சல் காரணமாக அவர்களுடைய தனி திறமைகளும் மழுங்கிப் போயுள்ளன. விளையாட்டு, உடல்பயிற்சி இல்லாததால் சுவாசக் கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள முன்னணி குழந்தைகள் மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் இந்த மாதிரி கோளாறுகளால் சிகிச்சை பெற்றுள்ளார்கள். எனவே குழந்தைகள் பராமரிப்பில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இப்படிப்பட்ட நெருக்கடிக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு 1-ந்தேதி பள்ளிகள் திறப்பது நல்ல விஷயம். அதேநேரம் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியுடன் அமர்ந்திருத்தல் அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற வழிமுறைகளை கடைபிடிக்கவும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவைகளில் ஏதேனும் ஒன்றை சிறிதளவு சூடாக்கி, ஓரளவு ஆறவைத்து குழந்தையின் உடலில் தடவி மசாஜ் செய்வது சிறப்பானது.
பச்சிளம் குழந்தையை குளிக்க வைப்பதற்கு இளம் தாய்மார்கள் தயங்குவார்கள். மென்மையான தசைகள் சூழ்ந்திருப்பதால் குழந்தையை கையாளும்போது ஏதேனும் பாதிப்பு நேர்ந்துவிடுமோ? என்ற கவலை அவர்களிடத்தில் எட்டிப்பார்க்கும். குழந்தையை எப்படி குளிக்க வைப்பது? எந்த நேரத்தில் குளிக்க வைப்பது? என்ற குழப்பமும் உண்டாகும்.
பருவ கால நிலையை பொறுத்து குழந்தையை குளிக்க வைக்கும் நேரத்தை தீர்மானிக்கலாம். குளிர் காலங்கள், மழை காலங்களில் 8 மணிக்கு முன்பாக குழந்தையை குளிப்பாட்டுவதை தவிர்க்க வேண்டும். வெயில் பரவ தொடங்கி குளிர் தன்மை குறைந்த பிறகு குளிப்பாட்டுவதே நல்லது. அதுபோல் வெப்பம் அதிகரிக்கும் கோடை காலங்களிலும், மிதமான வெப்பம் நிலவும் காலங்களிலும் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குளிப்பாட்டலாம்.
குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன்பு ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குளிப்பதற்கு முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது என்பார்கள். குழந்தைக்கும் இது பொருந்தும். தாய்ப்பால் கொடுத்ததும் குழந்தையை குளிக்க வைக்கக்கூடாது. குழந்தையை குளிப்பாட்டிய பிறகு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைக்கலாம்.
குழந்தையின் உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு குளிப்பாட்டுவதும் அதன் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவைகளில் ஏதேனும் ஒன்றை சிறிதளவு சூடாக்கி, ஓரளவு ஆறவைத்து குழந்தையின் உடலில் தடவி மசாஜ் செய்வது சிறப்பானது. ஓரிரு நாட்கள் இடைவெளியில் எண்ணெய் மசாஜ் செய்து வரலாம்.
குழந்தையை தினமும் குளிப்பாட்டுவதுதான் நல்லது. ஏனெனில் குழந்தையின் உடலில் தோல் உரிந்து புதிய தோல் உருவாகிக்கொண்டே இருக்கும். தினமும் குளிக்கவைத்து சருமத்தை தூய்மையாக பராமரித்து வந்தால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
அதேவேளையில் குளிர் காலத்தில் சளி, இருமல் பிரச்சினை குழந்தைக்கும் ஏற்படக்கூடும் என்பதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிப்பாட்டலாம். தண்ணீரை சூடாக்கி குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆறவைத்து குளிப்பாட்டி விடலாம்.
பருவ கால நிலையை பொறுத்து குழந்தையை குளிக்க வைக்கும் நேரத்தை தீர்மானிக்கலாம். குளிர் காலங்கள், மழை காலங்களில் 8 மணிக்கு முன்பாக குழந்தையை குளிப்பாட்டுவதை தவிர்க்க வேண்டும். வெயில் பரவ தொடங்கி குளிர் தன்மை குறைந்த பிறகு குளிப்பாட்டுவதே நல்லது. அதுபோல் வெப்பம் அதிகரிக்கும் கோடை காலங்களிலும், மிதமான வெப்பம் நிலவும் காலங்களிலும் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குளிப்பாட்டலாம்.
குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன்பு ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குளிப்பதற்கு முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது என்பார்கள். குழந்தைக்கும் இது பொருந்தும். தாய்ப்பால் கொடுத்ததும் குழந்தையை குளிக்க வைக்கக்கூடாது. குழந்தையை குளிப்பாட்டிய பிறகு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைக்கலாம்.
குழந்தையின் உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு குளிப்பாட்டுவதும் அதன் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவைகளில் ஏதேனும் ஒன்றை சிறிதளவு சூடாக்கி, ஓரளவு ஆறவைத்து குழந்தையின் உடலில் தடவி மசாஜ் செய்வது சிறப்பானது. ஓரிரு நாட்கள் இடைவெளியில் எண்ணெய் மசாஜ் செய்து வரலாம்.
குழந்தையை தினமும் குளிப்பாட்டுவதுதான் நல்லது. ஏனெனில் குழந்தையின் உடலில் தோல் உரிந்து புதிய தோல் உருவாகிக்கொண்டே இருக்கும். தினமும் குளிக்கவைத்து சருமத்தை தூய்மையாக பராமரித்து வந்தால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
அதேவேளையில் குளிர் காலத்தில் சளி, இருமல் பிரச்சினை குழந்தைக்கும் ஏற்படக்கூடும் என்பதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிப்பாட்டலாம். தண்ணீரை சூடாக்கி குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆறவைத்து குளிப்பாட்டி விடலாம்.
மாணவர்கள் ஒரு நாளில் ஆன்லைன் பாடம் போக மற்ற நேரங்களில் என்ன செய்கிறோம் என யோசித்திருக்கிறோமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ‘காலம் பொன் போன்றது’ என்பதை பயனுள்ளதாக மாற்ற சில யோசனைகள்.
புத்தகம் படிக்கலாம்
நேரத்தை நமக்கு உபயோகமாக மாற்றுவதற்கு அருமையான வழிகளில் ஒன்று, புத்தகம் படிப்பது. இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள புத்தகம் உதவும். ஒவ்வொரு அனுபவத்தையும் நீங்கள் தேடித் தேடி அனுபவிக்க முடியாது. ஆனால், புத்தகம் வாசிப்பதால் உங்களால் பல அனுபவங்களைப் பெற முடியும். ஆனால், அதைத் திரையில் படிப்பதைவிட காகிதத்தில் படிப்பது நல்லது.
உடற்பயிற்சி செய்யலாம்
சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆன்லைன் வகுப்பு, வீட்டுப்பாடம் எல்லாம் முடித்த பிறகு, நீங்கள் செய்யும் அரை மணி நேர உடற்பயிற்சி, நீங்கள் இழந்த புத்துணர்ச்சியை மீட்கும்.
கற்றுக்கொள்ளுங்கள்... பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்
உங்கள் வீட்டில் அண்ணன்கள் இருக்கிறார்களா, விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள். வயதானவர்கள் இருக்கிறார்களா, அவர்களிடமிருந்து அனுபவத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களைப் பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்.
இசையைக் கற்றுக்கொள்ளுங்கள்
இசையை ரசிப்பது மட்டுமின்றி, இசைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக கிட்டார், கீபோர்ட் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், இசை உங்களை மட்டும் அல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்விக்கும்.
பேசிப் பழகுங்கள்
டிஜிட்டல் உலகில் இருக்கும் நாம், அந்த மயக்கத்திலேயே நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை மறந்துவிடுகிறோம். சும்மா இருக்கும் நேரங்களில், உங்கள் நண்பர்களுடன் ஒரு ஜாலி அரட்டை அடியுங்கள்.
உதவி செய்யுங்கள்
வீட்டிலோ, பொது இடங்களிலோ முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யுங்கள். உதவி செய்வதில் கிடைக்கும் திருப்தி, வேறு எதிலும் கிடைக்காது.
நேரத்தை நமக்கு உபயோகமாக மாற்றுவதற்கு அருமையான வழிகளில் ஒன்று, புத்தகம் படிப்பது. இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள புத்தகம் உதவும். ஒவ்வொரு அனுபவத்தையும் நீங்கள் தேடித் தேடி அனுபவிக்க முடியாது. ஆனால், புத்தகம் வாசிப்பதால் உங்களால் பல அனுபவங்களைப் பெற முடியும். ஆனால், அதைத் திரையில் படிப்பதைவிட காகிதத்தில் படிப்பது நல்லது.
உடற்பயிற்சி செய்யலாம்
சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆன்லைன் வகுப்பு, வீட்டுப்பாடம் எல்லாம் முடித்த பிறகு, நீங்கள் செய்யும் அரை மணி நேர உடற்பயிற்சி, நீங்கள் இழந்த புத்துணர்ச்சியை மீட்கும்.
கற்றுக்கொள்ளுங்கள்... பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்
உங்கள் வீட்டில் அண்ணன்கள் இருக்கிறார்களா, விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள். வயதானவர்கள் இருக்கிறார்களா, அவர்களிடமிருந்து அனுபவத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களைப் பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்.
இசையைக் கற்றுக்கொள்ளுங்கள்
இசையை ரசிப்பது மட்டுமின்றி, இசைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக கிட்டார், கீபோர்ட் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், இசை உங்களை மட்டும் அல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்விக்கும்.
பேசிப் பழகுங்கள்
டிஜிட்டல் உலகில் இருக்கும் நாம், அந்த மயக்கத்திலேயே நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை மறந்துவிடுகிறோம். சும்மா இருக்கும் நேரங்களில், உங்கள் நண்பர்களுடன் ஒரு ஜாலி அரட்டை அடியுங்கள்.
உதவி செய்யுங்கள்
வீட்டிலோ, பொது இடங்களிலோ முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யுங்கள். உதவி செய்வதில் கிடைக்கும் திருப்தி, வேறு எதிலும் கிடைக்காது.
குழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் நகரும் பொழுது, அவர்களுடைய பெற்றோர்களுக்கு எல்லா பதில்களும் தெரிந்திருக்க அவசியம் இல்லை என்று அவர்கள் புரிந்து கொள்வது நல்லது.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் காலம் போய் இப்பொழுது பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கற்றுக்கொடுக்கும் காலம் வந்து விட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இருக்கலாம் அல்லது பிறக்கும் குழைந்தகளின் அறிவு திறன் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாலும் அவர்களுக்கு மிக அதிக அளவில் தகவல்கள் பரிமாறப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் தனக்கான உணவு வேண்டும் என்று தனது அழுகையால் தனது தாய்க்கு தெரிவிக்கிறது.
அதே சமயம் தனது சேயின் அழுகுரல் கேட்கும் பொழுது தாயின் மார்பிலிருந்து பால் உடனே சுரக்கும்., இது ஒரு அற்புத நிகழ்வாகும். ஒரு வயது முதல் மூன்று வயதுக்குள் குழந்தைகள் பேசக்கற்றுக்கொள்கிறது, உரையாடல்களை கவனிக்கிறது, தனக்கு வேண்டியதை கேட்டு பெற்றுக்கொள்கிறது.
பிறகு வளர வளர தனது சுற்றுசூழலுக்கேற்ப தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். தனக்கு கிடைக்கும் தகவல்களை கூர்மையாக கவனித்து பெற்றோர்களிடம் இருந்து தனது கேள்விக்கான உண்மையான பதிலை எதிர்பார்க்கிறது. இது மாதிரியான சமயங்களில் பெற்றோர்கள் உண்மையான பதிலுக்கு பதிலாக எதையாவது சொல்லி தப்பிக்கும் பொழுது குழந்தைகள் கூகுளை நாடுகிறது.
நாம் வளர்ந்த காலங்களில் நமது சிநேகிதர்களிடத்தில் நமது சந்தேகங்களை கேட்போம். ஆனால் இப்பொழுது ஸ்மார்ட் ஃபோன் காலம், இரண்டு வயது குழந்தைகள் கூட இதை பயன்படுத்துகிறது. இதில் வாட்ஸாப் வீடியோ பார்த்து குழந்தைகள் அதிகப்படியான தகவல்களை பெறுகிறது. கோழிகளுக்கு ஊசி போடுகிறார்கள் ஆகையால் கோழிக்கறி சமைக்க வேண்டாம் என்று பச்சிளம் குழந்தைகள் தன் அம்மாவிடம் சொல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
இது ஒரு வகையான ஆரோக்கியத்திற்கு நன்மையான விஷயம் என்றாலும் அவர்களுக்கு புரியும் படியாக எதற்காக ஊசி போடுகிறார்கள் மற்றும் நாட்டுக்கோழி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மையையும் தெரியப்படுத்த வேண்டும். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து நேர்மறையான வார்த்தைகளை கேட்கும் பொழுது அதிக கவனம் செலுத்துகிறார்கள். குழந்தைகளை அன்புடன் பாராட்ட வேண்டும், அதே சமயம் அவர்கள் தவறு செய்தால் சீரான வகையில் புரிய வைக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் நேர்மறை கருத்துக்களை விட எதிர்மறையான கருத்துக்களை வழங்குவதுதான் சரி என்று நினைக்கிறார்கள்., இது தவறாகும்.
விஸ்பர், காண்டம் போன்ற விளம்பரங்களை பார்க்கும் பொழுது குழந்தைகள் நிறைய சந்தேகங்களை கேட்கும், ஆகையால் அந்த அந்த வயத்துக்கேற்ப பெற்றோர்கள் அவர்களுக்கு சில விளையாட்டுகள் மூலம் புரிய வைக்கலாம் அல்லது ஒரு கதை சொல்லி அதிலிருந்து அவர்களையே கேள்வி கேட்டு மீதி கதையை சொல்லும் படி புரிய வைக்கலாம். சில சமயங்களில் அவர்கள் தனது வயதுக்கு மீறிய கேள்வியை கேட்கலாம், அப்பொழுது பெற்றோர்கள் அவர்களது கேள்வியை நிராகரிக்காமல், அவர்களின் வயதிற்கேற்ப பதிலை சொல்லி புரிய வைக்கலாம்.
இது மாதிரியான நம்பிக்கையான நிகழ்வுகள் அவர்களுக்கு நிகழும் பொழுது குழந்தைகள் வேறு எங்கும் அந்த தகவலை தேட முயற்சிக்காமல் இருப்பார்கள்.
தனிப்பட்ட சுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், பெண் குழந்தைக்கு எந்த வயதில் உள்ளாடை அனிய வேண்டும் என்றும், சேனிட்டரி நாப்கினை எப்படி கையாள வேண்டும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
ஆண் குழந்தைகளுக்கு விந்து வெளியேறும் பொழுது , இது ஒரு சாதாரண உடலியல் மாற்றங்கள் என்று புரியவைக்கலாம். சில குழந்தைகளுக்கு பருவமடைதல் தாமதமாகலாம், அவர்களுக்கு ஏன் தாமதமாகிறது என்று மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யலாம். பின் இதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கலாம்.
நல்ல தொடுதல் கெட்ட நோக்கத் துடன் கூடிய தொடுதலை விளக்கும் பொழுது குழந்தைகள் எதற்காக அந்த உறுப்புகளை தொடக்கூடாது என்று கேட்கக்கூடும், அப்பொழுது நாம் அவர்களுக்கு இப்படி புரிய வைக்கலாம் “ உனது பொம்மை எப்படி உன்னு டையதோ அதே மாதிரி உன்னுடைய உறுப்புகள் உன்னுடையது. உனக்கு நம்பகமான அம்மா கேட்கும் பொழுது எப்படி நீ உன் பொம்மையை தருகிறாயோ அதே மாதிரி உன் அம்மாவுக்கு உன் உறுப்புகளை தொட அனுமதிக்கலாம், அதே மாதிரி உன் டாக்டர், உன் அப்பா, அம்மா, அல்லது காப்பாளரை அனுமதிக்க வேண்டும்.
வயதுக்கு வருவது என்றால் என்ன? குழந்தை எப்படி பிறக்கிறது? இது போன்ற கேள்விகள் கேட்கும் பொழுது எப்படி அவர்களுக்கு புரிய வைப்பது என்று பெற்றோர்கள் திணறுவார்கள். பாலியல் பற்றிய ஆர்வம், உடலை பற்றி கற்றுக்கொள்ள ஒரு இயற்கையான வழியாகும். பாலியல் கல்வி குழந்தைகளுக்கு தன் உடலை பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது மற்றும் அவர்களின் சொந்த உடல்கள் பற்றி நேர்மறையாக உணர உதவுகிறது. இளம் குழந்தைகள், பெண்கள் எப்படி கர்ப்பம் அடைகிறார்கள் மற்றும் குழந்தை எப்படி பிறக்கிறது என்று தெரிந்து கொள்வதில் தான் ஆர்வமாக இருப்பார்கள் மற்றபடி பாலியல் பற்றி அல்ல.
குழந்தைகளுக்கு முதலில் உடலின் அனாட்டமியை புரிய வைக்க வேண்டும், பின்பு படி படியாக, பூப்பெய்வதை பற்றியும் , குழந்தை எப்படி பிறக்கிறது என்றும் புரிய வைக்கலாம். இதற்கு உதாரணமாக செடி எப்படி வளர்கின்றது எப்படி காய் கனிகளை தருகிறது என்று அவர்களுடன் கலந்துரையாடலாம். நீங்கள் எப்படி உணறுகிறீர்கள் என்பதை அவர்களுக்கு சைகையின் மூலம் வெளிப்படுத்துங்கள்., புன்னகை பூத்தல், தோள்பட்டையை அசைத்தல், கண் சிமிட்டல், கட்டுப்பிடி வைத்தியம், அவர்களுடன் சிரிக்கலாம் (அவர்களை பார்த்து அல்ல) இது மாதிரியான அங்கீகாரத்தை குறிக்கும் சமிக்ஞை அல்லது சைகை செய்யலாம்.
நேருக்கு நேர் தனிமையில் குழந்தையுடன் -உரையாடுவதற்கான நேரத்தை உருவாக்கவும்; உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் வயது இடைவெளி இருந்தால் இது மிகவும் முக்கியம். இதற்கு காரணம், இளைய குழந்தைக்கு மூத்த குழந்தையின் முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம். அவர்களுடைய ஆர்வத்தைத் கவனியுங்கள், “ஆன்லைனில் ஆபாசம் என்பது இப்பொழுது பார்ப்பது உகந்ததல்ல, அதில் காதல் இல்லை , ரொமான்ஸ் இல்லை, அது செக்ஸ் பற்றிய தவறான கருத்தை உங்களுக்கு வழங்கலாம்.
நீங்கள் செக்ஸ் பற்றி மேலும் அறிய விரும்பினால், நான் சில புத்தகங்களை உங்களிடம் தருகிறேன், நாம் இருவரும் அதை பார்த்து விவாதிக்கலாம் அல்லது உனக்கு எதாவது கேள்விகள் இருந்தால் மேலும் மேலும் விவாதிக்கலாம். “ அல்லது உங்கள் பிள்ளை இன்னும் தீவிரமாக இது மாதிரியான தலைப்புகளை ஆராய விரும்பினால், நீங்கள் இப்படி புரிய வைக்கலாம் : “குழந்தைகளுக்காகவே வழங்கப்படும் நிகழ்வுகள் பதிவிடம் search engine ™ news sources இருக்கா என்று பார்க்கலாமா ? “ Ex: Kiddle, kidrex, YouTube kids, etc.,.,
உங்களுக்கு சில தகவல்கள் தெரியாதபோது, அதை ஒப்புக்கொள்ளுங்கள். குழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் நகரும் பொழுது, அவர்களுடைய பெற்றோர்களுக்கு எல்லா பதில்களும் தெரிந்திருக்க அவசியம் இல்லை என்று அவர்கள் புரிந்து கொள்வது நல்லது. “எனக்கு தெரியாது, இன்னும் கண்டு பிடிக்க முயற்சி செய்வோமா ? “ என்று நீங்கள் பரிந்துரைக்கலாம். பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்தும் தருணம் இது, ஏன் என்றால் அவர்கள் அடுத்த தலைமுறையை உயர்த்துவதற்காக கடினமாக உழைக்கிறார்கள் !!
Vandhana.acha@gmail.com
அதே சமயம் தனது சேயின் அழுகுரல் கேட்கும் பொழுது தாயின் மார்பிலிருந்து பால் உடனே சுரக்கும்., இது ஒரு அற்புத நிகழ்வாகும். ஒரு வயது முதல் மூன்று வயதுக்குள் குழந்தைகள் பேசக்கற்றுக்கொள்கிறது, உரையாடல்களை கவனிக்கிறது, தனக்கு வேண்டியதை கேட்டு பெற்றுக்கொள்கிறது.
பிறகு வளர வளர தனது சுற்றுசூழலுக்கேற்ப தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். தனக்கு கிடைக்கும் தகவல்களை கூர்மையாக கவனித்து பெற்றோர்களிடம் இருந்து தனது கேள்விக்கான உண்மையான பதிலை எதிர்பார்க்கிறது. இது மாதிரியான சமயங்களில் பெற்றோர்கள் உண்மையான பதிலுக்கு பதிலாக எதையாவது சொல்லி தப்பிக்கும் பொழுது குழந்தைகள் கூகுளை நாடுகிறது.
நாம் வளர்ந்த காலங்களில் நமது சிநேகிதர்களிடத்தில் நமது சந்தேகங்களை கேட்போம். ஆனால் இப்பொழுது ஸ்மார்ட் ஃபோன் காலம், இரண்டு வயது குழந்தைகள் கூட இதை பயன்படுத்துகிறது. இதில் வாட்ஸாப் வீடியோ பார்த்து குழந்தைகள் அதிகப்படியான தகவல்களை பெறுகிறது. கோழிகளுக்கு ஊசி போடுகிறார்கள் ஆகையால் கோழிக்கறி சமைக்க வேண்டாம் என்று பச்சிளம் குழந்தைகள் தன் அம்மாவிடம் சொல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
இது ஒரு வகையான ஆரோக்கியத்திற்கு நன்மையான விஷயம் என்றாலும் அவர்களுக்கு புரியும் படியாக எதற்காக ஊசி போடுகிறார்கள் மற்றும் நாட்டுக்கோழி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மையையும் தெரியப்படுத்த வேண்டும். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து நேர்மறையான வார்த்தைகளை கேட்கும் பொழுது அதிக கவனம் செலுத்துகிறார்கள். குழந்தைகளை அன்புடன் பாராட்ட வேண்டும், அதே சமயம் அவர்கள் தவறு செய்தால் சீரான வகையில் புரிய வைக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் நேர்மறை கருத்துக்களை விட எதிர்மறையான கருத்துக்களை வழங்குவதுதான் சரி என்று நினைக்கிறார்கள்., இது தவறாகும்.
விஸ்பர், காண்டம் போன்ற விளம்பரங்களை பார்க்கும் பொழுது குழந்தைகள் நிறைய சந்தேகங்களை கேட்கும், ஆகையால் அந்த அந்த வயத்துக்கேற்ப பெற்றோர்கள் அவர்களுக்கு சில விளையாட்டுகள் மூலம் புரிய வைக்கலாம் அல்லது ஒரு கதை சொல்லி அதிலிருந்து அவர்களையே கேள்வி கேட்டு மீதி கதையை சொல்லும் படி புரிய வைக்கலாம். சில சமயங்களில் அவர்கள் தனது வயதுக்கு மீறிய கேள்வியை கேட்கலாம், அப்பொழுது பெற்றோர்கள் அவர்களது கேள்வியை நிராகரிக்காமல், அவர்களின் வயதிற்கேற்ப பதிலை சொல்லி புரிய வைக்கலாம்.
இது மாதிரியான நம்பிக்கையான நிகழ்வுகள் அவர்களுக்கு நிகழும் பொழுது குழந்தைகள் வேறு எங்கும் அந்த தகவலை தேட முயற்சிக்காமல் இருப்பார்கள்.
தனிப்பட்ட சுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், பெண் குழந்தைக்கு எந்த வயதில் உள்ளாடை அனிய வேண்டும் என்றும், சேனிட்டரி நாப்கினை எப்படி கையாள வேண்டும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
ஆண் குழந்தைகளுக்கு விந்து வெளியேறும் பொழுது , இது ஒரு சாதாரண உடலியல் மாற்றங்கள் என்று புரியவைக்கலாம். சில குழந்தைகளுக்கு பருவமடைதல் தாமதமாகலாம், அவர்களுக்கு ஏன் தாமதமாகிறது என்று மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யலாம். பின் இதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கலாம்.
நல்ல தொடுதல் கெட்ட நோக்கத் துடன் கூடிய தொடுதலை விளக்கும் பொழுது குழந்தைகள் எதற்காக அந்த உறுப்புகளை தொடக்கூடாது என்று கேட்கக்கூடும், அப்பொழுது நாம் அவர்களுக்கு இப்படி புரிய வைக்கலாம் “ உனது பொம்மை எப்படி உன்னு டையதோ அதே மாதிரி உன்னுடைய உறுப்புகள் உன்னுடையது. உனக்கு நம்பகமான அம்மா கேட்கும் பொழுது எப்படி நீ உன் பொம்மையை தருகிறாயோ அதே மாதிரி உன் அம்மாவுக்கு உன் உறுப்புகளை தொட அனுமதிக்கலாம், அதே மாதிரி உன் டாக்டர், உன் அப்பா, அம்மா, அல்லது காப்பாளரை அனுமதிக்க வேண்டும்.
வயதுக்கு வருவது என்றால் என்ன? குழந்தை எப்படி பிறக்கிறது? இது போன்ற கேள்விகள் கேட்கும் பொழுது எப்படி அவர்களுக்கு புரிய வைப்பது என்று பெற்றோர்கள் திணறுவார்கள். பாலியல் பற்றிய ஆர்வம், உடலை பற்றி கற்றுக்கொள்ள ஒரு இயற்கையான வழியாகும். பாலியல் கல்வி குழந்தைகளுக்கு தன் உடலை பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது மற்றும் அவர்களின் சொந்த உடல்கள் பற்றி நேர்மறையாக உணர உதவுகிறது. இளம் குழந்தைகள், பெண்கள் எப்படி கர்ப்பம் அடைகிறார்கள் மற்றும் குழந்தை எப்படி பிறக்கிறது என்று தெரிந்து கொள்வதில் தான் ஆர்வமாக இருப்பார்கள் மற்றபடி பாலியல் பற்றி அல்ல.
குழந்தைகளுக்கு முதலில் உடலின் அனாட்டமியை புரிய வைக்க வேண்டும், பின்பு படி படியாக, பூப்பெய்வதை பற்றியும் , குழந்தை எப்படி பிறக்கிறது என்றும் புரிய வைக்கலாம். இதற்கு உதாரணமாக செடி எப்படி வளர்கின்றது எப்படி காய் கனிகளை தருகிறது என்று அவர்களுடன் கலந்துரையாடலாம். நீங்கள் எப்படி உணறுகிறீர்கள் என்பதை அவர்களுக்கு சைகையின் மூலம் வெளிப்படுத்துங்கள்., புன்னகை பூத்தல், தோள்பட்டையை அசைத்தல், கண் சிமிட்டல், கட்டுப்பிடி வைத்தியம், அவர்களுடன் சிரிக்கலாம் (அவர்களை பார்த்து அல்ல) இது மாதிரியான அங்கீகாரத்தை குறிக்கும் சமிக்ஞை அல்லது சைகை செய்யலாம்.
நேருக்கு நேர் தனிமையில் குழந்தையுடன் -உரையாடுவதற்கான நேரத்தை உருவாக்கவும்; உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் வயது இடைவெளி இருந்தால் இது மிகவும் முக்கியம். இதற்கு காரணம், இளைய குழந்தைக்கு மூத்த குழந்தையின் முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம். அவர்களுடைய ஆர்வத்தைத் கவனியுங்கள், “ஆன்லைனில் ஆபாசம் என்பது இப்பொழுது பார்ப்பது உகந்ததல்ல, அதில் காதல் இல்லை , ரொமான்ஸ் இல்லை, அது செக்ஸ் பற்றிய தவறான கருத்தை உங்களுக்கு வழங்கலாம்.
நீங்கள் செக்ஸ் பற்றி மேலும் அறிய விரும்பினால், நான் சில புத்தகங்களை உங்களிடம் தருகிறேன், நாம் இருவரும் அதை பார்த்து விவாதிக்கலாம் அல்லது உனக்கு எதாவது கேள்விகள் இருந்தால் மேலும் மேலும் விவாதிக்கலாம். “ அல்லது உங்கள் பிள்ளை இன்னும் தீவிரமாக இது மாதிரியான தலைப்புகளை ஆராய விரும்பினால், நீங்கள் இப்படி புரிய வைக்கலாம் : “குழந்தைகளுக்காகவே வழங்கப்படும் நிகழ்வுகள் பதிவிடம் search engine ™ news sources இருக்கா என்று பார்க்கலாமா ? “ Ex: Kiddle, kidrex, YouTube kids, etc.,.,
உங்களுக்கு சில தகவல்கள் தெரியாதபோது, அதை ஒப்புக்கொள்ளுங்கள். குழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் நகரும் பொழுது, அவர்களுடைய பெற்றோர்களுக்கு எல்லா பதில்களும் தெரிந்திருக்க அவசியம் இல்லை என்று அவர்கள் புரிந்து கொள்வது நல்லது. “எனக்கு தெரியாது, இன்னும் கண்டு பிடிக்க முயற்சி செய்வோமா ? “ என்று நீங்கள் பரிந்துரைக்கலாம். பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்தும் தருணம் இது, ஏன் என்றால் அவர்கள் அடுத்த தலைமுறையை உயர்த்துவதற்காக கடினமாக உழைக்கிறார்கள் !!
Vandhana.acha@gmail.com
சில உடல் நல குறைபாடுகள் காரணமாக குழந்தைகளின் வளர்ச்சி தடைப்படலாம். சில எளிமையான பயிற்சிகளில் ஈடுபட ஊக்குவிப்பது, அவர்கள் உயரமாக வளர்வதற்கு தூண்டுகோலாக அமையும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கும், குடும்ப உறவுகளின் மரபணுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குடும்பத்தினரின் உயரத்தை பொறுத்தே குழந்தைகளின் வளர்ச்சியும் அமைந்திருக்கும். எனினும் சில உடல் நல குறைபாடுகள் காரணமாக குழந்தைகளின் வளர்ச்சி தடைப்படலாம்.
அதனை கவனத்தில் கொள்ளாமல் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்படையும். சில எளிமையான பயிற்சிகளில் ஈடுபட ஊக்குவிப்பது, அவர்கள் உயரமாக வளர்வதற்கு தூண்டுகோலாக அமையும்.
அதற்கு செய்ய வேண்டிய சில பயிற்சிகள்:
* சிறு வயது முதலே உடற்பயிற்சி செய்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். அவை எளிமையானதாக இருந்தால் ஆர்வமாக செய்ய தொடங்கிவிடுவார்கள். நன்றாக நிமிர்ந்த நிலையில் நின்றபடி, உடலை வளைத்து குனிந்து கைகளை கொண்டு கால்களின் விரலை தொடுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். இது முதுகு மற்றும் தசைகளை நெகிழ்வுத்தன்மை அடைய செய்யும். தொடைகளில் இருக்கும் தசைகளையும் இலகுவாக்கும். தினமும் கால் விரல்களை தொடும் பயிற்சிகளை செய்வது உயரமாக வளர்வதற்கு தூண்டிவிடும்.
* கிராமப்புறங்களில் குழந்தைகள் மரக்கிளைகளில் தொங்கி விளையாடுவார்கள். அப்படி தொங்குவது உயரத்தை அதிகரிக்க உதவும் சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். இரு கைகளையும் வலுவாக பிடித்தபடி தொங்கும்போது கைகளின் தசைகள் நெகிழ்வடையும். தசைகளின் வளர்ச்சியும் தூண்டப்படும். உயரத்தை அதிகரிக்கவும் உதவும்.
* ஸ்கிப்பிங் செய்வதும் உயரத்தை அதிகரிக்க தூண்டும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டாக ஸ்கிப்பிங் அமைந்திருப்பதால் அதில் ஆர்வத்தை அதிகரிக்க செய்யலாம். ஸ்கிப்பிங் கயிற்றில் துள்ளிக்குதித்து பயிற்சி செய்யும்போது தலை முதல் கால் வரை உடல் தசைகள், செல்கள் தூண்டப்படும். குறிப்பாக செல்களின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும். சீரான வளர்ச்சிக்கும், உயரத்திற்கும் ஸ்கிப்பிங் உதவும்.
* நீச்சலும் தசைகளை நெகிழ்வுத்தன்மை அடைய செய்யும் பயிற்சிகளுள் ஒன்று. இதுவும் உடலில் உள்ள செல்களை தூண்டிவிடும். நீச்சல் அடிக்கும்போது உடலில் உள்ள ஒவ்வொரு தசைகளும் தூண்டப்படும். அதனால் நீச்சல் பயிற்சி, இயற்கையாகவே குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கக்கூடியது.
அதனை கவனத்தில் கொள்ளாமல் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்படையும். சில எளிமையான பயிற்சிகளில் ஈடுபட ஊக்குவிப்பது, அவர்கள் உயரமாக வளர்வதற்கு தூண்டுகோலாக அமையும்.
அதற்கு செய்ய வேண்டிய சில பயிற்சிகள்:
* சிறு வயது முதலே உடற்பயிற்சி செய்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். அவை எளிமையானதாக இருந்தால் ஆர்வமாக செய்ய தொடங்கிவிடுவார்கள். நன்றாக நிமிர்ந்த நிலையில் நின்றபடி, உடலை வளைத்து குனிந்து கைகளை கொண்டு கால்களின் விரலை தொடுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். இது முதுகு மற்றும் தசைகளை நெகிழ்வுத்தன்மை அடைய செய்யும். தொடைகளில் இருக்கும் தசைகளையும் இலகுவாக்கும். தினமும் கால் விரல்களை தொடும் பயிற்சிகளை செய்வது உயரமாக வளர்வதற்கு தூண்டிவிடும்.
* கிராமப்புறங்களில் குழந்தைகள் மரக்கிளைகளில் தொங்கி விளையாடுவார்கள். அப்படி தொங்குவது உயரத்தை அதிகரிக்க உதவும் சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். இரு கைகளையும் வலுவாக பிடித்தபடி தொங்கும்போது கைகளின் தசைகள் நெகிழ்வடையும். தசைகளின் வளர்ச்சியும் தூண்டப்படும். உயரத்தை அதிகரிக்கவும் உதவும்.
* ஸ்கிப்பிங் செய்வதும் உயரத்தை அதிகரிக்க தூண்டும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டாக ஸ்கிப்பிங் அமைந்திருப்பதால் அதில் ஆர்வத்தை அதிகரிக்க செய்யலாம். ஸ்கிப்பிங் கயிற்றில் துள்ளிக்குதித்து பயிற்சி செய்யும்போது தலை முதல் கால் வரை உடல் தசைகள், செல்கள் தூண்டப்படும். குறிப்பாக செல்களின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும். சீரான வளர்ச்சிக்கும், உயரத்திற்கும் ஸ்கிப்பிங் உதவும்.
* நீச்சலும் தசைகளை நெகிழ்வுத்தன்மை அடைய செய்யும் பயிற்சிகளுள் ஒன்று. இதுவும் உடலில் உள்ள செல்களை தூண்டிவிடும். நீச்சல் அடிக்கும்போது உடலில் உள்ள ஒவ்வொரு தசைகளும் தூண்டப்படும். அதனால் நீச்சல் பயிற்சி, இயற்கையாகவே குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கக்கூடியது.
குழந்தைகள் இடைவெளியின்றி தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதற்கு அனுமதிக்க கூடாது என்றும் பெற்றோருக்கு கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், வீட்டில் குழந்தைகள் செல்போன் மற்றும் அதில் இணையதளத்தை அதிகம் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர் என்றும், அதிலும் குறிப்பாக ஆன்லைன் விளையாட்டை அதிகளவில் பதிவிறக்கம் செய்து, அதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் செயலாளர் அனிதா கர்வால் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அந்த ஆலோசனையில் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் காட்டாமல் இருப்பதையும், அதில் இருக்கும் விளைவுகள் குறித்தும், ஆன்லைன் விளையாட்டில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இதை உடனடியாக பின்பற்ற வலியுறுத்தி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தொடர்ந்து விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்
* செல்போன் விளையாட்டு செயலியை வாங்குவதை பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம். செயலிக்கான சந்தாக்களுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகளை பதிவு செய்வதை தவிர்க்கவும். குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தும் மடிக்கணினி அல்லது செல்போனை நேரடியாக வாங்க அனுமதிக்கக்கூடாது.
* இதுவரை கேள்விப்படாத வலைதளங்களில் இருந்து மென்பொருள் மற்றும் விளையாட்டு செயலிகளை பதிவிறக்கவேண்டாம் என்று குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். ஆன்லைன் விளையாட்டில் ஆன்லைன் உரையாடல் மூலம் பெரியவர்கள் உள்பட யாருடனும் தொடர்புகொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். இது ஆன்லைனை தவறுதலாக பயன்படுத்துபவர்கள் அவர்களை தொடர்பு கொள்ளும் அபாயத்தை அதிகரிக்க செய்யும். இடைவெளி நேரம் எடுக்காமல் நீண்ட நேரம் தொடர்ந்து ஆன்லைனில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.
கண்காணிக்க வேண்டும்
* ஆன்லைன் விளையாட்டில் தனி உரிமைகளை பாதுகாக்க பிள்ளைகளின் உண்மையான பெயரை வெளிப்படுத்தாமல், வேறொரு பெயரை பயன்படுத்த அறிவுறுத்துங்கள். குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான வயது மதிப்பீட்டையும் சரிபார்க்கவேண்டும்.
* ஆன்லைன் விளையாட்டுகளில் சிலவகை விளையாட்டுகள் அதிகநேரம் செலவழிப்பதை ஊக்குவிக்கிறது என்பதை குழந்தைகள் புரியும்படி உதவுவதோடு, ஆன்லைன் சூதாட்டம் என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதையும் எடுத்துச்சொல்லவேண்டும்.
* குழந்தைகளின் நடவடிக்கை வழக்கத்துக்கு மாறாக இருத்தல், சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிப்பது, இணையதளத்தை பயன்படுத்திய பிறகு, குறுஞ்செய்திகளை அனுப்பியபிறகு கோபத்துடன் இருப்பது, அவர்களின் செல்போனில் புதிய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் தொடர்புகள் இருப்பது ஆகியவற்றை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
ஆசிரியர்கள்...
அதேபோல், ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் சமூக நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் மீது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக பள்ளி அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும். இணையதளத்தின் நன்மை, தீமைகள் குறித்து அவ்வப்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்துவதை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆலோசனையில் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் காட்டாமல் இருப்பதையும், அதில் இருக்கும் விளைவுகள் குறித்தும், ஆன்லைன் விளையாட்டில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இதை உடனடியாக பின்பற்ற வலியுறுத்தி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தொடர்ந்து விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்
* செல்போன் விளையாட்டு செயலியை வாங்குவதை பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம். செயலிக்கான சந்தாக்களுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகளை பதிவு செய்வதை தவிர்க்கவும். குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தும் மடிக்கணினி அல்லது செல்போனை நேரடியாக வாங்க அனுமதிக்கக்கூடாது.
* இதுவரை கேள்விப்படாத வலைதளங்களில் இருந்து மென்பொருள் மற்றும் விளையாட்டு செயலிகளை பதிவிறக்கவேண்டாம் என்று குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். ஆன்லைன் விளையாட்டில் ஆன்லைன் உரையாடல் மூலம் பெரியவர்கள் உள்பட யாருடனும் தொடர்புகொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். இது ஆன்லைனை தவறுதலாக பயன்படுத்துபவர்கள் அவர்களை தொடர்பு கொள்ளும் அபாயத்தை அதிகரிக்க செய்யும். இடைவெளி நேரம் எடுக்காமல் நீண்ட நேரம் தொடர்ந்து ஆன்லைனில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.
கண்காணிக்க வேண்டும்
* ஆன்லைன் விளையாட்டில் தனி உரிமைகளை பாதுகாக்க பிள்ளைகளின் உண்மையான பெயரை வெளிப்படுத்தாமல், வேறொரு பெயரை பயன்படுத்த அறிவுறுத்துங்கள். குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான வயது மதிப்பீட்டையும் சரிபார்க்கவேண்டும்.
* ஆன்லைன் விளையாட்டுகளில் சிலவகை விளையாட்டுகள் அதிகநேரம் செலவழிப்பதை ஊக்குவிக்கிறது என்பதை குழந்தைகள் புரியும்படி உதவுவதோடு, ஆன்லைன் சூதாட்டம் என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதையும் எடுத்துச்சொல்லவேண்டும்.
* குழந்தைகளின் நடவடிக்கை வழக்கத்துக்கு மாறாக இருத்தல், சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிப்பது, இணையதளத்தை பயன்படுத்திய பிறகு, குறுஞ்செய்திகளை அனுப்பியபிறகு கோபத்துடன் இருப்பது, அவர்களின் செல்போனில் புதிய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் தொடர்புகள் இருப்பது ஆகியவற்றை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
ஆசிரியர்கள்...
அதேபோல், ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் சமூக நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் மீது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக பள்ளி அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும். இணையதளத்தின் நன்மை, தீமைகள் குறித்து அவ்வப்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்துவதை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






